https://tnpscstudymaterial.com/site-map/
வினா எழுத்துகள்
வினாப் பொருளைத் தரும் எழுத்துகளுக்கு வினா எழுத்துகள் என்று பெயர். சில வினா எழுத்துகள் சொல்லின்
முதலில் இடம்பெறும். சில வினா எழுத்துகள் சொல்லின் இறுதியில் இடம்பெறும்.
எ, யா, ஆ, ஓ, ஏ ஆகிய ஐந்தும் வினா எழுத்துகள் ஆகும்.
• மொழியின் முதலில் வருபவை – எ, யா (எங்கு, யாருக்கு).
• மொழியின் இறுதியில் வருபவை – ஆ, ஓ (பேசலாமா, தெரியுமோ)
• மொழி முதலிலும் இறுதியிலும் வருபவை – ஏ (ஏன்,
நீதானே)
1. அகவினா
எது, யார், ஏன் இச்சொற்களில் உள்ள வினா எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகளுக்குப்
பொருள் இல்லை.
இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின் அகத்தே இருந்து வினாப் பொருளைத் தருவது அகவினா எனப்படும்.
2. புறவினா
அவனா? வருவானோ? இச்சொற்களில் உள்ள ஆ, ஓ ஆகிய வினா எழுத்துகளை நீக்கினாலும் பிற
எழுத்துகள் பொருள் தரும்.
இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின் புறத்தே வந்து வினாப் பொருளைத் தருவது புறவினா எனப்படும்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது.
1. நீர் ___________ தேங்கி இருக்கிறது? (அது / எங்கே)
2. யார் ___________ தெரியுமா? (அவர் /
யாது)
3. உன் வீடு ___________அமைந்துள்ளது? (எங்கே /
என்ன)
சுட்டு எழுத்துகள்
அவன், இவள். அங்கு,
இங்கு, அந்த, இந்த ஆகிய சொற்களைக் கவனியுங்கள். அவை ஒன்றைச் சுட்டிக் காட்டுகின்றன.
இவ்வாறு சுட்டிக்காட்டுவதற்கு அச்சொற்களின் முதலில் அமைந்துள்ள அ, இ ஆகிய எழுத்துகளே காரணம் ஆகும்.
இவ்வாறு ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும்
எழுத்துகளுக்குச் சுட்டு எழுத்துகள் என்று பெயர்.
அ, இ, உ ஆகிய மூன்று எழுத்துகளும் சுட்டு எழுத்துகள் ஆகும். ஆனால், இன்று ‘உ’ என்னும் எழுத்தைச் சுட்டாகப் பயன்படுத்துவது
இல்லை.
1. அகச்சுட்டு
இவன். அவன், இது,
அது – இச்சொற்களில்
உள்ள சுட்டு எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகள் பொருள் தருவதில்லை. இவ்வாறு, சுட்டு எழுத்துகள் சொல்லின் உள்ளேயே (அகத்தே) இருந்து சுட்டுப்பொருளைத் தருவது அகச்சுட்டு எனப்படும்.
2. புறச்சுட்டு
அவ்வானம்-இம்மலை-இந்நூல்-இச்சொற்களில் உள்ள
சுட்டு எழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும். இவ்வாறு சுட்டு
எழுத்துகள் சொல்லின் வெளியே (புறத்தே) இருந்து சுட்டுப்பொருளைத் தருவது புறச்சுட்டு
எனப்படும்.
3. அண்மைச்சுட்டு
இவன். இவர், இது,
இவை, இம்மரம். இவ்வீடு இச்சொற்கள் நம் அருகில் (அண்மையில்) உள்ளவற்றைச் சுட்டுகின்றன. எனவே, இஃது அண்மைச்சுட்டு எனப்படும்.
அண்மைச்சுட்டுக்குரிய எழுத்து ‘இ’ ஆகும்.
4. சேய்மைச்சுட்டு
அவள், அவர்,
அது, அவை, அவ்வீடு,
அம்மரம் இச்சொற்கள் தொலைவில் (சேய்மையில்) உள்ளவற்றைச் சுட்டுகின்றன. எனவே, இது சேய்மைச்சுட்டு எனப்படும்.
சேய்மைச்சுட்டுக்குரிய எழுத்து ‘அ’ ஆகும்.
5. சுட்டுத்திரிபு
அம்மரம். இவ்வீடு ஆகியவை புறச்சுட்டுகள்
என்பதை அறிவோம். இச்சொற்களை அந்த மரம். இந்த வீடு என்றும் வழங்குகிறோம்.
அ, இ ஆகிய சுட்டு எழுத்துகள் மாற்றம் பெற்று (திரிந்து) அந்த,
இந்த என வழங்குகின்றன.
இவ்வாறு, அ, இ ஆகிய சுட்டு எழுத்துகள் அந்த, இந்த எனத் திரிந்து சுட்டுப் பொருளைத் தருவது
சுட்டுத்திரிபு எனப்படும்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது.
1. என் வீடு _________ உள்ளது. (அது / அங்கே)
2. தம்பி ____________ வா. (இவர் / இங்கே)
ஒருமை பன்மை அறிதல்
ஒருமை என்பது ஒன்றை மட்டும் குறிப்பது.
ஒருமையில் தொடங்கும் ஒரு தொடரின் முடிவு ஒருமையில் தான
முடியவேண்டும்
(எ.கா.) மரம் சாய்ந்தது, அறிஞர் வந்தார்
பன்மை
பன்மை என்பது ஒன்றிற்கு மேற்பட்டவைகளைக் குறிப்பது.
பன்மையில் தொடங்கும் ஒரு தொடரின் முடிவு பன்மையில் தான் அமைய
வேண்டும்
(எ.கா.) மரங்கள் சாய்ந்தன, கருவிகள் பழுதடைந்தன
தன்மைப் பெயர்
ஒருமை |
பன்மை |
யான் |
யாம், யாங்கள் |
நான் |
நாம், நாங்கள் |
முன்னிலைப் பெயர்
ஒருமை |
பன்மை |
நீ |
நீர், நீங்கள் |
படர்க்கைப் பெயர்
ஒருமை |
பன்மை |
அவன், அவள் |
அவர்கள் |
அது |
அவை |
தம்பி |
தம்பிமார் |
தங்கை |
தங்கைமார் |
கண் |
கண்கள் |
நரி |
நரிகள் |
பிழை |
திருத்தம் |
அவைகள் |
அவை |
அதுகள் |
அது |
எனது மகள் |
என் மகள் |
ஒரு ஊர் |
ஓர் ஊர் |
நாட்கள் |
நாள்கள் |
பொதுவழி அல்ல |
பொதுவழி அன்று |
சில அறிஞர் |
அறிஞர் சிலர் |
அவன் அல்ல |
அவன் அல்லன் |
அவள் அல்ல |
அவள் அல்லள் |
அவர்கள் அல்ல |
அவர்கள் அல்லர் |
அவை அன்று |
அது அன்று |
அது உரிமையானது |
அஃது உரிமையானது |
யான் தாம் வந்தோம் |
யான் தான் வந்தேன் |
நான் தாம் சென்றேன் |
நான் தான் சென்றேன் |
நீர் தான் கொடுத்தீர் |
நீர் தாம் கொடுத்தீர் |
நாம் தான் போவோம் |
நாம் தான் போவோம் |
நீர் தான கொடுத்தீர் |
நீர் தாம் கொடுத்தீர் |
அவை தான் ஓடின |
அவை தாம் ஓடின |
ஒருமை |
பன்மை |
அன்று |
அல்ல |
தான் |
தாம் |
பிழை |
மன்னர் தன் குடிகளிடம் அன்பாய் இருப்பார். |
திருத்தம் |
மன்னர் தம் குடிகளிடம் அன்பாய் இருப்பார். |
பிழை |
ஆமைகள் வேகமாய் ஓடாது |
திருத்தம் |
ஆமைகள் வேகமாய் ஓடா. |
பிழை |
நான் கொடுத்த புத்தகம் இது அல்ல |
திருத்தம் |
நான் கொடுத்த புத்தகம் இது அன்று |
பிழை |
இதைச் செய்தவன் இவன் அல்ல |
திருத்தம் |
இதைச் செய்தவன் இவன் அல்லன் |
பிழை |
ஒருகாட்டில் ஒரு சிங்கமொன்று இருந்தது |
திருத்தம் |
ஒருகாட்டில் சிங்கமொன்று இருந்தது |
பிழை |
பாலும் தேனும் கிடைத்தது |
திருத்தம் |
பாலும் தேனும் கிடைத்தன. |
பிழை |
தமிழ்நாட்டு அணி போட்டியில் வென்றன |
திருத்தம் |
தமிழ்நாட்டு அணி போட்டியில் வென்றது |
பிழை |
திட்டங்கள் தீட்டப்பட்டது |
திருத்தம் |
திட்டங்கள் தீட்டப்பட்டன |
பிழை |
கந்தன் தேவியை மணந்தார் |
திருத்தம் |
கந்தன் தேவியை மணந்தான் |
ஒரு, அது எனும் சொல்லையடுத்து முதலெழுத்து உயிர் எழுத்தாக உள்ள சொல்
வந்தால் ஒரு-ஓர் என்றும் அது-அஃது என்று வரும்.
ஒவ்வொரு என்னும் சொல்லையடுத்து நாளும், காசும் என்பன போல ஒருமைச்
சொற்களே வர வேண்டும்.
இனவெழுத்துகள்
சில எழுத்துகளுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உண்டு. இவ்வாறு ஒற்றுமை உள்ள
எழுத்துகள் இன எழுத்துகள் எனப்படும்.
ஆறு வல்லின மெய் எழுத்துகளுக்கும் ஆறு மெல்லின
எழுத்துகளும் இன எழுத்துகள் ஆகும். சொற்களில் மெல்லின மெய் எழுத்தை
அடுத்துப் பெரும்பாலும் அதன் இனமாகிய வல்லின எழுத்து வரும்.
(எ.கா.) திங்கள், மஞ்சள்,
மண்டபம், சந்தன ம், அம்பு,
தென்றல்.
இடையின எழுத்துகள் ஆறும் (ய், ர், ல், வ், ழ், ள்) ஒரே இனமாகும்.
மெய்யெழுத்துகளைப் போலவே உயிர் எழுத்துகளிலும்
இன எழுத்துகள் உண்டு. உயிர்
எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துகள் ஆகும்.
குறில்
எழுத்து இல்லாத ஐ என்னும் எழுத்துக்கு இ என்பது இன எழுத்தாகும். ஔ என்னும் எழுத்துக்கு உ என்பது இன எழுத்தாகும். சொல்லில் உயிர் எழுத்துகள் சேர்ந்து வருவது இல்லை. அளபெடையில் மட்டும் நெடிலைத் தொடர்ந்து
அதன் இனமாகிய குறில் எழுத்து சேர்ந்து வரும்.
(எ. கா.) ஓஒதல், தூஉம்,
தழீஇ
தமிழ் எழுத்துகளில் ஆய்த எழுத்துக்கு மட்டுமே
இன எழுத்து இல்லை.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மெல்லினத்திற்கான இன
எழுத்து இடம்பெறாத சொல் எது?
அ) மஞ்சள் ஆ) வந்தான்
இ) கண்ணில் ஈ) தம்பி
2. தவறான சொல்லை வட்ட மிடுக.
அ) கண்டான் ஆ) வென்ரான் இ) நண்டு ஈ) வண்டு
பின்வரும் சொற்களைத் திருத்தி எழுதுக
தெண்றல் – தென்றல்
கன்டம் – கண்டம்
நன்ரி – நன்றி
மன்டபம் – மண்டபம்
ரகர றகர வேறுபாடு
இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து ரகர றகர வேறுபாடு பற்றிய
செய்திகளைத் தொகுத்துக் கொடுத்துள்ளோம்.
ர – நாவின் நுனி மேல் அண்ணத்தில் முதல் பகுதியைத்
தொட்டு வருவதால் ரகரம் தோன்றுகிறது. இஃது இடையின எழுத்து என்பதால்
இடையின ரகரம் என்கிறோம்.
ற – நாவின் நுனி மேல் அண்ணத்தில் மையப்பகுதியை உரசுவதால் றகரம் தோன்றுகிறது. இது வல்லின எழுத்து என்பதால்
வல்லின றகரம் என்கிறோம்.
பொருள் வேறுபாடு உணர்க
ஏரி – நீர்நிலை
ஏறி – மேலே ஏறி
கூரை – வீட்டின் கூரை
கூறை – புடவை
மயங்கொலி எழுத்துகளை உங்களது நண்பரிடம்
ஒலித்துக் காட்டுக.
Answer:
1. அரம் – ஒரு கருவி
2. அறி – தெரிந்து கொள்
3. உரிய – சொந்தமான
4. அருகு – பக்கம்
5. அரை – பாதி
6. இரங்கு – மனமுருகு
7. இறங்கு – கீழிறங்கு
8. உரை – சொல்
9. கூரை – முகடு
10. தரு – மரம்
11. மாரி – மழை
12. மறை – வேதம்
13. மறம் – வீரம்
14. ஆழி – கடல்
15. குழம்பு – காய்கறிக்
குழம்பு
16. சோளம் – தானியம்
17. ஆணை – கட்டளை
18. கணி – கணக்கிடு
19. வளி – காற்று
20. விழி – கண்திற
னகர ணகர வேறுபாடு
இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து னகர ணகர வேறுபாடு பற்றிய
செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம்.
ண,
ன,
ந – எழுத்துகள்
ண – நாவின் நுனி மேல்வாய் அணணத்தின் நடுப்
பகுதியைத் தொடு்வதால் ணகரம் பிறககிறது.
ன – நாவின் நுனி மேல்வாய் அணணத்தின் முன்
பகுதியைத் தொடு்வதால் னகரம் பிறககிறது.
ந – நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப் பகுதியைத் தொடுவதால் நகரம்
பிறக்கிறது.
(ட்,ண்) (த்,
ந்) (ற், ன்) ஆகியவை இன எழுத்துகள்.
இந்த இன எழுத்துகளைக் கொண்டு டகரத்தை அடுத்து வரும் ணகரம் டண்ணகரம் என்றும்,
தகரத்தை அடுத்து வரும் நகரம் தந்நகரம் என்றும்.
றகரத்தை அடுத்து வரும் னகரம் றன்னகரம் என்றும் அழைக்கப்படுகின்றன.
ணகரம் வர வேண்டிய இடத்தில் னகரம்
எழுதப்படுமானால் பொருள் மாறுபடும் என்பதை உணர்க.
(எ.கா.)
• வாணம் – வெடி
வானம் – ஆகாயம்
• பணி – வேலை
பனி – குளிர்ச்சி
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1) சிரம் என்பது ——————-
(தலை /
தளை)
2) இலைக்கு வேறு பெயர்
——————- (தளை / தழை)
3) வண்டி இழுப்பது ——————-
(காலை / காளை)
4) கடலுக்கு வேறு பெயர்
——————- (பரவை /
பறவை)
5) பறவை வானில் ——————-
(பறந்தது /
பரந்தது)
6) கதவை மெல்லத் ——————-
(திறந்தான் /
திரந்தான்)
7) பூ ——————- வீசும்.
(மனம் /மணம்)
8) புலியின் ——————-
சிவந்து காணப்படும். (கன் /கண்)
9) குழந்தைகள் ——————-
விளையாடினர். (பந்து /பன்து)
10) வீட்டு வாசலில் ——————-
போட்டனர். (கோலம் /
கோளம்)
லகர ளகர ழகர வேறுபாடு
ல,
ள,
ழ – எழுத்துகள்
ல – நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் பற்களின் அடியைத் தொடுவதால் லகரம் தோன்றும். இது ‘வ’ போல இருப்பதால் ‘வகர லகரம்’
என்கிறோம்.
ள – நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல்
அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் ளகரம் தோன்றும். இதனைப் பொது ளகரம்
என்கிறோம். இது ‘ன’ போல இருப்பதால் ‘னகர ளகரம்’ என்று கூறுவர்.
ழ – நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால் ழகரம் தோன்றும். (ளகரமும் ழகரமும் ஒரே இடத்தில் ஒலிக்கப்படும்). ழ தமிழுக்கே சிறப்பானது. எனவே இதனைச் சிறப்பு ழகரம் என்று அழைக்கிறோம். இது ‘ம’ போல இருப்பதால் ‘மகர ழகரம்’
என்று கூறுவது இலக்கண மரபு.
பொருள் வேறுபாடு உணர்க.
• விலை – பொருளின்
மதிப்பு
• விளை – உண்டாக்குதல்
• விழை – விரும்பு
> இலை – செடியின் இலை
> இளை – மெலிந்து போதல்
> இழை – நூல் இழை
ல, ள, ழ ஆகிய எழுத்துகள் அமைந்த சொற்களைப் பொருளுடன்
தொகுக்க
Answer:
1. அலகு – பறவை மூக்கு
அளகு – பெண் பறவை
அழகு – வனப்பு
2. அலை – திரை, திரி
அளை – தயிர்
அழை – கூப்பிடு
3. இலை – தழை
இளை – மெலி
இழை – நூல்
4. ஒலி – ஓசை
ஒளி – வெளிச்சம்
ஒழி – கெடு
5. கலை – வித்தை
களை – நீக்க
கழை – மூங்கில்
6. கிலி – அச்சம்
கிளி – ஒரு பறவை
கிழி – துண்டாக்கு
7. தலை – சிரசு
தளை – கட்டுதல்
தழை – இலை
8. தால் – நாக்கு
தாள் – கால், பாதம்
தாழ் – பணி
9. வலி – வலிமை
வளி – காற்று
வழி – பாதை
10. வால் – விலங்குகளின் வால் பகுதி
வாள் – கத்தி
வாழ் – உயிர் வாழ்.
குறில் நெடில் வேறுபாடு
இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து குறில் நெடில் வேறுபாடு
பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம்.
• தமிழ்மொழியை எழுதும் முறையும் மிக எளிதுதான்.
இதற்கேற்ப, தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் வலஞ்சுழி
எழுத்துகளாகவே அமைந்துள்ளன.
• (எ.கா.) வலஞ்சுழி எழுத்துகள் – அ, எ, ஔ, ண, ஞ
• இடஞ்சுழி எழுத்துகள் –
ட , ய, ழ
• தமிழ் வரிவடிவ எழுத்துகள் அறிவியல்
• தொழில்நுட்ப நோக்கிலும் பயன்படுத்தத் தக்கவையாக உள்ளன.
• மூத்த மொழியான தமிழ் – கணினி, இணையம் போன்றவற்றில் பயன்படத்தக்க வகையில் புது மொழியாகவும் திகழ்கிறது.
தமிழ் மொழியின் இலக்கண வகைகள் ஐந்து.
எழுத்து இலக்கணம்
• சொல் இலக்கணம்
• பொருள் இலக்கணம்
• யாப்பு இலக்கணம்
• அணி இலக்கணம்
எழுத்து
ஒலி வடிவமாக எழுப்பப்படுவதும் வரிவடிவமாக
எழுதப்படுவதும் எழுத்து எனப்படுகிறது.
உயிர் எழுத்துகள்
உயிருக்கு முதன்மையானது
காற்று. இயல்பாக க் காற்று வெளிப்படும்போது உயிர் எழுத்துகள் பிறக்கின்றன.
வாயைத் திறத்தல், உதடுகளை விரித்தல், உதடுகளைக் குவித்தல் ஆகிய எளிய செயல்பாடுகளால் ‘அ’ முதல் ‘ஔ’ வரையுள்ள பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் பிறக்கின்றன.
ஒலித்துப் பார்த்து உணர்வோம்!
அ, இ, உ, எ, ஒ – ஆகிய ஐந்தும் குறுகி ஒலிக்கின்றன.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ – ஆகிய ஏழும் நீண்டு ஒலிக்கின்றன.
ஒவ்வோர் எழுத்தையும் உச்சரிப்பதற்குக் கால
அளவு உண்டு.
எழுத்தை உச்சரிக்க எடுத்துக்கொள்ளும் கால
அளவைக் கொண்டே குறில்,
நெடில் என வகைப்படுத்துகிறோம்.
மாத்திரை
– மாத்திரை என்பது
இங்குக் கால அளவைக் குறிக்கிறது.
– ஒரு மாத்திரை என்பது
ஒருமுறை கண் இமைக்கவோ ஒருமுறை கைநொ டிக்கவோ ஆகும் கால அளவாகும்.
• குறில் எழுத்தை
ஒலிக்கும் காலஅளவு – 1
மாத்திரை.
• நெடில் எழுத்தை
ஒலிக்கும் காலஅளவு – 2
மாத்திரை.
மெய்யெழுத்துகள்
மெய் என்பது உடம்பு
எனப் பொருள்படும். மெய் எழுத்துகளை ஒலிக்க உடல். இயக்கத்தின் பங்கு இன்றியமையாதது. க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் ஆகிய பதினெட்டும் மெய்யெழுத்துகள் ஆகும்.
• வல்லினம் – க், ச், ட், த், ப், ற்
• மெல்லினம் – ங், ஞ், ண், ந், ம், ன்
• இடையினம் – ய், ர், ல், வ், ழ், ள்
உயிர்மெய்
மெய் எழுத்துகள்
பதினெட்டுடன் உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சேர்வதால் தோன்றும் 216 எழுத்துகளும் உயிர்மெய் எழுத்துகள் ஆகும்.
மெய்யுடன் உயிர்க்குறில் சேர்ந்தால்
உயிர்மெய்க் குறில் தோன்றுகிறது. மெய்யுடன் உயிர் நெடில் சேர்ந்தா ல் உயிர்மெய் நெடில் தோன்றுகிறது. ஆகவே உயிர்மெய் எழுத்துகளையும் உயிர்மெய்க் குறில், உயிர்மெய் நெடில் என இருவகைப்படுத்தலாம்.
ஆய்த எழுத்து
தமிழ் மொழியில் உயிர், மெய், உயிர்மெய் எழுத்துகள் தவிர தனி எழுத்து ஒன்றும் உள்ளது. அது ஃ என்னும் ஆய்த எழுத்தாகும்.
ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் காலஅளவு அரை மாத்திரை.
கபிலர் — 1 + 1 + 1 + ½ = 3½
• தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின
உகரங்கள் ஒரு மாத்திரை அளவுக்கு முழுமையாக ஒலிக்கும்.
• குறில் எழுத்துகளைக் குறிக்க ‘கரம்’ (எ.கா.) அகரம்,
இகரம், உகரம், ககரம்,
மகரம்.
• நெடில் எழுத்துகளைக் குறிக்க ‘கான்’ (எ.கா.) ஐகான், ஔகான்.
• குறில், நெடில் எழுத்துகளைக் குறிக்க ‘காரம்’ (எ.கா.) மகாரம், ஏகாரம்,
ஐகாரம், ஔகாரம்.
• எகர, ஒகரக் குறில் நெடில் வேறுபாடில்லை.
• எகர ஒகர குறில் எழுத்துகளைக் குறிக்க
எழுத்துகளின் மேல் புள்ளி வைக்கும் வழக்கம் தொல்காப்பியர் காலம் முதல் இருந்து வந்துள்ளது. எடுத்துக்காட்டாக எ*து என எழுதப்பட்டால் எது என்றும் எது என
எழுதப்பட்டால் ஏது என்றும் ஒலித்தனர்.
• அகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துகளை
அடுத்துப் பக்கப்புள்ளி இடப்பட்டா ல் அவை நெடிலாகக் கருதப்பட்டன. (க. = கா ,
த. = தா ).
• ஐகார எழுத்துகளைக் குறிப்பிட எழுத்துகளின்முன் இரட்டைப் புள்ளி இட்டனர். (..க = கை).
• எகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துகளை அடுத்து இரு புள்ளிகள்
இடப்பட்டால் அவை ஒளகார வரிசை எழுத்துகளாகக் கருதப்பட்டன. (கெ.. = கௌ,
தெ.. = தௌ ).
• மகர எழுத்தைக் குறிப்பிட, பகர எழுத்தின் உள்ளே புள்ளி (ப* ) இட்டனர். குற்றியலுகர, குற்றியலிகர எழுத்துகளைக் குறிக்க அவற்றின் மேலேயும் புள்ளி இட்டனர்.
• ஓரெழுத்து ஒருமொழிகளில் உள்ள குறில்
எழுத்துக்கள் – நொ, து
• குறில் அல்லது நெடில் எழுத்து, தனித்து வந்தாலும் ஒற்றுடன் சேர்ந்து
வந்தாலும் நேரசையாகும். (எ.கா.) ந, நம்,
நா, நாம்.
• இரண்டு குறில்எழுத்துகள் அல்லது குறில், நெடில் எழுத்துகள் இணைந்து வந்தாலும் அவற்றுடன் ஒற்றெழுத்து சேர்ந்து வந்தாலும் நிரையசையாகும். (எ.கா.) கட, கடல்,
கடா, கடாம்.
குறில்,
நெடில்
வேறுபாடு
• அடி – குறில்
ஆடி – நெடில்
• வளி – குறில்
வாளி – நெடில்
எழுத்து
யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்துகள் குறில், நெடில்,
ஒற்று என மூவகைப்படும்.
அசை
எழுத்துகளால் ஆனது
’அசை’ எனப்படும். ஓரெழுத்தோ, இரண்டெழுத்தோ நிற்பது அசை ஆகும். இது நேரசை, நிரையசை
என இருவகைப்படும்.
அடிப்படைச் செய்திகள்
(அ) உயிரெழுத்துகள் – 12. குறில், நெடில் என்று இரண்டு வகைப்படும்.
(ஆ) மெய்யெழுத்துகள் – 18. மூன்று வகைப்படும்.
• வல்லின மெய்கள் – க், ச், ட், த், ப், ற்
• மெல்லின மெய்க ள் – ங், ஞ், ண், ந், ம், ன்
• இடையின மெய்க ள் – ய், ர், ல், வ், ழ், ள்
(இ) உயிர்மெய் எழுத்துகள் – 216. (உயிர்மெய்க் குறில் 90, உயிர்மெய் நெடில் 126)
(ஈ) ஆய்தம் – 1
ல, ள, ழ ஆகிய எழுத்துகள் அமைந்த சொற்களைப் பொருளுடன்
தொகுக்க
Answer:
1. அலகு – பறவை மூக்கு
அளகு – பெண் பறவை
அழகு – வனப்பு
2. அலை – திரை, திரி
அளை – தயிர்
அழை – கூப்பிடு
மயங்கொலி எழுத்துகளை உங்களது நண்பரிடம்
ஒலித்துக் காட்டுக.
Answer:
1. அரம் – ஒரு கருவி
2. அறி – தெரிந்து கொள்
3. உரிய – சொந்தமான
4. அருகு – பக்கம்
5. அரை – பாதி
6. இரங்கு – மனமுருகு
7. இறங்கு – கீழிறங்கு
8. உரை – சொல்
9. கூரை – முகடு
10. தரு – மரம்
11. மாரி – மழை
12. மறை – வேதம்
13. மறம் – வீரம்
14. ஆழி – கடல்
15. குழம்பு – காய்கறிக்
குழம்பு
16. சோளம் – தானியம்
17. ஆணை – கட்டளை
18. கணி – கணக்கிடு
19. வளி – காற்று
20. விழி – கண்திற
பொருள் வேறுபாடு உணர்க
• ஏரி – நீர்நிலை
• ஏறி – மேலே ஏறி
• கூரை – வீட்டின் கூரை
• கூறை – புடவை
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1) சிரம் என்பது ——————- (தலை / தளை)
2) இலைக்கு வேறு பெயர் ——————- (தளை / தழை)
3) வண்டி இழுப்பது ——————- (காலை / காளை)
4) கடலுக்கு வேறு பெயர் ——————- (பரவை / பறவை)
5) பறவை வானில் ——————- (பறந்தது / பரந்தது)
6) கதவை மெல்லத் ——————- (திறந்தான் / திரந்தான்)
7) பூ ——————- வீசும். (மனம் /மணம்)
8) புலியின் ——————- சிவந்து காணப்படும். (கன்
/கண்)
9) குழந்தைகள் ——————- விளையாடினர். (பந்து /பன்து)
10) வீட்டு வாசலில் ——————- போட்டனர். (கோலம் / கோளம்)
இப்பகுதியில் வினாக்கள் வெளியே இருந்துதான்
கேட்கப்படும்.
சந்திப்பிழை
சந்திப்பிழை என்பது ஒரு சொல்லின்
விகுதியோடு மற்றொரு சொல் சேரும் பொழுது ஏற்படும் மாற்றங்களில் ஏற்படும் பிழை
ஆகும்.
நாம் எழுதும் போது பொதுவாக அதிகம்
செய்யும் பிழை சந்தப்பிழை
வல்லின எழுத்துக்களாகிய க, ச, த, ப மிகும் இடங்களில் மிகாமலும், மிகாத இடங்களில் மிகுந்தும் எழுதுவது
சந்தி்ப் பிழை ஆகும்
வல்லெழுத்து
மிகும் இடங்கள்
|
க், ச், த், ப் என்ற நான்கு வல்லின
மெய்யெழுத்துக்கள் மட்டுமே உயிரெழுத்துடன் கூடி மொழிக்கு முதலில் வரும்.
இவ்வெழுத்துக்கள் ஒன்றை முதலாகக்
கொண்ட சொற்கள் நிலைமொழியோடு சேரும்போது சிலவிடங்களில் இம்மெய்யெழுத்து
மிகுந்து வரும்.
எ.கா.
1. சட்டை + துணி = சட்டைத்துணி
2. “அ, இ, உ” என்னும் சுட்டெழுத்துகளுக்குப்
பின்னும்,
“எ” என்னும்
வினாவெழுத்தின்
பின்னும்
வல்லினம் மிகும்.
- அ + சிறுவன் = அச்சிறுவன்
- இ + சிறுவன் = இச்சிறுவன், உச்சிறுவன்
- எ + பையன் = எப்பையன்
3. “அந்த, இந்த, அங்கு, இங்கு, ஆண்டு, ஈண்டு, அப்படி, இப்படி” என்னும் சுட்டுப்
பெயர்களின் பின்னும்,
“எந்த, எப்படி, எங்கு” என்னும் வினாச் சொல்லின் பின்னும்
வல்லினம் மிகும்.
- அந்த + சாலை = அந்தச்சாலை
- இங்கு + பேனான் = இங்குப்போனார்
- ஆண்டு + சென்றான் = ஆண்டுச்சென்றான்
- அப்படி + செய் = அப்படிச்செய்
- எங்கு + பார்த்தாய் = எங்குப்பார்த்தாய்
- எப்படி + செய்தாய் = எப்படிச்செய்தாய்
- எந்த + செடி = எந்தச்செடி
– யாங்கு, யாண்டு பின் மிகும்
– அவ்வகை, இவ்வகை, எவ்வகை பின் மிகும்
– அத்துணை, இத்துணை, எத்துணை பின் மிகும்.
4. இரண்டாம் வேற்றுமை விரியின் பின்
மிகும்.
- நூலை + படி = நூலைப்படி
- பாலை + குடி = பாலைக்குடி
5. நான்காம் வேற்றுமை விரியின் பின்
மிகும்.
- சோலைக்கு + சென்றான் = சோலைக்குச்
சென்றான்
- புலவர்க்கு + காெடுத்தான் = புவலர்க்குக்
கொடுத்தான்
6. இரண்டாம் வேற்றுமை உருபும் பயனுமும்
உடன் தொக்க தொகையில் மிகும்
- தண்ணீர் + குடம் = தண்ணீர்க் குடம்
- மலர் + கூடை = மலர்க்கூடை
7. மூன்றாம் வேற்றுமை உருபும் பயனுமும்
உடன் தொக்க தொகையில் மிகும்
- மரம் + பெட்டி = மரப்பெட்டி
- இரும்பு + சாவி = இரும்புச்சாவி
8. நான்காம் வேற்றுமை உருபும் பயனுமும்
உடன் தொக்க தொகையில் மிகும்
- சட்டை + துணி = சட்டைத்துணி
- குடை + கம்பி = குடைக்கம்பி
9. ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனுமும்
உடன் தொக்க தொகையில் மிகும்
- அடுப்பு + புகை = அடுப்புப்புகை
- விழி + புனல் = விழிப்புனல்
10. பண்புத்தொகையில் வல்லினம் மிகும்.
- நீலம் + கடல் = நீலக்கடல்
- உண்மை + செயல் = உண்மைச்செயல்
11. இருபெயரொட்டு பண்புத்தொகையில்
வல்லினம் மிகும்
- சாரை + பாம்பு = சாரைப்பாம்பு
- மல்லி + பூ = மல்லிப்பூ
12. உவமைத் தொகையில் வல்லினம் மிகும்
- பவளம் + செவ்வாய் = பவளச்செவ்வாய்
- மலர் + கண் = மலர்க்கண்
13. வன்தொடர் குற்றியலுகரத்தின் பின்
வல்லினம் மிகும்
- எடுத்து + பார்த்தேன் = எடுத்துப்
பார்த்தேன்
- பட்டு + சேலை = பட்டுச்சேலை
(எட்டு, பத்து ஆகிய வ.தொ. குற்றியலுகரம்
14. மென்தொடர்க் குற்றியலுகரத்தின்
பின் சில இடங்களில் மிகும்.
- மருந்து + கடை = மருந்துக்கடை
- பண்பு + தொகை = பண்புத்தொகை
15. முற்றியலுகர சொற்களின் பின்
வல்லினம் மிகும்
- திரு + குறள் = திருக்குறள்
- பொது + தேர்வு = பொதுத்தேர்வு
16. ட, ற ஒற்று இரட்டிக்கும் உயிர்த்தொடர், நெடில் தொடர் குற்றியலுகரத்தின்
பின் வல்லினம் மிகும்
- திரு + குறள் = திருக்குறள்
- பொது + தேர்வு = பொதுத்தேர்வு
17. ஓரெழுத்து ஒருமொழியின் பின்
வல்லினம் மிகும் (சிலவற்றில் மிகாது)
- பூ + கடை = பூக்கடை
- கை + கடிகாரம் = கைக்கடிகாரம்
18. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின்
பின் மிகும்.
- அழியாப் + புகழ் = அழியாப்புகழ்
- வளையா + செங்கோல் = வளையாச் செங்கோல்
- உலவா + தென்றல் = உலவாத்தென்றல்
- ஓடா + குதிரை = ஓடாக்குதிரை
19. இடை, உரிச்சொற்களின் பின் வல்லினம்
மிகும்.
- இனி + காண்போம் = இனிக்காண்போம்
- சால + சிறந்தது = சாலச்சிறந்தது
- தவ + பெரிது = தவப்பெரியது
- தனி + சொல் = தனிச்சொல்
மற்று, மற்ற, மற்றை சொற்களின் பின் மிகும்
- மற்று + காணலாம் = மற்றுக்காணலாம்
- மற்ற + தோழர்கள் = மற்றத்தோழர்கள்
- மற்றை + செல்வம் = மற்றச் செல்வம்
20. அரை, பாதி என்னும் எண்ணுப் பெயர்ச்
சொற்களின் பின் மிகும்
- அரை + காணி = அரைக்காணி
- பாதி + பங்கு = பாதிப்பங்கு
21. என, ஆக என்னும் சொற்களுக்கு முன் வரும்
வல்லினம் மிகும்.
- என + கூவினான் = எனக்கூவினான்
- ஆக + சொன்னான் = ஆகச்சொன்னான்
22. ஆய், போய் என்னும் வினையெச்சங்களின்
முன் வல்லினம் மிகும்.
- நன்றாய் + பாடினாள் = நன்றாய்ப்பாடினாள்
- போய் + கேட்டாள் = போய்க்கேட்டாள்
23. நிலைமொழி ஈற்றில் உயிரெழுத்து
நிற்க, வருமொழி முதலில் வரும் வல்லினம்
மிகும்.
- நிலா + சோறு = நிலாச்சோறு
- மழை + காலம் = மழைக்காலம்
- பனி + துளி = பனித்துளி
24. ஆறாம் வேற்றுமைத் தொகையில்
வல்லினம் மிகும்.
- தாமரை + பூ = தாமரைப்பூ
- குதிரை + கால் = குதிரைக்கால்
25. ஏழாம் வேற்றுமைத் தொகையில்
வல்லினம் மிகும்.
- குடி + பிறந்தார் = குடிப்பிறந்தார்
- வழி + சென்றார் = வழிச்சென்றார்
26. அகர, ஈற்று வினையெச்சத்தின் பின்
வல்லினம் மிகும்
- தேட + சொன்னாள் = தேடச்சொன்னாள்
- என + கூறு = எனக்கூறு
27. முன்னர், பின்னர் என்னும்
இடைச்சொற்களுக்குப் பின்வரும் வல்லினம் மிகும்.
- முன்னர் + கண்டோம் = முன்னர்க் கண்டோம்
- பின்னர் + காண்போம் = பின்னர்க்
காண்போம்
28. யகர மெய்யீற்று வினையெச்சத்தின்
பின் மிகும்
- வருவதாய் + கூறினார் = வருவதாய்க்
கூறினார்
- விரைவாய் + போ = விரைவாய்ப் போ
29. இகரவீறு்று வினையெச்சத்தின் பின்
வல்லினம் மிகும்.
- ஓடி + சென்றாள் = ஓடிச்சென்றாள்
- தேடிப் + பார்த்தோம் = தேடிப்பார்த்தோம்
30. ட, ற, இரட்டித்து வரும் நெடில்தொடர், உயிர்த்தொடர், குற்றியலுகரங்களுக்கு பின் வல்லினம்
மிகும்.
- வீட்டு + சுவர் = வீட்டுச்சுவர்
- ஆற்று + பாசம் = ஆற்றுப்பாசனம்
- முரட்டு + காளை = முரட்டுக்காளை
வல்லெழுத்து
மிகா இடங்கள்
|
1. அத்தனை, இத்தனை, எத்தனை என்னும் சொற்களின் பின் மிகாது
- அத்தனை + படங்களா? = அத்தனை படங்களா
2. வினா எழுத்துக்களின் பின் மிகாது (அ, ஓ, ஏ, யா)
- அவனா + சொன்னான் = அவனா சொன்னான்?
- அவனா + கொடுத்தான் = அவனா கொடுத்தான்
- அவனே + சிரித்தான் = அவனே சிரித்தான்
3. வினைத்தொகையில் வல்லினம் மிகாது.
- செய் + தவம் = செய்தவம்
- அலை + கடல் = அலைகடல்
4. எட்டு, பத்து தவிர மற்ற எண்களின் முன்
மிகாது.
- ஒன்று + கொடு = ஒன்றுகொடு
- இரண்டு + பேர் = இரண்டுபேர்
5. இரட்டைக்கிளவியிலும், அடுக்குத்தொடரிலும் மிகாது.
- சல + சல = சலசல
- பாம்பு + பாம்பு = பாம்பு பாம்பு
6. வியங்கோள் வினைமுற்றுகளுக்குப்
பின் மிகாது.
- கற்க + கசடற = கற்ககசடற
- வாழ்க + தமிழ் = வாழ்க தமிழ்
7. இரண்டு வடசொற்கள் சேரும்போது
மிகாது.
- சங்கீத + சபா = சங்கீதசபா
8. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
தவிர மற்ற பெயரெச்சங்களுக்குப் பின் மிகாது.
- கற்ற + சிறுவன் = கற்ற சிறுவன்
- சிறிய + பெண் = சிறிய பெண்
9. சில ஆறாம் வேற்றுமைத் தொகையில்
மிகாது
- வள்ளுவர் + கருத்து = வள்ளுவர் கருத்து
10. சில வினையெச்சத் தொடரில் மிகாது.
- வந்து + பேனான் = வந்துபேனான்
- செய்து + கொடுத்தாள் = செய்து
கொடுத்தாள்
11. சில வினைமுற்றுத் தொடரில் மிகாது.
- வந்தது + பறவை = வந்தது பறவை
- சென்றன + குதிரைகள் = சென்றன குதிரைகள்
12. சில எழுவாய்த் தொடரில் மிகாது
- சீதை + சென்றாள் = சீதை சென்றாள்
- கொக்கு + பறந்தது = கொக்கு பறந்தது
(வன்றொடர்)
13. குற்றியலுகரம், எழுவாய்த்தொடரில் மிகாது, உகர வீற்று வினையெச்சங்கள் முன் மிகாது.
- வந்து + பார்த்தான் = வந்து பார்த்தான்
14. வல்லின றகர, டகரத்தின் பின் ஒற்று வராது.
15. உம்மைத் தொகையில் மிகாது.
- தாய் + தந்தை = தாய்தந்தை
- மார்கழி + தை = மார்கழிதை
16. அவை, இவை என்னும் சொற்களின் முன்வரும
வல்லினம் மிகாது.
- அவை + போயின = அவைபோயின
- இவை + செய்தன = இவைசெய்தன
17. படியென்னும் சொல் வினையோடு
சேர்ந்து வருமிடத்தில் வல்லினம் மிகாது.
- வரும்படி + கூறினாள் = வரும்படி கூறினாள்
- போகும்படி + சொன்னான் = போகும்படி
சொன்னான்
18. அது, இது என்னும் சுட்டுகளின் பின்னும்
எது, யாது என்னும் வினாச்சொற்களின்
பின்னும் மிகாது.
- அது + போயிற்று = அதுபோயிற்று
- இது + பிறந்தது = இது பிறந்தது
- எது + கண்டது = எது கண்டது
- யாது + சொல் = யாது சொல்
19. சில, பல எனும் சொற்களின் முன் வலி
மிகாது.
- பல + குடிசைகள் = பல குடிசைகள்
- சில + சொற்கள் = சில சொற்கள்
20. விளிப்பெயர் பின் மிகாது
- தம்பி போ
21. இரண்டாம் வேற்றுமைத் தொகையில்
மிகாது.
- தமிழ் + கற்றார் = தமிழ்கற்றார்
- துணி + கட்டினான் = துணி கட்டினான்
22. அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு என்னும் சொற்களின் பின்
வலி மிகாது.
- அவ்வளவு + பெரிது = அவ்வளவு பெரிது
- இவ்வளவு + கனிவா = இவ்வளவு கனிவா
- எவ்வளவு + தொலைவு = எவ்வளவு தொலைவு
23. அஃறிணைப் பன்மை முன் வரும் வல்லினம்
மிகாது.
- பல + பசு = பலபசு
- சில + கலை = சிலகலை
24. ஏவல்வினை முன் வரும் வல்லினம்
மிகாது
- வா + கலையரசி = வா கலையரசி
- எழு + தம்பி = எழு + தம்பி
25. மூன்றாம் வேற்றுமை உருபாகிய ஒடு, ஓடு ஆகியவற்றின் பின்வரும் வல்லினம்
மிகாது.
- கோவலனோடு + கண்ணகி வந்தாள் = கேவலனோடு
கண்ணகி வந்தாள்
- துணிவோடு + செல்க = துணிவோடு செல்க
26. செய்யிய எனும் வாய்ப்பாட்டு
வினையெச்சத்தி பின் வல்லினம் மிகாது
- காணிய + சென்றேன் = காணிய சென்றேன்
- உண்ணிய + சென்றான் = உண்ணிய சென்றான்
27. பொதுப்பெயர், உயர் திணைப் பெயர்களுக்குப்
பின்வரும் வல்லினம் மிகாது
- தாய் + கண்டாள் = தாய் கண்டாள்
- கண்ணகி + சீறினள் = கண்ணகி சீறினள்
28. ஐந்தாம் வேற்றுமையின் சொல்
ஊருபுகளான இருந்து,
நின்று
என்பவைகளின் பின் வல்லினம் மிகாது.
- மரத்திலிருந்து + பறித்தேன் =
மரத்திலிருந்து பறித்தேன்
- மலையின்று + சரிந்தது =மலையினின்று
சரிந்தது
29. வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின்
கள், தல் என்னும் விகுதிகள் வரும் போது
மிகாது.
- எழுத்து + கள் = எழுத்துக்கள்
- போற்று + தல் = போற்றுதல்
30. அன்று, இன்று, என்று எனனும் சொல்கள் பின் மிகாது.
- அன்று + கொடுத்தேன் = அன்று கொடுத்தேன்
பிரித்து எழுதுதல் – சேர்த்து எழுதுதல்
6 – ஆம் வகுப்பு
• அஃறிணை = அல் + திணை
• பாகற்காய் = பாகு + அல்
+ காய்
1. நிலவு + என்று = நிலவென்று
2. தமிழ் + எங்கள் = தமிழெங்கள்
3. அமுதென்று = அமுது +
என்று
4. செம்பயிர் = செம்மை +
பயிர்
5. செந்தமிழ் = செம்மை +
தமிழ்
6. பொய்யகற்றும் = பொய் +
அகற்றும்
7. பாட்டு+ இருக்கும் = பாட்டிருக்கும்
8. எட்டு + திசை =
எட்டுத்திசை
9. இடப்புறம் = இடம் +
புறம்
10. சீரிளமை = சீர்மை +
இளமை
11. சிலம்பு + அதிகாரம் =
சிலப்பதிகாரம்
12. கணினி + தமிழ் = கணினித்தமிழ்
13. வெண்குடை = வெண்மை +
குடை
14. பொற்கோட்டு = பொன் +
கோட்டு
15. கொங்கு + அலர் =
கொங்கலர்
16. அவன் + அளிபோல் =
அவனளிபோல்
17. நன்மாடங்கள் = நன்மை +
மாடங்கள்
18. நிலத்தினிடையே =
நிலத்தின் + இடையே
19. முத்து + சுடர் =
முத்துச்சுடர்
20. நிலா + ஒளி = நிலாவொளி
21. தட்பவெப்பம் = தட்பம் +
வெப்பம்
22. வேதியுரங்கள் = வேதி +
உரங்கள்
23. தரை + இறங்கும் = தரையிறங்கும்
24. வழி + தடம் = வழித்தடம்
25. கண்டறி = கண்டு + அறி
26. ஓய்வற = ஓய்வு + அற
27. ஏன் + என்று = ஏனென்று
28. ஔடதம் + ஆம் = ஔடதமாம்
29. ஆழக்கடல் = ஆழம் + கடல்
30. விண்வெளி = விண் + வெளி
31. நீலம் + வான் = நீலவான்
32. இல்லாது + இயங்கும் =
இல்லாதியங்கும்
33. நின்றிருந்த = நின்று +
இருந்த
34. அவ்வுருவம் = அ +
உருவம்
35. மருத்துவம் + துறை = மருத்துவத்துறை
36. செயல் + இழக்க =
செயலிழக்க
37. இடமெல்லாம்= இடம் +
எல்லாம்
38. மாசற = மாசு + அற
39. குற்றம் + இல்லாதவர் = குற்றமில்லாதவர்
40. சிறப்பு + உடையார் = சிறப்புடையார்
41. கைப்பொருள் = கை +
பொருள்
42. மானம் + இல்லா = மானமில்லா
43. பசியின்றி = பசி +
இன்றி
44. படிப்பறிவு = படிப்பு +
அறிவு
45. காடு + ஆறு = காட்டாறு
46. அறிவு+உடைமை = அறிவுடைமை
47. இவை+எட்டும் =
இவையெட்டும்
48. நன்றியறிதல் =
நன்றி+அறிதல்
49. பொறையுடைமை =
பொறுமை+உடைமை
50. பாட்டிசைத்து =
பாட்டு+இசைத்து
51. கண்ணுறங்கு =
கண்+உறங்கு
52. வாழை+இலை = வாழையிலை
53. கை+அமர்த்தி =
கையமர்த்தி
53. பொங்கல்+அன்று =
பொங்கலன்று
54. போகிப்பண்டிகை =
போகி+பண்டிகை
55. பொருளுடைமை =
பொருள்+உடைமை
56. உள்ளுவது+எல்லாம் =
உள்ளுவதெல்லாம்
57. பயன்+இலா = பயனிலா
58. கல்லெடுத்து = கல் + எடுத்து
59. நானிலம் = நான்கு +
நிலம்
60. நாடு + என்ற = நாடென்ற
61. கலம் + ஏறி = கலமேறி
62. கதிர்ச்சுடர் =
கதிர்+சுடர்
63. மூச்சடக்கி =
மூச்சு+அடக்கி
64. பெருமை + வானம் = பெருவானம்
65. அடிக்கும் + அலை = அடிக்குமலை
66. வணிகம் + சாத்து = வணிகச்சாத்து
67. பண்டம் + மாற்று =
பண்டமாற்று
68. மின்னணு = மின் + அணு
69. விரிவடைந்த =
விரிவு+அடைந்த
70. நூலாடை = நூல்+ஆடை
71. எதிர்+ஒலிக்க =
எதிரொலிக்க
72. தம் + உயிர் = தம்முயிர
73. இன்புறறு + இருக்கை = இன்புறறிருக்கை
74. தானென்று = தான் +
என்று
75. எளிதாகும் = எளிது +
ஆகும்
76. பாலையெல்லாம் =
பாலை+எல்லாம்
77. இனிமை + உயிர் = இன்னுயிர்
78. மலை+எலாம் = மலையெலாம்
7 – ஆம் வகுப்பு
1. குரலாகும் = குரல் + ஆகும்
2. வான் + ஒலி = வானொலி
3. இரண்டல்ல = இரண்டு +
அல்ல
4. தந்துதவும் = தந்து +
உதவும்
5. ஒப்புமை + இல்லாத =
ஒப்புமையில்லாத
6. காடெல்லாம் = காடு +
எல்லாம்
7. கிழங்கு + எடுக்கும் =
கிழங்கெடுக்கும்
8. பெயரறியா = பெயர் +
அறியா
9. மனமில்லை = மனம் +
இல்லை
10. நேற்று + இரவு =
நேற்றிரவு
11. காட்டாறு = காட்டு +
ஆறு
12. அனைத்துண்ணி = அனைத்து
+ உண்ணி
13. நேரம் + ஆகி = நேரமாகி
14. வேட்டை + ஆடிய =
வேட்டையாடிய
15. பொருட்செல்வம் = பொருள்
+ செல்வம்
16. யாதெனின் = யாது +
எனின்
17. தன்+நெஞ்சு = தன்னெஞ்சு
18. தீது+உண்டோ= தீதுண்டோ
19. யாண்டுளனோ = யாண்டு +
உளனோ?
20. கல் + அளை = கல்லளை
21. பூட்டுங்கதவுகள் =
பூட்டும் + கதவுகள்
22. தோரணமேடை = தோரணம் +
மேடை
23. வாசல் + அலங்காரம் =
வாசலலங்காரம்
24. பெருங்கடல் = பெருமை +
கடல்
25. இன்று + ஆகி = இன்றாகி
26. ஏடெடுத்தேன் = ஏடு +
எடுத்தேன்
27. துயின்றிருந்தார் =
துயின்று + இருந்தார்
28. என்று + உரைக்கும் =
என்றுரைக்கும்
29. வாய்த்தீயின் =
வாய்த்து + ஈயின்
30. கேடில்லை = கேடு +
இல்லை
31. எவன் + ஒருவன் =
எவனொருவன்
32. உயர்வடைவோம் = உயர்வு +
அடைவோ ம்
33. இவை + எல்லாம் =
இவையெல்லாம்
34. வனப்பில்லை = வனப்பு +
இல்லை
35. வார்ப்பு + எனில் =
வார்ப்பெனில்
36. வண்கீடை = வண்டே + கீடை
37. கட்டி + அடித்தல் =
கட்டியடித்தல்
38. கோட்டோவியம் = கோட்டு +
ஓவியம்
39. செப்பேடு = செப்பு +
ஏடு
40. எழுத்து + ஆணி =
எழுத்தாணி
41. எழுத்தென்ப = எழுத்து +
என்ப
42. கரைந்துண்ணும் =
கரைந்து + உண்ணு
43. கற்றனைத்து+ ஊறும் = கற்றனைத்தூறும்
44. நீருலையில் = நீர +
உண்யில்
45. மாரி + ஒன்று = மாரியொன்று
46. தேர்ந்தெடுத்து =
தேர்ந்து + தெடுத்து
47. ஓடை + எல்லாம் =
ஓடையெல்லாம்
48. ஞானச்சுடர் = ஞானம் +
சுடர்
49. இன்பு + உருகு =
இன்புருகு
50. இன்சொல் = இன்மை + சொல்
51. அறம் + கதிர் =
அறக்கதிர்
52. நாடென்ப = நாடு + என்ப
53. கண் + இல்லது =
கண்ணில்லது
54. மலையளவு = மலை + அளவு
55. தன்னாடு = தன்மை + நாடு
56. இவை + இல்லாது = இவையில்லாது
57. தானொரு = தான் + ஒரு
58. எதிரொலித்தது = எதிர் +
ஒலித்தது
59. முதுமை+மொழி = முதுமொழி
8 -ஆம் வகுப்பு
1. என்றென்றும் = என்று + என்றும்
2. வானமளந்தது = வானம் +
அளந்தது
3. அறிந்தது + அனைத்தும் =
அறிந்ததனைத்தும்
4. வானம் + அறிந்த =
வானமறிந்த
5. இருதிணை = இரண்டு +
திணை
6. ஐம்பால் = ஐந்து + பால்
8. நன்செய் = நன்மை + செய்
9. நீளுழைப்பு = நீள் +
உழைப்பு
10. சீருக்கு + ஏற்ப =
சீருக்கேற்ப
11. ஓடை + ஆட = ஓடையாட
12. விழுந்ததங்கே =
விழுந்தது + அங்கே
13. செத்திறந்த = செத்து +
இறந்த
14. பருத்தி + எல்லாம் =
பருத்தியெல்லாம்
15. இன்னோசை = இனிமை + ஓசை
16. பால் + ஊறும் =
பாலூறும்
17. வல்லுருவம் = வன்மை +
உருவம்
18. நெடுமை + தேர் =
நெடுந்தேர்
19. இவையுண்டார் = இவை +
உண்டார்
20. தாம் + இனி = தாமினி
21. நலமெல்லாம் = நலம் +
எல்லாம்
22. இடம் + எங்கும் =
இடமெங்கும்
23. கலனல்லால் = கலன் +
அல்லால்
24. கோயிலப்பா = கோயில் +
அப்பா
25. பகைவன் + என்றாலும் =
பகைவனென்றாலும்
26. கனகச்சுனை = கனகம் +
சுனை
27. முழவு + அதிர = முழவதிர
28. பாடறிந்து = பாடு +
அறிந்து
29. முறை + எனப்படுவது = முறையெனப்படுவது
30. மட்டுமல்ல = மட்டும் +
அல்ல
31. கயிறு + கட்டில் =
கயிற்றுக்கட்டில்
32. கண்ணோடாது = கண் +
ஓடாது
33. கசடற = கசடு + அற
34. என்று + ஆய்ந்து =
என்றாய்ந்து
35. அக்களத்து = அ + களத்து
36. கதிர் + ஈன = கதிரீன
37. வாசலெல்லாம் = வாசல் +
எல்லாம்
38. பெற்றெடுத்தோம் =
பெற்று + எடுத்தோம்
39. கால் + இறங்கி =
காலிறங்கி
40. வெங்கரி = வெம்மை + கரி
41. என்றிருள் = என்று +
இருள்
42. போல் + உடன்றன =
போலுடன்றன
43. சீவனில்லாமல் = சீவன் +
இல்லாமல்
44. விலங்கொடித்து =
விலங்கு + ஒடித்து
45. காட்டை + எரித்து =
காட்டையெரித்து
46. இதம் + தரும் =
இதந்தரும்
47. நமனில்லை = நமன் +
இல்லை
48. நம்பர்க்கு + அங்கு = நம்பர்க்கங்கு
49. ஆனந்தவெள்ளம் = ஆனந்தம்
+ வெள்ளம்
50. உள் + இருக்கும் =
உள்ளிருக்கும்
51. பெருஞ்செல்வம் = பெருமை
+ செல்வம்
52. ஊராண்மை = ஊர் + ஆண்மை
53. திரிந்து + அற்று = திரிந்தற்று
54. இன்பதுன்பம் = இன்பம் +
துன்பம்
55. குணங்கள் + எல்லாம் =
குணங்களெல்லாம்
56. விழித்தெழும் =
விழித்து + எழும்
57. போவதில்லை = போவது +
இல்லை
58. படுக்கையாகிறது =
படுக்கை + ஆகிறது
59. தூக்கி + கொண்டு =
தூக்கிக்கொண்டு
60. விழித்து + எழும் = விழித்தெழும்
9 -ஆம் வகுப்பு
1. கண்டெடுக்கப்பட்டுள்ளன = கண்டு + எடுக்கப்பட்
டு + உள்ளன
10 -ஆம் வகுப்பு
1. எந்தமிழ்நா = எம் + தமிழ் + நா
2. அருந்துணை = அருமை +
துணை
தமிழில் சிறுகதைகள்
தலைப்பு – ஆசிரியர் பொருத்துதல்.
தமிழின் உரைநடை வடிவங்கள் – கட்டுரை, புதினம்,
சிறுகதை.
‘கடைசி வரை நம்பிக்கை’ சிறுகதையின் ஆசிரியர் – அரவிந்த் குப்தா.
‘வீரச்சிறுவன்’ சிறுகதையின் ஆசிரியர் ஜானகிமணாளன்.
‘தாவரங்களின் உரையாடல்’ எனும் சிறுகதையின்
ஆசிரியர் – எஸ். ராமகிருஷ்ணன்.
தமிழின் முதல் சிறுகதை எழுத்தாளர் – வ. வே. சுப்பிரமணியம்.
‘பயணம்’ எனும் சிறுகதை இடம் பெற்ற நூல் – பிரயாணம்.
தூரத்து ஒளி (அக்பர் பீர்பால் நகைச்சுவைக்
கதைகள்) சிறுகதையின் ஆசிரியர் – க.கொ. முத்தழகர்.
நண்பன் (மரியாதைராமன் கதைகள்) என்னும்
சிறுகதையின் ஆசிரியர் – ஓவியர் ராம்கி.
‘கொடைக்குணம்’ (தாத்தா பாட்டி சொன்ன கதைகள்)
என்னும் சிறுகதையின் ஆசிரியர் – கழனியூரன்.
சிறுகதைக்கு (சிறுகதை மன்னன்) – புதுமைப்பித்தன்.
ஆவணம் சிறுகதையின் ஆசிரியர் – ந. பழநியப்பன்.
பி. ச. குப்புசாமி – ஒரு சிறுகதை ஆசிரியர்.
‘உப்புக்கடலைக் குடிக்கும் பூனை’ எனும்
சிறுகதையை எழுதியவர் – கன்னிவாடி சீரங்கராயன்.
‘மனித யந்திரம்’ என்னும் சிறுகதை ஆசிரியர் – புதுமைப்பித்தன்.
‘சிறுகதை மன்னன்’ என அழைக்கப்பெறுபவர் – புதுமைப்பித்தன்.
புதுமைப்பித்தனின் இயற்பெயர் – கொ.விருத்தாசலம்.
‘சிறுகதைகளில் புதுப்புது உத்திகளைக் கையாண்டவர்’ என புதுமைப்பித்தனைத் திறனாய்வாளர்கள் போற்றுகின்றனர்.
புதுமைப்பித்தனின் சிறுகதைகள் வெளியான இதழ் – மணிக்கொடி.
‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ என்ற
சிறுகதையின் ஆசிரியர் – புதுமைப்பித்தன்.
‘சாப விமோசனம்’ சிறுகதையின் ஆசிரியர் – புதுமைப்பித்தன்.
‘பொன்னகரம்’ சிறுகதையின் ஆசிரியர் – புதுமைப்பித்தன்.
‘ஒரு நாள் கழிந்தது’ சிறுகதையின் ஆசிரியர் புதுமைப்பித்தன்.
தண்ணீர், சாசனம்,
ஒவ்வொரு கல்லாய், கொம்பன் முதலிய சிறுகதைகளின் ஆசிரியர் – கந்தர்வன்.
‘ஓய்ந்திருக்கலாகாது’ நூலின் ஆசிரியர்
சிறுகதைகள் (தொகுப்பு: அரசி – ஆதிவள்ளியப்பன்).
தி.ஜானகிராமன் எழுதிய ‘செய்தி’ என்னும்
சிறுகதை சிவப்பு ரிக்க்ஷா தொகுப்பில் இடம்பெற்றது.
ந. பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதை மற்றும்
அவர் கலைமகள் பரிசுபெற்ற ஆண்டு – ஸயன்ஸூக்கு பலி,
1932.
2016ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்ற
சிறுகதை – ஒரு சிறு இசை;
எழுதியவர் – கல்யாண்ஜி (எ) வண்ணதாசன்.
சு. சமுத்திரத்தின் சிறுகதைகள் –
• வாடாமல்லி
• பாலைப்புறா
• மண்சுமை
• தலைப்பாகை
• காகித உறவு
சிறந்த சிறுகதைகள் பதின்மூன்று (தமிழில்)
எனும் நூலின் ஆசிரியர் – வல்லிக்கண்ணன்.
‘பாய்ச்சல்’ என்னும் கதை இடம் பெற்றுள்ள
சிறுகதை – தக்கையின் மீது நான்கு கண்கள் (சா. கந்தசாமி).
150க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியவர் – சா. கந்தசாமி.
“யுகசந்தி” என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள
தர்கத்திற்கு அப்பால் என்ற சிறுகதை ஜெயகாந்தனின் படைப்பாகும்.
‘தர்க்கத்திற்கு அப்பால்’ என்ற சிறுகதையின்
ஆசிரியர் – ஜெயகாந்தன்.
அ.முத்துலிங்கத்தின் சிறுகதைகள் –
• அக்கா
• மகாராஜாவின் ரயில்
• வண்டி கண் திகடசக்கரம்.
1999இல் இலங்கை அரசின் பரிசு பெற்ற அ. முத்துலிங்கத்தின்
சிறுகதை – வடக்கு வீதி.
1996இல் தமிழ்நாடு அரசின் பரிசு பெற்ற அ.
முத்துலிங்கத்தின் சிறுகதை – வம்சவிருத்தி.
சிவராமலிங்கம் எழுதி வெளிவந்தவைலங்காபுரி ராஜா
– சிறுகதைத் தொகுப்பு.
அளவில் சிறுகதையைவிட நீளமாகவும் புதினத்தை
விடச் சிறியதாகவும் இருக்கும் கதை – குறும்புதினம்.
சிறுகதைக்கும் புதினத்துக்கும் இடைப்பட்ட
வடிவம் – குறுநாவல்.
பிம்பம் எனும் சிறுகதையின் ஆசிரியர் – பிரபஞ்சன்.
சிறுகதை ஆசிரியர்
ஒரு நாள் கழிந்தது – புதுமைப்பித்தன்.
தேங்காய்த் துண்டுகள் – டாக்டர் மு.வ.
மறுமணம் – விந்தன்.
செங்கமலமும் ஒரு சோப்பும் – சுந்தரராமசாமி
ஒரு பிரமுகர் – ஜெயகாந்தன்.
மண்ணின் மகன் – நீல பத்மநாபன்.
அனுமதி – சுஜாதா
விழிப்பு – சிவசங்கரி
அனந்தசயனம் காலனி – தோப்பில் முஹம்மது மீரான்
கரையும் உருவங்கள் – வண்ணநிலவன்.
‘மனிதத்தீவுகள்’ எனும் சிறுகதையை இயற்றியவர் – உத்தம சோழன்.
‘குருவி மறந்த வீடு’ எனும் சிறுகதையை
இயற்றியவர் – உத்தம சோழன்.
‘முதல்கல்’ என்னும் சிறுகதை இடம் பெற்ற
தொகுப்பு – தஞ்சைச் சிறுகதைகள்.
தஞ்சைச் சிறுகதைகள்’ என்னும் தொகுப்பினுக்கு
உதவியவர் – சோலை சுந்தரப் பெருமாள்.
‘உரிமைத்தாகம்’ என்ற சிறுகதையின் ஆசிரியர் – பூமணி.
அறுப்பு,வயிறுகள் என்பது பூமணியின் சிறுகதைகள்.
‘ஒரு குட்டித்தீவின் வரைபடம்’ சிறுகதைத்
தொகுப்பு நூலின் ஆசிரியர் – தோப்பில் முகமது மீரான்.
‘நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது’ என்ற
சிறுகதையை எழுதியவர் – தமிழ்நதி.
‘விட்டகுறை’ என்ற சிறுகதையின் ஆசிரியர் அழகிரிசாமி.
‘வெந்தழலால் வேகாது’ ஆசிரியர் – அழகிரிசாமி.
முல்லைக்கு தேர் தந்தவர் பாரி சாந்தா தத்தின் இலக்கிய சிந்தனை விருது பெற்ற
சிறுகதை – கோடை மழை.
சிறுகதை
(ம)ஆசிரியர்
பால்வண்ணம் பிள்ளை – புதுமைப்பித்தன்.
மூக்கப்பிள்ளை வீட்டு விருந்து – வல்லிக்கண்ணன்
சட்டை – ஜெயகாந்தன்
வேலி – ராஜம் கிருஷ்ணன்
மகன் – பா.செயப்பிரகாசம்
கிழிசல் – நாஞ்சில் நாடன்
ஓர் உல்லாசப் பயணம் – வண்ணதாசன்
ஒவ்வொரு கல்லாய் – கந்தர்வன்
மண் – அய்க்கண்
பழிக்குப்பழி – த.நா. சேனாதிபதி
பசி – தாமரைச்செல்வி,
இலங்கை.
‘பேபி’ குட்டி – கே. பாலமுருகன், மலேசியா
யானையின் சாவு – சார்வாகன்.
நிகழ்கலை
• கண்ணுக்குக் காட்சியையும் சிந்தைக்குக்
கருத்தினையும் தருவன.
• சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில்
பிரித்துப் பார்க்க இயலாக் கூறுகளாகத் திகழ்பவை.
1. கரகாட்டம்
• ‘கரகம்’ என்னும் பித்தளைச் செம்பையோ, சிறிய குடத்தையோ தலையில் வைத்துத் தாளத்திற்கு
ஏற்ப ஆடுவது,
கரகாட்டம்.
• கரகம், கும்பாட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
• “நீரற வறியாக் கரகத்து” – புறநானூறு.
• சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய பதினொரு வகை
ஆடல்களில் ‘குடக்கூத்து’.
• கரகாட்டத்திற்கு அடிப்படை – குடக்கூத்து.
2. மயிலாட்டம்
• மயில் வடிவுள்ள கூட்டுக்குள் ஒருவர் தன்
உருவத்தை மறைத்துக்கொண்டு. நையாண்டி மேளத்திற்கேற்ப ஆடும் ஆட்டமே மயிலாட்டமாகும்.
3. காவடியாட்டம்
• கா – பாரந்தாங்கும் கோல்.
• இருமுனைகளிலும் சம எடைகளைக் கட்டிய தண்டினைத்
தோளில் சுமந்து ஆடுவது.
• இலங்கை, மலேசியா உட்பட,
புலம்பெயர் தமிழர்
வாழும் பிற நாடுகளிலும் காவடியாட்டம் ஆடப்படுகிறது.
4. ஒயிலாட்டம்
• ஒரே நிறத் துணியை முண்டாசுபோலக் கட்டியும்
காலில் சலங்கை அணிந்தும் கையில் வைத்துள்ள சிறுதுணியை இசைக்கேற்ப வீசியும் ஒயிலாக
ஆடும் குழு ஆட்டமே ஒயிலாட்டம்.
• உணர்ச்சிக்கேற்பப் பாட்டின் சந்தமும்
சந்தத்திற்கேற்ப ஆட்டத்தின் இசையும் மாறிமாறி, மனத்தை ஈர்க்கும்.
• சிறப்பு – கம்பீரத்துடன் ஆடுதல்.
• ஆண்கள் ஆடுவதே வழக்கில் உள்ளது.
• ஒரே குழுவில் வயது முதிர்ந்தவர்களும்
இளைஞர்களும் இணைந்து ஆடுவதும் உண்டு.
• குடம், தவில்,
சிங்கி, டோலக், தப்பு போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
5. தேவராட்டம்,
• வானத்துத் தேவர்கள் ஆடிய ஆட்டம் எனப் பொருள்.
• ஆண்கள் மட்டுமே ஆடும் ஆட்டம்.
• கருவி – உறுமி (தேவதுந்துபி).
• 8 – 13 கலைஞர்கள் கலந்துகொள்ள வேண்டுமென்பது பொது
மரபாக உள்ளது.
• வேட்டி + தலை + இடையில் சிறுதுணி) + சலங்கை
அணிந்து ஆடும் ஆட்டம்.
6. சேர்வையாட்டம்
• தேவராட்டம் போன்றே ஆடப்பட்டு வருகின்ற கலை, சேர்வையாட்டம்.
• இசைச்சார்புக் கலையாகவும் வழிபாட்டுக்
கலையாகவும் நிகழ்த்துகின்றனர்.
• இசைக்கருவிகளை – சேவைப்பலகை, சேமக்கலம்,
ஜால்ரா.
7. பொய்க்கால் குதிரையாட்டம்
• “போலச்செய்தல்” பண்புகளைப் பின்பற்றி நிகழ்த்திக்காட்டும்
கலைகளில் பொய்க்கால் குதிரையாட்டமும் ஒன்று.
• ‘புரவி ஆட்டம்’, ‘புரவி நாட்டியம்’ என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.
• காலில் சலங்கை அணிந்தும் அரசன் அரசி
உடையணிந்தும் கிரீடம் அணிந்தும் ஆடுகின்றனர்.
• பொய்க்கால் குதிரையாட்டத்திற்குப்பாடல்கள்
பயன்படுத்தப்படுவதில்லை.
நையாண்டி மேளமும்
நாகசுரமும் இசைக்கப்படுகின்றன.
• இராஜஸ்தானில் – கச்சிகொடி என்றும்,
• கேரளத்தில் – குதிரைக்களி என்றும் அழைக்கப்படுகின்றது.
8. தப்பு ஆட்டம்
• ‘தப்பு’ என்ற தோற்கருவியை இசைத்துக்கொண்டே, அதன் இசைக்கு ஏற்ப ஆடுகின்ற நிகழ்கலையே
தப்பாட்டமாகும்.
• ஆண்கள் மட்டுமே ஆடிவந்த இந்த ஆட்டம் தற்போது
பெண்களாலும் ஆடப்படுகின்றது.
• இவ்வாட்டம் தப்பாட்டம், தப்பட்டை,
தப்பு என்றும் அழைக்கப்படுகின்றது. தப்பு
• தப்பு என்பது வட்ட வடிவமாக அமைந்துள்ள அகன்ற
தோற்கருவி.
• ‘தப் தப்’ என்று ஒலிப்பதால்,
அந்த ஒலியின் அடியாகத்
‘தப்பு’ எனப் பெயர் பெற்றதெனக் கூறப்படுகிறது.
• தகக தகதகக தந்தத்த தந்தகக என்று தாளம்
பதலை திமிலைதுடி
தம்பட்ட மும் பெருக” –
திருப்புகழ்
• என்று அருணகிரிநாதர், தப்பாட்ட இசை குறித்துப் பதிவு செய்துள்ளார்.
இதனைப் ‘பறை’ என்றும் அழைப்பர்.
• ஒன்றைச் சொல்லுவதற்கென்றே (பறைதல்)
இசைக்கப்படும் இசைக்கவல்ல தாளக்கருவி பறை.
• தொல்காப்பியம் குறிப்பிடும் கருப்பொருள்களில் ஒன்றாகப் பறை இடம்பெறுகிறது.
9. புலி ஆட்டம்
• தமிழ் மக்களின் வீரத்தைச் சொல்லும் கலையாகத் திகழ்வது புலி ஆட்டமாகும்.
• பாட்டும் வசனமும் இல்லாத ஆட்டங்களில் புலி ஆட்டமும் ஒன்று.
10. தெருக்கூத்து
• நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்பட்டு வரும்
கலையே தெருக்கூத்து.
• திறந்த வெளியை ஆடுகளமாக்கி ஆடை அணி
ஒப்பனைகளுடன் இது வெளிப்படுத்தப்படுகிறது.
• ஒரு கதையை இசை. வசனம்,
ஆடல், பாடல், மெய்ப்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து வழங்குவர்.
• திரௌபதி அம்மன் வழிபாட்டின் ஒரு பகுதியாகவும் இது இருக்கிறது.
• தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய
அடையாளமாக்கியவர். “நாடகக்கலையை
மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்” – ந. முத்துசாமி (கலைஞாயிறு).
• இந்திய அரசின் தாமரைத்திரு விருதையும்
தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் பெற்றார்.
• தெருக்கூத்து, வேளாண்மை செய்வோரின் கலையாக இருந்தது. அருச்சுனன் தபசு என்பது மழை வேண்டி நிகழ்த்தப்படுவதாக
இருக்கிறது.
11. தோற்பாவைக் கூத்து
• தோலில் செய்த வெட்டு வரைபடங்களை, விளக்கின் ஒளி ஊடுருவும் திரைச்சீலையில்
பொருத்தி, கதைக்கேற்ப மேலும் கீழும் பக்கவாட்டிலும்
அசைத்துக்காட்டி,
உரையாடியும் பாடியும்
காட்டுவது தோற்பாவைக் கூத்து.
• தோலால் ஆன பாவையைக் கொண்டு நிகழ்த்தும்
கலையாதலால் – தோற்பாவை.
• மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் புகழ்மிக்க
பகுதியில், ‘இராச சோழன் தெரு’ என்பது இன்றும் உள்ளது. இது மாமன்னன் இராசராச
சோழன் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட சிறப்பினை உணர்த்துகின்றது. – ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டுமலர்.
நாட்குறிப்பு
ஆனந்தரங்கர்
நாட்குறிப்பு
ஏடு
ஆங்கிலத்தில் – டைரி
இலத்தீன் – ல் – டைரியம்
நாட்குறிப்புகளின் முன்னோடியாக திகழ்வது EPHEMERIDES என்று அழைக்கப்பெறும் கிரேக்கக் குறிப்பேடு ஆகும்.
1498 – இல் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்குக் கடல்
வழியைக் கண்டுபிடித்த போர்ச்சுகீசிய மாலுமி – வாஸ்கோலகாமா.
வாஸ்கோலகாமா – வின் நாட்குறிப்புகள் யாரால்
பதிவு செய்யப்பட்டன – ஆல்வாரோ வெல்ல.
ஆனந்தரங்கர் காலம் – 18 ஆம் நூற்றாண்டு.
பிரெஞ்சுக் கீழக்கிந்தியக் குழுமத்தின்
மொழிபெயர்ப்பாளராகவும் துய்ப்ளே என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிப்பெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர் – ஆனந்தரங்கர்.
உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை என
அழைக்கப்படுபவர் – சாமுவேல் பெய்பிசு.
இந்தியாவின் பெய்பிசு என்று அழைக்கப்படுபவர் – ஆனந்தரங்கர்.
பிரெஞ்சுக் கப்பல் தளபதி – லெபூர்தொனே.
யாருடைய படையெடுப்பு ஆங்கிலேயர் புதுச்சேரியை
முற்றுகை இட்டது – இராபர்ட் கிளைவின்.
1758 – ஆம் ஆண்டு இறுதியில் சென்னைக் கோட்டை
முற்றுகையை தொடங்கியவர் – வல்லி.
“தமிழ்த்தாய் நெருப்பினாலும் வெள்ளத்தினாலும்
பாதிக்கப்பட்டாலும் அவளது ஆபரணங்கள் தொலைவில் உள்ள நகரமான பாரிசில் மிகவும்
பாதுகாக்கப்படுகின்றன” – உ.வே.சா
அந்தக் காலத்தில் நடந்த செய்திகளையெல்லாம்
முக்கியமானது,
முக்கியமில்லாதது என்று
என்று கூடக் கவனிக்காமல்,
ஒன்று தவறாமல்
சித்திரகுப்தன் எழுதி வைத்திருக்கிறார், ஆனந்தரங்கர்” – வ.வே.சு
புதுச்சேரியில் இருந்து மணிலாவுக்குச் சென்ற
கப்பலில் ‘அழகப்பன்’ என்ற தமிழ் மாலுமி பணியாற்றியதையும் ஆனந்தரங்கர் கூறியுள்ளார்.
ஆனந்தரங்கர் காலத்தில் வழக்கில் இருந்த
நாணயங்கள்:-
480 காசு – 1 ரூபாய்
60 காசு – 1 பணம்
8 பணம் – 1 ரூபாய்
24 பணம் – 1 வராகன்
1 பொன் – 1/2 வராகன்
1வராகன் – 3 அல்லது 3.2 ரூபாய்
1 மோகரி – 14 ரூ மதிப்புள்ள தங்க நாணயம்
1 சக்கரம் – 1/2 வராககுக்கும் கூடுதல் மதிப்புள்ள தங்க நாணயம்.
புதுசேரியில் நடந்த போரில் மக்கள் உணவும்
நீரும் இன்றி வாடியபோது பெருஞ்சோறு அளித்தவர் – கனகராயர்.
புதுசேரியின் ஆளுநராக லெறி இருந்த காலத்தில் புதுச்சேரியின் இராணுவ அரசியல் செய்திகளை முகலாயருக்கும்
ஆங்கிலேயாருக்கும் கூடுதலாக ஆனந்தரங்கர் மீது பழி சுமத்தப்பட்டது.
ஆனந்தரங்கர் பற்றிய நூல்கள்:
• ஆனந்தரங்கன் கோவை – தியாகராய தேசிகர்.
• ஆனந்தரங்கன்
பிள்ளைத்தமிழ் – புலவரேறு அரிமதி தென்னகன்.
• வானம் வசப்படும் – வானம் வசப்படும் (பிரபஞ்சன்)
பேரறிஞர் அண்ணா
பேசத் தொடங்கியதும் சிங்கத்தின் முழக்கம்
போலவே இருந்தது என்று முத்துராமலிங்கத்தேவரை புகழ்ந்துரைத்தவர் – அறிஞர் அண்ணா.
“தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை
அகற்ற வந்த ஒளிக்கதிர்” என காயிதே மில்லத்தை பாரட்டியவர் – அறிஞர் அண்ணா.
தம்முடைய திராவிடச் சீர்திருத்தக் கருத்துகளை
நாடகங்கள், திரைப்படங்கள் மூலமாக முதன்முதலில் பரப்பியவர்
– அறிஞர் அண்ணா.
பேரறிஞர் அண்ணா துணையாசிரியராக பணியாற்றிய
இதழ்கள் – குடியரசு, விடுதலை.
அறிஞர் அண்ணா ஆசிரியராக பணியாற்றிய இதழ்கள்
• ஹோம்ரூல்
• ஹோம்லேண்ட்
• நம்நாடு
• திராவிடநாடு
• மாலைமணி
• காஞ்சி
பேரறிஞர் அண்ணா பெத்த நாயக்கன் பேட்டை
கோவிந்தப்ப நாயக்கன் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றிய ஆண்டு – 1935.
இரு மொழி சட்டத்தை உருவாக்கியவர் – அறிஞர் அண்ணா.
சென்னை மாகாணத்தைத் ‘தமிழ்நாடு’ என்று
மாற்றியவர் – அறிஞர் அண்ணா.
நடுவண் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம்
பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயம் வெளியிட்ட ஆண்டு –2009.
‘தென்னகத்தின் பெர்னாட்ஷா’ என்று அழைக்கப்படுபவர் – அறிஞர் அண்ணா.
‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’ முதல் ‘இன்ப ஒளி’ வரை பல படைப்புகளைத் தந்தவர் – அறிஞர் அண்ணா.
அண்ணாவின் புகழ் பெற்ற பொன்மொழிகள்
1. மாற்றான் தோட்டத்து
மல்லிகைக்கும் மணம் உண்டு.
2. கத்தியைத் தீட்டாதே
உன்றன் புத்தியைத் தீட்டு. வன்முறை இருபக்கமும் கூர் உள்ள கத்தி ஆகும்.
3. சட்டம் ஒரு
இருட்டறை-அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு.
4. தமிழரைத் தட்டி எழுப்பும்
தன்மான இலக்கியம் தேவை.
5. இளைஞர்களுக்குப்
பகுத்தறிவும் சுயமரியாதையும் தேவை.
6. இளைஞர்கள் உரிமைப்
போர்ப்படையின் ஈட்டி முனைகள்.
7. எதையும் தாங்கும் இதயம்
வேண்டும்.
8. நல்ல வரலாறுகளைப்
படித்தால்தான் இளம் உள்ளத்திலே புது முறுக்கு ஏற்படும்.
9. நடந்தவை நடந்தவையாக
இருக்கட்டும்;
இனி நடப்பவை நல்லவையாக
இருக்கட்டும்.
“இராவண காவியம் காலத்தின் விளைவு, ஆராய்ச்சியின் அறிகுறி, புரட்சிப் பொறி, உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்” என்று கூறியவர் – பேரறிஞர் அண்ணா.
“எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று
உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே” எனக் கூறியவர் – அறிஞர் அண்ணா.
தங்கைக்கு – மு.வரதராசன், தம்பிக்கு – அறிஞர் அண்ணா.
“களம் புகத் துடித்து நின்ற உனக்கு
வெற்றிச்சாறு கிடைத்து விட்டது, உண்டு
மகிழ்ந்தாய்;
அதற்கு உன் புன்னகை
தான் சாட்சி” என்றவர் அறிஞர் அண்ணா.
“குடிசைகள் ஒரு பக்கம்; கோபுரங்கள் மறுபக்கம்; பசித்த வயிறுகள் ஒரு பக்கம்; புளிச் சேப்பங்கள் மறுபக்கம்” என்று கூறியவர்
-ப. ஜீவானந்தம் 201.
அவர் (பெரியார்
ஈ.வெ.ரா) பேசாத நாள் உண்டா?
குரல் கேட்காத ஊர் உண்டா? அவரிடம் சிக்கித் திணறாத பழமை உண்டா? எதைக் கண்டு அவர் திகைத்தார்? எந்தப் புராணம் அவரிடம் தாக்குதலைப் பெறாதது?… எனவேதான்,
பெரியாருடைய பெரும்
பணியை நான் ஒரு தனிமனிதனின் வரலாறு என்றல்ல ஒரு சகாப்தம் – ஒரு கால கட்டம் – ஒரு
திருப்பம் என்று கூறுகிறேன்.” என்றவர் அறிஞர் அண்ணா.
மேடைப்பேச்சில் நல்ல தமிழைக்கொண்டு மக்களை
ஈர்த்தோர் – திரு.வி.க,
பேரறிஞர் அண்ணா, ரா.பி.சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார்,
குன்றக்குடி அடிகளார்.
மேடைப்பேச்சில் மக்களை ஈர்த்தவர் பேரறிஞர் அண்ணா.
மேடைப்பேச்சில் அண்ணாவை ஈர்த்தவர் – திரு. வி.க.
“உழைத்துப்பெறு! உரிய நேரத்தில் பெறு!முயற்சி
செய்து பெறு!” என்று கூறியவர் – அறிஞர் அண்ணா.
அறிஞர் அண்ணா தனது தம்பிக்கு எந்த இதழில்
கடிதம் எழுதினார்? காஞ்சி.
“புனலிடை மூழ்கிப் பொழிலிடை உலவிப் பொன்னின்
இழையும் துகிலும் பூண்டு” என்று கனிமொழி பேசியவர் அண்ணா அறிஞர்.
அண்ணாவின் கடிதம் எழுதப்பட்ட நாள் – 14.1.1968
அறிஞர் அண்ணாவின் பேச்சாற்றல், பழகும் பண்பு, உண்மை,
நேர்மை,கடமை, கண்ணியம்,
கட்டுப்பாடு
முதலியவற்றால் கவரப்பட்டவர் – எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர்அவர்களை ‘இதயக்கனி’ என்று
போற்றியவர் – அறிஞர் அண்ணா.
“வீட்டிற்கோர் புத்தக சாவை வேண்டும்” என்று
கூறியவர் – அறிஞர் அண்ணா.
“செவ்வாழை” என்ற நூலின் ஆசிரியர் – பேரறிஞர் அண்ணா., ஓய்வு – பேரறிஞர்
அண்ணா.
மு.வரதராசனார்
“பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி; எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அடுத்த
நிலையில் வைத்துக் கருதப்படும் மொழியாகும்” என்றவர் – மு. வரதராசனார்.
எண்ணப்படுவது, நினைக்கப்படுவது,
கனவு காணப்படுவது
ஆகியவையும் மொழியே ஆகும் என்றவர் – மு.வரதராசனார்.
“தமிழ் ஒன்றே தமிழரைப் பிணைத்து
ஒற்றுமைப்படுத்தவல்லது;
தமிழ் ஆட்சி
மொழியாகவும் கல்வி மொழியாகவுமானால் தவிரத் தமிழுக்கு எதிர்காலம் இல்லை என நம்பு.
ஆட்சிமொழி என்றால் சட்டசபைமுதல் நீதிமன்றம்வரையில் தமிழ் வழங்க வேண்டும்” என்று
கூறியவர் – மு.வரதராசனார்.
“உன் மொழியையும் நாட்டையும் போற்றுவதற்காக
மற்றவர்களின் மொழியையும் நாட்டையும் தூற்றாதே, பழிக்காதே. வெறுக்காதே” என்று கூறியவர் – மு. வரதராசனார்.
“தமிழர்களிடையே உள்ள பகை, பிரிவுகளை மேலும் வளர்க்கும் செயல்களைச்
செய்யாதே; அத்தகைய சொற்களைச் சொல்லாதே; அவ்வாறான எண்ணங்களை எண்ணாதே. தமிழரிடையே
ஒற்றுமை வளர்க்கும் சிந்தை,
சொல், செயல்களையே போற்று. சுவையாக இருந்தாலும்
முன்னவையை நாடாதே. சுவையற்றிருந்தாலும் பின்னவையைப் போற்று” என்று கூறியவர் – மு. வரதராசனார்.
“தலைமை உன்னைத் தேடிக்கொண்டு வந்தால் வரட்டும்.
நீ அதைத் தேடிக் கொண்டுபோய் அலையாதே. நீ தேட வேண்டுவது தொண்டு” என்று கூறியவர் – மு. வரதராசனார்.
‘தொண்டுக்கு முந்து, தலைமைக்குப் பிந்து’ என்பது உன் நெறியாக
இருக்கட்டும் என்று கூறியவர் – மு. வரதராசனார்.
“இந்த நாட்டில் சொன்னபடி செய்ய ஆள் இல்லை.
ஆனால்,bகண்டபடி சொல்ல ஆள் ஏராளம். ஒவ்வொருவரும் ஆணை
இடுவதற்கு விரும்புகிறார். அடக்கி ஒழுகுவதற்கு யாரும் இல்லை. அதனால்தான் வீழ்ச்சி
நேர்ந்தது” என்று கூறியவர் – விவேகானந்தர்.
மகாத்மா காந்தி
யாரை எளிமையின் ஓர் அறமாக போற்றினர்? – காந்தியடிகள்.
“இந்தியாவில் இவர் காலடி படாத இடமே இல்லை!” என்று கூறப்படும் நபர் யார்? – காந்தியடிகள்.
காந்தி அருங்காட்சியகம் எங்குள்ளது? – மதுரை.
எப்போது காந்தி சென்னைக்கு வந்தார்? – 1919 (பிப்ரவரி). ரௌலட் சட்டம்
இயற்றப்பட்ட ஆண்டு – 1919.
ரௌலட் சட்டத்தை எதிர்த்து கருத்தாய்வுக்
கூட்டம் இராஜாஜி வீட்டில் நடைபெற்றது.
யார் காந்தியை ஒரு பொதுக்கூட்டத்திற்கு தலைமை
தாங்குமாறு அழைப்பு விடுத்தார்? – பாரதியார்.
பாரதியை இவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவிஞர்
என்றவர் யார்?
– இராஜாஜி.
பாரதியை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என்றவர்
யார்?
– காந்தியடிகள்.
காந்தி மதுரைக்கு எப்போது வந்தார்? 1921 (செப்டம்பர்).
காந்தி எங்கு தனது மேலாடை அணியும் பழக்கத்தை
கைவிட்டார்?மதுரை.
உலகம் போற்றிய எளிமைத் திருக்கோலம் யார்? – காந்தியடிகள்.
காந்தி காரைக்குடியைச் சுற்றி உள்ள ஊர்களில்
பயணம் செய்யும்போது கானாடுகாத்தான் என்னும் ஊருக்குச் சென்றார்.
வீடு முழுவதும் வெளிநாட்டு பொருட்களால்
அழகுபடுத்தியிருந்த அன்பரிடம் காந்தியடிகள், “பத்தில் ஒரு பங்கு பணத்தை என்னிடம் கொடுங்கள் இதை விட அழகாக மாற்றுகிறேன்”.
காந்தி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் வரமாட்டேன் என்றார்.
எந்த அருவியில் நீராட மறுப்பதாகக் காந்தி
கூறினார்?
– குற்றாலம்.
காந்தி எங்கு தமிழ்மொழியைக் கற்கத்
தொடங்கினார்?
– தென்னாப்பிரிக்கா.
ஜி. யு. போப் எழுதிய ‘தமிழ்க்கையேடு’ தம்மை
கவர்ந்ததாக காந்தி சொன்னார்.
திருக்குறள் என்னும் நூல் காந்தியை பெரிதும் கவர்ந்தது.
1937ஆம் ஆண்டு சென்னையில் இலக்கிய மாநாடு
நடைபெற்றது.
“இந்தப் பெரியவரின் (உ. வே ள். சா)அடி நிழலில் இருந்து தமிழ் கற்க
வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது” என்று கூறியவர்?
– காந்தி.
ஜவகர்லால் நேரு
காமராசர் பிறந்த நாள் – கல்வி வளர்ச்சி நாள்
டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் பிறந்த நாள் –
ஆசிரியர் தினம்
அப்துல்கலாம் பிறந்த நாள் – மாணவர் தினம்
விவேகானந்தர் பிறந்த நாள் – தேசிய இளைஞர்
தினம்
ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் – குழந்தைகள் தினம்.
மகள் இந்திராவுக்கு நேரு எழுதிய கடிதம்.
எத்தனை ஆண்டுகள் தம் மகள் இந்திரா காந்திக்கு
நேரு கடிதம்
– 42 (1922-1964).
விசுவபாரதி கல்லூரி எங்குள்ளது? – சாந்திநிகேதன்.
“புத்தகம் வாசிப்பதனைக் கடமையாக ஆக்குதல்
கூடாது” எனக் கூறியவர் – நேரு.
நேரு யாருடைய புத்தகங்களை சுவையானவை, சிந்தனையைத் தூண்டுபவை எனக் கூறுகிறார்? – பிளேட்டோவின் புத்தகங்கள்.
“உலகின் மிகச்சிறந்த நூல்களுள் ஒன்று” என நேரு
எந்தாவலை கூறுகிறார்? போரும் அமைதியும் (டால்ஸ்டாய்).
வாசிக்கத் தகுந்த நூல்கள் என நேரு கூறுவது – பெர்னாட்ஷாவின் நூல்கள்.
நேருவுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் – பெட்ரண்ட் ரஸ்ஸல்.
“ஆயிரம் முகங்கள் கொண்டது வாழ்க்கை, அதனைப் புரிந்து கொள்ளவும் முறையாக வாழவும்
புத்தகப் படிப்பு இன்றியமையாதது”
இங்கிலாந்திலுள்ள பல்கலைக்கழகம் – கேம்பிரிட்ஜ்.
புதுக்கவிதை
ந.பிச்சமூர்த்தி
இயற்பெயர் – ந. வேங்கட மகாலிங்கம்.
புனைபெயர் – ந. பிச்சமூர்த்தி.
ஊர் – தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம்.
எழுத்துப்பணி
• கதைகள்,
• மரபுக்கவிதைகள்,
• புதுக்கவிதைகள்,
• ஓரங்க நாடகங்கள்.
காலம் –15.08.1900 04.12.1976
ந.பிச்சமூர்த்தியின் கவிதை நூல்கள் இருபதாம் நூற்றாண்டின் இக்கால இலக்கியத் துறைக்குப் புதிய
சிறப்புகளைச் சேர்த்திருக்கின்றன.
பாரதிக்குப்பின் கவிதை மரபில் திருப்பம்
விளைவித்தவை இவரது படைப்புகள்.
பொங்கல் வழிபாடு – ந. பிச்சமூர்த்தி கவிதைகள்.
இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து, அறிவுத் தெளிவுடன் நல்வாழ்க்கைக்கான மெய்யியல்
உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள் – புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
என்னும் நூலில் வல்லிக்கண்ணன்.
மரபுக்கவிதையின் யாப்புப் பிடியிலிருந்து
விடுபட்ட கவிதைகள் – புதுக்கவிதைகள்.
பாரதியாரின் வசன கவிதையைத் தொடர்ந்து
புதுக்கவிதை படைக்கும் முயற்சியில் ந. பிச்சமூர்த்தி ஈடுபட்டார்.
எனவே, அவர் “புதுக்கவிதையின் தந்தை” என்று போற்றப்படுகிறார்.
புதுக்கவிதையை “இலகு கவிதை, கட்டற்ற கவிதை. விலங்குகள் இலாக் கவிதை, கட்டுக்குள் அடங்காக் கவிதை என்று பல்வேறு
பெயர்களில் குறிப்பிடுகின்றனர்.
இவர் புதுக்கவிதை, சிறுகதை, ஓரங்க நாடகங்கள்,
கட்டுரைகள் ஆகிய
இலக்கிய வகைமைகளைப் படைத்தவர்.
ந.பிச்சமூர்த்தி துணை ஆசிரியராகப் பணியாற்றிய
இதழ்கள்
• ஹனுமான்
• நவஇந்தியா
முதல் சிறுகதை – “ஸயன்ஸுக்கு பலி”.
1932 இல் கலைமகள் இதழ் வழங்கிய பரிசைப் பெற்றார். பிக்ஷு”, ரேவதி ஆகிய புனைபெயர்களில் படைப்புகளை எழுதினார்.
காட்டு வாத்து – ந. பிச்சமூர்த்தி.
“மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை
உடுத்தியிருக்கிறது”
“கோவைப்பழ மூக்கும்
பாசிமணிக் கண்ணும்
சிவப்புக்கோட்டுக்
கழுத்தும்
வேப்பிலை வாலும்”
சி.சு. செல்லப்பா
‘வாடிவாசல்’ நூலின் ஆசிரியர் – சி.சு. செல்லப்பா.
சி.சு. செல்லப்பாவின் இலக்கிய பங்களிப்புகள் –
சிறுகதை, புதினம், விமர்சனம்,
கவிதை, மொழிபெயர்ப்பு.
சந்திரோதயம், தினமணி ஆகிய இதழ்களில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவர் – சி. சு. செல்லப்பா.
‘எழுத்து’ என்னும் இதழினைத் தொடங்கியவர் – சி. சு. செல்லப்பா.
‘எழுத்து இதழினைத் தொடங்கி, தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் – சி. சு. செல்லப்பா.
செல்லப்பாவின் குறிப்பிடத்தக்க படைப்புகள்
• வாடிவாசல்,
• சுதந்திர தாகம்,
• ஜீவனாம்சம்,
• பி. எஸ். ராமையாவின் சிறுகதைப்பாணி
• தமிழ் சிறுகதை
பிறக்கிறது.
‘சுதந்திர தாகம்’ புதினத்திற்கு 2001ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் – சி. சு. செல்லப்பா.
குறும்புதினத்தின் சுருக்கப்பட்ட வடிவான ‘வாடிவாசல்’ என்னும் நூலின் ஆசிரியர் சி.சு.செல்லப்பா.
தரும சிவராமு
பசுய்யா
இரா. மீனாட்சி
சி. மணி
சிற்பி
மு.மேத்தா
வானம்பாடி இயக்கக் கவிஞர்களுள்
குறிப்பிடத்தக்கவர் – மு. மேத்தா.
‘கண்ணீர்ப் பூக்கள்’ எனும் நூலை இயற்றியவர்.
‘ஊர்வலம்’ எனும் நூலை இயற்றியவர்.
‘சோழநிலா’ நூலை இயற்றியவர்.
‘மகுடநிலா’ நூலை இயற்றியவர்.
சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல் – ‘ஆகாயத்திற்கு அடுத்த வீடு’ (2006).
உலகிற்கு ஒளியேற்ற எண்ணெய் ஆக இருக்க வேண்டும்
எனக் குறிப்பிடுபவர் · மு.மேத்தா.
தோல்வி உன் உயர்விற்கு தூண்டு கோலாகும் எனக்
குறிப்பிடுபவர் – மு. மேத்தா.
மு. மேத்தா கூறும் மூன்றாவது கை – நம்பிக்கை.
“நட நாளை மட்டுமல்ல இன்றும் நம்முடையதுதான்”.
“தூங்கி விழுந்தால் பூமி உனக்கு படுக்கையாகிறது; விழித்து நடந்தால் அதுவே உனக்கு பாதையாகிறது”.
“கவலைகளைத் தூக்கிக் கொண்டு திரியாதே. அவை
கைக்குழந்தையல்ல”
“உன்னுடன் நீயே கைகுலுக்கிக் கொள்”
ஈரோடு தமிழன்பன்
‘தமிழோவியம்’ – ஈரோடு தமிழன்.
“ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின்
புன்னகையையும் புரிந்து கொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை, பாடலும் அப்படித்தான்!”
புதுக்கவிதை, சிறுகதை முதலான பல வடிவங்களில் படைப்புகளை வெளியிட்டவர் – ஈரோடு தமிழன்பன்.
ஈரோடு தமிழன்பன் இயற்றிய கவிதை நூல்களை –
ஹைக்கூ
சென்ரியு
லிமரைக்கூ
ஈரோடு தமிழன்பனின் சாகித்திய அகாதெமி விருது
பெற்ற கவிதை நூல் – வணக்கம் வள்ளுவ (2004).
தமிழக அரசின் பரிசு பெற்ற நூல் தமிழன்பன் கவிதைகள்.
இந்தி, உருது,
மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் ஈரோடு தமிழன்பன்
கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
அப்துல்ரகுமான்
“உன்மனம் ஒரு பாற்கடல்”.
“வாரங்கள்
சாபங்கள்
ஆகுமென்றால் இங்கே
தவங்கள் எதர்காக?”
“இந்த
ஆதிரை பருக்கைகள் (வந்தா அப்துல்ரகுமான்)
வீழ்ந்ததும்
பூமிப்பாத்திரம்
அமுதசுரபி” – பால்வீதி
‘பால்வீதி’ என்னும் நூலின் ஆசிரியர் – அப்துல்ரகுமான்.
கலாப்பிரியா
“கொப்புகள் விலகி
கொத்துக் கொத்தாய்
கருவேலங்காய்
பறித்துப் போடும்
மேய்ப்பனை
சிராய்ப்பதில்லை
கருவமுட்கள்”
“குழந்தை
வரைந்து
பறவைகள் மட்டுமே
வானம்”
கல்யானண்ஜி
“சைக்களில் வந்த
தக்காளிக் கூடை சரிந்து
முக்கால் சிவப்பில்
உருண்டது
அனைத்துத் திசைகளிலும்
பழங்கள்
தலைக்கு மேலே
வேலை இருப்பதாய்
கடந்தும் நடந்தும்
அனைவரும் போயினர்
பழங்களை விடவும்
நசுங்கிப் போனது
அடுத்த மனிதர்கள்
மீதான அக்கறை”
ஞானகூத்தன்
மரபுக் கவிதை
முடியரசன்
முடியரசனின் இயற்பெயர் – துரைராசு.
இயற்றிய நூல்கள்:
• பூங்கொடி
• வீரக்காவியம்
• காவியப்பாவை
திராவிட நாட்டின் வானம்பாடி என்று
பாராட்டப்பெற்றவர் – முடியரசன்.
‘கவியரசு’ என பாரட்டப்பெறுபவர் – முடியரசன்.
‘புதியதொரு விதி’ செய்வோம் நூலின் ஆசிரியர் – முடியரசன்.
நானிலம் படைத்தவன் பாடலை எழுதியவர் – முடியரசன்.
‘நானிலம் படைத்தவன்’ பாடலில் முடியரசன்
குறிப்பிடாத திணை – பாலை.
முடியரசனின் பெற்றோர் சுப்பராயலு மற்றும்
சீதாலெட்சுமி.
முடியரசனின் ஊர் – தேனி மாவட்டத்திலுள்ள
பெரியகுளம்.
பறம்பு மலையில் நடந்த விழாவில் ‘கவியரசு’ என்னும் பட்டம் முடியரசனுக்கு குன்றக்குடி அடிகளாரால் வழங்கப்பெற்றது.
பூங்கொடி என்னும் காவியத்துக்காக தமிழக அரசு
பரிசு வழங்கிய ஆண்டு – 1966.
பாரதிதாசன் பரம்பரை தலைமுறை கவிஞருள் மூத்தவர்
– முடியரசன்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரிடம் நெருங்கிப் பழகியவர் – முடியரசன்.
முடியரசனின் காலம் 7.10.1920 —
3.12.1998.
“கடல்சுமந்தாள்; மலைசுமந்தாள்;
கான்சு மந்தாள்; மிடல்சுமந்த அவள்உறுத்துச் சினந்து நின்றால்
மேலாளர் வாழ்வெங்கே?
அவளே வெல்வாள்!”, – முடியரசன்
வாணிதாசன்
‘ஓடை’ என்னும் பாடல் எந்த நூலில்
இடம்பெற்றுள்ளது?
தொடுவானம்.
தொடுவானம் நூலின் ஆசிரியர் – வாணிதாசன்.
வாணிதாசனின் இயற்பெயர் எத்திராசலு (எ) அரங்கசாமி.
வாணிதாசன் பிறந்த ஊர் – வில்லியனூர்.
வாணிதாசன் பெற்றோர் – அரங்க.திருக்காமு
துளசியம்மாள்.
சிறப்பு பெயர்கள் – கவிஞரேறு, பாவலர்மணி.
தமிழகத்தின் ‘வேர்ட்ஸ் வொர்த்’ – வாணிதாசன்.
இயற்றிய நூல்கள் –
• தமிழச்சி,
• கொடிமுல்லை,
• தொடுவானம்,
• எழிலோவியம்,
• குழந்தை இலக்கியம்.
எந்த அரசு வாணிதாசனுக்கு செவாலியர் விருது
வழங்கியது – பிரெஞ்சு அரசு.
வாணிதாசன் எந்தெந்த மொழிகளில் வல்லவர்? தமிழ், தெலுங்கு,
ஆங்கிலம், பிரெஞ்சு.
“வயலிடைப் புகுந்தாய் மணிக்கதிர் விளைத்தாய்
வளைந்துசெல் கால்களால் ஆறே”
“ஆயிரம் வண்ணம் காட்டும் அடிவான முகில்கள்
ஓடிப்பாய்கதிர் ஒளிமறைக்கும்!”
“புதுவெள் ளத்தில்
மாய்கதிர் செக்கர்
வானம்
எழிலோவி யம்பார்
தம்பி!”
“களிமயில் அகவும் புள்ளிக்
கருங்குயில்
பாட்டிசைக்கும்”
சுரதா
சுரதா பிறந்த ஊர் திருவாரூர் மாவட்டம், பழையனூர்.
சுரதாவின் பெற்றோர் – திருவேங்கடம் -செண்பகம்.
சுரதாவின் இயற்பெயர் – இராசகோபாலன்.
பாரதிதாசன் மீது கொண்ட பற்றினால் சுரதா தன் பெயரை சுப்புரத்தினதாசன்
என மாற்றிக்கொண்டார்.
உவமைகளைப் பயன்படுத்திக் கவிதைகள் எழுதுவதில்
வல்லவர் என்பதால் இவரை உவமைக் கவிஞர் என்றும் அழைப்பர்.
சுரதாவின் படைப்புகள் –
• அமுதும் தேனும்,
• தேன்மழை,
• துறைமுகம்
• சுவரும் சுண்ணாம்பும்
• மங்கையர்க்கரசி
சுரதாவின் ‘காடு’ என்னும் பாடல் இடம்பெற்றுள்ள
நூல் இயற்கை எழில்.
‘காடு’ என்னும் பாடல் கிளிக்கண்ணி என்னும் பாவகையைச் சேர்ந்தது.
காடு முழுவதும் மலர்கள் மலர்ந்திருப்பதற்கு
கவிஞர் சுரதா உவமையாக ஒப்பிடுவது கார்த்திகை விளக்குகள்.
சுரதா பெற்ற தமிழக அரசின் விருது – பாவேந்தர் விருது.
சுரதா பெற்ற தமிழக இயலிசை நாடக மன்றத்தின்
விருது – கலைமாமணி.
சுரதாவின் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறை
வழங்கும் சிறந்த நூலுக்கான பரிசைப் பெற்ற நூல் – தேன்மழை.
“வென்றவரும் சில சமயம் தோற்பவரென்று அறிந்தேன்”
இதில் வெற்றிபெற – சுரதா.
‘இதில் வெற்றி பெற’ என்ற கவிதையில் இடம் பெற்ற
பா வகை – எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
சுப்புரத்தினதாசன் என்ற பெயரின் சுருக்கம்
சுரதா.
முழுக்க முழுக்க கவிதைகளையே கொண்ட ‘காவியம்’
என்ற இதழை நடத்தியவர் – சுரதா.
சுரதா நடத்திய ஏடுகள்
• இலக்கியம்,
• விண்மீன்,
• ஊர்வலம்
தமிழக அரசின் கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது வாங்கியவர் – சுரதா.
தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் இராசராசன் விருது
பெற்றவர் – சுரதா.
சுரதா, தமிழகத்தில் உலவும் வாழும் பாவலராகிய பன்னருந்தமிழ்ப் பாவலர்களுக்குத்தலைமை
வழிகாட்டி. பாவலர்;.
“உரைநடையின் சிக்கனந்தான் கவிதை; ஓங்கும்
உணர்ச்சிகளின்
சிக்கனந்தான் அடக்கம்;
காதல்”
கண்ணதாசன்
கண்ணதாசன் 24 ஜூன் 1927
பிறந்தார்.
கண்ணதாசனின் பெற்றோர் –
சாத்தப்பன்-விசாலாட்சி.
கண்ணதாசனின் இயற்பெயர் – முத்தையா.
‘இயேசு காவியம்’ என்ற நூலின் ஆசிரியர் – கண்ணதாசன்.
மழைபொழிவு (இயேசு காவியம் )– கண்ணதாசன்.
கண்ணதாசன் பிறந்த ஊர் சிவகங்கை
மாவட்டத்திலுள்ள சிறுகூடல் பட்டி.
இயேசுவின் வாழ்க்கை வரலாறு மற்றும்
அறிவுரைகளைக் கூறும் நூல் – இயேசு காவியம்.
இயேசு காவியம் என்னும் நூலின் ஆசிரியர் கண்ணதாசன்.
கண்ணதாசன் தமிழக அரசவை கவிஞராக இருந்து
உள்ளார்.
கண்ணதாசன் தொடங்கிய இதழ்கள் –
• தென்றல்,
• முல்லை,
• தமிழ்மலர்
கண்ணதாசனின் சிறந்த வரலாற்றுப் புதினம்
(சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நூல்)– சேரமான்காதலி.
ஆயிரம் தீவு அங்கயற்கண்ணி – கண்ணதாசன் புதினங்கள்.
கண்ணதாசனின் கவிதை நூல்கள் –
• ஆட்டனத்தி ஆதிமந்தி
• இயேசு காவியம்,மாங்களி
• கல்லக்குடி மகாகாவியம்
“எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்”
“மலர்ந்தும் மலராத பாதி மலர் போல” என்ற பாடலை எழுதியவர் – கண்ணதாசன்.
தன் திரைப்படப் பாடல்கள் வழியாக எளிய முறையில்
மெய்யியலை மக்களிடையே கொண்டு சேர்த்தவர் –கண்ணதாசன்.
1949ஆம் ஆண்டு ‘கலங்காதிரு மனமே’ என்ற பாடலை எழுதி, திரைப்படப் பாடலாசிரியரானார்.
காலக்கணிதம் – கண்ணதாசன்.
“நதிவெள்ளம் காய்ந்து விட்டால்
நதியின் நதிசெய்த
குற்றம் இல்லை
விதிசெய்த குற்றம்
இன்றி
வேறு – யாரம்மா!”
‘விஞ்ஞானி’ எனும் தலைப்பிலான கவியரங்க கவிதை கண்ணதாசன்
தலைமையில்
அரங்கேற்றப்பட்டது.
“நிலமெல்லாம் வணங்கும் தோற்றம்
நெருப்பினில் வீழ்ந்த
திங்கே”
“கட்டற்று வானிலே தவழ்கின்ற காற்றினைக் கைது செய்தாரு மில்லை”
“மாற்றம் எனது மானிடத் தத்துவம்”
5,000 மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதிப் புகழ்
பெற்றார்.
அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் கட்டுரைத்தொடர்களும், இயேசுகாவியம் என்னும் நூலும் இவர் புகழை
என்றும் நிலைநிறுத்தும்.
“முச்சங்கங் கூட்டி முதுபுலவர் தமைக் கூட்டி”
இயற்றிய நூல்கள்
• ஆட்டனத்தி ஆதிமந்தி,
• மாங்கனி,
• ஏசுகாவியம்
உடுமலை நாராயணகவி
உடுமலை நாராயணகவி வாழ்ந்த காலம் (1899–1981).
‘அந்தக்காலம் இந்தக்காலம்’ என்ற தலைப்பில் பாடல் இயற்றியவர் உடுமலை நாராயணகவி.
பாமரமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்
வகையில் சமுதாய பாடல்களை எழுதி சீர்திருத்த கருத்துக்களைப் பரப்பியவர் உடுமலை
நாராயணகவி.
பகுத்தறிவுக் கவிராயர் உடுமலை நாராயணகவி.
நாட்டுப்புற இசையின் எளிமையைக் கையாண்டு கவிதை
எழுதியவர் உடுமலை நாராயணகவி.
தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவுக்
கருத்துக்களைப் பரப்பியவர் உடுமலை நாராயணகவி.
பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம்
பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் வாழ்ந்த காலம்
13.04.1930
– 08.10.1959.
பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் பிறந்த ஊர்
செங்கப்படுத்தான்காடு (பட்டுக்கோட்டை).
எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக்
கருத்துக்களை வலியுறுத்திப் பாடியவர் மக்கள் கவிஞர்.
மக்கள் கவிஞர் என அழைக்கப்படுபவர் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
பிறரின் உழைப்பை நம்பி வாழக் கூடாது என மக்கள்
கவிஞர் கூறுகிறார்.
உழைக்கும் மக்களின் துயரங்களையும்
பொதுவுடைமைச் சிந்தனைகளையும் தம்முடைய பாடல்கள் வழிப் பரவலாக்கியவர்
பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய அவரின்
கவிதை –
“எண்ணமும் எழுத்தும் உயர்ந்திருக்கும் ஏழை
கண்ணீரும் பாடலிலே கலந்திருக்கும் பண்ணொடு சந்தமும் பாய்ந்து வரும் பழைய மண்ணின்
வாடையும் சேர்ந்து வரும்”
அ.மருதகாசி
அ.மருதகாசி பிறந்த ஊர் – மேலக்குடிகாடு.
‘திரைக்கவித் திலகம்’ யார்? – அ. மருதகாசி.
கவிமணி தேசிக விநாயகனார்
லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்ற நூலைத் தழுவி எழுதப்பட்ட நூல் – ஆசிய ஜோதி.
உலக உயிர்கள் எல்லாம் துன்பம் இன்றி இன்புற்று
வாழ வேண்டும் என்று விரும்பியவர் – புத்தர்.
புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல் – ஆசிய ஜோதி.
ஆசிய ஜோதி – கவிமணி தேசிக விநாயகனார்.
36 – ஆண்டுகள் பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர்.
பெற்ற பட்டம் – கவிமணி.
“மக்களுக்கு செய்யும் பணியே, இறைவனுக்கு செய்யும் பணி”
‘மருமக்கள் வழி மான்மியம்’ என்ற நூலின் ஆசிரியர் – கவிமணி.
காலம் – 1876 – 1954
கவிமணி பிறந்த ஊர் – தேரூர், குமரி மாவட்டம்.
கவிமணியின் பெற்றோர் – சிவதாணு, ஆதிலெட்சுமி.
கவிமணியின் கவிதை நூல்கள் –
• ஆசிய ஜோதி,
• கதர் பிறந்த கதை,
• மருமக்கள் வழி
மான்மியம்.
• மலரும் மாலையும்
• குழந்தைச் செல்வம்
கவிமணியின் மொழிபெயர்ப்பு நூல் – உமர்கய்யாம் பாடல்கள்.
“வருமுன் காப்போம்” என்னும் பாடல் அமைந்துள்ள
நூல் – மலரும் மாலையும்.
வருமுன் காப்போம் – கவிமணி.
“கூழையே நீ குடித்தாலும் குளித்த பிறகு
குடியப்பா; ஏழையே நீ ஆனாலும் இரவில் நன்றாய் உறங்கப்பா! “
எதை கடைப்பிடித்தால் எமன் நம் உயிரை
அணுகமாட்டான் என்று கவிமணி கூறுகிறார்? காலையும்,
மாலையும்.
“நாடகச் சாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில்
உண்டோ நிகழ்த்து”
“கல்லும் மலையும் குதித்து வந்தேன் பெருங்
காடும் செடியும் கடந்து வந்தேன்”
“மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம்
செய்திடல் வேண்டுமம்மா”
“பந்தடிப்போம் உன்னை என்று வெண்ணிலாவே! நீயும்
பாரில் வர அஞ்சினையோ?
வெண்ணிலாவே!”
“நீதித்திருக்குறளை நெஞ்சாரத் தம் வாழ்வில்
ஒதித்தொழுது எழுக ஓர்ந்து”
பிறப்பினால் எவர்க்கும் உலகில் பெருமை வாராதப்பா!
சிறப்பு
வேண்டுமெனில்-நல்ல செய்கை வேண்டுமப்பா!”
‘தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தேறும் சிலப்பதிகாரம், எனப் பாராட்டியுள்ளார்.
நாமக்கல் கவிஞர்
‘எங்கள் தமிழ்’ என்னும் கவிதை இடம்பெற்றுள்ள
நூல் நாமக்கல் கவிஞர் பாடல்கள்.
நாமக்கல் கவிஞர என்று அழைக்கப்படுபவர் – வெ. இராமலிங்கனார்.
காந்தியக்கவிஞர் என்று அழைக்கப்படுபவர் நாமக்கல் கவிஞர்.
வெ. ராமலிங்கனாருக்கு நடுவணரசு அளித்த விருது பத்மபூஷண்.
‘என் கதை’ – நாமக்கல் கவிஞர்
நாமக்கல் கவிஞர் பாடல்கள் – திருமலர், தமிழ்த்தேன் மலர்,
காந்தி மலர், தேசிய மலர், சமுதாய மலர்,
பெரியோர் புகழ் மலர், திருநாள் மலர், சிறுகாப்பிய மலர்,
இசை மலர், அறிவுரை மலர், பல்சுவை மலர்.
வெ. ராமலிங்கனார் எழுதிய கவிதைத் தொகுப்புகள்
– 10.
சமுதாய மலர் – நாமக்கல் கவிஞர்.
நாமக்கல்லாரின் படைப்புகள்:
• இசைநாவல்கள் –3
• கட்டுரைகள் –12
• தன்வரலாறு – 3
• இலக்கியத்திறனாய்வுகள்
– 7
• கவிதைத்தொகுப்புகள் – 10
• சிறுகாப்பியங்கள் – 5
• மொழிபெயர்ப்புகள் – 4
“சுதந்திரம் தருகிற மகிழ்ச்சியைக் காட்டிலும்
சுகம் தரும்
உணர்ச்சியும் வேறுண்டோ?”
நிதம் தரும் துயர்களை
நிமிர்ந்துநின் றெதிர்த்திட
நிச்சயம் சுதந்திரம் அது வேண்டும்” – என்று பாடியவர் நாமக்கல் கவிஞர்.
“கம்பனோடு வள்ளுவனைச் சுட்டிக் காட்டித்
தெற்றெனநம் அகக்கண்ணைத் திறந்துவிட்ட தெய்வக்கவி”
இராமலிங்கனார் நாமக்கல் மாவட்டம் மோகலூரில் 19-10-1888 அன்று பிறந்தார்.
கவிஞர் சத்தியாக்கிரகத் தொண்டர்கள்
பாடுவதற்கென இயற்றிய சில பாடல்கள் ‘என்னுடைய நாடு’ என்னும் தலைப்பில் தேசிய மலரில் இடம்
பெற்றுள்ளளன. அப்பாடல்கள் நாமக்கல் பாடல்கள்.
பாரதிதாசன்
காலம் – 29. 04.1891 – 21.04.1964.
புரட்சிக்கவிஞர், பாவேந்தர் என புகழப்படுபவர் பாரதிதாசன்.
பாரதியாரின் கவிதை மீது காதல் கொண்டவர் பாரதிதாசன்.
இன்பத்தமிழ் – பாரதிதாசன் கவிதைகள்.
நல்ல புகழ்மிக்க புலவர்களுக்கு தமிழ்
கூர்மையான வேல் போன்றது – பாரதிதாசன்.
இன்பத்தமிழ்’ பாடல் மூலம் தமிழை அமுது, மணம் என பெயரிட்டு அழைத்தவர் – புரட்சிக்கவி பாரதிதாசன்.
சிறப்பு பெயர்
• பாவேந்தர்,
• புரட்சிக்கவி
• புதுவைகுயில்
புரட்சிக்கவியின் பாடலில் காணப்படும்
புரட்சிகர கருத்துக்கள் –
• பெண் கல்வி
• கைம்பெண் மருமணம்
• பொதுவுடைமை
• பகுத்தறிவு
இயற்பெயர் – கனகப்சுப்புரத்தினம்.
“மழையே மழையே வா வா” என்ற பாடலை பாடியவர் – பாரதிதாசன் (இசையமுது).
பாரதிதாசன் இயற்றிய நாடக நூல் – பிசிராந்தையார்.
இயற்றிய நூல்கள்
• பாண்டியன் பரிசு
• குடும்ப விளக்கு
• இருண்ட வீடு
• கண்ணகி புரட்சி
காப்பியம்
• இசையமுது
• அழகின் சிரிப்பு
• தமிழியக்கம்
• சேரத்தாண்டவம்
• பிசிராந்தையார்
• தமிழச்சியின் கத்தி
• எதிர்பாராத முத்தம்
• வீரத்தாய்
• சஞ்சீவி பார்வத்தின்
சாரல்.
பிறந்த ஊர் – புதுவை (பாண்டிச்சேரி).
“தமிழ்நாட்டு மக்கள் அறியாமையில் தூங்கிக்
கிடக்கிறார்கள்”
“உலகம் உண்ண உண் உடுத்த உடுப்பாய்”
வாணிதாசன் யாரின் மாணவர்? பாரதிதாசன்.
“வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே” – பாரதிதாசன்.
“அறிவை விரிவு செய்”
“தமிழுண்டு தமிழ்மக்க ளுண்டு இன்பத் தமிழுக்கு
நாளும்செய் வோம்நல்ல தொண்டு”
“இனிமைத் தமிழ்மொழி எமது எமக்கு இன்பந்
தகும்படி வாய்த்தநல் அமுது”
“கன்னல் பொருள் தரும் தமிழே நீ ஓர் பூக்காடு:
நானோர் தும்பி!” –பாரதிதாசன்.
“உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு”
மணிமேகலை வெண்பா, கண்ணகி புரட்சிக் காப்பியம், படித்த பெண்கள், இளைஞர் இலக்கியம் ஆகிய நூலின் ஆசிரியர் – பாரதிதாசன்.
“இருட்டறையில் உள்ளதடா உலகம்”
“புதியதோர் உலகு செய்வோம்”
“காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீதான்!”
“ஊரினை நாட்டை இந்த
உலகினை ஒன்று சேர்க்கப்
பேரறி வாளர் நெஞ்சில்
பிறந்த பத்திரிகைப்
பெண்ணே!”
அழகின் சிரிப்பு இடம் பெற்ற ‘விழுதும் வேரும்’ என்ற நூலின் ஆசிரியர்-பாரதிதாசன்.
தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனையை கவிதை
வடிவில் தந்தவர் யார் –பாரதிதாசன்.
பாரதிதாசன் பரம்பரை தலைமுறை கவிஞருள் மூத்தவர்
– முடியரசன்.
பெண்களின் கழுத்து நீண்டிருந்தால் அண்டை
வீட்டு அறையிலே நடப்பதை ஆர்வத்தோடு பார்ப்பார்கள் மயில் அப்படிப் பார்க்காது எனப்
பாடியவர் – பாரதிதாசன்.
“பாரதியார் உலககவி! அகத்தில் அன்பும்
பரந்துயர்ந்த அறிவினிலே
ஒளியும் வாய்ந்தோர்!
விள்ளுவதைக் கிள்ளிவிட
வேண்டும் என்போர்!
சீருயர்ந்த கவிஞரிடம்
எதிர்பார்க் கின்ற செம்மைநலம் எல்லாமும் அவர்பாற் கண்டோம்”
“இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தை”
“பொங்கியும் பொலிந்தும் நீண்ட புதுப்பிடர்
மயிர்சி லிர்க்கும் சிங்கமே! வான வீதி திகுதிகு எனஎ ரிக்கும்”
“பெண்ணடிமை தீரும்வரை மண்ணடிமை தீருமோவென
இடிமுழக்கம் செய்தவர் யாரு…”
“பெண் எனில் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில்
இருக்கும் வரைக்கும் உருப்படல் என்பது சரிப்படாது”
“வானூர்தி செலுத்தல் வைய மாக்கடல் முழுதும்
அளத்தல்”
“எத்தனை பெரிய வானம்!
எண்ணிப்பார் உனையும்
நீயே;
பித்தேறி மேல்கீழ்
என்று
மக்கள்தாம் பேசல்
என்னே!”
‘தொண்டு செய்து பழுத்த பழம்’ என்று பெரியாரைப்
பாடியவர் – பாரதிதாசன்.
ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம்
ஒவ்வொன்றும் உன்முன் னேற்றம்!
பாரதிதாசன் நடத்திய இதழ் – குயில்.
“தமிழொளியை மதங்களில் சாய்க்காமை வேண்டும்”
“தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்”
“தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை”
“எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால்
இங்குள்ள எல்லோரும் நானிடவும் வேண்டும்” என்னும்பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் –
தமிழ்வளர்ச்சி (பாரதிதாசன்).
“அறைக்குள் யாழிசை ஏதென்று சென்று எட்டிப்
பார்த்தேன்,
பேத்தி”
“திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்”
“கற்பது பெண்களுக்கா பரணம் – கெம்புக்
கல்வைத்த, நகைதீராத ரணம்!”
“மனிதரெலாம் அன்புநெறி காண்ப தற்கும் மனோபாவம் வானைப்போல்
விரிவ டைந்து”
“ஸ்ரீமதி மிவளார் உலகில் மானிடமதில் ஏதிது
போலொரு சேவிணையினை நேரிரு விழி”
“கற்பிளந்து மலைபிளந்து களிகள் வெட்டி
கருவியெலாம் செய்துதந்த
கைதான் யார்கை?”
வடமொழியில் எழுதப்பட்ட ‘பில்கணியம்’ என்னும் காவியத்தைத் தழுவி தமிழில் பாரதிதாசனால் 1937இல் எழுதப்பட்டது.
மொழி, இனம்,
குடியாட்சி உரிமைகள்
ஆகியவை பற்றித் தம் பாடல்களில் உரக்க வெளிப்படுத்தியவர் – பாரதிதாசன்.
பிரெஞ்சு மொழியில் அமைந்த தொழிலாளர் நலச்
சட்டத்தைத் தமிழ் வடிவில் தந்தவர்.
புதுவை அரசு தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக்
கொண்ட பாரதிதாசனின் வாழ்த்துப் பாடல் “வாழ்விளில் செம்மையைச் செய்பவள் நீயே”.
பாரதிதாசன் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் திருச்சியில் உள்ளது.
பாரதிதாசனின் ‘புரட்சிக்கவி’
குறுங்காவியத்தின் தலைவன்,
தலைவி – உதாரன், அமுதவல்லி.
“நெற்சேர உழுதுழுது பயன்விளைக்கும் நிறை
உழைப்புத் தோள்களெல்லாம் எவரின் தோள்கள்”.
“தமிழ்அறிந்த தால் வேந்தன் எனை அழைத்தான்
தமிழ்க்கவிஎன் நெனை அவளும் காத லித்தால்”
“உமை ஒன்று வேண்டுகின்றேன் மாசில் லாத
உயர்தமிழை உயிர்என்று போற்று மின்கள்.”
“பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில்
மண்ணடிமை தீர்ந்து
வருதல் முயற்கொம்பே”
“நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்”
“விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை
மானுட சமுத்திரம்
நானென்று கூவு
புவியை நடத்து; பொதுவில் நடத்து!”
தமிழக அரசு பாரதிதாசன் பல்கலைக் கழகம் நிறுவி இவர்
புகழைப் போற்றியுள்ளது.
“என்னருந் தமிழ்நாட் டின்கண்
எல்லோரும் கல்வி
கற்றுப்”
பக்கிங்காம் கால்வாயில் மயிலை சீனி.
வேங்கடசாமி,
ப ஜீவானந்தம்
நண்பர்களுடன் படகுப் பயணம் மேற்கொண்டது குறித்து கூறியவர் – பாரதிதாசன்.
தமிழ் மொழியும் தமிழரும் தமிழ்நாடும்
சீர்பெற்றுச் சிறக்கவே இவர் தமது பாடற்றிறம் முழுவதையும் பயன்படுத்தினார்.
மறுமலர்ச்சிக் கருத்துகளை இவர் பாடல்களிற்
பரக்கக் காணலாம்.
தாங்ககெட நேர்ந்த போதும்
தமிழ்கெட லாற்றா அண்ணல்
வேங்கடசாமி என்பேன்
தமிழ் வளர்ச்சி
எளிய நடையில் நடையில் தமிழ் நூல் எழுதிடவும்
வேண்டும்
இலக்கண நூல் புதிதாக
இயற்றுதல் வேண்டும்
தகத்தகயா தமிழை
தாபிப்போம் வாரீர்
தமிழ்மொழியை மதங்களில்
சாய்க்காமை வேண்டும்.
புத்தகச்சாலை
இனிதினிதாய் எழுந்தஉயர் எண்ண மெல்லாம்
இலகுவது புலவர்தரு
சுவடிச் சாலை
புனிதமுற்று மக்கள்புது
வாழ்வு வேண்டில்
புத்தகச்சா லைவேண்டும்
நாட்டில் யாண்டும்”
கல்வியறிவு இல்லாத பெண்கள் பண்படாத நிலத்தைப் போன்றவர்கள்.
ஆண், பெண் இருபாலருக்கும் பொது வானவை .
மின்னல்போல் ஒளிரும் இயல்புடையவள்.
“வாழ்க்கை“ என்பது பொருட்செல்வத்தால வீரத்தாலோ அமைவதன்று
பெண்களுக்கு எப்போதும் கல்வி வேண்டும்.
என்று கூறியவர் – பாரதிதாசன்.
பாரதியார்
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று தமிழை வியந்து
பாடியவர்.
“என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம்
எங்கள் தாய்” என்று தமிழின் தொன்மையை கூறியவர் – பாரதியார்.
பாரதியாரின் இயற்பெயர் சுப்பிரமணியன்.
காணி நிலம் வேண்டும் எனப் பாடியவர் பாரதியார்.
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர்.
இளமையில் சிறப்பாக கவிபாடும் திறன் பெற்றவர்.
பாரதியார்க்கு ‘பாரதி’ எனும் பட்டம்
வழங்கியவர் – எட்டயபுர மன்னர்.
மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும்
பாடியவர்.
இயற்றிய நூல்கள் – பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு,
குயில்பாட்டு.
புதிய ஆதிச்சூடி.
உரைநடை நூல்கள் –
தராசு
சந்திரிகையின் கதை
பாப்பா பாட்டு
ஞானாரதம்
“காக்கைகுருவி எங்கள் சாதி”
புதிய ஆத்திசூடி – பாரதியார். (அறிவியல் ஆத்திச்சூடி – ஔவையார்).
‘வெள்ளிப் பனிமலையின் மீது உலாவுவோம்
மேலைக் கடல் முழுதும்
கப்பல் விடுவோம்’
யார் காந்தியை ஒரு பொதுக்கூட்டத்திற்கு தலைமை
தாங்குமாறு அழைப்பு விடுத்தார்.
பாரதியார் பிறந்த ஆண்டு – 1882.
பாரதியார் இறந்த ஆண்டு – 1921.
யார் மீது கொண்ட பற்றின் காரணமாக தம் பெயரை
பாரதிதாசன் என மாற்றினார்? பாரதியார்.
“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்”
“சுதந்திரப் பயிரைத் தண்ணீர் விட்டோ
வளர்த்தோம்! கண்ணீரால் காத்தோம்”
யார் காந்தியை ஒரு பொதுக்கூட்டத்திற்கு தலைமை
தாங்குமாறு அழைப்பு விடுத்தார்? – பாரதியார்.
தமிழ்நாட்டுக் கவிஞர் யார்? பாரதியார்.
“தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்”
பாரதியை இவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவிஞர்
என்றவர் யார்? இராஜாஜி.
பாரதியை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என்றவர்
யார்? காந்தியடிகள்.
வ.உ.சி யாருடைய பாடலை விரும்பிக் கேட்பார்? பாரதியார்.
வ.உ.சி சென்னைக்கு செல்லும்போது யாரை
சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்? பாரதியார்.
“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்”
‘வந்தே மாதரம் என்போம், எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம்’
“சாதிகள் இல்லையடி பாப்பா”
பாரதியார் எதற்கு கோயில் எனப் பெயர்
சூட்டினார்?
– பள்ளி.
“பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்”
கருத்துப்பட ஓவியங்களை முதன் முதலில் இந்தியா
என்ற இதழில் தமிழில் அறிமுகப்படுத்தியவர்? பாரதியார்.
தமிழ்மொழி வாழ்த்து எனும் பாடப்பகுதி
இடம்பெற்ற நூல் – பாரதியார் கவிதைகள்.
பாரதியார் நடத்திய இதழ்களை விடுதலை போருக்கு
விதிட்டவர் – இந்தியா, விஜயா (நாள் இதழ்).
உரைநடை நூல்களையும் வசனகவிதைகளையும், சீட்டுக்கவிதைகளையும் எழுதியவர்.
• “எட்டயபுர ஏந்தல்”
• “நீடுதுயில் நீக்கப்
பாடி வந்த திலா”
• “சிந்துக்குத் தந்தை” செந்தமிழ்த் தேனீ
• “புதிய அறம் பாட வந்த
அறிஞன்”
• “மறம் பாட வந்த மறவன்”
என்று பாரதிதாசனரால் பாராட்டப்பட்டவர்.
• “பாட்டுக்கொரு புலவன் பாரதி” என்று கவிமணி பாராட்டியுள்ளார்.
கவிஞர், எழுத்தாளர்,
இதழாளர், சமூகச் சீர்த்திருத்தச் சிந்தனையாளர், விடுதலை போராட்ட வீரர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர்
– பாரதியார்.
“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ்
கொண்ட தமிழ்நாடு”– பாரதியார்
“வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே” –
பாரதிதாசன்.
புதுக்கவிதைக்கு – பாரதியார்.
“சுப்புரத்தினம் ஓர் கவி” எனக் கூறியவர் – பாரதியார்.
மகாகவி பாரதியின் பாடல்களைப்பாடி விடுதலை
உணர்வை ஊட்டியவர் – அம்புஜத்தம்மாள்.
பாரதிதாசன் பரம்பரை தலைமுறை கவிஞருள் மூத்தவர்
– முடியரசன்.
பாஞ்சாலி சபதம் என்ற பாடலின் ஆசிரியர் – பாரதியார்.
பாரதியாரின் பெற்றோர் சின்னச்சாமி-இலக்குமி
அம்மையார்.
பாரதியாரின் துணைவியார் செல்லம்மாள்.
“விடியாது பெண்ணாலே என்கின்ற கேலியினை
மிதித்துத் துவைத்தவர் யாரு…”
“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்”
11ஆவது வயதிலேயே அரசவையில் கவிதை எழுதி ‘பாரதி’
என்னும் பட்டம் பெற்றவர் – பாரதியார்.
‘நாடும் மொழியும் நமதிரு கண்கள்’
“ஏழை என்றும் அடிமை என்றும் இல்லை”
பாரதியார் ஆசிரியராக பணியாற்றிய இதழ்கள் – இந்தியா,
சுதேசமித்திரன்.
செய்திகளில் வெளிவரும் கேலிச்சித்திரம், கருத்துப்படம் முதலியவற்றை உருவாக்கியவர் – பாரதியார்.
சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும், பெண்ணடிமைத்தனத்தையும் தன் பாடல்க ளில்
எதிர்த்து எழுதியவர் – பாரதியார்.
பாரதியாரின் முப்பெரும் படைப்புகள்
• கண்ணன் பாட்டு
• குயில் பாட்டு
• பாஞ்சாலி சபதம்
பாரதியாரின் குழந்தை இலக்கியங்கள்
• பாப்பா பாட்டு
• கண்ணன் பாட்டு
• புதிய ஆத்திச்சூடி
தமிழில் வசனக் கவிதை உருவாக காரணமானவர் – பாரதியார்.
பாட்டுக்கொரு புலவன் எனப் பாராட்டப்பட்டவர் பாரதியார்.
‘காற்றே வா’ என்ற கவிதை தொகுப்பின் ஆசிரியர் – பாரதியார்.
“நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம்
படைத்த தமிழ்நாடு” எனப் போற்றியவர் – பாரதியார்.
“யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்” என்று கம்பரை புகழ்ந்து பாடியவர்- பாரதியார்.
‘நிகரென்று கொட்டு முரசே-இந்த நீணிலம்
வாழ்பவரெல்லாம்’ என்று விடுதலைக்கும் சமத்துவத்திற்கும் முரசு
கொட்டியவர் – பாரதியார்.
“இங்கிவனை யான் பெறவே என்ன தவம்
செய்துவிட்டேன்”
“சென்றிடுவீர் எட்டுத்திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவும்
கொணர்ந்திங்கு சேர்ப் பீர்”
“தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய ்தல்
வேண்டும்.”
“கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்”
“ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ”
தமிழகத்தில் மக்களிடையே விடுதலை வேட்கைக்
கனலைத் தம் வீறுகொண்ட பாக்களால் தட்டியெழுப்பியவர் – பாரதியார்.
வள்ளலாரை ‘புதுநெறி கண்ட புலவர்’ என்று
கூறியவர்
– பாரதியார்.
“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்”
“சிறந்த பத்திரிகையாளன் ‘நல்ல ஆசான்’ என்பதில்
ஐயமில்லை” காரணமாக அமைந்த தமிழ்ச்சிற்பி – பாரதியார்.
பாரதி எட்டையபுரம் சமஸ்தானத்தின்
பணியிலிருந்து வெளியேறி மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப்
பணியில் சேர்ந்தார்,
அங்கிருந்து வெளியேறி சுதேசமித்திரன் இதழில் உதவி ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.
தன் பெயரையும் தன்னையும் முன்னிலைப் படுத்திக்
கொள்ள விரும்பும் மனிதர்களுக்கிடையில் “தான்” என்ற ஒன்றை ஒழித்தவர் -பாரதி.
தமிழ் இதழியல் துறையில் முதன் முதலாகக்
கருத்துப்படங்களை அறிமுகப்படுத்தியவர் – பாரதி.
கருத்துப்படங்களை மட்டுமே நடத்த விரும்பிய
இதழ் – சித்திராவளி.
பாரதி, முதன் முதலில் கருத்துப்படங்களை வெளியிட்ட இதழ்கள் – இந்தியா, விஜயா.
தமிழ் இதழ்களில் தமிழ் ஆண்டு, திங்கள், நாள் ஆகியவற்றை முதன் முதலாக குறித்தவர்.
“பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மை
யுறஓங்கும் உலகு” என்ற குறள் வெண்பாவை பெண்களுக்காக சக்கரவர்த்தினி இதழில் பாரதி எழுதியுள்ளார்.
பாரதி சிவப்பு (புரட்சி, விடுதலை) வண்ணத்தாளில் வெளியிட்ட இதழ் – இந்தியா.
தமிழ் இதழ்களில் தமிழில் தலைப்பிடுவதற்கு
முன்னோடி – பாரதி.
இதழ்களில் தலைப்பிடுவதை ‘மகுடமிடல்’ என்று கூறியவர் – பாரதி.
பாரதி 1905-07 காலப்பகுதியில் ஆங்கிலத் தலைப்பை கலந்து பயன்படுத்திய இதழ்கள் – இந்தியா, சக்கரவர்த்தினி.
பாரதி ஆங்கிலத் தலைப்பை பயன்படுத்துவதை
கைவிட்டு அதை சாடியும் எழுதிய இதழ் – சுதேசமித்திரன்.
ஆங்கிலேயர்களின் கெடுபிடியால் பாரதி சென்ற ஊர்
பாண்டிச்சேரி.
பாரதியார் இறக்கும் பொழுதும் இதழாளராகவே
இறந்தார்.
“கூடியவரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமம்
என்பது என்னுடைய கட்சி”
“பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்-புவி
பேணி வளர்த்திடும்
ஈசன்”
“பாரத நாடு பழம்பெரும் நாடு
நீரதன் புதல்வர் இந்
நினைவகற் றாதீர்”
“ஆரிய பூமியில் நாரியரும் பர
சூரியரும் சொலும் வீரிய
வாசகம் வந்தேமாதரம்!”
பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின் மிசை
இல்லையடா! என்று வியந்தவர் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் ஆவார்.
பாரதியார் வசன கவிதைகள் வால்ட்விட்மன் கலீல்
கிப்ரான் முதலிய கவிஞர்களின் கவிதைகளோடு ஒப்பிடத் தக்கவை.
“நாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லாம்
நன்றொலிக்கும் பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்….” பாரதியார்”
“எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தார் அப்பா
யானும் வந்தேன் ஒரு
சித்தன் இந்த நாட்டில்”
“எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா”
“தமிழா! பயப்படாதே! வீதிதோறும் தமிழ்ப்
பள்ளிக்கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக் கொடுக்க
ஏற்பாடு செய்”
“தேடுகல்வி இலாததோர் ஊரைத் தீயினுக்கு இரையாக
மடுத்தல்”
தம்பி நெல்லையப்பருக்கு கடிதம் எழுதியவர் – பாரதியார்.
“பெண்ணை அடைத்தவன், கண்ணை அடைத்தான் என்றெழுது”
“ஆணும் பெண்ணும் ஒருயிரின் இரண்டு தலைகள்”
“வெட்டி யடிக்குது மின்னல்- கடல் வீரத்
திரைகொண்டு விண்ணை யிடிக்குது”
சிறப்பு பெயர்கள் –
• மகாகவி
• தேசிய கவி
• விடுதலைகவி
“நெஞ்சையள்ளும் சிலம்பு” என்று கூறியவர் – பாரதியார்.
மாலைக்கால வருணனை பாரதியாரின் பாஞ்சாலி
சபதத்தில் உள்ளது.
‘நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல்
இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல்’
‘தமிழ் நாட்டில் தமிழ்ப்புலவர் ஒருவன்
இல்லையெனும் வசை நீங்க’ வந்து தோன்றியவர் பாரதியார்.
நிலவுப்பூ என்னும் கவிதையை எழுதியவர் – பாரதி.
தமிழ்ப் புதின வகைக்கான பாரதியாரின் பங்களிப்பாக அவரின் சந்திரிகையின் கதை (1920) அமைகிறது.
குயில் பாட்டை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ஹெப்சிபா ஜேசுநாதன்.
தென்னாட்டிலே தோன்றினார் நாவீறுடைய நண்பர் பாரதியார்.
’ சிதம்பரனாரின் பிரசங்கத்தையு ம் ,
பாரதியாரின் பாட்டையும் கேட்டால்
செத்த பிணம் உயிர்பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்’ – சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதி பின்ஹேவின் கூற்று.
கங்கை நதிப்புறத்துக் கோதுமை பண்டம்
காவிரி வெற்றிலை க்கு
மாறு கொள்ளுவோம்
சிங்க மராட்டியர்தம்
கவிதை கொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போப்போம்.
“நீதி நெறியின்றி பிறக்குதவும்
நேர்மையர் மேலவர்
கீழவர் மற்றோர்”.
“சுதந்திர பயிரை தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!
கண்ணீரால் காத்தோம்”
“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்”
“சாதிகள் இல்லையடி பாப்பா”
“ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்றோம்
ஒரு சொல் கேளிர்
செமமுற வேண்டுமெனில் தெருவெள்ளாம் தமிழ்முழக்கம்
செழிக்க செய்வீர்”
புதுக்கவிதைக்கு தொண்டாற்றியவர் – பாரதியார்.
தமிழகத்தின் தமிழ் துறைத் தலைவராக
பணியாற்றினார். (பல்கலைக் கழகத்தின்)
‘சுப்புரத்தினம் ஓர் கவி’ எனக் கூறியவர்.
“ஏழை என்றும் அடிமை என்றும் இல்லை”
‘நிகரென்று கொட்டு முரசே இந்த நீணிலம்
வாபவரெல்லாம்’ என்று விடுதலை சமத்துவத்திற்கு முரசு கொட்டியவர்.
பாடல் வரிகள்
• ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அன்னியர் வந்து
புகலென்ன நீதி
• பாருக்குள்ளே நல்ல நாடு நாமிருக்கும் நாடு
நமது என்பதறிந்தோம்
• எல்லோரும் ஓர் குலம், ஓர் நிறை எல்லோரும் இந்நாட்டு மன்னர்.
• ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம்
அடைந்து விட்டோமென்று.
• வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து
நாடுகளில் பயிர் செங்குவோம்.
• காசி நகரப்புலவர் பேசும் உரைதான் காஞ்சியில்
கேட்பதருக்கோர் கருவி செய்வோம் குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்.
• குலத் தாழ்ச் உயர்ச்சி சொல்லல் பாவம்.
• மாதிர் தம்மை இழிவு செய்யும் மடமையை
கொடுத்துள்ளோம்
• வாழிய செந்தமிழ் வாழ்கநற் றமிழர்.
• பாரதநாடு பார்க்கெலாம் திலகம்
“பாரத நாடு பழம்பெரும் நாடு
நீரதன் புதல்வர் இந்
நினைவகற் றாதீர்”.
“பழமை பழமை யென்று
பாவனை பேச லன்றி
பழமையிருந்த நிலை –
கிளியே
பாமரர் ஏதறிவார்”
காரியம் மிகப்பெரியது எனது திறமை சிறியது
ஆசையால் இதனை எழுதி
வெளியிடுகின்றேன் – பிறருக்கு
ஆதர்சமாக அன்று
வழிகாட்டியாக!
– பஞ்சாலி சபதம் (பாரதியார் )
‘கலை மகள்’ பொருள் – பாரதி.
சமய முன்னோடிகள்
1. அப்பர்
(திருநாவுக்கரசர்)
பிறந்த ஊர் – திருவாமூர்.
பெற்றோர் – புகழனார், மாதினியார்.
தமக்கையார் – திலகவதியார்.
திருநாவுக்கரசருக்குப் பெற்றோர் இட்டபெயர் – மருணீக்கியார் (மருள் நீக்கியார்).
இவருக்குத் தருமசேனர், அப்பர்,
வாகீசர், அப்பரடிகள் என்னும் வேறு பெயர்களும் உண்டு.
இவரது நெறி தொண்டு நெறி.
சைவ அடியார்களை நாயன்மார்கள் என்று வழங்குவர்.
இவர்கள் 63 -வர்.
சைவ சமயக் குரவர் நால்வருள் ஒருவர் திருநாவுக்கரசர்.
திருநாவுக்கரசர் பாடல்கள் தேவாரம் எனப் போற்றப்படுகின்றது.
இவர் தாண்டகம் பாடுவதில் வல்லவர் ஆதலால், இவர் தாண்டகவேந்தர் எனவும் வழங்கப்படுகிறார்.
காலம் – 7 –ஆம் நூற்றாண்டு.
தே + வாரம் – தெய்வத்தன்மையை உடைய இசைப்பாடல்கள் என்றும்,
தே + ஆரம் – தெய்வத்திற்குச் சூட்டப்பெற்ற பாமாலை.
சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் முதல் ஏழும் மூவர் தேவாரம்.
திருநாவுக்கரசர் பாடி அருளிய பாடல்கள் 4, 5, 6 திருமுறைகள்.
திருநாவுக்கரசர் அருளிய ஆறாந்திருமுறையில் (6 – ஆம் ) உள்ளது.
திருநாவுக்கரசர் அருளிய பாடல்கள் ஆறாந்திருமுறைகள் என வழங்கப்படுகிறது.
சைவத் திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் ஆகும்.
அவற்றுள் முதல் மூன்று திருமுறைகள் – திருஞானசம்பந்தராலும்.
நான்கு, ஐந்து,
ஆறு திருமுறைகள் – திருநாவுக்கரசராலும்(அப்பர்).
ஏழாந்திருமுறை – சுந்தரமூர்த்தி நாயனாராலும் பாடப்பட்டவை
ஆகும்.
சைவநெறியில் தோய்ந்த இவர் சாதி வேற்றுமைகளைக்
களைய முற்பட்ட சமுதாயப் பற்றாளராகவும் காணப்படுகிறார். இவர் ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்னும் திருவாக்கைத் தந்தவரும் அதன்படியே
வாழ்ந்தவருமாவார்.
2. திருஞானசம்பந்தர்
தேவாரம் – திருஞானசம்பந்தர்
மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் நாகரிகத்தின்
வெளிப்பாடு கோவில் திருவிழா.
‘திருமயிலை’ என்று அழைக்கப்படும் சென்னை
மாநகரப் பகுதி – மயிலாப்பூர்
திருநெல்வேலியை “திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி” என்றுvபோற்றியவர் – திருஞான சம்பந்தர்.
நெல்லையில் திங்கள்தோறும் திருவிழா நடைபெறும்
என்பதை “திங்கள் நாள்விழா மல்கு திருநெல் வேலியுறை
செல்வர் தாமே” – திருஞான சம்பந்தர் பாடல் அடிகளால் அறியலாம்.
‘நுண் துளி தூங்கும் குற்றாலம்’ எனப் பாடியவர் சம்பந்தர் திருஞான.
அப்பர், திருஞானசம்பந்தர்,
சுந்தரர் ஆகிய மூவர்
பாடிய பாடல்களின் தொகுப்பு – தேவாரம்.
சைவ சமயக்குரவர் நால்வர் – சுந்தரர், மாணிக்கவாசகர் அப்பர், திருஞானசம்பந்தர்.
“கேளாய்நங் கிளை கிளைக்குங் கேடுபடரத்
திறமருளிக்
கோளாய நீக்குபவன்
கோளிலியெம் பெருமானே”
பன்னிரு திருமுறையில் முதல் 3 திருமுறை – திருஞானசம்பந்தர்.
காலம் – 7 ஆம் நூற்றாண்டு.
ஊர் ____.
பன்னிரு திருமுறைகளை தொகுத்தவர் – நம்பியாண்டார் நம்பி.
இவர் பாடல்கள் தேவாரம் என்று அழைக்கப்படுகிறது.
சம்பந்தர் பாடல்கள் மூலம் பரவிக் காணப்படுவது
– சமுதாயத்தின் பொருளாதாரம்,
கலை, பண்பாட்டு நிலைகள், தமிழுக்கு இருந்த உயர்நிலை, இசை தத்துவம்
3. சுந்தரர்
தேவாரம் பாடிய மூவருள் ஒருவர் சுந்தரர்.
நம்பியாரூரர், தம்பிரான் தோழர் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர் – சுந்தரர்.
திருமுறைகள் மொத்தம் -12. இதில் ஏழாம் திருமுறையைப் பாடியவர் – சுந்தரர்.
திருத்தொண்டத்தொகை எனும் நூலை எழுதியவர் சுந்தரர்.
இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகையை முதல்
நூலாகக் கொண்டே சேக்கிழார் பெரியபுராணத்தைப் படைத்தளித்தார்.
“பண்ணின்தமிழ் இசைபாடலின் பழவெய்முழவு அதிர “ எனப் பாடியவர் – சுந்தரர்.
“கற்ப கத்தினைக் கனகமால் வரையைக் காம கோபனைக்
கண்ணுத லானைச்”சுந்தார்
4. மாணிக்கவாசகர்
சைவ சமயக்குரவர் நால்வருள் ஒருவர்
மாணிக்கவாசகர்.
பிறந்தவர் ஊர் – திருவாதவூர்.
மாணிக்கவாசகர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமையமைச்சராகப் பணியாற்றியவர்.
பாண்டியனுக்காகக் குதிரை வாங்கச் சென்றபோது, திருப்பெருந்துறை இறைவன் திருவருளால்
ஆட்கொள்ளப் பெற்றவர்.
அவ்விறைவனை, மெய்யுருகப் பாடிக் கசிந்து கண்ணீர் மல்க அழுது தொழுதவர்.
இதனால் மாணிக்கவாசகரை, ‘அழுது அடியடைந்த அன்பர்’ என்பர்.
திருவாசகமும் திருக்கோவையாரும் இவர் அருளியன.
இவர் எழுப்பிய கோவில், தற்பொழுது ஆவுடையார்கோவில் என வழங்கப்படும் திருப்பெருந்துறையில் (புதுக்கோட்டை மாவட்டம்) உள்ளது.
காலம் – 9 ஆம் நூற்றாண்டு.
சைவத்திருமுறைகள் பன்னிரண்டனுள் எட்டாம் திருமுறையில் திருவாசகமும் திருக்கோவையாரும் உள்ளன.
திருவாசகத்தில் – 51 திருப்பதிங்கள், 658 பாடல்கள், 38 சிவத்தளங்கள்.
திருவாசகம் கல்நெஞ்சையும் கசிந்துருகச்
செய்யுமாதலால், ”திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும்
உருகார்’
திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி. யு. போப்.
திரு என்பது,
நூலின் சிறப்பை உணர்த்த
வந்த அடைமொழி; சதகம் என்பது,
நூறு பாடல்களைக் கொண்ட
நூலைக் குறிக்கும்.
சாழல் என்பது பெண்கள் விளையாடும் ஒரு வகையான விளையாட்டு.
திருவாசகம் என்பது சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும்.
இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர்.
திருச்சாழல் தில்லைக் கோவில் படப்பெற்றது – திருவாசகம்.
5. திருமூலர்
மூலன் என்னும் பெயர்,
திரு என்னும் பெயரடை
பெற்று, அதனுடன் அர் என்னும் மரியாதைப் பன்மையும்
பெற்றுத் திருமூலர் என ஆயிற்று.
காலம் – 5 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி.
சைவத் திருமுறைகளில் பத்தாவது திருமுறை – திருமந்திரம்.
வேறுபெயர் – தமிழ் மூவாயிரம்.
பாடல்கள் – 3000.
“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” – திருமந்திரம்
63 நாயன்மார்களுள் ஒருவராகவும் பதினெண் (18) சித்தர்களுள் ஒருவராகவும் கருதப்படுபவர் – திருமூலர்.
6. குலசேகர ஆழ்வார்
நாலாயிரத்திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்தாம்
திருமொழி – பெருமாள் திருமொழி.
ஆழ்வார்கள் பன்னிருவாரால் அருளப்பட்டது
நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம் என்னும் அருந்தமிழ்ப் பனுவல்.
ஆழ்வார் என்னுஞ் சொல்லுக்கு ஆழ்ந்தறியும்
அறிவைக் கருவியாக உடையவர் என்றும் எம்பெருமானுடைய மங்கலக் குணங்களில்
ஆழங்காற்பட்டவர் என்றும் பொருள் கூறுவர்.
குலசேகர ஆழ்வார் சேரநாட்டுக் திருவஞ்சிக் களத்தில் தோன்றியவர்.
இவர் எழுதிய பாடல்கள் பெருமாள் திருமொழி எனப்படும்.
மொத்த பாடல்கள் – 105
பெருமாள் திருமொழியை பாடியவர் – குலசேகர ஆழ்வார்.
ஆழ்வார்களின் அருளிச் செயலுக்குப் உரை
எழுதியவர் – பெரிய வாச்சான் பிள்ளை.
திருவாய்மொழிக்கு வடக்குத் திருவீதிப் பிள்ளை
என்பார் எழுதிய ஈடு என்னும் பேருரை ஆழமும் அகலமும் உடையதாகும்.
7. ஆண்டாள்
திருமாலைப் போற்றும் பாடல் திருப்பாவை.
பக்தி இலக்கியம் – திருப்பாவை.
“வேதம் அனைத்திற்கும் வித்து” – திருப்பாவை.
நாலாயிர திவ்வியப் பிரபந்தத் தொகுப்பில் மூன்றாவது பிரபந்தமாக வைக்கப்பட்டிருப்பது திருப்பாவை.
பாவை என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
பாவை என்ற சொல் பொம்மை போன்ற படிமத்தைக் குறித்தது.
பின் பாவையைக் குறித்துச் செய்யப்படும்
நோன்புக்கு ஆகி,
பின்னர் அந்நோன்பைத்
தெரிவிக்கும் சிற்றிலக்கியத்துக்காகியது. அதனால் பாவை, இருமடியாகுபெயர்.
திருப்பாவைப் பாக்கள் முப்பதும் வெண்டளையால்
வந்த எட்டடி நாற்சீர் கொச்சகக் கலிப்பா வகையைச் சார்ந்தவை.
ஆண்டாள் பாடியவை –
• திருப்பாவை,
• நாச்சியார் திருமொழி (143 பாடல்கள்)
இரு பாடல்கள் – ஆறாம் திருமொழியில் இடம்பெற்றுள்ளது.
காலம் – 8 ஆம் நூற்றாண்டு.
பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவராம் பெரியாழ்வாரின்
வளர்ப்பு மகள் – ஆண்டாள்.
திருமாலை வழிபட்டுச் சிறப்புநிலை எய்திய ஆழ்வார்கள் பன்னிருவர். அவருள் ஆண்டாள் மட்டுமே பெண்.
“சூடிக் கொடுத்த சுடர்க்கொடி”
8. சீத்தலைச் சாத்தனார்
மணிமேகலை ஆசிரியர் – சீத்தலைச் சாத்தனார்
காலம் – 2 ஆம் நூற்றாண்டு.
ஊர் – பூம்புகார்.
பெற்றோர் – கோவலன், மாதவி.
மணிமேகலை அமுதசுரபியை பெற்று திரும்பிய இடம் – மணிப்பல்லவத்தீவு.
மணிமேகலை – பெளத்த சமய நூல்.
“சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக மாற வேண்டும்”
அமுதசுரபியில் முதலில் உணவிட்டவர் – ஆதிரை.
“கலஞ்செய் கம்மியர் வருகொனாக் கூஇய்”
“புனையா ஓவியம் புறம் போந்தன்ன”
“வான் வழிப்பயணங்கள் பற்றிய குறிப்புகள்” – சிலம்பு, மணிமேகலை.
“பசியும் நோயும் பகையும் நீங்கி மழையும்
வளமும் எங்கும்
பெருகுவதாகுக” –
மணிமேகலை (சீத்தலைச்
சாத்தனார்).
“கல்லும் உலோகமும் செங்கல்லும் மரமும் மண்ணும்
சிதையும் தந்தமும் வண்ணமும்”
“மாளிகைகளில் பல சிற்பங்களில் சுண்ணாம்பு கலவை
இருந்தது”
“சாதுவான் வாணிகம் செய்யும் பொருட்டு கடல்
கடந்து சென்ற குறிப்பு”
மணிமேகலையை மணம்புரிய விரும்பியவன் – உதயகுமாரன்.
மறுபிறப்பு உணர்ந்தவளாகக் குறிப்பிடுபவள் – மணிமேகலை.
மணிமேகலை தீவதிலகை உதவியால் அமுதசுரபியைப்
பெறுகிறாள்.
“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” – புறநானூறு, மணிமேகலை.
வேறு பெயர் – மணிமேகலைத் துறவு.
பெண்மையை முதன்மைப்ப டுத்தும் ‘புரட்சிக் காப்பியம்’ – மணிமேகலை.
காதை – 30, வரி – 4755.
சொற்சுவையும் பொருட்சுவையும் இயற்கைvவருணனைகளும் நிறைந்தது.
முதல் காதை – விழாவறை காதை.
பௌத்த சமயச் சார்புடையது – மணிமேகலை.
மணிமேகலைக் காப்பியத்தை இயற்றியவர் – கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.
இயற்பெயர் – சாத்தன்.
பிறந்த ஊர் – சீத்தலை.
கூலவாணிகம் (கூலம் – தானியம்) செய்தவர்.
இளங்கோவடிகளும் இவரும் சமகாலத்தவர் என்பர்.
தண்டமிழ் ஆசான், சாத்தன், நன்னூற்புலவன் என்று இளங்கோவடிகள் சாத்தனாரைப்
பாராட்டியுள்ளார்.
மணிமேகலை, சிலப்பதிகாரம் – அகவற்பா.
நான்காவது காதை – ஆதிபுத்திரன் அடைந்த காதை.
9. எச்.ஏ. கிருடினனார்
பில்கிரிம்ஸ் புரோகிரஸ் ல் எனும் ஆங்கில நூலின் தழுவலாக இரட்சணிய
யாத்திரிகம் படைக்கப்பட்டது.
இது 3766 பாடல்களைக் கொண்ட ஒரு பெரும் – உருவக காப்பியம்.
பருவங்கள் – 5
இக்காப்பியத்தின் குமார பருவத்தில் உள்ள
இரட்சணிய சரித படலத்தில் இடம்பெறும் இயேசுவின் இறுதிக்கால நிகழ்ச்சிகள்
இடம்பெற்றுள்ளன.
இரட்சணிய யாத்திரிகம் ஆசிரியர் – எச்.ஏ. கிருட்டிணனார்.
இயற்றிய நூல்கள் – போற்றித் திருவகவல், இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம்.
இரட்சண்ய மனோகரப்பாடல் – கலி விருத்தம்.
இரட்சணிய மனோகரம் – கல் மனத்தையும் கரையச்
செய்யும் பக்திப் பாடல்களின் தொகுப்பாகும்.
சிறப்பு பெயர் – கிறிஸ்துவக் கம்பர்.
பிறந்த ஊர் – கரையிருப்பு, திருநெல்வேலி.
தந்தை – சங்கரநாராயணர் (பெரும்புலவர்).
இவர் தந்தையிடம் தமிழிலக்கணங்கயும்
மாணிக்கவாசகத்தேவரிடம் இலக்கணங்களையும் பிலவணச் சோதிரிடம் வடமொழியையும் கற்றார்.
சாயர்புரம் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.
இயற்றிய நூல்கள் – இரட்சணிய சமய நிர்ணயம், இரட்சணிய மனோகரம், இரட்சணிய யாத்திரிகம், போற்றித் திருவகவல்.
இரட்சணிய யாத்திரிகம் (உயிர் தன்னை காக்க
வேண்டி).
— இறைவனை நோக்கிச் செல்லும் பயணம். (ஆண்ம
ஈடேற்றத்தை விரும்புபவர் என்பதும் பொருந்தும்).
10. உமறுப்புலவர்
சீறாப்புராணத்தினை
இயற்றியவர் – உமறுப்புலவர்.
அப்துல்காதிர்
மரைக்காயர் என்ற வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளின் வண்ணமே உமறுப்புலவர்
சீறாப்புராணம் எழுதத் தொடங்கினார்.
உமறுப்புலவரை
ஆதரித்த வள்ளல்கள் –
• சீதக்காதி
• அபுல்காசிம்
மரைக்காயர்.
நூல்
முற்றும் முன்னமே சீதக்காதி மறைந்தார்.
அவருக்குப்பின், அபுல்காசிம் (பனூ அகுமது மரைக்காயர்) என்ற வள்ளல் உதவியால்
சீறாப்புராணம் நிறைவுற்றது. அஃது சின்னச் சீறா என்று வழங்கப்படுகிறது.
•
எட்டயபுரம் அரசவைப்
புலவர்.
• எட்டயபுரம் கடிகை
முத்துப் புலவரின் மாணவர்.
• முதுமொழிமாலை என்னும் நூலையும் படைத்தளித்துள்ளார்.
காலம்
– 17 ஆம் நூற்றாண்டு.
இறைவனின்
திருத்தூதர் நபிகள் நாயகத்தின் சீரிய வரலாற்றினை எடுத்தியம்பும் இனிய நூல் சீறாப்புராணம்.
சீறா
– வாழ்க்கை,
புராணம் – வரலாறு.
3 – காண்டங்கள், 92 பாடல்கள், 5027 விருத்தப் பாக்கள்.
விலாதத்துக் காண்டம்,
நுபுவ்வத்துக் காண்டம்,
ஹிஜ்ரத்துக் காண்டம்.
நாட்டுப் புறப்
பாடல்கள்
குழந்தையைத் தொட்டிலில் இட்டுத் தாய் பாடும்
பாட்டு – தாலாட்டுப் பாடல்.
ஒருவர் பாடிக் கொண்டிருக்கும்போது கேட்டுக்
கொண்டிருக்கும் இன்னொருவர் அப்படியே மனத்தில் வாங்கித் தானும் பாடிப்பாடிப்
பழகிவிடுகிறார். இப்படித் தாளில் எழுதாத பாடல்தான், ‘நாட்டுப்புறப் பாடல்’ எனப்படுகிறது.
எழுத்து வழியாக வராமல் பாடிப்பாடி
வாய்வழியாகப் பரவுகிற பாட்டு நாட்டுப்புறப்பாட்டு. இதேபோல் எழுதப்படாத, எல்லாருக்கும் தெரிந்த கதைகளும் உண்டு. இவற்றை
எல்லாம் “வாய்மொழி இலக்கியம்” எனக் கூறுவார்கள்.
நாட்டுப்புறப் பாடல்களைக் கீழ்க்காணும்
வகைகளாகப் பிரிக்கலாம்.
தாலாட்டுப் பாடல்கள்
விளையாட்டுப் பாடல்கள்
தொழில் பாடல்கள்
சடங்குப் பாடல்கள்
கொண்டாட்டப் பாடல்கள்
வழிபாட்டுப் பாடல்கள்
ஒப்பாரிப் பாடல்கள்.
பிறந்த குழந்தைக்குப் பாடுவது – தாலாட்டுப் பாடல்.
கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகள் பாடுவது விளையாட்டுப் பாடல்.
களைப்பு நீங்க, வேலை செய்வோர் பாடுவது தொழில் பாடல்.
திருமணம் மற்றும் பிற நிகழ்வுகளில் பாடுவது சடங்குப் பாடல், கொண்டாட்டப் பாடல்.
சாமி கும்பிடுவோர் பாடுவது – வழிபாட்டுப் பாடல்.
ஏட்டில் எழுதாத பாடல்தான் _____________ எனப்படுகிறது. நாட்டுப்புறப்பாடல்
வாய்மொழியாகப் பரவும் நாட்டுப்புறப்
பாடல்களையும் கதைகளையும் __________
என்று கூறுவர். வாய்மொழி இலக்கியம்.
சென்னை போன்ற பெரு நகரங்களில் மக்கள் பாடும் __________ கூட நாட்டுப்புறப் பாடல்தான். கானாப் பாடல்.
தாலாட்டு வாய்மொழி இலக்கியங்களுள் (நாட்டுப்புறப் பாடல் ஒன்று).
தால் என்பதற்கு நாக்கு என்று பொருள். நாவை அசைத்துப் பாடுவதால் தாலாட்டு
(தால்+ஆட்டு) என்று பெயர்பெற்றது. குழந்தையின் அழுகையை நிறுத்தவும் தூங்க
வைக்கவும் இனிய ஓசையுடன் பாடும் பாடல் தாலாட்டு.
உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க
உற்சாகத்துடன் பாடும் பாடலே நாட்டுப்புறப் பாடலாகும். காதால் கேட்டு வாய்மொழியாகவே
வழங்கப்பட்டு வருவதால் இதனை வாய்மொழி இலக்கியம் என்பர்.
ஏற்றப்பாட்டு, ஓடப்பாட்டு முதலான தொழில்பாடல்களும் விளையாட்டுப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள் முதலியனவும்
நாட்டுப்புறப் பாடல்களுள் அடங்கும்.
நாட்டுப்புற இயல் ஆய்வு நூலின் ஆசிரியர் – சு. சக்திவேல்
அறுவடை செய்த நெற்கதிர்களைக் களத்தில் அடித்து
நெல்லைப் பிரிப்பர். நெல்தாளில் எஞ்சியிருக்கும் நெல்மணிகளைப் பிரிப்பதற்காக
மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்வர். இதற்குப் போரடித்தல் என்று பெயர்.
மாடுகட்டிப் போரடித்தால் மாளாது
செந்நெல்லென்று
ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான
தென்மதுரை
– (நாட்டுப்புறப்பாடல்).
நாட்டுப்புறப்பாடல்களை மலை அருவி என்னும் நூலில் கி.வா. ஜகந்நாதன் தொகுத்துள்ளார்.
வயலும் வாழ்வும் – உழவுத்தொழில் பற்றிய பாடல்.
பஹார் இன மக்களின் புல்லாங்குழவில்
வழிந்தோடும் நாட்டுப்புற இசை –பஹாடி.
தமிழ்நாட்டின் நாட்டுப்புற இசை வடிவத்தைத்
திரையிசையில் தவழவிட்டவர்-இளையராஜா
சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்
ஏறத்தாழ 400 ஆண்டுகளுக்குமுன் தமிழகத்தின் காடு மலைகளில் வாழ்ந்தவர்கள் சித்தர்கள்.
பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகுணிச் சித்தர் என்பன எல்லாமே காரணப்
பெயர்கள்.
உருவ வழிபாடு செய்யாமல் வெட்டவெளியையே கடவுளாக
வழிபட்டவர் – கடுவெளிச் சித்தர்.
எளிய சொற்களில் அறிவுரைகளைக் கூறியவர்.
வான்வழியே நினைத்த இடத்துக்குச் செல்லும்
சித்தர் – கமன சித்தர்.
“வேர்பாரு; தழைபாரு மிஞ்சினக்கால் பற்பசெந்தூரம் பாரே” என்றனர் – சித்தர்கள்.
63 நாயன்மார்களிலும், 18 சித்தர்களிலும் ஒருவராக இருந்தவர் – திருமூலர்.
மா.பொ.சி தானாக விரும்பி படித்த பாடல்கள் –
சித்தர் பாடல்கள்.
சமயங்களில் இருக்கும் தேவையற்ற சடங்குகளை
விரும்பாதவர்கள் – சித்தர்கள்.
சித்தர்கள் இயல்பான மனித நேயம் கொண்டவர்கள்.
சித்தர்கள் சித்தத்தை வென்று ‘சித்து’ என்னும் பேரறிவிளை பெற்றவர்கள்.
சித்தர் என்னும் சொல்: நிறைமொழி மாந்தர் என்று
தொல்காப்பியம் மற்றும் திருக்குறளிலும், சித்தன் என்று சிலப்பதிகாரம் நாடுகாண்
காதையிலும் வழங்கப்படுகிறார்கள்.
அறிவு வேறு, ஞானம் வேறு என்று இந்த உலகிற்கு விளக்கியவர்கள் – சித்தர்கள்.
“மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க
வேண்டாம்” என்று கூறும் நூல் – அகத்திய ஞானம்.
சித்தர்கள் என்பதற்கு பொருள் – நிறைவடைந்தவர்கள்.
சித்து – ஆன்மா, மனம், கருத்து
சித்தி – வெற்றி, மெய்யறிதல், காரியம் கைகூடல்.
சித்தர் நோக்கம்-யாம் பெற்ற இன்பம் பெறுக
இவ்வையகம் ஆதி சித்தர் நூற்றாண்டு) திருமூலர் (கி.பி
ஐந்து அல்லது ஆறாம் சித்தர்களில் கலகக்காரர் நூற்றாண்டு)
சிவவாக்கியர் (ஒன்பதாம் பதினெண் சித்தர்கள் என்பது அவர்களது
எண்ணிக்கையை குறிப்பது அல்ல, அவர்கள் பெற்ற 18
பேறுகளை குறிக்கிறது.
“எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தார் அப்பா
யானும் வந்தேன் ஒரு
சித்தன் இந்த நாட்டில்” என்று பாடியவர்- பாரதியார்.
“ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு” என்று பாடியவர் – பட்டினத்தார்
“ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை” என்று பாடியவர் – திருமூலர்.
“தன்னை அறிந்த நிலையில் ஆன்மா தனக்குத்தானே
தலைவனாய் நிற்கும்” என்று கூறியவர் – திருமூலர்.
“நாடொணாத அமிர்தமுண்டு நான் அழிந்து நின்ற
நாள்” என்று பாடியவர் – சிவவாக்கியர்.
சித்தர்கள் – சமூகத்தில் நிலவிய பல்வேறு
மூடநம்பிக்கைகள் மற்றும் கடும் செயல்களைச் சாடினார்கள்.
சித்தர்களை ‘கிளர்ச்சியாளர்’ என்று கூறுபவர் – சு.கைலாசபதி.
“சாதிபேதம் ஒதுகின்ற தன்மை என்ன தன்மையோ?” என்று பாடியவர் -சிவவாக்கியார்.
“சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்” என்று பாடியவர் – பாம்பாட்டிச் சித்தர்.
“சாதி வகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்?” என்று பாடியவர் – பத்திரகிரியார்.
“ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே
சாதிவகை இல்லாமல்
சஞ்சரிப்பது எக்காலம்” – பத்திரகிரியார்.
சித்தர்கள் இரசவாதிகள், சித்தர்கள் தங்களின் யோக சாதனையை உள்ளார்ந்த ஆன்மீக இரசவாதமென்றே கருதினார்கள்.
அணிமா – அணுவைப்போல சிறுத்து நிற்கும் ஆற்றல்.
மகிமா – வரையறையற்று விரிந்து படரும் ஆற்றல்.
லகிமா – காற்றில் மிதக்கும் ஆற்றல்.
கரிமா – எங்கும் வியாபித்திருக்கும் ஆற்றல்.
பிராகாமியம்-இயற்கைத் தடைகளை கடக்கும் ஆற்றல்.
வசித்வம் உலக படைப்புகளை எல்லாம் அடக்கி ஆளும்
ஆற்றல்.
காமாவசாயித்வம் விரும்பியதை முடிக்கும்
ஆற்றல்.
ஈசத்துவம் – படைக்கவும், அடக்கவும் கொண்ட ஆற்றல்.
இரசவாதி தாழ்ந்த உலோகத்தை தங்கமாக மாற்றுபவன்.
“நந்தவனத்தில் ஒரு ஆண்டி” என்று பாடியவர் – கடுவெளிச் சித்தர்.
“அண்டத்தில் உள்ளது பிண்டம், பிண்டத்தில் உள்ளது அண்டம்” என்பது சித்தர்
மொழி.
சித்த மருத்துவம் தோன்றக் காரணம் சித்தர்கள்.
சித்தர் பாடல்கள் எளிமையாக இருப்பினும்
மறைபொருள் தருவதாகவும் குழூஉக் குறிகளாகவுமே
எழுதப்பட்டுள்ளன.
சித்தர் பாடல்களின் பொருளை யோகம், தந்திரம் மற்றும் மருத்துவம் அறிந்தவர்களால்
மட்டுமே அறிய முடியும்.
“தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலாவே” என்ற வரிகளைப் பாடியவர் வள்ளலார்.
மருத்துவம், மந்திரம்,
இரசவாதம், யோகம், ஞானம் போன்ற பல துறைகளில் சித்தர்கள் பாடிய பாடல்கள் தமிழ்மொழியின் அறிவுப் பெட்டகம் என அழைக்கப்படுகிறது.
மனோன்மணியம்
பேராசிரியர் சுந்தரனார் இயற்றிய நாடகம் – மனோன்மணியம்.
சுந்தரனார் பிறந்த ஊர், ஆண்டு திருவிதாங்கூர் ஆலப்புழை 1855.
மனோன்மணியம் என்ற கவிதை நாடகக் காப்பியம்
வெளியான ஆண்டு – 1891
மனோன்மணியம் எக்கதையை தழுவி எழுதப்பட்டது – லார்ட் லிட்டன் எழுதிய மறைவழி.
நாடகத்தமிழ் நூல்களுள் தலையாய்
சிறப்பினையுடையதாக விளங்குவது மனோன்மணியம்.
நாடகக் காப்பியங்களால் சிறப்புப் பெற்று
விளங்கும் வடமொழிக்கு ஈடாக நடிப்புச் செவ்வியும் இலக்கியச் செவ்வியும் ஒருங்கே
அமையப் பெற்றது மனோன்மணியம்.
லிட்டன் பிரவு என்பார் ஆங்கிலத்தில் எழுதிய “இரகசிய வழி” என்ற நூலைத் தழுவி அமைந்தது மனோன்மணீயம்.
மனோன்மணீயம் வழிநூல் என்னாது முதல் நூல் எனவே கொள்ளப்பெறும் சீர்மையுடையது.
பெருங்காப்பிய நூல்களுக்குரிய இயற்கை வண்ணனை, கற்பனையெழில், தத்துவச் செறிவு,
உலகியல் உண்மை முதலிய
கருத்துகள் அமைய எழுதப் பெற்றிருப்பினும் செய்யுள் நடையில் மிடுக்குடனும் நாடகத்தன்மைக்கேற்ற உரையாடற்
சிறப்புகளுடனும் மனோன்மணீய நூல் தன்னிகரற்று விளங்குகிறது.
மனோன்மணீயம் அங்கங்களையும் காட்சிகளையும் அமைத்து எழுதுவது நாடக நன்னூல் மரபு, மனோன்மணியம் நாடகம் 5 – அங்கங்களையும், 20 – காட்சிகளையும் கொண்டு விளங்குகிறது.
மனோன்மணீயம் இடையே சிவகாமி சரிதம் என்னும் துணைக் கதை ஒன்றும் இடம் பெற்றுள்ளது.
மனோன்மணீயம் நாடகத்தைத் தமிழன்னைக்கு இயற்றியளித்தவர், பேராசிரியர் பெ. சுந்தரம்பிள்ளை ஆவார்.
மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் ஜீவகன்.
பாண்டிய மன்னன் ஜீவகள் அமைச்சன் குடிலன்
ஜீவகன் மதுரையைவிட்டுத் திருநெல்வேலியில கோட்டையமைத்துத் தங்குகிறான்.
ஜீவகனின் ஒரே மகள் மனோன்மணி.
மனோன்மணி, சேர நாட்டரசன் புருடோத்தமனைக் கனவில் கண்டு காதல் வயப்படுகிறாள்.
மனோன்மணியம் சுந்தரனாரின் தோற்றம் – 19 – ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி.
பெ. சுந்தரம்பிள்ளை இவரியற்றிய பிற நூல்கள் –
நூல் தொகை விளக்கம், திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி, திருவிதாங்கூர்ப் பண்டை மன்னர் கால ஆராய்ச்சி என்பன.
சென்னை மாகாண அரசு சுந்தரம்பிள்ளைக்கு ராவ்பகதூர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
பெ. சுந்தரம்பிள்ளை நீராருங்கடலுடுத்த என்ற
தமிழ் வாழ்த்துப்பாடலே தமிழக அரசின் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்கப்பட்டுள்ளது.
“நந்தாய்தமர் நங்காதலர்…
நஞ்சேய்பிறர் நந்தாவுரை
நந்தேயமேல் வந்தேநனி”
மொழிப்பற்றும் நாட்டுப்பற்றும் வீர உணர்வையும்
ஊட்டுவது – மனோன்மணீயம்.
தமிழன்ளை பெற்ற நல்ல அணிகலன் – மனோன்மணியம்.
நாடகத்துறைக்கு தமிழ் நூல்கள் இல்லையே என்ற
குறையை தீர்க்க வந்த நூல்- மனோன்மணியம்.
இயற்கையில் ஈடுபாடு கொண்டு அதில் தோய்ந்து இணையில்லா
இன்பம், அமைதி பெற்றவர்கள் தமிழர்கள்.
சுந்தரமுனிவர் சுரங்கம் அமைக்கும் பணியை
யாரிடம் அளித்தார் நடராஜனிடம்.
தமிழின் முதல் பா வடிவ நாடக நூல் – மனோன்மணியம்.
லிட்டன் பிரபு எழுதிய ‘இரகசிய வழி’ என்ற நூலைத் தழுவி 1891இல் பேராசிரியர் சுந்தரனார் தமிழில்
எழுதியுள்ள நூல் – மனோன்மணீயம்.
மனோன்மணீயத்தின் பாவகை – ஆசிரியப்பா.
மனோன்மணியத்தின் கிளைக்கதை – சிவகாமியின் சரிதம்.
பாஞ்சாலி சபதம்
பாஞ்சாலி சபதம் – பாரதியார்.
பாரதத்தாய் – பாஞ்சாலி சபதம்.
பாஞ்சாலி சபதம் மற்றொரு பெயர் – திரளபதி.
சுப்பிரமணிய பாரதியார், தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள
எட்டயபுரத்தில் 11.12.1882 அன்று பிறந்தார்.
இவர்தம் பெற்றோர் சின்னசாமி இலக்குமி அம்மையார் ஆவர். இவரின் துணைவியார் செல்லம்மாள்.
சிறந்த படைப்பாளரான பாரதியார் குயில் பாட்டு, கண்ணன் பாட்டு,
பாஞ்சாலி சபதம் முதலிய நூல்களைப் படைத்தளித்தார்.
நாடு, மொழி,
இறை, பெண்மை முதலிய பாடுபொருள்களில் எண்ணற்ற பாடல்
இயற்றினார்.
ஞானரதம், சந்திரிகையின் கதை,
தராசு முதலிய உரைநடை இலக்கியங்களையும் எழுதினார்.
இவர் 11.09.1921அன்று மறைந்தார்.
இப்பாடப்பகுதி, பாரதியாரின் முப்பெரும் படைப்புகளுள் ஒன்றாகிய பாஞ்சாலி சபதம் என்னும் காப்பியத்தின் சூழ்ச்சிச்சருக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
அனை- வரும் அறிந்த இதிகாசக் கதையை எளிய
சொற்கள், எளிய நடை, எளிய சந்தம் ஆகியவற்றுடன் கூடிய பெண்ணுரிமைக் காப்பியமாகத் தமிழில் பாரதி
வடித்துத் தந்ததே பாஞ்சாலி சபதம்.
இது, வியாசரின் பாரதத்தைத் தழுவி எழுதப் பெற்றது.
பாஞ்சாலி சபதம் இரு பாகத்தைக் கொண்டது.
இது சூழ்ச்சிச்சருக்கம், சூதாட்டச்சருக்கம், அடிமைச்சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச்சருக்கம் என 5 சருக்கத்தையும், 412 பாடலையும் கொண்ட குறுங்காப்பியம்.
பாரதியார் பாட்டுக்கொரு புலவன்,
நீடுதுயில் நீக்கப்
பாடிவந்த நிலா,
தற்கால இலக்கியத்தின்
விடிவெள்ளி,
தேசியக்கவி, மாக்கவி என்றெல்லாம் புகழப்பெற்றார்; சுதேசமித்திரன்,
இந்தியா முதலிய இதழ்களின் ஆசிரியராக இருந்தார்; இந்திய விடுதலைக்குப் பாடுபட்டார்.
“தமிழுக்குத் தொண்டுசெய்வோன் சாவதில்லை” – பாரதிதாசன்.
(பஞ்சாலி சபதம்) இக்குறுங்காப்பியத்தின்
முதற்பாகத்திலுள்ள துரியோதனன் சூழ்ச்சிச் சருக்கத்தில் நம் பாடப்பகுதி
அமைந்துள்ளது.
இக்குறுங்காப்பியத்தில் பாரதத் தாயைப்
பாஞ்சாலியாக உருவகப்படுத்தி,
இக்கதைமாந்தர் வழி நாட்டுப்பற்றையும், விடுதலை வேட்கையையும், பெண் விடுதலை, சமூக விழிப்புணர்வையும் ஊட்டியுள்ளார் பாரதியார்.
பாஞ்சாலி சபதம் முழுமையும் சிந்து என்னும் பாவகையினைச் சேர்ந்தது. சிந்து ஒரு வகை இசைப்பாட்டு.
கொல்லும் நோய் – குற்றத்தையே எண்ணுகின்ற துரியோதனனின்
மதி
மருத்துவன் – திருதராட்டிரன்
சோர்வுறுத்தல் – துரியோதனன் சினங்கொள்ளல்
பாம்பைக் இகழ்கின்றான்………… பாம்புக் கொடியைக் கொண்டவன் துரியோதனன். அவன் தந்தை சொன்ன அறிவுரை கேட்டுப் பாம்புபோல் சீறிக் கூறினான்.
‘கல்லிடை நாருரிப் பாருண்டோ’ எனும் பழமொழியைக்
கொண்டு தன் தந்தையைத் திட்டுகிறான். ஆனால் அப்பழமொழிக் கருத்துக்குரியவனாகக்
காணப்படுவன் துரியோதனன். இதனை, அவன் கூறும்,
“கொல்லினும் வேறெது செய்யினும் – என்னைக்
நெஞ்சில் கொண்ட கருத்தை
விடுகிலேன்”
“நாடும் குடிகளும் செல்வமும் ஒரு
நாழிகைப் போதினில் சூதினால் -வெல்லக்
கூடுமெனிற்
பிறிதெண்ணலேன் – என்றன்
கொள்கை” (இதுவெனக் கூறினான்)
என்பது சகுனி, துரியோதனனுக்குத் தந்த சூழ்ச்சியுரை
குயில் பாட்டு
குயில் பாட்டு – பாரதியார்.
“பாட்டினப்போல் ஆசிரியரிடம் பாரின் மீசை
இல்லையடா”
இது ஒரு குறுங்காப்பியம்.
குயில்’ என்னும் இலக்கிய இதழை நடத்தியவர் – பாரதிதாசன் (dont confuse)
“ஆரிய பூமியில் நாரியரும் பர சூரியரும் சொலும்
வீரிய வாசகம்
வந்தேமாதரம்!” – குயில் பாட்டு (பாரதியார்)
“நாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லாம்
நன்றொலிக்கும்
பாட்டினிலும் நெஞ்சைப்
பறிகொடுத்தேன் பாவியேன்…. பாரதியார்
பாரதியார் கவிதைகள், பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு,
குயில்பாட்டு முதலிய
கவிதைகள் மட்டுமின்றி ஞானரதம், சந்திரிகையின்
கதை, தராசு முதலிய உரைநடை நூல்களையும் எழுதியவர்-
பாரதியார்
இரட்டுற மொழிதல்
கீரைப்பாத்தியும் குதிரையும் (இரட்டுற மொழிதல்)
கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால்
வெட்டி மறிக்கின்ற
மேன்மையால் – முட்டப்போய்
மாறத் திரும்புகையால்
வண்கீரைப் பாத்தியுடன்
ஏறப் பரியாகு மே*
– காளமேகப்புலவர்
கும்பகோணத்துக்கு அருகில் உள்ள நந்திக்கிராமம் எனவும், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள எண்ணாயிரம் எனவும் கூறுவர்.
காளமேகப்புலவரின் இயற்பெயர – வரதன்.
திருவரங்கக் கோவில் மடைப்பள்ளியில்
பணிபுரிந்தார்.
சமயம் – வைணவம் – சைவம் மாறினார்.,
கார்மேகம் போல் கவிதை பொழியும் ஆற்றல் பெற்றதால், இவர் காளமேகப்புலவர் என அழைக்கப் பெற்றார்.
இவர், இருபொருள் அமைய நகைச்சுவையுடன் பாடுவதில் வல்லவர்.
மேகம் மழை பொழிவது போலக் கவிதைகளை விரைந்து
பாடியதால் இவர் காளமேகப்புலவர் என்று அழைக்கப்பட்டார்.
திருவானைக்கா உலா, சரசுவதி மாலை, பரபிரம்ம விளக்கம்,
சித்திர மடல் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
இவரது தனிப்பாடல்கள் தனிப்பாடல் திரட்டு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளன.
தனிப்பாடல் (இரட்டுறமொழிதல்)
ஓடும் சுழிசுத்தம் உண்டாகும் துன்னலரைச்
சாடும் பரிவாய்த்
தலைசாய்க்கும் நாடறியத்
தேடு புகழான் திருமலைரா
யன்வரையில்
ஆடுபரி காவிரியா மே.
– காளமேகப் புலவர்.
அழகிய சொக்கநாதப் புலவர்
மரமும் பழைய குடையும்
பிஞ்சு கிடக்கும் பெருமழைக்குத் தாங்காது
மிஞ்ச அதனுள்
வெயில்ஒழுகும் தஞ்சம்என்றோர்
வேட்டதுஅருள்
முத்துசுவா மித்துரைரா சேந்திராகேள்!
கோட்டுமரம் பீற்றல்
குடை
– அழகிய சொக்கநாதப் புலவர்
பிறந்த ஊர் – திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள
தச்சநல்லூர்.
25 க்கும் மேற்பட்ட தனிப்பாடல்களை இயற்றியவர்.
காலம் கி.பி. 19ஆம் நூற்றாண்டு.
ஒரு சொல்லோ தொடரோ இருபொருள் தருமாறு பாடுவது
சிலேடை எனப்படு இதனை,
‘இரட்டுறமொழிதல்’ எனவும்
கூறுவர்.
இரண்டு + உற + மொழிதல் இரட்டுறமொழிதல்.
இருபொருள்படப் பாடுவது.
இராசராச சோழனுலா 6th – 12th
இராசராச சோழனுலா
கோப்பரகேசரி, திருபுவனச் சக்கரவர்த்தி என்று பட்டங்கள் கொண்ட இரண்டாம் இராசராச சோழனது மெய்க்கீர்த்தியின் ஒரு பகுதி பாடமாக உள்ளது.
இம்மெய்க்கீர்த்திப் பகுதியின் இலக்கிய நயம் நாட்டின் வளத்தையும்
ஆட்சிச் சிறப்பையும் ஒருசேர உணர்த்துவதாக உள்ளது.
இவருடைய மெய்க்கீர்த்திகள் இரண்டு.
அதில் ஒன்று 91 அடிகளைக் கொண்டது. அதில் 16-33 வரையான அடிகள் பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளன.
இப்பாடப் பகுதிக்கான மூலம் தமிழ் இணையக்
கல்விக் கழகத்திலிருந்து பெறப்பட்டது.
முதலாம் இராசராசன் காலந்தொட்டு மெய்க்கீர்த்திகள் கல்லில்
வடிக்கப்பட்டுள்ளன.
மெய்க்கீர்த்திகள் கல்வெட்டின் முதல்பகுதியில்
மன்னரைப் பற்றிப் புகழ்ந்து இலக்கிய நயம்பட எழுதப்படும் வரிகள்.
இவை புலவர்களால் எழுதப்பட்டுக் கல்தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை.
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் -குமரகுருபரர்
குமரகுருபரர் பிறந்த ஊர் – திருவைகுண்டம்.
குமரகுருபரர் வாழ்ந்த காலம் – 17 ஆம் நூற்றாண்டு.
குமரகுருபரர் இயற்றிய பிற நூல்கள் – திருவாரூர் மும்மணிக்கோவை, சகலகலாவல்லி மாலை, நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, மதுரைக் கலம்பகம்
குமரகுருபரர் மடம் நிறுவிய இடம் திருப்பனந்தாள் மற்றும் காசி.
குமரகுருபரர் இறைவனது திருவடியடைந்த இடம் – காசி.
குமரகுருபரர் தமிழ், வடமொழி, இந்துஸ்த்தானி மொழிகளில் புலமை பெற்றவர்.
இறைவனையோ, நல்லோரையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு, அவரை குழந்தையாகக் கருதி பாடப்பட்டது – பிள்ளைத்தமிழ்.
பிள்ளைத்தமிழில் உள்ள பருவங்களின் எண்ணிக்கை –10.
பிள்ளைத்தமிழ் 2 வகைப்படும்.
பிள்ளைத்தமிழில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை – 100.
ஆண் பால் பிள்ளைத்தமிழுக்கும், பெண்பால் பிள்ளைத்தமிழுக்கும் பொதுவான பருவங்கள் 7.
பிள்ளைத்தமிழில் உள்ள பொதுவான 7 பருவங்கள் – காப்பு, செங்கீரை, தால்,
சப்பாணி, முத்தம், வருகை,
அம்புலி.
பிள்ளைத்தமிழில் உள்ள ஆண்பாலுக்கான மூன்று
பருவங்கள் – சிற்றில்,
சிறுபறை, சிறுதேர்.
தளர்நடையிட்டு வரும் குழந்தைகள் சிறப்புகளை
எடுத்துக்கூறி,
அருகில் வருக வருக என
வாய்குளிர, மனங்குளிர அழைக்கும் பாடல்கள் இடம்பெற்றுள்ள பருவம் – வருகைப்பருவம்.
வருகைப்பருவம் –ஆறாவது (குழந்தையின் 13ம் திங்களில் நிகழ்வது
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் எந்த
இறைவன் மீது பாடப்பட்டது- புள்ளிருக்குவேளூரில் (வைத்தீசுவரன் கோவில்) உள்ள – முருகப்பெருமான்.
பிள்ளைத்தமிழ் 96 வகை சிற்றிலயக்கிய வகையில் ஒன்று.
காற்றில் ஆடுவது போன்று குழந்தை யின் தவை 5-6 ஆம் மாதங்களில் மென்மையாக அசையும்.
இப்பருவத்தைச் செங்கீரைப் பருவம் என்பர்.
எப்பருவத்தில் குழந்தை தன் இருகை ஊன்றி, ஒருகாலினை மடக்கி, மற்றொரு காலை நீட்டி தலைநிமிர்ந்தும்
முகமசைந்தும் ஆடும் – செங்கீரைப் பருவம்.
“செம்பொ னடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு
கலந்தாட”
“பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி
சரிந்தாடப்”
தாமிரபரணி நதிக்கரையிலுள்ள திருவைகுண்டத்தில்
சண்முகசிகாமணிக் கவிராயருக்கும் சிவகாம சுந்தரிக்கும் மகளாகப் குமரகுருபரர்
பிறந்தார்.
குமரகுருபரர் பிறந்தது முதல் ஐந்தாண்டு
வரையில் பேச்சின்றி இருந்தார். பின்னர்த் திருச்செந்தூர் முருகப் பெருமான்
திருவருளால் பேசுந்திறம்பெற்றார்.
செங்கீரைப் பருவம் பிள்ளைத்தமிழில் இரண்டாம் பருவமாகும். பொருள்
தெரியாத ஒலியைக் குழந்தை எழுப்பும் பருவத்தைக் குறிப்பது இது.
குழந்தை பருவம் – செங்கீரை பருவம்.
“விரல் சுவை யுண்டு கனிந்தமு தூறிய மெல்லிதழ்
புலராமே விம்மிப்பொருமி விழுந்தழு தலறியுன் மென்குரல் கம்மாமே”
காவடிச் சிந்து
ஆசிரியர் – அண்ணாமலையார்
அருணகிரியாரின் திருப்புகழ்த் தாக்கத்தால்
விளைந்த சிறந்த சங்க இலக்கியம்-காவடிச்சிந்து.
சென்னிகுளம் அண்ணாமலையார் பாடிய காவடிச்சிந்து
யாருடைய திருப்புகழ்த் தாக்கத்தால் விளைந்த சிறந்த சங்க இலக்கியமாகும் அருணகிரியார்.
காவடிச்சிந்து மெட்டுகள் அமைத்தவர் அண்ணாமலையார்.
தமிழில் முதன் முதலில் வண்ணச்சிந்து பாடியவர் அண்ணாமலையார்.
தமிழ்நாட்டில் பண்டைக்காலம் முதல் நாட்டார்
வழக்கிலுள்ள இசைமரபு – காவடிச்சிந்து.
முருகப் பெருமானை வழிபடுவதற்காக பாடப்பட்ட
வழிநடைப் பாடல் வகைகளிலிருந்து தோன்றிய பாவடிவம் காவடிச்சிந்து.
காவடி எடுக்கும் அடியார்கள் பாடும்
திருப்புகழ் முழக்கம் – காவடிச்சிந்து.
சென்னிகுளம் அண்ணாமலையார் பாடிய
காவடிச்சிந்துப் பாடலில் கழுகுமலை முருகன் கோயில் வளத்தைப் பற்றி
பாடப்பட்டுள்ளது.
“சலராசியை வடிவார்பல கொடிசூடிய முடிமீதிலே” என்னும் பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் காவடிச்சிந்து
முக்கூடற்பள்ளு
“ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்று தேகுறி-மலை
யாள மின்னல் ஈழ மின்னல்
சூழ மின்னுதே”
தாமிரபரணியும், சிற்றாரும் கலக்கிற இடம் -சீவலப்பேரி என்கிற – முக்கூடல்.
நாடக பாங்கில் அமைந்த நூல் – முக்கூடற்பள்ளு.
திருநெல்வேலி மாவட்ட வழக்கை ஆங்காங்கே
காட்டும் நூல் – முக்கூடற்பள்ளு.
காளைகளின் பல்வேறு பெயர்கள், விதைகளின் பெயர்கள், மீன்வகைகள் என மருத நில வளம் பற்றி கூறும்
நூல் – முக்கூடற்பள்ளு.
பள்ளு வடிவிலான நாடகங்களும் குறவஞ்சி
நாடகங்களும் யாருடைய காலத்தில் தோன்றின நாயக்கர்கள் காலத்தில்.
“மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து”
‘பள்ளு’ எவ்வாறு அழைக்கப்படுகிறது? உழத்திப்பாட்டு
பள்ளு சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
‘பள்’ என்பது பள்ளமான நன்செய் நிலங்களையும் அங்குச் செய்யப்படும் உழவினையும்
குறிக்கும். ஆகவே பள்ளு உழவரின் பாட்டுக்குப் பெயராக வந்தது.
திருநெல்வேலிக்குச் சிறிது வடகிழக்கில் தண்பொருறை, சிற்றாறு,
கோதண்டராம ஆறு ஆகிய மூன்று ஆறுகளும் கலக்கும் இடத்திற்கு
வடக்கே உள்ள சிற்றூர் முக்கூடல், அங்குள்ள இறைவளாகிய அழகர் மீது பாடப்பட்டது முக்கூடற்பள்ளு ஆகும்.
“சேரி மொழியாற் செவ்விதிற் கிளந்து தேர்தல் வேண்டாது குறித்தது
தோன்றிற் புலளென மொழிப் புலனுணர்ந் தோரோ”
என்பது தொல்காப்பியம்.
தொல்காப்பியர் குறிப்பிடும் எட்டு
வகைப்பிரிவில் ஒன்றான புலன் என்னும் இலக்கிய வகை ‘பள்ளு வகை’ இலக்கியத்திற்குப் பொருந்தும் என்பர்.
சைவ வைணவங்களை ஒருங்கிணைக்கும் இலட்சியங் கொண்ட நூலாக
முக்கூடற்பள்ளு தெரிகிறது.
உழவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைச் சுவை
பெறச் சொல்லும் சிற்றிலக்கியம் பள்ளு.
மூத்தபள்ளி, இளையபள்ளி குடும்பன் வரவோடு அவன் பெருமை கூறல், நாட்டுவளன், குறிகேட்டல்,
மழை வேண்டி வழிபடல், மழைக்குறியோர்தல், ஆற்றில் நீர் வரவு முதலான பல உறுப்புகளைப்
பெற்றது பள்ளு இலக்கியமாகும்.
சிந்தும் விருத்தமும் பரவிவர இது பாடப் பெறும்.
இந்நூலை இயற்றியவர் இன்னார் என
அறியப்படவில்லை.
இந்நூலை இற்றியவர் என்னயினாப் புலவர் என சிலர் கூறுவர்.
இந்நூல் தோன்றிய காலத்தைப் 17-ஆம் நூற்றாண்டு என்பர்.
சதுரகராதியுள் வீரமாமுனிவர் குறிப்பிடும் 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் கூறப்படாத சிலவற்றை
இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன.
நந்திக் கலம்பகம்
இப்பகுதியில் நந்திக் கலம்பகம் tnpsc மொத்தமாக தொகுத்து கொடுத்துள்ளோம்.
நந்திக் கலம்பகம்
நந்திமன்னன் வீரம்
பதிதொறு புயல்பொழி தருமணிபணைதரு
பருமணி பகராநெற்
கதிர்தொகு வருபுனல்
கரைபொரு திழிதரு
காவிரி வளநாடா
நிதிதரு கவிகையும்
நிலமகள் உரிமையும்
இவையிவை யுடைநந்தி
மதியிலி அரசர்நின்
மலரடி பணிகிலர்
வானகம் ஆள்வாரே.
1) நந்திவர்மனின் பெருமையை போற்றும் நூலாக
திகழ்கிறது.
2) நந்திக் கலம்பகத்தில் புகழப்பெறும் மன்னன் – பல்லவ மன்னன் (மூன்றாம் நந்திவர்மன்).
3) நந்திக்கலம்பகம் – 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
4) நூலின் காலம் 9 ஆம் நூற்றாண்டு.
5) கலம்பக நூல்களில் இதுவே முதல் நாள்.
6) கலம் + பகம் = கலம்பகம்.
7) கலம் பன்னிரண்டு: பகம் – ஆறு பதினெட்டு
உறுப்புகளைக் கொண்டதால் கலம்பகம் என்னும் பெயர் வந்தது.
8) பலவகை பாடல்கள் கலந்து இயற்றப்பட்ட நூல் – நந்திக் கலம்பகம்.
ஈட்டுபுகழ் நந்தி பாணநீ| எங்கையர்தம்
வீட்டிருந்து பாட
விடிவளவும் – காட்டிலழும்
பேயென்றாள் அன்னை, பிறர் நரியென்றார், தோழி
நாயென்றாள், நீ என்றேன் நான்!”-நந்திக்கலம்பகம்
தமிழ்விடு தூது
1) தமிழையே தூதுப் பொருளாக கூறும் சிற்றிலக்கியம்
– தமிழ் விடு தூது.
2) இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால்
தொகுக்கப்படும் செய்யுள் வகை – கண்ணி.
3) கிளி, அன்னம்,
விறலி, பணம், தந்தி – தூது வாயில்கள்.
4) வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்னும் வேறு பெயர்களால்
அழைக்கப்படுவது – தூது.
5) அன்னம் முதல் வண்டு ஈறாகப் பத்தையும்
தூதுவிடுவதாகக் கலிவெண்பாவால் இயற்றப்படுவது- தூது.
6) தமிழ் விடு தூது என்ற நூலில் கூறப்படும்
கண்ணிகளின் எண்ணிக்கை – 268.
7) தமிழ் விடு தூது என்ற நூலை முதன்முதலில்
தொகுத்தவர் – உ. வே. சா. (1930).
8) தமிழ்விடு தூது பாடலை பாடியவர் பெயர் தெரியவில்லை.
9) போலிப் புலவர்களின் செவியை அறுத்தவர் வில்லிபுத்தூரார்.
10) போலிப் புலவர்களின் தலையை வெட்டியவர் – ஒட்டக்கூத்தர்.
11) தமிழ் விடு தூது பாடப்பெறும் வெண்பா – கலிவெண்பா.
12) “மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்
மிஞ்சப் புகட்ட மிக
வளர்ந்தாய்”
தமிழ்விடுதூது
தித்திக்கும் தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான
முத்திக் கனியேஎன்
முத்தமிழே – புத்திக்குள்
உண்ணப் படும்தேனே
உன்னோடு உவந்துஉரைக்கும்
விண்ணப்பம் உண்டு
விளம்பக்கேள் – மண்ணில்
குறம்என்றும்
பள்ளுஎன்றும் கொள்வார் கொடுப்பாய்க்கு
உறவுஎன்று
மூன்றுஇனத்தும் உண்டோ – திறம்எல்லாம்
வந்துஎன்றும் சிந்தா
மணியாய் இருந்தஉனைச்
சிந்துஎன்று சொல்லிய
நாச்சிந்துமே* – அந்தரமேல்
முற்றும் உணர்ந்த
தேவர்களும் முக்குணமே பெற்றார்நீ
குற்றம்இலாப் பத்துக்
குணம்பெற்றாய் – மற்றொருவர்
ஆக்கிய வண்ணங்கள்
ஐந்தின்மேல் உண்டோநீ
நோக்கிய வண்ணங்கள்
நூறுஉடையாய் – நாக்குலவும்
ஊனரசம் ஆறுஅல்லால்
உண்டோ செவிகள்உணவு
ஆன நவரசம்உண் டாயினாய்
– ஏனோர்க்கு
அழியா வனப்பு ஒன்று
அலது அதிகம் உண்டோ
ஒழியா வனப்புஎட்டு
உடையாய்….
(கண்ணிகள் 69 -76)
முத்தொள்ளாயிரம்
1) மூவேந்தர்கள் பற்றிய மூன்று 900 பாடல்களைக் கொண்ட நூல் – முத்தொள்ளாயிரம்.
2) சிறந்த இலக்கிய நயமும் கற்பனை வளமும் நிறைந்த
நூலாக முத்தொள்ளாயிரம் திகழ்கிறது.
3) “சேர்ந்த புறவின் நிறைதன் திருமேனி ஈர்த்திட்
டுயர்துலைதான் ஏறினான் நேர்ந்த”
4) மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் சேர, சோழ, பாண்டியர் என்று பொதுவாகப் பாடுவது முத்தொள்ளாயிரம்.
5) மூன்று மன்னர்களைப் பற்றிப் பாடப்பட்ட 900 பாடல்களைக் கொண்ட நூல்.
6) முத்தொள்ளாயிரத்தில் புறத்திரட்டு என்னும்
நூலிலிருந்து 108 செய்யுள்கள் கிடைத்துள்ளன.
7) உரைகள் – முத்தொள்ளாயிரம்,
கம்பராமாயணம்.
பரணி
1) பகைவரை அஞ்சச்செய்யும் வீரமும் அஞ்சியோடும்
பகைவரைத் துன்புறுத்தாத அறமும் தமிழரின் மாண்பு எனக் கூறுவது – கலிங்கத்துப்பரணி
2) கலிங்கத்துப்பரணியின் ஆசிரியர் – செயங்கொண்டார்.
3) சயங்கொண்டார் காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு.
4) கலிங்கத்துப்பரணி – 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
5) தமிழில் முதல் முதலில் எழுந்த பரணி நூல் – கலிங்கத்துப்பரணி.
6) முதலாம் குலோத்துங்கச் சோழனின் படைத்தலைவர் – கருணாகரத் தொண்டைமான்.
7) கலிங்கத்துப்பரணி – முதலாம் குலோத்துங்க சோழன், அவருடைய படைத்தலைவர் கருணாகரத் தொண்டைமான்
ஆகியோரின் கலிங்கப்போர் வெற்றியைப் பேசுகிறது.
8) கலிங்கத்துப்பரணியை “தென்தமிழ்த் தெய்வப்பரணி”
என்று புகழ்ந்தவர் – ஒட்டக்கூத்தர்.
9) கலிங்கத்துப்பரணி – கலித்தாழிசையால் பாடப்பட்டது.
10) கலிங்கத்துப்பரணியில் 599 தாழிசைகள் உள்ளது.
11) போர் முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று
வெற்றிகொண்ட வீரரைப் புகழ்ந்து பாடும் இலக்கியம்
12) ஆயிரக்கணக்கான யானைகளைப் போரில் கொன்ற வீரனைப்
புகழ்ந்து பாடும் இலக்கியத்திற்குப் பரணி என்பது பெயர்.
எதுகொல் இது மாயை ஒன்றுகொல்
எரிகொல் மறலிகொள் ஊழி யின்கடை
அதுகொல் என அலறா இரிந்தனர்
அலதி குலதியொடு ஏழ்க
லிங்கரே
வழிவர் சிலர்கடல் பாய்வர் வெங்கரி
மறைவர் சிலர்வழி தேடி
வன்பிலம்
இழிவர் சிலர்சிலர் தூறு மண்டுவர்
இருவர் ஒருவழி போகல்
இன்றியே
ஒருவர் ஒருவரின் ஓட முந்தினர்
உடலின் நிழலினை வெருவி அஞ்சினர்
அருவர் வருவர் எனா இறைஞ்சினர்
அபயம் அபயம்
எனநடுங்கியே
ஒருவர் ஒருவரின் ஓட முந்தினர்
உடலின் நிழலினை வெருவி அஞ்சினர்
அருவர் வருவர் எனா இறைஞ்சினர்
அபயம் அபயம்
எனநடுங்கியே
மழைகள் அதிர்வன போல் உடன்றன
வளவன் விடுபடை வேழம்
என்றிருள்
முழைகள் நுழைவர்கள் போரில் இன்றுநம்
முதுகு செயும்உப காரம்
என்பரே
– செயங்கொண்டார்
12) “ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவ னுக்கு வகுப்பது
பரணி”– பன்னிரு பாட்டியல்.
13) “தீயின் வாயினீர் பெறினு முண்பதோர் சிந்தை
கூரவாய் வெந்து லர்ந்துசெந்”, – கலிங்கத்துப்பரணி.
14) “எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று
உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே” எனக் கூறியவர் – அறிஞர் அண்ணா.
15) பரணி இலக்கியங்களுள் முதலில் தோன்றிய பரணி
நூல் –கலிங்கத்துப்பரணி.
16) கலிங்கத்துப்பரணி நூலில்,99 தாழிசைகள் உள்ளன.
17) கலிங்கத்துப்பரணியில் செயங்கொண்டார்
விருந்தினர்க்கு உணவிடுவோரின் முகமலர்ச்சியை உவமையாக்குகிறார்.
18) “விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண
மேன்மேலும் முகமலரும் மேலோர் போல” என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்- – கலிங்கத்துப்பரணி.
19) “ஆளை ஆயிரம் அமரிடை வென்ற
மான வனுக்கு வகுப்பது
பரணி”
20) பரணி என்ற நாள்மீன் காளியையும் யமனையும் தன்
21) தெய்வமாகப் பெற்றது என்றும் அந்நாள்மீனால்
வந்த பெயரே நூலுக்கும் பெயராக வந்தது என்றும் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் கூறுவர்.
22) செயங்கொண்டார் முதற் குலோத்துங்க சோழனுடைய அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர்.
23) “வரைக்கலிங்கர் தமைச்சேர மாசை யெற்றி
வன்தூறு பறித்தமயிர்க்
குறையும் வாங்கி”
திருக்குற்றாலக்குறவஞ்சி
1)
எந்த அருவியில் நீராட
மறுப்பதாகக் காந்தி கூறினார்? குற்றாலம்.
2)
குற்றாலம் என்பது – அருவி.
3)
திருக்குற்றாலம்
அமைந்துள்ள மாவட்டம் – திருநெல்வேலி.
4)
குற்றால மலைவளத்தைக்
கூறும் நூல் – குற்றாலக் குறவஞ்சி.
5) “கூனல் இளம் பிறைமுடித்த வேணி அலங்காரர்
குற்றாலத் திரிகூட மலைஎங்கள் மலையே!” இதில் ‘பிறை முடித்த வேணி’ எனக் குறிப்பிடப்படுபவர் – சிவபெருமான்.
6) குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் – திரிகூடராசப்பக் கவிராயர்.
6) குற்றாலக் குறவஞ்சி இலக்கிய வகை சார்ந்த நூல். வேறுபெயர் – நாடக இலக்கிய வடிவம், குறத்திப்பாட்டு.
8) இலக்கியங்களில் ‘திரிகூடமலை’ என அழைக்கப்படும்
மலை –குற்றாலமலை.
9) குற்றால மலைவளத்தைக் கூறும் நூல் – குற்றாலக் குறவஞ்சி.
10) திருநெல்வேலிப் பகுதியை வளம் செழிக்கச்
செய்யும் ஆறு தாமிரபரணி.
10) ‘நுண் துளி தூங்கும் குற்றாலம்’ எனப் பாடியவர் சம்பந்தர் திருஞான.
11) தண்பொருநை நதி என அழைக்கப்படும் ஆறு தாமிரபரணி.
12) தாமிரபரணியின் கிளையாறுகள் – பச்சையாறு, மணிமுத்தாறு, சிற்றாறு, காரையாறு,
சேர்வலாறு, கடனாநதி
13) திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றின் கரையில்
அமைந்துள்ளது.
14) திருநெல்வேலி மாவட்ட பொருளாதாரத்தில்
முதன்மையான பங்கு வகிப்பது உழவுத்தொழில்.
15) இயற்றமிழின் செழுமையையும், இசைத்தமிழின் இனிமையையும் நாடகத்தமிழின்
எழிலிளையும் ஒருங்கே கொண்டு முத்தமிழ்க் காவியமாகத் திகழ்வது – குற்றாலக் குறவஞ்சி.
16) தென்காசிக்கு அருகில் அமைந்திருக்கும்
குற்றாலம் என்னும் ஊரின் சிறப்பைப் புகழ்ந்து அங்குள்ள குற்றாலநாதரை போற்றிப்
பாடப்பட்டது- குற்றாலக்குறவஞ்சி.
17) திரிகூடராசப்பக் கவிராயரின் ‘கவிதை கிரீடம்’
என்று போற்றப்படுவது – குற்றாலக் குறவஞ்சி.
18) மதுரை முத்துவிசயரங்க சொக்கலிங்கனார் விருப்பத்திற்கு இணங்க பாடி அரங்கேற்றப்பட்டது
– குற்றாலக் குறவஞ்சி.
19) திரிகூடராசப்பக் கவிராயர் பணிபுரிந்த இடம் – குற்றால நாதர் கோவில்.
20) ‘திருக்குற்றாலநாதர் கோவில் வித்துவான்’ என்று சிறப்புப் பட்டப்பெயர் பெற்றவர் –
திரிகூடராசப்பக் கவிராயர்.
21) திரிகூடராசப்பக் கவிராயர் குற்றாலத்தின்
இயற்றிய நூல்கள் – தலபுராணம், மாலை,
சிலேடை, பிள்ளைத்தமிழ், யமக அந்தாதி.
22) மண்ணால் கட்டிய கோயில்களுக்கு எடுத்துக்காட்டு
– தில்லைக் கோவில், குற்றாலநாதர் கோவில்.
சீறாப்புராணம்
1) இறைவனின் திருத்தூதர் நபிகள் நாயகத்தின் சீரிய
வரலாற்று இலக்கியம் சீறாப்புராணம்.
2) இசுலாமியத் தமிழ் இலக்கியத்தில் முதன்மையானதாக
விளங்குவது சீறாப்புராணம்.
3) ‘சீறா’ என்பது சீறத் என்னும் அரபுச் சொல்லின் திரிபு
ஆகும். இதற்கு ‘வாழ்க்கை’ என்பது பொருள்
4) புராணம் – வரலாறு
5) நபிகள் பெருமானின் வாழ்க்கை வரலாற்றினைக் கூறும்
நூல்.
6) வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கு இணங்க உமறுப்புலவர் இயற்றினார் என்பர்.
7) இந்நூல் விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக்காண்டம்,
ஹிஜிறத்துக் காண்டம் என்னும் 3 காண்டங்களையும், 92 படலங்களையும் 5027 விருத்தப் பாடல்களையும் கொண்டது.
8) நூலை முடிப்பதற்கு முன்பே உமறுப்புலவர் இயற்கை
எய்திய காரணத்தால் ‘பனி
அகமது மரைக்காயர்’ இதன்
தொடர்ச்சியாக சின்னச்சீறா என்ற நூலைப் படைத்துள்ளார்.
9) உமறுப்புலவர் எட்டயபுரத்தின் அரசவைப் புலவர்.
கடிகை முத்துப் புலவரின் மாணவர்.
10) நபிகள் நாயகத்தின் மீது முதுமொழிமாலை என்ற நூலையும் இயற்றியுள்ளார்.
11) உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல்கள்
*வள்ளல் சீதக்காதி,
*அபுல்காசிம் மரைக்காயர்.
12) காலம் : 17
ஆம் நூற்றாண்டு.
தேம்பாவணி
பூக்கையைக் குவித்துப் பூவே
புரிவொடு
காக்கென்று அம்பூஞ்
சேக்கையைப் பரப்பி இங்கண்
திருந்திய
அறத்தை யாவும்
யாக்கையைப் பிணித்தென்று ஆக
இனிதிலுள்
அடக்கி வாய்ந்த
ஆக்கையை அடக்கிப்
பூவோடு
அழுங்கணீர்
பொழிந்தான் மீதே.
வாய்மணி யாகக் கூறும்
வாய்மையே
மழைநீ ராகித்
தாய்மணி யாக மார்பில்
தயங்கியுள்
குளிர வாழ்ந்தேன்
தூய்மணி யாகத் தூவும்
துளியிலது
இளங்கூழ் வாடிக்
காய்மணி யாகு முன்னர்க்
காய்ந்தெனக்
காய்ந்தேன் அந்தோ
விரிந்தன கொம்பில் கொய்த
வீயென
உள்ளம் வாட
எரிந்தன நுதிநச்சு
அம்புண்டு
இரும்புழைப்
புண்போல் நோகப்
பிரிந்தன புள்ளின்
கானில்
பெரிதழுது
இரங்கித் தேம்பச்
சரிந்தன அசும்பில்
செல்லும்
தடவிலா
தனித்தேன் அந்தோ!
உய்முறை அறியேன்; ஓர்ந்த
உணர்வினொத்து
உறுப்பும் இல்லா
மெய்முறை அறியேன்; மெய்தான்
விரும்பிய
உணவு தேடச்
செய்முறை அறியேன்; கானில்
செல்வழி
அறியேன்; தாய்தன்
கைமுறை அறிந்தேன்
தாயும்
கடிந்தெனைத்
தனித்துப் போனாள்.
நவமணி வடக்க யில்போல்
நல்லறப்
படலைப் பூட்டும்
தவமணி மார்பன் சொன்ன
தன்னிசைக்கு
இசைகள் பாடத்
துவமணி மரங்கள் தோறும்
துணர்அணிச்
சுனைகள் தோறும்
உவமணி கானம்கொல் என்று
ஒலித்து
அழுவ போன்றே.
1) கிறித்துவிற்குமுன் தோன்றியவர் திருமுழுக்கு யோவான்.
2) இவரை அருளப்பன் என்றும் குறிப்பிடுவர்.
3) இவரே கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி.
– அருளப்பன்*
4) வீரமாமுனிவர் தன் காப்பியத்தில் இவருக்குக் கருணையன் என்று பெயரிட்டுள்ளார்.
5) கருணையன் தன் தாயார் எலிசபெத் அம்மையாருடன் கானகத்தில் வாழ்ந்து வந்தார்.
6) இஸ்மத் சன்னியாசி – தூய துறவி
7) வீரமாமுனிவர் திருச்சியை ஆண்ட சந்தாசாகிப் என்னும் மன்னரைச் சந்தித்து உரையாடுவதற்காக
இரண்டே மாதங்களில் உருது மொழியைக் கற்றுக்கொண்டார்.
8) இவருடைய எளிமையையும், துறவையும் கண்டு வியந்த சந்தாசாகிப் இஸ்மத் சன்னியாசி என்னும் பட்டத்தை வீரமாமுனிவருக்கு அளித்தார்.
9) இந்தப் பாரசீகச் சொல்லுக்குத் தூய துறவி என்று பொருள்.
10) தேம்பா + அணி எனப் பிரித்து வாடாதமாலை என்றும்,
தேன் + பா + அணி எனப்
பிரித்து தேன்போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு என்றும் இந்நூலுக்குப் பொருள்
கொள்ளப்படுகின்றது.
11) கிறித்துவின் வளர்ப்புத் தந்தையாகிய
சூசையப்பர் என்னும் யோசேப்பினைப் (வளனை) பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட நூல் இது.
12) இப்பெருங்காப்பியம் 3 காண்டங்களையும், 36 படலங்களையும், உள்ளடக்கி, 3615 பாடல்களைக் கொண்டுள்ளது.
13) 17ஆம் நூற்றாண்டில் படைக்கப்பட்டது தேம்பாவணி.
14) இக்காப்பியத்தை இயற்றியவர் வீரமாமுனிவர்.
15) இவரது இயற்பெயர் கான்சுடான்சு சோசப் பெசுகி.
16) வீரமாமுனிவரின் மொழிபெயர்ப்பு நூல்கள் :
* தமிழின் முதல்
அகராதியான சதுரகராதி,
* தொன்னூல் விளக்கம்
(இலக்கண நூல்),
* சிற்றிலக்கியங்கள்,
* உரைநடை நூல்கள்,
*பரமார்த்தக் குருகதைகள்,
17) இயற்றிய நூல்கள் :
*ஞானோபதேசம், *பரமார்த்த குரு கதை, *திருக்காவலூர்க் *கலம்பகம்,
*தொன்னூல் விளக்கம், *கித்தேரியம்மாள் அம்மானை.
தேம்பாவணி
நகைசெய் தன்மையி னம்பெழீ இத் தாய்துகள்
பகைசெய் நெஞ்சமும்
பற்றலு மொன்றுற
முகைசெய் மேனி
தழுவிமுத் திட்டலுங்
குகைசெய் யின்பெழக்
கோலமிட் டொத்ததே.*
– வீரமாமுனிவர்
18) பிறந்தநாடு – இத்தாலி.
19) அறிந்தமொழிகள் – இத்தாலியம், இலத்தீன்,
கிரேக்கம், எபிரேயம், தமிழ்,
தெலுங்கு, சமற்கிருதம்.
20) சிறப்பு – முப்பதாம் வயதில் தமிழகம் வந்து தமிழ் பயின்று
காப்பியம் படைத்தமை.
21) கிறித்தவச் சமயத்தாரின் கலைக்களஞ்சியம் – தேம்பாவணி.
22) வீரமாமுனிவர் 31 ஆண்டுகள் தமிழ் பணி புரிந்தார்
23) தேம்பாவணி பாவகை – கலித்துறை.
இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து தேம்பாவணி பற்றிய
செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம். (Put your Browser in Desktop Mode)
திருவிளையாடல்
புராணம்
மன்னன்
புலவரிடம் மன்னிப்பை வேண்டுதல்
புண்ணியப்
புலவீர் யான் இப்போழ்து இடைக் காடனார்க்குப்
பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்க எனப் பரவித்
தாழ்ந்தான்
நுண்ணிய கேள்வி யோரும் மன்னநீ நுவன்ற சொல்லாம்
தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீத் தணிந்தது என்னா.
1) சங்கத் தமிழ்க் காட்சிக்கூடம்: தருமிக்குப் பாண்டிய
மன்னன் பொற்கிழி வழங்கிய திருவிளையாடல் புராணம் காட்சி இதன் நுழைவாயிலில்
புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
2) தருமிக்கு இறைவன் தண்டமிழ்ப் பாடல் தந்தமை பற்றிக்
கூறும் நூல் – திருவிளையாடற்புராணம்.
3) திருவிளையாடற்புராணத்தின் ஆசிரியர் – பரஞ்சோதி முனிவர். பரஞ்சோதி முனிவர் சிவபக்தி
மிக்கவர்.
4) காலம் – 17
ஆம் நூற்றாண்டு.
5) பரஞ்சோதி முனிவர் பிறந்த ஊர் நாகை மாவட்டத்தில் உள்ள (திருமறைக்காடு{ வேதாரண்யம்.
6) திருவிளையாடற்புராணம் அரங்கேற்றப்பட்ட இடம் – மதுரை சிவபெருமாள் கோவிலுக்கு
எதிரேயுள்ள அறுகால் மண்டபம்.
7) பரஞ்சோதி முனிவரின் தந்தை பெயர் மீனாட்சி சுந்தர
தேசிகர்.
7) திருவிளையாடற்புராணத்தில் உள்ள காண்டங்களின்
எண்ணிக்கை – 3
மதுரைக் காண்டத்தில் உள்ள படலங்கள் – 18
கூடற் காண்டத்தில் உள்ள படலங்கள் – 30
திருவாலவாய்க் காண்டத்தில் உள்ள படலங்கள் – 16
8) திருவிளையாடற் புராணத்தில் உள்ள உட்பிரிவுகளின்
படலங்கள் எண்ணிக்கை – 64
9) திருவிளையாடற் புராணத்தில் உள்ள விருத்தப்பாக்களின்
எண்ணிக்கை – 3363.
10) திருவிளையாடற் புராணத்திற்கு உரையெழுதியவர் – ந. மு. வேங்கடசாமி நாட்டார்.
11) திருவிளையாடற் புராணத்தில் உள்ள நயம் – தொடைநயம்.
நாலாயிரத்
திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதி பொய்கையாழ்வாரால் பாடப்பட்டதாகும்.
புதுமை விளக்கு
வையம்
தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர்ஆழி நீங்குகவே என்று
– பொய்கை
ஆழ்வார்
நாலாயிரத் திவ்விய பிரபந்தம்
மீன்நோக்கும்
நீள்வயல்சூழ் வித்துவக்கோட் டம்மாஎன்
பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்
தானோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்
கோனோக்கி வாழுங் குடிபோன் றிருந்தேனே.
– குலசேகர ஆழ்வார்
2)
பொய்கையாழ்வார் பிறந்த ஊர் – திருவெஃகா
3)
பொய்கையாழ்வார் ஒலிக்கின்ற கடலை நெய்யோடு ஒப்பிடுகிறார்.
4)
வெப்பக்கதிர் வீசும் கதிரவனைச் சுடராக கொண்டவன் – திருமால்.
5) நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் இரண்டாம்
திருவந்தாதியை இயற்றியவர் – பூதத்தாழ்வார்.
6)
பூதத்தாழ்வார் பிறந்த ஊர் சென்னை அருகே மாமல்லபுரம்
7)
திருமாலைப் போற்றிப் பாடியவர்கள் பன்னிரு(12) ஆழ்வார்கள்.
8)
நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தை தொகுத்தவர் நாதமுனி.
9)
பன்னிரு ஆழ்வார்களுள் முதலாழ்வார்கள் யார்? பொய்கை ஆழ்வார்,
பூதத்தாழ்வார்,
பேயாழ்வார்.
10)
ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு – நாலாயிர திவ்வியப்பிரபந்தம்.
11)
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் சிறப்புபெயர் – திராவிடவேதம்
12)
குழசேகர ஆழ்வார் ஊர் – திருவஞ்சைக்கலம்.
13)
குலசேகராழ்வார் அவர்களின் காலம் 8 நூற்றாண்டு.
14) ‘உனதருளே பார்ப்பன் அடியேனே’ யாரிடம் யார் கூறியது? இறைவனிடம் குலசேகராழ்வார்.
15)
குலசேகர ஆழ்வார் அருளிய பெருமாள் திருமொழி நாலாயிரத்
திவ்வியப் பிரபந்தத்தில் ஒன்று.
16)
இதில் 105 பாசுரங்கள் உள்ளன.
17)
குழசேகர ஆவார் வடமொழி தென்மொழி இரண்டிலும் வல்லவர்.
18)
தமிழில் – பெருமாள் திருமொழி.
வடமொழியில் – முகுந்தமாலை.
19)
பெருமாள் திருமொழி ஆனது நாலாயிரத் திவ்வியப்
பிரபந்தத்தில் எத்தனையாவது திருமொழி? 5ஆம்
திருமொழி.
20)
பன்னிரு ஆழ்வார்கள் பாடியருளிய தேனினும் இனிய
தீந்தமிழ்ப் பனுவல் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்.
21)
நாலாயிர திவ்வியப் பிரபந்தத் தொகுப்பில் மூன்றாவது
பிரபந்தமாக வைக்கப்பட்டிருப்பது திருப்பாவை.
22)
தமிழகத்தின் பழம்பெரும் சமயங்களில் ஒன்று – வைணவம்.
23)
வைணவம் சமயத்தின் கடவுள் – திருமால்.
24) குழசேகர பாடல் முதலாயிரம் தொப்பில் உள்ளது.
பெரியபுராணம்
1) ‘இயற்கை அன்பு’ – பெரியபுராணம்.
இயற்கை வாழ்வில்லம் – திருக்குறள்
இயற்கை இன்பவாழ்வு
நிலையங்கள் – மணிமேகலை சிலப்பதிகாரம்,
இயற்கைத் தவம் – சீவக
சிந்தாமணி
இயற்கைப் பரிணாமம் –
கம்பராமாயணம்
2) “சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி”
3) பெரிய புராணத்தை அருளியவர் – சேக்கிழார்.
4) பெரியபுராணத்தில் உள்ள தனியடியார்கள்
எண்ணிக்கை – 63
5) பெரியபுராணத்தில் தொகையடியார்கள் எத்தனை பேர்? 9
6) பெரியபுராணத்தில் உள்ள சிவனடியார் எண்ணிக்கை – 72
7) பெரியபுராணத்திற்கு சேக்கிழார் இட்டபெயர் – திருத்தொண்டர் புராணம்.
8) பெரியபுராணம் பெயர்க்காரணம் 72 சிவனடியார்களின் வரலாற்றைக் கூறுவதால், பெருமை பெற்ற புராணம் என்னும் பொருளில் பெரியபுராணம் என அழைக்கப்படுகிறது.
9) தில்லை நடராஜப்பெருமான் ‘உலகெலாம்’ என்ற அடியெடுத்துக் கொடுக்கப் பாடப்பெற்ற நூல் பெரியபுராணம்.
10) “உலகம், உயிர்,
கடவுள் ஆகிய மூன்றையும்
ஒருங்கே காட்டும் காவியம் தான் பெரியபுராணம்” என்றவர் திரு. வி. கலியாணசுந்தரனார்.
11) அப்பூதியடிகளின் மைந்தன் மூத்த திருநாவுக்கரசு
பாம்பு தீண்டப் பெற்றது கண்டு அப்பரடிகள் ‘ஒன்று கொலாம்’ என்ற தேவாரப்பதிகம் இசைத்து திங்களுரிலே
உய்யக் கொண்டது பெரிய புராண வரலாறு
12) பெரியபுராணம், 2 காண்டம், 13 சருக்கங்கள், 4286 பாடல்கள்.
13) திருநெல்வேலியை ‘தண்பொருநைப் புனல் நாடு’ என்று போற்றியவர் – சேக்கிழார்.
14) சேக்கிழாரால் ஒவ்வொரு புராணத்திலும் ஒவ்வோர்
அடியாராக 63
பேரின் சிறப்புகளை
விளக்கிப் பாடப்பட்டது – திருத்தொண்டர் புராணம்.
15) சேக்கிழாரை “பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய
கவிவலவ” என்று பாராட்டியவர் – மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்.
16) சோழ அரசன் இரண்டாம் குலோத்துங்கன் அவையில்
முதலமைச்சராக இருந்தவர் – சேக்கிழார் (12ஆம் நூற்றாண்டு).
17) பெரியபுராணத்தை இயற்றியவர் – சேக்கிழார்.
18) சேக்கிழாரின் இயற்பெயர் – அருண் மொழித் தேவர்.
19) சேக்கிழார் பிறந்த ஊர் – குன்றத்தூர்
(காஞ்சிபுரம் மாவட்டம்).
20) சேக்கிழார் யாரிடம் தலைமை அமைச்சராக
பணியாற்றினார்? அநபாயச் சோழன்.
21) உத்தம சோழப் பல்லவர் என்ற பட்டம் பெற்றவர் – சேக்கிழார்
22) ‘தெய்வச் சேக்கிழார்’ என்றும் ‘தொண்டர்சீர்
பரவுவார்’ என்றும் போற்றப்படுபவர் -சேக்கிழார்.
23) சேக்கிழாரின் காலம் கி.பி – 12 நூற்றாண்டு.
24) பெரியபுராணத்திற்கு சேக்கிழார் இட்டபெயர் – திருத்தொண்டர் புராணம்.
பெரியபுராணம் பாடல் வரிகள்
மாவி ரைத்தெழுந் தார்ப்ப வரைதரு
பூவி ரித்த புதுமதுப் பொங்கிட
வாவி யிற்பொலி நாடு
வளந்தரக்
காவி ரிப்புனல் கால்பரந் தோங்குமால்.
மண்டுபுனல் பரந்தவயல் வளர்முதலின் சுருள்விரியக்
கண்டுழவர் பதங்காட்ட களைகளையுங் கடைசியர்கள்
தண்டரளஞ் சொரிபணிலம் இடறியிடை தளர்ந்தசைவார்
வண்டலையும் குழல்அலைய மடநடையின் வரம்பணைவார்.
காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன
நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா நலமெல்லாம்
அன்னம் ஆடும் அகன்துறைப் பொய்கையில்
துன்னும் மேதி படியத்
துதைந்தெழும்
கன்னி வாளை கமுகின்மேற்
பாய்வன
மன்னு வான்மிசை வானவில்
போலுமால்
அரிதரு செந்நெற் சூட்டின் அடுக்கிய அடுக்கல்
சேர்ப்பார்
பரிவுறத் தடிந்த
பன்மீன் படர்நெடுங் குன்று செய்வார்
சுரிவளை சொரிந்த
முத்தின் சுடர்ப்பெரும் பொருப்பு யாப்பார்
விரிமலர்க் கற்றை வேரி
பொழிந்திழி வெற்பு வைப்பார்
சாலியின் கற்றை துற்ற தடவரை முகடு சாய்த்துக்
காலிரும் பகடு போக்கும்
கரும்பெரும் பாண்டில் ஈட்டம்
ஆலிய முகிலின் கூட்டம்
அருவரைச் சிமயச் சாரல்
போல்வலங் கொண்டு சூழும்
காட்சியின் மிக்க தன்றே
நாளிகே ரஞ்செ ருந்தி நறுமலர் நரந்தம் எங்கும்
கோளிசா லந்த மாலம்
குளிர்மலர்க் குரவம் எங்கும்
தாளிரும் போந்து சந்து
தண்மலர் நாகம் எங்கும்
நீளிலை வஞ்சி காஞ்சி
நிறைமலர்க் கோங்கம் எங்கும்
திருமறையோர் அதுமொழியத் திருநாவுக் கரசர்அவர்
பெருமையறிந்
துரைசெய்வார் பிறதுறையி னின்றேற
அருளுபெருஞ் சூலையினால்
ஆட்கொள்ள அடைந்துய்ந்த
தெருளும்உணர் வில்லாத
சிறுமையேன் யான்என்றார்.
நல்லதாய் தந்தைஏவ நானிது செயப்பெற் றேனென்று
ஒல்லையில் விரைந்து
தோட்டத் துள்புக்குப் பெரியவாழை
மல்லலம் குருத்தை ஈரும்
பொழுதினில் வாள ராவொன்று
அல்லலுற் றழுங்கிச் சோர
அங்கையில் தீண்டிற் றன்றே.
ஐம்பெருங் காப்பியங்கள்
• சிலபதிகாரம்
• மணிமேகலை
• சீவகசிந்தாமணி
• வளையாபதி
• குண்டலகேசி
சிலபதிகாரம் மணிமேகலை
சீவகசிந்தாமணி
1) குணமாலை என்னும் தலைவி, யானையைக் கண்டு அஞ்சிய காட்சியை சீவகன்
துணியில் வரைந்ததாகக் கூறப்படும் நூல் – சீவகசிந்தாமணி.
2) சீவகசிந்தாமணியின் ஆசிரியர் – திருத்தக்கதேவர். ‘இயற்கைத் தவம்’ – சீவக சிந்தாமணி
3) சீவகசிந்தாமணியின் கதைத் தலைவன் – சீவகள்.
4) ‘மணநூல்’ என அழைக்கப்படுவது – சீவகசிந்தாமணி.
5) மயிற்பொறி விமானம் பற்றி குறிப்பிடும் நூல் – சீவகசிந்தாமணி.
அந்தரத் தார்மய னேஎன ஐயுறும்
தந்திரத்தால் தம
நூல்கரை கண்டவன்
வெந்திற லான், பெருந் தச்சனைக் கூவி,”ஓர்
எந்திர வூர்திஇ
யற்றுமின்” என்றான்
6) சீவகனைத் தலைவனாகக் கொண்டு தோன்றிய காப்பியம்
– சீவக சிந்தாமணி.
7) இன்பங்களைத் துறந்து துறவு பூண வேண்டும் சீவக
சிந்தாமணி காப்பியத்தின் மையக்கருத்தாகும்.
8) சீவகசிந்தாமணி-இலம்பகங்கள்
*நாமகள் இலம்பகம்
*கோவிந்தையார் *இலம்பகம்
*காந்தருவதத்தையார்
இலம்பகம்.
9) சீவக சிந்தாமணி பாடுவதற்கு முன்னோட்டமாக ‘நரிவிருத்தம்’ என்னும் நூலை இயற்றியவர் திருத்தக்க தேவர்.
10) திருத்தணிகையுலாவில் முதலாவதாக
வைக்கப்பட்டுள்ள நூல் – சீவக சிந்தாமணி.
11) கல்வி கற்பிக்கப்படும் இடங்களை ‘கல்லூரி’
என்று கூறும் நூல்- சீவக சிந்தாமணி.
12) சிந்தாமணி என்பதற்கு ஒளிகுன்றாத மணி என்பது பொருள். குன்றுதலில்லாத அழகு தமிழ்நடை
பெற்றிருப்பதாலும் தமிழ் மாந்தர் தம் நெஞ்சில் வைத்துப் போற்றுவதாலும் இந்நூல்
சிந்தாமணி எள்ளல் தகுதியுடையதாயிற்று.
13) சீவகசிந்தாமணி காப்பியத்தை இயற்றித்
தமிழன்னைக்கு அணி செய்தவர் திருத்தக்கதேவர் என்னும் புலவர் பெருமானாவர்.
14) திருத்தக்கதேவர் சோழ நாட்டைச் சேர்ந்தவர். சமண சமயஞ்சார்ந்த துறவி.
15) திருத்தக்கதேவர் நரிவிருத்தம் என்ற நூலையும் எழுதியுள்ளார்.
16)சீவகசிந்தாமணி நாமகள் இலம்பகம் முதலாக
முத்தியிலம்பகம் ஈறாகப் 13 இலம்பகங்களைக் கொண்டிலங்குகின்றது.
17) விருத்தம் என்னும் பாவினத்தால் அமைந்த முதல் தமிழ்க் காப்பியம் சிந்தாமணியே.
18) சீவகன் பிறந்த பொழுது அவள் தாய் விசயை
‘சிந்தாமணியே’ என்று அவனை அழைத்தார். அக்குழந்தை தும்மிய பொழுது ‘சீவ’ என்ற
வாழ்த்தொலி கேட்டது. அதனால் அவன் சீவகள் என்று அழைக்கப்பட்டான். சீவகன் வரலாற்றைக்
கூறும் காப்பியமாதலின் அந்நூல் சீவகசிந்தாமணி என வழங்கலாயிற்று.
கருங்கொடிப் புருவம் ஏறா
கயல்நெடுங்கண்ணும் ஆடா
அருங்கடி மிடறும்
விம்மா
அணிமணி எயிறும் தோன்றா
இருங்கடற் பவளச்
செவ்வாய்
திறந்திவள் பாடினாளோ
நரம்பொடு வீணை நாவில்
நவின்றதோ என்று
நைந்தார்.
19) பெருங்காப்பியத்திற்கு உரிய நான்கு வகை
உறுதிப் பொருட்களும் பிற உறுப்புகளும் முழுமையாக அடையப் பெற்று விளங்கும்
காப்பியம் – சீவக சிந்தாமணி.
20) விருத்தம் என்னும் ஒரே வகை செய்யுளில்
அமைந்தவை – சீவக சிந்தாமணி,
கம்பராமாயணம்.
21) சீவகசிந்தாமணி; 13 இலம்பகங்கள், 3145 பாடல்கள்.
வளையாபதி
குண்டலகேசி
1) ‘குண்டலம்’ என்னும் அணிகலன் எங்கு அணிவது? காதில்.
2) ‘குண்டலகேசி’ எனும் நூலுக்கு மறுப்பாக எழுதப்பட்ட
நூல் – நீலகேசி.
ஐஞ்சிறுங் காப்பியங்கள்
சூளாமணி
நீலகேசி
யசோதர காவியம்
உதயண குமார காவியம்
நாககுமார காவியம்
சூளாமணி
1) மதங்க சூளாமணி என்ற நூலை இயற்றியவர் யார் விபுலானந்த சுவாமிகள்.
2) சருக்கம் -சூளாமணி, பாரதம்
3) சூளாமணி பதிப்பித்தவர் – சி. வை. தாமோதரனார் (1895).
நீலகேசி
1) நீலகேசி சமணசமயக் கருத்துகளை வாதங்களின்
அடிப்படையில் விளக்குகிறது
2) சமயத் தத்துவங்களை விவாதிக்கும் தருக்க நூல்
3) நீலகேசியின் – ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
4) நீலகேசியின் சருக்கங்கள் – 10
5) நீலகேசி கூறும் நோயின் வகைகள் – 3
6) நீலகேசியில் பிறவித்துன்பத்தைத் தீர்க்கும்
மருந்துகளாகக் கூறுவது – நல்லறிவு, நற்காட்சி,
நல்லொழுக்கம்.
7) பத்தமத துறவியருடன் நீலகேசி வாதம்புரியும் பகுதியில்
விரவியிருக்கும் அறிவியல் சிந்தனைகளை விளக்கும் நூல் நீலகேசி.
8) நீலகேசியின் பாவகை – விருத்தப்பா.
9) நீலகேசிக்கு வழங்கப்படும் வேறுபெயர் – நீலகேசித் தெருட்டு.
10) ‘குண்டலகேசி’ எனும் நூலுக்கு மறுப்பாக
எழுதப்பட்ட நூல் – நீலகேசி.
11) சமண சமயப் பெண் ஒருவர் சமயத் தலைவர் பலரிடம்
வாதம் செய்து சமண நெறியை நிலைநாட்டுவதாக அமைந்த நூல் – நீலகேசி.
12) தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல் – நீலகேசி.
13) தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல் – நீலகேசி
14) நீலகேசி நூலில் கடவுள் வாழ்த்து உட்பட 11 பகுதிகளும், 894 பாடல்களும் உள்ளன.
15) நீலகேசி நூலின் உரையாசிரியர் சமய திவாகர வாமன முனிவர்.
16) ‘ஒப்ப மரங்கட்கு உயிர் உண்மையாம் இனி’
17) “பொங்கு சாமரை யேந்திப் புடைபுடை யியக்கர்நின் றிரட்டச்”
யசோதர காவியம்
1) வடமொழியிலிருந்து தமிழில் தழுவப்பெற்ற நூல் – யசோதர காவியம்
2) யசோதரன் என்னும் அவந்தி நாட்டு மன்னனின்
வரலாற்றைக் கூறுவது – யசோதர காவியம்.
3) யசோதர காவியத்தில் உள்ள சருக்கங்கள்- 5
4) யசோதர காவியத்தில் உள்ள பாடல்கள்-(320-330).
5) “ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக”
6) ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.
உதயண குமார காவியம்
நாககுமார காவியம்
1) இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுவது –
சிலப்பதிகாரம், மணிமேகலை.
2) பசிப்பிணி போக்கிய பாவை யார்? மணிமேகலை.
3) மணிமேகலை எந்த ஊரைச் சேர்ந்தவள்? பூம்புகார்.
4) மணிமேகலையை தீவிற்கு கொண்டு வந்து சேர்த்தவர் மணிமேகலா தெய்வம்.
5) மணிமேகலையின் பெற்றோர் – கோவலன், மாதவி.
6) மணிமேகலை அமுதசுரபியை பெற்ற இடம் – மணிபல்லவத் தீவு.
7) மணிமேகலை அமுதசுரபியை பெற்று திரும்பிய இடம் – பூம்புகார்.
8)அமுதசுரபியில் முதலில் உணவிட்டவர் – ஆதிரை.
9) பூம்புகாரில் சிறைக்கோட்டம் சென்று மணிமேகலை
உணவளித்தால்.
10) மணிமேகலையை மணிமேகலா தெய்வம் அழைத்து சென்ற தீவு – மணிபல்லவத் தீவு.
11) மணிமேகலையின் ஆசிரியர் – சீத்தலைச் சாத்தனார்.
12) மணிமேகலை பௌத்த
சமய நூல்.
13) மணிமேகலை எந்த நூலின் தொடர்ச்சி? சிலப்பதிகாரம்.
14) “சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக மாற
வேண்டும்” கூற்று? மணிமேகலை.
15) “கலஞ்செய் கம்மியர் வருகெனக்
கூஇய்” என்று
கம்மியரை பற்றிக் கூறும் நூல் – மணிமேகலை.
15) “புனையா ஓவியம் புறம் போந்தன்ன”
16) வான் வழிப்பயணங்கள் பற்றிய குறிப்புகள் உள்ள நூல்கள்
– சிலம்பு, மணிமேகலை.
17) தமிழ் மக்களின் வாழ்வியலைச் சொல்லும் கருவூலங்களாகத்
திகழ்வது – சிலப்பதிகாரம், மணிமேகலை.
18) மணிமேகலை நூலின் வேறு பெயர் – மணிமேகலைத் துறவு.
19) பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம் – மணிமேகலை.
20) பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம் – மணிமேகலை.
21) சொற்சுவையும் பொருட்சுவையும் இயற்கை வருணனைகளும்
நிறைந்த காப்பியம் – மணிமேகலை.
22) மணிமேகலையில் உள்ள காதைகளின் எண்ணிக்கை –30, வரி – 4755.
23) மணிமேகலையின் முதல் காதை – விழாவறை காதை.
24) மணிமேகலைக் காப்பியத்தை இயற்றியவர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.
அறம்
எனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இதுகேள்! மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல்
25) ‘பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து
ஏறுமின்’
26) “கல்லும் உலோகமும் செங்கல்லும்
மரமும்
மண்ணும் சிதையும் தந்தமும் வண்ணமும்”
27) மாளிகைகளில் பல சிற்பங்களில் சுண்ணாம்புக் கலவை
(சுதைச் சிற்பங்கள்) இருந்ததை மணிமேகலை மூலம் அறிய முடிகிறது.
28) “சாதுவன் வாணிகம் செய்யும் பொருட்டு
கடல் கடந்து சென்ற குறிப்பு”
29) மணிமேகலையை இயற்றியவர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலை சாத்தனார்.
30) மணிமேகலையை இயற்றியவர் கூலவாணிகன் –சீத்தலை
சாத்தனார்.
31) சீத்தலை சாத்தனாரின் இயற்பெயர் – சாத்தன்
32) சீத்தலை சாத்தனார் பிறந்த ஊர் – சீத்தலை. இளங்கோவடிகளும் இவரும்
சமக் கலாத்தவர்.
33) மணிமேகலையை மணம்புரிய
விரும்பியவன் – உதயகுமாரன்.
34) மறுபிறப்பு உணர்ந்தவளாகக் குறிப்பிடப்படுபவள் – மணிமேகலை.
35) மணிமேகலை தீவதிலகை உதவியால் அமுசுரபியைப்
பெறுகிறாள்.
36) அமுதசுரபி மணிமேகலைக்கு முன்பு ஆபுத்திரனிடம் இருந்தது.
37) மணிமேகலையின் துறவு வாழ்க்கையைக் கூறுவதனால்
இந்நூலுக்கு மணிமேகலைத்
துறவு என்னும்
வேறு பெயரும்.
38) முப்பது காதைகளுள்,
இருபத்து நான்காவது காதை – ஆபுத்திரன் நாடு அடைந்த காதை
39) மணிமேகலை தப்பிச்சென்ற இடம் – மணிபல்லவத்தீவு.
40) . “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”
என்று கூறும் நூல்கள் – புறநானூறு, மணிமேகலை.
41) பெருஞ்சித்திரனார் மாண்புகழாக சிறப்பிக்கும் நூல்
திருக்குறள்.
பெருஞ்சித்திரனார் கலைவடிவாக சிறப்பிக்கும் நூல் மணிமேகலை.
பெருஞ்சித்திரனார்
என்றும் நிலைத்து நிற்பதாக சிறப்பிக்கும் நூல் சிலப்பதிகாரம்.
42) ‘அடிகள் நீதர அருளுக’ என்றவர்-சீத்தலைச்சாத்தனார்.
43) சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்
– அகவற்பா.
44) மணிமேகலையின் தோழி – சுதமதி.
45) சுதமதியின் தந்தையை மாடுமுட்டியதால், அவரின் குடல் சரிந்தது. சரிந்த குடலைப் புத்தத்
துறவியர் சரிசெய்த செய்தியை மணிமேகலை எடுத்துரைக்கிறது.
46) பட்டிமண்டபம் என்பது ‘சமயக்
கருத்துகள் விவாதிக்கும் இடம்’ என்று
சுட்டும் நூல் மணிமேகலை.
50) “ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள் பட்டிமண்டபத்துப்
பாங்கறிந்து ஏறுமின்” என்று கூறும் நூல் – மணிமேகலை.
51) “பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து
ஏறுமின்”
52) “புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன் உலக நோன்பி
னுயர்ந்தோ யென்கோ” – சீத்தலைச்
சாத்தனார்.
53) மணிமேகலை புத்த
சமயச் காப்பியமாகும்.
நல்வினை
தீவினை என்றுஇரு வகையால்
சொல்லப் பட்ட கருவில் சார்தலும்
கருவில் பட்ட பொழுதினுள் தோற்றி
வினைப்பயன் விளையும் காலை உயிர்கட்கு
மனப்பேர் இன்பமும் கவலையும் காட்டும்.
54) தண்டமிழ்ச் சாத்தன், சாத்தன், நன்னூற்
புலவன் என்று இளங்கோவடிகள் சீத்தலைச்சாதனாரைப்
பாராட்டியுள்ளார்.
சிலபதிகாரம்
1) ‘தமிழ்நாடு’ என்னும் சொல் முதலில்
இடம்பெற்றுள்ள இலக்கியம் சிலப்பதிகாரம் (வஞ்சிக்காண்டம்).
2) “இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ
கருதினை ஆயின்”. இவ்வரிகள் இடம்பெற்ற நூல் சிலப்பதிகாரம்.
3) சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள்.
4) தமிழின் முதல் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், நாடகக் காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் – சிலப்பதிகாரம்.
5) இளங்கோவடிகள் எந்த மரபைச் சேர்ந்தவர்? சேர மரபு.
6) இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம், மணிமேகலை.
7) சிலப்பதிகாரம் எந்த காப்பிய வகையை சேர்ந்தது? ஐம்பெருங்காப்பியம்.
8) மணிமேகலை எந்த நூலின் தொடர்ச்சி? சிலப்பதிகாரம்.
9) பூம்புகார் பற்றிய செய்திகள் சிலப்பதிகாரம், பட்டினப்பாலை ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளன.
10) மருவூர்ப்பாக்கம் என்னும் கடல் பகுதியும்
பட்டினப்பாக்கம் என்னும் நகரப் பகுதியும் அமைத்திருந்ததாகக் கூறும் நூல் சிலப்பதிகாரம்.
11) சிலப்பதிகாரம் எழுதப்பட்ட காலம் – 2 ஆம் நூற்றாண்டு
12) “ஓங்குசீர் மதுரை,
மதுரை மூதூர் மாநகர்,
தென்தமிழ் நன்னாட்டு
தீதுதீர் மதுரை,
மாண்புடை மரபின் மதுரை, வானவர் உறையும் மதுரை,
பதியெழுவறியாப் பண்பு
மேம்பட்ட மதுரை மூதூர்” என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் –
சிலப்பதிகாரம் (இளங்கோவடிகள்).
13) “ஓவியச் செந்நூல் உரை நூற்கிடக்கையும்
சுற்றுத்துறை போகப் பொற்றொடி மடந்தையாக இருந்தனள்” என்னும் வரிகள் இடம்பெற்ற நூல்-சிலப்பதிகாரம்.
14) “கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி”
15) ஐம்பெருங்காப்பியங்கள்
*சிலப்பதிகாரம்,
*மணிமேகலை,
*சீவகசிந்தாமணி,
*வளையாபதி,
*குண்டலகேசி
16) இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள் மணிமேகலை சிலப்பதிகாரம்.
17) கொன்றைக்குழல், முல்லைக்குழல்,
ஆம்பல்குழல்
எனப்பலவகையான குழல்கள் இருந்ததாகக் கூறும் நூல் சிலப்பதிகாரம்.
18) தமிழ் மக்களிடம் முப்பத்தாறு வகையான முரசுகள்
வழக்கத்தில் இருந்ததாக குறிப்பிடும் நூல் – சிலப்பதிகாரம்.
19) சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் நாடகமேத்தும்
நாடக காணிக்கை என்று மாதவியை குறிப்பிடுகிறார்.
20) நாடகக் கலையைப் பற்றியும் காட்சித் திரையைப்
பற்றியும் கூறும் நூல் – சிலப்பதிகாரம்.
21) ‘ஏறு தழுவுதல்’ பற்றி குறிப்பிடும் இலக்கிய நூல்
சிலப்பதிகாரம்.
22) தமிழ் மக்களின் வாழ்வியலைச் சொல்லும்
கருவூலங்களாகத் திகழ்வது – சிலப்பதிகாரம், மணிமேகலை.
23) “ஓவிய விதானத்து, உரைபெறு நித்திலத்து மலைத்தாமம் வளையுடன் நாற்றி, விருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கம்” – சிலப்பதிகாரம்.
24) சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்குச் சிலைவடித்த செய்தி இடம் பெற்றுள்ளது.
25) சிலப்பதிகாரமும் மணிமேகலையும் வெவ்வேறு
நூல்களாயினும் ஒரே கதைத் தொடர்புடையன. எனவே, இவை இரட்டைக்காப்பியங்கள் என வழங்கப்பெறுகின்றன.
26) பெருஞ்சித்திரனார் என்றும் நிலைத்து நிற்பதாக
சிறப்பிக்கும் நூல் சிலப்பதிகாரம்.
27) “வாழையும் கமுகும் தாழ் குலைத்தெங்கும் மாவும்
பலாவும் சூழ் அடுத்து ஓங்கிய தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்” என்னும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் –
சிலப்பதிகாரம் (காடுகாண் காதை).
28) “வண்டோடு புக்க மணவாய்த் தென்றல்” எனக் குறிப்பிடும் நூல் சிலப்பதிகாரம்.
29) “தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும்
இழந்த என்ளை” என்ற வரிகள் இடம்பெற்ற நூல் – சிலப்பதிகாரம்.
30) இளங்கோவடிகளின் தந்தை – இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
31) இளங்கோவடிகளின் தமையன் – சேரன் செங்குட்டுவன்.
32) இளங்கோவடிகளின் சமகாலத்தவர் –சீத்தலைச்
சாத்தனார்
33) இளங்கோ இளமையிலேயே துறவு பூண்டு தங்கிய இடம் குணவாயிற் கோட்டம்.
34) சிலப்பதிகாரத்தின் கதை உருவம் இசைநாடகம்.
35) சிலப்பதிகாரம் 3 காண்டங்களைக் கொண்டது.
அவை புகார்க்காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக்காண்டம்.
36) ஆடலரசி எனப்பட்டவள் – மாதவி.
37) சிலப்பதிகாரத்தில் உள்ள காதைகள்-30
புகார்க் காண்டம் -10
மதுரைக் காண்டம் -13
வஞ்சிக்காண்டம் 7 காதைகள், 5001 வரிகள்.
38) சிலப்பதிகாரம் ‘உரையிடையிட்ட பாட்டுடைச்செய்யுள்’ எனவும் வழங்கப்படும்.
39) “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம்
படைத்த தமிழ்நாடு” எனப் போற்றியவர் – பாரதியார்.
40) சிலப்பதிகாரத்தின் ‘வழக்குரைகாதை’ மதுரைக் காண்டத்தின்.
41) “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்”
என்று கூறும் குடிமக்கள் காப்பியம் சிலப்பதிகாரம்.
42) சிலப்பதிகாரம் உணர்த்தும் முப்பெரும்
உண்மைகள்-
“அரசியல் பிழைத்தோர்க்கு
அறம் கூற்றாகும்”
“உரைசால் பத்தினியை
உயர்ந்தோர் ஏற்றுவர்”
“ஊழ்வினை உறுத்து வந்து
ஊட்டும்”
43) சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய பதினொரு வகை
ஆடல்களில் ‘குடக்கூத்து’ என்ற ஆடலும் குறிப்பிடப்படுகிறது.
44) “ஓங்கு இரும் பரப்பின் வங்க ஈட்டத்து
தொண்டியோர்” என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் சிலப்பதிகாரம்.
45) “பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்
கோடும்”
46) தமிழ்நாட்டின் எல்லையைப் பற்றி கூறும் நூல்கள் சிலப்பதிகாரம், புறநானூறு.
47) த மிழகத்தின் வடக்கெல்லையை வேங்கட மலையாகவும்
தெற்கெல்லையை குமரி முனையாகவும் குறிப்பிட்ட நூல்கள்- சிலப்பதிகாரம், புறநானூறு.
48) தமிழினத்தை ஒன்றுபடுத்தக் கூடிய இலக்கியமாக
மா.பொ.சி. கருதியது -சிலப்பதிகாரம்.
49) தமிழினத்தை ஒன்றுபடுத்தக் கூடிய இலக்கியமாக
மா.பொ.சி. கருதியது -சிலப்பதிகாரம்.
50) தமிழினத்தின் பொதுச்சொத்து என மா.பொ.சி
குறிப்பிடும் நூல் – சிலப்பதிகாரம்.
51) தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் சிலப்பதிகார
மாநாடுகள் நடத்தியவர் – மா.பொ.சி
52) “சிந்தா மணியாம் சிலப்பதிகா ரம்படைத்தான் கந்தா
மணிமே கலைபுனைந்தான் – நந்தா வளையா பதிதருவான் வாசவனுக் கீந்தான் திளையாத குண்டலகே
சிக்கும்” -திருத்தணிகையுலா.
53) சிலப்பதிகாரம் – மூவேந்தர்கள் பற்றிய செய்திகளைக் கூறுகிறது.
54) சிலப்பதிகாரம், புகார்க்காண்டத்தின இந்திரவிழா ஊரெடுத்த காதை – சிலப்பதிகாரம், புகார்க்காண்டம்.
54) சிலப்பதிகாரம் 3 காண்டங்களையும்,
(பெரும்பிரிவு), 30 காதைகளையும்{உட்பிரிவு) கொண்டது.
55) சீத்தலைச்சாத்தனார் கோவலன் கண்ணகி கதையைக்
கூறி, ‘அடிகள் நீரே அருளுக’ என்றதால் இளங்கோவடிகளும் ‘நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச்செய்யுள்‘ என சிலபதிகாரம் காப்பியத்தை படைத்தார் என்பர்.
56) சிலப்பதிகாரத்தின் சிறப்பு பெயர்கள்:
முதல் காப்பியம், குடிமக்கள் காப்பியம், முத்தமிழ்க்காப்பியம், மூவேந்தர் காப்பியம்,
தமிழ் தேசிய
உரையிடையிட்ட பாட்டுடை செய்யுள் காப்பியம்.
57) உரைப்பாட்டு மடை (உரையிடையிட்ட பாட்டுடைச்
செய்யுள்) ‘உரைப்பாட்டு மடை’ என்பது சிலப்பதிகாரத்தில் வரும்.
58) சங்க இலக்கியங்களும், சிலப்பதிகாரமும், மணிமேகலையும், பெருங்கதை ஆகிய காப்பியங்களும் -அகவற்பாவில் அமைந்துள்ளது.
59) “போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரல்
என்பன போல் மறித்துக்கை காட்ட” எனும் வரி இடம் பெற்ற நூல் சிலப்பதிகாரம்.
60) கோவலன் கொலை செய்யப்பட்ட இடம் – மதுரை.
61) கோவலனுக்கு தவறான தீர்ப்பு கொடுத்த மன்னன்
ஆரியப்படை கடந்த – நெடுஞ்செழியன்.
62) ‘ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின் இலங்குகதிர்
விடூஉம் நலங்கெழு மணிகளும்’ என்ற பாடல்வரி சிலப்பதிகாரத்தில் எந்த
காதையில் வருகின்றது ஊர்காண்காதை.
63) திருக்குறளிலும், சித்தன் என்று சிலப்பதிகாரம் நாடுகாண்
காதையிலும் வழங்கப்படுகிறார்கள்.
64) வேங்கடசாமி சிலப்பதிகார உரையாசிரியர்.
65) கண்ணகியின் காற்சிலம்பு காரணமாக வளர்ந்த
கதையாதலினால் (சிலம்பு + அதிகாரம்) சிலப்பதிகாரம் என்று பெயர் சூட்டப்பட்டது.
66) கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை, ‘தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தேறும்
சிலப்பதிகாரம்,
எனப் பாராட்டியுள்ளார்.
67) “நிறையுடைப் பத்தினிப் பெண்டிர்காள் ஈதொன்று;
பட்டேன், படாத துயரம், படுகாலை” -சிலப்பதிகாரம்.
68) சிலப்பதிகாரம் – புகார்க் காண்டம் (அரங்கேற்று காதை)
69) புகார், மதுரை,
வஞ்சிக் காண்டங்கள்
முறையே சோழ,
பாண்டிய, சேர மன்னர்களைப் பற்றியவை என்பதால் ‘மூவேந்தர்
காப்பியம்’ எனவும் அழைக்கப்படுகிறது.
70) “இறும்பூது போலும்…”-சிலப்பதிகாரம்.
71) உரோமாபுரிச் சிப்பாய்கள் பாண்டியப்
போர்படையில் இடம் பெற்றிருந்தார்கள் என்ற குறிப்பு இடம் பெற்ற நூல் – சிலப்பதிகாரம்.
எட்டுத்தொகை நூல்களில்
உள்ள பிற செய்திகள்.
பதிற்றுப்பத்து 6th – 12th
1) போர்களத்தில் புண்பட்ட வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி இடம்பெற்றுள்ள நூல் – பதிற்றுப்பத்து.
2) “நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு”. இவ்வரிகள் இடம்பெற்ற நூல் – பதிற்றுப்பத்து
3) “அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும்
பெருங்கலி வங்கம்”
4) 4) மதுரை பதிற்றுப்பத்தந்தாதி எழுதியவர் – பரஞ்சோதி முனிவர்.
5) அதற்கு பல்லவர்கள் கல்வெட்டுகளையும்; பாண்டியர்கள் செப்பேடுகளையும் அறிமுகம்
செய்தனர் (பதிற்றுப்பத்து பாடல்கள் இதற்கு முன்னோடி).
6) மெய்க்கீர்த்திகளுக்கு முன்னோடியாய் திகழும் சங்க இலக்கியம் பதிற்றுப்பத்து.
7) பதிற்றுப்பத்து என்னும் நூல் சேர அரசர்களின் கொடையை பற்றின பதிவாகவே உள்ளது.
8) ‘தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த’
9) எட்டுத்தொகை நூல்களுள் புறப்பொருள்
இலக்கியங்கள் – பதிற்றுப்பத்து, புறநானூறு.
10) பதிற்றுப்பத்தில் ஐந்தாம்பத்து பாடிக்
கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவனிடம் உம்பற்காட்டு வாரியையும், அவன் மகள் குட்டுவன் சேரலையும் பரிசிலாகப்
பெற்றவர்- பரணர்.
11) ‘ஒரு பண்டைய நிலத்தில் இருந்து சாயல்கள்
மற்றும் இணக்கங்கள்’.
12) பதிற்றுப்பத்து எட்டுத்தொகையில் அமைந்த
புறத்திணை நூல்களுள் ஒன்று.
13) சேர மன்னர்கள் பத்து பேரின் சிறப்புகளை எடுத்தியம்பும் நூல்
பதிற்றுப்பத்து.
14) பதிற்றுப்பத்து பாடலின் திணை – பாடாண் திணை.
15) பதிற்றுப்பத்தில் முதல் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை.
16) பதிற்றுப்பத்தில் ஒவ்வொரு பாடலின் பின்னும் துறை, வண்ணம்,
தூக்கு, பாடலின் பெயர் இடம் பெற்றிருக்கும்.
17) ‘நிரைய வெள்ளம்’ என்னும் தலைப்பில் இடம்
பெற்றுள்ள பதிற்றுப்பத்துப் பாடலின் பாட்டுடைத் தலைவன் நெடுஞ்சேரலாதன், ஆசிரியர் குமட்டூர்க் கண்ணனார்.
18) ‘நிறைய வெள்ளம்’ எனும் தலைப்பில் இடம்
பெற்றுள்ள பதிற்றுப்பத்துப் பாடல் – இரண்டாம் பத்தில் உள்ளது.
19) “மண்ணுடை ஞாலத்து மன்னுயிர்க்கு”
20) சேரலாதனின் நாடு காத்தச் சிறப்பையும் கொடைச்
சிறப்பையும் குமட்டூர்க் கண்ணனார் புகழ்வதாக அமைந்தது – பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்து.
21) ‘மருமக்கள் தாய் முறை’
22) இமயவர்மன் நெடுஞ்சேரலாதன் பகைநாட்டுச் செல்வங்களைக் கொண்டுவந்து தன்
நாட்டு மக்களுக்கு வழங்கிய செய்தி இடம்பெற்ற நூல் – பதிற்றுப்பத்து.
23) பதிற்றுப்பத்தில் இடம்பெற்ற சேர அரசர்களின்
பெயர்கள் புகளூர் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளதை கண்டுபிடித்தவர் – ஐராவதம் மகாதேவன்.
24) புகளூர்க் கல்வெட்டில் காணப்படும் மூன்று
தலைமுறை மன்னர்கள் முறையே பதிற்றுப்பத்தின் 7ஆவது 8ஆவது 9ஆவது பாட்டுடைத் தலைவர்கள் என்று விளக்கியிருந்தார்.
25) சேர மன்னர்களை பற்றி கூறும் நூல் – பதிற்றுப்பத்து.
பரிபாடல் 6th – 12th
1) ‘இசைப்பாடல்’ என்று அழைக்கப்படும் நூல் – பரிபாடல்.
2) பாய்மரக் கப்பலின் பாய், கயிறு ஆகியவற்றில் பழுது ஏற்படும் பொழுது அவற்றை மரப்பிசின் கொண்டு இணைத்தனர் என்று கூறும் நூல் –
பரிபாடல்.
3) “ஓவியங்கள் குறித்து அறிந்தோர்
அறியாதவர்களுக்கு விளக்கிக் கூறினர்” என்ற செய்தி இடம் பெற்றுள்ள நூல் – பரிபாடல்.
4) “இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம் துன்னுநர்
சுட்டவும் சுட்டி அறிவுறுத்தவும்”
5) “மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்”
6) தமிழ் இலக்கியத்தில் எழுத்து என்பதற்கு ஓவியம்
எனப் பொருள் இருந்ததனைக் கூறும் நூல்கள் பரிபாடல் மற்றும் குறுந்தொகை.
7) ‘பூமி’ என்ற செய்தியை கூறும் எட்டுத்தொகை நூல் – பரிபாடல்
8) எட்டுத்தொகையில் ‘அகம் புறம்’ சார்ந்த நூல் – பரிபாடல்.
9) சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல் – பரிபாடல்.
10) பரிபாடல் எவ்வாறு புகழப்படுகிறது? ஓங்குபரிபாடல் என்று.
11) பரிபாடலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை என
உரையாசிரியர்கள் கூறுகின்றனர் – 111.
12) பரிபாடலில் கிடைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை
–24
13) மதுரைத் தமிழ்ச்சங்கத்தை தமிழ்வேலி என்று கூறும் நூல் பரிபாடல்.
14) நோதிறம், பாலையாழ்,
காந்தாரம் முதலிய பண்கள் காணப்படுவது – பரிபாடல்.
பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்.
திருமுருகாற்றுப்படை
1) உலகம் திருமுருகாற்றுப்படை.
2) பத்துப்பாட்டுள் எந்தெந்த நூல்களை நக்கீரனார்
இயற்றியுள்ளார் நெடுநல்வாடையையும் திருமுருகாற்றுப்படையையும்.
3) மதுரைக் கணக்காயனார் மகன் – நக்கீரனார்.
4) இறையனார் எழுதிய களவியலுக்கு உரை கண்டவர் நக்கீரனார்.
5) “விண்பொரு நெடுவரை குறிஞ்சிக்கிழவ”
பொருநராற்றுப்படை
‘மண்ணமை முழவு’ என்று கூறும் நூல்
பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
1) சிறுபாணாற்றுப்படையின் ஆசிரியர் – நல்லூர் நத்தத்தனார்.
2) “தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை
மறுகின் மதுரை” என்ற பாடல் வரிகளை இயற்றியவர்- நல்லூர்
நத்தத்தனார் (சிறுபாணாற்றுப்படை).
3) ஏற்றுமதிப் பொருள்களில் முத்தே முதலிடம்
பெற்றது எனக் கூறும் நூல்கள் – மதுரைக் காஞ்சி,
சிறுபாணாற்றுப்படை.
4) நெய்தல் நிலத்தில் பாணர்களை வரவேற்று குழல்
மீன் கறியும் பிறவும் கொடுத்ததாகக் கூறும் நூல் சிறுபாணாற்றுப்படை.
5) வள்ளல் சிறுபாணாற்றுப்படையிலும் பெருஞ்சித்தனார் பாடல்களிலும் இடம் பெற்றுள்ளது.
6) “அலைநீர்த் தாழை அன்னம் பூப்பவும் தலைநாள்
செருந்தி தமனியம் மருட்டவும்”
7) சிறுபாணாற்றுப்படை பத்துப்பாட்டு நூல்களுள்
ஒன்று.
8) சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் நல்லியக்கோடான்.
9) சிறுபாணாற்றுப்படையில் உள்ள மொத்த அடிகள் -269
10) குதிரைகளையும், ஏனைய செல்வங்களையும் இரவலர்க்கு கொடுத்தவர்- காரி
11) நீல வண்ணக் கல்லையும் நாகம் கொடுத்த
ஆடையினையும்bஇறைவனுக்கு கொடுத்தவர் ஆய்.
12) தன்னிடம் உள்ள பொருட் செல்வத்தை இல்லையென்னாது கொடுத்தவர்- நள்ளி.
13) கடையேழு வள்ளல்களை பற்றி கூறும் நூல் சிறுபாணாற்றுப்படை.
14) கூத்தர்க்கு பரிசுகளை வழங்கியவர் – ஓரி.
15) பெற்றோர் என்ற சொல்லின் பொருள் –
பேறுபெற்றோர்.
16) சாந்தா தத் காஞ்சிபுரத்தை சேர்ந்த பெண் படைப்பாளர்.
17) சாந்தா தத் கதைகளில் வெளிப்படும் அடிப்படை
பண்பு மனிதநேயம்.
18) முல்லைக்கு தேர் தந்தவர் – பாரி.
19) சாந்தா தத்தின் இலக்கிய சிந்தனை விருது பெற்ற
சிறுகதை கோடை மழை.
20) மயிலுக்கு தனது ஆடையைத் தந்தவர் – பேகன்.
பெரும்பாணாற்றுப்படை
1) பார் – பெரும்பாணாற்றுப்படை.
2) பத்துப்பாட்டில் பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை நூல்களை இயற்றியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்.
3) பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுத்தலைவன் தொண்டைமான் இளந்திரையன்.
4) பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுத்தலைவன் தொண்டைமான் இளந்திரையன்.
முல்லைப்பாட்டு
1) கடல் நீர் ஆவியாகி, மேகம் குளிர்ந்து மழையாகப் பொழியும் என்ற
அறிவியல் செய்தி இடம்பெற்ற தமிழ் இலக்கியங்கள் முல்லைப்பாட்டு, பரிபாடல், திருக்குறள்,
கார்நாற்பது, திருப்பாவை.
2) “நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு” என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல் – முல்லைப்பாட்டு.
3) “பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை”
4) “சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர்
அலமரல் நோக்கி”
5) “கொடுங்கோற் கோவலர் பின் நின்று உய்த்தர”
6) பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று முல்லைப்பாட்டு
7) முல்லைப்பாட்டு 103 அடிகளைக் கொண்டது.
8) முல்லைப்பாட்டின் பாவகை ஆசிரியப்பா.
9) முல்லைப்பாட்டின் ஆசிரியர்
காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார்.
10) பத்துப்பாட்டு நூல்களுள் மிகச்சிறிய நூல் முல்லைப்பாட்டு.
11) பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை கொண்ட நூல் முல்லைப்பாட்டு.
12) நப்பூதனார் புகார் நகரத்தைச் சேர்ந்தவர்.
13) ஏற்றுமதிப் பொருள்களில் முத்தே முதலிடம்
பெற்றது எனக் கூறும் நூல்கள் – மதுரைக் காஞ்சி,
சிறுபாணாற்றுப்படை.
14) மதுரையில் வனவிலங்குச் சரணாலயம் இருந்த செய்தியை மதுரைக் காஞ்சியின் மூலம்
அறியலாம்.
15) “ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து அரசு பட அமர்
உழக்கி”
நெடுநல்வாடை
1) “புனையா ஓவியம் கடுப்பப் புனைவில்” என்னும் இப்பாடல் இடம்பெற்ற நூல்- நெடுநல்வாடை.
2) ஆடு முதலான பன்னிரெண்டு ராசிகளையும், விண்மீன்களையும் வரைந்த செய்தி பற்றிக் கூறும்
நூல் – நெடுநல்வாடை.
3) பத்துப்பாட்டுள் எந்தெந்த நூல்களை நக்கீரனார்
இயற்றியுள்ளார் நெடுநல்வாடையையும் திருமுருகாற்றுப்படையையும்
4) ‘நெடுநல்வாடை’ என்ற நூலை இயற்றியவர் – நக்கீரர்.
5) நக்கீரரின் தந்தை – மதுரைக் கணக்காயனார்.
6) நெடுநல்வாடை எந்த நூல்களுள் ஒன்று? பத்துப்பாட்டு.
7) நெடுநல்வாடை எந்த பாவால் இயற்றப்பட்டது – ஆசிரியப்பாவால்.
8) நெடுநல்வாடை –188 அடிகள் கொண்டது.
9) நெடுநல்வாடையின் பாட்டுடைத் தலைவன் – பாண்டியன்vநெடுஞ்செழியன்.
10) “வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம்
புதுப்பெயல் பொழிந்தன”
11) நெடுநல் வாடை – நேரிசை ஆசிரியப்பா பாவகையைச் சேர்ந்தது.
12) போரில் வெற்றி பெற்ற மன்னன் எந்த வாகைப் பூ
சூடி கொண்டாடுவர் – வாகைத் திணை.
13) நெடுநல்வாடை – கூதிர்ப்பாசறை துறை சார்ந்தது.
14) போர்மேற் சென்ற அரசன் குளிர் காலத்தில்
தங்கும் படைவீடு – கூதிர்ப்பாசறை.
குறிஞ்சிப் பாட்டு
1) குறிஞ்சிப் பாட்டில் குறிப்பிடப்படும்
பூக்களின் எண்ணிக்கை –
99.
2) குறிஞ்சிப் பாட்டின் ஆசிரியர் – கபிலர்.
3) உ.வே.சா தேடி அலைந்த ஓலைச்சுவடியில்
பூக்களுடைய பெயர்கள் தெளிவாக இருந்தன? 96
“மையல் வேழம் மடங்கலின் எதிர்தர
உய்வு இடம் அறியேம் ஆகி, ஒய்யென
திருந்து கோல் எல்வளை
கெழிப்ப, நாணு மறந்து
விதுப்புறு மனத்தேம், விரைந்து அவற் பொ ருந்தி,
சூர் உறு மஞ்ஞையின்
நடுங்க”
பட்டினப்பாலை
1) வணிகரை “நடுவு நின்ற நன்னெஞ்சினோர்” எனக்
கூறும் நூல் பட்டினப்பாலை.
2) வணிகரைப் பற்றி “கொள்வதும் மிகை கொளாது
கொடுப்பதும் குறைபடாது” எனக் கூறும் நூல் – பட்டினப்பாலை
3) பத்துப்பாட்டில் பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை நூல்களை இயற்றியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்.
4) பூம்புகார் துறைமுகத்திலிருந்து கப்பல்கள்
மூலம் பொருள்கள் ஏற்றுமதியும், இறக்குமதியும்
செய்யப்பட்டன என்பதை விரிவாக விளக்குவது-பட்டினப்பாலை.
5) பூம்புகார் பற்றிய செய்திகள் சிலப்பதிகாரம், பட்டினப்பாலை ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளன.
6) “புகார் நகரத்தில் நிறுத்தப்பட்ட நாவாய்கள்
அலைகளால் அலைப்புண்டு கட்டுத்தறியில் கட்டப்பட்ட யானை அசைவதுபோல அசைந்தன; அவற்றின் உச்சியில் கொடிகள் அசைந்து ஆடின”
எனக் கூறும் நூல் – பட்டினப்பாலை.
7) பழந்தமிழகத்தின் வணிகப் பொருள்களைப் பற்றிய
குறிப்புகள் பட்டினப்பாலை நூலில் காணப்படுகின்றன.
8) பண்டைய காலத்து வாணிகப் பொருள்கள் துறைமுக
நகரங்களிலிருந்து ஏற்றுமதியாகின’ எனக் கூறும் நூல் பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி.
9) “நீரின் புரவியும் வந்த நிமிர்பரிப் காலின்
வந்த கருங்கறி மூடையும்” என்ற பாடல்வரியை கொண்டுள்ள நூல் – பட்டினப்பாலை.
10) சங்க காலத்தில் குதிரை இறக்குமதி செய்ததை
கூறும் நூல் பட்டினப்பாலை.
11) “நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்”
12) “வான் முகந்த நீர் மலைப் பொழியவும்”
13) வெளிநாடுகளில் இருந்து வந்த பொருள்களுக்கு
சுங்கம் வசூலித்த பின் அவற்றின் மீது புலிச்சின்னம் பொறித்த செய்தியைக் கூறும்
நூல் – பட்டினப்பாலை.
மலைபடுகடாம்
(கூத்தராற்றுப்படை)
1) பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம்.
2) மலைபடுகடாம் வேறுபெயர் கூத்தராற்றுப்படை.
3) மலைபடுகடாம் நூலை இயற்றியவர் – இரணிய
முட்டத்துப் பெருங்கௌசிகனார்.
4) பரிசுபெற செல்லும் கூத்தனை வள்ளலிடம் பரிசு
பெற்ற கூத்தன் ஆற்றுப்படுத்தும் நூல் – மலைபடுகடாம்.
5). ‘மலையை யானையாக’ உருவகம் செய்து மழையில் எழும்
பலவகை ஓசைகளை அதன் ‘மதம்’ என்று விளக்குவதால் ‘மலைபடுகடாம்’ எனப் பெயர் பெற்றது.
6) மலைபடுகடாம் என்ற நூலின் பாட்டுடைத் தலைவன் – நன்னன்.
7) என்னும் குறுநில மன்னன் மலைபடுகடாம் நூலில்
உள்ள அடிகள் – 583.
8) “கன்று எரி ஒள் இணர் கடும்பொடு “
9)“நல்லசைக் கடாம்புனை நன்னன் வெற்பில்
வெல்புக ழனைத்தும்
மேம்படத் தங்கோன்
வாகையுங் குரங்கும்
விசையமுந் தீட்டிய
அடல்புனை நெடுவேல்
ஆட்கொண்ட தேவன்”
பரிபாடல்
1) ‘இசைப்பாடல்’ என்று அழைக்கப்படும் நூல் – பரிபாடல்.
2) பாய்மரக் கப்பலின் பாய், கயிறு ஆகியவற்றில் பழுது ஏற்படும் பொழுது
அவற்றை மரப்பிசின் கொண்டு இணைத்தனர் என்று கூறும் நூல் – பரிபாடல்.
3) ஓவியங்கள் குறித்து அறிந்தோர்
அறியாதவர்களுக்கு விளக்கிக் கூறினர்” என்ற செய்தி இடம் பெற்றுள்ள நூல் – பரிபாடல்.
4) “இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம் துன்னுநர்
சுட்டவும் சுட்டி அறிவுறுத்தவும்”
5) “மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்”
6) தமிழ் இலக்கியத்தில் எழுத்து என்பதற்கு ஓவியம்
எனப் பொருள் இருந்ததனைக் கூறும் நூல்கள் பரிபாடல் மற்றும் குறுந்தொகை.
7) ‘பூமி’ என்ற செய்தியை கூறும் எட்டுத்தொகை நூல் – பரிபாடல்
8) எட்டுத்தொகையில் ‘அகம் புறம்’ சார்ந்த நூல் – பரிபாடல்.
9) சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல் – பரிபாடல்.
10) பரிபாடல் எவ்வாறு புகழப்படுகிறது? ஓங்குபரிபாடல் என்று.
11) பரிபாடலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை என உரையாசிரியர்கள் கூறுகின்றனர் – 111.
12) பரிபாடலில் கிடைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை
–24
13) மதுரைத் தமிழ்ச்சங்கத்தை தமிழ்வேலி என்று கூறும் நூல் பரிபாடல்.
14) நோதிறம், பாலையாழ்,
காந்தாரம் முதலிய பண்கள் காணப்படுவது – பரிபாடல்
பதிற்றுப்பத்து
1) போர்களத்தில் புண்பட்ட வீரர் ஒருவரின் காயத்தை
வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி இடம்பெற்றுள்ள நூல் – பதிற்றுப்பத்து.
2) “நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த
வடு”. இவ்வரிகள்
இடம்பெற்ற நூல் – பதிற்றுப்பத்து
3) “அருங்கலம் தரீஇயர் நீர்மிசை
நிவக்கும் பெருங்கலி
வங்கம்” எனும்
பாடல் இடம் பெற்றுள்ள நூல் – பதிற்றுபத்து.
4) மதுரை பதிற்றுப்பத்தந்தாதி எழுதியவர் – பரஞ்சோதி முனிவர்.
5) அதற்கு பல்லவர்கள் கல்வெட்டுகளையும்; பாண்டியர்கள் செப்பேடுகளையும் அறிமுகம் செய்தனர்
(பதிற்றுப்பத்து பாடல்கள் இதற்கு முன்னோடி)
6) மெய்க்கீர்த்திகளுக்கு முன்னோடியாய் திகழும் சங்க
இலக்கியம் பதிற்றுப்பத்து.
7) பதிற்றுப்பத்து என்னும் நூல் சேர அரசர்களின் கொடையை
பற்றின பதிவாகவே உள்ளது.
8) ‘தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த’
9) எட்டுத்தொகை நூல்களுள் புறப்பொருள் இலக்கியங்கள் – பதிற்றுப்பத்து, புறநானூறு.
10) பதிற்றுப்பத்தில் ஐந்தாம்பத்து பாடிக் கடல்பிறக்
கோட்டிய செங்குட்டுவனிடம் உம்பற்காட்டு வாரியையும், அவன் மகள் குட்டுவன் சேரலையும் பரிசிலாகப் பெற்றவர்-
பரணர்.
11) ‘ஒரு பண்டைய நிலத்தில் இருந்து
சாயல்கள் மற்றும் இணக்கங்கள்’.
12) பதிற்றுப்பத்து எட்டுத்தொகையில் அமைந்த புறத்திணை
நூல்களுள் ஒன்று.
13) சேர மன்னர்கள் பத்து பேரின் சிறப்புகளை
எடுத்தியம்பும் நூல் பதிற்றுப்பத்து.
14) பதிற்றுப்பத்து பாடலின் திணை – பாடாண் திணை.
15) பதிற்றுப்பத்தில் முதல் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை.
16) பதிற்றுப்பத்தில் ஒவ்வொரு பாடலின் பின்னும் துறை, வண்ணம், தூக்கு, பாடலின் பெயர் இடம் பெற்றிருக்கும்.
17) ‘நிரைய வெள்ளம்’ என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ள
பதிற்றுப்பத்துப் பாடலின் பாட்டுடைத் தலைவன் நெடுஞ்சேரலாதன், ஆசிரியர் குமட்டூர்க்
கண்ணனார்.
18) ‘நிறைய வெள்ளம்’ எனும் தலைப்பில் இடம் பெற்றுள்ள
பதிற்றுப்பத்துப் பாடல் – இரண்டாம்
பத்தில் உள்ளது.
19) “மண்ணுடை ஞாலத்து மன்னுயிர்க்கு”
20) சேரலாதனின் நாடு காத்தச் சிறப்பையும் கொடைச்
சிறப்பையும் குமட்டூர்க் கண்ணனார் புகழ்வதாக அமைந்தது – பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்து.
21) ‘மருமக்கள் தாய் முறை’ பற்றி குறிப்பிடும் நூல் –
பதிற்றுப்பத்து.
22) இமயவர்மன் நெடுஞ்சேரலாதன் பகைநாட்டுச் செல்வங்களைக்
கொண்டுவந்து தன் நாட்டு மக்களுக்கு வழங்கிய செய்தி இடம்பெற்ற நூல் – பதிற்றுப்பத்து
23) பதிற்றுப்பத்தில் இடம்பெற்ற சேர அரசர்களின் பெயர்கள்
புகளூர் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளதை கண்டுபிடித்தவர் – ஐராவதம் மகாதேவன்
24) புகளூர்க் கல்வெட்டில் காணப்படும் மூன்று தலைமுறை
மன்னர்கள் முறையே பதிற்றுப்பத்தின் 7ஆவது
8ஆவது 9ஆவது
பாட்டுடைத் தலைவர்கள் என்று விளக்கியிருந்தார்.
25) சேர மன்னர்களை பற்றி கூறும் நூல் – பதிற்றுப்பத்து.
“கொற்கைக் கோமாள் கொற்கையம் பெருந்துறை”
ஐந்து
நிலத்திற்கும் பாடல்கள் இயற்றியுள்ள சங்க இலக்கியம் ஐங்குறுநூறு
ஐங்குறு
நூலின் அடி 3 – 6
குறிஞ்சித்திணை
பாடியவர் – கபிலர்
முல்லைத்திணை பாடியவர் – பேயனார்
மருதத்திணை பாடியவர் – ஓரம்போகியார்
நெய்தல் திணை பாடியவர் – அம்மூவனார்
பாலைத்திணை பாடியவர் – ஓதலாந்தையார்
ஐங்குறுநூற்றில்
கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம்
பாடிய பெருந்தேவனார்.
ஐங்குறுநூற்றை
தொகுத்தவர் புலத்துறை
முற்றிய கூடலூர்க்கிழார்.
ஐங்குறுநூற்றை
தொகுப்பித்தவர் சேரலிரும்பொறை
யானைக்கட்சேய் மாந்தரஞ்.
ஐந்து
+ குறுமை + நூறு = ஐங்குறுநூறு
‘சிலம்பு கழி’ பற்றிய
செய்தி ஐங்குறுநூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்
எம்மனை வதுவை நல்மணம் கழிக”
இளமகவு
நிலை குடும்பங்களைக் பற்றிக் குறிப்பிடும் நூல் – ஐங்குறுநூறு.
“மறியிடைப் படுத்த மாள்பிணை போல்”
காயா, கொன்றை, நெய்தல், முல்லை,
போதவிழ் தளவமொடு பிடவலர்ந்து கவினிப்
பூவணி கொண்டன்றால் புறவே
பேரமர்க் கண்ணி ஆடுகம், விரைந்தே.
– பேயனார்
கலித்தொகை
வேளாண்மை – கலித்தொகை
கலித்தொகையில் மருதத்திணையைப் பாடியவர் – இளநாகனார்.
கலித்தொகையில் மருதத்திணையில் உள்ள பாடல்களின்
எண்ணிக்கை – 35.
மருதத்திணை பாடுவதில் வல்லவர் – மருதன் இளநாகனார்.
இயற்கை ஓவியம் – பத்துப்பாட்டு.
இயற்கை இன்பக்கலம் கலித்தொகை.
கலித்தொகை – எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
பாவகை : கலிப்பா. கலிப்பா துள்ளல் ஓசையை உடையது
கலித்தொகை – 5 பிரிவுகளை உடையது.
“ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்”
– கலித்தொகை ( நல்லந்துவனார் ).
‘ஏறுதழுவுதல்’ பற்றி குறிப்பிடும் சங்க இலக்கியம் கலித்தொகை.
‘ஏறு தழுவுதல்’ பற்றி குறிப்பிடும் இலக்கண நூல் – புறப்பொருள் வெண்டாமலை
“நீறு எடுப்பவை, நிலம் சாடுபவை,
மாறுஏற்றுச் சிலைப்பவை, மண்டிப் பாய்பவையாய்”
“எழுந்தது துகள்; ஏற்றனர் மார்பு;
கவிழ்ந்தன மருப்பு; கலங்கினர் பலர்”.
கலித்தொகையில் பாலைத் திணையைப் பாடியதால்
கடுங்கோவிற்கு பெயர் பாலை பாடிய பெருங்கடுங்கோ.
“கற்றறிந்தோர் ஏத்தும் கலி”
‘ஈயாது வாழ்தலை விட உயிரை விட்டுவிடுதல்
மேலானது’
“பிறர் நோயும் தம் நோய்போல் போற்றி அறன்அறிதல்
சான்றவர்க்கு எல்லாம் கடன்”
‘பாரதநாடு பார்க்கெலாம் திலகம்’
நாடக பங்கில் அமைந்த நூல் – கலித்தொகை.
இசையோடு படுவதற்கு ஏற்ற நூல் கலித்தொகை.
கலித்தொகையில் மொத்தம் உள்ள பாடல்கள் –150
“காழ்வரை நில்லாக் கடுங்களிற்று ஒருத்தல்
யாழ்வரைத் தங்கி யாங்கு”
“நெஞ்சிலார் தோய்தற்கு அரிய உயிர்துறந்து
நைவாரா ஆய மகள் தோள் “
“கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆயமகள்”
“என் மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும்”
“உறுபுலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக்
கறுவு கொண்டு, அதன் முதல் குத்திய மதயானை”
குறுந்தொகை
பாம்பு, முதலை,
மீன், செய் – குறுந்தொகை
‘பாலொடு வந்து கூழொடு பெயரும்’
நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்;
பிடி பசி களைஇய பெருங்
கை வேழம்
மென் சினை யாஅம்
பொளிக்கும்
அன்பின-தோழி!-அவர்
சென்ற ஆறே.
– பெருங்கடுங்கோ
அம்ம வாழி தோழி நம்மூர்ப்
பிரிந்தோர்ப்
புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ
தண்டுடைக் கையர்
வெண்டலைச் சிதவலர்
நன்றுநன் றென்னு
மாக்களோ
டின்றுபெரி தென்னும்
ஆங்கண தவையே.
– வெள்ளிவீதியார்
தமிழர் வாழ்வின் அகப்பொருள் நிகழ்வுகளைக்
கவிதையாக்கிக் கூறுவது – குறுந்தொகை
‘நல்ல’ என்னும் அடைமொழி கொண்ட தொகை நூல் குறுந்தொகை
குறுந்தொகையில் உள்ள பாடல்கள் – 401
குறுந்தொகையின் அடி எல்லை 4–8
குறுந்தொகையைத் தொகுத்தவர்- பூரிக்கோ
குறுந்தொகையை முதன் முதலில் பதிப்பித்தவர் – சௌரி பெருமாள் அரங்கனார்.
குறுந்தொகையில் கடவுள் வாழ்த்துப் பாடலை
பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார்.
“உணவு உண்ண யாரேனும் உள்ளீர்களா” என்று கேட்கும் வழக்கம் இருந்ததை, கூறும் நூல் – குறுந்தொகை.
“பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர்
உளீரோ”
‘செம்புலப் பெயல் தீர்போல’
‘வினையே ஆடவர்க்குயிர்’
“தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவவர்” – குறுந்தொகை (வெள்ளிவீதியார்).
உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள்
காட்டப்பட்ட நூல் – குறுந்தொகை
முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூல் – குறுந்தொகை.
“நன்று நன்றென்னும் மாக்களோடு இன்று பெரிது
என்னும் ஆங்கண தவையே”
அகத்திணை இலக்கணத்தின் இலக்கியமாய் விளங்குவது குறுந்தொகை.
தாய்வழி சொத்து அனைத்தும் பெண்களுக்கும்
வழங்கப்பட்டது குறுந்தொகையில் கூறப்பட்டுள்ளது.
“மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே”
குறுமை + தொகை குறுந்தொகை
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
அடிவரையறை 4 – 8
நன்மை
+ திணை / நல் + திணை = நற்றிணை
எட்டுத்தொகை
நூல்களுள் முதலாவதாக வைத்து போற்றப்படும் நூல் நற்றிணை.
நற்றிணை
பாடல்களின் எண்ணிக்கை – 400
நற்றிணை
பாடினோர் –275 பேர்
‘நல்’, ‘நல்ல
திணை’ என்ற
அடைமொழி கொடுத்துப் போற்றப்படும் நூல் நற்றிணை.
நற்றிணையை
தொகுப்பித்தவன் – பன்னாட்டு
தந்த பாண்டியன் மாறன் வழுதி
நற்றிணையின்
கடவுள் வாழ்த்து பாடலைப் பாடியவர் பாரதம்
பாடிய பெருந்தேவனார்
நற்றிணையில்
110வது பாடலை மட்டும் பாடியவர் போதனார் (சங்ககாலப் புலவர்)
110 வது பாடல் – ‘வளமையும்
வறுமையும்’ வாழ்க்கையென்னும் நாணயத்தின் இருபக்கங்களாகும்.
நற்றிணை
எந்தத் திணை வகை நூல்?- அகத்திணை
நூல்
நற்றிணை
நற்றிணை பாடல்களில் உள்ள அடிவரையறை – 9-12
“கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிமுதிர்
பரதவர்” என்ற
(அறுவை மருத்துவம் பற்றி) வரிகள் இடம்பெற்ற நூல் நற்றிணை.
சுறா
மீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை நரம்பினால் தைத்த செய்தியை கூறும் நூல் – நற்றிணை
“தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து
பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சாற்றி உமணர் போகலும்”
“முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை”
. ‘நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து
வரவேற்று உணவிடும் நல்லியல்பு குடும்ப தலைவிக்கு உண்டு’ எனக் கூறும் நூல் – நற்றிணை
“அல்லில் ஆயினும், விருந்து
வரின்”
“நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் செல்வம்
அன்று தன் செய்வினைப் பயனே” – மிளைகிழான் நல்வேட்டனார்
(நற்றிணை)
‘அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்’ எனும் பாடல் நற்றிணையில்
எத்தனையாவது பாடல்? 210
மிளை என்னும் ஊரில் பிறந்தவராதலால், மிளைகிழாள் நல்வேட்டனார் என்னும் பெயர் பெற்றார்.
மிளைகிழான்
நல்வேட்டனார் ஐந்திணைகளைப் பற்றியும் பாடல் இயற்றியுள்ளார்.
மிளைகிழான்
நல்வேட்டனார் நற்றிணையில் நான்கு பாடல்களும் , குறுந்தொகையில் ஒன்றுமாக ஐந்து பாடல்கள்
இயற்றியுள்ளார். இவர் சங்ககாலத்தவர்.
அரிகால்
மாறிய அங்கண் அகல்வயல்
மறுகால் உழுத ஈரச் செறுவின்
வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனொடு பெயரும் யாணர் ஊர
நெடிய மொழிதலுங் கடிய ஊர்தலும்
செல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே
சான்றோர் செல்வம் என்பது
சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும்
பண்பின்
மென்கண் செல்வஞ்
செல்வமென் பதுவே.
‘பிழையா நன்மொழி’ என்று
வாய்மையைப் குறிப்பிடுவது நற்றிணை
‘பொய் மொழிக் கொடுஞ்சொல்’ என்று குறிப்பிடுவது – நற்றிணை
அகப்பொருள்
இலக்கியங்கள்- நற்றிணை, குறுந்தொகை,
“நீர்படு பசுங்கலம்”
“புணரின் புணராது பொருளே பொருள்வயின்
பிரியின் புணராது புணர்வே”
நற்றிணை
நூலின் உரையாசிரியர் பின்னத்தூர்
நாராயணசாமி
ஔவையார்
பாடியதாக நற்றிணையில் 7.
“முருகு உறழ் முன்பொடு”…
பிரசம்
கலந்த வெண்சுவைத் தீம்பால்
விரிகதிர்ப் பொற்கலத்து ஒருகை ஏந்திப்
புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்
உண்என்று ஒக்குபு புடைப்பத் தெண்ணீர்
முத்தரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று
அரிநரைக் கூந்தற் செம்முது செவிலியர்
பரீஇ மெலிந்து ஒழியப் பந்தர் ஓடி
ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந்தனள் கொல்
கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்
ஒழுகுநீர் நுணங்கறல் போலப்
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே
– போதானார்
புறநானூறு
-புறம்+நான்கு+நூறு
புறநானூற்றில்
உள்ள பாடல்களின் எண்ணிக்கை – 400
புறநானூற்று
பாடலின் பா வாகை – அகவற்பா
‘புறம்’, ‘புறம்பாட்டு’ என்றும் வழங்கப்படும் நூல் –
புறநானூறு
தமிழர்களின்
வரலாறு, பண்பாடு
ஆகியவற்றை அறிய உதவும் நூலாகத் திகழ்வது – புறநானூறு
“தமக்கென முயலா நோன்றாள் – பிறர்க்கென முயலுநர்
உண்மையானே”
காவற்பெண்டு பாடிய ஒரே ஒரு பாடல்
புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது.
பண்டைக்காலத்
தமிழ் மக்களின் வாழ்க்கைமுறை, நாகரிகம், பண்பாடு, வீரம்
முதலியவற்றை வெளிப்படுத்தும் நூலாக புறநானூறு விளங்குகிறது.
“நெல்லும் உயிரன்றே நீரும்உயி ரன்றே”
“ஈன்று புறந்தருதல் என்தலைக் கடளே”
“களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே”
“கலம் தந்த பொற்பரிசும் கழித் தோணியால் கரை
சேரக்குந்து”
“நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக”
‘தமிழ்கெழு கூடல்”
“செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனில் தப்புந
பலவே”
ஆமூர்
மல்லனுக்கும், நற்கிள்ளிக்கும்
இடையே நடைபெற்ற வீர
விளையாட்டு பற்றிக் கூறும் நூல் புறநானூறு
“ஓவத்தனைய இடனுடை வனப்பு”
பாய்மரக்கப்பல்களில்
பயன்பட்டது கூடப் பாய் தான் என்று கூறும் நூல் – புறாநானூறு.
“கூம்பொடு மீப்பாய் களையாது”
“நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கி”
“கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம்”
“கலந்தந்த பொற்பரிசம்
கழித்தோணியால் கரைசேர்க்குந்து”
“மீனோடு நெற்குவைஇ மிசையம்பியின் மனைமறுக்குந்து”
“பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்”
“வலவன் ஏவா வானவூர்தி”
“உணவெனப்படுவது நிலத்தொடு நீரே”
ஞாயிற்றைச்
சுற்றியுள்ள பாதையை ‘ஞாயிற்று
வட்டம்’ எனக்
குறிப்பிடும் நூல் புறநானூறு
“காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு
மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம்
கடல் அள்ள நாடெல்லாம் நீர்நாடு தனை ஒவ்வா நலமெல்லாம்”, சேக்கிழார் – புறநானூறு
.”பண்டைய வேந்தர்களின் வீரம், வெற்றி, கொடை
குறித்தும் குறுநில மன்னர்கள், புலவர்கள், சான்றோர்கள் உள்ளிட்டவர்களின் பெருமைகளைப் பற்றியும்
அன்றைய மக்களின் புறவாழ்க்கையைப் பற்றியும்” கூறும் நூல் – புறநானூறு
உண்டி
கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! – புறநானூறு, மணிமேகலை
உண்பது
நாழி உடுப்பவை இரண்டே!
யாதும்
ஊரே யாவரும் கேளிர்!
சான்றோன்
ஆக்குதல் தந்தைக்குக் கடனே!
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!
உற்றுழி
உதவியும் உறுபொருள் கொடுத்தும்,
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே!
“நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் உண்டி
கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! உண்டி முதற்றே உணவின் பிண்டம்; உணவெனப் படுவது நிலத்தொடு நீரே; நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினோரே!”,
பண்டையத்
தமிழர்களின் அரிய வரலாற்றுச் செய்திகள் அடங்கிய பண்பாட்டுக் கருவூலமாகத் திகழ்வது
– புறநானூறு
“நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் உண்டி
கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! உண்டி முதற்றே உணவின் பிண்டம்; உணவெனப் படுவது நிலத்தொடு நீரே; நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினோரே!” – புறநானூறு.
‘ஏறு தழுவுதல்’ பற்றி குறிப்பிடும் இலக்கண நூல் – புறப்பொருள் வெண்டாமலை
தமிழ்
நாகரீகம் மற்றும் பண்பாடு பற்றி கூறும் நூல் – புறநானூறு
புறநானூறு
எவ்வகை நூலாகும்? எட்டுத்தொகை
நூல்களுள் ஒன்று
“நான்கு பக்கமும் நீர் நிரம்பிய கழனிகள், அதன் நடுவில் தனியாக மதிலோடு கூடிய மருதநில அரசனது
கோட்டை; அக்கோட்டையின்
தோற்றமானது நடுக்கடலில் செல்லும் கப்பலுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது எனக்
கூறும் நூல் புறநானூறு.
கரிகாலனின்
முன்னோர் காற்றின் போக்கை அறிந்து கலம் செலுத்தினர் என்பதை புறநானூறு நூல் கூறுகின்றது.
“புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வான
ஊர்தி”
புறநானூற்றை
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஜி.யு.போப்
“பூட்கையில்லோன் யாக்கை போல”
“உண்டாலம்ம இவ்வுலகம்” என்னும்
பண்பினைக் கூறுவது- புறப்பாட்டு/புறநானூறு
(கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி)
“இமயத்துக் கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டுத் தீத
யாக்கையொடு மாய்தல் தவத்திலையே”
“இமயத் தீண்டி இன்குரல் பயிற்றிக் கொண்டல் மாமழை
பொழிந்த நுண்பல் துளியினும் வாழிய பலவே” – புறநாநூறு
“நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி வளி தொழில்ஆண்ட உரவோன்
மருக!”
“களிஇயல் யானைக் கரிகால் வளவ!”
விருந்தினருக்கு
தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை விருந்தாக படைத்த
செய்தி இடம் பெற்ற நூல்-புறநானூறு.
“குரல்உணங்கு விதைத் தினை உரல்வாய்ப் பெய்து”
“நேற்று வந்த விருந்தினரைப் பேணுவதற்கு பொருள்
தேவைப்பட்டதால் இரும்பினால் செய்த பழைய வாளை அடகு வைத்தான் தலைவன்” என்ற செய்தி
இடம்பெற்ற நூல் புறநானூறு
“நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன்”
“கல்வியைப் போற்றும் காலம்” – புறநானூறு
“மாசற விசித்த வார்புறு வள்பின்…”–புறநானூறு
“நீரற வறியாக் கரகத்து”
“சான்றோர் என்றும் சான்றோர் பக்கமே இருப்பர், சான்றாண்மை இல்லாதவர் தீயவர் பக்கமே சேருவர்”
தமிழரின்
வரலாற்றை அறியவும், பண்பாட்டு
உயர்வை உணரவும் பெரிதும் உதவும் நூல் – புறநானூறு
“பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய மாமலை” எனும் பாடல் புறநானூற்றில்
எத்தனையாவது பாடல்? 218
“களிறு எரிந்து பெயர்தல் காளைக்கு கடளே”
தமிழகத்தின்
வடக்கெல்லையை வேங்கட மலையாகவும் தெற்கெல்லையை குமரி முனையாகவும் குறிப்பிட்ட
நூல்கள்- சிலப்பதிகாரம், புறநானூறு
“எறியார் எறிதல் யாவணது எறிந்தோர் எதிர்சென்று
எறிதலும் செல்லான்” என்னும்
பாடல் இடம் பெற்ற நூல்-புறநானூறு{ஆவூர்
மூலங்கிழார்)
“செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே,
தப்புந பலவே”
“இன்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும்
அறிவிலை வணிகன் ஆஅய் அல்லன்”
‘அறம் அறக் கண்ட நெறிமான் அவையம்’
தான்
பெற்றதைப் பிறருக்கு வழங்கும் பெருஞ்சித்திரனார் பெருமையைக் கூறுவது-புறநானூறு
“கூர்வேல் குவைஇய மொய்ம்பின் தேர்வண் பாரிதண் பறம்பு
நாடே!”
‘வலவன் ஏவா வானூர்தி’
‘வறிது நிலைஇய காயமும்’
‘எதற்கும் பயன்படாத நிலம் களர்நிலம்’ கூறும் நூல் புறநானூறு.
“அதூஉம் சாலும் நற்றமிழ் முழுதறிதல்”
கடலுள்
மாய்ந்த இளம் பெருவழுதி இயற்றியுள்ள பாடல்கள் புறநானூற்றில் ஒரு பாடல், பரிபாடலில் ஒரு பாடல்
1894 -இல் புறநானூற்றை முதன் முதலாக
பதிப்பித்து வெளியிட்டவர் உ.வே.சா
The four hundred songs of war and wisdom: An anthology of
poems from classical tamil, the purananuru புறநானூற்றை ஜார்ஜ்.எல்.ஹார்ட் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
Extracts from from purananooru & purapporul venbamalai எனும்
தலைப்பில் புறநானூற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஜி.யு. போப்
எட்டுத்தொகை
நூல்களுள் புறப்பொருள் இலக்கியங்கள் – பதிற்றுப்பத்து, புறநானூறு
புறநானூற்றுத்
தொகுதியின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் –பாரதம்பாடிய பெருந்தேவனார்
இந்நூலைத்
தொகுத்தவர், தொகுப்பித்தவர்
பெயர்கள் கிடைக்கவில்லை.
புறநானூற்றின்கண் 11 புறத்திணைகளும் 65 துறைகளும் எடுத்தாளப்பட்டுள்ளன.
‘அறுகுளத் துகுத்து மகல்வயற் பொழிந்தும் உறுமிடத்
துதவா துவர்நில மூட்டியும்’
நீண்டநாள்
வாழச் செய்யும் அமிழ்தத்தை ஒத்ததோர் அரிய நெல்லிக்கனியைத் தாள் உண்ணாது அதியமாள்
ஒடி வைக்கு ஈந்து மகிழ்ந்த
செய்தியைக் கூறும் நூல்- புறநானூறு
ஔவையார்
பாடிய பாடல்கள் இடம்பெற்றுள்ள நூல்- புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை
அதியமானின்
தூதராக ஒடிவை சென்றதைப் புறநானூறு கூறுகிறது.
“செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞா யிற்றுப் பரிப்பும்
பரிப்பு சூழ்ந்தமண் டிலமும்”
“வளி திரிதரு திசையும்
வறிது நிலை இய காயமும்” என்ற புறநானூற்றுப் பாடலின் ஆசிரியர் – உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
“புகாஅர்ப் புகுந்த பெருங்கலத் தகாஅர்”
வானியல்
பற்றிக் கணிப்பவர்கள் அன்றே இருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கும் பாடல்
இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு
”உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும், பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே!”
“இடுக வொன்றோ, சடுகவொன்றோ
படுவழிப் படுக. இப்புகழ் வெய்யோன் தலையே”
“முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர் யாமும் பாரியும்
உளமே”
“படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக் கடாஅ யானைக் கலிமான்
பேசு”
‘நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை’
‘புக்கில்’ என்ற
சொல் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது.
“சிறுவர்தாயே பேரிற் பெண்டே”
பற்று
உண்டாவதற்குக் காரணமாக இருந்த நூல்களுள் இப்புறநானூறும் ஒன்றாகும்.
ஔவையார்
பாடியதாக அகநானூற்றில் 4, குறுந்தொகையில்
15, நற்றிணையில் 7, புறநானூற்றில்
33 என 59 பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.
“போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ;”
“இன்னாது உற்ற அறனில் கூற்றே!”
“உறுதுப்பு அஞ்சாது,
உடல்சினம் செருக்கிச் சிறுசொல் சொல்லிய சினங்கெழு
வேந்தரை அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமொடு ஒருங்கு அகப்படேஎன் ஆயின்”
“பலர் துஞ்சவும் தான் துஞ்சான்”
“காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே”
வான்
உட்கும் வடி
நீண் மதில்
மல்லல் மூதூர் வய வேந்தே!
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்
ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி,
ஒருநீ ஆகல் வேண்டினும், சிறந்த
நல்லிசை நிறுத்தல் வேண்டினும், மற்று
அதன் தகுதிகேள் இனி மிகுதிஆள!
நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப்படுவது நிலத்தொடு நீரே
நீரும் நிலமும் புணரியோர்
ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே!
வித்தி வான் நோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்பிற்று ஆயினும் நண்ணி ஆளும்
இறைவன் தாட்கு உதவாதே அதனால்
அடுபோர்ச் செழிய இகழாது வல்லை
நிலம் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம! இவண்
தட்டோரே!
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே!
சிற்றில்
நற்றூண் பற்றிநின் மகன்
யாண்டு ளனோவென வினவுதி; என்மகன்
யாண்டுள னாயினும் அறியேன்; ஓரும்
புலிசேர்ந் துபோகிய கல்லளை போல,
ஈன்ற வயிறோ விதுவே;
தோன்றுவான் மாதோ போர்க்களத்
தானே !
– காவற்பண்டு
“உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே;
முனிவிலர்;
துஞ்சலும் இலர்; பிறர்
அஞ்சுவது அஞ்சிப்
புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனைய ராகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.”
‘நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்
கொடுத்தோரே
உண்டி முதற்றே
உணவின் பிண்டம்
உணவு எனப்படுவது நிலத்தொடு
நீரே
நீரும் நிலனும் புணரியோர்
ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி
னோரே.
யாதும்
ஊரே; யாவரும்
கேளிர்;
தீதும் நன்றும் பிறர்
தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன;
சாதலும் புதுவது
அன்றே; வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணை போல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது
திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும்
இலமே.
அகநானூறு
பெருங்கடல் முகந்த இருங்கிளைக் கொண்மூ
இருண்டுயர் விசும்பின்
வலனேர்பு வளைஇப்
போர்ப்புறு முரசின்
இரங்கி முறைபுரிந்து
அறனெறி பிழையாத் திறனறி
மன்னர்
அருஞ்சமத் தெதிர்ந்த பெருஞ்செய் ஆடவர்
கழித்தெறி வாளின்
நளிப்பன விளங்கும்
மின்னுடைக் கருவியை ஆகி
நாளும்
கொன்னே செய்தியோ அரவம்
பொன்னென
மலர்ந்த வேங்கை
மலிதொடர் அடைச்சிப்
பொலிந்த ஆயமொடு காண்டக
இயலித்
தழலை வாங்கியும் தட்டை 1யோப்பியும்
அழலேர் செயலை அந்தழை 2அசைஇயும்
குறமகள் காக்கும் ஏனல்
புறமும் தருதியோ வாழிய மழையே.
கோடை-அகநானூறு
மருந்து- அகநானூறு
‘பொன்னொடு வந்து கறியொடு பெயரும்’ என்னும் வரி இடம்பெற்ற நூல் – அகநானூறு.
புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது கடல்.
“உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் மருதன் இளநாகனார்.
“உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்” பெற்றுள்ள நூல் அகநானூறு எனும் பாடல் இடம் பெற்றுள்ளது.
“கொற்கையில் பெருந்துறை முத்து” முத்துக்களைப் பற்றிக் கூறும் நூல் – அகநானூறு.
“நெல்லும் உப்பும் நேரே ஊரீர்” எனும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் – அகநானூறு.
யவனர்கள் பொன்னை சுமந்து வந்து அதற்கு ஈடாக
மிளகை ஏற்றிச் சென்றார்கள் எனக் கூறும் நூல் – அகநானூறு.
“பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி”
“கறங்கு இசை விழவின் உறந்தை”
“கடும் பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை
திருமாவியல் நகர்க் கருவூர் முள் துறை”
“வெல்வேல் கவுரியர் தொன்முது கோடி”
“கோழிலை வாழைக் கோள் முதிர் பெருங் குலை
ஊழுறு தீம் கனி, உண்ணுநர்த் தடுத்த”
அகம் + நான்கு + நூறு = அகநானூறு
அகநானூற்றில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை – 400
பாலை – 200
குறிஞ்சி – 80
முல்லை – 40
மருதம் – 40
நெய்தல் – 40
மொத்தம் = 400
பாடல் பாடியோர் – 145
மூன்று பிரிவுகளை கொண்டது
1..களிற்றியானைநிரை – 120
2. மணிமிடைபவளம் – 180
3. நித்திலக்கோவை – 100
3 அடிச் சிறுமையும் 31 அடிப் பெருமையுங் கொண்ட அகப்பொருள் சார்ந்த 400 அகவற்பாக்களால் தொகுக்கப்பெற்ற தொகை நூலாகும்.
தொகுத்தவர் – மதுரை உப்பூரிகுடிகிழார்மகனார்
உருத்திரசன்மர்.
தொகுப்பித்தவர் – பாண்டியன் உக்கிரப்பெருவழுதி.
பல்வேறு காலங்களில் புலவர் பலரால்
இயற்றப்பெற்று,
மதுரை உப்பூரி
குடிகிழார் மகனார் உருத்திர சன்மரால் தொகுக்கப்பட்டது.
‘நெடுந்தொகை’ ‘நெடுந்தொகை நானூறு’ என்று அழைக்கப்படும் நூல் அகநானூறு.
சொல்லவந்த கருத்தை உள்ளுறை வழியாக உரைப்பது
அகநானூற்றுப் பாடலின் சிறப்பு.
அகநானூற்றுப் பாடலின் தொகுப்பு முறையில் ஓர்
ஒழுங்கு உண்டு.
“பெருங்கடல் முகந்த இருங்கிளைக் கொண்மூ!
இருண்டுஉயர் விசும்பின்
வலனேர்பு” எனும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் & ஆசிரியர் அகநானூறு
& வீரை வெளியன்
தித்தனார்.
அகநானூறு
உலகு கிளர்ந்தன்ன உரு கெழு வங்கம்
புலவுத் திரைப் பெருங்
கடல் நீர் இடைப் போழ,
இரவும் எல்லையும் அசைவு
இன்று ஆகி,
விரை செலல் இயற்கை
வங்கூழ் ஆட்ட,
கோடு உயர் திணி மணல்
அகன் துறை, நீகான்
மாட ஔ்எரி மருங்கு
அறிந்து ஒய்ய,
– மருதன் இளநாகனார்
அகநானூறு
பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்
இருங்கழிச் செறுவின்
உழாஅது செய்த
வெண்கல் உப்பின் கொள்ளை
சாற்றி
என்றூழ் விடர குன்றம்
போகும்
கதழ்கோல் உமணர் காதல்
மடமகள்
சில்கோல் எல்வளை
தெளிர்ப்ப வீசி
நெல்லின் நேரே வெண்கல்
உப்பெனச்
சேரி விலைமாறு கூறலின்
மனைய
விளியறி ஞமலி குரைப்ப, வெரீஇய
மதர்கயல் மலைப்பின்
அன்னகண் எனக்கு,
இதைமுயல் புனவன்
புகைநிழல் கடுக்கும்
மாமூது அள்ளல் அழுந்திய
சாகாட்டு
எவ்வந் தீர வாங்குந்
தந்தை
கைபூண் பகட்டின்
வருந்தி
வெய்ய உயிர்க்கும் நோயா
கின்றே
– அம்மூவனார்
திருமணம் முடிந்த பிறகு பெண் வீட்டில் கணவன்
சேர்ந்து வாழ்வது பாரதி பற்றி அகநானூற்றில் கூறப்பட்டுள்ளது.
இராவண காவியம்
– புலவர் குழந்தை
அருவிய முருகியம் ஆர்ப்பப் பைங்கிளி
பருகிய தமிழிசை பாடப் பொன்மயில்
அருகிய சிறைவிரித் தாடப் பூஞ்சினை
மருவிய குரக்கினம் மருண்டு நோக்குமால்
அடுப்பிடு சாந்தமோடு அகிலின் நாற்றமும்
துடுப்பிடு மைவனச்
சோற்றின் நாற்றமும்
மடுப்படு காந்தளின்
மணமுந் தோய்தலாற்
கடைப்படு பொருளெலாம்
கமழும் குன்றமே
பூவையும் குயில்களும் பொலங்கை வண்டரும்
பாஇசை பாடமுப் பழமும்
தேனும்தந்
தேஇசை பெறும்கடறு
இடையர் முக்குழல்
ஆவினம் ஒருங்குற அருகுஅ
ணைக்குமால்
முதிரையும் சாமையும் வரகும் மெய்மணி
குதிரைவாலியும்களம்
குவித்துக் குன்றுஎனப்
பொதுவர்கள் பொலிஉறப்
போர்அ டித்திடும்
அதிர்குரல் கேட்டுஉழை
அஞ்சி ஓடுமே!
மன்னிய முதுவெயில் வளைப்ப வாய்வெரீஇ
இன்னிளம் குருளைமிக்கு
இனைந்து வெம்பிடத்
தன்னிழல் தங்கவே தாய்மை
மீதுற
நன்னரில் வலியசெந்
நாய்உய ங்குமே.
கடிக்கமழ் மராமலர்க் கண்ணி அம்சிறார்
படிக்குற எருத்துக்கோடு
அன்ன பாலைக்காய்
வெடிக்கவிட்டு ஆடிட
விரும்பிக் கோலினால்
அடிக்கும்
ஓசையின்பருந்து அஞ்சி ஓடுமே
கல்லிடைப் பிறந்த ஆறும்
கரைபொரு குளனும் தோயும்
முல்லைஅம் புறவில்
தோன்று
முருகுகான் யாறு பாயும்
நெல்லினைக் கரும்பு
காக்கும்
நீரினைக் கால்வாய்
தேக்கும்
மல்லல்அம் செறுவில்
காஞ்சி
வஞ்சியும் மருதம்
பூக்கும்*
மரைமலர்க் குளத்தில் ஆடும்
மயிர்த்தலைச் சிறுவர்
நீண்ட
பொருகரிக் குருத்து
அளந்து
பொம்மெனக் களிப்பர்
ஓர்பால்
குரைகழல் சிறுவர்
போரில்
குலுங்கியே தெங்கின்
காயைப்
புரைதபப் பறித்துக்
காஞ்சிப்
புனைநிழல்அருந்து வாரே
பசிபட ஒருவன் வாடப்
பார்த்துஇனி இருக்கும்
கீழ்மை
முசிபட ஒழுகும் தூய
முறையினை அறிவார் போல
வசிபட முதுநீர் புக்கு
மலையெனத் துவரை நன்னீர்
கசிபட ஒளிமுத் தோடு
கரையினில் குவிப்பார்
அம்மா
வருமலை அளவிக் கானல்
மணலிடை உலவிக் காற்றில்
சுரிகுழல் உலர்த்தும்
தும்பி
தொடர்மரை முகத்தர்
தோற்றம்
இருபெரு விசும்பிற்
செல்லும்
இளமைதீர் மதியம்
தன்னைக்
கருமுகில் தொடர்ந்து
செல்லுங்
காட்சி போல்தோன்று
மாதோ.
1) “இராவண காவியம் காலத்தின் விளைவு ஆராய்ச்சியின்
அறிகுறி. புரட்சிப் பொறி உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்” – பேரறிஞர் அண்ணா
2) இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தனித்தமிழ்ப்
பெருங்காப்பியம் இராவண காவியம்.
3) 5 காண்டங்களையும் 3100 பாடல்களையும் கொண்டது
1. தமிழகக் காண்டம்
2. இலங்கைக் காண்டம்
3. விந்தக் காண்டம்
4. பழிபுரி காண்டம்
5. போர்க்காண்டம்
4) இந்நூல் புலவர் குழந்தை அவர்களால் இயற்றப்பட்டது.
5) தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க 25 நாள்களில் இவர் திருக்குறளுக்கு உரை
எழுதியுள்ளார்.
6) யாப்பதிகாரம், தொடையதிகாரம் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட இலக்கண, இலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.
7) இராமாயணத்தில் எதிர்நிலை மாந்தராகப்
படைக்கப்பட்ட இராவணனை முதன்மை நாயகனாகக் கொண்டு இயற்றப்பட்டது இராவண காவியம்.
கம்பராமாயணம்
தாதுகு சோலை தோறும் சண்பகக் காடு தோறும்
போதவிழ் பொய்கை தோறும்
புதுமணத் தடங்கள் தோறும்
மாதவி வேலிப் பூக
வனந்தொறும் வயல்கள் தோறும்
ஓதிய உடம்பு தோறும்
உயிரென உலாய தன்றே. *
– கம்பர்
1) பெயர் : கம்பர்
2) ஊர் : நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள
தேரழுந்தூர்.
3) ஆதரித்த(புரந்த ) வள்ளல் : திருவெண்ணெய் சடையப்ப வள்ளல். இவர்
செய்ந்நன்றி மறவா இயல்பினர். தம்மை ஆதரித்த வள்ளல் சடையப்பரை ஆயிரம் பாடல்களுக்கு
ஒரு பாடல் எனப் பாடிச் சிறப்பித்துள்ளார்.
4) இராம காதைக்கு ஆதிகாவியம் என்றும் அக்காதையை
வடமொழியில் இயற்றிய வான்மீகிக்கு ஆதிகவி என்றும் பெயர் உண்டு.
5) இயற்றிய நூல்கள்:
1.சடகோபரந்தாதி,
2. ஏரெழுபது,
3. சிலையெழுபது,
4. சரசுவதிஅந்தாதி,
5. திருக்கை வழக்கம்.
6) காலம்: 12 ஆம் நூற்றாண்டு
7) சயங்கொண்டார், ஒட்டக்கூத்தர்,
புகழேந்தி ஆகியோர் இவர் காலத்துப் புலவராவர்.
8) இவர், குலோத்துங்கச் சோழனின் அவைப்புலவராக விளங்கினார்;
9) கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும், விருத்தமெனும் ஒண்பாவிற்கு உயர் கம்பன், கல்வியிற் பெரியர் கம்பர் என்னும் தொடர்களால் கம்பரின் பெருமையை
அறியலாம். ‘யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்’ என்று பாரதியார் கம்பரைப் புகழ்ந்து
பாடியுள்ளார்.
10) கம்பரின் இராமாயணத்தைக் கம்ப நாடகம் எனவும் கம்பசித்திரம் எனவும்
கற்றறிந்த அறிஞர் களி கூர்வர். கம்பரின் யாப்பு வண்ணங்கள் நூல்
நெடுகிலும் மின்னி மிளிர்கின்றன. ‘வரமிகு கம்பன் சொன்ன வண்ணமுந் தொண்ணூற்றாறே’
என்று ஒரு கணக்கீடும் உண்டு.
11) “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்” என்று கம்பரை
புகழ்ந்து பாடியவர்-பாரதியார்
12) “கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்” என்று
கூறியவர் பாரதியார்
13) ஏழாங்காண்டமாக உத்தர காண்டம் என்னும்
பகுதியைக் கம்பரின் சமகாலத்தவராகிய ஒட்டக்கூத்தர் இயற்றினார்.
14) கம்பர், வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணத்தைத் தழுவித் தமிழில்
காப்பியம் இயற்றினார்;
இயற்றிய அந்நூலுக்கு, இராமாவதாரம் எனப் பெயரிட்டார்.
15) இராமாயணத்துள் ஐந்தாங்காண்டமாக விளங்குவது சுந்தரகாண்டம். இக்காண்டமே காப்பியத்தின் முடிமணியாக விளங்குகிறது என்பர்.
16) அனுமனுக்குச் சுந்தரன் என்னும் பெயரும் உண்டு
என்பதால் அனுமனின் தலைமைப் பண்புகள் வீறு பெற்று விளங்கும் இக்காண்டம் சுந்தர காண்டம் எனலாயிற்று என்பர்.
17) கடலைத்தாண்டி இலங்கையிற் புக்க அனுமன் சீதை
இருக்குமிடத்தைத் தேடித்துருவியதும் அசோகவனத்தையடைந்து சீதையைக்
கண்டதும் அங்கே சீதையிடம் இராவணன் வந்து உரையாடியதும் சீதை
அவனைக்கடிந்துரைத்து,
ஒதுக்கியதும் சீதைக்கு நல்லமொழி சொல்லி இணங்குவிக்குமாறு அரக்கியரை
ஏவி இராவணன் அகன்றதும் சீதை மனந்தளர்ந்ததும் உயிரை விடத்துணிந்ததும்
இராமதூதன் யான் என அனுமன் சீதைமுன் தோன்றியதும் இராமனின் அடையாள மொழிகளைக்
கூறியதும் கணையாழியைத் தந்ததும் சீதை அதனால் மகிழ்ந்ததும் அனுமனிடம் சூடாமணியை வழங்கி வரவிடுத்ததும் இராமனுக்குச் சொன்ன செய்திகளும் அனுமன் பலரோடு பொருது
இலங்கையை எரியூட்டி அங்கிருந்து இராமனிடம் வந்ததும் இராமனைக் கண்டு அடிதொழுது நின்று நிகழ்ந்தவற்றை
நிரல்படச் சொல்லுதலும் ஆகிய செய்திகளை இப்பகுதியிற்
காணலாம். சீதையைக் கண்டு வந்த அனுமன் கூறிய செய்திகள் இப்பகுதியில் அனுமன் கூற்றாகத் தரப்பட்டுள்ளன.
18) அதுவே கம்பராமாயணம் என வழங்கலாயிற்று. எனவே, இது வழிநூல் எனப்படுகிறது.
19) கதை மாந்தரின் வடசொற் பெயர்களைத் தொல்காப்பிய
நெறிப்படி தமிழ்ப்படுத்திய பெருமைக்குரியவர் கம்பர்.
20) கம்பராமாயணம் 6 காண்டங்களையுடையது.
1. பால காண்டம்
2. அயோத்தியா காண்டம்
3. ஆரணிய காண்டம்
4. கிட்கிந்தா காண்டம்
5. சுந்தர காண்டம்
6. யுத்த காண்டம்
21) 6 காண்டங்களையும், 118 படலங்களையும், 10589 பாடல்களையும் கொண்டது.
22) குகன், சடாயு சவரி,
சுக்ரீவன், வீடணன் ஆகியோரைப் பற்றிய பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
23) காண்டம் – பெரும் பிரிவு; படலம் – உட்பிரிவு) இப்பாடல் பால காண்டத்து
ஆற்றுப்படலத்தில் உள்ளது.
24) தமிழிலக்கியத்தில் காப்பிய வளர்ச்சி கம்பர் படைப்பினால்
உச்சநிலையை அடைந்தது.
25) இந்நூலின் சிறப்புக் கருதியும் திருக்குறளின் பெருமை கருதியும் இவ்விரு
நூல்களையும் தமிழுக்குக் ‘கதி’ என்பர் பெரியோர்.
26) கம்பராமாயணம் பெருங்காப்பியத்திற்குரிய
இலக்கணங்களை முழுமையாகப் பெற்றது; பொருள், அணி, நடை ஆகியவற்றால் சிறந்தது; கற்போர்க்கு
இனிமை தரும் கவிச்சுவை நிறைந்தது; சொற்சுவையும்
பொருட்சுவையும் தமிழ்ப் பண்பாடும் மிளிர்ந்துள்ளது.
27) கம்பராமாயணத்தில் அயோத்தியா காண்டம் 2-ஆம் காண்டமாகும். இதில் 13 படலங்கள் உள்ளன. நம் பாடப்பகுதியான குகப் படலம் ஏழாம் படலமாகும். இப்பகுதியைக் கங்கைப் படலம் எனவும் கூறுவர்.
28) தற்போதைய உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாயும்
சரயு நதியின் வளம்,
இதில் கூறப்பட்டுள்ளது.
வாழ்த்து
உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும்
நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை
யார்அவர்
தலைவர் அன்னவர்க்
கேசரண் நாங்களே.*
– கம்பர்
குகன்
படகைச்செலுத்துதல்
விடுநனி கடிதென்றான் மெய்உயிர் அனையானும்
முடுகினன் நெடுநாவாய்
முரிதிரை நெடுநீர்வாய்க்
கடிதினில் மடஅன்னக்
கதியது செலநின்றார்
இடர்உற மறையோரும்
எரியுறு மெழுகானார். *
குகன் கூறியதைக் கேட்ட
குற்றமற்றவனாகிய இராமன்
துன்புள தெனின் அன்றோ சுகமுளது அதுவன்றிப்
பின்புள திடைமன்னும்
பிரிவுளதென உன்னேல்
முன்புளெம் ஒருநால்வேம்
முடிவுள தென உன்னா
அன்புள இனிநாம்ஓர்
ஐவர்கள் உளரானோம். *
29) கம்பரின் கவிதை வரிகளுக்கு கங்கை ஆற்றின் அலைகள் இசையமைக்கின்றன.
30) “மேழி பிடிக்கும்கை வேல்வேந்தர் நோக்கும்கை”
நீடுழி காக்கும்கை
காராளர் கை” என்ற பாடல் வரிகளை இயற்றியவர் – கம்பர்
31) இயற்கைப் பரிணாமம் – கம்பராமாயணம்.
32) “ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாய தன்றே”
இவ்வரிகள் இடம்பெற்ற நூல் – கம்பராமாயணம்.
33) கம்பராமாயணம்- வழிநூல் எனக் கூறப்படுகிறது
34) வடசொற்களை தொல்காப்பிய நெறிப்படி
தமிழ்ப்படுத்திய பெருமைக்குரியவர் – கம்பர்.
35) புட்பக விமானம் பற்றி குறிப்பிடும் நூல்
–கம்பராமாயணம்.
36) “அஞ்சலை அரக்க! பார்விட் டந்தர” என்ற வரிகள்
இடம்பெற்ற நூல் கம்பராமாயணம்.
37) “பன்ன அரும் கலைதெரி பட்டிமண்டபம்” கம்பராமாயணம் (பாலகாண்டம், நகரப் படலம்).
39) “அலகிலா விளையாட்டுடையவர்” என்ற பாடல் பாலகாண்டத்தில் இடம்பெற்றுள்ளது.
40) விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர்கம்பன்
என்று கூறியவர் – பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்.
41) கல்வியும் செல்லமும் பெற்ற பெண்கள் விருந்தும், ஈகையும் செய்வதாகக் கூறியவர் – கம்பர்.
42) “பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தவால்” என்ற
பாடல் வரி இடம் பெற்ற நூல் – கம்பராமாயணம்.
43) “வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்தும் அன்றி
விளைவன யாவையே” என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல் – கம்பராமாயணம்.
44) “என்றுமுள தென்தமிழ்”- கம்பர்
45) “விடுநனி கடிது” எனும் பாடல் கம்பராமாயணயத்தின் குகப்படலத்தில் உள்ளது.
46) கம்பராமாயணத்தில் அயோத்தியா காண்டம் இரண்டாவது காண்டம்
47) “வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறையப்”-
எனும் வரிகள் இடம்பெறும் காண்டம் – அயோத்திய காண்டம்.
49) வண்மை யில்லையோர் வறுமை யின்மையாற்” என்ற
பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் கம்பராமாயணம் (பால காண்டம்).
49) கங்கைப்படலம் எந்த காண்டத்தில் இடம்
பெற்றுள்ளது அயோத்தியா காண்டம்.
50) நாட்டுப்படலம் எந்த காண்டத்தில் இடம்
பெற்றுள்ளது? பால காண்டம்.
51) ஆற்றுப்படலம் எந்த காண்டத்தில் இடம்
பெற்றுள்ளது? பால காண்டம்.
52) கும்பகருணன் வதைப்படலம் எந்த காண்டத்தில் இடம்
பெற்றுள்ளது? யுத்த காண்டம்.
53) அயோத்தி நாட்டு மன்னன் – தசரதன்
அயோத்தி நாட்டு மன்னன்
– தசரதன்
தசரதனின் மனைவி – கைகேயி
கைகேயியின் தோழி
–மந்தரை
வேட்டுவத் தலைவன் – குகன்
குகனின் ஊர் – சிருங்கிபேரம்
54) தொல்காப்பிய நெறி நின்றவர் – கம்பர்
55) வடமொழி எழுத்தையும் பிறமொழிக் கலப்பையும்
தடுத்த தமிழ்வேந்தர் – கம்பர்
56) கம்பராமாயணப் பாடல்கள் சந்தநயம் மிக்கவை.
57) ‘ஓர்அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்’.
எனகூறியவர் கம்பர்
58) “உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம்
ஊற்றி அடல்உறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர்” என்பார் கம்பர்
59) பிழையன்று நறும்புனலின்மை அன்றே பதியின்
பிழையன்று பயந்த புரந்தான் நம்மைப் –கம்பன்
60) மதியின் பிழையன்று; மகள் பிழையன்று; மைந்த!
விதியின் பிழை நீ”
எனும் பாடலை பாடியவர்- கம்பன்.
61) “தமிழ் தழீஇய சாயலவர்” என்னும் இடத்து, ‘தமிழ்’ என்பதற்கு அழகும் மென்மையும்
பொருளாகின்றன என்றவர் –கம்பன்
62) “தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க… வண்டுகள் இனிது பாட, மருதம் வீற்றிருக்கும் மாதோ” என்ற பாடலின்
ஆசிரியர்-கம்பர்
63) “நன்னுதலவள் நின் யகள் நளிர் கடல் நிலம்
எல்லாம்” கம்பராமாயணம்
64) கம்பராமாயணப் பாடலில் ஜவர் எனக் குறிப்பிடும்
ஐந்தாவது நபர் – குகன்
65) “கம்பனோடு வள்ளுவனைச் சுட்டிக் காட்டித்
தெற்றெனநம் அகக்கண்ணைத் திறந்துவிட்ட தெய்வக்கவி” எனும் பாடலை பாடியவர் நாமக்கல் கவிஞர்.
66) கம்பர் சோழ நாட்டுத் திருவழுந்தூரில் பிறந்தவர்
67) ஒன்றே யென்னின் ஒன்றேயாம் பலவென் றுரைக்கிற்
பலவேயாம்- கம்பர்
ஔவையார்
கல்விக்கு எல்லை
இல்லை
கற்றதுகைம் மண்ணளவு கல்லா(து) உலகளவென்(று)
உற்ற கலைமடந்தை
ஓதுகிறாள் – மெத்த
வெறும்பந் தயம்கூற
வேண்டா;
புலவீர்
எறும்புந்தன் கையால்எண்
சாண். *
– ஒளவையார்
இங்குக் குறிக்கப்படும் ஔவையார், சங்க கால ஔவையாருக்கு மிகவும் பிற்பட்டவர்.
கம்பர், ஒட்டக்கூத்தர்,
புகழேந்திப்புலவர்
முதலிய புலவர்கள் இவர் காலத்தில் வாழ்ந்ததாகக் கூறுவர்.
புலவர் பலர், பல்வேறு சூழ்நிலைக்கு ஏற்ப அவ்வப்போது பாடிய பாடல்களின் தொகுப்பே தனிப்பாடல் திரட்டு.
இதனை, இராமநாதபுரம் மன்னர் பொன்னுசாமி வேண்டுதலுக்கிணங்க, சந்திரசேகர கவிராசப் பண்டிதர் தமிழகம்
முழுவதும் சென்று தேடித் தொகுத்தார்.
தனிப்பாடல்களைக் கற்பதனால், தமிழ்மொழியின் பெருமையையும் புலவர்களின்
புலமையையும் சொல்லின்பம் பொருளின்பம் கற்பனைஇன்பம் முதலியவற்றையும் பெறலாம்.
மூதுரை
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன்
சிறப்புடையன் – மன்னற்குத்
தன்தேசம் அல்லால்
சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம்
சிறப்பு.”
_ ஒளவையார்
இந்நூலின் ஆசிரியர் ஒளவையார்.
இவர் ஆத்திசூடி,
கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை,
ஞானக்குறள், அசதிக்கோவை போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.
மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள்.
சிறந்த அறிவுரைகளைக் கூறுவதால் இந்நூல் மூதுரை
எனப் பெயர் பெற்றது. இந்நூலில் 31 பாடல்கள் உள்ளன.
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து
அடக்கிச்
சாதல் நீங்க எமக்கீந்
தனையே.
— ஔவையார்
இவ்வே பீலியணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ்
திருத்தி நெய்யணிந்து
கடியுடை வியன் நகரவ்வே
அவ்வே
பகைவர்க் குத்திக்
கோடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில
மாதோ என்றும்
உண்டாயின் பதம்
கொடுத்து
இல்லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல்எம் கோமான்
வைந்நுதி வேலே
— ஒளவையார்
1. திரவப் பொருள்களை எவ்வளவு அழுத்தினாலும்
அவற்றின் அளவைச் சுருக்க முடியாது என்ற கருத்தைக் கூறியவர் ஔவையார்.
2. “ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி
முகவாது நால் நாழி”. இப்பாடலை
பாடியவர் – ஔவையார்.
3. “சாதி இரண்டொழிய வேறில்லையென்றே தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்தமென்போம்” இதில் ‘தமிழ்மகள்’ என்பது யாரைக் குறிக்கிறது? ஔவையார்.
4. “பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து
வைக்காதீர்” என்று கூறியவர் –ஔவையார்.
நாடாகு ஒன்றோ, காடாகு ஒன்றோ
அவலாகு ஒன்றோ, மிசையாகு ஒன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை, வாழிய நிலனே
– ஔவையார்
5. சங்க காலத்தில் மிகுதியான பாடல்களை பாடியவர் ஔவையார்.
6. அரிய நெல்லிக்கனியை அதியமானிடம் பெற்றவர் – ஔவையார்
7. .”அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்” என்று திருக்குறளைப்
போற்றியவர் – ஔவையார்.
8. “கற்றதுகைம் மண்ணளவு கல்லா(து) உலகளவென்(று)”
என்றப் பாடல் வரிகளின் ஆசிரியர் – ஔவையார்
09 . “எறும்புந்தன் கையால்எண் சாண்” என்றப் பாடல்
வரிகளின் ஆசிரியர் ஔவையார்
10. ‘இளமையில் கல்’ என்று கூறியவர் -ஔவையார்.
11. ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்று
கூறியவர் – ஔவையார்.
12. “சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது” எனும்
பாடலைப் பாடியவர் – ஔவையார்.
13. “சாதல் நீங்க எமக்கீந் தனையே” எனும் பாடலைப்
பாடியவர் –ஔவையார்
14. “போரில்லா மகிழ்ச்சியில் இந்த உலகம்
திளைக்கட்டும்” என்று கூறியவர் -ஔவையார்.
15. “இவ்வே பீலியணிந்து மாலை சூட்டிக் கண்திரள்
நோன்காழ் திருத்தி நெய்யணிந்து” – இப்பாடலைப் பாடியவர் ஔவையார்.
16.”பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில
மாதோ என்றும்
உண்டாயின் பதம்
கொடுத்து” – இப்பாடலைப் பாடியவர் ஔவையார்.
17. “இல்லோர் ஒக்கல் தலைவன் அண்ணல்எம் கோமான் வைந்நுதி வேலே” என்ற பாடலைப்
பாடியவர் ஒளவையார்.
18. “வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரெனவே புளித்த
மோரும் திறமுடனே ” – ஒளவையார் (தனிப்பாடல்)
19. சங்ககாலப் பெண்பாற்புலவர்- ஒளவையார்.
20. .’சனி நீராடு’ என்பது ஔவையார் வாக்கு.
21. ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ எனத்
தமிழரின் கடற்பயணம் குறித்து கூறியவர் – ஔவையார்.
22. ‘மீதூண் விரும்பேல்’ என்று கூறியவர் – ஔவையார்.
23. ‘உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன்’
என்கிறார் – ஔவையார்.
24. “ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த
வேங்கை வெறித்தழை
வேறுவகுத் தன்ன”- ஔவையார்.
25. அதியமான் நெடுமானஞ்சி என்னும் குறுநில
மன்னனுடன் ஆழ்ந்த நட்புக் கொண்டவர்- ஔவையார்.
26. ஔவையார் பாடிய பாடல்கள் இடம்பெற்றுள்ள நூல்- புறநானூறு, நற்றிணை,
குறுந்தொகை.
27. ‘இளமையில் கல்’ – ஔவையார்.
28. புகழேந்திப்புலவர், ஒட்டக்கூத்தர், ஔவையார் முதலியோர் கம்பர் காலத்தில் வாழ்ந்த புலவர்
பெருமக்கள் ஆவர்.
29. கடைச்சங்கப் புலவர்கள் பரணர், இடைக்காடர்,
ஔவை ஆகியோரிடம் நட்பு பூண்டவர்.
30. அதியமானிடம் நட்பு பாராட்டி அவருக்காக தூது
சென்றவர் – ஔவையார்.
31. ஔவையார் பாடியதாக
அகநானூற்றில் — 4
குறுந்தொகையில் — 15
நற்றிணையில் — 7
புறநானூற்றில் — 33
மொத்தம் = 59 பாடல்கள் நமக்கு கிடைத்துள்ளன.
32. ஔவைக்கு கொடுக்கப்பட்ட நெல்லிக்கனி கிடைத்த
இடம் பூரிக்கல்.
ஆசாரக்கோவை
நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு
இன்னாத எவ்வுயிர்க்கும்
செய்யாமை கல்வியோடு
ஒப்புரவு ஆற்ற அறிதல்
அறிவுடைமை
நல்லினத் தாரோடு நட்டல்
– இவையெட்டும்
சொல்லிய ஆசார வித்து
1. ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார்.
2. இவர் பிறந்த ஊர் கயத்தூர்.
3. ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள்.
4. இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
5. இந்நூல் 100 வெண்பாக்களைக் கொண்டது.
ஏலாதி
வணங்கி வழியொழுகி மாண்டார்சொல் கொண்டு
நுணங்கிநூல் நோக்கி
நுழையா – இணங்கிய
பால்நோக்கி வாழ்வான்
பழியில்லா மன்னனாய்
நூல்நோக்கி வாழ்வான்
நுனித்து,
– கணிமேதாவியார்
1. ஏலாதியை இயற்றியவர் கணிமேதாவியார்.
2. இவருக்குக் கணிமேதையர் என்னும் மற்றொரு
பெயருமுண்டு.
3. இவர், சமண சமயத்தவர் என்பர்.
4. இவர், சமண சமயத்திற்கே உரிய கொல்லாமை முதலான உயரிய அறக்கருத்துகளை ஏலாதியில்
வலியுறுத்திக் கூறுகிறார்.
5. இவர் காலம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு.
6. இவர், திணைமாலை நூற்றைம்பது என்னும் நூலையும் இயற்றியுள்ளார்.
7. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஏலாதியும் ஒன்று.
8. இந்நூல் சிறப்புப் பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் உட்பட 81 வெண்பாக்களைக் கொண்டுள்ளது.
9. நான்கடிகளில் ஆறு அருங்கருத்துகளை இந்நூல்
நவில்கிறது.
10. இந்நூல் தமிழருக்கு அருமருந்து போன்றது
11. ஏலம் என்னும் மருந்துப்பொருளை
முதன்மையாகக்கொண்டு இலவங்கம், சிறுநாவற்பூ,
சுக்கு, மிளகு, திப்பிலி, ஆகியவற்றினால் ஆன மருந்துப் பொருளுக்கு ஏலாதி
என்பது பெயர்.
12. இம்மருந்து, உண்ணுபவரின் உடற்பிணியைப் போக்கும். அதுபோல, இந்நூலின் நற்கருத்துகள். கற்போரின் அறியாமையை அகற்றும். இந்நூலின் ஐம்பத்தொன்பதாவது பாடல், நமக்குப் பாடமாக அமைந்துள்ளது.
13. மருந்துப் பொருள்களின் பெயரில் அமைந்த இரு
நூல்கள் திரிகடுகம், ஏலாதி.
சிறுபஞ்சமூலம்
கண்வனப்புக் கண்ணோட்டம், கால்வனப்புச் செல்லாமை,
எண்வனப்பு இத்துணையாம்
என்றுரைத்தல், பண்வனப்புக்
கேட்டார்நன் றென்றல், கிளர்வேந்தன் தன்னாடு
வாட்டான்நன் றென்றல்
வனப்பு.
— காரியாசான்
1. காரியாசான், மதுரைத் தமிழாசிரியர்
மாக்காயனாரின் மாணாக்கர் எனச் சிறப்புப்பாயிரம் கூறுகிறது.
2. இவர், சமண சமயத்தைச் சார்ந்தவர்.
3. இவரும் கணிமேதாவியாரும் ஒருசாலை மாணாக்கராவர்.
4. பெரும்பான்மை பொது
அறக்கருத்துகளும் சிறுபான்மை சமண அறக்கருத்துகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
5. சிறுபஞ்சமூலம் பதினெண்கீழ்க்கணக்கு
நூல்களுள் ஒன்று
6. இதன் ஆசிரியர் காரியாசான்.
7. இந்நூலில், கடவுள் வாழ்த்துடன் 107
வெண்பாக்கள் உள்ளன.
8. கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து மூலிகையின்
வேர்களும் உடல்நோயைத் தீர்ப்பன.
9. அதுபோல, இந்நூலின் ஒவ்வொரு
பாடலிலும் கூறப்பட்டுள்ள 5 கருத்தும் மக்கள் மனநோயைப்
போக்குவன.
10. ஆகையால், இந்நூல் சிறுபஞ்சமூலம்
எனப் பெயர் பெற்றது.
11. கோடிட்ட இடத்தை
நிரப்புக.
பண்ணுக்கு அழகு அதனைக் கேட்போர் நன்றென்றல்.
பிறரிடம் இரந்து செல்லாமை காலுக்கு அழகு.
12. மனித வாழ்வைச்
செழுமையாக்குபவை அறப் பண்புகளே. காலந்தோறும் தமிழில் அறக் கருத்துகளைக் கூறும்
இலக்கியங்கள் தோன்றிவருகின்றன. அவற்றுள் ஒன்றுதான் சிறுபஞ்சமூலம் என்னும் நூல்,
அறிவுடையார் தாமே
உணர்வர்
பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்.
மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா,
விதையாமை நாறுவ
வித்துஉள;
மேதைக்கு
உரையாமை செல்லும்
உணர்வு”
13. பூக்காமலே சில மரங்கள் காய்ப்பதுண்டு. — சிறுபஞ்சமூலம்
14. மேதையரும் பிறர் உணர்த்தாமல் எதையும் தாமே
உணர்ந்துகொள்வர் — சிறுபஞ்சமூலம்
15. தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து நீதிநூல்கள் தோன்றின. அவை பதினெண் கீழ்க்கணக்கு எனத் தொகுக்கப்பட்டுள்ளன.
16. அவற்றுள் ஒன்று சிறுபஞ்சமூலம்.
17. சிறிய வேர்கள் என்பது இதன் பொருள்.
18. இப்பாடல்கள் நன்மை தருவன, தீமை தருவன, நகைப்புக்கு உரியன என்னும் வகையில் வாழ்வியல் உண்மைகளை
எடுத்துக்காட்டுகின்றன.
19. சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் காரியாசான், மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர். காரி என்பது இயற்பெயர்.
ஆசான் என்பது தொழிலின் அடிப்படையில் அமைந்தபெயர். மாக்காரியாசான் என்று பாயிரச்
செய்யுள் இவரைச் சிறப்பிக்கிறது.
இனியவை நாற்பது
குழவி
பிணியின்றி வாழ்தல் இனிதே
கழறும் அவையஞ்சான் கல்வி இனிதே
மயரிக ளல்லராய் மாண்புடையார்ச் சேரும்
திருவுந்தீர் வின்றேல் இனிது.
1.
சலவரைச் சாரா விடுதல் இனிதே
புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம்
தகுதியால் வாழ்தல் இனிது.
ஆசிரியர் குறிப்பு
3. பெயர் : மதுரைத் தமிழாசிரியர் மகனார்
பூதஞ்சேந்தனார்.
4. ஊர் : மதுரை
5. காலம் : கி.பி. 2 ஆம் நூற்றாண்டு.
நூல் குறிப்பு
6. இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு
நூல்களுள் ஒன்று
7. நன்மைதரும் இனிய கருத்துகளை நாற்பது பாடல்களில்
தொகுத்துரைப்பதால் இனியவை
நாற்பது எனப்
பெயர்பெற்றது.
8. இந்நூலின் ஒவ்வொரு பாடலும் 3 அல்லது 4 நற்கருத்துகளை இனிமையாகக் கூறும்.
தூயவர் செயல்கள்
- உண்பொழுது
நீராடி உண்டலும் என்பெறினும்
பால்பற்றிச் சொல்லா விடுதலும் – தோல்வற்றிச்
சாயினும் சான்றாண்மை குன்றாமை இம்மூன்றும்
தூஉயம் என்பார் தொழில்.
அறவுணர்வு உடையாரிடத்து உள்ளவை
- இல்லார்க்கொன்
றீயும் உடைமையும், இவ்வுலகில்
நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் – எவ்வுயிர்க்கும்
துன்புறுவ செய்யாத தூய்மையும் இம்மூன்றும்
நன்றறியும் மாந்தர்க் குள. *
புதரில் விதைத்த விதை
- முறைசெய்யான்
பெற்ற தலைமையும் நெஞ்சில்
நிறையிலான் கொண்ட தவமும் நிறைஒழுக்கம்
தேற்றாதான் பெற்ற வனப்பும் இவைமூன்றும்
தூற்றின்கண் தூவிய வித்து.
1. திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார்.
2. இவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த திருத்து என்னும் ஊரினர் என்பர்.
3. இவரைச், செருஅடுதோள்
நல்லாதன் எனப் பாயிரம் குறிப்பிடு வதனால், இவர் போர்வீரராய் இருந்திருக்கலாம் எனக்
கருதப்படுகிறது.
4. திரிகடுகம், பதினெண்கீழ்க்கணக்கு
நூல்களுள் ஒன்று.
5. இந்நூல் 100 வெண்பாக்களை
உடையது.
5. சுக்கு, மிளகு, திப்பிலியால் ஆன மருந்துக்குப் பெயர்
திரிகடுகம்.
6. இம்மருந்தை உண்ட மனிதர்களுக்கு உடல்நோய் நீங்கும்.
7. இதனைப்போன்றே ஒவ்வொரு திரிகடுகப் பாடலிலும்
இடம்பெற்றுள்ள மூன்று கருத்தும் மக்களின் மனமயக்கத்தைப்
போக்கித் தெளிவை ஏற்படுத்தும்.
8. திரிகடுகம் பாடல்களிலுள்ள மூன்று அறக்கருத்தும்
கற்பாரின் மனத்திலுள்ள அறியாமையாகிய நோயைப் போக்கி,
அவரைக் குன்றின்மேலிட்ட
விளக்காகச் சமுதாயத்தில்
விளங்கச் செய்யும்.
முதுமொழிக்காஞ்சி
சிறந்த பத்து
(சிறந்ததெனக் கூறப்படும் பத்துப் பொருளைத் தன்னகத்தே
கொண்டிருப்பது சிறந்த பத்து.)
1. ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலில் சிறந்தன்(று) ஒழுக்கம் உடைமை.
2. காதலில் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல்.
3. மேதையில் சிறந்தன்று கற்றது மறவாமை.
4. வண்மையில் சிறந்தன்று வாய்மை யுடைமை.
5. இளமையில் சிறந்தன்று மெய்பிணி இன்மை.
6. நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று.
7. குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று.
8. கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று.
9. செற்றாரைச் செறுத்தலில் தற்செய்கை சிறந்தன்று.
10. முன்பெரு கலின்பின் சிறுகாமை சிறந்தன்று.
– மதுரைக்
கூடலூர்கிழார்
1. முதுமொழிக்காஞ்சியின் ஆசிரியர் மதுரைக்
கூடலூர்கிழார் பிறந்த ஊர் – கூடலூர்
2. சிறப்பு : இவர்தம் பாடல்களை நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்கள்
மேற்கோள்களாகக் கையாண்டுள்ளார்கள்.
3. காலம்: சங்க
காலத்துக்குப்பின் வாழ்ந்தவர்
4. முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சித்திணையின் துறைகளுள் ஒன்று.
5. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இந்நூல், உலகியல் உண்மைகளைத் தெளிவாக எடுத்து இயம்புகிறது.
6. இந்நூல், அறவுரைக்கோவை எனவும் வழங்கப்படுகிறது.
7. இதில் பத்து அதிகாரங்கள் உள்ளன.
8. ஒவ்வோர் அதிகாரத்திலும் பத்துச் செய்யுள்கள் உள்ளன.
9. இந்நூல் 100 பாடல்களால் ஆனது.
10. முதுமொழிக்காஞ்சி கற்போரின் குற்றங்களை நீக்கி, அறம் பொருள் இன்பங்களை அடைவதற்கான வழிமுறைகளை
அறவுரைகளாகக் கூறி நல்வழிப்படுத்தும்.
கல்வியின் சிறப்பு
ஆற்றவும் கற்றார் அறிவுடையார்; அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத
நாடில்லை;
அந்நாடு
வேற்றுநாடு ஆகா; தமவேயாம்; ஆயினால்
ஆற்றுணா வேண்டுவது இல்.
– முன்றுறை அரையனார்
1. பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார் ஆவார்.
2. முன்றுறை என்பது ஊர்ப்பெயர். அரையன் என்னும் சொல்,
அரசனைக் குறிக்கும்.
இவர் முன்றுறை என்ற ஊரை ஆண்ட அரசராக இருக்கலாம்; அல்லது,
அரையன் என்பது புலவரின்
குடிப்பெயராகவும் இருக்கலாம்.
3. பழமொழி நானூறு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. 4. 400 பாடல்களைக் கொண்ட நூல் இது.
5. இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி இடம்பெற்றுள்ளது.
6. இப்பாடலில் வரும் பழமொழி, ‘ஆற்றுணா வேண்டுவது இல்’ என்பது. இதற்குக் ‘கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா’ என்பது பொருள்.
விருந்தோம்பல்
7. தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில்
‘விருந்தோம்பல்’ முதன்மையானதாகும். தமக்கு இல்லாவிட்டாலும் இருப்பதை
விருந்தினருக்குத் தந்து மகிழ்ந்த நிகழ்வுகளைத் தமிழ் இலக்கியங்கள் பேசுகின்றன.
8. கடையெழு வள்ளல்களுள் ஒருவர் பாரி.
விருந்தோம்பல்
மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும்
பாரி மடமகள் பாண்மகற்கு
நீர்உலையுள்
பொன்திறந்து கொண்டு
புகாவா நல்கினாள்
ஒன்றாகு முன்றிலோ இல்”
-முன்றுறை அரையனார்
9.இப்பாடலில் இடம் பெற்றுள்ள பழமொழி ஒன்றாகு முன்றிலோ இல் என்பதாகும். ஒன்றுமில்லாத வீடு எதுவுமில்லை என்பது இதன் பொருள்.
11. இவர் கி.பி. (பொ.ஆ.) நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர்.
12. பழமொழி நானூறு நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல்
மூலம் இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என அறியமுடிகிறது. 13.
மரம் வளர்த்தால்
பெறலாம்.
நான்மணிக்கடிகை
மனைக்கு விளக்கம் மடவார்; மடவார்
தனக்குத் தகைசால்
புதல்வர்;
– மனக்கினிய
காதல் புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும்
ஓதின் புகழ்சால்
உணர்வு.
— விளம்பிநாகனார்
1. நான்மணிக்கடிகை நூலின் ஆசிரியர் பெயர் விளம்பிநாகனார்.
2. விளம்பி என்பது ஊர்ப்பெயர்; நாகனார் என்பது புலவரின் இயற்பெயர்.
3. நான்மணிக்கடிகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
4. கடிகை என்றால் அணிகலன் என்பது பொருள்
5. நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது இதன்பொருள்.
6. ஒவ்வொரு பாட்டும் நான்கு அறக்கருத்துகளைக் கூறுகின்றது
7. மனைக்கு விளக்கம் மடவார் (பெண்ணாவாள்)
8. அன்புமிக்க புதல்வர்களுக்கு விளக்கு – கல்வி
நாலடியார்
நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்
ஈக்கால் துணையும்
உதவாதார் நட்பென்னாம்
சேய்த்தானும் சென்று
கொளல்வேண்டும் செய்விளைக்கும்
வாய்க்கால் அனையார்
தொடர்பு. *
— சமணமுனிவர்
1. நாலடியார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
2. இந்நூல், நானூறு பாடல்களைக் கொண்டது.
3. அறக்கருத்துகளைக் கூறுவது. ‘நாலடி நானூறு’ என்னும் சிறப்புப் பெயரும் இதற்கு உண்டு.
4. இந்நூல், சமணமுனிவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு.
5. பதினெண்கீழ்க்கணக்கு – விளக்கம்
சங்க நூல்கள்
எனப்படுபவை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும். பத்துப்பாட்டில் பத்து நூல்களும், எட்டுத்தொகையில் எட்டு நூல்களுமாக மொத்தம்
பதினெட்டு நூல்கள். இவற்றை,
‘மேல்கணக்கு நூல்கள்’
எனக் கூறுவர்.
சங்கநூல்களுக்குப்பின் தோன்றியநூல்களின்
தொகுப்பு, ‘பதினெண்கீழ்க்கணக்கு’ என வழங்கப்படுகிறது.
இத்தொகுப்பிலும் பதினெட்டு நூல்கள் உள்ளன. பதினெண் என்றால், ‘பதினெட்டு’ என்பது பொருள். இந்நூல்களைக் கீழ்க்கணக்கு
நூல்கள் எனவும் கூறுவர். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பாலானவை அறநூல்களே.
அழியாச் செல்வம்
வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை
மிக்க சிறப்பின் அரசர்
செறின் வவ்வார்
எச்சம் எனவொருவன்
மக்கட்குச் செய்வன
விச்சைமற்று அல்ல பிற.”
— சமண முனிவர்
6. இது நானூறு வெண்பாக்களால் ஆனது.
7. இந்நூலை நாலடி நானூறு என்றும், வேளாண்வேதம் என்றும் அழைப்பர்.
8. திருக்குறள் போன்றே அறம், பொருள்,
இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது
9. இந்நூல் திருக்குறளுக்கு இணையாக வைத்துப்
போற்றப்படுவதை நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் தொடர் மூலம் அறியலாம்.
10. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
ஒருவர் தம்
குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம்
அ) வீடு
ஆ) கல்வி
இ) பொருள்
ஈ) அணிகலன்
Answer:
ஆ) கல்வி
கல்வியைப் போல் , ……………….. செல்லாத செல்வம் வேறில்லை .
அ) விலையில்லாத
ஆ) கேடில்லாத
இ) உயர்வில்லாத
ஈ) தவறில்லாத
Answer:
ஆ) கேடில்லாத
11. மதுரையைச் சுற்றியுள்ள மலைகளில் வாழ்ந்தவர் – சமணமுனிவர்.
கல்வி கரையில; கற்பவர் நாள் சில;
மெல்ல நினைக்கின் பிணி
பல;
– தெள்ளிதின்
ஆராய்ந்த் தமைவுடைய
கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து. * – சமணமுனிவர்
கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளுந்
தலைப்படுவர் – தொல்சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந்
தாங்கு.
– நாலடியார்
மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்
தலைமிசைக் கொண்ட
குடையர் – நிலமிசைத்
துஞ்சினார்
என்றெடுத்துத் தூற்றப்பட் டாரல்லால்
எஞ்சினார் இவ்வுலகத்
தில். — நாலடியார்
திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், தொடரை நிரப்புதல்
(இருபத்தைந்து அதிகாரம் மட்டும்)
1. திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். இவர், சுருங்கச்சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர்.
2. இவருடைய காலம் கி.மு. 31 என்று கூறுவர்.இதனைத் தொடக்கமாகக் கொண்டே திருவள்ளுவர் ஆண்டு
கணக்கிடப்படுகிறது.
3. இவருடைய ஊர், பெற்றோர் குறித்த முழுமையான செய்திகள் கிடைக்கவில்லை.
4. இவர் நாயனார்,
முதற்பாவலர், நான்முகனார். மாதானுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர்,
தெய்வப்புலவர், என வேறு பெயர்களாலும் போற்றப்படுகிறார்.
5. “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ்
கொண்ட தமிழ்நாடு”.- பாரதியார்.
6. “வள்ளுவனைப் பெற்றதாய் பெற்றதே புகழ் வையகமே” – பாரதிதாசன்.
7. திரு + குறள் = திருக்குறள். திரு – செல்வம்,
சிறப்பு, அழகு, மேன்மை,
தெய்வத் தன்மை எனப் பல
பொருள் கொண்ட ஒருசொல், குறள் – குறுகிய அடிகளை உடையது. ஏழுசீர்களைக் கொண்ட ஈரடி வெண்பாக்களால் ஆனது –
திருக்குறள்.
8. குறள் வெண்பாக்களால் அமைந்த நூல் – திருக்குறள்.
9. இது, திரு என்னும் அடைமொழியைப் பெற்றுத் |திருக்குறள் என வழங்கப்பெறுகிறது.
10. இந்நூல் அறத்துப்பால்,
பொருட்பால், இன்பத்துப்பால் என முப்பெரும் (மூன்று) பிரிவுகளைக் கொண்டது.(மேலே
உள்ள box- யை படிக்கவும் )
11. இந்நூலில் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வோர் அதிகாரத்துக்கும் 10 குறட்பாக்கள் என 1330 குறட்பாக்கள் உள்ளன.
12. இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூலை முப்பால், பொதுமறை,
தமிழ்மறை எனவும் கூறுவர்.
13. திருக்குறள், உலகம் ஏற்கும் கருத்துகளைக் கொண்டு உள்ளதனால் ‘உலகப் பொதுமறை’ என வழங்கப்பெறுகிறது.
14. இது, தமிழ்மொழி யிலுள்ள அறநூல்களுள் முதன்மையானது.
15. இந்நூல் நூற்றேழு (107)
மொழிகளில்
மொழிபெயர்க்கப் பெற்றுள்ளது.
16. திருக்குறள் கற்பதனால் மனித வாழ்க்கை
செம்மையுறும்;
பண்புகள் வளரும்; உலகெலாம் ஒன்றெனும் உயர்குணம் தோன்றும்; மனிதர்களிடையே வேறுபாடுகள் மறையும்; எல்லா உயிரிடத்தும் அன்பு தழைக்கும்.
17. மனிதன் மனிதனாக வாழ மனிதன் மனிதனுக்குக் கூறிய
அறவுரைதான் திருக்குறள்.
19. உடலை நீர் தூய்மை செய்யும்; உள்ளத் தூய்மையை வெளிப்படுத்துவது வாய்மை
20. வாய்மை எனப்படுவது யாதெனில் மற்றவர்களுக்குத் தீங்கு தராத சொற்களைப்
பேசுதல்.
21. கோடிட்ட இடங்களை நிரப்புக
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
என்பி
லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.
22. திருவள்ளுவர் ஆண்டு
கணக்கிடும் முறை
கிறித்து ஆண்டு (கி.பி.) + 31 = திருவள்ளுவர் ஆண்டு.
எடுத்துக்காட்டு: 2013 +31 = 2044
(கி.பி. 2013ஐத் திருவள்ளுவர் ஆண்டு 2044 என்று கூறுவோம்.)
23. கோடிட்ட இடத்தை நிரப்புக
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு
உடைத்து.
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.
24. மாறியுள்ள குறளை முறைப்படுத்தி எழுதுக
அ. எண்என்ப எழுத்தென்ப ஏனை கண்என்ப
இவ்விரண்டும் வாழும் உயிர்க்கு?
Ans: எண்என்ப ஏனை எழுத்தென்ப
இவ்விரண்டும்
கண்என்ப வாழும்
உயிர்க்கு
ஆ. தொட்டனைத்து
மணற்கேணி வஊறும் மாந்தர்க்குக்
கற்றனைத்து அறிவு ஊறும்.?
Ans: தொட்டனைத்து ஊறும்
மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு
25. குறன் வெண்பாக்களால் ஆனதால், “குறள்” எனவும்,
மேன்மை கருதித் ‘திரு’ என்னும் அடைமொழியுடன் ‘திருக்குறள்’ எனவும் வழங்கப்பெறுகிறது. நாடு, மொழி, இனம்,
சமயம் எல்லாம் கடந்து
எக்காலத்துக்கும் பொருந்துவதாக அமைந்தமையால், இஃது ‘உலகப்பொதுமறை’ எனப் போற்றப்படுகிறது.
26. மக்கள், வாழ்வில் அடையத்தக்க உறுதிப்பொருள்களாகிய அறம், பொருள், இன்பம் என்னும் முப்பெரும் பிரிவுகளையும் விரித்து உரைப்பது திருக்குறள்.
எனவே, இந்நூல் ‘முப்பால்’ எனவும் பெயர் பெற்றது.
27. வாயுறை வாழ்ந்து, பொதுமறை, பொய்யா மொழி,
தெய்ய நூல் முதலிய
பெயர்களும் இதற்கு உண்டு. இதன் பெருமையை உணர்ந்த வீரமாமுனிவர் இலத்தீனிலும், ஜி, போப் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தனர்.
28. திருவள்ளுவமாலை என்னும் நூல், இதன்பெருமைக்கும் சிறப்புக்கும் சான்றாகத் திகழ்கிறது.
29. உருசிய நாட்டில் அணு துளைக்காத கிரெம்ளின்
மாளிகையில் உள்ள வுங்கப் பாதுவாப்பும் பெட்டகத்தில் திருக்குறளும் இடப்பெற்றுள்ளது.
30. இங்கிலாந்து நாட்டிலுள்ள அருங்காட்சியகத்தில் திருக்குறள், விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது.
31. கோடிட்ட இடத்தை நிரப்புக
முகநக நட்பது நட்பன்று
நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு
“நிறைநீர நீரவர் கேண்மை” இத்தொடரில் நட்பு
என்னும் பொருள் தரும் சொல் – கேண்மை
32. பொருளுணர்ந்து பொருத்து
பேதையார் நட்பு – தேய்பிறை போன்றது.
பண்புடையாளர் தொடர்பு – நவில்தொறும் நூல்நயம் போன்றது.
அறிவுடையார் நட்பு – வளர்பிறை போன்றது
இடுக்கண் களையும் நட்பு
– உடுக்கை இழந்தவர் கை போன்றது.
33. “பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக
பற்று விடற்கு”. இக்குறளைப்
படிக்கும்போது உதடுகள் ஒட்டும்; இதன்
பொருளோ இறைவனைப் பற்றி நிற்கும்.
34. அறம், பொருள்,
இன்பம் என முப்பாலும்
தப்பாமல் வந்த குறள் – அறன்ஈனும்
இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள்.
35. முறைமாறிய அடிகளை முறைப்படுத்தி எழுதுக.
பகையுள்ளும் பண்புள
பாடறிவார் மாட்டு
நகையுள்ளும் இன்னாது
இகழ்ச்சி?
Ans: நகையுள்ளும் இன்னாது
இகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார்
மாட்டு.
36. திருக்குறளுக்கு அந்நாளிலேயே பதின்மர் (10 பேர்) உரை எழுதியுள்ளனர். அவ்வுரைகளுள், பரிமேலழகர் உரையே சிறந்தது என்பர்
தமிழ்ச் சான்றோர்.
37. திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மர் (10):
1.
தருமர்
2.
மணக்குடவர்
3.
தாமத்தர்
4.
நச்சர்
5.
பரிதி
6.
பரிமேலழகர்
7.
திருமலையர்
8.
மல்லர்
9.
பரிப்பெருமாள்
10.
காளிங்கர்
38. இங்கிலாந்து நாட்டு மகாராணியார் விக்டோரியா
காலையில் கண்விழித்ததும் முதலில் படித்த நூல் – திருக்குறள்
39. கோடிட்ட இடத்தில் உரிய எழுத்தைக்கொண்டு
நிரப்புக
இகழ்வார்ப் பொறுத்தல் தலை (லை/ளை)
ஒறுத்தார்க்கு ஒருநாளை
இன்பம் (ரு/று )
40. மாறியுள்ள சீர்களை முறைப்படுத்துக.
இறப்பினை என்றும்
பொறுத்தல் அதனினும்
நன்று மறத்தல் அதனை.
Ans: பொறுத்தல் இறப்பினை
என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று
41. கோடிட்ட இடத்தில் உரிய விடையைத்
தேர்ந்தெழுதுக.
செவிக்குணவாவது_____
அ) புகழ்
ஆ) கேள்வி
இ) மகிழ்ச்சி
ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்______
அ) ஊற்றுக்கோல்
ஆ) அளவுகோல்
இ) துலாக்கோல்
42. இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்துக
அனைத்தானும் ஆன்ற தரும்
பெருமை
நல்லவை எனைத்தானும்
கேட்க
Ans: எனைத்தானும் நல்லவை
கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்
43. உடைமைகள் பத்து. திருக்குறளில்
பத்து அதிகாரங்கள் உடைமை என்னும் பெயரில் அமைந்துள்ளன.
44. திருக்குறளுக்கும் ஏழு என்னும் எண்ணுக்கும் பெரிதும் தொடர்புள்ளது.
45. திருக்குறள் ஏழு சீரால் அமைந்த குறள் வெண்பாக்களைக் கொண்டது.
46. ‘ஏழு’ என்னும் எண்ணுப்பெயர் எட்டுக் குறட்பாவில் இடம்பெற்றுள்ளது.
47. அதிகாரங்கள், 133. இதன் கூட்டுத்தொகை ஏழு. மொத்தக் குறட்பாக்கள் 1330. இதன் கூட்டுத்தொகையும் ஏழு.
48. கோடிட்ட இடத்தை நிரப்புக.
நற்குணங்களால் சிறந்திருத்தல் சான்றோர்க்குப் பெருமையாகும்.
தவம் என்பது பிற உயிர்களைக் கொல்லாமை.
தோல்வியை ஒப்புக்கொள்வதே சான்றாண்மையை
அளந்தறியும் உரைகல்.
மாற்றார் என்னும் சொல்லின் பொருள் பகைவர்.
தீங்கிழைத்தவர்க்கும் இனியவை செய்தல் வேண்டும்.
49.
பொருத்துக.
1.
இன்மை
– வறுமை
2.
திண்மை
– வலிமை
3.
ஆழி
– கடல்
4.
நோன்மை
– தவம்
50. “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வாண்புகழ்
கொண்டத் தமிழ் நாடு” – பாரதியார்
51. “வள்ளுவனைப் பெற்றதாய் பெற்றதே புகழ் வையகமே” என்றும், ‘இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே’ என்றும், பாவேந்தர் பாரதிதாசன் திருக்குறளைப் போற்றிப் புகழ்ந்துள்ளார்.
52. வெல்லாத தில்லை
திருவள்ளு வன்வாய் வினைத்த வற்றுள்,
பொல்லாத தில்லை
புரைதீர்ந்த வாழ்விளிலே அழைத்துச்
செல்லாத தில்லை பொதுமறை
யான திருக்குறளில்
இல்லாத தில்லை
இணையில்லை முப்பாலுக்கிந் நிலத்தே. – பாவேந்தர்
பாரதிதாசன்.
53. நாலடி, நான்மணி,
நானாற்பது, ஐந்திணை,முப்
பால், கடுகம், கோலை,
பழமொழி, மாமூலம்,
இன்னிலைய, காஞ்சியுடன், ஏலாதி என்பவே,
கைத்நிலைய வாங்கீழ்க்
கணக்கு. – பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
54. மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம் 1812இல் திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்துத்
தஞ்சையில் வெளியிட்டார்.
55. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் பொதுநெறி காட்டியவர் திருவள்ளுவர்.
56. தமிழக அரசு, தைத் திங்கள் இரண்டாம் நாளைத் திருவள்ளுவர் நாளாக அறிவித்துக் கொண்டாடி
வருகின்றது.
57. விடுபட்ட சீர்களை எழுதுக.
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை, இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.
58. “திருவள்ளுவன் வாய் விளைத்தவற்றுள்
இல்லாததில்லை இணையில்லை முப்பாலுக் கிந்நிலத்தே” — என்று
தமிழரை விம்மித முறவைப்பது இத்தெய்வநூல் (திருக்குறள்).
59. “அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்” — என்று அவ்வையார் இதன் திட்பமும்
நுட்பமும் கருதிப் புகழ்ந்துரைத்தார்.
60. தமிழ் மாதின் இனிய உயிர்நிலை என்று பாராட்டப்
பெறுவது?
– திருக்குறள்.
61. பொருத்துக
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு – வேற்றுமை அணி.
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த
இடத்து – தொழிலுவமையணி
பீலிபெய் சாகாடு மச்சிறு மப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்
– பிறிது மொழிதலணி
தீயவை தீய பயத்தலான் தீயவை
தீயினு மஞ்சப் படும் – சொற்பொருள் பின்வரு நிலையணி
62. கோடிட்ட இடங்களில் ஏற்ற சொற்களை அமைத்து
எழுதுக.
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.
வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியுந் தூக்கிச் செயல்.
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
பீலிபெய் சாகாடு மச்சிறு மப்பண்டம்
சால மிகுத்துப். பெயின்.
63. புறவய வினாக்கள்
குறளும் குறள் வலியுறுத்தும் கருத்தும் எனப்
பொருந்திக் காட்டப்பட்டுள்ளன. தவறாகப் பொருந்தியிருப்பதைக் கண்டறிக.
அ. நாடாது நட்டலில் ….. — ஆராயாது நட்புக்
கொள்ளலில் வருங்கேடு
ஆ. குணமுங் குடியுங்…..
— நட்பாராயும்
முறை
இ. மருவுக மாசற்றார்…..
— நட்புக் கொள்ளத்தக்கவரும் தள்ளத்தக்கவரும்
ஈ. கேட்டினும் முண்டோ….
— நட்பு கொள்ளத்தகாதவர்
செய்யத்தக்கதையும் செய்யத் தகாததையும்
சொல்லும் குறள் எது?
அ. உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க அள்ளற்கண்
ஆற்றறுப்பார் நட்பு
ஆ. ஆய்ந்தாய்ந்து
கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாம் துயரம் தரும்.
இ. மருவுக மாசற்றார்
கேண்மை ஒன்(று) ஈத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு.
ஈ. நாடாது நட்டலின்
கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு.
கேட்டினு முண்டோ ருறுதி கிளைஞரை நீட்டி
யளப்பதோர் கோல்’ – இக்குறள் வெளிப்படுத்துவது யாது?
அ. நட்பாராயும் முறை
ஆ. நட்பு ஆராயாத போது
நேரும் துன்பம்
இ. நட்புக்
கொள்ளலாகாதாரின் குணம்
ஈ. நட்பால்
பயன்பெறுபவரின் நிலை
ஒன்றை இழப்பதினாலும் நன்மை ஏற்படும் என
வள்ளுவர் எதனைக் கூறுகிறார்?
அ. ஆற்றறுப்பார் நட்பு
ஆ. பேதையார் கேண்மை
இ. ஒப்பிலார் நட்பு
ஈ. ஆய்ந்து கொள்ளாதான்
கேண்மை.
துன்பமும் நமக்கு உதவுவதாகும் என உணர்த்தும்
குறள் எது?
அ. அழச்சொல்லி யல்ல திடித்து வழக்கறிய வல்லார்
நட் பாய்ந்து கொளல்
ஆ. கெடுங்காலைக்
கைவிடுவார் கேண்மை யடுங்காலை உள்ளினு முள்ளஞ் சுடும்.
இ. கேட்டினு முண்டோ
ருறுதி கிளைஞரை நீட்டி யளப்பதோர் கோல்
ஈ. உள்ளற்க உள்ளஞ்
சிறுகுவ கொள்ளற்க அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.
கீழுள்ளனவற்றுள் எது ‘ஊதிய மென்ப தொருவற்குப்
பேதையர் கேண்மை யொரீஇ விடல்’ எனும் குறட்கருத்துக்கு வலிமை தருகிறது.
அ. ஒருவர் பொறை இருவர் நட்பு
ஆ. தெளிவிலார் நட்பின்
பகை நன்று
இ. குற்றம் பார்க்கின்
சுற்றம் இல்லை
ஈ. கோடி பெறினும்
குன்றுவசெய்யார் பெரியோர்
இரு குறட்பாக்களும் அவற்றைப் பற்றிய
முடிவுகளும் கொடுக்கப் பட்டுள்ளன. சரியான முடிவைத் தேர்ந்தெடுக்கவும்.
குறள் 1 குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்துங்
கொளல் வேண்டும் நட்பு.
குறள் 2 கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை யடுங்காலை
உள்ளினு முள்ளஞ்
சுடும்.
முடிவு
அ. இரு குறள்களும் ஏற்கத்தக்கவர் யாவர் என்பது
பற்றிக் கூறுகின்றன.
ஆ. இரு குறள்களும்
தவிர்க்கத்தக்கவர் யாவர் என்பது பற்றிக் கூறுகின்றன.
இ. குறள் 1 ஏற்கத்தக்கவர் பற்றியும் குறள் 2 தவிர்க்கத்தக்கவர் யாவர் என்பது பற்றியும்
கூறுகின்றன.
ஈ. குறள் 1 தவிர்க்கத்தக்கவர் யாவர் என்பது பற்றியும்
குறள் 2 ஏற்கத்தக்கவர் யாவர் என்பது பற்றியும்
கூறுகின்றன.
‘சேரிடம் அறிந்து சேர்’ எனும் ஆத்திசூடிக்
கருத்தை எதிர்மறையில் உணர்த்தும் திருக்குறள் அடி.
அ. பேதையார் கேண்மை ஒரீஇ விடல்
ஆ. இனனும் அறிந்து
யாக்கநட்பு
இ. கொடுத்துங் கொளல்
வேண்டும் நட்பு
ஈ. கைவிடுவார் கேண்மை
அடுங்காலை உள்ளினும் உள்ளஞ்சுடும்.
‘வளி முதலா எண்ணிய மூன்று’ எனும் திருக்குறளில்
குறிக்கப்படும் தொகை பெயர்களாகக் கீழே உள்ளன அவற்றுள் பொருந்தாதது எது?
அ. முக்குணம்
ஆ. முப்பிணி
இ. மும்மருந்து
ஈ. முப்பொருள்
நோயுறாதிருக்க உண்ணும் முறையினைத்
தெரிவிக்கும் குறள் எது?
அ. உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான்
கருதிச் செயல்
ஆ. அற்றால் அளவறிந்து
உண்க அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கு மாறு
இ. தீயள வன்றித்
தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிக் கெடும்.
ஈ. உற்றவன் தீர்ப்பான்
மருந்துழைச் செல்வானென் றப்பானாற் கூற்றே மருந்து
இழிவறிந் துண்பான்கண் இன்பம் போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய் – இக்குறளிலுள்ள இலக்கிய நயம் யாது?
அ. விதி உவமானம், எதிர்மறை உவமேயம்
ஆ. விதி உவமேயம், எதிர்மறை உவமானம்
இ. உவமானமும் உவமேயமும்
வெவ்வேறு கருத்தை வலியுறுத்துகின்றன.
ஈ. உவமானமும் உவமேயமும்
ஒரே தகவலைச் சொல்லுகின்றன
நான்கு குறட்பாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அவற்றுள் ஒன்றில் பிறரைப் பழிக்கும் குறிப்பு உள்ளது. அது எது?
அ. காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.
ஆ. மன்னுயிர் எல்லாம்
துயிற்றி அளித்திரா என்னல்ல தில்லை துணை.
இ. கொடியார் கொடுமையின்
தாம்கொடிய இந்நாள் நெடிய கழியும் இரா.
ஈ. உள்ளம் போன்
றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்னோவென் கண்.
“மறைப்பேன்மன் யான்இஃதோ நோயை இறைப்பவருக்கு
ஊற்றுநீர் போல மிகும்”- இக்குறளில் காணப்படும் இலக்கிய நயம் யாது?
அ. இரண்டு எதிர்நிலைச் செயல்களின் விளைவு ஒரே
தன்மையாய் இருப்பதை எடுத்துக்காட்டுதல்.
ஆ. இரண்டு எதிர்நிலை
செயல்களின் விளைவும் வெவ்வேறு தன்மையானதெனக் காட்டுதல்
இ. இரண்டு எதிர்நிலை
விளைவுகளுக்கு ஒரு செயலைக் காட்டுதல்
ஈ. ஒரே தன்மையான
செயலால் வெவ்வேறு விளைவுகளை எடுத்துக்காட்டுதல்.
இரண்டு எதிர்நிலைச் செயல்களுக்கான காரணம்
(ஏது) ஒன்றே எனக் காட்டும் குறள் எது?
அ. மறைப்பேன்மன் யானிஃதோ நோயை யிறைப்பவர்க்
கூற்றுநீர் போல மிகும்.
ஆ. கரத்தலு மாற்றேனிந்
நோயை செய்தார்க்
குரைத்தலும் நாணுத்
தரும்.
இ. காமமு நாணு
முயிர்காவாத் தூங்குமென்
நோனா வுடம்பி னகத்து
ஈ. இன்பங் கடல் மற்றுக்
காம மஃதடுங்கால் துன்ப மதனிற் பெரிது.
காமமு நாணு முயிர்காவாத் தூங்குமென்’ இவ்வடியை
விளக்கும் பொருத்தமான வரைவுக் குறிப்பு எது?
அ. செயல் இரண்டு — விளைவு ஒன்று
ஆ. செயல் ஒன்று —
விளைவு இரண்டு
இ. பொருள் இரண்டு —
செயல் ஒன்று
ஈ. செயல் இரண்டு — விளைவு
இரண்டு
கீழுள்ள குறட்பாவில் எத்தகைய குறிப்பு உள்ளது?
துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.
அ. தோழி தலைவிக்கு உதவாமை
ஆ. தலைவி தோழிக்கு
உதவாமை
இ. தலைவன் தலைவிக்கு
உதவாமை
ஈ. தலைவி தலைவனுக்கு
உதவாமை
காமநோயுற்ற தலைவி தன்னைத் தானே தேற்றிக்
கொள்வதாக அமையும் குறள் எது?
அ. துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.
ஆ இன்பம் கடல்மற்றுக்
காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.
இ. மன்னுயிர் எல்லாம்
துயிற்றி அளித்திரா
என்னல்ல தில்லை துணை.
ஈ. உள்ளம்போன்
றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோவென் கண்.
“கொடியார் கொடுமையிற் றாங்கொடிய விந்நாள் நெடிய
கழியு மிரா” தலைவியின் எத்தகு செயல் இக்குறளில் வெளிப்படுகிறது.
அ. துன்பத்தால் இயற்கையைப் பழித்தல்
ஆ. இன்ப நினைவால் துன்ப
நினைவை மறத்தல்
இ. தன்னைத்தானே
தேற்றிக் கொள்ளல்
ஈ. பிறரைக்
கடிந்துரைத்தல்
64. திருக்குறளுக்கு வழங்கும் வேறுபெயர்கள் : 1. முப்பானூல், 2. உத்தரவேதம், 3. தெய்வநூல், 4. திருவள்ளுவம்,
5. பொய்யாமொழி, 6. வாயுறை வாழ்த்து, 7. தமிழ்மறை, 8. பொதுமறை,
9. உலகப் பொதுமறை, 10. முதுமொழி.
65. திருவள்ளுவருக்கு வழங்கும் வேறு பெயர்கள் : 1. நாயனார், 2. தேவர், 3. தெய்வப் புலவர், 4. நான்முகனார், 5. மாதானுபங்கி 6. செந்நாப்போதார், 7. பெருநாவலர், 8. புலவர், 9. பொய்யில் புலவர்
முதலிய பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.
66. “என்றும் புலரா தியாணர்நாட் செல்லுகினும்
நின்றவர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய்க் – குன்றாத செந்தளிர்க் கற்பகத்தின்
தெய்வத் திருமலர்போன்ம் மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்” – இறையனார்.
67. பின்வருவனவற்றுள்
பயின்று வந்துள்ள அணியை கண்டுபிடி:
உதவி வரைத்தன் றுதவி உதவி
செயப்பட்டார் சால்பின்
வரைத்து. – சொற்பொருட்பின்வருநிலையணி
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல்
தலை. – உவமையணி
இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை – எடுத்துக்காட்டு
உவமையணி
68. கோடிட்ட இடங்களில் ஏற்ற சொற்களை அமைத்து
எழுதுக:
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.
ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொ னோற்பாரிற் பின்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
தஞ்சல் அறிவார் தொழில்.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை
69. திருக்குறளின் பெருமை கேளீர்!
தினையளவு போதாச் சிறுபுல் நீர் நீண்ட பனையளவு
காட்டும் படித்தால் – கபிலர்
வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார்
உள்ளுவதெல்லாம் அளந்தார் ஓர்ந்து – பரணர்
“உள்ளுதோ றுள்ளுதோ றுள்ளம் உருக்குமே வள்ளுவர்
வாய் மொழி மாண்பு” — மாங்குடி மருதனார்
“பொய்ப்பால பொய்யேயாய்ப் போயினபொய் யல்லாத
மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே – முப்பாலின் தெய்வத் திருவள் ளுவர்செய்
திருக்குறளால் வையத்து வாழ்வார் மனத்து” — தேனிக்குடி கீரனார்
“புத்தகம் நூறு புரட்டிக் களைப்புற்றுச்
சித்தம் கலங்கித் திகைப்பதேன் – வித்தகன் தெய்வப் புலவர் திருவள் ளுவர்சொன்ன
பொய்யில் மொழிஇருக்கும் போது” — கவிமணி
“செந்தமிழ்ச் செல்வத் திருக்குறளை நெஞ்சமே
சிந்தனை செய்வாய் தினம்” — கவிமணி
“நீதித்திருக்குறளை நெஞ்சாரத் தம் வாழ்வில்
ஒதித்தொழுது எழுக ஒர்ந்து” — கவிமணி
திருக்குறள் உலகம் போற்றும் பெருநூல். எந்நாட்டினரும், எக்கொள்கையினரும் விரும்பும் அறிவுக் களஞ்சியம்.
“பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ? பாரிலுள்ள நூலெல்லாம் வள்ளுவர் செய் நூலாமோ?” என்று திருவள்ளுவமாலை போற்றுகிறது.
70. மாறியிருப்பவர்
யார்?
அ. நான்முகனார்
ஆ நக்கீரர்
இ. செந்நாப் போதார்
ஈ. பெருநாவலர்
71. திருக்குறள் பற்றியதான கீழுள்ள கூறுகளுள் எது
சரி?
அ. அறத்துப்பால், காமத்துப்பால் ஆகிய இரண்டுமே புலவர் கூற்றாக
உள்ளன. அறத்துப்பால், காமத்துப்பால் ஆகிய இரண்டுமே கதைமாந்தர்
கூற்றாக உள்ளன.
ஆ. அறத்துப்பால் புலவர்
கூற்றாகவும் காமத்துப்பால் கதை மாந்தர் கூற்றாகவும் உள்ளன.
இ. அறத்துப்பால்
கதைமாந்தர் கூற்றாகவும் காமத்துப்பால் புலவர் கூற்றாகவும் உள்ளன.
72. கீழுள்ள எதனிலிருந்து தி.பி. ஆண்டு
கணக்கிடப்படுகிறது?
அ)100
ஆ) கி.பி. 31
இ) கி.மு.33
ஈ) கி.மு 31
73. ஆகுபெயர் உள்ள பாடலடி எது?
அ) ஒழுக்கம் உடைமை
குடிமை
ஆ) ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர்
இ) அழுக்காறு உடையான்கண் ஆக்கம்
ஈ) உலகத்தோடு ஒட்ட ஒழுகல்
74. உள்ளதன் பெருமையும் இல்லதன் சிறுமையும்
உணர்த்தும் குறள் எது?
அ. ஒழுக்கம் விழுப்பம்
தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்.
ஆ. அழுக்கா றுடையான்கண்
ஆக்கம்போன் றில்லை ஒழுக்க மிலான்கண் உயர்வு
இ. ஒழுக்கம்
உடையார்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல்
ஈ. உலகத்தோடொட்ட ஒழுகல்
பலகற்றும் கல்லார் அறிவிலா தார்.
75. “ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து” – இக்குறள் ஒழுக்கத்தின் எந்நிலையை உணர்த்துகிறது.
அ. சிறப்பு ஆ. வரையறை இ. பயன் ஈ.
செயல்
76. கீழுள்ள குறள்களுள் எது ஒழுக்கத்தின்
தன்மையினைக் கூறுகிறது?
அ. ஒழுக்கம் விழுப்பம்
தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்.
ஆ. பரிந்தோம்பிக் காக்க
ஒழுக்கம்; தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை.
இ. விரைந்து
தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்.
ஈ. இணரூழ்த்தும் நாறா
மலரனையர் கற்ற(து) உணர விரித்துரையா தார்.
77. அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும் பிரிவோர்
இடத்துண்மை யான். -இக்குறளில் யாருடைய தேற்றம் குறிக்கப்படுகிறது?
அ. அறிவைப் பெற்றவர்கள்
ஆ. அறிந்தவர்கள்
இ. தெளிவு பெற்றவர்கள்
ஈ. பிரிந்தவர்கள்
78. அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
79. தேறியார்க் குண்டோ தவறு?- இதனுள் படர்க்கையில் குறிக்கப்பெறுபவர் யார்?
அ. தலைவன் ஆ. தலைவி இ.
தோழி ஈ. வேறொருவர்
இன்னாதி னன்இல்ஊர் வாழ்தல்; அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு – இதனுள் தோழியைக்
குறிப்பால் உணர்த்தும் சொல் எது?
அ. இனன் ஆ.ஊர் இ.இனியார் ஈ. இல்ஊர்
காதல் தலைவியின் எண்ணத்தை எதிர்மறுப்பதாக
அமையும் குறள் எது?
அ. அரிதரோ தேற்றம்
அறிவுடையார் கண்ணும் பிரிவோர் இடத்துண்மை யான்.
ஆ. அளித்தஞ்சல் என்றவர்
நீப்பின் தெளித்தசொல் தேறியார்க் குண்டோ தவறு
இ. ஓம்பின் அமைந்தார்
பிரிவோம்பல்;
மற்றவர் நீங்கின்
அரிதால் புணர்வு.
ஈ. பிரிவுரைக்கும்
வன்கண்ணர் ஆயின் அரிதவர் நல்குவர் என்னும் நசை.
80. துறைவன் துறந்தமை தூற்றாகொன் முன்கை இறைஇறவா
நின்ற வளை?
– இக்குறளின் தலைவியின்
உள்ள இயல்பு எத்தகையதாகக் காணப்படுகிறது.
அ. தலைவனைப் பழித்தல்
ஆ. தன்னைத் தேற்றல்
இ. தோழியொடு புலத்தல்
ஈ. தலைவனொடு புலத்தல்
81. அளித்தஞ்சல் என்றவர் தீப்பின் தெளித்தசொல்
தேறியார்க் குண்டோ தவறு – இக்குறளின் பொருளை அறிந்து கீழுள்ள கூற்றுகளுள்
சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்.
அ. அளித்தஞ்சல், தெளித்தசொல் ஆகியன
இரண்டும் தலைவனுக்குரியனவாகும்.
ஆ. அளித்தஞ்சல்
தலைவனும் தெளித்த சொல் தலைவிக்கும் உரியன
இ. அளித்தஞ்சல்
தலைவிக்கும் தெளித்த சொல் தலைவனுக்கும் உரியன.
ஈ. அளித்தஞ்சல், தெளித்த சொல் ஆகிய இரண்டும் தலைவிக்கு உரியன.
82. கீழுள்ள எக்குறளில் ஒரே சொல் மாறுபட்ட
இருபொருளில் வந்துள்ளது.
அ. இன்னா தினனில்லூர்
வாழ்தல் அதனினும் இன்னா தினியார் பிரிவு
ஆ. தொடிற்சுடின் அல்லது
காமநோய் போல விடிற்சுடர் ஆற்றுமோ தீ
இ. அரிதாற்றி அல்லனோய்
நீக்கிப் பிரிவாற்றிப் பின்னிருந்து வாழ்வோர் பலர்
ஈ. ஓம்பின் அமைந்தார்
பிரிவோம்பல் மற்றவர் நீங்கின்
அரிதால் புணர்வு.
83. மக்கள் பயனுள்ள முறையில் வாழ வழிகாட்டிகளாக
அமைபவை அறநூல்கள். அறநூல்களில் ‘உலகப் பொது மறை’ என்று போற்றப்படும் சிறப்புப் பெற்றது நம்
திருக்குறள். திருக்குறளில் இல்லாத செய்திகளே இல்லை. ஏழு சொற்களில் மனிதர்களுக்கு அறத்தைக் கற்றுத்தரும்
திருக்குறளைப் பயிலுவோம்;
வாழ்வில்
பின்பற்றுவோம்.
84. எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை
வகுத்துக் கூறியுள்ளார்.
85. “திருக்குறளில் இல்லாததும் இல்லை, சொல்லாததும் இல்லை” என்னும் வகையில் சிறந்து
விளங்குகிறது.
86. திருக்குறளுக்கு உலகப் பொதுமறை, வாயுறை வாழ்த்து முதலிய பல சிறப்புப் பெயர்கள் வழங்குகின்றன.
87. நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் திருக்குறள்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
88. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
மக்களுக்கு மகிழ்ச்சி தருவது
அ) ஊக்கமின்மை.
ஆ) அறிவுடைய மக்கள்
இ) வன்சொல்
ஈ. சிறிய செயல்
ஒருவர்க்குச் சிறந்த அணி
அ) மாலை
ஆ) காதணி
இ) இன்சொல்
ஈ) வன்சொல்
89. பொருத்தமான சொற்களைக் கொண்டு நிரப்புக.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.”
90. பின்வரும் செய்திக்குப் பொருத்தமான
திருக்குறள் எது எனக் கண்டறிந்து எழுதுக.
“என் மகனின் வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சி
அளிக்கிறது. அவனைப் பெற்ற பொழுதைவிட இப்போது அதிகமாக மகிழ்கிறேன்” என்று
மகிழ்ச்சியுடன் கூறினார்.
அ) செயற்கரிய செய்வார்
பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்
ஆ) ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
இ) இனிய உளவாக இன்னாத
கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
91. உலகில் வாழும் மக்கள் அனைவருக்கும் சிறப்பான
அறங்களை வலியுறுத்தியவர் திருவள்ளுவர்
92. சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக.
விருந்தினரின் முகம் எப்போது வாடும்?
அ) நம் முகம் மாறினால்
இ) நாம் நன்கு
வரவேற்றால்
ஆ) நம் வீடு மாறினால்
ஈ) நம் முகவரி மாறினால்
நிலையான செல்வம்
அ) தங்கம்
ஆ) பணம்
இ) ஊக்கம்
ஈ) ஏக்கம்
ஆராயும் அறிவு உடையவர்கள்………. சொற்களைப் பேசமாட்டார்கள்.
அ) உயர்வான
ஆ) விலையற்ற
இ) பயன்தராத
ஈ) பயன் உடைய
93. இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி
எழுதுக.
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் ஊக்கம் அசைவுஇலா
உடையான் உழை.
விடை: ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலா
ஊக்கம் உடையான் உழை.
உள்ளுவது உயர்வுள்ளல் எல்லாம் மற்றது தள்ளாமை
தள்ளினும் நீர்த்து.
விடை: உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை
நீர்த்து
“ஊக்கமது கைவிடேல்” என்பது ஔவையாரின்
ஆத்திசூடி. இவ்வரியோடு தொடர்புடைய திருக்குறளைத் தேர்ந்தெடுக்க.
அ. விருந்து புறத்ததாத் தாணுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் அன்று.
ஆ. உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்.
சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க சொல்லில்
பயன்இலாச் சொல்.
94. பின்வரும் கதைக்குப் பொருத்தமான
திருக்குறளைத் தேர்ந்தெடுக்க.
“போட்டியில் வெற்றியும் தோல்வியும் இயல்புதான்.
அதற்காகப் போட்டியிடாமல் இருக்கக் கூடாது. நாம் எந்த அளவு ஊக்கத்துடன்
செயல்படுகிறோமோ அந்த அளவிற்கு வெற்றி கிடைக்கும். எனவே நீ போட்டியில் கலந்துகொள்”
என்றார் அப்பா. உற்சாகம் அடைந்தான் வேலன். “நாளை பெயர் கொடுத்துவிடுகிறேன் அப்பா”
என்றான்.
அ. மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும்
விருந்து
ஆ. வெள்ளத்து அனைய
மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு
இ. அரும்பயன் ஆயும்
அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத
சொல்.
95. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
ஏழைகளுக்கு உதவி செய்வதே……… ஆகும்.
அ) பகை ஆ) ஈகை இ) வறுமை ஈ) கொடுமை
பிற உயிர்களின்…….க் கண்டு வருந்துவதே அறிவின்
பயனாகும்
அ) மகிழ்வை ஆ) செல்வத்தை
இ) துன்பத்தை
ஈ) பகையை
உள்ளத்தில்……….. இல்லாமல் இருப்பதே சிறந்த
அறமாகும்.
அ) மகிழ்ச்சி
ஆ) மன்னிப்பு
இ) துணிவு
ஈ) குற்றம்
96. இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி
எழுதுக.
வறியார்க்கு ஒன்று ஈகைமற்று ஈவதே எல்லாம்
குறியெதிர்ப்பை உடைத்து
நீரது.
விடை : வறியார்க்குஒன்று
ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது
உடைத்து.
எனைத்தானும் யார்க்கும் எஞ்ஞான்றும்
மனத்தானாம்
மாணாசெய் தலை யாமை.
விடை: எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.
97. “அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத்
தரித்த குறள்” – ஔவையார்
98. மனித சமுதாயத்தை ஆழ்ந்து நோக்கி, அஃது எவ்வாறு வாழ வேண்டும் என்று நன்கு
சிந்தித்து எழுதப்பட்ட நூல் திருக்குறள்.
99. தமிழ்நூல்களில் ‘திரு’ என்னும் அடைமொழியோடு
வருகின்ற முதல் நூல் திருக்குறள் ஆகும்.
100.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
வாய்மை எனப்படுவது……
அ) அன்பாகப் பேசுதல்
ஆ) தீங்குதராத சொற்களைப் பேசுதல்
இ) தமிழில் பேசுதல்
ஈ) சத்தமாகப் பேசுதல்
……….செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்.
அ) மன்னன்
ஆ) பொறாமை இல்லாதவன்
இ) பொறாமை உள்ளவன்
ஈ) செல்வந்தன்
101. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
……..ஒரு நாட்டின் அரணன்று.
அ) காடு
ஆ) வயல்
இ) மலை
(ஈ) தெளிந்த நீர்
மக்கள் அனைவரும்……… ஒத்த இயல்புடையவர்கள்.
அ) பிறப்பால்
ஆ) நிறத்தால்
இ) குணத்தால்
ஈ) பணத்தால்
102. பின்வரும் குறட்பாக்களில் உவமையணி
பயின்றுவரும் குறளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
அ. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை
யான்.
ஆ. வினையால் வினையாக்கிக் கோடல் தனைகவுள்
யானையால் யானையாத் தற்று.
இ. கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க
கொளல்.
103. திருக்குறள் நீதிநூல் மட்டுமன்று;
அஃது ஒரு வாழ்வியல் நூல்: எக்காலத்திற்கும் எல்லா மக்களுக்கும் பொருந்தும் அறக்கருத்துகளைக் கொண்ட நூல்.
104. திருக்குறளின் பெருமையை விளக்க, ‘திருவள்ளுவ மாலை’ என்னும் நூல் எழுதப்பட்டிருப்பதே அதற்குச்
சான்றாகும்.
105. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
புகழாலும் பழியாலும் அறியப்படுவது
அ) அடக்கமுடைமை
ஆ) நாணுடைமை
இ) நடுவுநிலைமை
ஈ) பொருளுடைமை
பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள்
அ) வலிமையற்றவர்
ஆ) கல்லாதவர்
இ) ஒழுக்கமற்றவர்
ஈ) அன்பில்லாதவர்
‘வருமுன்னர்’ எனத் தொடங்கும் குறளில் பயின்று
வந்துள்ள அணி
அ) எடுத்துக்காட்டு
உவமை அணி
ஆ) தற்குறிப்பேற்ற அணி
இ) உவமை அணி
ஈ) உருவக அணி
106. திருக்குறளைச் சீர்பிரித்து எழுதுக.
அ. தக்கார் தகவிலரெ ன்பது அவரவர் எச்சத்தால்
காணப்படும்.
விடை : தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால்
காணப் படும்
ஆ. தொடங்கற்க எவ்வினையு
மெள்ளற்க முற்று மிடங்கண்ட பின் அல்லது.
விடை: தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட
பின்அல் லது.
107. கோடிட்ட இடத்தை நிரப்புக.
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.
108. சீர்களை முறைப்படுத்தி எழுதுக.
யாழ்கோடு அன்ன கொளல் கணைகொடிது
வினைபடு பாலால் செவ்விதுஆங்கு.
விடை : கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல்”
109. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
அரசரை அவரது……… காப்பாற்றும்.
அ) செங்கோல்
ஆ) வெண்கொற்றக்குடை
இ) குற்றமற்ற ஆட்சி
ஈ) படை வலிமை
சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும்
……….. தகுதி அறிந்து பேச வேண்டும்.
அ) சொல்லின்
ஆ) அவையின்
இ) பொருளின்
ஈ) பாடலின்
110.சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக.
ஆண்மையின் கூர்மை…………
அ) வறியவருக்கு உதவுதல்
ஆ) பகைவருக்கு உதவுதல்
இ) நண்பனுக்கு உதவுதல்
ஈ) உறவினருக்கு உதவுதல்
வறுமை வந்த காலத்தில் குறையாமல் வாழ வேண்டும்.
அ) இன்பம்
ஆ) தூக்கம்
இ) ஊக்கம்
ஈ) ஏக்கம்
111. பொருத்துக
இன்பம் தருவது – பண்புடையவர் நட்பு
நட்பு என்பது –
சிரித்து மகிழ மட்டுமன்று
பெருமையை அழிப்பது –
குன்றிமணியளவு தவறு
பணிவு கொள்ளும் காலம் –
செல்வம் மிகுந்த காலம்
பயனின்றி அழிவது –
நற்பண்பில்லாதவன் வெற்ற பெருஞ்செல்வம்
112. தருமர், மணக்குடவர்,
தாமத்தர், நச்சர், பரிதி,
பரிமேலழகர், திருமலையர், மல்லர்,
பரிப்பெருமாள், காளிங்கர் ஆகிய பதின்மரால் திருக்குறளுக்கு
முற்காலத்தில் உரை எழுதப்பட்டுள்ளது. இவ்வுரைகளுள் பரிமேலழகர் உரையே சிறந்தது என்பர்.
113. உலகின் பல மொழிகளிலும் பன்முறை
மொழிபெயர்க்கப்பட்டதுடன்,
இந்திய மொழிகளிலும் தன்
ஆற்றல் மிக்க அறக் கருத்துகளால் இடம் பெற்றது திருக்குறள். தமிழில் எழுதப்பட்ட
உலகப் பனுவல் இந்நூல்.
114. பாடலின்
பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக.
பாடல்:
ஆண்டில் இளையவனென்று
அந்தோ அகந்தையினால்
ஈண்டிங்கு இகழ்ந்தென்னை
ஏளனம்செய் – மாண்பற்ற
காரிருள்போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி சின்னப் பயல்.
விடை: ஆ) மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று
விடல்.
115. பொருளுக்கேற்ற அடியைக் கண்டுபிடித்துப்
பொருத்துக
பசுமண் கலத்துநீர் பெய்திரீஇ யற்று — சுடாத மண்கலத்தில் நீரூற்றி வைப்பதைப் போல
தத்தம் கருமமே
கட்டளைக்கல் — ஒருவனின் செயல்பாடுகளே உரசி அறியும் உரைகல்
அனைத்தானும் ஆன்ற
பெருமை தரும் — அவ்வளவிற்குப் பெருமை உண்டாக்கும்.
116. தீரா இடும்பை தருவது எது?
அ. ஆராயாமை, ஐயப்படுதல்
ஆ. குணம், குற்றம்
இ. பெருமை, சிறுமை
ஈ. நாடாமை, பேணாமை
117. சொல்லுக்கான பொருளைத் தொடரில் அமைத்து எழுதுக.
அ) நுணங்கிய கேள்வியர் – நுட்பமான கேள்வியறிவு உடையவர்.முகிலன்
நுட்பமான கேள்வியறிவு உடையவனாக இருந்தான். அதனால் பெரியோரிடத்துப் பணிவான
சொற்களில் பேசுகிறான்.
ஆ) பேணாமை – பாதுகாக்காமை. அப்பாவின்
நூலைப் பாதுகாக்காமையால் இனியன் பழைய பேப்பர் வியாபாரியிடம் போட்டுவிட்டான்.
இ) செவிச் செல்வம் – கேட்பதால் பெறும் அறிவு. அறிஞர்களின்
அறிவுரைகளைக் கேட்பதால் பெறும் அறிவு தக்க சமயத்தில் பேச்சுப் போட்டியில்
பேசுவதற்கு பயன்பட்டது.
118. பொருளுக்கேற்ற அடியைக் கண்டுபிடித்து
பொருத்துக.
ஐந்து சால்புகளில் இரண்டு
அ) வானமும் நாணமும்
ஆ) நாணமும் இணக்கமும்
இ) இணக்கமும்
சுணக்கமும்
ஈ) இணக்கமும் பிணக்கமும்
பொருளுக்கேற்ற அடியைப் பொருத்துக.
119. எய்துவர் எய்தாப் பழி – இக்குறளடிக்குப்
பொருந்தும் வாய்பாடு எது?
அ) கூவிளம் தேமா மலர்
ஆ) கூவிளம் புளிமா நாள்
இ) தேமா புளிமா காசுஈ)
புளிமா தேமா பிறப்பு
120. துன்பப்படுபவர்…….
அ) தீக்காயம் பட்டவர்
ஆ) தீயினால் சுட்டவர்
இ) பொருளைக் காக்காதவர்
ஈ) நாவைக் காக்காதவர்
121. பின்வரும் நாலடியார் பாடலின் பொருளுக்குப்
பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக.
மலைமிசைத் தோன்றும்
மதியம்போல் யானைத்
தலைமிசைக் கொண்ட
குடையர் நிலமிசைத்
துஞ்சினார்
என்றெடுத்துத் தூற்றப்பட் டாரல்லால்
எஞ்சினார் இவ்வுலகத்
தில்
அ) ஒன்றா உலகத்து
உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன்று இல்
ஆ) நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை
உடைத்துஇவ் வுலகு.
இ) அளவறிந்து வாழாதான்
வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்.
122. ஒப்புரவு என்பதன் பொருள்……
அ) அடக்கமுடையது
ஆ) பண்புடையது
இ) ஊருக்கு உதவுவது
ஈ) செல்வமுடையது
123. பொருத்துக
அ) வாழ்பவன் –
ஒத்ததறிபவன்
ஆ) வாழாதவன் –
இசையொழிந்த வல்
இ) தோன்றுபவன் – புகழ்
தரும் பண்புனவன்
ஈ) வெல்ல நினைப்பவன் –
காத்திருப்பவன்
124. விரைந்து கெடுபவன் யார்?
அ) பிறருடன் ஒத்துப் போனவன், தன் வலிமை அறிந்தவன், தன்னை உயர்வாக நினைப்பவன்.
ஆ) பிறருடன் ஒத்துப்
பாகாதவன், தன் வலிமை அறியாதவன், தன்னை உயர்வாக நினைக்காதவன்.
இ) பிறருடன் ஒத்துப்
போனவன், தன் வலிமை அறிந்தவன், தன்னை உயர்வாக நினைக்காதவன்.
ஈ) பிறருடன் ஒத்துப் போகாதவன், தன் வலிமை அறியாதவன், தன்னை உயர்வாக நினைப்பவன்.
125. வேளாண்மை செய்தற் பொருட்டு – பொருள் கூறுக. – உதவி செய்வதற்கே ஆகும்.
126. பற்று தங்கியவனுக்கு உண்டாவது – பற்றற்றவனைப்
பற்றுவதால் உண்டாவது?
அ) பற்றுகள் பெருகும் –
பொருள்களின் இன்பம் பெருகும்
ஆ) பற்றுகள் அகலும் –
பொருள்களின் துன்பம் அகலும்
இ) பொருள்களின் துன்பம் அகலும் – பற்றுகள் அகலும்
ஈ) பொருள்களின் இன்பம்
பெருகும் – பற்றுகள் பெருகும்
127. மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து ……………….
நினை.
அ) முகக்குறிப்பை
அறிந்தவரை
ஆ) எண்ணியதை எண்ணியவரை
இ) மறதியால் கெட்டவர்களை
ஈ) கொல்லேர் உழவரை
128. பொருள் கூறுக.
அ) ஏமம் – பாதுகாப்பு
ஆ) மருந்துழைச்
செல்வான் – மருந்தாளுநர்.
129. தமிழ்நாடு அரசு 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையினை, கன்னியாகுமரியில் நிறுவியுள்ளது. திருவள்ளுவரின் நினைவைப் போற்றும் வகையில்
வேலூரில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது.
130. கடலின் பெரியது
அ) உற்ற காலத்தில்
செய்த உதவி
ஆ) பயன் ஆராயாமல் ஒருவன் செய்த உதவி
இ) திணையளவு செய்த உதவி
131.பின்வரும் நாலடியார் பாடலின் பொருளுக்குப்
பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக.
நல்லார் நயவர் இருப்ப
நயம் இலாக்
கல்லார்க் கொன்றாகிய
காரணம் – தொல்லை
வினைப்பயன் அல்லது
வேல்நெடுங் கண்ணாய்
நினைப்ப வருவதொன் றில்
அ) இருவேறு உலகத்து
இயற்கை; திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு.
ஆ) நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம்
செயற்கு
இ) ஊழில் பெருவலி யாஉள
மற்று ஒன்று
சூழினும் தான்முந்து
உறும்.
132. பொருள் கூறுக.
Answer:
வெகுளி – கோபம்
புணை – தெப்பம்
ஏமம் – பாதுகாப்பு
திரு – செல்வம்
133. வையகமும் வானகமும் ஆற்றலரிது – எதற்கு?
அ) செய்யாமல் செய்த உதவி
ஆ) பயன் தூக்கார் செய்த
உதவி
இ) தினைத்துணை நன்றி
ஈ) செய்ந்நன்றி
134. பகையும் உளவோ பிற? – பொருள் கூறுக.
Answer:
முகமலர்ச்சியையும்
அகமகிழ்ச்சியையும் கொல்லுகின்ற சினத்தை விட வேறுபகை இல்லை.
135. பொருத்திக் காட்டுக
அ) வையத்துள்
வாழ்வாங்கு வாழ்பவன் – 1.
சேர்ந்தாரைக் கொல்லி
ஆ) பயன்தூக்கார் செய்த
உதவி – 2. ஞாலத்தின் மாணப் பெரிது
இ) சினம் – 3. தெய்வத்துள் வைக்கப்படும்
ஈ) காலத்தினாற் செய்த
நன்றி – 4. நன்மை கடலின் பெரிது
Answer: ஆ) 3, 4, 1, 2
தொடை
தொடை என்பது தொடுக்கப்படுவது எனப்
பொருள்படும். மலர்களைத் தொடுப்பது போலவே, சீர்களிலும் அடிகளிலும் மோனை முதலியன அமையத்
தொடுப்பது தொடை எனப்படும்.
பாவின் ஓசையின் பதத்திற்கும்
சிறப்புக்கும் இத்தொடை உறுப்பு வேண்டுவதாகும். தொடையற்ற பாட்டு நடையற்று போகும்
என்பது பழமொழி.
தொடை ஐந்துவகைப்படும். அவை
1.
மோனைத்
தொடை
2.
எதுகைத்
தொடை
3.
இயைபுத்
தொடை
4.
முரண்
தொடை
5.
அளபெடைத்
தொடை என்பனவாகும்.
மோனைத் தொடை
செய்யுளில் முதலெழுத்து ஒன்றி வருவது மோனை எனப்படும் (மோனை – முதன்மை)
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்த
பின்
தன்நேஞ்சே
தன்னைச் சுடும்
இக்குறட்பாவில் முதலடியின்
முதலெழுத்தும் (த) இரண்டாமடியின் முதலெழுத்தும் (த) ஒன்றி வந்துள்ளன. இவ்வாறு அடிகளில் முதல் எழுத்து ஒன்றி
வருவது அடிமோனையாகும்.
துப்பார்க்குத் துப்பாய
துப்பாக்கித் துப்பார்க்கு
இத்தொடரில் உள்ள நான்கு
சீர்களிலும் முதலெத்து (து) ஒன்றாக வந்துள்ளன. இவ்வாறு சீர்கள்தோறும் முதலெழுத்து
ஒன்றி வருவது சீர்மோனை எனப்படும். சீர்மோனையை “வழிமோனை” என்றும் வழங்குவர்.
இனமோனை
மோனைக்கு முதலெழுத்தேயனறி, அதற்குரிய இனவெழுத்தும் ஒன்றி வரும்.
இதனை “இனமோனை என்றும், கிளைமோனை” என்றும் வழங்குவர்
இனைமோனையாக வரும் எழுத்துக்கள்
உயிரெழுத்து |
|
1. அ, ஆ, ஐ, ஒள |
ஓரினம் |
2. இ, ஈ, எ, ஏ |
ஓரினம் |
3. உ, ஊ, ஒ, ஓ |
ஓரினம் |
உயிர்மெய்யெழுத்து |
|
3. ஞ, ந |
ஓரினம் |
4. ம, வ |
ஓரினம் |
6. த,ச |
ஓரினம் |
(மெய்யெழுத்துக்களுள்
அவற்றின் வர்க்க எழுத்துகளும் வருமென அறிக)
சில எடுத்துக்காட்டுகள்
·
மனத்தொடு வாய்மை மொழியின் – ம, வா
·
யாமெய்யாக்
கண்டவற்றுள் இல்லை எனைத் தொன்றும் – இ, எ
·
சாதனத்தோடு தச்சர் – சா, த
·
மாநதி வருந்தித் தேடி – மா, வ
- ஜந்துவித்தான் ஆற்றல் அகல் விசும்பு ளாார்கோமான் – ஐ, ஆ, அ
- ஒளவிய நெஞ்சத்தான் ஆக்கமும் – ஒள, ஆ
1. அடிமோனை
அடிதோறும்
வரும் முதற்சீரின் முதலெழுத்து ஒன்றி
வருவது அடி மோனை ஆகும்.
எ.கா.
உள்ளத்தாற் பொய்யா தொழுகின்
உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்
2. இணை மோனை
ஓரடியில்
முதலிரு சீர்களிலும் (1,
2) வரும் மோனை
இணை மோனை எனப்படும்
எ.கா.
கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும்
பீழை தரும்
3. பொழிப்பு மோனை
ஓரடியில் முதல்சீரிலும் மூன்றாம் சீரிலும் (1, 3) வரும் மோனை பொழிப்பு மோனை
எனப்படும்
எ.கா.
புனையா ஓவியம் போல நிற்றலும்
4. ஒரூஉ மோனை
ஓரடியில் முதல்சீரிலும் நான்காம் சீரிலும் (1, 4) வரும் மோனை ஒரூஉ மோனை எனப்படும்
எ.கா.
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை
பயக்கும் மெனின்
5. கூழை மோனை
ஓரடியில் முதல் மூன்று சீர்களிலும் (1, 2, 3) வரும் மோனை கூழை மோனை எனப்படும்
எ.கா.
தானம் தவமிரண்டும் தங்கா வியனலுகம்
வானம் வழங்கா
தெனின்
6. மேற்கதுவாய் மோனை
ஓரடியில் முதல் சீர், மூன்றாம் சீர், நான்காம் சீர்களில் (1, 3, 4) வரும் மோனை மேற்கதுவாய் மோனை
எனப்படும்
எ.கா.
வானின்று உலகம் வழங்கி வருவதலால்
தானமிழ்தம்
என்றுணாற் மாற்று
7. கீழ்க்கதுவாய் மோனை
ஓரடியில் முதல் சீர், இரண்டாம் சீர், நான்காம் சீர்களில் (1, 2, 4) வரும் மோனை கீழ்க்கதுவாய் மோனை
எனப்படும்
எ.கா.
இருள்சேர் இருவினையுமத் சேரா இறைவன்
பொருள்சேர்
புகழ்புரிந்தார் மாட்டு
8. முற்று மோனை
ஓரடியிலுள்ள நான்கு சீர்களிலும் (1, 2, 3,
4) வரும் மோனை
முற்று மோனை எனப்படும்
எ.கா.
பெற்றோர்பெறின் பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர்
வாழும் உலகு
எதுகைத் தொடை
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம்
வழங்கா தெனின்
இக்குறட்பாவில் இரண்டடிகளில்
முதற்சீரின் இரண்டாம் எழுத்து ஒன்றி வந்துள்ளது. முதலெழுத்து அளவொத்திருக்க, இரண்டாம் எழுத்து ஒன்றி வரத்
தொடுப்பது எதுகைத் தொடையாகும்.
இப்பாடலில் எதுகை அடிதோறும்
வந்ததால் இஃது அடியெதுகையாகும் (அளவொத்திருத்தல் = மாத்திரை அளவில் ஒத்திருத்தல்)
இதே போன்று ஒரடியில் சீர்கள்
தோறும் எதுகையை பெற்று வருவது சீர் எதுகையாகும்.
எ.கா
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
எதுகைத் தொடையும், அடி எதுகை, இணை எதுகை, பொழிப்பு எதுகை, ஒருஉ எதுகை, கூழை எதுகை, மேற்கதுவாய் எதுகை, கீழ்க்கதுவாய் எதுகை, முற்றெதுகை என எட்டு வகைப்படும்.
1. அடி எதுகை
அடிதோறும்
வரும் முதற்சீரின் முதலெழுத்து
அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது அடி எதுகை ஆகும்.
எ.கா.
கடிந்த கடிந்தொரார்
செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும்
பீழை தரும்
2. இணை எதுகை
ஓரடியில் முதலிரு சீர்களிலும் (1, 2) வரும் எதுகை இணை எதுகை எனப்படும்
எ.கா.
பொய்யாமை பொய்யாமை
ஆற்றின் அறம்பற
செய்யாமை
செய்யாமை நன்று
3. பொழிப்பு எதுகை
ஓரடியில் முதல்சீரிலும் மூன்றாம் சீரிலும் (1, 3) வரும் எதுகை பொழிப்பு எதுகை
எனப்படும்
எ.கா.
தோன்றின் புகழோடு தோன்றுக
அஃதிலார்
தோன்றிலன்
தோன்றாமை நன்று.
4. ஒரூஉ எதுகை
ஓரடியில் முதல்சீரிலும் நான்காம் சீரிலும் (1, 4) வரும் எதுகை ஒரூஉ எதுகை எனப்படும்
எ.கா.
துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய
எல்லாம் தரும்
5. கூழை எதுகை
ஓரடியில் முதல் மூன்று சீர்களிலும் (1, 2, 3) வரும் எதுகை கூழை எதுகை எனப்படும்
எ.கா.
பற்றுக பற்றற்றான் பற்றினை
அப்பற்றை
பற்ற்று
பற்று விடற்கு
6. மேற்கதுவாய் எதுகை
ஓரடியில் முதல் சீர், மூன்றாம் சீர், நான்காம் சீர்களில் (1, 3, 4) வரும் எதுகை மேற்கதுவாய் எதுகை
எனப்படும்
எ.கா.
அழக்கொண்ட எல்லாம் அழப்போம்
இழப்பினும்
பிற்பயக்கும்
நற்பா லவை
7. கீழ்க்கதுவாய் எதுகை
ஓரடியில் முதல் சீர், இரண்டாம் சீர், நான்காம் சீர்களில் (1, 2, 4) வரும் எதுகை கீழ்க்கதுவாய் எதுகை
எனப்படும்
எ.கா.
ஒழுக்கம் விழுப்பம்
தரலான் ஒழுக்கம்
உயிரினும்
ஓம்பப் படும்
8. முற்று எதுகை
ஓரடியிலுள்ள நான்கு சீர்களிலும் (1, 2, 3,
4) வரும் எதுகை
முற்று எதுகை எனப்படும்
எ.கா.
துப்பார்க்குத் துப்பாய
துப்பாக்கதித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ
மழை
முரண் தொடை
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
இத்தொடரில் முன், பின் என்னும் முரண்பட்ட சொற்கள்
அமைந்துள்ளன. அடிகளிலோ சீர்களிலே சொல்லோ, பொருளோ முரண்பட்டு (மாறுபட்டு) அமைவது முரண்
தொடை ஆகும்.
முரண் தொடை அடி முரண், இணை முரண், பொழிப்பு முரண், ஒருஉ முரண், கூழை முரண், மேற்கதுவாய் முரண், கீழ்க்கதுவாய் முரண், முற்றும் முரண் என எட்டு
வகைப்படும்.
1. அடி முரண்
அடிதோறும் முதற்சொல் முரண்படத் தொடுப்பது அடி முரண்
ஆகும்.
எ.கா.
கெடுப்பதூம்உம் கெட்டார்க்குச் சார்வாய்
மாற்றாங்கே
எடுப்பதூம் எல்லாம் மழை
2. இணை முரண்
ஓரடியில் முதலிரு சீர்களிலும் (1, 2) முரண் அமைவது இணை முரண் எனப்படும்
எ.கா.
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு
மெனின்
3. பொழிப்பு முரண்
ஓரடியில் முதல்சீரிலும் மூன்றாம் சீரிலும் (1, 3) முரண் அமைவது பொழிப்பு முரண்
எனப்படும்
எ.கா.
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து
வானத் தவர்க்கு
4. ஒரூஉ முரண்
ஓரடியில் முதல்சீரிலும் நான்காம் சீரிலும் (1, 4) முரண் அமைவது ஒரூஉ முரண் எனப்படும்
எ.கா.
புறந்தூய்மை நீரான் அமையும் அகத்தூய்மை
வாய்மையாற்
காணப் படும்
5. கூழை முரண்
ஓரடியில் முதல் மூன்று சீர்களிலும் (1, 2, 3) முரண் அமைவது கூழை முரண் எனப்படும்
எ.கா.
கருமிடற்றன் செஞ்சடையன் வெண்ணீற்றவன்
6. மேற்கதுவாய் முரண்
ஓரடியில் முதல் சீர், மூன்றாம் சீர், நான்காம் சீர்களில் (1, 3, 4) முரண் அமைவது மேற்கதுவாய் முரண்
எனப்படும்
எ.கா.
வெண்வளைத் தோளும் சேயரிக் கருங்கனும்
7. கீழ்க்கதுவாய் முரண்
ஓரடியில் முதல் சீர், இரண்டாம் சீர், நான்காம் சீர்களில் (1, 2, 4) முரண் அமைவது கீழ்க்கதுவாய் முரண்
எனப்படும்
எ.கா.
இருக்கை நிலையும் ஏந்தெழில் இயக்கமும்
உயிரினும்
ஓம்பப் படும்
8. முற்று முரண்
ஓரடியிலுள்ள நான்கு சீர்களிலும் (1, 2, 3,
4) முரண் அமைவது
முற்று முரண் எனப்படும்
எ.கா.
துவர்வாயத் தீஞ்சொலும் உவந்தெனன் முனியாது
இயைபுத் தொடை
செய்யுளின் அடிகளிலும் சீர்களிலும் இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ ஒன்றி வருவது இயைபுத் தொடை ஆகும்.
கொண்டல் கோபுரம் அண்டையில் கூடும்
கொடிகள்
வானம் படிதர மூடும்
கண்டி பேரண்டத்
தண்டலை நாடும்
கனக முன்றில்
அனம் வினை யாடும்
மேற்கண்ட பாடலடிகளின் இறுதியில் ஒரே
ஒலி தரும் கூடும்,
மூடும், நாடும், ஆடும் எனும் எனும் சொற்கள்
அமைந்துள்ளன இவ்வாறு அமைவது இயைபுத் தொடை ஆகும்.
இப்பகுதி வினாக்கள் உவமைகள் கொடுக்கப்பட்டு அந்த உவமையால்
விளக்கப்டும் பொருளை கண்டறியுமாறு கேட்கப்படுகிறது. எனவே இப்பகுதிக்காக ஏராளமான
உவவமைகளையும் அதற்குரிய பொருட்களையும் பட்டியலிட்டுள்ளோம்.
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல |
பொறுமை |
நன்பால் கலந்தீமையால் திரிதல் போல் |
கெடுதல் |
மரப்பாவை நாணால் உயிர் மருட்டல் போல |
மயங்குதல் |
அடுத்தது காட்டும் பளிங்கு போல் |
வெளிப்படுத்தல் |
அத்தி பூத்தாற்போல |
அரிய செயல் |
அயடிற்ற மரம்போல் |
வீழ்தல் |
இலவு காத்த கிளி போல |
ஏமாற்றம் |
உடலும் உயிரும் போல |
ஒற்றுமை, நெருக்கம் |
கல்மடை திறந்தாற்போல |
வெளியேறுதல் |
பகலவனைக் கண்ட பணி போல |
நீங்குதல் |
உள்ளங்கை நெல்லிக்கனி போல |
தெளிவு |
தாமரையிலைத் தண்ணீர் போல |
பற்றின்மை |
பேடிகை வாளான்மை போலக்கெடும் |
முயற்சின்மை |
ஒற்கத்தின் ஊற்றாம் துணை போல |
ஊன்றுகோல் |
பொருபுலி புலியோடு சிலைத்த போல |
எதிரெதிரே நின்று போரிடல் |
கடலில் கரைத்த காயம் போல் |
பயனற்றது |
கொடுக்கும் தேளாய்க் கொட்டுவதேன் |
வருத்தம் |
இடியோசை கேட்ட நாகம் போல |
நடுக்கம் |
செந்தமிழும் சுவையும் போல |
ஒற்றுமை |
தாயைக் கண்ட சேயைப் போல |
இன்பம், அதிக மகிழ்ச்சி |
நகமும் சதையும் போல |
இணை பிரியாமை |
மழை காணாப் பயிர் போல |
வாடுதல் |
வேலியே பயிரை மேய்ந்தது பேல |
நயவஞ்சம் |
அன்றலர்ந்த மலர் போல |
புத்துணர்வு |
அனலில் விழுந்த புழுப்போல் |
வேதனை |
கண்கட்டு வித்தை போல |
மாயத்திரை |
பத்தரை மாற்றுத்தங்கம் போல |
பெருமை |
நாயும் பூனையும் போல |
பகை |
அலை ஓய்ந்த கடல் போல |
அமைதி |
பசுமரத்தாணி போல் |
எளிதாகப் பதிதல் |
குன்றின் மேலிட்ட விளக்கு போல |
பயனுடைமை / பயன்/ வெளிச்சம் |
கனியிருப்பக் காய் கவரந்தது போல |
அறியாமை, தேவையற்ற செயல் |
இலைமறைக் காய் போல் |
வெளிப்படுதல் |
ஆலையில் அகப்பட்ட துரும்பு போல் |
துன்பம் |
குரங்கு கையில் அகப்பட்ட பூமாலை போல |
நாசம் |
செவிடன் காதில் ஊதிய சங்குபோல் |
பயனின்மை |
செந்தமிழும் சுவையும் பேல |
ஒற்றுமை |
ஞாயிறு கண்ட தாமரை போல |
மகிழ்ச்சி |
நீர்மேல் எழுத்து போல |
நிலையற்றது |
பழம் நழுவி பாலில் விழந்தது போல |
இன்பமிகுதி |
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல |
வருத்தம் |
அனலிற் பட்ட மெழுகுபோல |
துன்பம் கண்டு உருகுதல் |
குளிக்கப் போய் சேற்றைப் பூசிக்கொண்டு வருவது போல் |
குறும்புகளில் ஈடுபடுவது |
பொன்மலர் மணம் பெற்றது போல் |
பொருட்செல்வர் அறிவு செல்வத்தைக் தேடிக் கொள்வது |
உமி குற்றிக் கை சலித்தது போல் |
வருத்தம் |
கண்ணிலாதான் கண் பெற்று இழந்தது போல |
தவிப்பு |
கரையான் புற்றெடுக்க கருநாகம் குடி புகுந்தது போல |
அத்துமீறல் |
அச்சில் வார்த்தாற்போல |
ஒரே சீராக |
அவலை நினைத்து உரலை இடித்தாற்போல |
கவனம் |
ஆப்பறைந்த மரம் போல |
உறுதி |
அழுத பிள்ளைக்கு வாழைப்பழம் போல் |
ஏமாற்றுதல் |
அரை கிணறு தாண்டியவன் போல |
ஆபத்து |
ஆப்பசைத்த குரங்கு போல |
சிக்குதல் |
ஆழம் தெரியாமல் காலை விட்டது போல் |
திட்டமிடாமை |
இஞ்சி தின்ற குரங்கு போல் |
விழித்தல் |
இடி விருந்த மரம் போல் |
வேதனை |
இரும்பைக் கண்ட காந்தம் போல் |
கவர்ச்சி |
உடும்புப் பிடி போல |
பிடிப்பு |
உமையும், சிவனும் போல் |
நட்பு, நெருக்கம் |
உச்சந்தலையில் ஆணி அறைந்தது போல் |
உறுதி |
ஊமை கண்ட கனவு போல |
தவிப்பு, கூற இயலாமை |
எள்ளில் எண்ணெய் போல் |
ஒளிந்திருத்தல், மறைவு |
எட்டாப்பழம் புளித்தது போல் |
ஏமாற்றம் |
ஏழை பெற்ற செல்வம் போல் |
மகிழ்ச்சி |
ஒண்ட வந்த பிடாரி வளர்ப்பு பிடாரியை ஓட்டினாற்போல் |
விரட்டுதல் |
கண் கெட்டபின் சூரிய நமஸ்கராம் போல |
காலம் தாமதித்து உணர்தல்,
வருமுன் காவாமை |
கயிறற்ற பட்டம் போன்று |
தவித்தல், வேதனை |
கடைத்தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தது |
பிறரை ஏமாற்றுதல் |
கண்ணைக் கட்டி காட்டில் விட்டது |
கலக்கம், வருத்தம் |
கானமயிலாட அது கண்டு ஆடம் வான்கோழி போல |
தாழ்வு, உயர்வின்மை |
குடத்தில் இட்ட விளக்கு பேல |
இகழ்ச்சி, அடக்கம் |
சிதறிய முத்து பேல |
பயனின்மை |
காய்ந்த மாடு கம்பங் கொல்லையில் மேய்ந்தாற்போல |
வேகம் |
சீரிய நாகம் போல் |
கோபம் |
செல்லரித்த ஒலைபோல் |
பயனின்மை |
நீரும் நெருப்பும் போல |
விலகுதல் |
பாம்பின் வாய்த்தேரை போல |
மீளாமை |
முக்காலம் உணர்ந்த முனிவர் போல |
அறிதல் |
பாய்மரம் சாய்ந்தது போல |
விழுதல் |
மரமேற்றின வண்டி போல் |
சுமை |
பால் மணம் ஆறாத குழந்தை போல |
வெகுளி |
புளியம் பழமும் தோடும் போல |
ஒற்றுமை |
புற்றீசல் போல |
பெருகுதல் |
மலரும் மணமும் போல |
ஒற்றுமை |
வேம்பு அரசும் போல |
ஒற்றுமை |
மேகம் கண்ட மணில் போல |
மகிழ்ச்சி, ஆனந்தம் |
காட்டுத்தீ போல |
வேகமாக பரவுதல் |
பற்று மரமில்லாக் கொடி போல |
ஆதரவின்மை, துன்பம் |
கோலை எடுத்தால் குரங்கு போல் |
பயம் |
சர்க்கரைப் பந்தலில் தேன் பொழிந்தாற்போல |
இன்பம் |
சாயம் போன சேலை |
மதிப்பின்மை |
சித்திரப் புதுமை போல |
அழகு |
சிவபூஜையில் கரடி போல |
விருப்பமின்மை, தேவையற்ற வரவு |
சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தல் போல |
வேண்டாத வேலை, கேடு செய்தல் |
சேற்றில் பிறந்த செந்தாமரை போல் |
உயர்வு, மேன்மை |
சொன்னது சொல்லும் கிளிப்பிள்ளை போல |
திரும்பச் செய்தல் அறிவின்மை |
திருடனைத் தேள் கொட்டியது போல |
சொல் முடியாத வேதனை |
தோன்றி மறையும் வானவில்லைப் போல் |
நிலையற்ற, நிலையாமை |
நத்தைக்குள் முத்துப்போல் |
உயர்வு, மேன்மை |
நாண் அறுத்த வில் போல |
பயனற்றது |
தொட்டனைத் தூறம் மணற்கேணி போல் |
அறிவு |
நீருக்குள் பாசி போல் |
நட்பு |
பசுத்தோல் போர்த்தி புலி போல் |
நயவஞ்சகம், ஏமாற்றுதல் |
தாயைப் போல பிள்ளை |
தொடர்பு |
தன்வினை பிறவினை செய்வினை செயப்பாட்டு வாக்கியங்களைக் கண்டெழுதுதல்:
முந்தைய பகுதியில் பயின்ற
வாக்கியங்களைத் தவிர தன்வினை, பிறவினை,
செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களில்
ஏதேனும் ஒன்றை கண்டறியும் விதமாக இப்குதி வினாக்கள் கேட்கப்டுகின்றன. எனவே
இவ்வாக்கியங்கள் பற்றிய இலக்கணங்களை அறிதல் அவசியம்
தன் வினை:-
ஒருவன் தானே செய்யும் செயலை
உணர்த்துவதைத் தன்வினை என்பர்.
எ.கா.
- கோதை நன்கு படித்தாள்.
- மன்னர் நாட்டை ஆண்டார்.
- பெரியவர் கடவுளை தொழுதார்.
பிற வினை:-
ஒருவர் பிறரைக் கொண்டு தொழிலைச்
செய்வித்தலை உணர்த்துவது பிறவினை வாக்கியம் என்பர்.
எ.கா.
- ஆசிரியர் பாடம் கற்பித்தார்.
தன்வினையைப்
பிறவினையாக்குவதற்குச் செய்ய வேண்டுவன:-
1. தன்வினைப் பகுதியிலுள்ள மெல்லின
மெய்யை வல்லின மெய்யாக மாற்ற வேண்டும்.
எ.கா.
- திருந்தினான் – திருத்தினான்.
2.
தன்வினைப்
பகுதியிலுள்ள வல்லின மெய்யெழுத்தை இரட்டிக்க வேண்டும்.
எ.கா.
- பழகினான் – பழக்கினான்.
3.
தன்வினைப்
பகுதியுடன் வி,பி, கு, சு, டு, து, பு, று என்னும் விகுதிகளில் ஒன்றைச்
சேர்க்க வேண்டும்.
எ.கா.
- செய்தான் – செய்வித்தான்.
தன்வினை |
பிறவினை |
அகல் |
அகற்று |
அமைவான் |
அமர்த்துவான் |
ஏறு |
ஏற்று |
செய் |
செய்வி |
உண் |
உண்பி |
பெருகு |
பெருக்கு |
வாடு |
வாட்டு |
மடங்கு |
மடக்கு |
கட |
கட்டு |
உருகு |
உருக்கு |
படித்தாள் |
படிப்பித்தாள் |
போனான் |
போக்கினான் |
உருண்டான் |
உருட்டினான் |
நடந்தாள் |
நடத்தினாள் |
எழுந்தான் |
எழுப்பினான் |
பயின்றான் |
பயிற்றினான் |
போ |
போக்கு |
பாய் |
பாய்ச்சி |
உருள் |
உருட்டு |
நட |
நடத்து |
எழு |
எழுப்பு |
பயில் |
பயிற்று |
உண் |
உண்ணச்செய் |
உறங்கு |
உறங்கச்செய் |
சேர்கிறேன் |
சேர்க்கிறேன் |
சேர்வேன் |
சேர்ப்பேன் |
சேர்ந்தேன் |
சேர்த்தேன் |
3. செய்வினை வாக்கியம்:-
செயலைச் செய்பவரை முதலில்
வாக்கியத்தில் அமைப்பது செய்வினை வாக்கியமாகும்
அதாவது
எழுவாயோ செயலைச் செய்வதாகச் கூறுவது செய்வினை வாக்கியம் ஆகும்.
எ.கா.
- முருகன் பாடம் படித்தான்.
- குமரன் கோவில் கட்டினார்.
எழுவாய், செயப்படுபொருள், பயனிலை, என்ற வரிசையில் வாக்கியம் அமைதல்
வேண்டும். செயப்படுபொருளோடு ஐ என்ற இரண்டாம் வேற்றுமை உருபை சேர்க்க வேண்டும்.
(ஐ-உருபு மறைந்தும்,
வெளிப்பட்டும்
வரும்)
4. செயப்பாட்டு வினை:-
செயப்படுபொருளை அதாவது எதனை
செய்தாரோ அதனை எழுவாயாகப் பெற்றும்
எழுவாயோடு மூன்றாம் வேற்றுமை
உருபான ஆல் பெற்றும் பயனிலையோடு படு என்பதை பெற்றும் வருகின்ற வாக்கியம்
செயப்பாட்டு வினை வாக்கியம் ஆகும்.
எ.கா.
- பாடம் முருகனால் படிக்கப்பட்டது.
- வீடு தந்தையால் கட்டப்பட்டது.
செயப்படுபொருள், எழுவாய், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம்
அமைதல் வேண்டும். எழுவாயோடு ஆல் என்ற மூன்றாம் வேற்றுமை உருபை சேர்க்க வேண்டும்.
பயனிலையோடு படு,
பட்டது எனும்
செற்களைச் சேரக்க வேண்டும். (படு – துணைவினை)
எ.கா.
செய்வினை |
மாணவர்கள் வகுப்பைத் தூய்மை செய்தனர். |
செயப்பாட்டு வினை |
வகுப்பு மாணவர்களால் தூய்மை செய்ப்பட்டது. |
செய்வினை |
ஆசிரியர் இலக்கணம் கற்பித்தார். |
செயப்பாட்டு வினை |
இலக்கணம்,
ஆசிரியரால் கற்பிக்கப்பட்டது. |
செய்வினை |
தச்சன் நாற்காலியைச் செய்தான். |
செயப்பாட்டு வினை |
நாற்காலி தச்சனால் செய்யப்பட்டது. |
செய்வினை |
நாடகக் கலைஞர்கள் நாட்டுப்பற்றை வளர்த்தனர். |
செயப்பாட்டு வினை |
நாட்டுப்பற்று நாடகக் கலைஞர்களால்
வளர்க்கப்பட்டது. |
செய்வினை |
மாணவர்கள் வகுப்பைத் தூய்மை செய்தனர். |
செயப்பாட்டு வினை |
வகுப்பு மாணவர்களால் தூய்மை செய்ப்பட்டது. |
செய்வினை |
எழுவாய்,
தானே ஒரு செயலை செய்தல் |
செயப்பாட்டு வினை |
எழுவாய்,
ஒரு செயலைப் பிறரைக் கொண்டு
செய்வித்தல். |
தன்வினை வாக்கியத்தை பிறவினை வாக்கியமாக மாற்றுதல்
தன்வினை – பிறவினை
ஒருவன் தானே செய்யும்
செயலை உணர்த்துவதைத் தன்வினை என்பர்.
எ.கா.
- அமர்ந்தான்
ஒருவர்
பிறரைக் கொண்டு தொழிலைச் செய்வித்தலை உணர்த்துவது பிறவினை வாக்கியம் என்பர்.
எ.கா.
- அமர்த்தினான்
1. தன் வினையிலுள்ள மெல்லின எழுத்துகளை
வல்லினமாக மாற்றித் தன் வினைகளைப் பிற வினைகளாக மாற்றாலாம்.
2. தன் வினைப் பகுதியிலுள் வல்லின
மெய்கள் இரட்டித்துத் தன் வினைகளைப் பிறவினைகளாக மாற்றலாம்.
3. தன் வினைப் பகுதிகளோடு து
விகுதியைச் சேர்த்துத் தன்வினைகளைப் பிறவினைகளாக ஆக்கலாம்
காரண வினை
ஒரு வினையைக் காரண வினையாக மாற்ற வி, பி என்ற விகுதியை சேர்க்க வேண்டும்.
பயின்றான் |
பயில் |
பயில்வித்தான் |
பயில்வி |
செய்தான் |
செய் |
செய்வித்தான் |
செய்வி |
கற்றான் |
கல் |
கற்பித்தான் |
கற்பி |
நடந்தான் |
நட |
நடப்பித்தான் |
நடப்பி |
செய்வினை – செயப்பாட்டு வினை
- பாரதியார் பாட்டைப் பாடினார் – இது
செய்வினை வாக்கியம்
- பாட்டு பாரதியார் பாடப்பட்டது – இது
செயப்பாட்டு வினை வாக்கியம்
- பாடினார் என்பது செய்வினை
பாடப்பட்டது என்பது செயப்பாட்டு
வினை, செய்வினைக்குச் செய்பவன் எழுவாயாக
வரும். செயப்படுபொருள் உண்டு. செயப்பாட்டு வினைக்கு செய்பவன் எழுவாயாக வராது.
செயப்படு பொருளும் இல்லை.
உடன்பாடு – உடன்பாட்டு வாக்கியம் |
எதிர்மறை – எதிர்மறை வாக்கியம் |
நான் வந்தேன் |
நான் வந்திலேன் |
நான் வருகிறேன் |
நான் வருகின்றிலேன் |
நான் வருவேன் |
வான் வாரேன் |
இன்று வந்திலேன், வருகின்றிலேன், வாரேன் என்பவை இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் முக்கால நிகழ்ச்சிகளை
பற்றி உணர்த்துவதால் அவை எதிர்மறை வினைகளாகும்.
தன்வினை |
பிறவினை |
1. திருக்குறள்
கற்றேன். |
திருக்குறளை கற்பித்தேன். |
2. கொள்ளையர்
கொட்டம் அடிங்கினர். |
காவலர்,
கொள்ளையர் கொட்டத்தை அடிக்கினர் |
3. நண்பர்கள்
வீட்டில் விருந்து உண்டேன். |
நண்பரை விருந்து உண்பித்தேன். |
4. நான்
நேற்று வந்தேன். |
நான் நேற்று வருவித்தேன் |
5. தாய்
உணவை உண்டாள் |
தாய் குழந்தைக்கு உணவை உண்பித்தாள். |
6. செல்வம்
பாடம் கற்றான். |
செல்வம் பாடம் கற்பித்தான். |
7. பூங்கோரை
பொம்மை செய்தாள் |
பூங்கோதை பொம்மை செய்வித்தாள் |
திருந்தினான் |
திருக்குறளை கற்பித்தேன். |
உருண்டான் |
உருட்டினான் |
உண்டாள் |
உண்பித்தாள் |
ஆடினார் |
ஆட்டுவித்தார் |
கண்டான் |
காண்பித்தான் |
உழுதார் |
உழுவித்தார் |
செய்வினை |
செயப்பாட்டு
வினை |
1. கரிகாலன்
கல்லணையைக் கட்டினான் |
கல்லணை கரிகாலனால் கட்டப்பட்டது |
2. சோழன்
சேக்கிழாரை வரவேற்று வணங்கினான். |
சேக்கிழார் சோழனால் வரவேற்கப்பட்டு
வணங்கப்பட்டார் |
3. நான்
பாடம் படித்தேன் |
பாடம் என்னால் படிக்கப்பட்டது. |
4. திருவள்ளுவர்
திருக்குறளை திருவள்ளுவரால் இயற்றப்பட்டது. |
திருக்குறள் இயற்றினார். |
உடன்பாட்டு வாக்கியம் |
எதிர்மறை வாக்கியம் |
1. போட்டியில்
சிலர்தான் வெற்றி பெற முடியும் |
போட்டியில் எல்லோரும் வெற்றி பெற முடியாது. |
2. இந்த
வகுப்பில் மாணாக்கர் பலர் நன்கு படிக்கின்றனர். |
இந்த வகுப்பில் மாணாக்கர் சிலரே நன்கு
படிக்கவில்லை |
3. மொழிகள்
சிலவே இலக்கிய வளம் உள்ளவை. |
மொழிகள் பல இலக்கிய வளமற்றவை. |
4. பேதை
தனக்குத்தானே கேடு செய்து கொள்கிறான். |
பேதைக்குக் கேடு செய்ய வேறொருவர்
வேண்டியதில்லை |
5. திருக்குறளில்
எல்லாக் கருத்துக்களும் உள |
திருக்குறளில் இல்லா கருத்துகள் இல்லை |
செய்தி வாக்கியம் |
வினா வாக்கியம் |
1. தோல்வியடைய
வேண்டும் எவரும் விரும்பார். |
தோல்வியடைய என்று விரும்புவரும் உளரோ? |
2. முன்றால்
அனைத்தும் ஆகும் |
முயன்றால் ஆகாததும் உண்டோ? |
3. தமிழின்
இனிமையை ஒருவரும் மறுக்கார். |
தமிழின் இனிமையை எவரும் மறுப்பரோ? |
செய்தி வாக்கியம் |
கட்டளை வாக்கியம் |
1. இளமையில்
கற்க வேண்டும். |
இளமையில் கல் |
2. அறம்
செய்ய வேண்டும் |
அறம் செய் |
3. வைகறையில்
துயில் எழுதல் வேண்டும் |
வைகறையில் துயில் எழு |
செய்தி வாக்கியம் |
உணர்ச்சி வாக்கியம் |
1. வள்ளுவர்
கோட்டம் மிகவும் அழகாக அமைந்திருக்கிறது |
என்னே! வள்ளுவர் கோட்டத்தின் அழகு. |
2. அறிஞர்
அண்ணா மறைந்து விட்டார். |
அந்தோ! அறிஞர் அண்ணா மறைந்து விட்டாரே! |
எவ்வகை வாக்கியமெனக் கண்டெழுதுதல் -
இப்பகுதியில் வரும் வினாக்கள் ஒரு சொற்றொடர் கொடுத்து அது எவ்வகை வாக்கியம் என
கண்டறியுமாறு அமைக்கப்படுகிறது. இதற்கு வாக்கிய வகைகளையும் அதன் இலக்கணங்களையும் அறிந்திருக்க வேண்டும்.
வாக்கியம்
எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் என்றமைந்து பொருள்
நிறைவு பெற்றிருக்கும் சொற்றொடர் வாக்கியம் எனப்படும்
வாக்கிய அமைப்பு:-
பெரும்பாலும் ஒரு வாக்கியத்தில்
- எழுவாய் – முதலிலும்
- பயனிலை – இறுதியிலும்
- செய்யப்படுபொருள் – இடையிலும்
எழுவாய்:-
அறுவகைப் பெயர்ச்சொல்களும், வினையாலணையும் பெயரும் எழுவாயாக
வரும்.
பயனிலை:-
வினைமுற்று (தெரிநிலை, குறிப்பு) பெயர்ச்சொல், வினாப் பெயர் ஆகியன பயனிலையாக
வரும்.
வாக்கிய
வகைகள்
1. தனி வாக்கியம்:-
ஒரு எழுவாயோ, ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்களோ
வந்து ஒரு பயனிலையைக் கொண்டு முடிவது தனிவாக்கியம் ஆகும்.
எழுவாய் செயப்படுபொருள் இன்றியும்
வாக்கியம் அமைவது உண்டு.
எ.கா.
- பாரதிதாசன் தமிழ் உணர்வை வளர்த்தார்
(ஒரு எழுவாய்) (ஒரே பயனிலை)
- சேர, சோழ, பாண்டியரகள் மூவரும் தமிழை
வளர்த்தனர்
(மூன்று எழுவாய்) (ஒரே பயனிலை)
எழுவாய் இன்றி
எ.கா.
- வைகறைக் துயிலெழு
(செயப்படுபொருள்) (பயனிலை)
செயப்படுபொருள் இன்றி
பாவை வந்தாள்
எ.கா.
·
முகில்
வண்ணன் திருக்குறள் கற்றான்.
·
அமுதன்
எழுதுகிறான்.
·
பூ
விழியும்,
சக்தியும்
பழனி சென்றனர்.
2. தொடர் வாக்கியம்:-
தனிவாக்கியங்கள் பல தொடரந்து
வருவதும் ஒரே எழுவாய் பல பயனிலைகளை பெற்று வருவதும் தொடர் வாக்கியமாகும்.
எ.கா.
- பெண்ணுக்கும் மதிப்பு கொடுங்கள். உரிமை
கொடுங்கள். வணக்கம் செலுத்துங்கள்.
3. கலவை வாக்கியம்:-
ஒரு முதன்மை வாக்கியமும் அதனோடு ஒன்றோ பலவோ பொருள் தொடர்புள்ள
சார்பு வாக்கியங்களும் சேர்ந்து வருவது கலவை வாக்கியம் எனப்படும்.
எ.கா.
- திருவள்ளுவர், ஒவ்வொருவருக்கும் ஒழுக்கத்தை
உயிரினும் மேலாக ஓம்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.எண்வகை விடைகள்
4. செய்தி வாக்கியம்:-
ஒரு செய்தியைத் தெளிவாகத் தெரிவிக்கும் வாக்கியம் செய்தி வாக்கியம்
எனப்படும்
எ.கா.
- திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்.
5. செய்தி வாக்கியம்:-
வினாப்பொருள் தரும் வாக்கியம் வினா வாக்கியம் ஆகும்.
எ.கா.
- தாயின் கடமை என்ன?’
6. விழைவு வாக்கியம்:-
கட்டளை,
வேண்டுகோள், வாழ்தல், வைதல் ஆகியவற்றுள் ஒன்றைத்
தெரிவிக்கும் வாக்கியம்
எ.கா.
- தமிழ்பாடத்தை முறையாகப் படி (கட்டளை)
- நல்ல கருத்துக்களை நாளும் கேட்க (கட்டளை)
- வையத்துள் வாழ்வாங்கு வாழ்க (வாழ்த்துதல்)
- தீயன ஒழிக (வைதல்)
7. உணர்ச்சி வாக்கியம்:-
உவகை,
அவலம், அச்சம், வியப்பு முதலான உணர்ச்சிகளை
உணர்த்தும் வாக்கியம்
எ.கா.
- ஆ! தமிழ் மக்கள் அனைவரும் ஏழுத்தறிவு
பெற்றனரா?
(உவகை)
- அந்தோ! தமிழ் கடைத்தெருக்களில்
அறிவுப்புகள் கூட நல்ல தமிழில் இல்லையே! (அவலம்)
- ஐயோ! அப்பா அடிப்பாரா (அச்சம்)
- என்னே! தமிழின் இனிமை! (வியப்பு)
8. உடன்பாட்டு வாக்கியம்:-
செயல் அல்லது தொழில் நிகழ்வதை தெரிவிப்பது உடன்பாட்டு வாக்கியம்
எனப்படும்.
எ.கா.
- வயலில் நேற்று மாடுகள் மேய்ந்தன.
9. எதிர்மறை வாக்கியம்:-
செயல் அல்லது தொழில் நிகழாமையைத் தெரிவிப்பது
எ.கா.
- வயலில் நேற்று மாடுகள் மேய்ந்தில
10. நேர்கூற்று வாக்கியம்:-
ஒருவர் கூறியதை அவர் கூறிபடியே கூறுவது நேர் கூற்று ஆகும்.
இந்நேர்க்கூற்று தன்னிலை, முன்னிலை இடங்களில் வரும்.
எ.கா.
- “தாய் மகளைப் பார்த்து மணி அடித்து
விட்டது. பள்ளிக்கு உடனே செல்” என்றார்.
11. அயர்கூற்று வாக்கியம்:-
ஒருவர் கூறியதை அப்படியே கூறாமல்
அயலார் கூறவது போல கூறவது அயற்கூற்று.
தன்னிலை,
முன்னிலை
இடங்களில் வரும் எழுவாயைப் படர்க்கையில் அமைத்து கூற வேண்டும்.
எ.கா.
- தாய் மகளிடம், மணி அடித்து விட்டதால்
பள்ளிக்கு உடனே செல்லும்படி சொன்னாள்.
(நேர்
கூற்றை அயற்கூற்றாக மாற்றும் போது பின்வரும் சொற்கள் மாறுதல் அடையும்)
நேர்க்கூற்று |
அயற்கூற்று |
இது, இவை |
அது, அவை |
இன்று |
அன்று |
இப்பொழுது |
அப்பொழுது |
இதனால் |
அதனால் |
நாளை |
மறுநாள் |
நேற்று |
முன்னாள் |
நான், நாம், நாங்கள் |
தான், தாம், தாங்கள் |
நீ |
அவன், அவள் |
நீங்கள் |
அவர்கள் |
நேர்கூற்றை அயற்கூற்றாக்கல்
- அழகுச்சிலை தான் மறுநாள் வருவதாகக்
கூறினாள்.
- ஆசிரியர் அன்று வந்து காணுமாறு கூறியதால்
தான் செல்கிறேன். நீயும் வா என்று இளங்கோ கதிரவனிடம் கூறியுள்ளான்.
- அவன் தன் மொழியை உயர்த்தினால் தான் உன்
நாடு உயரும். அறிவும் உயரும் என்பதாக பாரதிதாசன் கூறியுள்ளார்.
- மேலாளர் மறுநாள் காலையில் வா. உனக்குத்
தரவேண்டிய தொகைத் தருவதாக கூறியுள்ளார்.
- ஆசிரியர் மாணவரிடம் உன்னிடம் திறமையும்
ஆற்றலும் இருக்கிறது. உழைத்தால் முன்னேறுவாய் என்பதாக கூறியுள்ளார்.
நேர்கூற்றை அயற்கூற்றாக்கல்
- போட்டியில் நான் முதல் பரிசு
பெற்றுள்ளேன் என ஆசிரியர் கூறினார்.
- தன் தாயராரிடம் அன்பரசி மல்லிகை மலர்
வாங்கி வரக் கூறினாள்.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
இப்பகுதியில் வரும் வினாக்கள் விடை வடிவத்திலும் சில சமயங்களில்
விடையாகவும் வருகின்றது. எனவே வினாக்களின் வகைகளையும் விடைகளின் வகைகளையும் அறிதல்
அவசியம்.
அறுவகை வினாக்கள்
அறி வினா:-
தான் விடை அறிந்திருந்தும், அவ்விடை பிறருக்குத் தெரியுமா
என்பதை அறியும் பொருட்டு வினவுவது.
எ.கா.
- மாணவரிடம், ‘இந்தக் கவிதையின் பொருள் யாது?’ என்று ஆசிரியர் கேட்டல்.
அறியா வினா:-
தான் அறியாத ஒன்றை அறிந்து
கொள்வதற்காக வினவுவது.
எ.கா.
- ஆசிரியரிடம், ‘இந்தக் கவிதையின் பொருள் யாது?’ என்று மாணவர் கேட்டல்.
ஐய வினா:-
ஐய வினா ஐயம் நீங்கித் தெளிவு
பெறுவதற்காகக் கேட்கப்படுவது.
எ.கா.
- ‘இச்செயலைச் செய்தது மங்கையா? மணிமேகலையா?’ என வினவுதல்.
கொளல் வினா:-
தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும்
பொருட்டு வினவுவது.
எ.கா.
- ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா?’ என்று நூலகரிடம் வினவுதல்.
கொடை வினா:-
பிறருக்கு ஒரு பொருளைக் கொடுத்து
உதவும் பொருட்டு வினவுவது.
எ.கா.
- பாரதிதாசனின் கவிதைகள் இருக்கிறதா?
ஏவல் வினா:-
ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுதற்
பொருட்டு வினவுவது.
எ.கா.
- தம்பி கடைக்குச் சென்று பழங்களா வாங்கி
வருவாயா?
1. அங்கு
நிற்பவர் ஆணா? பெண்ணா? |
ஐய வினா |
2. நீ
தேர்வுக்கு படித்துவிட்டாயா? |
ஏவல் வினா |
3. உன்னனிடம்
திருக்குறள் உள்ளதா? |
கொளல் விடை |
4. உனக்கு
சீருடை உள்ளதா? |
கொடை வினா |
5. ஐம்பெருங்காப்பியங்கள்
யாவை? |
அறி வினா |
6. பொழுது
புலர்ந்ததும் எழுந்திருக்கவில்லையா? |
ஏவல் வினா |
அறிவு
அறியாமை ஐயுறல் கொளல் கொடை ஏவல் தரும் வினா ஆறும் இழுக்கார் – நன்னூல்,385 |
எண்வகை விடைகள்
சுட்டு விடை, மறை விடை, நேர் விடை, ஏவல் விடை, வினா எதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை, உறுவது கூறல் விடை, இனமொழி விடை என்று விடை எட்டு
வகைப்படும்.
முதல் மூன்று வகையும் நேரடி
விடைகளாக இருப்பதால் வெளிப்படை விடைகள் எனவும் அடுத்த ஐந்து விடைகளும் குறிப்பாக
இருப்பதால் குறிப்பு விடைகள் எனவும் கொள்ளலாம்.
சுட்டு விடை
சுட்டிக் கூறும் விடை
எ.கா.
- ‘கடைத்தெரு எங்குள்ளது?’ என்ற வினாவிற்கு, ‘வலப்பக்கத்தில் உள்ளது’ எனக்
கூறல்.
மறை விடை
மறுத்துக் கூறும் விடை
எ.கா.
- ‘கடைக்குப் போவாயா?’ என்ற கேள்விக்குப்
‘போகமாட்டேன்’ என மறுத்துக் கூறல்.
நேர் விடை
உடன்பட்டுக் கூறும் விடை
எ.கா.
- ‘கடைக்குப் போவாயா?’ என்ற கேள்விக்குப் ‘போவேன்’
என்று உடன்பட்டுக் கூறல்.
ஏவல் விடை
மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாகக்
கூறும் விடை.
எ.கா.
- இது செய்வாயா?” என்று வினவியபோது, “நீயே செய்”என்று ஏவிக் கூறுவது
வினா எதிர் வினாதல் விடை
வினாவிற்கு விடையாக இன்னொரு
வினாவைக் கேட்பது.
எ.கா.
- ‘என்னுடன் ஊருக்கு வருவாயா?’ என்ற வினாவிற்கு ‘வராமல்
இருப்பேனா?’
என்று
கூறுவது.
உற்றது உரைத்தல் விடை
வினாவிற்கு விடையாக ஏற்கெனவே
நேர்ந்ததைக் கூறல்.
எ.கா.
- ‘நீ விளையாடவில்லையா?’ என்ற வினாவிற்குக் ‘கால்
வலிக்கிறது’ என்று உற்றதை உரைப்பது.
உறுவது கூறல் விடை
வினாவிற்கு விடையாக இனிமேல்
நேர்வதைக் கூறல்.
எ.கா.
- ‘நீ விளையாடவில்லையா?’ என்ற வினாவிற்குக் ‘கால்
வலிக்கும்’ என்று உறுவதை உரைப்பது.
இனமொழி விடை
வினாவிற்கு விடையாக இனமான மற்றொன்றை
விடையாகக் கூறல்.
எ.கா.
- “உனக்குக் கதை எழுதத் தெரியுமா?” என்ற வினாவிற்குக் “கட்டுரை
எழுதத் தெரியும்” என்று கூறுவது
1. பட்டுக்கோட்டைக்குச்
செல்லும் வழி எது? |
‘இது’
சுட்டு விடை |
2. சமைக்க
தெரியுமா? |
‘தெரியாது’
மறை விடை |
3. பாடுவாயா? |
‘இது’
நேர் விடை |
4. கவிதை
எழுதுவாயா? |
‘எழுதுவேன்’
இனமொழி விடை |
5. இன்று
மாலை விளையாடுவாயா? |
‘உடல்
வலிக்கிறது’ உற்றது உரைத்தல் விடை |
6. நன்றி
மறப்பாயா? |
‘நான்
நன்றி மறப்பேனா?’ வினா எதிர் வினாதல் விடை |
“சுட்டு மறைநேர் ஏவல்
வினாதல் உற்ற(து) உரைத்தல் உறுவது கூறல் இனமொழி எனும்எண் இறையுள் இறுதி நிலவிய
ஐந்தும்அப் பொருண்மையின் நேர்ப” – நன்னூல்,386 |
9ஆம் வகுப்பு
இலக்கணக்குறிப்பு
1.
எத்தனை
எத்தனை – அடுக்குத்தொடர்
2.
விட்டு
விட்டு – அடுக்குத்தொடர்
3.
ஏந்தி
– வினையெச்சம்
4.
காலமும்
– முற்றுமரம்
5.
முத்திக்கனி
– உருவகம்
6.
தெள்ளமுது
– பணபுத்தொகை
7.
குற்றமிலா
– ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரச்சம்
8.
நா
– ஓரெழுத்து ஒரு மொழி
9.
செவிகள்
உணவான – நான்காம் வேற்றுமைத் தொகை
10.
சிந்தாமணி
– ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரச்சம்
11.
வெந்து
– வினையெச்சம்
12.
வெம்பி
– வினையெச்சம்
13.
எய்தி
– வினையெச்சம்
14.
மூடுபனி
– வினைத்தொகை
15.
ஆடுகிளை
– வினைத்தொகை
16.
வெறுங்கனவு
– பண்புத்தொகை
17.
விரிமலர்
– வினைத்தொகை
18.
தடவரை
– உரிச்சொல் தொடர்
19.
கருங்குவளை
– பண்புத்தொகை
20.
செந்நெல்
– பண்புத்தொகை
21.
தோரணவீதியும், தோமறு கோடடியும் – எண்ணும்மை
22.
காய்க்குலை
கழுகு, பூக்கொடிவல்லி, முத்துத்தாமம் – இரணடாம் வேற்றுமை
உருபும் பயனும் உடன் தொக்க தொகை
23.
மாற்றுமின், பரப்புமின் – ஏவல் வினைமுற்று
24.
உறுபொருள்
– உரிச்சொல் தொடர்
25.
தாழ்பூந்துறை
– வினைத்தொகை
26.
பாங்கறிந்து
– இரண்டாம் வேற்றுமைத் தொகை
27.
நன்பொருள், தண்மணல், நல்லுரை – பண்புத்தொகை
28.
பண்பும்
அன்பும்,
இனமும்
மொழியும் – எண்ணும்மை
29.
சொன்னோர்
– வினையாலணையும் பெயர்
30.
உணந்தோர்
– வினையாலணையும் பெயர்
31.
மாக்கடல்
– உரிச்சொல்தொடர்
32.
ஆக்கல்
– தொழில்பெயர்
33.
பொன்னே
போல் – உவம உருபு
34.
மலர்க்கை, வில்வாள் – உம்மைத்தொகை
35.
தவிர்க்கஒணா
– ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
36.
அறிவார், வல்லார்- வினையாலணையும் பெயர்
37.
விதையாமை, உரையாமை – எதிர்மறைத் தொழிற்பெயர்
38.
தாவா
– ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
39.
இடிகுரல்
– உவமைத்தொகை
40.
பிடிபசி-
வேற்றுமைத் தொகை
41.
பூவையும்
குயில்களும்,
முதிரையும்
சாமையும் வரகும் – எண்ணும்மை
42.
கருமுகில், இன்னுயிர், பைங்கிளி – பண்புத்தொகை
43.
பெருங்கடல், முதுவெயில், இன்னிளங்குருளை – பண்புத்தொகை
44.
மன்னிய-
பெயரெச்சம்
45.
வெரீஇ
– சொல்லிசை அளபெடை
46.
கடிகமழ்
– உரிச்சொற்றொடர்
47.
மலர்க்கண்ணி
– மூன்றாம் வேற்றுமைஉருபும் பயனும் உடன் தொக்க தொகை
48.
எருத்துக்கோடு
– ஆறாம் வேற்றுமைத்தொகை
49.
கரைபொரு
– இரண்டாம் வேற்றுமைத் தொகை
50.
மரைமுகம்
– உவமைத் தொகை
51.
அதிர்குரல், வருமலை – வினைத் தொகை
52.
கொட்ட
– வினையெச்சம்
53.
முத்துடைத்தாமம்
– இரண்டாம் வேற்றுமைத் தொகை
54.
தேமாங்கனி, தண்டகல், நற்றவம் – பண்புத்தொகை
55.
விளைக
– வியங்கோள் வினைமுற்று
56.
தேர்ந்த
– பெயரச்சம்
57.
இறைஞ்சி
– வினையெச்சம்
58.
கொடியனால்
– இடைக்குறை
59.
அஞ்சி
– பெயரச்சம்
60.
வெண்குடை, இளங்கமுகு – பண்புத்தொகை
61.
கொல்யானை, குவிமொட்டு – வினைத்தொகை
62.
ஓங்கிய
– பெயரெச்சம்
63.
நிலைஇய
– சொல்லிசை அளபெடை
64.
குழாஅத்து
– செய்யுளிசை அளபெடை
65.
வாயில்
– இலக்கணப் போலி
66.
மா
கால் – உரிச்சொல் தொடர்
67.
முழங்கிசை, இமிழிசை – வினைத் தொகை
68.
நெடுநிலை, முந்நீர் – பண்புத் தொகை
69.
மகிழ்ந்தோர்
– வினையாலணையும் பெயர்
70.
பிறவி
இருள் – உருவகம்
71.
ஒளியமுது
– உருவகம்
72.
வாழ்க்கைப்போர்
– உருவகம்
73.
பாண்டம்
பாண்டமாக – அடுக்குத் தொடர்
74.
வாயிலும்
சன்னலும் – எண்ணும்மை
75.
ஆக்குக, போக்குக, நோக்குக, காக்க – வியங்கோள் வினைமுற்றுகள்
10ஆம் வகுப்பு இலக்கணக்குறிப்பு
1.
சுமந்து, வீசி – வினையெச்சங்கள்
2.
மிகுந்த
– பெயரெச்சம்
3.
நல்லொளி, நெடுங்காலம் – பண்புத்தொகைகள்
4.
நல்லலயத்துடன்
– குறிப்புப்பெயரெச்சம்
5.
மூதூர்
– பண்புத்தாெகை
6.
உறுதுயர்
– வினைத்தாெகை
7.
கைதாெழுது
– மூன்றாம் வேற்றுைமத் தாெகை
8.
தடக்கை
– உரிச்சாெல் தாெடர்
9.
நன்மொழி
– பண்புத்தொகை
10.
வியத்தல், நோக்கம், எழுதுதல், உரைத்தல், செப்பல், இருத்தல், வழங்கல் – தொழிற்பெயர்கள்
11.
வருக
– வியங்கோள் வினைமுற்று
12.
வந்து
– வினையெச்சம்
13.
நன்முகமன்
– பண்புத்தொகை
14.
பொருந்து
– வினையெச்சம்
15.
போற்று, பெருக்கி, திருத்தி, அகற்றி – வினையெச்சங்கள்
16.
அருந்துணை
– பண்புத்தொகை
17.
அசைஇ, கெழீஇ – சொல்லிசை அளபெடைகள்
18.
பரூஉக், குரூஉக்கண் – செய்யுளிசை அளபெடைகள்
19.
எய்தி, கூறி, புக்கு – வினையெச்சங்கள்
20.
பொழிந்த, சேர்ந்த – பெயரெச்சங்கள்
21.
மீளாத்துயர்
– ஈறு கெட்ட எதிர்மறை பெயரச்சம்
22.
அறுத்து
– வினையெச்சம்
23.
ஆளா
உனதருளே – ஈறு கெட்ட எதிர்மறை பெயரச்சம்
24.
ஊழ்ஊழ்
– அடுக்குத்தொடர்
25.
வளர்வானம்
– வினைத்தொகை
26.
செந்தீ
– பண்புத்தொகை
27.
வரா
(ஒன்றன்) – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
28.
தோன்றி, மூழ்கி – வினையெச்சங்கள்
29.
கிளர்ந்த
– பெயரெச்சம்
30.
போற்று, பெருக்கி, திருத்தி, அகற்றி – வினையெச்சங்கள்
31.
அருந்துணை
– பண்புத்தொகை
32.
கேள்வியினான்
– வினையாலைணையும் பெயர்
33.
காடனுக்கும்
கபிலனுக்கும் – எண்ணும்மை
34.
கழிந்த
– பெயரெச்சம்
35.
கற்றோர்
– வினையாலணையும் பெயர்
36.
உணர்ந்த
கபிலன் – பெயரச்சம்
37.
தீம்தேன், நல்நிதி, பெருந்தகை – பண்புத்தொகைகள்
38.
ஒழுகுதார்
– வினைத்தொகை
39.
மீனவன்
– ஆகுபெயர்
40.
கேள்வியினான்
– வினையாலைணையும் பெயர்
41.
காடனுக்கும்
கபிலனுக்கும் – எண்ணும்மை
42.
கழிந்த
– பெயரெச்சம்
43.
இறுக்கி
– வினையெச்சம்
44.
தளர
– பெயரெச்சம்
45.
குண்டலமும்
குழைகாதும் – எண்ணும்மை
46.
ஆடுக
– வியங்கோள் வினைமுற்று
47.
கட்டிய
– பெயரெச்சம்
48.
வட்டச்
சுட்டி – குறிப்பு பெயரெச்சம்
49.
செங்கீரை, செம்பொன்னடி, பைம்பொன், சிறுங்கிணி – பண்புத்தொகைகள்
50.
தண்டலை, வெய்யோன், நெடுந்திரை, நெடும்படை, புதுமணல் – பண்புத்தொகைகள்
51.
சண்பகக்காடு
– இருபெயரொட்டுப் பண்புத்தொகை
52.
கிடந்து, கடந்து, விழிந்து – வினையெச்சங்கள்
53.
நோக்க
– பெயரெச்சம்
54.
மறிகடல், வரிசோதி – வினைத்தொகைகள்
55.
எழுந்திராய்!
எழுந்திராய்!,
உறங்குவாய்!
உறங்குவாய்! – அடுக்குத்தொடர்
56.
காலதூதர்
– உருவகம்
57.
தொழுது, விரைந்து, அழுத்து – வினையெச்சங்கள்
58.
நண்பா
– விளி வேற்றுமை
59.
வருபுனல், எழு கழனி – வினைத்தொகை
60.
இளமான், நெடுவரை – பண்புத்தொகை
61.
மாமலர்
– உரிச்சொல் தொடர்
62.
வண்ணமும்
சுண்ணமும் – எண்ணும்மை
63.
பயில்தொழில்
– வினைத்தொகை
64.
நன்கலம், வெறுக்கை, நுண்வினை, அரும்பெளல் – பண்புத்தொகை
65.
பகருநர்
– வினையாலணையும் பெயர்
66.
செறிந்த
– பெயரெச்சம்
67.
குழலினும்
யாழினும் – எண்ணும்மை
68.
காலக்கழுதை
– உருவகம்
69.
கந்தைத்துணி
– இருபெயரொட்டு பண்புத்தொகை
70.
காலக்கணிதம்
– உருவகம்
71.
ஆக்கல், அளித்தல், அழித்தல் – தொழிற்பெயர்
72.
கொள்க, எழுதுக – வியங்கோள் வினைமுற்று
73.
கொள்வோர்
– வினையாலணையும் பெயர்
74.
அறிந்து
– வினையெச்சம்
75.
கற்காலம்
– இருபெயராட்டுப் பண்புத்தொகை
76.
புலம்புவார்
– வினையாலணையும் பெயர்
77.
செங்கற்கள்
– பண்புத்தொகை
78.
காக்கென்று
– காக்கவென்று என்பதன் தொகுத்தல் விகாரம்
79.
கணீர்
– கண்ணீர் என்பதன் இடைக்குறை
80.
காய்மணி, உய்முறை, செய்முறை – வினைத்தொகைகள்
81.
மெய்முறை
– வேற்றுமைத்தொகை
82.
கைமுறை
– மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
83.
பரப்பி, ஒலித்து – வினையெச்சங்கள்
84.
வாழ்ந்தேன்
– தன்மை ஒருமை வினைமுற்று
85.
வீ
– ஒரெழுத்தொருமொழி
86.
தடவிலா
– ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
87.
நல்லறம், இளங்கூழ் – பண்புத்தொகைகள்
88.
காக்கென்று
– காக்கவென்று என்பதன் தொகுத்தல் விகாரம்
89.
கணீர்
– கண்ணீர் என்பதன் இடைக்குறை
90.
காய்மணி, உய்முறை, செய்முறை – வினைத்தொகைகள்
91.
மெய்முறை
– வேற்றுமைத்தொகை
92.
கைமுறை
– மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
11ஆம் வகுப்பு இலக்கணக்குறிப்பு
1.
வழிவழி, தீட்டித்தீட்டி –
அடுக்குத்தொடர்கள்
2.
தொழுதவர், உழுதவர், விதைத்தவர், வியர்த்தவர் – வினையாலணையும்
பெயர்கள்
3.
நிறைமணி, கனைகடல் – வினைத்தொகைகள்
4.
சாகாத, எழுகின்ற, எழுத்துவித்த – பெயரச்சங்கள்
5.
உரமெல்லாம்
– தொகுத்தல் விகாரம்
6.
தொல்கனிமங்கள்
– பண்புத்தொகை
7.
மலைமுகடு
(மலையின்கண் உள்ள முகடு) – ஏழாம் வேற்றுமை உருபும் பயனும்
8.
உடன்தொக்க
தொகை
9.
விரல்
முனை (விரலினது முனை) – ஆறாம் வேற்றுமைத் தொகை
10.
தந்தவளே
– விளித்தொடர்
11.
மாநகர்
– உரிச்சொல்தொடர்
12.
காட்டல், கோடல் – தொழிற்பெயர்கள்
13.
கேட்போர்
– வினையாலணையம் பெயர்
14.
ஐந்தும்
– முற்றுமை
15.
நுவல்வோன், கொள்வோன், ஆக்கியோன், மொழிநர், வைத்தார் – வினையாலணையும் பெயர்கள்
16.
ஆடமை
(ஆடு ஆமை) – வினைத்தொகை
17.
அமைதோள்–
உவமைத்தொகை
18.
நூன்முகம், நூற்பெயர்– ஆறாம் வேற்றுமைத் தொகை
19.
பொருளும்
ஐந்தும்,
சித்திரமும்
கோபுரமும் – ஆறாம் வேற்றுமைத் தொகை
20.
மாடக்கு
– “அத்து”ச் சாரியை தொக்கி நின்றது
21.
பார்க்க
– வினையெச்சம்
22.
மழைக்காலம்
– இருபெயரொட்டு பண்புத்தொகை
23.
நெடுமரம்
– பண்புத்தொகை
24.
குருவிகளையும்
கூடுகளையும் – எண்ணும்மை
25.
கரைகின்ற
– பெயரெச்சம்
26.
பொய்த்தது, மறுகியது – ஒன்றன் பால்
வினைமுற்றுகள்
27.
செங்கயல், வெண்சங்கு – பண்புத்தொகைகள்
28.
அகிற்புகை
– ஆறாம் வேற்றுமைத்தொகை
29.
மஞ்ஞையும்
கொண்டலும் – எண்ணும்மை
30.
கொன்றைசூடு
– இரண்டாம் வேற்றுமைத்தொகை
31.
ஏற்பவர்
– வினையாலணையும் பெயர்ச்சம்
32.
பாயும், மேயும், பெய்யும் – முற்றுமைகள்
33.
மடை
இடங்கணி,
வாவித்ரங்கம்
– ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகைகள்
34.
ஈன்ற
சங்கு, போற்றும் திருமலை, வருங்காவில், சூடும் ஐயன் – பெயரெச்சங்கள்
35.
ஏந்தி
வெடிக்கும் – வினையெச்சம்
36.
ஆல்
– அசைநிலை
37.
கண்ணி
– அண்மை விளிச்சொல்
38.
ஆடுகம்
– தன்மைப் பன்னமை வினைமுற்று
39.
கொண்டன்றால்
(ஆல்) – அசைநிலை
40.
பேரமார்
கண்ணி – அண்மை விளி (அழைத்தல்)
41.
ஆடுகளம்
விரைந்தே – தன்மை பன்மை வினைமுற்று
42.
காயா
கொன்றை நெய்தல் முல்லை – உம்மைத்தொகை
43.
போதவிழ்
தளவொடு – வினைதொகை
44.
அலர்ந்து
கவினி, விரைந்து – வினையெச்சங்கள்
45.
தாவி
– வினையெச்சம்
46.
மாதே
– விளி
47.
மேவி, உயர்ந்து, போற்றி, ஏற்றி – வினையெச்சங்கள்
48.
நுண்ணிடை, கொழங்கனல் – இருபெயரொட்டு
பண்புத்தொகை
49.
உயர்ந்தோங்கும்
– ஒருபொருட்பன்மொழி
50.
நகர்வாசன்
– ஐந்தாம் வேற்றுமைத்தொகை
51.
புயவரை
– உருவகம்
52.
புனைதீரன், தருகழுகாசலம், இடுமுழவோசை – வினைத்தொகைகள்
53.
பதம்பணி
(பத்தைப்பணி),
கொடி சூடிய
(கொடியைச் சூடிய) – இரண்டாம் வேற்றுமைத் தொகை
54.
குறவள்ளி
– ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
55.
மொழிபோதினில்
(மொழியைக் கூறும் போதினில்) – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க
தொகை
56.
நூபுதத்துத்
தொனி (நூபுரத்தினது தொனி),
அடியார் கணம்
– (அடியாரது கணம்) – ஆறாம் வேற்றுமைத் தொகை
57.
தங்கக்காவடி
(தங்கத்தால் ஆகிய காவடி) – மூன்றாம் உருபும் பயனும் உடன்தொக்க தொகை
58.
பூண்டார்
– வினையாலணையும் பெயர்
59.
பிறந்தோர்–
வினையாலணையும் பெயர்
60.
நன்றுநன்று
– அடுக்குத்தொடர்
61.
வாழி
– வியங்கோள் வினைமுற்று
62.
வெண்டலை
– பண்புத்தொகை
63.
அம்ம
– முன்னிலை விளி
64.
புணர்ப்போர்–
வினையாலணையும் பெயர்
65.
கொல்லோ
(கொல் + ஓ) – வினையாலணையும் பெயர்
66.
அம்ம
– அசைநிலை
67.
துஞ்சல்
– தொழிற்பெயர்
68.
முயலா
– ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரச்சம்
69.
உண்டு, இனிது – குறிப்பு வினைமுற்றுகள்
70.
ஆல்
– தேற்றம்
71.
உண்டல், அஞ்சல் – தொழிற்பெயர்கள்
72.
உலகம்
– இடவாகு பெயர்
73.
இந்திரர்
அமிழ்தம் (இந்திரர்க்கு உரிய அமிழ்தம்) – நான்காம் வேற்றுமை உருபும் பயனும்
உடன்தொக்க தொகை
74.
அஞ்சுவது
அஞ்சி – வினையாலணையும் பெயர்
75.
உயிரும்
கொடுக்குவர் – உம்மை,
இறந்தது
தழுவிய எச்சவும்மை
76.
கொடுக்குவர்
– படர்க்கைப் பலர் பால் எதிர்கால வினைமுற்று
77.
நோன்தாள்
– உரிச்சொற்றொடர்
78.
அனையர்
– வினையாலணையும் பெயர்
79.
அயர்விலர்
– எதிர்மறை வினையாலணையும் பெயர்
80.
கற்பிக்கும்
– பெயரச்சம்
81.
பறந்து, நடக்க, இசைக்க, வீழ்ந்து – வினையெச்சங்கள்
82.
வெண்சுவை, தீம்பால் – பண்புத்தொகைகள்
83.
விரிகதிர், ஒழுகுநீர் – வினைத்தொகைகள்
84.
பொற்காலம், பொற்சிலம்பு – மூன்றாம் வேற்றுமை
உருபும் பயனும் உடன்தொக்க தொகைகள்
85.
கொண்ட
– பெயரெச்சம்
86.
அறிவும்
ஒழுக்கமும் – எண்ணும்மை
87.
பந்தர்
– பந்தல் என்பதன் ஈற்றுப்போலி
88.
சிறுகோல், முதுசெவிலி, சிறுவிளையாட்டு, கொடுஞ்சோறு– பண்புத்தொகைகள்
89.
கலந்த, கொடுத்த – பெயரெச்சங்கள்
90.
ஏந்தி, பிழைப்ப, ஒழிய, ஓடி, மெலிந்து, மறுத்து – வினையெச்சங்கள்
91.
உள்ளான்
– முற்றெச்சம்
92.
கொழுநன்கு
(கொழுநனது குடி) – ஆறாம் வேற்றுமைத் தொகை
93.
உண்
– முன்னிலை ஏவல் ஒருமை வினைமுற்று
94.
ஒக்குபு
– செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம்
95.
அறிதல், போற்றல், நினைத்தல், கேட்டல், பயிறல் – தொழிற்பெயர்கள்
96.
நனிஇகக்கும்
– உரிச்சொற்றொடர்
97.
கேட்போன்
– விணையாலணையும் பெயர்
98.
இசுக்கும், உரைக்கும் – செய்யும் என்னும்
வாய்பாட்டு வினைமுற்றுகள்
99.
மலிந்த, மண்டிய, பூத்த, பொலிந்த – பெயரெச்சங்கள்
100. ஈடன் – ஈற்றுப்போலி
101. தரும் – செய்யும் என்னும்
வாய்ப்பாட்டுப் பெயரெச்சம்
102. பெரும்புகழ், தெண்டிரை – பண்புத்தொகைகள்
103. பொன்நகர் – இரண்டாம் வேற்றுமை
உருபும் பயனும் உடன் தொக்க தொகை
104. மாநகர், உறுபகை – உரிச்சொல் தொடர்கள்
105. ஐந்தும் – முற்றுமை
106. தானமும் ஒழுக்கமும், தவமும் ஈகையும் – எண்ணும்மைகள்
107. படைத்த – பெயரெச்சம்
108. ஈடன் – ஈற்றுப்போலி
109. அரும்பொருள், தொன்னகர், புதுமலர் – பண்புத்தொகைகள்
110. யாவும் – முற்றுமை
111. சிந்தி, பணிந்து – வினையெச்சங்கள்
112. வறுமைநோய் – உருவகம்
113. மலைவிலா, தொலைவிலா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்
114. இடுவிருந்து – வினைத்தொகை
115. அருஞ்சருமம் – பண்புத்தொகை
116. வளைஇ, அசைஇ – சொல்லிசை அளபெடைகள்
117. எறிவாள் – வினைத்தொகை
118. அறன் (அறம்), திறன் (திறம்) – ஈற்றுப்போலி
119. பிழையா – ஈறுகெட்ட எதிர்மறைப்
பெயரெச்சம்
120. பெருங்கடல் – பண்புத்தொகை
121. முகந்த, எதிர்ந்த, மலர்ந்த, பொலிந்த – பெயரெச்சங்கள்
122. அறிமன்னர், உயர்விசும்பு – வினைத்தொகைகள்
123. வாழிய – வியங்கேளா வினை முற்று
124. உணவையும் உறக்கத்தையும் – எண்ணும்மை
125. சதுர வட்டக் கோணம் – உம்மைத்தொகை
126. உணவையும் உறக்கத்தையும் – எண்ணும்மை
127. சதுர வட்டக் கோணம் – உம்மைத்தொகை
128. மாண்ட தவளை – பெயரெச்சம்
129. பெற்ற, இட்ட, கொடுத்த, கட்டிய – பெயரெச்சங்கள்
130. சொல்ல, கடித்து, சொல்லி, நீண்டு, நெளிந்து, சுருண்டு – வினையெச்சங்கள்
131. சுண்டுவிரல் – இருபெயரொட்டுப்
பண்புத்தொகை
132. திருகுமுருகு – உம்மைத்தொகை
133. சுடுகாடு, கெல்புலி, குரைகடல் – வினைத்தொகைகள்
134. நல்லாடை – பண்புத்தொகைகள்
135. அயன்மால் – உம்மைத்தொகை
136. கற்பொடி – ஆறாம் வேற்றுமைத்தொகை
137. ஒதுக, பேசிடுக, ஆழ்க, வாழிய – வியங்கோள் வினைமுற்றுகள்
138. அலைகடல் – வினைத்தொகை
139. தமிழ்க்கவிஞர் – இருபெயரொட்டுப்
பண்புத்தொகை
140. நெடுங்குன்று, பேரன்பு – பண்புத்தொகை
141. ஒழிதல் – தொழிற்பெயர்
142. உழுதுழுது – அடுக்குத்தொடர்
143. வீழிய – வியங்கோள் வினைமுற்று
144. நிறைஉழைப்பு, உயர்தமிழ், வீழ்கொள்ளி – வினைத்தொகைகள்
145. பாம்புக்கூட்டம் – இருபெயரொட்டுப்
பண்புத்தொகை
146. இளஞ்சிங்கம், பெருங்காடு, சிற்றூர், நெடுமரங்கள் – பண்புத்தொகைகள்
147. சாதல், தவிர்தல், முழக்கம் – தொழிற்பெயர்கள்
148. பதைபதைத்து – அடுக்குத்தொடர்
149. பெரியோரே, தாய்மாரே, இளஞ்சிங்கங்காள், பெரியீர், அன்னையீர் – அண்மை விளிகள்
150. பூட்டி – வினையெச்சம்
151. வந்திருந்தார். கொண்டவர் –
வினையாலணையும் பெயர்
152. எலாம் – இடைக்குறை
153. கற்பிளந்து, மலைபிளந்து – இரண்டாம் வேற்றுமைத்
தொகை
154. அரசனுக்கும் எனக்கும், இவளும் நானும், கவிஞனகுக்கும் காதலிக்கும் –
எண்ணும்மைகள்
155. வந்தோம் – தன்மைப்பன்மை வினைமுற்று
156. கண்ணீர்வெள்ளம் – உருவகம்
157. ஒரீஇய – சொல்லிசை அளபெடை
158. புகழ்பண்பு – வினைத்தொகை
159. நன்னாடு – பண்புத்தொகை
160. துய்த்தல் – தொழிற்பெயர்
161. மருண்டனென் – தன்மை ஒருமை
வினைமுற்று
162. ஒடியா – ஈறுகெட்ட எதிர்மறைப்
பெயரெச்சம்
163. கடுந்துப்பு, நல்லிசை – பண்புத்தொகை
164. பிழைப்பு – தொழிற்பெயர்
165. தண்டா – ஈறுகெட்ட எதிர்மறைப்
பெயரெச்சம்
166. இகழந்து, கண்டு, நல்கி – வினையெச்சங்கள்
167. புரைவயின் புரைவயின் –
அடுக்குத்தொடர்
168. கல்லையும் மண்யையும் – எண்ணும்மை
169. செல்லி – வினையெச்சம்
170. விளிப்பேன் – தன்மை ஒருமை
வினைமுற்று
171. சமத்துவப்புனல் – உருவகம்
172. கல்லையும் மண்யையும் – எண்ணும்மை
173. செல்லி – வினையெச்சம்
174. விளிப்பேன் – தன்மை ஒருமை
வினைமுற்று
175. சமத்துவப்புனல் – உருவகம்
176. கற்றேன் – தன்மை ஒருமை வினைமுற்று
177. உரைத்தாய் – முன்னிலை ஒருமை
வினைமுற்று
178. உடை அணிந்தேன் – இரண்டாம்
வேற்றுமைத்தொகை
179. பெற்றேன், குளித்தேன், அளித்தேன், அணிந்தேன், தின்றேன், வென்றேன் – தன்மை ஒருமை வினைமுற்று
180. நிற்கின்றாய், என்பாய், பேசுகிறாள் – முன்னிலை ஒருமை
வினைமுற்று
181. காகிதம் தின்பது, பிள்ளைகள் பெறுவது – இரண்டாம்
வேற்றுமைத்தொகை
182. கடி நகர், சாலத் தகும்– உரிச்சொற்றொடர்கள்
183. உருட்டி – வினையெச்சம்
184. பின்னிய, முளைத்த – பெயரெச்சங்கள்
185. இளமுகம், நல்லூன், சிறுபுல், பேரழகு, முந்நீர், நன்மண் – பண்புத்தொகைகள்
186. பூக்குலை – இரண்டாம் வேற்றுமை
உருபும் பயனும் உடன் தொக்க தொகை
187. தேன்துளி – இருபெயரொட்டுப்
பண்புத்தொகை
188. ஆசிலா, ஓவா – ஈறுகெட்ட எதிர்மறைப்
பெயரெச்சங்கள்
189. ஏகுமின் – ஏவல் பன்மை வினைமுற்று
190. பார்த்து பாரத்து, நில் நில், உழுது உழுது – அடுக்குத்தொடர்கள்
191. வாய்க்கால் – இலக்கணப்போலி (முன்
பின் தொக்கியது)
192. செய்தொழில், அலைகடல், வீழருவி – வினைத்தொகைகள்
193. மலையலை, குகை முகம் – உவமைத்தொகைகள்
194. நெறுநெறு – இரட்டைக்கிளவி
195. புல்புழு, இராப்பகல் – உம்மைத்தொகைகள்
196. காலத்தச்சன் – உருவகம்
197. ஏகுதி – ஏவல் ஒருமை வினைமுற்று
198. புழுக்களும் பூச்சியும் – எண்ணும்மை
199. தங்குதல் – தொழிற்பெயர்
200. கடந்து, சிக்கி, கலந்து – வினையெச்சம்
201. சென்ற – பெயரெச்சம்
202. மண்கல், புல்புழு, இராப்பகல் – உவமைத்தொகைகள்
203. விடுத்தனை – முன்னிலை ஒருமை
வினைமுற்று
204. ஏகுவன் – தன்மை ஒருமை வினைமுற்று
12ஆம் வகுப்பு இலக்கணக்குறிப்பு
1.
செந்தமிழ், செந்நிறம், செம்பரிதி – பண்புத்தொகைகள்
2.
சிவந்து
– வினையெச்சம்
3.
வியர்வைவெள்ளம்
– உருவகம்
4.
முத்துமுத்தாய்
– அடுக்குத்தொடர்
5.
வியந்து, ஈன்று, கூவி, உடைத்து – வினையெச்சங்கள்
6.
தமிழ்க்குயில்
– உருவகம்
7.
உயர்ந்தோர்
– வினையாலணையும் பெயர்
8.
வெங்கதிர்
– பண்புத்தொகை
9.
இலாத
– (இல்லாத) இடைக்குறை விகாரம்; எதிர்மறைப் பெயரெச்சம்
10.
வந்து, தொழ, விளங்கி – வினையெச்சங்கள்
11.
ஒலிநீர்
– வினைத்தொகை
12.
இருளகற்றும்
– இரண்டாம் வேற்றுமைத்தொகை
13.
காய்கிறது, உறிஞ்சுகிறது, உதறுகிறது, தோய்கிறது, விடுபடுகிறது – படக்கை ஒன்றன்பால்
வினைமுற்றுகள்
14.
இசைக்கின்றன
– படக்கை பலவின்பால் வினைமுற்று
15.
இருக்கிறேன், அலைகிறேன் – தன்மை ஒருமை நிகழ்கால
வினைமுற்றுகள்
16.
நனைந்து, குதித்து, அசைந்து, ஏந்தி – வினையெச்சங்கள்
17.
இருந்த, தீட்டிய, அழிந்த, இறங்கிய, வாங்கிய, போன – பெயரெச்சங்கள்
18.
வகைஇ
– சொல்லிசை அளபெடை
19.
பொய்யா
– ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்;
20.
புதுப்பெயல், கொடுங்கோல் – பண்புத்தொகைகள்
21.
வகைஇ
– சொல்லிசை அளபெடை
22.
பொய்யா
– ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்;
23.
புதுப்பெயல், கொடுங்கோல் – பண்புத்தொகைகள்
24.
உளது
– இடைக்குறை
25.
மாதவம்
– உரிச்சொற்றொடர்
26.
தாழ்கடல்
– வினைத்தொகை
27.
செற்றவர்
– வினையாலணையும் பெயர்
28.
நுந்தை
– நும் தந்தை என்பதன் மரூஉ
29.
தடக்கை
– உரிச்சொற்றொடர்
30.
நளிர்கடல், இழிஅருவி – வினைத்தொகை
31.
நோற்கும்
சவரி – வினையாலணையும் பெயர்
32.
தாவா
வலி – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
33.
பொலிந்தான்
– படர்க்கை ஆண்பால் இறந்தகால வினைமுற்று
34.
வலிஅரக்கர்
– இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
35.
நன்னுதல், இன்னுரை, அருங்கானம் – பண்புத்தொகைகள்
36.
வயங்குமாெழி
– வினைத்தாெகை
37.
அடையா
– ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
38.
அறிவும்
புகழும் – எண்ணும்மை
39.
சிறாஅர்
– இசைநிறை அள்பெடை
40.
கொல்தச்சர்
– வினைத்தாெகை
41.
வாயிலோயே
– அண்மைவிளி
42.
உடையோர்
– வினையாலணையும் பெயர்
43.
மலரடி
– உவமைத்தொகை
44.
வளர்தலம்
– வினைத்தொகை
45.
மாமயிலை
– உரிச்சாெற்றாெடர்
46.
பெருங்கடல்
– பண்புத்தொகை
47.
உழாஅது
– செய்யுளிசை அளபெடை
48.
வெரீஇய
– சொல்லிசை அளபெடை
49.
ஆடலும்
பாலும் – எண்ணும்மை
50.
தொல்நெறி
– பண்புத்தொகை
51.
நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை –
52.
தாெழிற்பெயர்கள்
53.
தொல்நெறி
– பண்புத்தொகை
54.
காய்நெல்
– வினைத்தொகை
55.
புக்க
– பெயரெச்சம்
56.
அறியா
– ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
57.
அறிந்து, அறுத்து புக்கு – வினையெச்சம்
58.
செழிக்கும்
– “செய்யும்” என்னும் வினைமுற்று
59.
உண்ணான்
– படர்க்கை ஆண்பால் எதிர்மறை வினைமுற்று
60.
கருந்தடம், வெங்குருதி – பண்புத்தொகைகள்
61.
வெந்து, சினந்து, போந்து – வினையெச்சங்கள்
62.
உன்னலிர்
– முன்னிலைப் பன்மை வினைமுற்று
63.
ஓர்மின்
– ஏவல் பன்மை வினைமுற்று
64.
சொற்ற, திருந்திய – பெயரெச்சங்கள்
65.
பாதகர்
– வினையாலணையும் பெயர்
66.
ஊன்ற
ஊன்ற – அடுக்குத் தொடர்
67.
கருந்தடம், வெங்குருதி – பண்புத்தொகைகள்
68.
வெந்து, சினந்து, போந்து – வினையெச்சங்கள்
69.
உன்னலிர்
– முன்னிலைப் பன்மை வினைமுற்று
70.
ஓர்மின்
– ஏவல் பன்மை வினைமுற்று
71.
சொற்ற, திருந்திய – பெயரெச்சங்கள்
72.
பாதகர்
– வினையாலணையும் பெயர்
73.
ஊன்ற
ஊன்ற – அடுக்குத் தொடர்
74.
வாய்த்த, உவப்ப, கொடுத்த, ஈந்த – பெயரெச்சங்கள்
75.
கவாஅன்
– செய்யுளிசையளபெடை
76.
தடக்கை
– உரிச்சொல் தொடர்
77.
நீீலம்
– ஆகுபெயர்
78.
அருந்தமிறல், நெடுவழி, வெள்ளருவி, நெடுவேல், நன்மொழி, நன்னாடு – பண்புத்தொகைகள்
79.
அரவக்கடல்
– இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
80.
மலைதல்
– தொழிற்பெயர்
81.
விரிகடல்
– வினைத்தொகை
82.
கடல்தானை
– உவமைத்தொகை
83.
நல்கிய, தாங்கிய, மறைந்த – பெயரெச்சங்கள்
84.
பெருங்கடல், பெருமகன், பெருந்தேர், செந்நுகம் – பண்புத்தொகைகள்
85.
திகழ்நீலம், கமழ்பூ – வினைத்தொகைகள்
பெயர்ச் சொல்லின் வகை அறிதல்
கொடுக்கப்பட்டிருக்கும் சொல் எத்தகைய
பெயர்ச்சொல் என கண்டறிதலே இப்பகுதி வினாக்களாக இருக்கின்றன. இவ்வினாக்களுக்கு
எளிதில் விடையளிக்கும் வகையில் பெயர்ச் சொல்லின் அனைத்து வகைகளையும் அதற்கான
உதாரணங்களைு் தேர்வு நோக்கம் தொகுத்துள்ளோம். (பெயர்ச்
சொல்லின் வகை அறிதல்)
1. பண்புப்பெயர்
பொருளின் பண்பைக் குறிக்கும் பெயர்
பண்புப்பெயர் எனப்படும். அது நிறம், சுவை,
வடிவம், அளவு என்னும் நான்கின் அடிப்படையில் அமையும்.
வெண்மை – நிறப்பண்புபெயர்.
இனிப்புச்சுவை – சுவைப்பண்புப்பெயர்
வட்டவடிவம் – வடிவப்பண்புப்பெயர்
பண்புப்பெயர் |
விகுதிகள் |
|
நன்மை |
மை |
|
தொல்லை |
ஐ |
|
மாட்சி |
சி |
|
மாண்பு |
பு |
|
மழவு |
உ |
|
நன்கு |
கு |
|
நன்றி |
றி |
|
நன்று |
று |
|
நலம் |
அம் |
|
நன்னர் |
அர் (அ) நர் |
|
திட்பம் |
பம் |
|
(மை – விகுதி பெரும்பான்மையாக வரும்) |
செம்மைகோல், மூவேந்தர்,
மும்மாரி, சதுரவயல், கருங்கல்,
வட்டக்கிணறு, கோபம், கசப்பு,
துவப்பு, முக்கோணம், சதுரம்,
குட்டை, செவ்வகம், உயரம்,
உருண்டை, செம்மை, வட்டநிலா,
நீர்நகர், முக்குணம்
2. தொழிற்பெயர்
மாதவி ஆடல் கண்டு கோவலன் மகிழ்ந்தான்
இத்தொடரில் உள்ள பெயர்ச்சொற்கள், வினைச்சொற்கள், தொழிற்பெயர்களை அறிவோம்.
- மாதவி, கோவலன் – இவை பெயர்ச்சொற்கள்
- கண்டு, மகிழந்தான் – இவை வினைச்சொற்கள்
- ஆடல் – என்பது தொழிற்பெயர்
அறுவகைப் பெயர்ச்சொற்களுள் தொழில்பெயரும்
ஒன்று என்பதனை முன் வகுப்பிலேயே கற்றிருக்கிறீர்கள். ஆடல் – என்பது ஆடுதல் என்னும்
தொழிலைக் குறிப்பதனால்,
அது தொழில் பெயர்
எனப்பட்டது.
ஆடு + அல் = ஆடல், அல் – என்பது தொழிற்பெயர் விகுதி இவ்வாறு
தொழிற்பெயரைக் குறிக்க வரும் விகுதிகள் தல், அல்,
அம், ஐ, கை, வை, கு, பு, வு, தி, சி, வி, உள்,
காடு, பாடு, அரவு,
ஆனை, மை, து போன்றவை தொழிற்பெயர் விகுதிகளாக வரும்.
வினைப்பகுதியுடன் தொழிற்பெயர் விகுதி
சேர்ந்து வருவது விகுதி பெற்ற தொழிற்பெராகும்.
பெறுதல் |
பெறு + தல் |
ஆட்டம் |
ஆடு + ஆம் |
போக்கு |
போ + கு |
பறவை |
பற + வை |
தொற்றரவு |
தோற்ற + அரவு |
பாய்த்து |
பாய் + து |
கோடல் |
கோடு + இரங |
வாழ்க்கை |
வாழ் + கை |
புளிப்பு |
புளி + பு |
வரவு |
வர + உ |
கோட்பாடு |
கோள் + பாடு |
கேளானை |
கேள் + ஆனை |
தொழிற்பெயரை முதனிலைத் தொழிற்பெயர், முதனிலை திரிந்த தொழிற்பெயர் என
வகைப்படுத்துவர்.
1. முதனிலைத் தொழிற்பெயர்
தொழிற் பெயர் விகுதிகளே இல்லாமல், பகுதி மட்டும் வந்து, தொழிலை உணர்த்துவதற்கு முதனிலைத்
தொழிற்பெயர் எனப்படும்.
எ.கா. கபிலனுக்கு அடி விழுந்தது
இத்தொடரில் அடி, என்பது விகுதி பெறாமல், பகுதியாய் நின்று தொழிலை உணர்நத்துகிறது.
முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
தொழிற் பெயரின் முதனிலையாக பகுதி திரிந்து
வருவது முதனிலைத் திரிந்ததொழிற்பெயர் எனப்படும்.
எ.கா. அறிவறிந்த மக்கட் பேறு. அவனுக்கு என்ன
கேடு?
இங்கு ‘பெறு, கெடு’ என்னும் முதனிலைகள் ‘பேறு, கேடு’ எனத் திரிந்து ‘பெறுதல், கெடுதல் என்னும் பொருளை உணர்த்துகின்றன.
3. வினையாலணையும் பெயர்
- முருகன் பரிசு பெற்றான்.
- பரிசு பெற்றானைப் பாராட்டினர்.
இவ்விரு தொடர்களிலும், பெற்றான் என்னும் வினைச்சொல் வந்துள்ளது.
முதல் தொடரிலுள்ள பெற்றான் என்பது, முருகன் என்னும் எழுவாய்க்குப் பயனிலையாக
வந்துள்ளது. இரண்டாவது தொடரில் உள்ள ‘பெற்றானை’ என்பது முருகனை குறிக்கும் பெயராக
வந்துள்ளது.
இவ்வாறு வினைமுற்று, வினையைக் குறிக்காமல் வினை செய்தவவரைக்
குறிப்பது வினையாலணையும் பெயர் எனப்படும். இது வினைக்குரிய காலம் காட்டும் ; பெர்க்குரிய வேற்றுமை உருபுகளையும்
பெற்றுவரும்
பெற்றான் – இறந்தகாலம்
பெறுகின்றானை –
நிகழ்காலம்
பெறுவானை – எதிர்காலம்
பெற்றான் + ஐ என, இரண்டாம் வேற்றுமை உருபான ஐ ஏற்று வந்துள்ளமை
காண்க.
தொழில்பெயர்க்கும், வினையாலணையும் பெயருக்கும் உள்ள வேறுபாடுகள்
தொழில்பெயர் |
வினையாலணையும் பெயர் |
தொழிலுக்குப் பெயராய் வரும் |
தொழில் செய்பவருக்குப் பெயராய் வரும் |
படர்க்கை இடத்தில் வரும் |
மூவிடங்களில் வரும் |
காலங்காட்டாது |
முக்காலத்தையும் காட்டும் |
4. ஆகுபெயர்
- இந்தியா மிகப்பெரிய நாடு
- மட்டைப்பந்தில் இந்தியா வென்றது
இவ்விரு தொடர்களிலும் அமைந்துள்ள இந்தியா
என்னும் சொல்லை உற்று நோக்குங்கள். முதல் தொடரில் உள்ள இந்தியா இடத்தைக்
குறிக்கின்றது. இரண்டாம் தொடரில் உள்ள இந்தியா, இந்திய வீரர்களை குறிக்கின்றது. இவ்வாறு ஒரு பொருளின் பெயர், தனக்குரிய பொருளைக் குறிக்காமல் தன்னோடு
தொடர்புடைய வேறொரு பொருளுக்கு பெயராகி வருவது ஆகுபெயர் எனப்படும்.
ஆகு பெயர் பதினாறு வகைப்படும்
1. பொருளாகுபெயர் (முதலாகு பெயர்)
ஒரு முழுப்பொருளின் பெயர், அதனைச் சுட்டாது அதன் முதற்பொருளுக்கு ஆகி
வருவது பண்பாகு பெயர் எனப்படும்.
சான்று :- முல்லையைத் தொடுத்தாள்
முதற்பொருளாகிய முல்லைக்கொடி, அதன் சினை(உறுப்பு)யாகிய பூவுக்கு ஆகி வந்தது.
2. இடவாகு பெயர்
சான்று :- வகுப்பறை சிரித்தது
வகுப்பறை என்னும் இடப்பெயர் அங்குள்ள மாணவர்களுக்கு
ஆகி வந்தது.
3. காலவாகு பெயர்
காலப்பெயர் அதனோடு தொடர்புடைய வேறு
பெயருக்கு ஆகி வருவது காலவாகு பெயர் எனப்படும்.
சான்று :- கார் அறுத்தான்
கார் என்னும் காலப்பெயர் அக்காலத்தில்
விளையும் பயிருக்கு ஆகி வந்தது.
4. சினையாகு பெயர்
சினைப்பெயர் அதனோடு தொடர்புடைய வேறு
பெயருக்கு ஆகி வருவது சினையாகு பெயர் எனப்படும்.
சான்று :- மருக்கொழுந்து நட்டான்
மருக்கொழுந்து என்னும் சினைப் (உறுப்பு) பெயர், அதன் செடிக்கு ஆகிவந்தது.
5.
பண்பாகுபெயர்
பண்புப்பெயர் அதனோடு தொடர்புடைய வேறு
பெயருக்கு ஆகி வருவது பண்பாகு பெயர் எனப்படும்.
சான்று :- மஞ்சள் பூசினாள்
மஞ்சள் என்னும் பண்பு, அவ்வண்ணத்தில் உள்ள கிழங்குக்கு ஆகிவந்தது.
6. தொழிலாகு பெயர்
தொழில்பெயர் அதனோடு தொடர்புடைய வேறு
பெயருக்கு ஆகி வருவது தொழிலாகு பெயர் எனப்படும்.
சான்று :- வற்றல் தின்றான்
வற்றல் என்னும் தொழிற்பெயர் வற்றிய
உணவுப்பொருளுக்கு ஆகி வந்தது.
7. எண்ணலளவை ஆகுபெயர்
எண்ணின் பெயர் அதனோடு தொடர்புடைய
பொருளுக்கு ஆகி வருவது எண்ணலளவை ஆகுபெயர் எனப்படும்.
சான்று :- ஒன்று பெற்றால் ஒளிமயம்
ஒன்று என்னும் எண்ணுப்பெயர், அவ்வெண்ணுக்குத் தொடர்புடைய குழந்தைக்கு ஆகி
வந்தது.
8. எடுத்தலளவை ஆகுபெயர்
அளவை குறிக்காமல் அவ்வளவுடைய பொருளுக்கு ஆகி
வருவது
சான்று :-இரண்டு கிலோ கொடு
– நிறுத்தி அளக்கும் எடுத்தல் என்னும் அளவை
பெயர், அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது.
9. முகத்தலளவை ஆகுபெயர் –
முகத்தல் அளவை குறிக்காமல் அவ்வளவுடைய
பொருளுக்கு ஆகி வருவது
சான்று :- அரை லிட்டர் வாங்கு
முகந்து அளக்கும் முகத்தல் அளவை பெயர், அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது.
10. நீட்டலளவை ஆகுபெயர்
நீட்டல் அளவைப் பெயர் அதனோடு தொடர்புடைய
பொருளுக்கு ஆகி வருவது நீட்டலளவை ஆகுபெயர் எனப்படும்.
சான்று :- ஐந்து மீட்டர் வெட்டினான்
நீட்டி அளக்கும் நீட்டலளவைப் பெயர், அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது.
11. சொல்லாகு பெயர் ஆகுபெயர்
சான்று :- வள்ளுவர் சொல் வாழ்க்கைக்கு இனிது.
இத்தொடரில் வள்ளுவர் சொல் என்பது, சொல்லைக் குறிக்காது பொருளுக்குப் பெயராகி
வந்தால், இது சொல்லாகி பெயர்
12. தானியாகு பெயர் ஆகுபெயர்
ஓர் இடத்தில் உள்ள பொருளின் பெயர் (தானி) அது
சார்ந்திருக்கும் இடத்திற்குப் (தானித்திற்கு) பெயராகி வருவது தானியாகு பெயர்.
சான்று :- பாலை இறக்கு
பாலின் பெயர் பாலைக் குறிக்காமல் பாத்திரத்தை
குறிக்கிறது.
13. கருவியாகு பெயர்
கருவியின் பெயர் அதனோடு தொடர்புடைய வேறு
பெயருக்கு ஆகி வருவது கருவியாகு பெயர் எனப்படும்.
சான்று :- வானாெலி கேட்டு மகிழ்ந்தனர்
வானாெலி என்னும் கருவி, அதன் காரியமாகிய நிகழ்ச்சிகளுக்கு ஆகி வந்தது
14. காரியவாகு பெயர்
சான்று :- நான் சமையல் கற்றேன்.
இங்கு சமையல் என்னும் காரியத்தின் பெயர் அதன்
காரணத்திற்குப் (கருவிக்கு) பெயராகி வருவது காரியவாகு பெயர்
காரியவாகு பெயர் : காரியப்பொருள்
கருவிப்பொருள் கருவிப்பொருளுக்கு ஆகி வருவது (எ-டு) நன்னூல் கற்றேன்.
15. கருத்தாவாகு பெயர்
சான்று :- திருவள்ளுவரைப் படித்துப்பார்.
இத்தொடரில் திருவள்ளுவர் என்பது, அவரால் இயற்றப்பெற்ற நூலுக்கு ஆகி வந்தால், கருத்தாவாகு பெயராயிற்று
16. உவமையாகு பெயர்
ஒருவரைப் பாரத்து, நாரதார் வருகிறார் எனல், இத்தொடரில் நாரதர் என்னும் பெயர் அவரைக்
குறிக்காமல்,
அவரைப் பாேன்ற
(கலகமூட்டுபவர்) வேற்றொருவருக்கு ஆகி வந்து. அதனால் இஃது உவமையாகு பெயராயிற்று.
பொருள் முதல் ஆறோடு அளவை சொல்தானி
கருவி காரியம்கருத்தன்
ஆதியுள்
ஒன்றன் பெயரான்
அதற்கியை பிறிதைத்
தொன்முறை உரைப்பன
ஆகுபெயரே – நன்னூல் – 290
ஒரு பொருளின் இயற்பெயர், அதனை உணர்த்தாமல் அதனோடு தொடர்புடைய
மற்றொரு பொருளுக்குத் தொன்று தொட்டுப் பெயராகி வருவது ஆகுபெயர்.
எ.கா.
பொருளாகுபெயர் |
தாமரைமுகம் |
முதலாகுபெயர் |
மல்லிகை மாலை (மலர்) |
இடவாகு பெயர் |
ஊர் திரண்டது |
உலகம் விழித்துக் கொண்டது |
|
காலவாகு பெயர் |
கார் அறுத்தார் |
சினையாகு பெயர் |
வெற்றிலை நட்டான் |
பண்பாகு பெயர் |
வெள்ளை அடித்தான் |
தொழிலாகு பெயர் |
பொங்கல் உண்டான் |
தனியாகுபெயர் |
கழில் பணிந்தான் (தானி – இடத்தின் மேல் உள்ள
பொருள் |
கருவியாகு பெயர் |
குழல்கேட்டு மகிழ்ந்தான் |
குறள் கற்றான் |
|
உவமை ஆகுபெயர் |
காளை வந்தான |
காரியவாகு பெயர் |
நீரின்றிப் பைங்கூழ் வாடியது |
களவியல் படித்தான் |
|
கருத்தா ஆகு பெயர் |
திருவள்ளுவர் கற்றான் |
சொல்லாகு பெயர் |
நூலுக்கு உரை கண்டான் |
பாட்டுக்கு உரை எழுதுக |
|
எண்ணல் அளவை பெயர் |
பழம் ஒன்று கொடு |
எடுத்தல் அளவை பெயர் |
கிலோ என்ன விலை? |
முகத்தல் அளவை பெயர் |
இரண்டு லிட்டர் கொடு |
நீட்டல் அளவை ஆகுபெயர் |
உடுப்பது நான்கு முழம் இரண்டு மீட்டர்
வேண்டும் |
பொருளாகுபெயர் |
தாமரை போன்ற முகம் |
இடவாகு பெயர் |
ஊர் சிரித்தது |
காலவாகு பெயர் |
காரத்திகை பூத்தது |
பண்பாகு பெயர் |
நீலம் சூடினாள் |
தொழிலாகு பெயர் |
எழுத்து எழுதினேன் |
கருவியாகு பெயர் |
திருவாய்மொழி ஓதினான் |
காரியவாகு பெயர் |
இலக்கணம் வாங்கினேன் |
கருத்தா ஆகுபெயர் |
தொல்காப்பியம் படித்தேன் |
உவமையாகு பெயர் |
கம்பன் வாய் தேன்மொழியும் |
எண்ணல் ஆகுபெயர் |
தலைக்கு ஒரு பழம் கொடு |
தொழிலாகு பெயர் |
வற்றல் உண்டேன் |
நீட்டல் அளவை ஆகுபெயர் |
உடுப்பது நான்கு முழம் |
முகத்தல் அளவை ஆகுபெயர் |
உண்பது நாழி |
கருவியாகு பெயர் |
திருவாசகம் படித்தான் |
தானியாகு பெயர் |
கீரையை இறக்கி வை |
உவமையாகு பெயர் |
பாய்வதில் அவள் புலி |
இடவாகு பெயர் |
பண்பு பாராட்டும் உலகு |
பண்பாகுபெயர் |
வெள்ளை அடித்தார் |
எண்ணலளவையாகு பெயர் |
கால் வலித்த்து |
சொல்லாகு பெயர் |
தம்பி என் சொல்லைக் கேட்பான் |
தானியாகு பெயர் |
பாலை வண்டியில் ஏற்று |
கருவியாகு பெயர் |
குடி கெட்டது |
கருத்தாகு பெயர் |
இவருக்கு பரிமேலழகர் மனப்பாடம் |
உவமையாகு பெயர் |
பாவை வந்தான் |
பொருளாகு பெயர் |
வெள்ளத் தனைய மலர் நீர்மட்டம் |
சினையாகு பெயர் |
எம்பும் உரியர் பிறர்க்கு |
பண்பாகு பெயர் |
விருந்த ஓம்பி |
பொருளாகு பெயர் |
மருக்கொழுந்து நட்டனர் |
சினையாகு பெயர் |
கைகள் வேலை செய்தன |
வேற்றுமை உருபு
ஏற்கும் போது திரியும் பெயர்கள்
|
5. தன்மைப்பெயர்
பேசுவோரையும் அவன் சார்ந்தோரையும்
குறிக்கும் பெயர் தன்மைப்பெயர்
யான் என்பது என்றும்
யாம் என்பது என்று
நாம் என்பது நாம் என்றும் திரிந்து
வேற்றுமை உருபுளை ஏற்கும்
வேற்றுமைப் பெயர் |
2 ஐ |
3 ஆல், ஓடு |
4 கு |
5 இன் |
6 அது |
7 கண் |
யான் |
என்னை |
என்னோடு,
என்னால் |
எனக்கு |
என்னின் |
எனது |
என்னிடம் |
யாம் |
எம்மை |
எம்மொடு,
எம்மால் |
எமக்கு |
எம்மின் |
எமது |
எம்மிடம் |
6. முன்னிலைப்பெயர்
பேசுவோரின் சொல்லையும் முன்னின்று
கேட்போரையும் அவர் சார்ந்தோரையும் உணர்த்தி வரும் பெயர் முன்னிலைப் பெயர்.
நீ – முன்னிலை ஒருமைப்பெயர்
(நீங்கள்,
நீயிர், எல்லர், நீவிர்)
முன்னிலைப் பன்மைப் பெயர்கள் (நீ
என்பது நீ என்றும்)
நீர் என்பது நும் என்றும், நீங்கள் என்பது நுங்கள் என்றும்
திரிந்து வேற்றுமை உருபுகளை ஏற்கும்.
வேற்றுமைப் பெயர் |
2 |
3 |
4 |
5 |
6 |
7 |
நீ |
நின்னை |
நின்னோடு, நின்னால் |
நினைக்கு |
நின்னின் |
நினது |
நின்னிடம் |
நீ |
உன்னை |
உன்னோடு,
உன்னால |
உனக்கு |
உன்னின் |
உனது |
உன்னிடம் |
நீர் |
நும்மை |
நும்மாடு,
நும்மால் |
நுமக்கு |
நும்மின் |
நுமது |
நும்மிடம் |
7. படர்க்கைப்பெயர்
தன்மனை, முன்னிலை ஒழிந்த பெயர்கள் எல்லாம்
படக்கை பெயர்கள். இதுவும் ஒருமை பன்மை என 2 வகைப்படும்.
ராசன் இல்லம் – படர்க்கை
ஒருமைப்பெயர்
பசுக்கள், மனிதர்கள் – படர்க்கைப் பண்மைப்
பெயர்
தான் என்பது தன் என்றும் தாம் என்பது தம் என்றும் திரிந்து
வேற்றுமை உருமை ஏற்கும்
வேற்றுமைப் பெயர் |
2 |
3 |
4 |
5 |
6 |
7 |
தான் |
தன்னை |
தனக்கு |
தன்னின் |
தனது |
தன்னிடம் |
தன்னால் |
தாம் |
தம்மை |
தம்மொடு |
தமக்கு |
தம்மின் |
தமது |
தம்மிடம் |
8. பெயர்ச்சொல்
பொருள் உணர்த்தி வேற்றுமை உருபுகளை
ஏற்று நிற்பது பெயர்ச்சொல்
வினையாலணையும் பெயர் தவிர மற்ற பெயர்ச்சொற்கள்
காலம் காட்டாது
இது இடுகுறி அல்லது காரணப் பெயராக
இருக்கும்
9. இடுகுறிப்பெயர்
காரணமின்றி முன்னோர் வழங்கிய பெயர்
எ.கா.:- மண், மலை, மடு, கல்
10. காரணப்பெயர்
எ.கா.:-
- வயிறு
- சுவர் (சுவல், தோள்)
- மரம் (தரையில் மருவி இருப்பது)
- கும்மி (குழுமியடித்தல்)
- குறிஞ்சி (மலைப்பகுதி ஊர்)
11. காரண இடுகுறிப்பெயர்
ஒரு பெயர் காரணமுடையதாக இருப்பின்
அது அக்காரணமுடைய பலவற்றுக்கும் சொல்லாது ஒன்றனுக்கு உரித்தாய் வருவது.
எ.கா.:- காற்றாடி, பட்டம், நாற்காலி
12. பொருட்பெயர்
பொருளைக் குறிப்பது. இது உயிர்திணை, அஃறிணை என இரு திணையாக இருக்கும்
எ.கா.:-
உயர் திணை – அரசன், தொண்டன், கண்ணன், ராதா, குமரன்
அஃறிணை – பசு, குரங்கு, சேவல், நரி, மேசை
13. இடப்பெயர்
இடத்தைக் குறிப்பதாகும்
எ.கா.:- பள்ளி, சேலம், கல்லூரி, ஊர்
14. காலப்பெயர்
காலம் காட்டுவது
எ.கா.:- பகல், காலை, தை, புதன்கிழமை
15. சினைப்பெயர்
உறுப்புகளை காட்டுவது
எ.கா.:- கை, தண்டு, பழம், கால், வேர், பல்
16. குடிப்பெயர்
சாதியைக் குறிப்பது
எ.கா.:- உழவன், குறவன், ஆயன், மறவன், பரதவன், வாணிபன்
17. கிளைப்பெயர்
உறவுகளைக் குறிப்பது
எ.கா.:- அண்ணன், மாமி, நாத்தனார், தங்கை, மனைவி
18. அளவைபெயர்
நீட்டல், முகத்தல், எடுத்தல், எண்ணல் என நால்வகை அளவின் பெயர்
குறிப்பது அளவுப் பெயராகும்.
எ.கா.:- பத்து, ஆழாக்கு, வீசை, கழஞ்சு, படி, கிராம், மீட்டர்
19. சுட்டுப்பெயர்
சுட்டின் அடியாக ஒருவரைச் சுட்டுவதற்குப்
பயன்படும் பெயர்
எ.கா.:- இவன், அவன், அது, அங்கே, உவன், இது
20. குடிப்பெயர்
வினாவுவதன் அடியாய் பிறக்கும் பெயர்
எ.கா.:- எவன், யாது, யார், எது, எவை, யாவள், எவர், யாவர்
21. தொகுதிப்பெயர்
தொகுதியைக் குறிக்கும் பெயராகும்.
இது ஒரு பெயர் பொதுசொல் என்றும் பலவின் இணைந்த ஒரு சொல் எனவும் வழங்கப்படும்.
எ.கா.:-
சேனை – பல
வீரர் அடங்கியது
குழு – பல
மக்கள் அடங்கியது
மாலை – பல
மலர்கள் அடங்கியது
அடிசில் –
உண்பன தின்பனவற்றைக் குறிப்பது
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்-
ஒரு சொற்றொடர் எழுவாய் + செயப்படுபொருள் + பயனிலை என்ற அமைப்புடன
இருக்க வேண்டும்.
சொற்றொடர்களில் முதலில் எழுவாயும் கடையில் பயனிலையும் வரும்.
இடையில் செய்யப்படுபொருள் மற்றும் பிற சொற்கள் வரும்.
ஒழுங்கற்ற முறையில் தரப்பட்டிருக்கும் சொற்களை சரியான முறையில்
தொடராக எழுத வேண்டும்
எ.கா.
1. வட்டெழுத்து எனப்படும் தமிழ்
கோடுகளால் வளைந்த அமைந்த எழுத்து
சரியான விடை : வளைந்த கோடுகளால் அமைந்த எழுத்து தமிழ் வட்டெழுத்து எனப்படும்
2. உலகம் தமிழ்மொழி வாழட்டும்
உள்ளவரையிலும்.
சரியான விடை : உலகம் உள்ளவரையிலும் தமிழ்மொழி வாழட்டும்.
3. கழுத்து பிறக்கும் இடம்
உயிரெழுத்து ஆகும்.
சரியான விடை : உயிரெழுத்து பிறக்கும் இடம் கழுத்து ஆகும்.
4. உயர்வை உறுதியும் உழைப்பு
கொடுக்கும்.
சரியான விடை : உழைப்பும், உறுதியும் உயர்வைக் கொடுக்கும்.
5. கட கடவென விழும் கண்ணுக்கெதிரில்
சரியான விடை : கண்ணுக்கெதிரில் கட கடவென விழும்.
6. கடைபிடித்த உயர்ந்த நெறி
காந்தியடிகளின் வாய்மை ஆகும்
சரியான விடை : தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு
7. இலக்கிய மேடைகளிலும் இன்று
எழுதுவதோடு நான் இதழ்களில் பேசுகின்றேன்.
சரியான விடை : இன்று நான் இதழ்களில் எழுதுவதோடு இலக்கிய மேடைகளிலும் பேசுகின்றேன்.
8. வென்றதை பரணி பகைவரை ஆகும்
பாடும் இலக்கியம்.
சரியான விடை : பகைவரை வென்றதை பாடும் இலக்கியம்பரணி ஆகும்.
9. ஏகலை கலையை அம்புவிடும்
தமிழ் என்றது.
சரியான விடை : அம்புவிடும் கலையை தமிழ் ஏகலை என்றது.
10. நிலவு மனதை மகிழ்விக்கும்
மாலை
சரியான விடை : மாலை நிலவு மனதை மகிழ்விக்கும்.
தேர்வு நோக்கில் சில
சொற்றொடர்கள்
- உடுக்கை
இழந்தவன் கை போல
- நுணலும்
தன் வாயால் கெடும்
- ஒரு
பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
- பசுவைப்
பிரிந்த கன்றுபோல்
- இலை
மறைக் காய்போல
- யானை
பசிக்குச் சோளப் பொரியா?
- இருதலைக்
கொள்ளி எறும்புபோல
- சிறுதுளி
பெருவெள்ளம்
- சோழியன்
குடுமி சும்மா ஆடாது
- எறும்பு
ஊரக் கல்லும் தேயும்
- குரங்கு
கைபட்ட பூமாலை போல
- கடைமடை
திறந்தது போல
- பண்பட்ட
பைந்தமிழ் பாழ்பட்டுக் கிடந்தது
- நாடும்
மொழியும் நமதிருகண்கள்
- ஆலயம்
தொழுவது சாலவும் நன்று
- ஆலும்
வேலும் பல்லுக்குறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
- திங்கள்
அமிழ்து திகழ் ஆவின் பாலினிது
- பண்டி
மண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்
- ஒறுத்தாரை
என்றாக வையாரே, வைப்பர்
பொறத்தாரைப் பொன்போல் பொதிந்து
- ஏனா
அமுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கு
- தமிழர்கள்
வாழ்வின் இலக்கணம் அறிந்தவர்
- குன்றின்மேல்
எரியும் விளக்கு
- ஊழ்வினை
உறுத்து வந்து ஊட்டும்
- நுண்ணதின்
மகிழ்ந்தன்று ஒண்ணுதல் மகனே
- வல்லவர்
நல்லவராக இருக்க வேண்டும்
- தூய
நெஞ்சினர் துன்பம் செய்யார்
- உழைப்பின்
வரா உறுதிகள் உளவோ?
- நீதிக்குப்
போராடாதவன் நடை பிணம்
- மின்னுவது
எல்லாம் பொன் அல்ல
- குன்று
முட்டிய குருவி போல
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
நன்கு தமிழ் கற்றோருக்குக் கூட
மெய்யெழுத்துகளை சற்று வேகத்துடன் அகர வரிசைப்படுத்துதல் சற்று சிரமமான ஒன்று
தான். எனவே நாம் முன்னோர் கற்ற தமிழ் எழுத்துக்களின் வரிசை முறையைப் பின்வரும்
அட்டவணை மூலம் மீண்டும் நினைவுறுத்தித் கொள்ளுதல் மிகவும் நன்று.
தேர்வில் சில சொற்கள் தரப்படும். அவற்றை
அகரவரிசைப்படி சீர் செய்து சரியான விடையை கண்டுபிடிக்க வேண்டும்.
அறிவுரை: உரெழுத்துக்கள் = 12
முதலிலும்,
மெய் எழுத்துக்கள் = 18, உயிர்மெய் எழுத்துகள் = 216 அடுத்தும் என வரிசை படுத்த வேண்டும்
மொத்தம் = 247
1.
பாரதி, பாரம், பா, பாலை, பானை,
பாறை
விடை : பா, பாரதி, பாரம்,
பாலை, பாறை, பானை.
2.
பசு, பகடு, நெய்,
நேர்மை, நொச்சி, நோய்,
பகடு, பசு
விடை : நெய்,
நேர்மை, நொச்சி, நோய்,
பகடு, பசு
3.
நாகம், நிச்சயம், நறுமணம்,
நுரை, நூல், நீக்கம்
விடை : நறுமணம்,
நாகம், நிச்சயம், நீக்கல்,
நுரை, நூல்
4.
தருப்பை, தந்தை, தமிழ்,
தகழ், தந்தை, தமிழ்,
தடாகம்
விடை : தகடு,
தகழி, தாடகம், தந்தை,
தமிழ், கருப்பை
5.
சூரியன், சினேகம், சீதை,
காட்சி, சந்திரன், சுமை
விடை : சந்திரன்,
சாட்சி, சினேகம், சீதை,
சுமை, சூரியன்
6.
ஏகலைவர், ஐந்து, ஒருமை,
ஏகாதசி, ஐக்கியம்
விடை : ஏகலைவர்,
ஏகாதசி, ஐக்கியம், ஐந்து,
ஒருமை
7.
அந்தணர், ஆக்கம், உணவு,
ஆடவர், இசை, இலக்குமி,
உணவு
விடை : அந்தணர்,
ஆக்கம், ஆடவர், இசை,
இலக்குமி, உணவு
8.
உயிர், உபாயம், உதயம்,
உடுக்கை, உண்மை, உபகாரம்
விடை : உடுக்கை,
உண்மை, உதயம், உபகாரம்,
உபாயம், உயிர்
9.
குலம், கூகை, காந்தம்,
கேடகம், கோழி, வெளிறு
விடை : குலம்,
கூகை, காந்தம், கேடகம்,
கோழி, வெளிறு
10.
கணிதம், கூம்பு, கட்டழகு,
கரடி, கலவை, காடு
விடை : கட்டழகு,
கணிதம், கம்பு, கரடி,
கலவை, காடு
வேர்ச்சொல்லைக் கொடுத்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற் பெயரை உருவாக்கல் —
வினைச்சொல்
இராமன் வந்தான், கண்ணன் நடந்தான்
இத்தொடர்களில் இராமன், கண்ணன் என்பன
பெயர்ச்சொற்கள், அவைேய எழுவாய்களாகவும் உள்ளன. வந்தான், நடந்தான்
ஆகிய சொற்கள் வருவதும், நடப்பதும் ஆகிய செயல்களை
குறிப்பதால் இவை வினைச்சொற்கள், இவையோ
பயனிலைகளாகவும் (முடிக்கும் சொற்களாகவும்) உள்ளன. இவ்வாறு எழுவாய் செய்யும் செயல்
அல்லது தொழிலைக் குறிக்கும் சொற்கள் வினைச்சொற்கள்.
வினைமுற்று
மலர்விழி எழுதினாள், கண்ணன் பாடுகிறான், மாடு மேயும்.
இத்தொடர்களில் எழுதினாள், பாடுகிறான், மேயும் ஆகிய சொற்களைக் கவனியுங்கள்.
இச்சொற்களில் பொருள் முழுமை பெற்று விளங்குகிறது. இவ்வாறு பொருள் முற்றுப் பெற்ற
வினைச்சொற்களை முற்றுவினை அல்லது வினைமுற்று என்பர்.
வினைமுற்று ஐந்து பால், மூன்று காலம், மூன்று இடம் ஆகிய அனைத்திலும்
வரும்.
வினைமுற்று தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என
இருவகைப்படும்.
தெரிநிலை
வினைமுற்று
ஒரு செயல் நடைபெறுவதற்குச் செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறும் முதன்மையானவை
ஆகும். இவை ஆறும் வெளிப்படுமாறு அமைவது தெரிநிலை வினைமுற்று எனப்படும்.
(எ.கா.) மாணவி கட்டுரை எழுதினாள்.
- செய்பவர் – மாணவி
- காலம் – இறந்தகாலம்
- கருவி – தாளும் எழுதுகோலும்
- செய்பொருள் – கட்டுரை
- நிலம் – பள்ளி
- செயல் – எழுதுதல்
குறிப்பு வினைமுற்று
பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகியவற்றுள் ஒன்றனை
அடிப்படையாகக் கொண்டு காலத்தை வெளிப்படையாகக் காட்டாது செய்பவரை மட்டும்
வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்று, குறிப்பு வினைமுற்று எனப்படும்.
- பொருள் – அவன் பொன்னன் – பொன்னை உடையவன்
- சினை – அவன் கண்ணன் – கண்களை உடையவன்
- இடம் – அவன் தென்னாட்டார் – தொன்னாட்டில்
வாழ்பவன்
- பண்பு (குணம்) – அவன் கரியன் – கருமை
நிறத்தவன்
- காலம் – சித்திரையன் – சித்திரையின்
பிறந்தவன்
- தொழில் – அவன் எழுத்தன் – எழுதுபவன்
பொருள்முதல் ஆறினும் தோற்றிமுன்
ஆறனுள்
வினைமுதலல
மாத்திரை விளக்கல் வினைக்குறிப்பே
– நன்னூல் 321
அவன் என்னும் எழுவாய்க்குப்
பயனிலையாய் வந்த ‘பொன்னன்’ என்பதே குறிப்பு வினை ஆகும். பொன்னை உடையவனாய்
இருந்தான். இருக்கிறான்,
இருப்பான்
எனப் பொன்னன் என்பது முக்காலத்தையும் குறிப்பாக உணர்த்துகிறது.
எச்சம்
கயல்விழி படித்தாள், கோதை சென்றாள்
இத்தொடர்களில் படித்தாள், சென்றாள் என்பன வினைமுற்றுகள்.
இவ் வினைமுற்றுகள் சில இடங்களில்
‘ஆள்’ என்ற விகுதி குறைந்து படித்த, சென்று எனவும் வரும். இச்சொற்கள் பொருளில்
முற்றும் பெறாத முழுமையடையாத வினைச்சொற்கள். ஆதலால் எச்சம் எனப்படும். அல்லது
வினைமுற்றின் (ஆள்) விகுதி குறைந்து நிற்கும் சொல்லே எச்சம் எனப்படும்.
பெயரெச்சம்
படித்த என்னும் சொல் மாணவன், மாணவி, பள்ளி, புத்தகம், ஆண்டு போன்ற பெயர்ச்சொற்களுள்
ஒன்றைக் கொண்டு முடியும்.
(எ.கா.)
படித்த மாணவன், படித்த பள்ளி.
இவ்வாறு பெயரைக் கொண்டு முடியும்
எச்சம் பெயரெச்சம் ஆகும். பெயரெச்சம் மூன்று காலத்திலும் வரும்.
(எ.கா.)
- பாடிய பாடல் – இறந்தகாலப் பெயரெச்சம்
- பாடுகின்ற பாடல் – நிகழ்காலப் பெயரெச்சம்
- பாடும் பாடல் – எதிர்காலப் பெயரெச்சம்
பெயரெச்சங்கள் தெரிநிலை
பெயரெச்சங்கள்,
குறிப்புப்
பெயரெச்சங்கள் என இருவகைப்படும்.
தெரிநிலை
பெயரெச்சங்கள்
வந்த பையனைப் பாரத்து கண்ணன்
நின்றான்.
இத்தொடரில் வந்து என்பது பையன்
என்னும் பெயரைக் கொண்டு முடிவதால் பெயரச்சம் எனப்படும். செய்த செய்கின்ற செய்யும்
என்பன முறையே முக்காலத்திற்கும் உரிய பெயரச்ச வாய்ப்பாடுகள், இவை முக்காலத்தையும் செயலையும்
வெளிப்டையாக காட்டிச் செய்பவன் முதலான ஆறம் எஞ்சி நிற்கும். இவன் உடன்பாட்டிலும்
எதிர்மறையிலும் வரும்.
எ.கா.
- செய்பவன் – இளங்கோவன்
- கருவி – கலம்
- நிலம் – வீடு
- செயல் – உண்ணுதல்
- காலம் – இறந்த காலம்
- செய்பொருள் – சோறு
உண்கின்ற இளங்கோவன், உண்ணும் இளங்கோவன் என நிகழ்காலம், எதிர்காலம் காட்டும்
பெயரெச்சங்களையும் மேற்கண்டவாறு பொருத்திக் காணலாம்.
உடன்பாடு – எதிர் மறை
எ.கா.
- உண்ட இளங்கோவன் – உண்ணாத இளங்கோவன்
எழுதிய கடிதம் – இத்தொடரில் உள்ள
எழுதிய என்னும் சொல் எழுதுதல் என்னும் செயலையும் இறந்தகாலத்தையும் தெளிவாகக்
காட்டுகிறது. இவ்வாறு செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும்
பெயரெச்சம் தெரிநிலைப் பெயரெச்சம் எனப்படும்.
குறிப்புப்
பெயரெச்சங்கள்
காலத்தையோ, செயலையோ உணர்த்தாமல் பண்பினை
மட்டும் உணர்த்தி நின்று,
பெயர்ச்சொல்
கொண்டு முடியும் எச்சம் குறிப்பு பெயரெச்சம் எனப்படும்.
எ.கா.
- நல்ல பையன்
இத்தொடரில் நல்ல என்னுமு் சொல்
காலத்தையோ,
சொல்லையோ
உணர்த்தாமல்,
பண்பினை
மட்டும் உணர்த்தி நின்ற பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிந்துள்ளது. இது காலத்தைக்
(இன்று நல்ல பையன்,
நேற்று நல்ல
பையன், நாளை நல்ல பையன்) குறிப்பால் உணர்த்தும்.
வினையெச்சம்
முற்றுபெறாத வினைச்சொற்கள்
(எச்சங்கள்) வேறொரு வினை முற்றைக் கொண்டுமுடிந்தால் அது வினையெச்சம் எனப்படும்
(எ.கா.)
- படித்து வந்தான்
- பாடக்கேட்டான்
- ஓடிச்சென்றான்
- போய்ப் பார்த்தான்
இவ்வாறு வினையைக் கொண்டு முடியும்
எச்சம் வினையெச்சம் எனப்படும். இவ்வினையெச்சம் காலவகையால் மூன்று வகைப்படும்.
- இறந்தகால வினையெச்சம் – படித்து வந்தான், ஓடிச் சென்றான்
- நிகழ்கால வினையெச்சம் – படித்து
வருகின்றான்,
ஓடிச்
செல்கின்றான்
- எதிர்கால வினையெச்சம்- படித்து வருவான், ஓடிச் செல்வான்
இது தெரிநிலை வினையெச்சங்கள், குறிப்பு வினையெச்சங்கள் என இரு
வகைப்படும்.
தெரிநிலை
வினையெச்சங்கள்
எழுதி வந்தான் – இத்தொடரில் உள்ள
எழுதி என்னும் சொல் எழுதுதல் என்னும் செயலையும் இறந்த காலத்தையும் தெளிவாகக்
காட்டுகிறது. இவ்வாறு செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம்
தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.
குறிப்பு
வினையெச்சங்கள்
மெல்ல வந்தான் – இத்தொடரில் உள்ள
மெல்ல என்னும் சொல் காலத்தை வெளிப்படையாகக் காட்டவில்லை. மெதுவாக என்னும் பண்பை
மட்டும் உணர்த்துகிறது. இவ்வாறு காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும்
குறிப்பாக உணர்த்திவரும் வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் எனப்படும்.
முற்றெச்சம்
வள்ளி படித்தனள்.
இத்தொடரில் படித்தனள் என்னும் சொல்
படித்தாள் என்னும் வினைமுற்றுப் பொருளைத் தருகிறது.
வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள்.
இத்தொடரில் படித்தனள் என்னும் சொல் படித்து
என்னும் வினையெச்சப் பொருளைத் தருகிறது. இவ்வாறு ஒரு வினைமுற்று எச்சப்பொருள்
தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம் எனப்படும்.
தொழிற்பெயர்
வேர்ச்சொல்லோடு ‘தல்’ விகுதி
சேர்ந்தால் அது தொழிற்பெயர். அல், வை,
வு, கை ஆகிய விகுதிகள் சேர்ந்தாலும் அது
தொழிற்பெயராகும்.
- தல் – கூறு + அல் = கூறல்
- வை – பார் + வை = பார்வை
- வு – வாழ் + வு = வாழ்வு
- கை – படு + கை = படுக்கை
- தல் = கல் + தல் =கற்றல்
வேர்ச்சொல் |
வினைமுற்று |
வினையெச்சம் |
வினையாலணையும் பெயர் |
தொழிற்பெயர் |
கொடு |
கொடுத்தான் |
கொடுத்து |
கொடுத்தவன் |
கொடுத்தல் |
படு |
படுத்தார |
படுத்து |
படுத்தவரை |
படுத்தல் |
நடி |
நடித்தது |
நடித்து |
நடித்தவனை |
நடித்தல் |
பெறு |
பெற்றான் |
பெற்று |
பெற்றோரை |
பெறல் |
உண் |
உண்டான் |
உண்டு |
உண்டரை |
உண்டல் |
செல் |
சென்றார் |
சென்று |
சென்றவரை/சென்றவன் |
செல்லல்/செல்லுதல் |
தொடு |
தொட்டது |
தொட்டு |
தொட்டவனை |
தொடல் |
வீழ் |
வீழ்ந்தான் |
வீழந்து |
வீா்ந்தவணை |
வீழ்ச்சி |
காண் |
கண்டான் |
கண்டு |
கண்டாரை |
காணல் |
தேர் |
தேர்ந்தார் |
தேர்ந்து |
தேர்ந்தவரை |
தேர்தல் |
தின் |
தின்றது |
தின்று |
தின்றாரை |
தின்னுதல் |
குடி |
குடித்தான் |
குடித்து |
குடித்தாரை |
குடித்தல் |
அறு |
அறுத்தான் |
அறுத்து |
அறத்தவனை |
அறுத்தல் |
உடை |
உடைத்தார் |
உடைத்து |
உடைத்தவரை |
உடைப்பு |
பறி |
பறித்தான் |
பறித்து |
பறித்தானை |
பறித்தல் |
ஒடி |
ஒடித்தாள் |
ஒடித்து |
ஒடித்தவனை |
ஒடித்தல் |
ஓடு |
ஓடியது |
ஓடு |
ஓடுயதை |
ஓட்டம் |
வெட்டு |
வெட்டினான் |
வெட்டி |
வெட்டியவனை |
வெட்டல் |
பூசு |
பூசினார் |
பூசி |
பூசியவரை |
பூசுதல் |
அடி |
அடித்தார் |
அடித்து |
அடிப்பாரை |
அடித்தல் |
இயற்று |
இயற்றுனர் |
இயற்றி |
இயற்றியவணை |
இயற்றுதல் |
எழுது |
எழுதினார் |
எழுதி |
எழுதியவனை |
எழுதுதல் |
பற |
பறந்தது |
பறந்து |
பறந்ததை |
பறத்தல் |
கிழி |
கிழித்தது |
கிழித்து |
கிழித்ததை |
கிழித்தல் |
வரை |
வரைந்தான் |
வரைந்த |
வரைந்ததை |
வரைதல் |
எய் |
எய்தான் |
எய்து |
எய்தவனை |
எய்தல் |
குத்து |
குத்தினார் |
குத்தி |
குத்தியவனை |
குத்துதல் |
பாய்ச்சு |
பாய்ச்சினார் |
பாய்ச்சி |
பாய்ச்சியவனை |
பாய்ச்சுதல் |
பிள |
பிளந்தான் |
பிளந்து |
பிளந்தானை |
பிளத்தை |
கொய் |
கொய்தது |
கொய்து |
கொய்தவனை |
கொய்தல் |
அரி |
அரிந்தார் |
அரிந்து |
அரிந்தவரை |
அரிதல் |
இப்பகுதியில் 6th
– 12th வரையிலான அனைத்து வேர்ச்சொல்லைத் தேர்வு
செய்தல் பற்றித் தொகுத்து கொடுத்துள்ளோம்.
சொல்
பதம், மொழி, கிளவி என்பன சொல் என்பதன் வேறு
பெயர்கள்.
பதம்
பகாப்பதம்,
பகுபதம் என
இருவகைப்படும்.
பகாப்பதம்
பிரித்தால் பொருள் தராத சொல்
பகாப்பதம் எனப்படும்.
பெயர், வினை, இடை, உரி ஆகியவற்றின் அடிப்படையில்
பகாப்பதம் நான்கு வகைப்படும்.
- பெயர்ப்பகாப்பதம் – மரம், நாய், நீர்
- வினைப்பகாப்பதம் – உண், காண், எடு
- இடைப்பகாப்பதம் – தில், மன், பிற
- உரிப்பகாப்பதம் – சால, நனி, கடி, உறு
(இடைச்சொல்லும், உரிச்சொல்லும் பகாப்பதங்களாகவே
இருக்கும்)
பகாப்பதம்
பகுதி, விகுதி, இடைநிலை எனப் பிரிக்கப்படும் பதம்
பகுபதம் எனப்படும்.
(பகுபதம் – பிரிக்கவியலும் பதம்).
பகுபதம் பெயர்ப்பகுபதம்,
வினைப்பகுதி
என இருவகைப்படும்
பெயர்ப்பகுபதம் : பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் எனும் அடியாகத் தோன்றுவது
பெயர்ப்பகுபதம் எனப்படும்
1. பொன்னன் |
பொன் + ன் + அன் (ன் இரட்டித்தது) பொன்
என்னும் பொருட்பெயர் அடியாக பிறந்தது. |
2. ஊரன் |
ஊர் + அன்ஊர் என்னும் இடப்பெயர் அடியாகப்
பிறந்தது. |
3. ஆதிரையான் |
ஆதிரை + ய் +ஆன் (ய் – உடம்படுமெய்) ஆதிரை
என்னும் காலப்பெயர் அடியாகப் பிறந்தது. |
4. கண்ணன் |
கண் + ண் + ன் (ண் இரடித்தது) கண்
என்னும் சினைப்பெயர் அடியாகப் பிறந்தது. |
5. கரியன் |
கருமை + அன் கருமை
என்னும் பண்புப்பெயர் அடியாகப் பிறந்தது. |
6. நடிகன் |
நடி + க் + அன் (க் – பெயரிடைநிலை) நடித்தல்
என்னும் தொழில்பெயர் அடியாகப் பிறந்தது. |
வினைப்பகுபதம் : பகுதி, விகுதி, இடைநிலை முதலியனவாகப் பகுக்கப்படும்
வினைமுற்று வினைப்பகுபதம் எனப்படும்
செய்தான் = செய் + த் +ஆன்
செய்தான் என்னும் வினைமுற்றில் செய்
என்னும் பகுதி தொழிலையும்,
‘த்’ என்னும்
இடைநிலை இறந்த காலத்தையும் ஆன் என்னும் விகுதி ஆண்பாலையும் குறிக்கின்றன.
பகுபத உறுப்புகள்
பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் என்னும் ஆறு உறுப்புகளும்
பகுபத உறுப்புகள் ஆகும்.
பகுதி
சொல்லின் முதலில் நிற்கும்; பகாப் பதமாக அமையும்; வினைச்சொல்லில்
ஏவலாகவும், பெயர்ச் சொல்லில் அறுவகைப்
பெயராகவும் அமையும்.
- படித்தான் – படி என்பது பகுதி
- ஓடினான்- ஓடு என்பது பகுதி
- வந்தான் – வா என்பது பகுதி
விகுதி
சொல்லின் இறுதியில் நின்று திணை, பால், எண், இடம் காட்டுவதாகவும் அமையும்.
படித்தான் |
ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி |
அன், ஆன் |
பாடுகிறாள் |
ஆள் – பெண்பால் வினைமுற்று விகுதி |
அள், ஆள் |
பெற்றார் |
ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி |
அர், ஆர் |
நீந்தியது |
து – ஒன்றன்பால் வினைமுற்று விகுதி |
து, று |
ஓடின |
அ – பலவின்பால் வினைமுற்று விகுதி |
அ, ஆ |
சிரிக்கிறேன் |
ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி |
என், ஏன் |
உண்டோம் |
ஓம் – தன்மைப் பன்மை வினைமுற்று விகுதி |
அம், ஆம், எம், ஏம், ஓம் |
செய்தாய் |
ஆய் – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி |
ஐ, ஆய், இ |
பாரீர் |
ஈர் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி |
இர், ஈர் |
அழகிய,
பேசும் |
அ, உம் – பெயரெச்ச விகுதிகள் |
அ, உம் |
வந்து,
தேடி |
உ, இ – வினையெச்ச விகுதிகள் |
உ, இ |
வளர்க |
க – வியங்கோள் வினைமுற்று விகுதி |
க, இய, இயர் |
முளைத்தல் |
தல் – தொழிற்பெயர் விகுதி |
தல், அல், ஐ, கை, சி, பு |
இடைநிலை
பகுதிக்கும் விகுதிக்கும் இடையில்
நின்று காலம் காட்டும்.
வென்றார் |
ற்-இறந்தகால இடைநிலை |
த், ட், ற், இன் |
உயர்கிறான் |
கிறு – நிகழ்கால இடைநிலை |
கிறு, கின்று,
ஆநின்று |
புகுவான்,
செய்கேன் |
வ், க் – எதிர்கால இடைநிலைகள் |
ப், வ், க் |
பறிக்காதீர் |
ஆ – எதிர்மறை இடைநிலை |
இல், அல், ஆ |
மகிழ்ச்சி, அறிஞன் |
ச், ஞ் – பெயர் இடைநிலைகள் |
ஞ், ந், வ், ச், த் |
சந்தி
பகுதியையும் பிற உறுப்புகளையும்
இணைக்கும்;
பெரும்பாலும்
பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வரும்.
உறுத்தும் |
த் – சந்தி |
த், ப், க் |
பொருந்திய |
ய் – உடம்படுமெய் |
சந்தி ய்,
வ் |
சாரியை
பகுதி, விகுதி, இடைநிலைகளைச் சார்ந்து வரும்; பெரும்பாலும் இடைநிலைக்கும்
விகுதிக்கும் இடையில் வரும்.
நடந்தனன் |
அன் – சாரியை |
அன், ஆன், இன், அல், அற்று,
இற்று, அத்து, அம், தம், நம், நும், ஏ, அ, உ, ஐ, கு, ன் |
விகாரம்
பகுதி விகுதி இடைநிலை ஆகியவை
புணரும்போது அவற்றின் வடிவத்தில் ஏற்படும் மாற்றம், விகாரம் எனப்படும்.
தனி உறுப்பு அன்று; மேற்கண்ட பகுபத உறுப்புகளில்
ஏற்படும் மாற்றம்.
வேர்ச்சொல்
இப்பகுதி வினாக்களை எளிதில்
எதிர்கொள்ள வாக்கியங்களை பிரித்தெழுவதில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.
ஒரு வார்த்தையில் வேர்ச்சொல்லை
பிரிக்க முடியாது.
வேர்ச்சொல் என்பது பொதுவாக
ஏவலாகவோ இருக்கும்
சொல் |
வேர்ச்சொல் |
அகழந்தான் |
அகழ் |
அகன்று |
அகல் |
அடைந்தோம் |
அடை |
அணிந்தான் |
அணி |
அரிந்து |
அரி |
அரியது |
அருமை |
அறிந்தான் |
அறி |
அடித்தாள் |
அடி |
அலறள் |
அலறு |
அருளினர் |
அருள் |
அறுந்தது |
அறு |
அறுவடை |
அறு |
அவிந்ந்தது |
அவிழ் |
அறியாது |
அறி |
ஆண்டாள் |
ஆள் |
ஆடினாள் |
ஆடு |
ஆழந்தார் |
ஆழ் |
இனிது |
இனிமை |
இனிப்பு |
இனிமை |
இயம்பியது |
இயம்பு |
ஈந்தது |
ஈ |
ஈன்றாள் |
ஈன்று |
ஈட்டினான் |
ஈட்டு |
உண்பார் |
உண் |
உழுதான் |
உழு |
உணவு |
உண் |
உறங்கினான் |
உறங்கு |
ஊர்ந்து |
ஊர் |
உருக்கும் |
உருக்கு |
உழுவித்தான் |
உழுவி |
உள்ளம் |
உள் |
உள்ளீடு |
உள் |
எஞ்சிய |
எஞ்சு |
எடுக்கும் |
எடு |
எண்ணிய |
எண் |
எய்தான் |
எய் |
எடுத்தான் |
எடு |
எழுந்தான் |
எழு |
எழுதினான் |
எழுது |
ஏத்துதல் |
ஏத்து |
ஒட்டுதல் |
ஒட்டு |
ஒழிந்தான் |
ஒழி |
ஒட்டுவிப்பு |
ஒட்டுவி |
ஒட்டியது |
ஓட்டு |
ஓடாது |
ஓடு |
ஓடினான் |
ஓடு |
ஓதியவர் |
ஓதி |
கற்க |
கல் |
கடையல் |
கடை |
கற்றேன் |
கல் |
காட்சியில் |
காண் |
காட்டியது |
காட்டு |
கண்டு,
கண்டனன் |
காண் |
கற்றான் |
கல் |
கடித்தான் |
கடி |
காணாமை |
காண் |
காட்டுவான் |
காட்டு |
காத்தான் |
கா |
காத்தவன் |
கா |
காண்பார் |
காண் |
கூவல் |
கூ |
கேட்க,
கேட்டல் |
கேள் |
கொண்டான் |
கொள் |
கொணர்ந்தான் |
கொணர் |
கொன்றதை |
கொல் |
கொடாமை |
கொள் |
குரைத்தது |
குரை |
குடித்தான் |
குடி |
குளித்தான் |
குளி |
கூறினான் |
கூறு |
கொள்ளுதல் |
கொள் |
கொன்றான் |
கொல் |
கொய்தான் |
கொய் |
சாய்ந்தது |
சாய் |
சாற்றினான் |
சாற்று |
சிரிப்பு |
சிரி |
சரிந்தான் |
சிரி |
சிரித்தான் |
சிரி |
சிதறிய |
சிதறு |
சீரிய |
சீர்மை |
சீத்தாள் |
சீ |
சுட்டது |
சுடு |
சுருட்டினான் |
சுருட்டு |
சூடினான் |
சூடு |
சென்றாள் |
செல் |
செல்வான் |
செல் |
சேர்ந்தான் |
சேர் |
சொன்னான் |
சொல் |
செத்தவன் |
சா |
செய்கிறாள் |
செய் |
சென்றவன் |
செல் |
சோர்வு |
சோர் |
தந்தான் |
தா |
தட்டுவான் |
தட்டு |
தாண்டினான் |
தாண்டு |
தட்பம் |
தண்மை |
தாவியது |
தாவு |
தாழ்வு |
தாழ் |
திறந்தது |
திற |
திருத்தினான் |
திருத்து |
தீயந்தது |
தீய் |
தீர்ந்த |
தீர் |
துறவு |
துற |
தூங்கின |
தூங்கு |
துயின்றான் |
துயில் |
துறந்தான் |
துற |
தூங்கினார் |
தூங்கு |
தெரிந்தனர் |
தெரிந்து |
தெளிந்தான் |
தெளி |
தேடினான் |
தேடு |
தேற்றினான் |
தேற்று |
தேடல் |
தேடு |
தொழாது |
தொழு |
தோல்வி |
தோல் |
தைத்தான் |
தை |
தொடுவாள் |
தொடு |
தொங்கினான் |
தொங்கு |
தொடர்ந்தாள் |
தொடர் |
தோண்டினான் |
தோண்டு |
தோன்றினான் |
தோன்று |
தோற்றான் |
தோல்வி |
நக்கார் |
நகு |
நட்டான் |
நடு |
நடித்தான் |
நட |
நாடகம் |
நடி |
நாட்டும் |
நாட்டு |
நின்றார் |
நில் |
நின்றோன் |
நில் |
நீங்கி |
நீங்கு |
நீண்ட |
நீள் |
நுகர்ந்தது |
நுகர் |
நெட்டினான் |
நெட்டு |
நேர்ந்தது |
நேர் |
நோக்கம் |
நோக்கு |
நோக்கினான் |
நோக்கு |
நாடிய |
நாடு |
நீங்கி |
நீங்கு |
பட்டான் |
படு |
படித்தல் |
படு |
படிபித்தான் |
படிப்பி |
பருகுவான் |
பருகு |
பழுத்தது |
பழு |
பாய்ச்சல் |
பாய் |
பார்த்தல் |
பார் |
படுத்தான் |
படு |
பறித்தான் |
பறி |
பற்றினான் |
பற்று |
பாழ்த்த |
பாழ் |
பிணங்கினான் |
பிணங்கு |
பிரித்தார் |
பிரி |
புக்கம் |
புகு |
புகழ்ந்தான் |
புகழ் |
பூண்டான் |
பூண் |
பூசுதல் |
பூசு |
பூப்பு |
பூ |
பொறாமை |
பொறு |
பெற்றாள் |
பெறு |
பொருந்தினான் |
பொருத்து |
பொருந்தின |
பொருந்து |
ஓர் எழுத்தே பொருள் தரும் சொல்லாக அமைவது ஓரெழுத்து ஒரு மொழி என்பர்.
உயிர் எழுத்துகள் வரிசையில் ஆறு
எழுத்துகளும்,
மகர
வரிசையில் ஆறு எழுத்துகளும்,
த, ப, நகர வரிசைகளில் ஐந்து ஐந்து
எழுத்துகளும். க,
ச, வகர வரிசைகளில் நான்கு எழுத்துகளும், யகர வரிசையில் ஒரு எழுத்தும் ஆக
மொத்தம் நாற்பது நெடில் ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் என்றார் நன்னூலார். நொ, து என்னும் குறில்களையும் சேர்த்து
நாற்பத்து இரண்டு என்றார்.
உயிர் எழுத்து |
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ |
மகர வரிசை |
மா, மீ, மூ, மே, மே, மோ |
தகர வரிசை |
தா, தீ, தூ, தே, தை |
பகர வரிசை |
பா, பூ, பே, பை, போ |
நகர வரிசை |
நா, நீ, நே, நை, நோ |
ககர வரிசை |
கா, கூ, கை, கோ |
சகர வரிசை |
சா, சீ, சே, சோ |
வகர வரிசை |
வா, வீ, வை, வெள |
யகர வரிசை |
யா |
குறில் எழுத்து |
நொ, து |
தொல்காப்பியருக்கு நெடிதுநாள்
பின்னே தோன்றிய நன்னூலார் நொ, து என்னும் உயிர்மெய் எழுத்துகளும் பொருளுடைய ஓர் எழுத்து மொழி
என்பார்.
பூ-யா சொற்கள்
“பூ” என்பது ஓரெழுத்து ஒரு மொழி.
“கா” என்பதும் ஒரெழுத்து ஒரு மொழி. இவை இரண்டையும் இணைத்து “பூங்கா” எனக்
கலைச்சொல் ஆக்கி வைத்துள்ளனர்.
யா என்பது வினா. யாது, யாவர், யாவன், யாங்கு, யார், யாவை என்றெல்லாம் வினாவுவதற்கு முன்
வந்து நிற்கும் எழுத்து “யா” தானே!
ஆ சொல்
ஆ, மா, நீ, மீ, பீ, ஊ, சே, தே இவ்வாறான ஓரெழுத்து ஒரு
மொழிகளும் உள்ளன. பூங்கா இணைந்தது போல ஆ, மா என்பவை இணைந்து ஆமா என்னும் கலைச்சொல்
வடிவம் கொண்டமை பண்டைக் காலத்திலேயே உண்டு. காட்டுப் பசுவுக்கு ‘ஆமா’ என்று பெயர்.
மா சொல்
மா என்பதும் ஓரெழுத்து ஒரு
மொழிகளுள் ஒன்று. நாட்டிலுள்ள பெருமக்கள் பெரிதும் கூடும் அவையை மாநாடு
என்கிறோம். பல குறு நிலங்களை உள்ளடக்கிய பெருநிலத்தை மாநிலம் என்கிறோம். மா
என்பது விலங்கையும் குறிக்கும். அரிமா, பரிமா, நரிமா, வரிமா, கரிமா என்றெல்லாம் வந்து விலங்கினப் பெயராகி
நிற்கின்றது.
ஈ-காரச் சொல்
ஈ என்பது பொதுப்பெயர் ஓயாது ஒலி
செய்யும் ஒலிக்குறிப்பைக் காட்டி நிற்கிறது. மாட்டு ஈ, தேன் ஈ எனப் பகுத்து வழங்கும்
வழக்கம் உள்ளது. ஈ என்பது ஈகை என்னும் பொருளில் வழங்குதல் வெளிப்படை. ஈ என்று
பல்லைக் காட்டாதே என்று அறிவுரை கூறுவதும் உண்டு.
கால மாற்றத்தில் கரைந்தவை
இன்னொரு வகையாகவும் பார்க்கலாம்.
ஆன் என்பது ஆ ஆகியது;
மான் என்பது
மா ஆகியது;
கோன் என்பது
கோ ஆகியது;
தேன் என்பது
தே ஆகியது;
பேய் என்பது
பே ஆகியது இவையெல்லாம் கால வெள்ளத்தில் கரைந்து தேய்ந்தவை.
ஏகாரச் சொல்
எட்டத்தில் போகிற ஒருவனை ஏய் என
அழைத்தனர். ஏற் என்பது என்னோடு கூடு, பொருந்து, சேர் என்னும் பொருளை உடையது. ஏய் என்பது ஏ என
வழக்கில் ஊன்றிவிட்டது. அம்மை ஏவு என்பர். ஏவுதல் என்பது “அம்பு விடுதல்” ஏவும்
அம்பு” ஏ என்றாகியது. அம்பு விரைந்து செல்வது போலச் சென்று உரிய கடமை புரிபவன்
ஏவலன் எனப்பட்டான். அம்பு விடும் கலை ஏகலை என்றது தமிழ். அதில் வல்லவனை ஏகலைவன்
என்று பாராட்டியது.
முடிவுரை
தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிச்
சொற்களின் பெருக்கம் நம் மொழியின் பழமை, உயிரோட்டம், பெருவழக்கு என்பனவற்றை கையில்
கனியாகக் காட்டும்.
நன்னூல் என்னும் இலக்கண நூல் எழுதிய
பவணந்தி முனிவர் தமிழில் நாற்பத்திரண்டு ஓரெழுத்து ஒருமொழிகள் உள்ளன எனக்
குறிப்பிட்டுள்ளார். இவற்றில் நொ, து ஆகிய இரணடு சொற்களைத் தவிர ஏனைய நாற்பது சொற்களும் நெடில்
எழுத்துகளாக அமைந்தவை ஆகும்.
ஓரெழுத்து
ஒரு மொழி |
பொருள் |
ஆ |
பசு |
ஈ |
கொடு |
ஊ |
இறைச்சி |
ஏ |
அம்பு |
ஐ |
தலைவன் |
ஓ |
மதகுநீர் தாங்கும் பலகை |
கா |
சோலை |
கூ |
பூமி |
கை |
ஒழுக்கம் |
கோ |
அரசன் |
சா |
இறந்துபோ |
சீ |
இகழ்ச்சி |
சே |
உயர்வு |
சோ |
மதில் |
தா |
கொடு |
தீ |
நெருப்பு |
தூ |
தூய்மை |
தே |
கடவுள் |
தை |
தைத்தல |
நா |
நாவு |
நீ |
முன்னிலை ஒருமை |
நே |
அன்பு |
நை |
இழிவு |
நோ |
வறுமை |
பா |
பாடல் |
பூ |
மலர் |
பே |
மேகம் |
பை |
இளமை |
போ |
செல் |
மா |
மாமரம் |
மீ |
வான் |
மூ |
மூப்பு |
மே |
அன்பு |
மை |
அஞ்சனம் |
மோ |
முகத்தல் |
யா |
அகலம் |
வா |
அழைத்தல் |
வீ |
மலர் |
வை |
புல் |
வெள |
கவர் |
நொ |
நோய் |
து |
உண் |
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்
சொல் |
பொருள் |
தன்மை |
இயல்பு |
தண்மை |
குளிர்ச்சி |
வலி |
துன்பம் |
வளி |
காற்று |
வழி |
பாதை |
ஒலி |
சத்தம் |
ஒளி |
வெளிச்சம் |
ஒழி |
நீங்கு |
இலை |
ஒர் உறுப்பு |
இளை |
இளைத்தல்,
மெலிதல் |
இழை |
நூல் இழை |
மரை |
மான் |
மறை |
வேதம் |
புகழ் |
நற்பெயர் |
புகள் |
கூறு |
அல்லி |
மலர் |
அள்ளி |
வாரியெடுத்து |
மணம் |
நல்ல வாசனை |
மனம் |
உள்ளம் |
விலை |
பணம் |
விளை |
உற்பத்தி |
விழை |
விரும்பு |
கனை |
குரல் ஒலி |
கணை |
அம்பு |
அரன் |
சிவபெருமான் |
அரண் |
பாதுகாப்பு |
தலை |
சிரம் |
தளை |
கட்டு |
தழை |
இலை |
அளிப்பது |
கொடுப்பது |
அழிப்பது |
இல்லாமற் செய்வது |
கலை |
அறிவுப்பகுதி, கலைத்துவிடு |
களை |
நீக்கு |
கழை |
மூங்கில் |
பணி |
வேலை |
பனி |
குளிர் |
இருத்தல் |
அமர்ந்திருத்தல் |
இறுத்தல் |
தங்கியிருத்தல் |
மரித்தல் |
சாதல் |
மறித்தல் |
தழுவுதல் |
பரவை |
கடல் |
பறவை |
பறக்கும் பறவை |
கரத்தல் |
மறைத்தல் |
கறத்தல் |
வெளிப்படுத்துல் |
கரி |
யானை |
கறி |
காய்கறி |
திரை |
அலை |
திறை |
கப்பம் |
அன்னம் |
சோறு |
அண்ணம் |
வாய் உட்புறம் |
எரி |
தீ |
எறி |
கல் எறிதல் |
செரு |
போர் |
செறு |
வயல் |
கரை |
ஆற்றாங்கரை |
கறை |
அழுக்கு |
பொறி |
இயந்திரம் |
பொரி |
நெற்பொரி |
இரை |
உணவு |
இறை |
கடவுள் |
உறை |
தங்கு |
உரை |
கூறு |
உரி |
சுழற்று |
உறி |
தூக்கு |
லகர, ளகர ஒலி வேறுபாடு
பொருள் |
சொல் |
அலை |
நீரலை |
அளை |
வளை |
அழை |
கூப்பிடுதல் |
உலவு |
நடுமாடு |
உளவு |
வேவு |
உழவு |
பயிர்த்தொழில் |
வால் |
உறுப்பு |
வாள் |
கருவி |
வாழ் |
வாழ்தல் |
ஒலி |
ஓசை |
ஓளி |
வெளிச்சம் |
ஒழி |
நீக்கு |
கலம் |
கப்பல் |
களம் |
இடம் |
கொல் |
கொணருதல் |
கொள் |
பெற்றுக்கொள் |
தால் |
நாக்கு |
தாள் |
பாதம் |
தாழ் |
பணிந்துபோ |
வலி |
வலிமை |
வளி |
காற்று |
வழி |
பாதை, சாலை |
வெல்லம் |
இனிப்புக்கட்டி |
வெள்ளம் |
நீர் |
வேலை |
பணி |
வேளை |
பொழுது |
கழி |
தடி |
களி |
மகிழ்ச்சி |
வாளை |
மீன்வகை |
வாழை |
தாவரம் |
அலகு |
பறவை மூக்கு |
அளகு |
பெண்மயில் |
அழகு |
கவி |
அலம் |
கலப்பை |
அளம் |
உப்பளம் |
ஆல் |
ஆலமரம் |
ஆள் |
உள்ளுதல் |
ஆழ் |
முழுகு |
ஆலி |
மழைத்துளி |
ஆள் |
ஆளுதல் |
ஆழ் |
முழுகு |
உளி |
கருவி |
உழி |
இடம் |
உலை |
உலைக்களம் |
உளை |
பிடரிமயிர் |
உழை |
மான் |
உல்கு |
சுங்கம் |
உள்கு |
நினை |
எல் |
பகல் |
எள் |
திணை |
கலங்கு |
கலக்கமடைதல் |
கழங்கு |
மகளிர் விளையாட்டு பொருள் |
காலி |
பசுக்கூட்டம் |
காளி |
தெய்வம் |
காழி |
மலர் |
கிளவி |
சொல் |
கிழவி |
முதுமையடைதல் |
கூலி |
சம்பளம் |
கூளி |
பேய் |
கொலை |
கொல்லுதல் |
கொளை |
பாட்டு |
கோல் |
ஊன்றுகோல் |
கோள் |
புங்கூறுதல் |
கலி |
ஓசை |
களி |
பேய் |
கூலி |
சம்பளம் |
கூளி |
பேய் |
சூலை |
நோய் |
சூளை |
செங்கல்சூளை |
சூல் |
கர்ப்பம் |
சூள் |
சபதம் |
சூழ் |
சுற்று |
தவலை |
பாத்திரம் |
தவளை |
விலங்கு |
துலை |
தராசு |
துளை |
துவாரம் |
தோல் |
சருமம் |
தோள் |
புயம் |
நலி |
வருந்து |
நளி |
நடுக்கம் |
நல்லால் |
நல்லவர் |
நள்ளவர் |
பகைவர் |
பசலை |
மகளிர் நிற வேறுபாடு |
பசளை |
ஒரு கொடி |
பால் |
பசும்பால் |
பாள் |
தாழ்பாள் |
பாழ் |
பாழாதல் |
அலி |
ஆணும் பெண்ணும் இல்லாமை |
அளி |
கொடு,
கருளை |
அழி |
இல்லாமல் ஆக்குதல் |
கலை |
ஓவியம் |
களை |
பயிரில் முளைப்பது |
கழை |
மூங்கில் |
குலம் |
குடி |
குளம் |
நீர்நிலை |
காலை |
முப்பொழுது |
காளை |
எருது |
ரகர, றகர ஒலி வேறுபாடு
பொருள் |
சொல் |
அரம் |
கருவி |
அறம் |
தருமம் |
அரி |
திருமால் |
அறி |
தெரிந்துகொள், நறுக்கு |
அலரி |
அலிரிப்பூ |
அலறி |
அழுது |
அரை |
பாதி |
அறை |
வீட்டின் பகுதி |
ஆர |
நிரம்ப |
ஆற |
சூடுதணிய |
இரத்தல் |
யாசித்தல் |
இறத்தல் |
சாகுதல் |
ஆரல் |
ஒருவகை மீன் |
ஆறல் |
ஆறவைத்தல் |
இரை |
தீனி |
இறை |
இறைவன்,
அரசன் |
உரவு |
வலிமை |
உறவு |
தொடர்பு,
உறவினர் |
உரல் |
இடிக்கும் உரல் |
உறல் |
பொருந்துதல் |
உரு |
வடிவம் |
உறு |
மிகுதி |
உரை |
பேச்சு |
உறை |
மூடி |
எரி |
தீ |
எறி |
வீசு |
கரி |
யானை |
கறி |
காய்கறி,
அடுப்புக்கரி |
கரை |
ஏரிக்கரை |
கறை |
அழுக்கு |
குரைத்தல் |
நாள்குரைத்தல் |
குறைத்தல் |
பெருகுதல் |
குரங்கு |
வானரம் |
குறங்கு |
தொடை |
கூரை |
வீட்டுக்கூரை |
கூறை |
துணி |
சீரிய |
சிறந்த |
சீறிய |
சினந்த |
செரித்தல் |
சீரமைதல் |
செறித்தல் |
திணித்தல் |
தரி |
அணிந்து கொள் |
தறி |
வெட்டு |
திரை |
அலை |
திறை |
கப்பம் |
நிரை |
அலை |
நிறை |
நிறைந்துள்ள |
பரந்த |
பரவிய |
பறந்த |
பறவை |
பரவை |
கடல் |
பறவை |
பறக்கும பறவை |
பரி |
குதிர |
பறி |
பறித்து கொள்ளல் |
மரம் |
தரு |
மறம் |
வீரம் |
மரி |
இற |
மறி |
மான்குட்டி |
மரை |
மான், தாமரை |
மறை |
வேதம் |
மரு |
மணம் |
மறு |
தடு, குற்றமான |
வருத்தல் |
துன்புறுத்தல் |
வறுத்தல் |
காய்கறி வறுத்தல் |
விரல் |
கைவிரல் |
விறல் |
வெற்றி |
விரகு |
கைவிரல் |
விறகு |
கட்டை |
அருகு |
சமீபம் |
அறுகு |
அருகம்புல் |
இரும்பு |
ஓர் உலோகம் |
இறும்பு |
கருங்காடு |
உரி |
பட்டை |
உறி |
கட்டை |
ஊர |
நகர்ந்து செல்ல |
ஊற |
சுரக்க |
ஒருத்தல் |
யானை |
ஒறுத்தல் |
கோபித்தல் |
குரவர் |
பெரியோர் |
குறவர் |
ஒருசாதியர் |
குருகு |
நாரை |
குறுகு |
நெருங்கு |
செரு |
போர் |
செறு |
வயல் |
சேரல் |
இணைதல் |
சேறல் |
செல்லுதல் |
சொரிய |
சிந்த |
சொறிய |
சுரண்ட |
துரவு |
கிணறு |
துறவு |
துறத்தல் |
தெரித்தல் |
தெரிவித்தல் |
தெறித்தல் |
சிதறுதல் |
தேர |
ஆய்ந்து பார்க்க |
தேற |
தெளிய |
நரை |
வெண்மயிர் |
நறை |
தேன் |
நிரை |
வரிசை |
நிறை |
நிறைவு |
பிரை |
உறைமோர் |
பிறை |
இளஞ்சந்திரன் |
புரம் |
ஊர் |
புறம் |
பக்கம் |
புரவு |
காத்தல் |
புறவு |
புறா |
பொரி |
நெற்பொரி |
பொறி |
அடையாளம் |
பொரு |
போர்செய் |
பொறு |
பொறுத்துகொள் |
பொருப்பு |
மலை |
பொறுப்பு |
கடமை |
மரம் |
விருட்சம் |
மறம் |
பாவம் |
மரி |
இறந்துபோ |
மறி |
தடு |
மருகி |
மருமகள் |
மறுகி |
மயங்கி |
மரை |
தாமரை |
மறை |
வேதம் |
ணர, னகர ஒலி வேறுபாடு
பொருள் |
சொல் |
அணல் |
தாடி |
அனல் |
நெருப்பு |
ஆணி |
இரும்பு ஆணி |
ஆனி |
தமிழ் மாதம் |
ஊண் |
உணவு |
ஊன் |
இறைச்சி |
கணம் |
கூட்டம் |
கனம் |
பாரம் |
அண்ணம் |
மேல்வாய் |
அன்னம் |
பறவை |
ஆணை |
கட்டளை |
ஆனை |
யானை |
அரண் |
கோட்டை |
அரன் |
சிவன் |
அணை |
தழுவு |
அனை |
தாய் |
ஆண் |
ஆண்பால் |
ஆன் |
பசு |
இணை |
ஒப்பு |
இனை |
வருந்து |
உண்ணி |
சிறுஉயிரி |
உன்னி |
நினைத்து |
உண் |
சாப்பிடு |
உன் |
உன்னுடைய |
எண்ண |
நினைக்க |
என்ன |
சொல்ல |
எவண் |
எவ்விடம் |
எவன் |
யாவன் |
ஏணை |
தொட்டில் |
ஏனை |
மற்றை |
கண்ணன் |
கிருஷ்ணன் |
கன்னன் |
கர்ணன் |
கணி |
சோதிடர் |
கனி |
பழம் |
னர, ணகர ஒலி வேறுபாடு
பொருள் |
சொல் |
கன்னி |
குமரி |
கண்ணி |
அரும்பு,
பூமாலை |
பன்னி |
மனைவி |
பண்ணி |
செய்து |
பானம் |
குடிபானம் |
பாணம் |
அம்பு |
புனை |
அலங்கரி |
புணை |
தெப்பம் |
பனி |
குளிர் |
பணி |
தொழில் |
பேன் |
தலைப்பேன் |
பேண் |
காப்பாற்று |
மன் |
அரசன் |
மண் |
பூமி |
மனம் |
உள்ளம் |
மணம் |
நறுமணம்,
வாசனை |
மனை |
வீடு |
மணை |
உட்காடும் பலகை |
வன்மை |
வலிமை |
வண்மை |
கொடை |
கனை |
ஒலி |
கணை |
அம்பு |
கான் |
காடு |
காண் |
பார் |
குனி |
வளை |
குணி |
குணத்தை உடையது |
சோனை |
விடாமழை |
சோணை |
ஒருமலை |
தனி |
தனிமையான |
தணி |
குறை |
தன்மை |
இயல்பு |
தண்மை |
குளிர்ச்சி |
தின்மை |
தீமை |
திண்மை |
வலிமை |
தினை |
தானியம் |
திணை |
சாதி |
தின் |
தின்னு |
திண் |
வலிய |
துனி |
வெறுப்பு |
துணி |
அடை |
துனை |
விரைவு |
துணை |
உதவி |
நானம் |
கஸ்தூரி |
நாணம் |
வெட்கம் |
பன்ன |
சொல்ல |
பண்ண |
செய்ய |
பனிக்க |
நடுங்க |
பணிக்க |
கட்டளையிட |
பனை |
ஒருமரம் |
பணை |
பருத்த |
வன்மை |
ஆற்றல் |
வண்மை |
கொடை |
கனி |
பழம் |
கணி |
சோதிடன் |
ஊன் |
மாமிசம் |
ஊண் |
உணவு |
கன்னன் |
கர்னன் |
கண்ணன் |
கிருஷ்ணன் |
நகர, னகர ஒலி வேறுபாடு
பொருள் |
சொல் |
அந்தநாள் |
அந்த நாள் |
அன்னாள் |
அப்பெண் |
இந்நாள் |
இந்தநாள் |
இன்னாள் |
இத்தகையவள் |
எந்நாள் |
எந்தநாள் |
என்னால் |
என்னால் செய்ப்பட்டது |
எந்நாடு |
எந்த நாடு |
என்னாடு |
எனது நாடு |
எந்நிலை |
எந்த நிலை |
என்னிலை |
எனது நிலை |
முந்நாள் |
மூன்று நாள் |
முன்னாள் |
முற்காலம் |
முந்நூறு |
மூன்று நூறுகள் |
முன்னூறு |
முன்பு நூறு |
நந்நூல் |
நமது நூல் |
நன்னூல் |
நல்ல நூல் |
தேநீர் |
குடிப்பது |
தேனீர் |
தேன்கலந்த நீர் |
6ஆம் வகுப்பு கலைச்சொற்கள்
1.
வலஞ்சுழி
– Clock
wise
2.
இடஞ்சுழி
– Anti
Clock wise
3.
இணையம்
– Internet
4.
குரல்தேடல்
– Voice
Search
5.
தேடுபொறி
– Search
engine
6.
தொடுதிரை
– Touch
Screen
7.
கண்டம் – Continent
8.
தட்பவெப்பநிலை
– Climate
9.
வானிலை
– Weather
10.
வலசை – Migration
11.
புகலிடம் – Sanctuary
12.
புவிஈர்ப்புப்புலம் – Gravitational
Field
13.
செயற்கை
நுண்ணறிவு – Artificial
Intelligence
14.
ஆய்வு
– Research
15.
மீத்திறன்
கணினி – Super
Computer
16.
கோள்
– Planet
17.
ஔடதம்
– Medicine
18.
எந்திர
மனிதன்
– Robot
19.
செயற்கைக்
கோள் – Satellite
20.
நுண்ணறிவு
– Intelligence
21.
கல்வி
– Education
22.
அஞ்சல்
– Mail
23.
ஆரம்ப
பள்ளி- Primary
school
24.
குறுந்தகடு
– Compact
disk(CD)
25.
மேல்நிலைப்பள்ளி
– Higher
Secondary School
26.
மின்
– E-Library
27.
நூலகம்
– Library
28.
மின்
புத்தகம் – E-Book
29.
மின்படிக்கட்டு
– Escalator
30.
மின்
இதழ்கள் – E-Magazine
31.
மின்தூக்கி
– Lift
32.
நல்வரவு
– Welcome
33.
ஆயத்த
ஆடை – Readymade
Dress
34.
சிற்பங்கள்
– Sculptures
35.
ஒப்பனை
– Makeup
36.
சில்லுகள்
– Chips
37.
சிற்றுண்டி
– Tiffin
38.
பண்டம்
– Commodity
39.
கடற்பயணம்
– Voyage
40.
பயணப்படகுகள்
– Ferries
41.
தொழில்முனைவோர்
– Entrepreneur
42.
பாரம்பரியம்
– Heritage
43.
கலப்படம்
– Adulteration
44.
நுகர்வோர்
– Consumer
45.
வணிகர்
– Merchant
46.
நட்டுப்பற்று
– Patriotism
47.
இலக்கியம்
– Literature
48.
கலைக்கூடம்
– Art
Gallery
49.
மெய்யுணர்வு
– Knowledge
of Reality
50.
அறக்கட்டளை
– Trust
51.
தன்னார்வலர்
– Volunteer
52.
இளம்
செஞ்சிலுவைச் சங்கம் – Junior
Red Cross
53.
சாரண
சாரணியர் – Scouts
& Guides
54.
சமூகப்பணியாளர்
– Social
Worker
55.
மனிதநேயம்
– Humanity
56.
கருணை
– Mercy
57.
உறுப்பு
மாற்று அறுவைசிகிச்சை – Transplantation
58.
நாேபல்
பரிசு – Nobel
Prize
59.
சரக்குந்து
– Lorry
7ஆம்
வகுப்பு கலைச்சொற்கள்
1.
ஊடகம்
– Media
2.
பருவ
இதழ் – Magazine
3.
மொழியியல்
– Linguistics
4.
பொம்மலாட்டம்
– Puppetry
5.
ஒலியியல்
– Phonology
6.
எழுத்திலக்கணம்
– Orthography
7.
இதழியல்
– Journalism
8.
உரையாடல்
– Dialogue
9.
தீவு
– Island
10.
உவமை
– Parable
11.
இயற்கை
வளம் – Natural
Resource
12.
காடு
– Jungle
13.
வன
விலங்குகள் – Wild
Animals
14.
வனவியல்
– Forestry
15.
வனப்
பாதுகாவலர் – Forest
Conservator
16.
பல்லுயிர்
மண்டலம் – Bio
Diversity
17.
கதைப்பாடல்
– Ballad
18.
பேச்சாற்றல்
– Elocution
19.
துணிவு
– Courage
20.
ஒற்றுமை
– Unity
21.
தியாகம்
– Sacrifice
22.
முழக்கம்
– Slogan
23.
அரசியல்
மேதை – Political
Genius
24.
சமத்துவம்
– Equality
25.
கலங்கரை
விளக்கம் – Light
house
26.
துறைமுகம்
– Harbour
27.
பெருங்கடல்
– Ocean
28.
புயல்
– Storm
29.
கப்பல்
தொழில்நுட்பம் – Marine
technology
30.
மாலுமி
– Sailor
31.
கடல்வாழ்
உயிரினம் – Marine
creature
32.
நங்கூரம்
– Anchor
33.
நீர்மூழ்கிக்கப்பல்
– Submarine
34.
கப்பல்தளம்
– Shipyard
35.
கோடை
விடுமுறை – Summer
Vacation
36.
நீதி
– Moral
37.
குழந்தைத்தொழிலாளர்
– Child
Labour
38.
சீருடை
– Uniform
39.
பட்டம்
– Degree
40.
வழிகாட்டுதல்
– Guidance
41.
கல்வியறிவு
– Literacy
42.
ஒழுக்கம்
– Discipline
43.
படைப்பாளர்
– Creator
44.
அழகியல்
– Aesthetics
45.
சிற்பம்
– Sculpture
46.
தூரிகை
– Brush
47.
கலைஞர்
– Artist
48.
கருத்துப்படம்
– Cartoon
49.
கல்வெட்டு
– Inscriptions
50.
குகை
ஓவியங்கள் – Cave
paintings
51.
கையெழுத்துப்படி
– Manuscripts
52.
நவீன
ஓவியம் – Modern
Art
53.
நாகரிகம்
– Civilization
54.
வேளாண்மை
– Agriculture
55.
நாட்டுப்புறவியல்
– Folklore
56.
கவிஞர்
– Poet
57.
அறுவடை
– Harvest
58.
அயல்நாட்டினர்
– Foreigner
59.
நெற்பயிர்
– Paddy
60.
நீர்ப்பாசனம்
– Irrigation
61.
பயிரிடுதல்
– Cultivation
62.
உழவியல்
– Agronomy
63.
குறிக்கோள்
– Objective
64.
வறுமை
– Poverty
65.
செல்வம்
– Wealth
66.
கடமை
– Responsiblity
67.
ஒப்புரவுநெறி
– Reciprocity
68.
லட்சியம்
– Ambition
69.
அயலவர்
– Neighbour
70.
நற்பண்பு
– Courtesy
71.
பொதுவுடைமை
– Communism
72.
சமயம்
– Religion
73.
தத்துவம்
– Philosophy
74.
எளிமை
– Simplicity
75.
நேர்மை
– Integrity
76.
ஈகை
– Charity
77.
வாய்மை
– Sincerity
78.
கண்ணியம்
– Dignity
79.
உபதேசம்
– Preaching
80.
கொள்கை
– Doctrine
81.
வானியல்
– Astronomy
8ஆம் வகுப்பு
கலைச்சொற்கள்
1.
ஒலிப்பிறப்பியல்
– Articulatory
phonetics
2.
உயிரொலி
– Vowel
3.
மெய்யொலி
– Consonant
4.
கல்வெட்டு
– Epigraph
5.
மூக்கொலி
– Nasal
consonant sound
6.
அகராதியியல்
– Lexicography
7.
சித்திர
எழுத்து – Pictograph
8.
ஒலியன்
– Phoneme
9.
பழங்குடியினர்
– Tribes
10.
மலைமுகடு
– Ridge
11.
சமவெளி
– Plain
12.
வெட்டுக்கிளி
– Locust
13.
பள்ளத்தாக்கு
– Valley
14.
சிறுத்தை
– Leopard
15.
புதர்
– Thicket
16.
மொட்டு
– Bud
17.
நோய்
– Disease
18.
பக்கவிளைவு
– Side
Effect
19.
நுண்ணுயிர்
முறி – Antibiotic
20.
மூலிகை
– Herbs
21.
சிறுதானியங்கள்
– Millets
22.
மரபணு
– Gene
23.
பட்டயக்
கணக்கர் – Auditor
24.
ஒவ்வாமை
– Allergy
25.
நிறுத்தக்குறி
– Punctuation
26.
திறமை
– Talent
27.
மொழிபெயர்ப்பு
– Translation
28.
அணிகலன்
– Ornament
29.
விழிப்புணர்வு
– Awareness
30.
சீர்திருத்தம்
– Reform
31.
கைவினைப்
பொருள்கள் – Crafts
32.
பின்னுதல்
– Knitting
33.
புல்லாங்குழல்
– Flute
34.
கொம்பு
– Horn
35.
முரசு
– Drum
36.
கைவினைஞர்
– Artisan
37.
கூடைமுடைதல்
– Basketry
38.
சடங்கு
– Rite
39.
நூல்
– Thread
40.
பால்பண்ணை
– Dairy
farm
41.
தறி
– Loom
42.
சாயம்
ஏற்றுதல் – Dyeing
43.
தையல்
– Stitch
44.
தோல்
பதனிடுதல் – Tanning
45.
ஆலை
– Factory
46.
ஆயத்த
ஆடை – Readymade
Dress
47.
குதிரையேற்றம்
– Equestrian
48.
முதலமைச்சர்
– Chief
Minister
49.
ஆதரவு
– Support
50.
தலைமைப்பண்பு
– Leadership
51.
கதாநாயகன்
– The
Hero
52.
வெற்றி
– Victory
53.
வரி
– Tax
54.
சட்ட
மன்ற உறுப்பினர் – Member
of Legislative Assembly
55.
தொண்டு
– Charity
56.
பகுத்தறிவு
– Rational
57.
நேர்மை
– Integrity
58.
தத்துவம்
– Philosophy
59.
ஞானி
– Saint
60.
சீர்திருத்தம்
– Reform
61.
குறிக்கோள்
– Objective
62.
முனைவர்
பட்டம் – Doctorate
63.
பல்கலைக்கழகம்
– University
64.
அரசியலமைப்பு
– Constitution
65.
நம்பிக்கை
– Confidence
66.
இரட்டை
வாக்குரிமை – Double
voting
67.
ஒப்பந்தம்
– Agreement
68.
வட்ட
மேசை மாநாடு – Round
Table Conference
9ஆம் வகுப்பு
கலைச்சொற்கள்
1.
உருபன்
– Morpheme
2.
ஒலியன்
– Phoneme
3.
ஒப்பிலக்கணம்
– Comparative
Grammar
4.
பேரகராதி
– Lexicon
5.
குமிழிக்
கல் – Conical
Stone
6.
நீர்
மேலாண்மை – Water
Management
7.
பாசனத்
தொழில்நுட்பம் – Irrigation
Technology
8.
வெப்ப
மண்டலம் – Tropical
Zone
9.
ஏவு
ஊர்தி – Launch
Vehicle
10.
பதிவிறக்கம்
– Download
11.
ஏவுகணை
– Missile
12.
மின்னணுக்
கருவிகள் – Electronic
devices
13.
கடல்மைல்
– Nautical
Mile
14.
காணொலிக்
கூட்டம் – Video
Conference
15.
பயணியர்
பெயர்ப் பதிவு – Passenger
Name Record (PNR)
16.
சமூக
சீர்திருத்தவாதி – Social
Reformer
17.
களர்நிலம்
– Saline
Soil
18.
தன்னார்வலர்
– Volunteer
19.
சொற்றொடர்
– Sentence
20.
குடைவரைக்
கோவில் – Cave
temple
21.
கருவூலம்
– Treasury
22.
மதிப்புறு
முனைவர் – Honorary
Doctorate
23.
மெல்லிசை
– Melody
24.
ஆவணக்
குறும்படம் – Document
short film
25.
புணர்ச்சி
– Combination
26.
செவ்வியல்
இலக்கியம் – Classical
Literature
27.
கரும்புச்
சாறு – Sugarcane
Juice
28.
பண்டமாற்று
முறை – Commodity
Exchange
29.
காய்கறி
வடிசாறு – Vegetable
Soup
30.
இந்திய
தேசிய இராணுவம் – Indian
National Army
31.
எழுத்துரு
– Font
32.
மெய்யியல்
(தத்துவம்) – Philosophy
33.
அசை
– Syllable
34.
இயைபுத்
தொடை – Rhyme
35.
எழுத்துச்
சீர்திருத்தம் – Reforming
the letters
36.
மனிதம்
– Humane
37.
கட்டிலாக்
கவிதை 9
Free verse
38.
ஆளுமை
– Personality
39.
உருவக
அணி – Metaphor
40.
பண்பாட்டுக்
கழகம் – Cultural
Academy
41.
உவமையணி
– Simile
10ஆம் வகுப்பு
கலைச்சொற்கள்
1.
Vowel
– உயிரெழுத்து
2.
Consonant
– மெய்யெழுத்து
3.
Homograph
– ஒப்பெழுத்து
4.
Monolingual
– ஒரு மொழி
5.
Conversation
– உரையாடல்
6.
Discussion
– கலந்துரையாடல்
7.
Storm
– புயல் Land
8.
Breeze
– நிலக்காற்று
9.
Tornado
– சூறாவளி
10.
Sea
Breeze – கடற்காற்று
11.
Tempest
– பெருங்காற்று
12.
Whirlwind
– சுழல்காற்று
13.
classical
literature – செவ்விலக்கியம்
14.
Epic
literature – காப்பிய
இலக்கியம்
15.
Devotional
literature – பக்தி
இலக்கியம்
16.
Ancient
literature – பண்டைய
இலக்கியம்
17.
Regional
literature வட்டார
இலக்கியம்
18.
Folk
literature – நாட்டுப்புற
இலக்கியம்
19.
Modern
literature நவீன
இலக்கியம்
20.
Nanotechnology
– மீநுண்தொழில்நுட்பம்
21.
Cosmic
rays – விண்வெளிக்
கதிர்கள்
22.
Space
Technology – விண்வெளித்
தொழில்நுட்பம்
23.
Ultraviolet
rays – புற ஊதாக்
கதிர்கள்
24.
Biotechnology
– உயிரித்
தொழில்நுட்பம்
25.
Infrared
rays – அகச்சிவப்புக்
கதிர்கள்
26.
Emblem
– சின்னம்
27.
Intellectual
– அறிவாளர்
28.
Thesis
– ஆய்வேடு
29.
Symbolism
– குறியீட்டியல்
30.
Aesthetics
– அழகியல், முருகியல்
31.
Terminology
– கலைச்சொல்
32.
Artifacts
-கலைப்
படைப்புகள்
33.
Myth
– தொன்மம்
34.
Consulate
– துணைத்தூதரகம்
35.
Patent
– காப்புரிமை
36.
Document
– ஆவணம்
37.
Guild
– வணிகக் குழு
38.
Irrigation
– பாசனம்
39.
Territory
– நிலப்பகுதி
40.
Belief
– நம்பிக்கை
41.
Philosopher
– மெய்யியலாளர்
42.
Renaissance
– மறுமலர்ச்சி
43.
Revivalism
– மீட்டுருவாக்கம்
44.
Humanism
– மனிதநேயம்
45.
Cultural
Boundaries – பண்பாட்டு
எல்லை
46.
Cabinet
– அமைச்சரவை
47.
Cultural
values – பண்பாட்டு
விழுமியங்கள்
11ஆம்
வகுப்பு கலைச்சொற்கள்
1.
அழகியல்
– Aesthetics
2.
இதழாளர்
– Journalist
3.
கலை
விமர்சகர் – Art
Critic
4.
புத்தக
மதிப்புரை – Book
Review
5.
புலம்பெயர்தல்
– Migration
6.
மெய்யியலாளர்
– Philosopher
7.
இயற்கை
வேளாண்மை – Organic
Farming
8.
ஒட்டு
விதை – Shell
Seeds
9.
மதிப்புக்கூட்டுப்
பொருள் – Value
Added Product
10.
அறுவடை
– Harvesting
11.
வேதி
உரங்கள் – Chemical
Fertilizers
12.
தூக்கணாங்குருவி
– Weaver
Bird
13.
வேர்
முடிச்சுகள் – Root
Nodes
14.
தொழு
உரம் – Farmyard
Manure
15.
இனக்குழு
– Ethnic
Group
16.
பின்னொட்டு
– Suffix
17.
முன்னொட்டு
– Prefix
18.
வேர்ச்சொல்
அகராதி – Rootword
Dictionary
19.
புவிச்சூழல்
– Earth
Environment
20.
பண்பாட்டு
கூறுகள் – Cultural
Elements
21.
கல்விக்குழு
– Education
Committee
22.
மூதாதையர்
– Ancestor
23.
உள்கட்டமைப்பு
– Infrastructure
24.
மதிப்புக்
கல்வி – Value
Education
25.
செம்மொழி
– Classical
26.
Language
மனஆற்றல் – Mental Ability
27.
ஆவணம்
– Document
28.
உப்பங்கழி
– Backwater
29.
ஒப்பந்தம்
– Agreement
30.
படையெடுப்பு
– Invasion
31.
பண்பாடு
– Culture
32.
மாலுமி
– Sailor
33.
நுண்கலை
– Fine
Arts
34.
தானியக்
கிடங்கு – Grain
Warehouse
35.
ஆவணப்படம்
– Documentary
36.
பேரழிவு
– Disaster
37.
கல்வெட்டு
– Inscription
/ Epigraph
38.
தொன்மம்
– Myth
39.
உத்திகள்
– Strategies
40.
பட்டிமன்றம்
– Debate
41.
சமத்துவம்
– Equality
42.
பன்முக
ஆளுமை – Multiple
Personality
43.
தொழிற்சங்கம்
– Trade
Union
44.
புனைபெயர்
– Pseudonym
45.
நாங்கூழ்ப்புழு
– Earthworm
46.
உலகமயமாக்கல்
– Globalisation
47.
முனைவர்
பட்டம் – Doctor
of Philosophy (Ph.D)
48.
கடவுச்சீட்டு
– Passport
49.
விழிப்புணர்வு
– Awareness
50.
பொருள்
முதல் வாதம் – Materialism
12ஆம்
வகுப்பு கலைச்சொற்கள்
1.
Subscription
– உறுப்பினர்
கட்டணம்
2.
Archive
– காப்பகம்
3.
Fiction
– புனைவு
4.
Manuscript
– கையெழுத்துப்
பிரதி
5.
Biography
– வாழ்க்கை
வரலாறு
6.
Bibliography
– நூல் நிரல்
7.
Platform
– நடைமேடை
8.
Ticket
Inspector – பயணச்சீட்டு
ஆய்வர்
9.
Train
Track – இருப்புப்பாதை
10.
Level
Crossing – இருப்புப்பாதையைக்
கடக்குமிடம்
11.
Railway
Signal – தொடர்வண்டி
வழிக்குறி
12.
Metro
Train – மாநகரத்
தொடர்வண்டி
13.
Lobby
– ஓய்வறை
14.
Checkout
– வெளியேறுதல்
15.
Tips
– சிற்றீகை
16.
Mini
meals – சிற்றுணவு
17.
Arrival
– வருகை
18.
Visa
– நுழைவு இசைவு
19.
Passport
– கடவுச்சீட்டு
20.
Conveyor
Belt – ஊர்திப்பட்டை
21.
Departure
– புறப்பாடு
22.
Take
Off – வானூர்தி
கிளம்புதல்
23.
Domestic
Flight – உள்நாட்டு
வானூர்தி
24.
Affidavit
– ஆணையுறுதி
ஆவணம்
25.
Allegation
– சாட்டுரை
26.
Jurisdiction
– அதிகார எல்லை
27.
Conviction
– தண்டனை
28.
Plaintiff
– வாதி
29.
Artist
– கவின்கலைஞர்
30.
Cinematography
– ஒளிப்பதிவு
31.
Animation
– இயங்குபடம்
32.
Sound
Effect – ஒலிவிளைவு
33.
Newsreel
– செய்திப்படம்
34.
Multiplex
Complex – ஒருங்கிணைந்த
திரையரங்க வளாகம்
35.
Debit
Card – பற்று அட்டை
36.
Demand
Draft – கேட்பு
வரைவோலை
37.
Withdrawal
Slip – திரும்பப்
பெறல் படிவம்
38.
Mobile
Banking – அலைபேசி வழி
வங்கி முறை
39.
Internet
Banking – இணையவங்கி
முறை
40.
Teller
– விரைவுக்
காசாளர்
41.
Stamp
pad – மை பொதி
42.
Eraser
– அழிப்பான்
43.
Folder
– மடிப்புத்தாள்
44.
Rubber
Stamp – இழுவை
முத்திரை
45.
File
– கோப்பு
46.
Stapler
– கம்பி
தைப்புக் கருவி
பிறமொழிச் சொற்கள்நேரிய மரபுப் பிழைகள் வழூஉச்
சொற்களை நீக்குதல்
மரபுச்சொற்கள் பெயர்மரபு, வினை மரபு என வகைப்படும்
பெயர் மரபுச் சொற்கள்
|
பறவை, விலங்குகளின் இளமைப்பெயர்கள்
எலிக்குஞ்சு |
குருவிக்குஞ்சு |
கோழிக்குஞ்சு |
கீரிப்பிள்ளை |
பசுங்கன்று |
பன்றிக்குட்டி |
மான்கன்று |
யானைக்கன்று |
ஆட்டுக்குட்டி |
கழுதைக்குட்டி |
குதிரைக்குட்டி |
நாய்க்குட்டி |
புலிப்பரள் |
பூனைக்குட்டி |
சிங்கக்குருளை |
எருமைக்கன்று |
அணிற்பிள்ளை |
கிளிக்குஞ்சு |
பறவை, விலங்குகளின் இருப்பிடம்
கோழிப்பண்ணை |
மாட்டுத்தொழுவம் |
யானைக்கூட்டம் |
ஆட்டுப்பட்டி |
குதிரைக்கொட்டில் |
கோழிக்கூண்டு |
குருவிக்கூடு |
கரையான் புற்று |
எலி வளை |
நண்டு வளை |
வாத்துப் பண்ணை |
சிலந்தி வலை |
தாவரங்களின் உறுப்புப் பெயர்கள்
வேப்பந்தழை |
வாழைத்தண்டு |
ஆவரங்குழை |
கீரைத்தண்டு |
நெல்தாள் |
கம்பத்தட்டு (தட்டை) |
தாழைமடல் |
சோளத்தட்டு (தட்டை) |
முருங்கைக்கீரை |
ஈச்ச ஓலை |
தென்னங்கீற்று |
தினைத்தாள் |
வாழையிலை |
மா இலை |
பனை ஒலை |
தென்னை ஓலை |
கமுகுக் கூந்தல் |
கேழ்வரகுத்தட்டை |
மூங்கில் இலை |
பலா இலை |
காய்களின் இளமைப்பெயர்கள்
அவரைப்பிஞ்சு |
வாழைக்காய் |
கத்திரிப்பிஞ்சு |
வெள்ளரிப்பிஞ்சு |
தென்னங்குரும்பை |
பலாப்பிஞ்சு |
மாவடு |
முருங்கைப்பிஞ்சு |
வாழைக்குருத்து |
மாந்தளிர் |
செடி, கொடி மரங்களின் தொகுப்பிடம்
ஆலங்காடு |
கம்பங்கொல்லை |
பனந்தோப்பு |
சோளக்கொல்லை |
மாந்தோப்பு |
வாழைத்தோட்டம் |
தென்னந்தோப்பு |
பூஞ்சோலை |
வெற்றிலைத்தோட்டம் |
இலுப்பைத்தோட்டம் |
பலாத்தோப்பு |
சவுக்குத்தோப்பு |
முந்திரித்தோப்பு |
புளியந்தோப்பு |
தேயிலைத்தோட்டம் |
பூந்தோட்டம் |
பனங்காடு |
வேலங்காடு |
கொய்யாத்தோப்பு |
நெல்வயல் |
பூந்தோட்டம் |
மாந்தோப்பு |
கருப்பங்கொல்லை |
பொருட்களின் தொகுப்பு
ஆட்டுமந்தை |
ஆநிரை |
உடுக்கணம் (உடு-நட்சத்திரம்) |
வேலங்காடு |
கற்குவியல் |
மக்கள் கூட்டம் |
சாவிக்கொத்து |
மாட்டுமந்தை |
கள்ளிக்கற்றை |
யானைக்கூட்டம் |
திராட்சைக்குலை |
விறகுக்கட்டு |
வைக்கோற்போர் |
வீரர்படை |
எறும்புச்சாரை |
பறவை, விலங்குகளின் இளமைப்பெயர்கள்
எலிக்குஞ்சு |
குருவிக்குஞ்சு |
கோழிக்குஞ்சு |
கீரிப்பிள்ளை |
பசுங்கன்று |
பன்றிக்குட்டி |
மான்கன்று |
யானைக்கன்று |
ஆட்டுக்குட்டி |
கழுதைக்குட்டி |
குதிரைக்குட்டி |
நாய்க்குட்டி |
புலிப்பரள் |
பூனைக்குட்டி |
சிங்கக்குருளை |
எருமைக்கன்று |
அணிற்பிள்ளை |
கிளிக்குஞ்சு |
வினை மரபுச் சொற்கள்
|
ஒலிக்கு உரிய வினைகள்
விலங்குகளின் ஒலி மரபு
கழுதை கத்தும் |
புலி உறும் |
குதிரை கனைக்கும் |
யானை பிளிறும் |
சிங்கம் முழங்கும் |
எருது எக்காளமிடும் |
சிங்கம் கர்சிக்கும் |
நரி ஊளையிடும் |
எலி கீச்சீடும் |
நாய் குரைக்கும் |
அணில் கீச்சிடும் |
பசு கதறும் |
பாம்பு சீறும் |
பன்றி உறுமும் |
பறவைகளின் ஒலி மரபு
சேவல் கூவும் |
கிளி கொஞ்சும் |
கூகை (கோட்டான்) குழறும் |
குயில் கூவும் |
மயில் அகவும் |
கோழி கொக்கரிக்கும் |
கிளி பேசும் |
குருவி கீச்சிடும் |
வண்டு முரலும் |
வாத்து கத்தும் |
ஆந்தை அலறும் |
காக்கை கரையும் |
பெயர்களுக்குப் பொருத்தமான வினைகள்
அப்பம் தின் |
கதிர் அறு |
ஏர் உழு |
களை பறி |
கல் உடை |
அம்பு எய் |
காய்கறி அரி |
மரம் வெட்டு |
நார் கிழி |
கிளையை ஒடி |
இலை பறி |
கூரை வேய் |
சந்தனம் பூசு |
வரப்புக் கட்டு |
சோறு உண் |
விதையை விதை |
தென்றல் வீசும் |
வெற்றிலை தின் |
தாள் அடி |
விறகைப் பிள |
பாடல் இயற்று |
நூல் எழுது |
பழம் தின் |
படம் வரை |
தோசை சுடு |
இட்லி அவி |
தேனை நக்கு |
மது அருந்து |
பால் பருகு |
நீர் குடி |
ஓவியம் வரைந்தார் |
வண்ணம் தீட்டினார் |
சிற்பம் செதுக்கினார் |
பூப்பறித்தல் |
செய்யுள் இயற்றினார் |
வெற்றிலை கிள்ளுதல் |
குடம் வனைந்தார் |
யானைப்பாகன் |
கூடை முடைந்தார் |
ஆட்டு இடையன் |
கூரை வேய்ந்தார் |
சுவர் எழுப்பினான் |
வீடு கட்டினார் |
அம்பு,
வேல், எறிதல் |
வழூஉச்சொற்கள் |
திருத்தம் |
அடமழை |
அடைமழை |
அதுகள் |
அவை |
அருவாமனை |
அரிவாள்மனை |
அருகாமையில் |
அருகில் |
அண்ணாக்கயிறு |
அரைஞாண்கயிறு |
அமக்களம் |
அமர்க்களம் |
அவரக்காய் |
அவரைக்காய் |
அடயாளம் |
அடையாளம் |
அப்ளம் |
அப்பளம் |
அலமேலு மங்கை |
அலர்மேல் மங்கை |
அகண்ட |
அகன்ற |
அடிச்சுட்டா |
அடித்துவிட்டாள் |
அத்தினி |
அத்தனை |
ஆத்துக்கு |
அகத்துக்கு |
அறுவறுப்பு |
அருவருப்பு |
அங்கிட்டு |
அங்கு |
அவுந்து |
அவிழ்ந்து |
ஆச்சி |
ஆட்சி |
ஆம்படையான் |
அதமுடையான் |
அவங்க |
அவர்கள் |
ஆம்பிள்ளை |
ஆண்பிள்ளை |
ஆத்திற்கு |
ஆற்றிற்கு |
ஆச்சு |
ஆயிற்று |
இடதுபக்கம் |
இடப்பக்கம் |
இன்று |
இன்றைக்கு |
இடதுகை |
இடக்கை |
இத்தினை |
இத்தனை |
இரும்பல் |
இருமல் |
இங்கிட்டு |
இங்கு |
இளனி |
இளநீர் |
இறச்சி |
இறைச்சி |
இன்னும் |
இன்னும் |
இடைபோடு |
எடைபோடு |
இவையன்று |
இவையல்லை |
இத்துபோதல் |
இற்றுப்போதல் |
ஈர்கலி |
ஈர்கொல்லி |
உசிர் |
உயிர் |
உடமை |
உடைமை |
உந்தன் |
உன்றன் |
உளுந்து |
உழுந்து |
உச்சி |
உரித்து |
உத்திரவு |
உத்தரவு |
உலந்து |
உலர்ந்து |
ஊரணி |
ஊருணி |
எகளை, மொகனை |
எதுகை, மோனை |
எண்ணை |
எண்ணெய் |
ஒத்தடம் |
ஒற்றடம் |
ஒருக்கால் |
ஒருகால் |
ஒம்பது |
ஒன்பது |
ஒருவள் |
ஒருத்தி |
ஒசத்தி, ஒயர்வு |
உயர்வு |
ஒண்டியாய் |
ஒன்றியாய் |
ஒண்டுக்குடுத்தனம் |
ஒன்றிக்குடித்தனம் |
ஒட்டரை |
ஒட்டடை |
கறம் |
கரம் |
கத்திரிக்காய் |
கத்தரிக்காய் |
கடகால் |
கடைகால் |
கயறு, கவுறு |
கயிறு |
கடப்பாறை |
கடப்பாரை |
கட்டிடம் |
கட்டம் |
கவுளி |
கவளி |
கண்ணாலம் |
கல்யாணம் |
காக்கா |
காக்கை |
கருவேற்பிலை |
கறிவேப்பிலை |
காத்து |
காற்று |
குடிக்கூலி |
குடிக்கூலி |
கெடிகாரம் |
கடிகாரம் |
கோடாலி |
கோடாரி |
கோர்வை |
கோவை |
கோர்வை |
கோத்து |
குதவளை, குறவளை |
குரல்வளை |
கைமாறு |
கைம்மாறு |
கிரணம் |
கிரகணம் |
குதுவை |
கொதுவை |
சாம்பராணி |
சாம்பிராணி |
சாய்ங்காலம் |
சாயுங்காலம் |
சிகப்பு |
சிவப்பு |
சிலது |
சில |
சிலவு |
செலவு |
சுவற்றில் |
சுவரில் |
சீக்காய் |
சிகைக்காய் |
சந்தணம் |
சந்தனம் |
சம்மந்தம் |
சம்பந்தம் |
சம்மந்தி |
சம்பந்தி |
சும்மாயிரு |
சும்மாவிரு |
தங்கச்சி |
தங்கை |
தடுமாட்டம் |
தடுமாற்றம் |
தாப்பாள் |
தாழ்ப்பாள் |
தலகாணி |
தலையணை |
தாவாராம் |
தாழ்வாரம் |
தமயன் |
தமையன் |
திரேகம் |
தேகம் |
தொடப்பம், துடப்பம் |
துடைப்பம் |
துவக்கம் |
தொடக்கம் |
துவக்கப்பள்ளி |
தொடக்கப்பள்ளி |
துளிர் |
தளிர் |
தொந்திரவு |
தொந்தரவு |
தேனீர் |
தேநீர் |
துறவல் |
திறவுபோல் |
நேத்து |
நேற்று |
நோம்பு |
நோன்பு |
நஞ்சை |
நன்செய் |
நாகரீகம் |
நாகரிகம் |
நாத்தம் |
நாற்றம் |
நெனவு |
நனவு, நினைவு |
பண்டககாலை |
பண்டசாலை |
பதட்டம் |
பதற்றம் |
பயிறு |
பயறு |
பாவக்காய் |
பாகற்காய் |
புஞ்சை |
புன்செய் |
புண்ணாக்கு |
பிண்ணாக்கு |
பெம்பளை |
பெண்பிள்ளை |
பொட்லம் |
பொட்டலம் |
பதனி |
பதனீர் |
புடவை |
புடைவை |
புழக்கடை |
புறங்கடை |
புட்டு |
பிட்டு |
மணத்தக்காளி |
மணித்தக்காளி |
பேரன் |
பெயரன் |
பேதம |
பேதைமை |
போச்சு |
போயிற்று |
போறும் |
போதும் |
பொன்னாங்கண்ணிக்கீரை |
பொன்னாங்காணிக்கீரை |
முழுங்கு |
விழுங்கு |
முயற்சித்தான் |
முயன்றான் |
முமித்தான் |
விழித்தான் |
மெனக்கெட்டு |
வினைகெட்டு |
மோர்ந்து |
மோந்து |
மாங்காமரம் |
மாமரம் |
மானம் |
வானம் |
முந்தாணி |
முன்றானை |
முன்னூறு |
முந்நூறு |
ரொம்ப |
நிரம்ப |
வயறு |
வயிறு |
வலது பக்கம் |
வலப்பக்கம் |
வெங்கலம் |
வெண்கலம் |
வெண்ணை |
வெண்ணெய் |
வெய்யல் |
வெயில் |
வேண்டாம் |
வேண்டா |
வெட்டிப்பேச்சு |
வெற்றுப்பேச்சு |
வண்ணாத்திப்பூச்சி |
வண்ணத்துப்பூச்சி |
வேர்வை |
வியர்வை |
வைக்கல் |
வைக்கோல் |
சொற்களை
சேர்த்தும் பிரித்தும் எழுதுதல்
தெளிவும், எளிமையும்
உடைய மொழிநடை சிறந்ததாகும். ஆகவே, வாக்கியத்தில்
சேர்த்தெழுத வேண்டிய சொற்களைச் சேர்த்தும், பிரித்தெழுத
வேண்டிய சொற்களைப் பிரித்தும் எழுதுதல் வேண்டும்.
வேற்றுமை
உருபுகளைப் பிரித்தெழுதல் கூடாது
எ.கா.
- இப்பணி முருகன் ஆல் செய்யப்பட்டது – தவறு
இப்பணி முருகனால் செய்யப்பட்டது – சரி
- தாய் ஓடு அறுசுவைப்போம் – தவறு
தாயோடு அறுசுவைப்போம் – சரி
இடைச்சொற்களைப்
பிரித்தெழுதல் கூடாது
எ.கா.
- சான்றோரும் உண்டு கொல் – தவறு
சான்றோரும்உண்டுகொல் – சரி
உடம்படு
மெய்களைப் பிரித்தெழுதல் கூடாது
எ.கா.
- மான்கள் நீர் குடித்தன – தவறு
மான்கள் நீர்குடித்தன – சரி
- பாய் குதிரை – தவறு
பாய்குதிரை- சரி
- செந் தமிழ் – தவறு
செந்தமிழ் – சரி
- சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகளியற்றினார் –
தவறு
சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் இயற்றினார் – சரி
ஏழுதுவதைப் பிழையின்றி எழுதினால்தன் படிப்போர்க்குப் பொரு மயக்கம்
ஏற்படாது. திணை, பால், எண், இடம், காலம், மரபு ஆகியவற்றில் வழுவின்றி எழுதப் பயிற்சி பெற வேண்டும். சில வகைகள்
மட்டும் இங்கு விளக்கப்பட்டுள்ளன.
வாக்கியப்
பிழையும் திருத்தமும் :
வாக்கியங்களைப் பிழையின்றி எழுத சில இலக்கண நெறிகளைக் கையாள வேண்டும்.
1.
உயர்திணைப் எழுவாய்
உயர்திணைப் பயனிலையைப் பெற்று வரும். அது போன்று அஃறிணை எழுவாய்க்குப் பின்
அஃறிணை வினைமுற்றே வர வேண்டும்.
2.
எழுவாய் ஐம்பால்களுள் எதில்
உள்ளதோ அதற்கேற்ற வினைமுற்றையே பயன்படுத்த வேண்டும்.
3.
கள் விகுதி பெற்ற எழுவாய், வினைமுற்றிலும் கள் விகுதி
பெறும். அதே போன்று எழுவாய் ‘அர்’ விகுதி பெற்றிருந்தால் வினைமுற்றிலும் ‘அர்’
விகுதி வருதல் அவசியம்.
4.
எழுவாய் ஒருமையாயின்
வினைமுற்றும் ஒருமையாகவே இருக்க வேண்டும்.
5.
தொடரில் காலத்தை உணர்த்தும்
குறிப்புச் சொற்கள் இருப்பின் அதற்கேற்ற காலத்திலமைந்த வினைமுற்றே எழுத வேண்டும்.
6.
கூறியது கூறல் ஒரே தொடரில்
இடம் பெறக் கூடாது.
7.
வாக்கியத்தில் உயர்திணை, அஃறிணைப் பெயர்கள் கலந்து
வந்தால், சிறப்பு கருதின் உயர்திணைப் பயனிலைக் கொண்டும், இழிவு கருதின் அஃறிணைப்
பயனிலைக் கொண்டும் வாக்கியத்தை முடிக்க வேண்டும்.
8.
உயர்திணை, அஃறிணைப் பெயர்கள் விரவி
வந்தால், மிகுதி பற்றி ஒருதிணை வினை கொண்டு முடித்தல் வேண்டும்.
தங்கை வருகிறது |
பிழை |
தங்கை வருகிறாள் |
திருத்தம் |
தம்பி வந்தார் |
பிழை |
தம்பி வந்தான் |
திருத்தம் |
மாணவர்கள் எழுதினர் |
பிழை |
மாணவர்கள் எழுதினார்கள் |
திருத்தம் |
ஆசிரியர் பலர் வந்தார்கள் |
பிழை |
ஆசிரியர் பலர் வந்தனர் |
திருத்தம் |
மங்கையர்க்கரசியார் பேசினாள் |
பிழை |
மங்கையர்க்கரசியார் பேசினார் |
திருத்தம் |
என் எழுதுகோல் இதுவல்ல |
பிழை |
என் எழுதுகோல் இதுவன்று |
திருத்தம் |
அவன் மாணவன் அல்ல |
பிழை |
அவன் மாணவன் அல்லன் |
திருத்தம் |
உடைகள் கிழிந்து விட்டது |
பிழை |
உடைகள் கிழிந்து விட்டன |
திருத்தம் |
செழியன் இன்று ஒரு புதிய நூல் ஒன்றை வாங்கினான் |
பிழை |
செழியன் இன்று புதிய நூல் ஒன்று வாங்கினான் |
திருத்தம் |
தலைவர் நாளை வந்தார் |
பிழை |
தலைவர் நாளை வருவார் |
திருத்தம் |
ஆமைகள் வேகமாக ஓடாது |
பிழை |
ஆமைகள் வேகமாக ஓடா |
திருத்தம் |
நதிகள் தோன்றுமிடத்தில் சிறியதாய் இருக்கும் |
பிழை |
நதிகள் தோன்றுமிடததில் சிறியனவாய் இருக்கும் |
திருத்தம் |
தலைவர் தன் தொண்டர்களுக்கு நன்றி கூறினார் |
பிழை |
தலைவர் தம் தொண்டர்களுக்கு நன்றி கூறினார் |
திருத்தம் |
ஒவ்வொரு ஊரிலும் தொலைக்காட்சிப் பெட்டி உள்ளது. |
பிழை |
ஒவ்வோர் ஊரிலும் தொலைக்காட்சிப் பெட்டி உள்ளது. |
திருத்தம் |
தொல்காப்பியம் என்ற இலக்கண நூல் தொன்மையானது |
பிழை |
தொல்காப்பியம் எனும் இலக்கண நூல் தொன்மையானது |
திருத்தம் |
மூடனும் மாடும் குளத்தில் குளித்தனர் |
பிழை |
மூடனும் மாடும் குளத்தில் குளித்தன |
திருத்தம் |
ஆற்று வெள்ளத்தில் மக்களும், மரங்களும், குடிசைகளும், ஆடு மாடுகளும்
மிதந்து சென்றனர். |
பிழை |
ஆற்று வெள்ளத்தில் மக்களும், மரங்களும், குடிசைகளும், ஆடு மாடுகளும்
மிதந்து சென்றன. |
திருத்தம் |
ஆறு காலிழந்த ஆண்களும், நான்கு கையிழந்த
பெண்களும் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டன. |
பிழை |
காலிழந்த ஆண்கள் அறுவரும், கையிழந்த
பெண்கள் நால்வரும் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டன. |
திருத்தம் |
இருவினை
1.
நல்வினை
2.
தீவினை
இருதிணை
1.
உயர்திணை
2.
அஃறினை
மூவிடம்
1.
தன்மை
2.
முன்னிலை
3.
படர்க்கை
அரசருக்குரிய பத்து
1.
படை
2.
தார்
3.
முரசு
4.
கொடி
5.
தேர்
6.
களிறு
7.
குடை
8.
மாலை
9.
புரவி
10.
செங்கோல்
இராசிகள் பன்னிரென்டு
1.
மேடம்(மேஷம்)
2.
இடம் (ரிஷபம்)
3.
மிதுனம்
4.
கடகம்
5.
சிம்மம் (சிங்கம்)
6.
கன்னி
7.
துலாம்
8.
விருச்சிகம்
9.
தனுசு
10.
மகரம்
11.
கும்பம்
12.
மீனம்
அட்டமங்கலம்
1.
சாமரம்
2.
முரசு
3.
நிறைகுடம்
4.
விளக்கு
5.
கண்ணாடி
6.
கொடி
7.
தோட்டி
8.
இணைக்கயல்
அகத்தியர் மாணக்கர் பன்னிருவர்
1.
செம்பூட்சேஎய்
2.
வையாபிகர்
3.
அதங்கோட்டாசான்
4.
அவிநயர்
5.
காக்கை பாடினியார்
6.
தொல்காப்பியர்
7.
தூரலிங்கர்
8.
வாய்பியர்
9.
பனம்பாரனார்
10.
கழாரம்பர்
11.
நற்றத்தார்
12.
வாமனர்
ஐம்பொறி
1.
மெய்
2.
வாய்
3.
மூக்கு
4.
கண்
5.
காது
அகத்திணைகள் ஏழு வகை
1.
குறிஞ்சி
2.
முல்லை
3.
மருதம்
4.
நெய்தல்
5.
பாலை
6.
கைக்கிளை
7.
பெருந்திணை
புறத்திணைகள் பன்னிரு வகை
1.
வெட்சி
2.
கரந்தை
3.
வஞ்சி
4.
காஞ்சி
5.
உழிஞை
6.
நொச்சி
7.
தும்பை
8.
வாகை
9.
பாடாண்
10.
பொதுவியல்
11.
கைக்கிளை
12.
பெருந்திணை
பருவங்கள் பத்து வகை
1.
காப்பு
2.
செங்கீரை
3.
தால்
4.
சப்பாணி
5.
முத்தம்
6.
வருகை
7.
அம்புலி
8.
சிறுபறை
9.
சிற்றில் சிதைத்தல்
10.
சிறு நேருருட்டல்
இலக்கணம் ஐந்து
1.
எழுத்து
2.
சொல்
3.
பொருள்
4.
யாப்பு
5.
அணி
நாற்றிசை
1.
கிழக்கு
2.
மேற்கு
3.
வடக்கு
4.
தெற்கு
ஐம்பெரும் பூதங்கள்
1.
நிலம்
2.
நீர்
3.
காற்று
4.
அக்னி
5.
வானம்
எண்பேராயம்
1.
கரணத்தியலவர்
2.
கருமகாரர்
3.
சுனகச்சுற்றம்
4.
கடைகாப்பாளர்
5.
நகரமாந்தர்
6.
படைத்தலைவர்
7.
யானைவீரர்
8.
இவுளிமறவர்
ஐம்பெருங்குரவர்
1.
அரசன்
2.
குரு
3.
தந்தை
4.
தேசிகன்
5.
மூத்தோன்
ஐஞ்சிறுங்காப்பியங்கள்
1.
நாககுமாரகாவியம்
2.
உதயணகுமார காவியம்
3.
யசோதர காவியம்
4.
சூளாமணி
5.
நீலகேசி
ஐம்பெருங்காப்பியங்கள்
1.
சீவகசிந்தாமணி
2.
சிலப்பதிகாரம்
3.
மணிமேகலை
4.
வளையாபதி
5.
குண்டலகேசி
செம்மொழி இலக்கியங்கள்
1.
தொல்காப்பியம்
2.
பத்துப்பாட்டு
3.
எட்டுத்தொகை
4.
சிலப்பதிகாரம்
5.
பதினெண்கீழ்க்கணக்கு
6.
மணிமேகலை
7.
இறையனார் அகப்பொருள்
8.
முத்தொள்ளாயிரம்
எட்டுத்தொகை நூல்கள்
1.
நற்றிணை
2.
குறுந்தொகை
3.
ஐங்குறுநூறு
4.
பதிற்றுப்பத்து
5.
பரிபாடல்
6.
கலித்தொகை
7.
அகநானூறு
8.
புறநானூறு
பத்துப்பாட்டு நூல்கள்
- திருமுருகாற்றுப்படை
- பெருநாராற்றுப்படை
- சிறுபாணாற்றுப்படை
4. பெரும்பாணாற்றுப்படை
- முல்லைப்பாட்டு
6. மதுரைக்காஞ்சி
- நெடுநல்வாடை
8. குறிஞ்சிப்பாட்டு
- பட்டினப்பாலை
10. மலைபடுகடாம்
பதினெண் கீழ்கணக்கு நூல்கள்
1.
நாலடியார்
2.
நாண்மடிக்கடிகை
3.
இன்னாநாற்பது
4.
இனியவை நாற்பது
5.
கார்நாற்பது
6.
களவழிநாற்பது
7.
ஐந்திணைஐம்பது
8.
ஐந்திணையெழுபது
9.
திணைமொழி
10.
திணைமாலை நூற்றைம்பது
11.
திருக்குறள்
12.
கைந்நிலை ஐம்பது
13.
திரிகடுகம்
14.
ஆசாரக்கோவை
15.
பழமொழி
16.
சிறுபஞ்சமூலம்
17.
முதுமொழிக்காஞ்சி
18.
ஏலாதி
ஈசன் குணம்
1.
வரம்பில் ஞானம்
2.
வரம்பில் காட்சி
3.
வலம்பிலின்பம்
4.
வரம்பிலாற்றல்
5.
நாமமமின்மை
6.
கோத்திரமின்மை
7.
ஆயுளின்மை
8.
இடையூறின்மை
முத்தமிழ்
1.
இயல்
2.
இசை
3.
நாடகம்
முக்கனி
1.
மா
2.
பலா
3.
வாழை
முப்பால்
1.
அறம்
2.
பொருள்
3.
இன்பம்
ஐம்பால்
1.
ஆண் பால்
2.
பெண் பால்
3.
பலர் பால்
4.
ஒன்றன் பால்
5.
பலவின் பால்
ஐம்புலன்
1.
தொடுஉணர்வு
2.
உண்ணல்
3.
உயிரத்தல்
4.
காணல்
5.
கேட்டல்
நானிலம்
1.
குறிஞ்சி
2.
முல்லை
3.
மருதம்
4.
நெய்தல்
ஐந்திணைகள்
1.
குறிஞ்சி
2.
முல்லை
3.
மருதம்
4.
நெய்தல்
5.
பாலை
அகப்பொருள் திணை விளக்கம்
1.
குறிஞ்சி – மலை மலை சார்ந்த இடம்
2.
முல்லை – காடு காடு சார்ந்த இடம்
3.
மருதம் – வயல் வயல் சார்ந்த இடம்
4.
நெய்தல் – கடல் கடல் சார்ந்த இடம்
5.
பாலை – மணல் மணல் சார்ந்த இடம்
சிறுபொழுது ஆறு
1.
மாலை
2.
யாமம்
3.
வைகறை
4.
விடியல் (காலை)
5.
நண்பகல்
6.
ஏற்பாடு
பெரும்பொழுது ஆறு
1.
கார்
2.
கூதிர்
3.
முன்பனி
4.
பின்பனி
5.
இளவேனில்
6.
முதுவேனில்
பாவகை ஐந்து
1.
வெண்பா
2.
ஆசிரியப்பா
3.
கலிப்பா
4.
வஞ்சிப்பா
5.
மருட்பா
ஐவகைத் தாயார்
1.
பாராட்டுந்தாய்
2.
ஊட்டுந்தாய்
3.
முலைத்தாய்
4.
கைத்தாய்
5.
செவிலித்தாய்
ஐம்பெருங்குழு
1.
அரசர்
2.
அமைச்சர்
3.
புரோகிதர்
4.
ஒற்றர்
5.
தூதுவர்
அறுசுவை
- கைப்பு
- இனிப்பு(தித்திப்பு)
- புளிப்பு
- உவர்ப்பு
- துவர்ப்பு
- கார்ப்பு
நவரத்தினங்கள்
1.
கோமேதகம்
2.
நீலம்
3.
பவளம்
4.
புட்பராகம்
5.
மரகதம்
6.
மாணிக்கம்
7.
முத்து
8.
வைடூரியம்
9.
வைரம்
மலரின் ஏழுவகை
1.
அரும்பு
2.
மொட்டு
3.
முகை
4.
மலர்
5.
அலர்
6.
வீ
7.
செம்மல்
ஐம்புலன்கள்
1.
சுவை
2.
ஒளி
3.
ஊறு
4.
ஓசை
5.
நாற்றம்
ஏழிசை
1.
குதல்
2.
துத்தம்
3.
கைக்கிளை
4.
உழை
5.
கிளி
6.
விளரி
7.
தாரம்
கடையெழு வள்ளல்கள்
1.
பாரி
2.
ஆய் அண்டிரன்
3.
எழினி
4.
நள்ளி
5.
மலையன்
6.
பேகன்
7.
காரி
உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடங்கள்
- கோலாம்பூர்
- சென்னை
- பாரிஸ்
- யாழ்ப்பாணம்
- மதுரை
- மொரீசியஸ்
- தஞ்சாவூர்
பருவ பேதை (மங்கை) எழுவர் – (வயது)
1.
பேதை (5-7)
2.
பெதும்பை (8-11)
3.
மங்கை (12-13)
4.
மடந்தை (14-19)
5.
அரிவை (20-25)
6.
தெரிவை (26-31
7.
பேரிளம் பெண் (32-40)
1.
பெரியது x சிறியது
2.
பல x சில
3.
உயரம் x குட்டை
4.
ஏறு x இறங்கு
5.
இழு x தள்ளு
6.
மேலே x கீழே
7.
உள்ளே x வெளியே
8.
சூடான x குளிர்ச்சியான
9.
பழைய x புதிய
10.
முன்னால் x பின்னால்
11.
அருகில் x தொலைவில்
12.
நினைத்தல் x மறத்தல்
13.
மண்ணில் x விண்ணில்
14.
தேக்குதல் x நீக்குதல்
15.
நண்பர்கள் x பகைவர்கள்
16.
வெப்பமாய் x குளிர்ச்சியாய்
17.
மேல் x கீழ்
18.
உள்ளே x வெளியே
19.
ஏறினான் x இறங்கினான்
20.
உயர்திணை x தாழ்திணை
21.
மெய் x பொய்
22.
பழமை x புதுமை
23.
அமுதம் x நஞ்சு
24.
சோம்பல் x சுறுசுறுப்பு
25.
பெருமை x சிறுமை
26.
இட்ட x எடுத்த
27.
பெறு x கொடு
28.
மிகுதி x குறைவு
29.
புதுமை x பழமை
30.
குறை x நிறை
31.
நீளும் x நீளாத
32.
நினைத்தது x மறந்தது
33.
குறையாத x நிறையாத
34.
ஆனந்தம் x வருத்தம்
35.
இன்னல் x இன்பம்
36.
கல்லார் x கற்றவர்
37.
இளையோரும் x முதியோரும்
38.
குறைய x நிறைய
39.
மெல்லிய x தடித்த
40.
முடியும் x முடியாது
41.
விரைவாக x மெதுவாக
42.
கொழுத்த x இளைத்த
43.
பலவகை x சிலவகை
44.
விரைவாக x மெதுவாக
45.
கடினமாக x எளிதாக
46.
விழுந்து x எழுந்து
47.
உயர x தாழ
48.
மகிழ்ச்சி x கவலை
49.
உண்மை x பொய்
50.
முடிவு x தொடக்கம்
51.
தோல்வி x வெற்றி
52.
புதிய x பழைய
53.
கொடுத்து x வாங்கி
54.
உயர்ந்த x தாழ்ந்த
55.
சத்தமாக x மெதுவாக
56.
இரவு x பகல்
57.
மேடு x பள்ளம்
58.
துயரம் x இன்பம்
59.
வெளிச்சம் x இருட்டு
60.
நன்மை x தீமை
61.
புகழ் x இகழ்
62.
வெற்றி x தோல்வி
63.
தோன்றும் x மறைவு
64.
பகைவன் x நண்பன்
65.
வேற்றுமை x ஓற்றுமை
66.
மெய்ம்மை x பொய்மை
67.
அன்பு x பகை
68.
இனிய x இன்னாத
69.
இழிவு x உயர்வு
70.
இடம் x வலம்
71.
இம்மை x வறுமை
72.
இன்னா x இனிய
73.
உறங்கு x விழி
74.
ஏமாற்றம் x இறக்கம்
75.
பழமை x புதுமை
76.
பெருமை x சிறுமை
77.
வென்று x தோற்று
78.
குழு x தனி
79.
தொன்மை x அண்மை
80.
தன் x பிற
81.
எளிய x அரிய
82.
எட்டிய x எட்டா
83.
செம்மை x கருமை
84.
தீது x நன்று
85.
கூடி x பிரிந்து
86.
நம்பி x நங்கை
87.
திண்மம் x நீர்மம்
88.
தண்மை x வெம்மை
89.
காடு x நாடு
90.
நீண்டு x குறுகி
91.
வாங்கல் x விற்றல்
92.
கலை x கடை
93.
போற்றி x தூற்றி
94.
காய் x கனி
95.
என்னிடம் x உம்மிடம்
96.
தெரு x கொல்லை
97.
தன்னலம் x பிறர்நலம்
98.
தேய்ந்து x வளர்ந்து
99.
தனியாக x கூட்டாக
100. போடு
x எடு
101. சேமித்தார்
x செலவழித்தார்
102. வறுமை
x வளமை
103. புதுமை
x பழமை
104. இயற்கை
x செயற்கை
105. அகம்
x புறம்
106. வாழ்வு
x தாழ்வு
107. வாழ்த்தல்
x தூற்றல்
108. நினை
x மற
109. கேடு
x நலம்
110. பிழை
x திருத்தம்
111. தூய்மை
x மாசு
112. புகழ்
x இகழ்
113. நன்மை
x தீமை
114. இனிய
x இன்னா
115. வெண்மை
x கருமை
116. அமைதி
x குழப்பம்
117. இசை
x வசை
118. புகழ்
x இகழ்
119. மேதை
x பேதை
120. தண்மை
x வெம்மை
121. பெருமை
x சிறுமை
122. எளிது
x அரிது
123. ஓய்வு
x உழைப்பு
124. நோதல்
x தணிதல்
125. தட்பம்
x வெப்பம்
126. ஆக்கம்
x கேடு
127. ஆண்டான்
x அடிமை
128. ஆங்கு
x ஈங்கு
129. ஆசை
x நிராசை
130. ஆண்டு
x ஈண்டு
131. இகழ்ச்சி
x மகிழ்ச்சி
132. இசை
x வசை
133. இணைந்து
x தனித்து
134. இரவு
x பகல்
135. இருள்
x ஒளி
136. இலாபம்
x நஷ்டம்
137. இன்சொல்
x வன்சொல்
138. இனியது
x இன்னாதது
139. உச்சந்தலை
x உள்ளங்கால்
140. உண்டு
x இல்லை
141. உயர்வு
x தாழ்வு
142. உவத்தல்
x காய்தல்
143. உள்நாடு
x வெளிநாடு
144. உள்ளூர்
x வெளியூர்
145. ஊடல்
x கூடல்
146. எதிர்த்தார்
x வரவேற்றார்
147. எளிது
x அரிது
148. ஏற்றம்
x தாழ்வு
149. ஏறு
x இறங்கு
150. ஒருமை
x பன்மை
151. ஒற்றுமை
x வேற்றுமை
152. ஓங்கியது
x தாழ்ந்தது
153. ஓங்குதல்
x ஒடுங்குதல்
154. கஞ்சம்
x தாராளம்
155. கட்டுதல்
x அவிழ்தல்
156. கவனம்
x மறதி
157. களிப்பு
x துயரம்
158. கற்றால்
x கல்லாமை
159. கனவு
x நனவு
160. மலர்தல்
x கூம்புதல்
161. அருகு
x பெருகு
162. பழமை
x புதுமை
163. வீரன்
x கோழை
164. இகழ்ந்து
x புகழ்ந்து
165. இளமை
x முதுமை
166. இகழ்ச்சி
x புகழ்ச்சி
167. அரியது
x எளியது
168. அடைப்பு
x திறப்பு
169. அருமை
x எளிமை
170. அருள்
x மருள்
171. வெற்றி
x தோல்வி
172. நட்பு
x பகை
173. எட்டா
x எட்டிய
174. முதன்மை
x இறுதி
175. துன்பம்
x இன்பம்
176. மறப்பது
x நினைப்பது
177. தொன்மை
x புதுமை
178. தோன்ற
x மறைய
179. வளர்ச்சி
x தேக்கம்
180. அகநகர்
x புறநகர்
181. அகப்பொருள்
x புறப்பொருள்
182. அகம்
x புறம்
183. அங்கு
x இங்கு
184. அகலுதல்
x கிட்டுதல்
185. அந்தம்
x ஆதி
186. அடி
x முடி
187. அண்மை
x சேய்மை
188. அரிது
x எளிது
189. அரு
x மருள்
190. அவ்விடம்
x இவ்விடம்
191. அறம்
x மறம்
192. கருமை
x வெண்மை
193. காக்க
x விடுக
194. காலம்
x அகாலம்
195. காழ்ப்பு
x நயப்பு
196. குணம்
x குற்றம்
197. குறைவு
x நிறைவு
198. கூடல்
x பிரிதல்
199. கொடு
x வாங்கு
200. கொடுமை
x செம்மை
201. கொள்வினை
x கொடுப்பினை
202. சஞ்சலம்
x துணிவு, தெளிவு
203. சத்து
x அசத்து
204. சாந்தம்
x உக்கிரம்
205. சான்றோன்
x மூடன்
206. சிறப்பு
x இழிவு
207. செய்வார்
x செய்யார்
208. சுகம்
x துக்கம்
209. சுபம்
x அசுபம்
210. சுருக்கம்
x பெருக்கம்
211. செங்கோல்
x கொடுங்கோல்
212. செல்வம்
x வறுமை
213. செலவு
x வரவு
214. சேய்மை
x அண்மை
215. சேரத்தல்
x பிரித்தல்
216. செளக்கியம்
x அசொக்கியம்
217. தக்கவன்
x தகாதவன்
218. தட்பம்
x வெப்பம்
219. தந்நலம்
x பிறர்நலம்
220. தவம்
x அவம்
221. தழுவு
x தள்ளு
222. தள்ளுதல்
x தள்ளாமை
223. தண்மை
x வெம்மை
224. தாங்கு
x விடு
225. தாழ்வு
x உயர்வு
226. திண்மை
x நொய்மை
227. தீமை
x நன்மை
228. துக்கம்
x சுகம்
229. தூய்மை
x கலப்பு
230. தொகை
x விரி
231. தோல்வி
x வெற்றி
232. தோன்றுக
x மறைக
233. நண்பகல்
x நள்ளிரவு
234. நல்லது
x கெட்டது
235. நல்வழி
x அல்வழி
236. நற்குணம்
x தீக்குணம்
237. நன்மை
x தீமை
238. நாற்றம்
x துர்நாற்றம்
239. நியாயம்
x அநியாயம்
240. நினைவு
x மறதி
241. நீண்ட
x குறுகிய
242. நீதி
x அநீதி
243. நுண்மை
x பருமை
244. நேசம்
x பகை
245. பருத்தல்
x சிறுத்தல்
246. பள்ளம்
x மேடு
247. டாலர்
x விருத்தர்
248. பாவம்
x புண்ணியம்
249. பிடித்தல்
x விடுதல்
250. பிணக்கம்
x இணக்கம்
251. புகழ்ச்சி
x இகழ்ச்சி
252. புதியது
x பழையது
253. பூரித்தல்
x வாடுதல்
254. பெரியது
x சிறியது
255. பெரும்பான்மை
x சிறுபான்மை
256. பேதம்
x அபேதம்
257. பொய்
x மெய்
258. பொய்மை
x பொய்யாமை
259. போலி
x அசல்
260. மங்கலம்
x அமங்கலம்
261. மடிதல்
x விரிதல்
262. மரியாதை
x அவமரியாதை
263. மருள்
x தெருள்
264. மறைதல்
x வெளிப்படல்
265. முன்பு
x பின்பு
266. முற்பகல்
x பிற்பகல்
267. மூடு
x திற
268. மூதேவி
x சீதேவி
269. மென்மை
x வன்மை
270. மேதை
x பேதை
271. மேலார்
x கீழார்
272. மேற்கொள்க
x கைவிடுக
273. வரவு
x செலவு
274. வலப்புறம்
x இடப்புறம்
275. வளைதல்
x நிமிர்தல்
276. வற்றிய
x தளிர்த்த
277. வாழ்வு
x தாழ்வு
278. வாழ்க
x வீழ்க
279. விருப்பு
x வெறுப்பு
280. விவேகி
x அவிவேகி
281. வெம்மை
x தண்மை
282. வேண்டுதல்
x வேண்டாமை
283. அசைகிறான்
x அசைகின்றிலன்
284. அசைவான்
x அசையான்
285. அடையும்
x அடையா
286. அணைகிறாள்
x அணைக்கிறன்றலன்
287. அணைவாள்
x அணையாள்
288. அழுவா்
x அழார்
289. ஆடின்
x ஆடா
290. ஆழ்வார்
x ஆழார்
291. இடித்திதது
x இடித்திலது
292. இடிக்கும்
x இடித்திலது
293. இடிக்கும்
x இடியாது
294. இயம்பினாள்
x இயம்பிலன்
295. இயம்புவார்
x இயம்பார்
296. ஈந்தார்
x ஈந்திலர்
297. ஈவாய்
x ஈயாய்
298. உண்டாய்
x உண்டிலை
299. ஊதுகின்றது
x ஊதுகின்றலது
300. ஊதுக
x ஊதாத
301. எழுந்தேன்
x எழுந்திலேன்
302. எழுவேன்
x எழேன்
303. ஏற்றாய்
x ஏற்றிலை
304. ஏற்பாய்
x ஏலாய்
305. ஒழிந்தாய்
x ஒழிந்திலை
306. ஒழிவாய்
x ஒழியாய்
307. ஓடின
x ஓடிற்றில்
308. ஓடும்
x ஓடா
309. கற்றான்
x கற்றிலன்
310. கற்பான்
x கற்றிலன்
311. காண்பாய்
x காணாய்
312. காப்பாய்
x காவாய்
313. குடித்தன
x குடித்தில
314. குடியா
x குடிக்கும்
315. கூவியது
x கூவிற்றலது
316. கூவும்
x கூவாது
317. கேட்கிறாய்
x கேட்கின்றிலை
318. கொடுத்தார்
x கொடுத்திலர்
319. சிரித்தது
x சிரித்திலது
320. சிரிக்கும்
x சிரிக்காது
321. சென்றன
x சென்றில
322. செல்லும்
x செல்லா
323. சேர்ந்தாய்
x சேர்ந்திலை
324. சேர்வாய்
x சேராய்
325. தின்றான்
x தின்றிலன்
326. தின்பான்
x தின்னான்
327. தேய்ந்தன
x தேய்ந்தில
328. தேயும்
x தேயா
329. தொட்டான்
x தொட்டிலன்
330. தொடுவாள்
x தொடாள்
331. தோண்டிலர்
x தோண்டிற்றிலர்
332. தோண்டுவார்
x தோண்டார்
333. நடந்தாய்
x நடிந்திலை
334. நடுங்கின
x நடுங்கிற்றில
335. நடுங்கும்
x நடுங்கா
336. நின்றான்
x நின்றிலன்
337. நிற்பாள்
x நில்லாள்
338. நிற்கின்றன
x நிற்கின்றிலர்
339. நீந்துகின்றனர்
x நீந்துகின்றிலர்
340. நொந்தனை
x நொந்திலை
341. நோவு
x நோகாய்
342. பாடுகிறாய்
x பார்த்திலன்
343. பார்ப்பான்
x பாரான்
344. மடிந்தார்
x மடிந்திலர்
345. மடிவார்
x மடியார்
346. வந்தான்
x வந்திலான்
347. வருகின்றான்
x வருகின்றிலன்
348. வருவான்
x வாரான்
349. வரும்
x வாரா
350. வருகின்றன
x வருகின்றில
351. வாழ்வாய்
x வாழாய்
352. விட்டன
x விடா
353. வீழ்ந்தேன்
x வீழ்ந்திலேன்
354. வீழ்வேன்
x வீழேன்
355. வெந்தார்
x வெந்திலர்
356. வைக்கிறார்
x வைக்கின்றிலர்
357. இடும்பை
x இன்பம்
1.
அமுதென்று -அமுது +என்று
2.
செம்பயிர் -செம்மை +பயிர்
3.
செந்தமிழ் -செம்மை +தமிழ்
4.
பொய் யகற்றும் -பொய் +அகற்றும்
5.
இடப்புறம் -இடம் +புறம் (இடது +புறம்)
6.
சீரிளமை -சீர்+இளமை
7.
வெண்குடை -வெண்மை + குடை
8.
பொற்கோட்டு-பொன் + கோட்டு
9.
நன்மாடங்கள்-நன்மை + மாடங்கள்
10.
நிலத்தினிடையே- நிலத்தின் + இடையே
11.
தட்பவெப்பம்- தட்பம் + வெப்பம்
12.
வேதியுரங்கள்-வேதி + உரங்கள்
13.
கண்டறி -கண்டு +அறி
14.
ஓய்வற-ஓய்வு +அற
15.
ஆழக்கடல்- ஆழம் + கடல்
16.
விண்வெளி- விண் + வளி
17.
நின்றிருந்த -நின்று + இருந்த
18.
அவ்வுருவம் -அ + உருவம்
19.
இடமெல்லாம் -இடம் +எல்லாம்
20.
மாசற -மாசு +அற
21.
கைப்பொருள் -கை +பொருள்
22.
பசியின்றி -பசி +இன்றி
23.
படிப்பறிவு -படிப்பு +அறிவு
24.
நன்றியறிதல் -நன்றி +அறிதல்
25.
பொறையுடைமை -பொறை +உடைமை
26.
பாட்டிசைத்து –பாட்டு +இசைத்து
27.
கண்ணுறங்கு -கண்+உறங்கு
28.
போகிப்பண்டிகை -போகி +பண்டிகை
29.
பொருளுடைமை -பொருள் +உடைமை
30.
கல்லெடுத்து -கல் +எடுத்து
31.
நானிலம் -நான்கு +நிலம்
32.
32.கதிர்ச்சுடர்
-கதிர்+சுடர்
33.
மூச்சடக்கி -மூச்சு +அடக்கி
34.
வண்ணப்படங்கள் –வண்ணம் +படங்கள்
35.
விரிவடைந்த -விரிவு +அடைந்த
36.
நூலாடை –நூல் +ஆடை
37.
தானென்று -தான் +என்று
38.
எளிதாகும் -எளிது +ஆகும்
39.
பாலையெல்லாம் -பாலை +எல்லாம்
40.
குரலாகும்-குரல் + ஆகும்
41.
இரண்டல்ல-இரண்டு + அல்ல
42.
தந்துதவும்-தந்து +உதவும்
43.
காடெல்லாம்-காடு + எல்லாம்
44.
பெயரறியா-பெயர் + அறியா
45.
மனமில்லை- மனம் + இல்லை
46.
காட்டாறு- காடு + ஆறு
47.
பொருட்செல்வம் -பொருள் +செல்வம்
48.
யாதெனின் -யாது +எனின்
49.
யாண்டுளனோ?-யாண்டு
+உளனோ?
50.
பூட்டுங்கதவுகள் -பூட்டு +கதவுகள்
51.
தோரணமேடை -தோரணம் +மேடை
52.
பெருங்கடல் -பெரிய +கடல்
53.
ஏடெடுத்தேன்- ஏடு +எடுத்தேன்
54.
துயின்றிருந்தார் -துயின்று +இருந்தார்
55.
வாய்தீ தின் -வாய்த்து +ஈயின்
56.
கேடியில்லை -கேடு +இல்லை
57.
உயர்வடைவோம் -உயர்வு +அடைவோம்
58.
வனப்பில்லை -வனப்பு +இல்லை
59.
வண்கீரை -வளம் +கீரை
60.
கோட்டோவியம் -கோடு +ஓவியம்
61.
செப்பேடு -செப்பு +ஏடு
62.
எழுத்தென்ப-எழுத்து +என்ப
63.
கரைந்துண்ணும் -கரைந்து +உண்ணும்
64.
நீருலையில் -நீர் +உலையில்
65.
தேர்ந்தெடுத்து -தேர்ந்து +எடுத்து
66.
ஞானச்சுடர்-ஞானம் + சுடர்
67.
இன்சொல்- இனிய +சொல்
68.
நாடென்ப -நாடு +எ ன்ப
69.
மலையளவு -மலை +அளவு
70.
தன்னாடு -தன் + நாடு
71.
தானொரு -தான் +ஒரு
72.
எதிரொலிதத்து -எதிர் +ஒலிதத்து
73.
என்றெ ன்றும்-என்று + என்றும்
74.
வானமளந்து -வானம் +அளந்து
75.
இருதிணை -இரண்டு +திணை
76.
ஐம்பால் -ஐந்து +பால்
77.
நன்செய் -நன்மை +செய்
78.
நீளு ழைப்பு -நீள் +உழைப்பு
79.
செத்திறந்த-செத் து + இறந்த
80.
விழுந்ததங்கே-விழுந்தது + அங்கே
81.
இன் னோசை -இனிமை + ஓசை
82.
வல்லுருவம்-வன்மை + உருவம்
83.
இவையுண்டார் -இவை +உண்டார்
84.
நலமெல்லாம் -நலம் +எல்லாம்
85.
கலனல்லால் -கலன் +அல்லால்
86.
கனகச் சுனை -கனகம் +சுனை
87.
பாடறிந்து -பாடு+அறிந்து
88.
மட்டுமல்ல -மட்டும் +அல்ல
89.
கண்ணோடாது -கண் +ஓடாது
90.
கசடற -கசடு +அற
91.
அக்களத்து -அ+களத்து
92.
வாசலெல்லாம்-வாசல் +எல்லாம்
93.
பெற்றெடுத்தோம்- பெற்று +எடுத்தோம்
94.
வெங்கரி’-வெம்மை+கரி
95.
என்றிருள்’-என்று +இருள்
96.
சீவனில்லாமல்-’சீவன்+இல்லாமல்
97.
விலங்கொடித்து-விலங்கு + ஒடித்து
98.
நமனில்லை -நமன் +இல்லை
99.
ஆனந்தவெள்ளம் -ஆனந்தம் +வெள்ளம்
100. பெருஞ்செல்வம்
-பெருமை + செல்வம்
101. ஊராண்மை
-ஊர் +ஆண்மை
102. இன்பதுன்பம்-இன்பம்
+துன்பம்
103. விழித்தெழும்-
விழித்து + எழும்
104. போவதில்லை-போவது
+இல்லை
105. படுக்கையாகிறது
-படுக்கை +ஆகிறது
106. கண்டெடுக்கப்பட்டுள்ளன
-கண்டு +எடுக்கப்பட்டு +உள்ளன
107. எந்தமிழ்நா-எம்
+ தமிழ் + நா
108. அருந்துணை-அருமை
+துணை
109. திரைப்படம்
-திரை +படம்
110. மரக்கலம்
-மரம் +கலம்
111. பூக்கொடி
-பூ +கொடி
112. பூத்தொட்டி
-பூ +தொட்டி
113. பூச்சோலை
-பூ +சோலை
114. பூப்பந்து
-பூ +பந்து
115. வாயொலி
-வாய் +ஒலி
116. மண்மகள்
-மண் +மகள்
117. கல்லதர்
-கல் +அதர்
118. பாடவேளை
-பாடம் +வேளை
119. கலங்கடந்தவன்
-காலம் + கடந்தவன்
120. பழத்தோல்
-பழம் +தோல்
121. பெருவழி
-பெருமை +வழி
122. பெரியன்
-பெருமை +அன்
123. மூதூர்
-முதுமை +ஊர்
124. பைந்தமிழ்
-பசுமை +தமிழ்
125. நெட்டிலை
-நெடுமை +இலை
126. வெற்றிலை
-வெறுமை +இலை
127. செந்தமிழ்
-செம்மை +தமிழ்
128. கருங்கடல்
-கருமை +கடல்
129. பசுந்தளிர்
-பசுமை +தளிர்
130. சிறுகோல்
-சிறுமை +கோல்
131. பெற்சிலம்பு
-பொன் +சிலம்பு
132. இழுக்கின்றி
-இழுக்கு +இன்றி
133. முறையறிந்து
-முறை +அறிந்து
134. அரும்பொருள்
-அருமை +பொருள்
135. மனையென
-மனை +என
136. பயமில்லை-பயம்+இல்லை
137. கற்பொடி
-கல் +பொடி
138. உலகனைத்தும்
-உலகு+அனைத்தும்
139. திருவடி
-திரு +அடி 140.நீரோடை
-நீர் +ஓடை
140. சிற்றூர்
-சிறுமை +ஊர்
141. கற்பிளந்து
-கல் +பிளந்து
142. மணிக்குளம்
-மணி+குளம்
143. அமுதென்று
-அமுது +என்று
144. புவியாட்சி
-புவி +ஆட்சி
145. மண்ணுடை
-மண் +உடை
146. புறந்தருதல்
-புறம் +தருதல்
147. வீட்டுக்காரன்
-வீடு +காரன்
148. தமிழ்நாட்டுக்காரி
-தமிழ்நாடு +காரி
149. உறவுக்காரர்
-உறவு +காரர்
150. தோட்டக்காரர்
-தோட்டம் +காரர்
151. தடந்தேர்
-தடம்+ தேர்
152. கலத்தச்சன்
-காலம் +தச்சன்
153. உழுதுழுது
– உழுது +உழுது
154. பேரழகு
– பெருமை+அழகு
155. செம்பருதி
-செம்மை +பருதி
156. வனமெல்லாம்
– வானம் +எல்லாம்
157. உன்னையல்லால்
-உன்னை +அல்லால்
158. செந்தமிழே
-செம்மை +தமிழே
159. ஆங்கவற்றுள்
-ஆங்கு +அவற்றுள்
160. தனியாழி
-தனி +ஆழி
161. 162.வெங்கதிர் -வெம்மை +கதிர்
162. கற்சிலை
-கல் +சிலை
163. கடற்கரை
-கடல் +கரை
164. பன்முகம்
-பல் +முகம்
165. மக்கட்பேறு
-மக்கள் +பேறு
166. நாண்மீன்
-நாள் +மீன்
167. சொற்றுணை
-சொல் +துணை
168. பன்னூல்
-பல் +நூல்
169. இனநிரை
-இனம் +நிரை
170. புதுப்பெயல்
-புதுமை +பெயல்
171. அருங்கானம்
-அருமை +கானம்
172. எத்திசை
-எ +திசை
173. உள்ளொன்று
-உள் +ஒன்று
174. ஒருமையுடன்
-ஒருமை +உடன்
175. பூம்பாவாய்
-பூ +வாய்
176. தலைக்கோல்
-தலை +கோல்
177. முன்னுடை
-முன் +உடை
178. ஏழையென
-ஏழை +என
179. நன்மொழி
-நன்மை +மொழி
180. உரனுடை
-உரன் +உடை
இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்
·
திருவள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே” –
பாரதிதாசன்.
·
“திருக்குறளில்
இல்லாது இல்லை, இணை
இல்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” – பாரதிதாசன்.
·
மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம் என்பவர் 1812-ல் திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்து
வெளியிட்டார்.
·
திருக்குறளை போற்றிப்பாடும் நூல் – திருவள்ளுவமாலை.
·
“வீறுடை
செம்மொழி தமிழ்மொழி உலகம்
·
வேரூன்றி நாள் முதல் உயிர்மொழி –
பெருஞ்சித்திரனார்.
·
திருந்திய பண்பும்,
சீர்த்த நாகரிககமும் பொருந்திய தூயமொழி தமிழ்ச்
செம்மொழியாம் – பரிதிமாற்கலைஞர்.
·
தமிழ் இலக்கணம் படிக்கப் படிக்க விருப்பத்தை
உண்டாக்குவது – கெல்லட்.
·
தமிழை செம்மொழியாக அறிவித்த ஆண்டு 2004 (12.10.2004).
·
“தமிழ்
மிகவும் பண்பட்ட மொழி” எனக் கூறிய மொழியியல் அறிஞர் மாக்ஸ்முல்லர்.
·
பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்ட செம்மொழி எனக்
கூறியவர் – பாவணர்
·
இன்றைய மொழியில் அறிவியல் வல்லுநர்கள் பேணிப்
பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகிறது என்றவர் – எமினோ
·
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
·
தமிழ்மாெழியில் பெயர்த்தல் வேண்டும்
·
இறவாத புகழ்உடைய புதுநூல்கள்
·
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் – பாரதியார்
·
இளங்கோவடிகள் துறவு பூண்டு தங்கிய இடம் –
குணவாயிற்கோட்டம்.
·
“நெஞ்சையள்ளும்
சிலப்பதிகாரம்” என்று போற்றியவர் – பாரதியார்
·
எளியநடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்
·
இலக்கணநூல் புதியாக இயற்றுதலும் வேண்டும்
·
செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்
·
எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால்
·
இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும் –
பாரதிதாசன்
·
தமிழ் ஒளியை மதங்ககளிலே சாய்க்காமை வேண்டும்
·
தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர் – பாரதிதாசன்
·
தொண்டு செய்து பழுத்த பழம்
·
தூயதாடி மார்பில் விழும்
·
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
·
மனக்குகையில் சிறுத்தை எழும் – என்று பெரியாரைப்
புகழந்தவர் – பாரதிதாசன்
·
நாட்டில் உள்ள கேடுகளில் எல்லாம் பெருங்கேடு
பெண்களைப் பகுத்தறிவற்ற சீவன்களாய் வைத்திருத்தல் – பெரியார்
·
பெண்ணடிமைக்கு முதன்மைக் காரணம் சொத்துரிமை
இல்லாதது – பெரியார்
·
அரசின் அனைத்து துறைகளிலும் பெண்கள்
பணியாற்றும்போது நம் சமுதாயத்தில் தலைகீழ் மாற்றம் ஏற்படும் – பெரியார்.
·
குகனின் ஊர் ‘சிருங்கிபேரம்’
·
“யாதினும், இனியநண்ப இருத்திஈண்டு எம்மோடு” என்று குகனிடம்
இராமன் சொன்னான்.
·
“அன்புள்ள
இனிநாம் ஓர்ஐவர்கள் உளரானோம்” ஐந்தாவது ஆள் குகன்
·
“நெடிய
மொழிதலும் கடிய ஊர்தலும் செல்வம் அன்று தன் செய்வினைப் பயனே” – நற்றிணை –
நல்வேட்டனார் பாடியது.
·
சான்றோர் செல்வம் என்று சொல்வது புகலிடம் தேடி
வந்தோரைக் கைவிடாமை
·
“சான்றோர்
சான்றோர் பாலர் ஆப. சாலார் சாலார் பாலர் ஆகுபவே” – புறநானூறு – கண்ணகனார் பாடல்
·
நுண்ணிய நூல்பல கற்றவர்க்கே அமைந்த அரியகலை –
பேச்சுக்கலை
·
மேடைப்பேச்சில் மக்களை ஈர்த்தவர் – பேரறிஞர் அண்ணா, திரு.வி.க., ரா.பி.சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தரம்,
பாரதியார், குன்றக்குடி
அடிகளார் போன்றோர் ஆவர்.
·
“இப்போது
இங்கவன் உதவான்” என்று அப்பூதியடிகள் தன் மூத்த மகனைப் பற்றித் திருநாவுக்கரசரிடம்
கூறினார் – பெரியபுராணம்
·
தம் வீட்டில் உள்ள அனைத்துப் பொருளுக்கும்
திருநாவுக்கரசர் என்று பெயர் சூட்டியவர் – அப்பூதியடிகள்
·
“பக்திச்சுவை
நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ” – என்று சேக்கிழாரைப் புகழ்ந்தவர்
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்.
·
நடிப்பாற்றல் மிக்கவரையும் நடிப்பைக் கற்றுத்
தருபவரையும் இயக்குநர் என்பர்.
·
படப்பிடிப்புக் கருவியை நகர்த்தும் வண்டியில்
பொருத்துவதும் உண்டு.
·
இயக்குருப் படங்கள் பார்ப்பதற்கு வேடிக்கையாக
இருக்கும்.
·
ஓவியங்களைக் கொண்டு எடுக்கும் திரைப்படம் –
கருத்துப்படம்.
·
ஓவியத்திற்கு பதில் பொம்மைகள் கொண்டு
எடுக்கப்படும் படம் – இயக்குருப்படம்.
·
“அரியாசனம்
உனக்கே யானால் உனக்குச் சரியாரும் உண்டோ தமிழே” – தமிழ்விடுதூது.
·
“போலிப்
புலவர்களைத் தலையில் குட்டியவர்” – அதிவீரராமபாண்டியன்
·
“போலிப்
புலவர்களின் தலையை வெட்டியவர்” – ஒட்டக்கூத்தர்
·
“போலிப்
புலவர்களின் காதை அறுத்துவர்” – வில்லிபுத்துரான்
·
மாந்தன் தோன்றிய இலெமுரியா கண்டத்தை “மனித
நாகரிகத்தின் தொட்டில்” என்பர்.
·
இறைவனைப் “பண்ணொடு தமிழ் ஒப்பாய்” என்று தேவாரம்
கூறுகிறது.
·
தமிழரின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்.
·
இறந்தோரை இட்புப் புதைக்கும் தாழி முதுமக்கள் தாழி
·
நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
·
நகரத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோர் –
திருநாவுக்கரசர்
·
உலகம் – உலவு (சுற்றுதல்) என்ற சொல்லடியாகப்
பிறந்தது.
·
ஞாலம் – ஞால் (தொங்குதல்) என்ற அடியாகப் பிறந்தது.
·
வளிது நிலைஇய காயம் – புறநானூறு. இது வானத்தில்
காற்று இல்லாப் பகுதியும் உண்டு என்று கூறுகிறது.
·
“தீப்பிழி
எந்திரம் பந்தல் வருந்த” பதிற்றுப்பத்து கூறுவது. கரும்புச்சாறு எடுக்கும்
இயந்திரம்.
·
உடம்பார் அழியின் உயிரார் அழிவர் – திருமூலர்
திருமந்திரம்
·
அறுவைச் சிகிச்சையை உவமையாக கூறும் நூல் –
கம்பராமாயணம்.
·
இந்தியனாக இருப்பதைக் காட்டிலும் மனிதனாக இருப்பதே
பெருமைக்கூரியது. – காந்தியடிகள்
·
“அனைத்து
இழப்பினும் உண்மையை இழக்கில்லேன்” – அரிச்சந்திரன்
·
திருக்குறளை மொழிபெயர்த்த உருசிய அறிஞர் தால்கதாய்
(டால்ஸ்டாய்)
·
“பகைவனிடமும்
அன்பு காட்டு” என்று கூறும் நூல் ‘பைபிள்’
·
அறநெறியாகப் போற்றப்பட வேண்டியவை – எளிமையும், சிக்கனமும்
·
தானோக்காது எத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்
·
கோனோக்கி வாழும் குடிபோன்று இருந்தேனே – குலசேகர
ஆழ்வார்
·
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்
·
உறவு கலவாமை வேண்டும் – இராமலிங்க வள்ளலார்
·
கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்
·
கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப்போக” – வள்ளலார்
·
ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
·
ஒருமையுளர் ஆகிய உலகியல் நடத்தல் வேண்டும் –
வள்ளலார்
·
இராமலிங்கர் சத்திய தருமசாலையை நிறுவிய இடம் –
வடலூர்
·
இறவாத நிலை தரும்மொழி தமிழ்மொழி – வள்ளலார்
·
உங்களுடைய தருமமும் கருமமும் உங்களைக் காக்கும் –
அயோத்திதாசப் பண்டிதர்
·
வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம் – தாராபாரதி
·
வினையே ஆடவர்க்கு உயிர் – குறுந்தொகை
·
முந்நீர் வழக்கம் மகடூஉவோடில்லை – தொல்காப்பியம்
·
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே – திருமூலர்
·
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் – நாமக்கல் கவிஞர்
·
மக்களுக்கான நூலகங்களை முதன் முதலாகத் தொடங்கியவர்கள்
– கிரேக்கர்கள்
·
கல்கத்தா தேசிய நூலகம் இந்தியாவில் முதன்மையானது.
·
நூலகப் பயன்பாட்டு விதிகளை உருவாக்கியவர் – சீர்காழி
ஆர்.அரங்கநாதன்.
·
இந்தியாவில் மொத்தம் 4 மொழிக் குடும்பங்கள் உள்ளன.
·
இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 325
·
இந்திய நாட்டை மொழிகளின் அருங்காட்சியகம் என்று
குறிப்பிட்டவர் ச.அகத்தியலிங்கம்
·
தனிச்சிறப்பும், பலமொழிகள்
தோன்றி வளர அடிப்படையாகவும் உள்ள மொழி மூலமொழி ஆகும்.
·
தமிழ் என்ற சொல்லிலிருந்து திராவிடம் என்ற சொல்
உருவானது என்றவர் ஈராஸ் பாரதியார்.
·
தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை –
பாரதிதாசன்
·
நீடுதுயில் நீக்கப்பாடி வந்த நிலா எனப் பாராட்டப
பெற்றவர் – பாரதியர். பாராட்டியவர் – பாரதிதாசன்.
·
மங்கையராய் பிறப்பதற்கே நல்ல
·
மாதவம் செய்திட வேண்டும்மா – கவிமணி
·
தமிழன் என்றோர் இனமுண்டு
·
தனியே அதற்கோர் குணமுண்டு – நாமக்கல் இராலிங்கனார்.
·
அமெரிக்க கவிஞர் வால்விட்மனின் “புல்லின் இதழ்கள்”
என்ற நூலின் சாயலில் பாரதியார முதன் முதலில் வசனகவிதை எழுதினார்.
·
புதுக்கவிதை வளர்ச்சியில் வல்லிக்கண்ணனின் பங்கு
போற்றத்தக்கது.
·
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
·
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை – கண்ணதாசன்
·
“உண்பது
நாழி உடுப்பை இரண்டே” – புறநானூறு
·
“செல்வத்துப்
பயனே ஈதல்” – புறநானூறு
·
வாழ்க்கையில் இழப்பு என்பதே இல்லை, ஒன்று போால் இன்னொன்று வரும், அந்த நம்பிக்கை இருந்தால் வாழ்க்கை வெறுமையாகாது –
கெலன் கெல்லர்.
·
ஈன்ற ஒருத்தியையும் பிறந்த நாட்டையும் பேசும்
மொழியையும் ஒருவன் தாய், தாய், தாய் என்று போற்றுகின்றான் – திரு.வி.க.
·
“உண்டிகொடுத்தோர்
உயிர்கொடுத்தாேரே” -இவ்வடி புறநானூறு, மணிமேகலை
இரண்டிலும் வருகிறது.
·
மீதூண் விரும்பேல் – ஒளவையார்
·
பெற்றதை வழங்கி வாழும் பெருங்குணம் பெறுதல் இன்பம் –
சுரதா
·
நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி – திருக்குறள்
·
நகல்லவர் அல்லர்க்கு பகலும் இருட்டாக இருக்கும் –
திருக்குறள்
·
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் – வள்ளலார்.
அடைமொழி |
சான்றோர் |
குறுமுனி |
அகத்தியர் |
தென்நாட்டின்
ஜான்சிராணி |
அஞ்சலையம்மாள் |
பேரறிஞர், தென்னாட்டு பெர்னாட்ஷா |
அண்ணா |
அண்ணாமலை கவிராஜன் |
அண்ணாமலை ரெட்டியார் |
தமிழ்நாட்டின் ஜேன் ஆஸ்டின் |
அநுத்தமா |
கவிக்கோ |
அப்துல் ரகுமான் |
காந்தியடிகளால்
தத்தெடுக்கப்பட்ட மகள் |
அம்புஜத்தம்மாள் |
நான்காம் தமிழ்ச்
சங்கத்து நக்கீரர் |
அரசஞ்சண்முகனார் |
சந்தக்கவி |
அருணகிரிநாதர் |
குழந்தைக் கவிஞர் |
அழ.வள்ளியப்பா |
பேரறிஞர், தென்னாட்டு பெர்னாட்ஷா |
அறிஞர் அண்ணா |
சூடிக்கொடுத்த
நாச்சியார், சூடிக்கொடுத்த
சுடர்கொடி, வைணவம் தந்த செல்வி, கோதை |
ஆண்டாள் |
எஸ்.கே.மதுசூதன் |
ஆத்மாநாம் |
பதிப்புச் செம்மல் |
ஆறுமுக நாவலர் |
சொல்லின் செல்வர் (இலக்கியம்) |
இரா.பி.சேதுப்பிள்ளை |
தனித்தமிழ் இசைக் காவலர் |
இராசா.அண்ணாமலைச் செட்டியார் |
தத்துவ போதக சுவாமி |
இராபர்ட். டி. நொபிலி |
வள்ளலார், அருட்பிரகாசர், ஓதாது உணர்ந்த
பெருமாள், சன்மார்க்க்கவி, வடலூரார், இறையருள் பெற்ற
திருக்குழந்தை |
இராமலிங்க அடிகள் |
ஆட்சிமொழி காவலர், நாமக்கல் கவிஞர், காந்தியக்கவிஞர் |
இராமலிங்கனார் |
மூதறிஞர் |
இராஜாஜி |
இரட்டைப்புலவர்கள் |
இளஞ்சூரியர், முதுசூரியர் |
உரையாசிரியர், உரையாசிரியச்சக்கரவர்த்தி, உரையாசிரியர்களின் தலைமையாசிரியர் |
இளம்பூரணர் |
பகுத்தறிவு பகலவன், பெரியார், சுய மரியாதைச் சுடர், வெண்தாடி
வேந்தர், வைக்கம் வீரா் |
ஈ.வெ.ரா.ராமசாமி |
தமிழ்த்தாத்தா, மகாமகோபாத்தியாய |
உ.வே.சாமிநாத ஐயர் |
பகுத்தறிவுக் கவிராயர் |
உடுமலை நாராயண கவி |
கவி ஞாயிறு |
எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை |
நடிகவேள் |
எம்.ஆர்.ராதா |
இசைக்குயில் |
எம்.எஸ்.சுப்புலெட்சுமி |
மக்கள் திலகம், எம்.ஜி.ஆர், புரட்சி நடிகர், இதயக்கனி |
எம்.ஜி.ராமச்சந்திரன் |
கலைவாணர் |
என்.எஸ்.கிருஷ்ணன் |
தமிழ் மூதாட்டி |
ஒளவையார் |
காரைமுத்து புலவர், வணங்காமுடி, பார்வதி நாதன், ஆரோக்கியசாமி, கமகப்பிரியன் |
கண்ணதாசன் |
நவீன தமிழ்நாடக மறுமலர்ச்சித் தந்தை |
கந்தசாமி |
புலனழுக்கற்ற
அந்தணாளன், நல்லிசைக் கபிலன், பொய்யா நாவின் கபிலர் |
கபிலர் |
கவிச்சக்கரவர்த்தி, கல்வியிற்
பெரியவர், கவிராட்சசன் |
கம்பர் |
கலைத்தந்தை |
கருமுத்து
தியாகராசச்செட்டியார் |
தமிழ்நாட்டின் வால்டர்
ஸ்காட் |
கல்கி |
சிறுகதை தந்தை |
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி |
பன்மொழிப்புலவர் |
கா. அப்பாத்துரையார் |
பெருந்தலைவர், கல்விக் கண்
திறந்தவர் |
காமராஜர் |
காலா காந்தி, படிக்காத மேதை |
காமராஜர் |
ஒப்பிலக்கணத் தந்தை |
கால்டுவெல் |
தமிழறிஞர் |
கி.வா. ஜெகநாதன் |
முத்தமிழ் காவலர், தமிழ் பெரும் காவலர் |
கீ.ஆ.பெ.விஸ்வநாதம் பிள்ளை |
இஸ்லாமியத் தாயுமானவா் |
குணங்குடிமஸ்தான் |
கூடலர்கோன், கொல்லிகூவலன் |
குலசேகராழ்வார் |
நாடகத் தலைமை ஆசிரியர், நாடகத் தமிழ்
உலகின் இமயமலை |
சங்கரதாஸ் சுவாமிகள் |
கவிக்குயில் |
சரோஜினி நாயுடு |
தமிழர் தந்தை |
சி.பா. ஆதித்தனார் |
கற்பனைக் களஞ்சியம் |
சிவப்பிரகாசர் |
தண்டமிழாசான் சாத்தன்
நன்னூற் புலவன் |
சீத்தலைச் சாத்தனார் |
சுந்தர ராமசாமி |
|
ஆளுடை நம்பி, வன் தொண்டர், தம்பிரான் தோழர், நாவலூரார் |
சுந்தரர் |
உவமைக் கவிஞர் |
சுரதா |
தமிழ்நாட்டின் ஹாட்லி
சேஸ் |
சுஜாதா |
தசாவதானி |
செய்குத் தம்பியார் |
கற்பனைக் களஞ்சியம் |
செய்குத்தம்பி பாவலர் |
தொண்டர் சீர்பரவுவார், அருண்மொழித்தேவர், உத்தமசோழ பல்லவராயன், தெய்வச் சேக்கிழார், |
சேக்கிழார் |
நாவலர் |
சோமசுந்தர பாரதியார் |
தமிழ்நாடக மறுமலர்ச்சியின் தந்தை |
டி.கே.சண்முகம் சகோதரர்கள் |
ரசிகமணி |
டி.கே.சி |
கிருத்துவக் கம்பர் |
தாராபாரதி |
திருக்குற்றால நாதர், கோயில் வித்வான் |
திரிகூட ராசப்பக் கவிராயர் |
தமிழ்த்தென்றல, உரைநடையின் தந்தை |
திரு.வி.க |
தமிழ் உரைநடையின் தந்தை |
திரு.வி.க |
இறைவனின் பிள்ளை, தோடுடைய செவியன், காழி வள்ளல், தோணிபுரத்
தென்றல், திராவிட சிசு, ஆளுடைய பிள்ளை, இன்தமிழ்
ஏசுநாதா் |
திருஞானசம்பந்தர் |
ஆளுடையப்பிள்ளை |
திருஞானசம்பந்தர் |
தமிழ்ப் புலவர்களுள்
இளவரசர் |
திருத்தக்கத் தேவர் |
மருள்நீக்கியார், அப்பர், தாண்டக வேந்தர், வாகீசர், தேசம் உய்ய வந்தவர் |
திருநாவுக்கரசர் |
பரகாலன், கலியர், மங்கை வேந்தர், திருமங்கை மன்னர், நாலுகவிப் பெருமாள், வேதம் தமிழ் செய்த
மாறன், ஆலிநாடன் |
திருமங்கையாழ்வார் |
திராவிட ஆச்சாரியார் |
திருமழிசையாழ்வார் |
முதல் சித்தர் |
திருமூலர் |
முதற்பாவலர், பெருநாவலர், தெய்வப் புலவர், செந்நாப்போதார், நாயனார், மாதானுபங்கி, தேவர், நான்முகனார், பொய்யில் புலவர் |
திருவள்ளுவர் |
கவிமணி |
தேசிக விநாயகம் பிள்ளை |
மொழி ஞாயிறு, செந்தமிழ்ச் செல்வர், செந்தமிழ் ஞாயிறு, தமிழ்ப் பெருங்காவலர், என 174 சிறப்புப் பெயர்கள் |
தேவநேயப்பாவாணர் |
விப்பிரநாராயணன் |
தொண்டரடிப்
பொடியாழ்வார் |
தமிழ் வியாசர் |
நம்பியாண்டார் நம்பி |
சடகோபன், காரிமாறன், தமிழ்மாறன், பராங்குசன் |
நம்மாழ்வார் |
வானம்பாடிக் கவிஞர் |
நா. காமராசன் |
உச்சிமேற்கொள் புலவர், உரைகளில் உரை கண்டவர் |
நாச்சினார்க்கினியர் |
தேசியம் காத்தச்
செம்மல் |
பசும்பொன்
முத்துராமலிங்கத் தேவர் |
பொதுவுடைமைக் கவிஞர், மக்கள் கவிஞர் |
பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் |
தமிழ் நாடகத் தந்தை |
பம்மல் சம்மந்த
முதலியார் |
திராவிட சாஸ்திரி, தமிழ் நாடகப்
பேராசிரியர் |
பரிதிமாற்கலைஞர் |
தமிழ் தியாகப்பர் |
பாபாநாசம் சிவன் |
புரட்சி கவிஞர், இயற்கை கவிஞர், பாவேந்தர், புதுமைக் கவிஞர் |
பாரதிதாசன் |
விடுதலைக்கவி, மகாகவி, தேசியக்கவி, ஷெல்லிதாசன், மகாகவி, பாட்டுக்கொரு புலவன், சிந்துவுக்கு தந்தை, மக்கள் கவி, தமிழிலக்கியத்தின்
விடிவெள்ளி, நீடுதுயில்
நீக்கப்பாடி வந்த நிலா, எட்டயபுரத்துக் கவி, புதுக்கவிதையின் தந்தை |
பாரதியார் |
சிற்பி |
பாலசுப்ரமணியம் |
திவ்விய கவி |
பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் |
அழகிய மணவாளதாசர், திவ்வியக்கவி, தெய்வக்கவிஞர் |
பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் |
வெண்பாவிற் புகழேந்தி |
புகழேந்தி |
சிறுகதை மன்னன் |
புதுமைப்பித்தன் |
பட்டர் பிரான், வேயர்கோன், விஷ்ணுசித்தர் |
பெரியாழ்வார் |
பாவலர் ஏறு |
பெருஞ்சித்தரனார் |
பெருமழைப்புலவர் |
பொ.வே.சோமசுந்தரனார் |
சிலம்புச் செல்வர் |
ம.பொ.சிவஞானம் |
உலக உத்தமர் |
மகாத்மா காந்தியடிகள் |
தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை |
மறைமலை அடிகளார் |
திருவாதவூரார், அழுது அடியடைந்த
அன்பர் |
மாணிக்க வாசகர் |
கோணக் கோபாலன் |
மாதவய்யர் |
நீதியரசர் |
மாயூரம் வேதநாயகம் பிள்ளை |
மகாவித்வான் |
மீனாட்சி சுந்தரம்
பிள்ளை |
கலைஞர் |
மு. கருணாநிதி |
தமிழ்நாட்டு பெர்னாட்ஷா |
மு. வரதராசனார் |
பண்டிதமணி, மகோமகோபாத்தியாய |
மு.கதிரேசன்
செட்டியார் |
கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த
செம்மல் |
வ.உ.சிதம்பரனார் |
குலோத்துங்கன் |
வா.செ.குழந்தைசாமி |
தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வெர்த், கவிஞரேறு, பாவலர் மணி |
வாணிதாசன் |
உலகச் சிறுகதையின்
தந்தை |
வால்டர் ஸ்காட் |
பரிதிமாற் கலைஞர் |
வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரி |
திருக்குறளார் |
வி.முனுசாமி |
தென்னாட்டுத் தாகூர் |
வேங்கடரமணி |
சர்தார் |
வேதரத்தினம் பிள்ளை |
பிற்கால உரையாசிரியர்ச் சக்கரவர்த்தி |
வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார் |
கவிப்பேரரசு |
வைரமுத்து |
தமிழ்நாட்டின் மாப்பசான் |
ஜெயகாந்தன் |
புஷ்பா தங்கதுரை |
ஸ்ரீவேணுகோபாலன் |
அடைமொழியால் குறிக்கப்பெறும்
நூல்
அடைமொழி (Q) |
நூல் (ans) |
நெடுந்தொகை |
அகநானூறு |
தமிழர் வரலாற்றுக் களஞ்சியம், புறப்பாட்டு, புறம் |
புறநானூறு |
கற்றறிந்தோர் ஏத்தும் தொகை |
கலித்தொகை |
வஞ்சிநெடும்பாட்டு |
பட்டினப்பாலை |
நறுந்தொகை |
வெற்றிவேற்கை |
வாக்குண்டாம் |
மூதுரை |
பாணாறு |
பெரும்பாணாற்றுப்படை |
கூத்தராற்றுப்படை |
மலைபடுகடாம் |
பெருங்குறிஞ்சி |
குறிஞ்சிப்பாட்டு |
காப்பியபாட்டு |
|
நெஞ்சாற்றுப்படை |
முல்லைப்பாட்டு |
புலவராற்றுப்படை |
திருமுருகாற்றுப்படை |
தமிழ்மறை, தெய்வநூல், உத்திரவேதம், உலகப்பொதுமறை, வாயுறை வாழ்த்து, முப்பால், வள்ளுவப்பயன், பொய்யாமொழி |
திருக்குறள் |
முதுமொழி, மூதுரை, உலக வசனம், பழமொழி நானூறு |
பழமொழி |
இரட்டைக் காப்பியங்கள் |
சிலப்பதிகாரம், மணிமேகலை |
மூவேந்தர் காப்பியம்,
சிலம்பு, முதல் காப்பியம், குடிமக்கள் காப்பியம், ஒற்றுமைக்
காப்பியம், தேசிய காப்பியம், முத்தமிழ்க்
காப்பியம், சமுதாயக்
காப்பியம், உரையிடையிட்ட
பாட்டுடைசெய்யுள் |
சிலப்பதிகாரம் |
மணிமேகலை துறவு |
மணிமேகலை |
மணநூல் |
சீவசிந்தாமணி |
இயற்கைத்தவம் |
|
பெளத்தகாப்பியங்கள் |
மணிமேகலை, குண்டலகேசி |
நீலகேசி திரட்டு |
நீலகேசி |
அழகிய வாய்மொழி |
திருவாசம் |
தெய்வத்தன்னமை பொருந்திய வாய்மொழி |
|
தமிழர் வேதம் |
திருமந்திரம் |
தமிழ் மூவாயிரம் |
|
திருத்தொண்டர் புராணம் |
பெரியபுராணம் |
சேக்கிழார் புராணம் |
|
வழிநூல் |
|
அறுபத்து மூவர் புராணம் |
|
நேமிநாதம் |
சின்னூல் |
குட்டித் தொல்காப்பியம் |
இலக்கண விளக்கம் |
குழந்தை இலக்கியம்குறவஞ்சி |
பிள்ளைத்தமிழ் |
குறத்திப்பாட்டு |
குறவஞ்சி |
புகழ் பெற்ற நூல்
நூலாசிரியர்
எட்டுத்தொகை
நூல்கள்
1)
நற்றிணை 2) குறுந்தொகை 3) ஐங்குறுநூறு 4) பதிற்றுப்பத்து 5) பரிபாடல் 6) கலித்தொகை 7)
அகநானூறு 8) புறநானூறு
ஆறாம் வகுப்பு
1.
நிருமித்த – உருவாக்கிய
2.
விளைவு – விளைச்சல்
3.
சமூகம் – மக்கள் குழு
4.
அசதி – சோர்வு
5.
சுடர் – ஒளி
6.
ஆழிப்பெருக்கு – கடல்கோள்
7.
மேதினி – உலகம்
8.
ஊழி – நீண்டதொரு காலப்பகுதி
9.
உள்ளப்பூட்டு – அறிய
விரும்பாமை
10.
மெய் – உண்மை
11.
வழி – நெறி
12.
அகற்றும் – விலக்கும்
13.
மேன்மை – உயர்வு
14.
அறம் – நற்செயல்
15.
திங்கள் – நிலவு
16.
கொங்கு – மகரந்தம்
17.
அலர் – மலர்தல்
18.
திகிரி – ஆணைச்சக்கரம்
19.
பொற்கோட்டு –
பொன்மயமானசிகரத்தில்
20.
மேரு – இமயமலை
21.
நாமநீர் – அச்சம் தரும் கடல்
22.
அளி – கருணை
23.
காணி – நில அளவைக்
குறிக்கும் சொல்
24.
மாடங்கள் – மாளிகையின்
அடுக்குகள்
25.
சித்தம் – உள்ளம்.
26.
இயன்றவரை – முடிந்தவரை
27.
ஒருமித்து – ஒன்றுபட்டு
28.
ஔடதம் – மருந்து
29.
மாசற – குறைஇல்லாமல்
30.
சீர்தூக்கின் – ஒப்பிட்டு
ஆராய்ந்து
31.
தேசம் – நாடு
32.
தூற்றும் படி – இகழும் படி
33.
மூத்தோர் – பெரியோர்
34.
மேதைகள் – அறிஞர்கள்
35.
மாற்றார் – மற்றவர்
36.
நெறி – வழி
37.
வற்றாமல் – அழியாமல்
38.
நன்றியறிதல் – பிறர் செய்த
உதவியை மறவாமை
39.
ஒப்புரவு – பிறருக்கு உதவி
செய்தல்
40.
நட்டல் – நட்பு கொள்ளுதல்
41.
நந்தவனம் – பூஞ்சோலை
42.
பார் – உலகம்
43.
பண் – இசை
44.
இழைத்து – செய்து
45.
மல்லெடுத்த – வலிமைபெற்ற
46.
சமர் – போர்
47.
நல்கும் – தரும்
48.
கழனி – வயல்
49.
மறம் – வீரம்
50.
எக்களிப்பு – பெருமகிழ்ச்சி
51.
கலம் – கப்பல்
52.
ஆழி – கடல்
53.
கதிர்ச்சுடர் – கதிரவனின்
ஒளி
54.
மின்னல்வரி – மின்னல்
கோடுகள்
55.
அரிச்சுவடி – அகரவரிசை
எழுத்துகள்
56.
மெய்- உண்மை
57.
தேசம் – நாடு
58.
தண்டருள் – குளிர்ந்த கருணை
59.
கூர் – மிகுதி
60.
செம்மையருக்கு –
சான்றோருக்கு
61.
ஏவல் – தாெண்டு
62.
பராபரமே – மேலான பொருள்
63.
பணி – தொண்டு
64.
எய்தும் – கிடைக்கும்
65.
எல்லாரும் – எல்லா மக்களும்
66.
அல்லாமல் – அதைத்தவிர
67.
சுயம் – தனித்தன்மை
68.
உள்ளீடுகள் – உள்ளே இருப்பவை
69.
அஞ்சினார் – பயந்தனர்
70.
கருணை – இரக்கம்
71.
வீழும் – விழும்
72.
ஆகாது – முடியாது
73.
பார் – உலகம்
74.
நீள்நிலம் – பரந்த உலகம்
75.
முற்றும் – முழுவதும்
76.
மாரி – மழை
77.
கும்பி – வயிறு
78.
பூதலம் – பூமி
1.
ஊக்கிவிடும் –
ஊக்கப்படுத்தும்
2.
குறி – குறிக்கோள்
3.
விரதம் – நோன்பு
4.
பொழிகிற – தருகின்ற
5.
ஒப்புமை – இணை
6.
முகில் – மேகம்
7.
அற்புதம் – விந்தை
8.
உபகாரி – வள்ளல்
9.
ஈன்று – தந்து
10.
களித்திட – மகிழ்ந்திட
11.
கொம்பு – கிளை
12.
நச்சரவம் – விடமுள்ள பாம்பு
13.
அதிமதுரம் – மிகுந்த சுவை
14.
விடுதி – தங்கும் இடம்
15.
தீபம் – ஒளி
16.
பரவசம் – மகிழ்ச்சிப்
பெருக்கு
17.
துஷ்டி கேட்டல் – துக்கம்
விசாரித்தல்
18.
சிற்றில் – சிறு வீடு
19.
யாண்டு – எங்கே
20.
கல் அளை – கற்குகை
21.
ஈன்ற வயிறு – பெற்றெடுத்த
வயிறு
22.
சூரன் – வீரன்
23.
வாரணம் – யானை
24.
பொக்கிஷம் – செல்வம்
25.
பரி – குதிரை
26.
சாஸ்தி – மிகுதி
27.
சிங்காரம் – அழகு
28.
விஸ்தாரம் – பெரும்பரப்பு
29.
கமுகு – பாக்கு
30.
தேடல் – தூண்
31.
சென்னி – உச்சி
32.
ஞெகிழி – தீச்சுடர்
33.
உரவுநீர் – பெருநீர்பரப்பு
34.
அழுவம் – கடல்
35.
கரையும் – அழைக்கும்
36.
வேயா மாடம் – வைக்கோல்
போன்றவற்றால் வேயப்படாது, திண்மையாகச் சாந்து பூசப்பட்ட மாடம்
37.
உரு – அழகு
38.
வங்கம் – கப்பல்
39.
போழ – பிளக்க
40.
எல் – பகல்
41.
வங்கூழ் – காற்று
42.
நீகான் – நாவாய் ஓட்டுபவன்
43.
கோடு உயர் – கடை உயர்ந்த
44.
மாட ஒள்ளெரி – கலங்கரை
விளக்கம்
45.
எத்தனிக்கும் – முயலும்
46.
பரிதி – கதிரவன்
47.
வெற்பு – மலை
48.
அன்னதோர் – அப்படி ஒரு
49.
கழனி – வயல்
50.
கார்முகில் – மழைமேகம்
51.
நிகர – சமம்
52.
துயின்றிருந்தோர் –
உறங்கியிருந்தார்
53.
வைப்புழி – பொருள் சேமித்து
வைக்கும் இடம்
54.
கோட்பா – ஒருவரால்
கொள்ளப்படாது
55.
வாய்த்து ஈயில் – வாய்க்கும்
படி கொடுத்தலும்
56.
விச்சை – கல்வி
57.
பிரும்மாக்கள் –
படைப்பாளர்கள்
58.
வனப்பு – அழகு
59.
நெடி – நாற்றம்
60.
பூரிப்பு – மகிழ்ச்சி
61.
மழலை – குழந்தை
62.
மேனி – உடல்
63.
வண்கீரை – வளமான கீரை
64.
பரி – குதிரை
65.
முட்டப்போய் – முழுதாகச்
சென்று
66.
கால் – வாய்க்கால், குதிரையின் கால்
67.
மறித்தல் – தடுத்தல் (மண்ணை
வெட்டித் தடுத்துப் பாத்தி கட்டுதல்), எதிரிகளைத் தடுத்துத் தாக்குதல்
68.
மாரி – மழை
69.
வறந்திருந்த – வறண்டிருந்த
70.
புகவா – உணவாக
71.
மடமகள் – இளமகள்
72.
நல்கினாள் – கொடுத்தாள்
73.
முன்றில் – வீட்டின் முன்
இடம் (திண்ணை) இங்கு வீட்டைக் குறிக்கிறது
74.
குழி – நில அளவைப்பெயர்
75.
சீலை – புடவை
76.
சாண் – நீட்டல் அளவைப்பெயர்
77.
மடை – வயலுக்கு நீர் வரும்
வழி
78.
மணி – முற்றிய நெல்
79.
கழலுதல் – உதிர்தல்
80.
சும்மாடு – பாரம்
சுமப்பவர்கள் தலையில் வைத்துக் கொள்ளும் துணிச்சுருள்
81.
வையம் – உலகம்
82.
புகவா – உணவாக
83.
வெய்ய – வெப்பக்கதிர் வீசும்
84.
இடர் ஆழி – துன்பக்கடல்
85.
சொல் மாலை – பாமாலை
86.
தகளி – அகல்விளக்கு
87.
ஞானம் – அறிவு
88.
நாரணன – திருமால்
89.
ஆர்வம் – விருப்பம்
90.
கூடர் – ஒளி
91.
வித்து – விதை
92.
களை – வேண்டாத செடி
93.
ஈன – பெற
94.
பைங்கூழ் – பசுமையான பயிர்
95.
நிலன் – நிலம்
96.
வன்சொல் – கடுஞ்சொல்
97.
சாந்தம் – அமைதி
98.
தாரணி – உலகம்
99.
மகத்துவம் – சிறப்பு
100. தத்துவம் – உண்மை
101. பேதங்கள் – வேறுபாடுகள்
102. இரக்கம் – கருணை
1.
நிரந்தரம் – காலம்
முழுமையும்
2.
வண்மொழி – வளமிக்கமொழி
3.
வைப்பு – நிலப்பகுதி
4.
இசை – புகழ்
5.
சூழ்கலி – சூழ்ந்துள்ள
அறியாமை இருள்
6.
தொல்லை – பழமை, துன்பம்
7.
விசும்பு – வானம்
8.
மரபு – வழக்கம்
9.
மயக்கம் – கலவை
10.
திரிதல் – மாறுபடுதல்
11.
இருதிணை – உயர்திணை, அஃறிணை
12.
செய்யுள் – பாட்டு
13.
வழாஅமை – தவறாமை
14.
தழாஅல் – தழுவுதல்
(பயன்படுத்துதல்)
15.
ஐம்பால் – ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
16.
தூண்டுதல் – ஆர்வம்கொள்ளுதல்
17.
பயிலுதல் – படித்தல்
18.
ஈரம் – இரக்கம்
19.
நாணம் – வெட்கம்
20.
முழவு – இசைக்கருவி
21.
செஞ்சொல் – திருந்தியசொல்
22.
நன்செய் – நிறைந்தை
நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்
23.
புன்செய் – குறைந்தை நீரொல்
பயிர்கள் விளையும் நிலம்
24.
வள்ளைப்பாட்டு –
நெல்குத்தும் போது பாடப்படும் பாடல்
25.
முகில் – மேகம்
26.
வின்னம் – சேதம்
27.
கெடிகலங்கி – மிக வருந்தி
28.
வாகு – சரியாக
29.
சம்பிரமுடன் – முறையாக
30.
காலன் – எமன்
31.
சேகரம் – கூட்டம்
32.
மெத்த – மிகவும்
33.
காங்கேய நாடு –
கொங்குமண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்று
34.
தீர்வன – நீங்குபவை
35.
திறத்தன – தன்மையுடையன
36.
உவசமம் – அடங்கி இருத்தல்
37.
கூற்றவா – பிரிவுகளாக
38.
நிழல்இகழும் – ஒளிபொருந்திய
39.
பூணாய் – அணிகலன்களை
அணிந்தவளே
40.
பேர்தற்கு – அகற்றுவதற்கு
41.
பிணி – துன்பம்
42.
திரியோகமருந்து – மூன்று
யோகமருந்து
43.
ஓர்தல் – நல்லறிவு
44.
தெளிவு – நற்காட்சி
45.
பிறவார் – பிறக்கமாட்டார்
46.
நித்தம் நித்தம் -நாள்தோறும்
47.
வையம் – உலகம்
48.
மட்டு – அ்ளவு
49.
பேணுவயல் -பாதுகாத்தல்
50.
சுண்ட -நன்கு
51.
திட்டுமுட்டு -தடுமாற்றம்
52.
கலன் – அணிகலன்
53.
முற்றை – ஒளிர
54.
வேண்டாவாம் – தேவையில்லை
55.
தடம் – அடையாளம்
56.
அகம்பாவம் – செருக்கு
57.
புத்தி – அறிவு
58.
பாதை – அறிவு
59.
உள்ளம் – மனம்
60.
லாபம் – பலன்
61.
எண்ணி – நினை
62.
பண் – இசை
63.
கனகச்சுனை – பொன் வண்ண
நீர்நிலை
64.
மதவேழங்கள் – மதயானைகள்
65.
முரலும் – முழங்கும்
66.
பழவெய் – முதிர்ந்த மூங்கில்
67.
அலந்தவர் – வறியவர்
68.
செறாஅமை – வெறுக்காமை
69.
கிளை – உறவினர்
70.
பேதையார் – அறிவற்றவர்
71.
நோன்றல் – பொறுத்தல்
72.
மறாஅமை – மறவாமை
73.
போற்றார் – பகைவர்
74.
பொறை – பொறுமை
75.
வாரி – வருவாய்
76.
எஞ்சாமை – குறைவின்றி
77.
முட்டாது – தட்டுப்பாடின்றி
78.
ஒட்டாது – வாட்டம்இன்ற
79.
வைகுக – தங்குக
80.
ஓதை – ஓசை
81.
வெரீஇ – அஞ்சி
82.
யாணர் – புதுவருவா
83.
மறலி – காலன்
84.
வழிவர் – நழுவி ஓடுவர்
85.
கரி – யானை
86.
பிலம் – மலைக்குகை
87.
தூறு – புதர்
88.
மண்டுதல் – நெருங்குதல்
89.
அருவர் – தமிழர்
90.
இறைஞ்சினர் – வணங்கினர்
91.
உடன்றன – சினந்து எழுந்தன
92.
முழை – மலைக்குகை
93.
சீவன் – உயிர்
94.
வையம் – உலகம்
95.
சத்தியம் – உண்மை
96.
சபதம் – சூளுரை
97.
ஆனந்த தரிசனம் – மகிழ்வான
காட்சி
98.
மோகித்து – விரும்பு
99.
நமன் – எமன்
100. நாணாமே – கூசாமல்
101. சித்தம் – உள்ளம்
102. உய்ம்மின் – ஈடேறுங்கள்
103. நம்பர் – அடியார்
104. ஈயில் – வழங்கினால்
105. படமாடக்கோயில் – படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயில்
106. பகராய் – தருவாய்
107. பராபரம் – மேலான பொருள்
108. ஆனந்த வெள்ளம் – இன்பப்பெருக்கு
109. அறுத்தவருக்கு – நீக்கியவர்க்கு
110. நிறை – மேன்மை
111. அழுக்காறு – பொறாமை
112. பொறை – பொறுமை
113. மதம் – கொள்கை
114. பொச்சாப்பு – சோர்வு
115. இகல் – பகை
116. மையல் – விருப்பம்
117. மன்னும் – நிலைபெற்ற
118. ஓர்ப்பு – ஆராய்ந்து தெளிதல்
1.
குறம், பள்ளு – சிற்றிலக்கிய வகைகள்
2.
மூன்றினம் – துறை, தாழிசை, விருத்தம்
3.
சிந்தாமணி – சீவகசிந்தாமணி, சிதறாமணி
4.
சிந்து – ஒருவகை இசைப்பாடல்
5.
முக்குணம் – மூன்று குணங்கள்
(சமத்துவம் – அமைதி, மேன்மை. இராசசம் – போர்,
6.
தீவிரமான செயல். தாமசம் –
சோம்பல், தாழ்மை)
7.
பத்துக்குணம் – செறிவு, சமநிலை முதிய பத்துக்குண
அணிகள்
8.
வண்ணங்கள் ஐந்து – வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை
9.
வண்ணம் நூறு – குறில், அகவல், தூங்கிசை வண்ணம் முதலாக இடை
மெல்லிசை வண்ணம் ஈறாக நூறு.
10.
ஊனரசம் – குறையுடைய சுவை
11.
நவரசம் – வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், கோபம், நகை, சமநிலை
12.
வனப்பு – அழகு, அம்மை, தொன்மை, தோல், விருந்து, இயைபு, பலன், இழைபு
13.
குந்த – உட்கார
14.
கந்தம் – மணம்
15.
மிசை – மேல்
16.
விசனம் – கவலை
17.
எழில் – அழகு
18.
துயர் – துன்பம்
19.
மா – வண்டு
20.
மது – தேன்
21.
வாவி – பொய்கை
22.
வளர் முதல் – நெற்பயிர்
23.
தரளம் – முத்து
24.
பணிலம் – சங்கு
25.
வரம்பு – வரப்பு
26.
கழை – கரும்பு
27.
கா – சோலை
28.
குழை – சிறு கிளை
29.
அரும்பு – மலர் மொட்டு
30.
மாடு – பக்கம்
31.
நெருங்கு வளை –
நெருங்குகின்ற சங்குகள்
32.
கோடு – குளக்கரை
33.
ஆடும் – நீராடும்
34.
மேதி – எருமை
35.
துதைந்து எழும் – கலக்கி
எழும்
36.
கன்னி வாளை – இளமையான
வாளைமீன்.
37.
சூடு – நெல் அரிக்கட்டு
38.
சுரிவளை – சங்கு
39.
வேரி – தேன்
40.
பகடு – எருமைக்கடா
41.
பாண்டில் – வட்டம்
42.
சிமயம் – மலையுச்சி
43.
நாளிகேரம் – தென்னை
44.
நரந்தம் – நாரத்தை
45.
கோளி – அரசமரம்
46.
சாலம் – ஆச்சா மரம்
47.
தமாலம் – பச்சிலை மரங்கள்
48.
இரும்போந்து – பருத்த
பனைமரம் ;
49.
சந்து – சந்தன மரம்
50.
நாகம் – நாகமரம்
51.
காஞ்சி – ஆற்றுப்பூவரசு
52.
யாக்கை – உடம்பு
53.
புணரியோர் – தந்தவர்
54.
புன்புலம் – புல்லிய நிலம்
55.
தாட்கு – முயற்சி
56.
சமயக் கணக்கர் – சமயத்
தத்துவவாதிகள்
57.
பாடைமாக்கள் – பல மொழிபேசும்
மக்கள், குழீஇஒன்றுகூடி
58.
தோம் – குற்றம்
59.
கோட்டி – மன்றம்
60.
பொலம் – பொன்
61.
வேதிகை – திண்ணை
62.
தூணம் – தூண்
63.
தாமம் – மாலை
64.
கதலிகைக் கொடி -சிறு சிறு
கொடியாகப் பல கொடிகள் கட்டியது,
65.
காழூன்று கொடி – கொம்புகளில்
கட்டும் கொடி
66.
விலோதம் – துணியாலான கொடி
67.
வசி – மழை
68.
செற்றம் – சினம்
69.
கலாம் – போர்
70.
துருத்தி – ஆற்றிடைக்குறை
(ஆற்றின் நடுவே இருக்கும் மணல்திட்டு)
71.
களர்நிலம் – உவர்நிலம்
72.
நவிலல் – சொல்
73.
வையம் – உலகம்
74.
மாக்கடல் – பெரிய கடல்
75.
இயற்றுக – செய்க
76.
மின்னாளை – மின்னலைப்
போன்றவளை
77.
மின்னாள் – ஒளிரமாட்டாள்
78.
தணல் – நெருப்பு
79.
தாழி – சமைக்கும் கலன்
80.
அணித்து – அருகில்
81.
தவிர்க்கஒணா – தவிர்க்க
இயலாத
82.
யாண்டும் – எப்பொழுதும்
83.
மூவாது – முதுமை அடையாமல்
84.
நாறுவ – முளைப்ப
85.
தாவா – கெடாதிருத்தல்
86.
மைவனம் – மலைநெல்
87.
முருகியம் – குறிஞ்சிப்பறை
88.
பூஞ்சினை-பூக்களை
89.
உடைய கிளை
90.
சிறை – இறகு
91.
சாந்தம் – சந்தனம்
92.
பூவை- நாகணவாய்ப் பறவை
93.
பொலம்- அழகு
94.
கடறு – காடு
95.
முக்குழல்-கொன்றை, ஆம்பல், மூங்கில் ஆகியவற்றால் ஆன
குழல்கள்;
96.
பொலி – தானியக்குவியல்
97.
உழை – ஒரு வகை மான்.
98.
கல் -மலை
99.
முருகு – தேன், மணம், அழகு
100. மல்லல்- வளம்
101. செறு- வயல்
102. கரிக்குருத்து – யானைத்தந்தம்
103. போர்- வைக்கோற்போர்
104. புரைதப- குற்றமின்றி
105. தும்பி- ஒருவகை வண்டு
106. துவரை-பவளம்
107. மரை – தாமரை மலர்
108. விசும்பு- வானம்
109. மதியம்-நிலவு
110. தீபம் – விளக்கு
111. சதிர் – நடனம்
112. தாமம் – மாலை
113. தெங்கு – தேங்காய்
114. இசை – புகழ்
115. வருக்கை – பலாப்பழம்
116. நெற்றி – உச்சி
117. மால்வரை – பெரியமலை
118. மடுத்து – பாய்ந்து
119. கொழுநிதி – திரண்ட நிதி
120. மருப்பு – கொம்பு
121. வெறி – மணம்
122. கழனி – வயல்
123. செறி – சிறந்த
124. இரிய – ஓட
125. அடிசில் – சோறு
126. மடிவு – சோம்பல்
127. கொடியன்னார் – மகளிர்
128. நற்றவம் – பெருந்தவம்
129. வட்டம் – எல்லை
130. வெற்றம் – வெற்றி
131. அள்ளல் – சேறு
132. பழனம் – நீர் மிக்க வயல்
133. வெரீஇ – அஞ்சி
134. பார்பபு – குஞ்சு
135. “நாவலோ” – நாள் வாழ்க என்பது
போன்ற வாழ்த்து
136. இசைத்தால் – ஆரவாரத்தோடு கூவுதல்
137. நந்து – சங்கு
138. கமுகு – பாக்கு
139. முத்தம் – முத்து
140. சாெல்லும் பாெருளும்
141. விண் – வானம்
142. ரவி – கதிரவன்
143. கமுகு – பாக்கு
144. பாண்டம் பாண்டமாக – அடுக்குத் தொடர்
145. வாயிலும் சன்னலும் – எண்ணும்மை
146. அறம் – நற்செயல்
147. வெகுளி – சினம்
148. ஞானம் – அறிவு
149. விரதம் – மேற்கொண்ட நன்னெறி
150. நசை – விருப்பம்
151. நல்கல் – வழங்குதல்
152. பிடி – பெண்யானை
153. வேழம் – ஆண்யானை
154. யா – ஒரு வகை மரம், பாலை நிலத்தில் வளர்வது
155. பொளிக்கும் – உரிக்கும்
156. ஆறு – வழி
பத்தாம் வகுப்பு
1.
துய்ப்பது – கற்பது, தருதல்
2.
மேவலால் – பொருந்துதல், பெறுதல்
3.
மயலுறுத்து – மயங்கச்செய்
4.
ப்ராண – ரஸம் – உயிர்வளி
5.
லயத்துடன் – சீராக
6.
நனந்தலை உலகம் – அகன்ற உலகம்
7.
நேமி – வலம்புரிச்சங்கு
8.
காேடு – மலை
9.
காெடுஞ்செலவு – விரைவாகச்
செல்லுதல்
10.
நறுவீ – நறுமணமுடைய மலர்கள்
11.
தூஉய் – தூவி
12.
விரிச்சி – நற்சாெல்
13.
சுவல் – தாேள்
14.
அருகுறை – அருகில்
15.
முகமன் – ஒருவரை நலம்
வினவிக் கூறும் விருந்தோம்பல் சொற்கள்
16.
அசைஇ – இளைப்பாறி
17.
அல்கி – தங்கி
18.
கடும்பு – சுற்றம்
19.
நரலும் – ஒலிக்கும்
20.
ஆரி – அருமை
21.
படுகர் – பள்ளம்
22.
வயிரியம் – கூத்தர்
23.
வேவை – வெந்தது
24.
இறடி – திசை
25.
பொம்மல் – சோறு
26.
சுடினும் – சுட்டாலும்
27.
மாளாத – தீராத
28.
மாயம் – விளையாட்டு
29.
விசும்பு – வானம்
30.
ஊழி – யுகம்
31.
ஊழ – முறை
32.
தண்பெயல் – குளிர்ந்த மழை
33.
ஆர்தருபு – வெள்ளததில்
மூழ்கிக் கிடந்த
34.
பீடு – சிறப்பு
35.
ஈண்டி – செறிந்து திரண்டு
36.
கேள்வியினான் – நூல் வல்லான்
37.
கேண்மையினான் – நட்பினன்
38.
தார் – மாலை
39.
முடி – தலை
40.
முனிவு – சினம்
41.
அகத்து உவகை – மனமகிழ்ச்சி
42.
தமர் – உறவினர்
43.
நீபவனம் – கடம்பவனம்
44.
மீனவன் – பாண்டிய மன்னன்
45.
கவரி – சாமரை ( கவரிமாவின்
முடியில் செய்த விசிறியாகிய அரசச் சின்னம்)
46.
நுவன்ற – சொல்லிய
47.
என்னா – அசைச் சொல்
48.
பண்டி – வயிறு
49.
அசும்பிய – ஒளிவீசுகிற
50.
முச்சி – தலையுச்சிக்
காெண்டை
51.
சுண்ணம் – நறுமணப்பொடி
52.
காருகர் – நெய்பவர்
(சாலியர்)
53.
தூசு – பட்டு
54.
துகிர் – பவளம்
55.
வெறுக்கை – செல்வம்
56.
நொடை – விலை
57.
பாசவர் – வெற்றிலை விற்போர்
58.
ஓசுநர் – எண்ணெய் விற்போர்
59.
மண்ணுள் வினைஞர் – ஓவியர்
60.
மண்ணீட்டாளர் – சிற்பி
61.
கிழி – துணி
62.
சேக்கை – படுக்கை
63.
யாக்கை – உடல்
64.
பிணித்து – கட்டி
65.
வாய்ந்த – பயனுள்ள
66.
இளங்கூழ் – இளம்பயிர்
67.
தயங்கி – அசைந்து
68.
காய்ந்தேன் – வருந்தினேன்
69.
கொம்பு – கிளை
70.
புழை – துளை
71.
கான் – காடு
72.
தேம்ப – வாட
73.
அசும்பு – நிலம்
74.
உய்முறை – வாழும் வழி
75.
ஓர்ந்து – நினைத்து
76.
கடிந்து – விலக்கி
77.
உவமணி – மணமலர்
78.
படலை – மாலை
79.
துணர் – மலர்கள்
1.
பால் – வகை
2.
இயல்பு – பண்பு
3.
மாடம் – மாளிகை
4.
அமை – மூங்கில்
5.
புரளும் – ததும்பும்
6.
கரைகின்ற – கத்துகின்ற, ஒலிக்கின்ற
7.
சுழித்தோடும் –
சுழன்றோடும்
8.
மார்பு சுரந்த – வளமான
9.
மறுகியது – கலங்கியது
10.
ஏதலி – ஏழை, அகதி
11.
வட ஆரிநாடு – திருமலை
12.
தென் ஆரிநாடு – குற்றாலம்
13.
ஆரளி – மொய்க்கின்ற வண்டு
14.
இந்துளம் – இந்தளம் எனும்
ஒரு வகைப் பண்
15.
இடங்கணி – சங்கிலி
16.
உளம் – உள்ளான் என்ற பறவை
17.
சலச வாவி – தாமரைத் தடாகம்
18.
தரளம் – முத்து
19.
கா – சோலை
20.
முகில்தொகை – மேகக்கூட்டம்
21.
மஞ்ஞை – மயில்
22.
கொண்டல் – கார்கால மேகம்
23.
மண்டலம் – உலகம்
24.
வாவித் தரங்கம் – குளத்தில்
எழும் அலை
25.
அளி உலாம் – வண்டு
மொய்க்கின்ற
26.
காயா, கொன்றை, நெய்தல், முல்லை, தளவம், பிடவம் – மழைக்கால மலர்கள்
27.
போது – மொட்டு
28.
அலர்ந்து – மலர்ந்து
29.
கவினி – அழகுற
30.
ஜகம் – உலகம்
31.
புயம் – தோள்
32.
வரை – மலை
33.
வன்னம் – அழகு
34.
கழுகாசல் – கழுகு மலை
35.
த்வஜஸ்தம்பம் – கொடி மரம்
36.
சலராசி – கடலில் வாழும் மீன்
முதலிய உயிர்கள்
37.
விலாசம் – அழகு
38.
நூபுரம் – சிலம்பு
39.
மாசுணம் – பாம்பு
40.
இஞ்சி – மதில்
41.
புயல் – மேகம்
42.
கறங்கும் – சுழலும்
43.
சிதவல் – தலைப்பாகை
44.
தண்டு – ஊன்றுகோல்
45.
தமியர் – தனித்தவர்
46.
முனிதல் – வெறுத்தல்
47.
துஞ்சல் – சோம்பல்
48.
அயர்வு – சோர்வு
49.
மாட்சி – பெருமை
50.
நோன்மை – வலிமை
51.
தாள் – முயற்சி
52.
பிரசவம் – தேன்
53.
புடைத்தல் – கோல்கொண்டு
ஓச்சுதல்
54.
கொழுநன் குடி – கணவனுடைய
வீடு
55.
வறன் – வறுமை
56.
கொழுஞ்சோறு –
பெருஞ்செல்வம்
57.
உள்ளாள் – நினையாள்
58.
மதுகை – பெருமிதம்
59.
இக்கும் – நீக்கும்
60.
இழுக்கு – குற்றம்
61.
வினாயவை – கேட்டவை
62.
வரை – மலை
63.
கம்பலை – பேரொலி
64.
புடவி – உலகம்
65.
எய்துதல் – பெறுதல்
66.
வாரணம் – யானை
67.
பூரணம் – நிறைவு
68.
நல்கல் – அளித்தல்
69.
வதுவை – திருமணம்
70.
கோன் – அரசன்
71.
மறுவிலா – குற்றம் இல்லாத
72.
துன்ன – நெருங்கிய
73.
பொறிகள் – ஐம்புலன்
74.
தெண்டிரை – தெள்ளிய நீரலை
75.
விண்டு – திறந்து
76.
மண்டிய – நிறைந்த
77.
காய்ந்த – சிறந்த
78.
தீன் – மார்க்கம்
79.
கொண்மூ – மேகம்
80.
சமம் – போர்
81.
விசும்பு – வானம்
82.
அரவம் – ஆரவாரம்
83.
ஆயம் – சுற்றம்
84.
தழலை, தட்டை – பறவைகள் ஓட்டும்
கருவிகள்
85.
இரை – உணவு
86.
படுகை – படுக்கை
87.
சந்து, பொந்து – துளை
88.
தமக்கை – உடன் பிறந்தவள்
89.
அயர்ந்து – சோர்ந்த
90.
கொத்து – பூமாலை
91.
குழல் – கூந்தல்
92.
நாங்கூழ் – மண்புழு
93.
கோலத்து நாட்டார் – கலிங்க
நாட்டார்
94.
வரிசை – சன்மானம்
95.
குண்டலப்பூச்சி – வளைந்து
சுருண்டு கொள்ளும்
96.
சிலம்பு, தண்டை, பாடகம், கெச்சம், கலாழி – பெண்கள் அணியும்
அணிகலண்கள்
97.
காயில் – வெகுண்டல்
98.
அந்தம் – முடிவு
99.
அயன் – பிரமன்
100. மால் – விஷ்ணு
101. ஆலாலம் – நஞ்சு
102. ஒதுக – சொல்க
103. முழக்கம் – ஓங்கி உரைத்தல்
104. கனிகள் – மாணிக்கம்
105. படிக்க – பளபளப்பான கல்
106. மீட்சி – விடுதலை
107. நவை – குற்றம்
108. படி – உலகம்
109. பதி – நாடு
110. பிழைப்பு – வாழ்தல்
111. நிரையம் – நரகம்
112. ஒரீஇய – நோய் நீங்கிய
113. புரையோர் – சான்றோர்
114. யாணர் – புது வருவாய்
115. மருண்டெனன் – வியப்படைந்தேன்
116. மன்னுயிர் – நிலைபெற்றுள்ள உயிர்த்தொகுதி
117. கடிநகர் – காவல் உடைய நகரம்
118. காண்டி – காண்க
119. பூம்பராகம் – பூவில் உள்ள மகரந்தம்
120. ஆக இலா – குற்றம் இலாத
121. தோட்டி – துறட்டி
122. அயம் – ஆடு, குதிரை
123. புக்கவிட்டு – போகவிட்டு
124. சீரியதூளி – நுண்ணிய மணல்
125. சிறுகால் – வாய்க்கால்
126. பரல் – கல்
127. முந்நீர் மடு – கடலாகிய நீர்நிலை
128. அண்டயோனி – ஞாயிறு
129. சாடு – பாய்
130. ஈட்டியது – சேகரித்தது
131. எழிலி – மேகம்
132. நாங்கூழ் புழு – மண்புழு
133. பாடு – உழைப்பு
134. ஓவா – ஓயாத
135. வேதித்து – மாற்றி
1.
புதுப்பெயல் – புதுமழை
2.
ஆர்கலி – வெள்ளம்
3.
கொடுங்கோல் – வளைந்த கோல்
4.
புலம்பு – தனிமை
5.
கண்ணி – தலையில் சூடும் மாலை
6.
கவுள் – கன்னம்
7.
மா – விலங்கு
8.
அமலன் – இராமன்
9.
இளவல் – தம்பி
10.
நளிர்கடல் – குளிர்ந்தகடல்
11.
துன்பு – துன்பம்
12.
உன்னேல் – எண்ணாதே
13.
அனகன் – இராமன்
14.
உவா – அமாவாசை
15.
உடுபதி – சந்திரன்
16.
செற்றார் – பகைவர்
17.
கிளை – உறவினர்
18.
மலிவிழா – விழாக்கள் நிறைந்த
19.
மடநல்லார் – இளமை பாெருந்திய
பெண்கள்
20.
கலிவிழா – எழுச்சி தரும்
விழா
21.
பலிவிழா – திசைதோறும்
பூசையிடும் உத்திரவிழா
22.
ஒலிவிழா – ஆரவார விழா
23.
வேட்டம் – மீன் பிடித்தல்
24.
கழி – உப்பங்கழி
25.
செறு – வயல்
26.
கொள்ளை – விலை
27.
என்றூழ் – சூரியனின் வெப்பம்
28.
விடர – மலைவெடிப்பு
29.
கதழ் – விரைவு
30.
உமணர் – உப்பு வணிகர்
31.
எல்வளை– ஒளிரும் வளையல்
32.
தெளிர்ப்ப – ஒலிப்ப
33.
விளிஅறி – குரல்கேட்ட
34.
ஞமலி – நாய்
35.
வெரீஇய– அஞ்சிய
36.
மதர்கயல்– அழகிய மீன்
37.
புனவன் – கானவன்
38.
அள்ளல் – சேறு
39.
பகடு– எருது
40.
வாயிலோயே – வாயில் காப்போனே
41.
வள்ளியோர் – வள்ளல்கள்
42.
வயங்குமொழி – விளங்கும்
சொற்கள்
43.
வித்தி – விதைத்து
44.
உள்ளியது – நினைத்தது
45.
உரன் – வலிமை
46.
வறுந்தலை – வெறுமையான இடம்
47.
காவினெம் – கட்டிக்கொள்ளுதல்
48.
கலன் – யாழ்
49.
கலப்பை – கருவிகளை வைக்கும்
பை
50.
மழு – கோடரி.
51.
புரிகுழல் – சுருண்ட கூந்தல்
52.
கழை – மூங்கில்
53.
கண் – கணு
54.
விரல் – ஆடவர் கைப்
பெருவிரல்
55.
உத்தரப் பலகை – மேல் இடும்
பலகை
56.
பூதர் – ஐம்பூதங்கள்
57.
ஓவிய விதானம் – ஓவியம்
தீட்டப்பட்ட பந்தல்
58.
நித்திலம் – முத்து
59.
விருந்து – புதுமை
60.
மண்ணிய – கழுவிய
61.
நாவலம்பொலம் – சாம்பூநதம்
என்னும் உயர்ந்த வகைப் பொன்
62.
தலைக்கோல் – நாடகக் கணிகையர்
பெறும் பட்டம்
63.
ஓடை – முக படாம்
64.
அரசு உவா – பட்டத்து யானை
65.
பரசினர் – வாழ்த்தினர்
66.
பல்இயம் – இன்னிசைக் கருவி
67.
குயிலுவ மாக்கள் – இசைக்
கருவிகள் வாசிப்போர்
68.
தோரிய மகளிர் – ஆடலில்
தேர்ந்த பெண்கள்
69.
வாரம் – தெய்வப்பாடல்
70.
ஆமந்திரிகை – இடக்கை
வாத்தியம்
71.
இலைப்பூங்கோதை – அரசன்
அணிந்துள்ள பச்சை மாலை
72.
கழஞ்சு – ஒரு வகை எடை அளவு
73.
நகை – சிரிப்பு
74.
இளிவரல் – சிறுமை
75.
மருட்கை – வியப்பு
76.
பெருமிதம் – பெருமை
77.
வெகுளி – சினம்
78.
உவகை – மகிழச்சி
79.
காய்நெல் – விளைந்த நெல்
80.
மா – ஒருநில அளவு (ஓர்
ஏக்கரில் மூன்றில் ஒரு பங்கு).
81.
செறு – வயல்
82.
தமித்து – தனித்து
83.
புக்கு – புகுந்து
84.
யாத்து – சேர்த்து
85.
நந்தும் – தழைக்கும்
86.
வரிசை – முறைமை
87.
கல் – ஒலிக்குறிப்பு
88.
பரிவு – அன்பு
89.
தப – கெட
90.
பிண்டம் – வரி
91.
நச்சின் – விரும்பினால்
92.
உன்னலிர் – எண்ணாதீர்கள்
93.
பிணித்தமை – கட்டியமை
94.
நீச – இழிந்த
95.
நேசம் – அன்பு
96.
வல்லியதை – உறுதியை
97.
ஓர்மின் – ஆராய்ந்து
பாருங்கள்
98.
பாதகர் – கொடியவர்
99.
குழுமி – ஒன்றுகூடி
100. பழிப்புரை – இகழ்ச்சியுரை
101. ஏதமில் – குற்றமில்லாத
102. ஊன்ற – அழுந்த
103. மாற்றம் – சொல்
104. நுவன்றிலர் – கூறவில்லை
105. ஆக்கினை – தண்டனை
106. நிண்ணயம் – உறுதி
107. கூவல் – கிணறு
108. ஒண்ணுமோ – முடியுமோ
109. உததி – கடல்
110. ஒடுக்க – அடக்க.
111. களைந்து – கழற்றி
112. திகழ – விளங்க
113. சேர்த்தினர் – உடுத்தினர்
114. சிரத்து – தலையில்
115. பெய்தனர் – வைத்து அழுத்தினர்
116. கைதுறும் – கையில் கொடுத்திருந்த
117. கண்டகர் – கொடியவர்கள்
118. வெய்துற – வலிமை மிக
119. வைதனர் – திட்டினர்
120. மறங்கொள் – முரட்டுத் தன்மையுள்ளவர்
121. மேதினி – உலகம்
122. கீண்டு – பிளந்து
123. வாரிதி – கடல்
124. சுவறாதது – வற்றாதது
125. வல்லானை – வலிமை வாய்ந்தவரை
126. நிந்தை – பழி
127. பொல்லாங்கு – கெடுதல், தீமை.
128. வளமலை – வளமான மலை (மலைநாடு) இன்று பழநி மலை என்று அழைக்கப்படுகிறது;
129. கவாஅன் – மலைப்பக்கம்
130. கலிங்கம் – ஆடை
131. சுரும்பு – வண்டு
132. நாகம் – சுரபுன்னை, நாகப்பாம்பு
133. பிறங்கு – விளங்கும்
134. பறம்பு – பறம்பு மலை
135. கறங்கு – ஒலிக்கும்
136. வாலுளை – வெண்மையான தலையாட்டம்
137. மருள – வியக்க
138. நிழல் – ஒளி வீசும்
139. நீலம் – நீலமணி
140. ஆலமர் செல்வன் – சிவபெருமான் (இறைவன்)
141. அமர்ந்தனன் – விரும்பினன்
142. சாவம் – வில்
143. மால்வரை – பெரியமலை (கரிய மலையுமாம்)
144. கரவாது – மறைக்காது
145. துஞ்சு – தங்கு
146. நளிசினை – செறிந்த கிளை (பெரிய கிளை)
147. போது – மலர்
148. கஞலிய – நெருங்கிய
149. நாகு – இளமை
150. குறும்பொறை – சிறு குன்று
151. கோடியர் – கூத்தர்
152. மலைதல் – போரிடல்
153. உறழ் – செறிவு
154. நுகம் – பாரம்
பிறமொழிச் சொற்களை நீக்குதல்
பிறமொழிச் சொற்கள் |
நேரிய தமிழ்ச்சொல் |
அகதிகள் |
நிலையற்றவர்கள் |
அங்கத்தினர் |
உறுப்பினர் |
அபிஷேகம் |
திருமுழுக்கு |
அனுபவம் |
பட்டறிவு |
அவசரம் |
விரைவு |
அப்பட்டம் |
கலப்பில்லாது |
ஆக்கிரமிப்பு |
வலிந்து கவர்தல் |
ஆஸ்தி |
சொத்து, செல்வம் |
சமுத்திரம் |
கடல் |
இலட்சணம் |
அழகு |
அமல் (அமுல்) |
செயல்படுத்துகிறது |
அங்கத்தினர் |
உறுப்பினர் |
உத்தியோகம், யோகஸ்தர் |
அலுவல், அலுவலர் |
உற்சவம் |
விழா |
ஏராளம் |
மிகுதி |
தாக்கல் செய்யப்பட்டது |
ஒப்படைக்கப்பட்டது |
காரியம் |
செயல் |
கிராமம் |
சிற்றூர் |
கெட்டியாக |
உறுதியாக |
கும்பாபிஷேகம் |
குடமுழுக்கு |
கேப்பை |
கேழ்வரகு |
கோஷ்டி |
குழாம் |
குமாஸ்தா |
எழுத்தர் |
சக்தி |
ஆற்றல் |
சந்தேகம் |
ஐயம் |
சம்பிரதாயம் |
மரபு, தொன்மரபு |
சாதாரணம் |
எளிமை |
சொந்தம் |
உரிமை |
தற்காலிக வேலை |
நிலையற்ற வேலை |
தாறுமாறு |
ஒழுங்கற்று |
தெம்பு |
ஊக்கம் |
தேதி |
நாள் |
தொந்தரவு |
தொல்லை |
நிரந்தரமானது |
நிலையானது |
பஜனை |
கூட்டுப்பாடல் |
பஜார் |
கடைத்தெரு |
பந்தயம் |
பயணம் |
மத்தியானம் |
நண்பகல் |
மாமிசம் |
இறைச்சி |
மிருகம் |
விலங்கு |
ரகசியம் |
மறைபொருள் |
ருசி |
சுவை |
லோபி |
கருமி |
ரசிகர் |
கலைஞர் |
ரத்து |
நீக்கு, நீக்கம் |
வாகனம் |
ஊர்தி |
வாடிக்கை |
வழக்கம் |
வாலிபர் |
இளைஞர் |
விபத்து |
துயரநிகழ்ச்சி |
விஷயம் |
பொருள், செய்தி |
வேகம் |
விரைவு |
வேடிக்கை |
காட்சி |
ஜனங்கள் |
மக்கள் |
ஜாக்கிரதையாக |
விருப்பாக, விழிப்பாக |
மாமூல் |
வழக்கம் |
பைசல் செய்யப்பட்டது |
தீர்க்கப்பட்டது |
நாஷ்டா |
சிற்றுண்டி |
பண்டிகை |
திருவிழா |
கடுதாசி |
கடிதம் |
ஆஸ்பத்திரி |
மருத்துவமனை |
கேணி |
கிணறு |
அச்சன் |
தந்தை |
ஆய் |
தாய் |
பாழி |
சிறுகுளம் |
வேடிக்கை |
காட்சி |
அசல் |
மூலம் |
ஆசாமி |
ஆள் |
இலாகா |
துறை |
சந்தா |
உறுப்பினர் கட்டணம் |
மகசூல் |
விளைவு |
ஜமக்காளம் |
விரிப்பு |
தபால் |
அஞ்சல் |
தாயார் |
ஏற்பாடு |
நபர் |
ஆள் |
புகார் |
முறையீடு |
வக்கில் |
வழக்குரைஞர் |
வியாபாரம் |
வாணிகம் |
சாவி |
திறவுகோல் |
பட்டாளம் |
படைப்பிரிவு |
அர்ச்சனை |
மலரிட்டு வழிபடுதல் |
சுதந்திரம் |
விடுதலை |
யாத்திரை |
செலவு (பயணம்) |
வாகனம் |
ஊர்தி |
சலம் |
நீர் |
வருடம் |
ஆண்டு |
பட்சி |
பறவை |
சங்கதி |
செய்தி |
வாசனை |
மணம் |
அரி |
திருமால் |
விவாகம் |
திருமணம் |
பாரங்கள் |
விண்ணப்பங்கள் |
வாஸ்து |
பொருட்கள் |
மாதம் |
திங்கள் |
பத்துமித்திரர் |
உறவினர்களும்,
நண்பர்களும் |
சகிதம் |
சேர்ந்து |
ஆசீர்வதிக்க |
வாழ்த்த |
கோருகிறேன் |
வேண்டுகிறேன் |
சுபதினம் |
நல்லநாள் |
கிரகப்பிரவேசம் |
புதுமனைப்புகுவிழா |
தம்பதிகள் |
கணவர், மனைவியர் |
புஷ்பம் |
மலர் |
பறித்தாள் |
கொய்தாள் |
ஜெயம் |
வெற்றி |
|
|
பிதா |
தந்தை |
நமஸ்காரம் |
வணக்கம் |
வழக்கப்படி |
மரபுப்படி |
பிரசங்கம் |
சொற்பொழிவு |
பெற்றம் |
பசு |
தள்ளை |
தாய் |
சொன்றி |
சோறு |
பட்டாளம் |
படைபிரிவு |
அல்வா |
இனிப்புகனி |
கடுதாசி |
எழுதும்தாள் |
வாடிக்கை |
வழக்கம் |
ஏராளம் |
மிகுதி |
சர்க்கார் |
அரசு |
வாய்தா |
நிலவரி |
பாக்கி |
மிச்சம் |
சிப்பாய் |
போர்வீரன் |
கோர்ட் |
நீதிமன்றம் |
சிபாரிசு |
பரிந்துரை |
பந்தோபஸ்து |
பாதுகாப்பு |
சன்னல் |
காலதர் (பலகனி) |
குசினி |
சமையலறை |
அபாயம் |
பேரிடர் |
அனுபவம் |
பட்டறிவு |
ஆயுள் |
வாழ்நாள் |
உபாத்தியாயர் |
ஆசிரியர் |
கர்வம் |
செருக்கு |
கைதி |
சிறையாளி |
சபை |
அவை |
சாதம் |
சோறு |
சேவை |
தொண்டு |
ஜாக்கிரதை |
விழிப்பு |
தகவல் |
செய்தி |
தினம் |
நாள் |
நிபுணர் |
வல்லுநர் |
பத்திரிக்கை |
செய்தித்தாள் |
பூஜை |
வழிபாடு |
பேட்டி |
நேர்காணல் |
விபூதி |
திருநீறு |
விவாதம் |
உரையாடல் |
வைத்தியர் |
மருத்துவர் |
அங்கத்தினர் |
உறுப்பினர் |
அதிகாரி |
அலுவலர் |
அதிபர் |
தலைவர் |
அந்நியர் |
அயலார் |
அபிஷேகம் |
குடமுழுக்கு |
அபூர்வம் |
புதுமை |
அர்த்தம் |
பொருள் |
அலங்காரம் |
ஒப்பனை |
அவசரம் |
விரைவு |
அனுமதி |
இசைவு |
ஆபத்து |
இடர் |
ஆரம்பம் |
தொட்க்கம் |
ஆராதனை |
வழிபாடு |
இருதயம் |
நெஞ்சு |
உபயோகம் |
பயன் |
உற்சாகம் |
ஊக்கம் |
கவனம் |
கருத்து |
குமாரன் |
புதல்வன் |
கோபம் |
சினம் |
விஞ்ஞானம் |
அறிவியல் |
விரதம் |
நோன்பு |
பதில் |
விடை |
ஜாதி |
இனம் |
சங்கம் |
மன்றம் |
சிகிச்சை |
மருத்துவம் |
சித்திரம் |
ஓவியம் |
சின்னம் |
அடையாளம் |
தினசரி |
நாள்தோறும் |
தீபம் |
விளக்கு |
நஷ்டம் |
இழப்பு |
நாயகன் |
தலைவன் |
பரீட்சை |
தேர்வு |
புத்தி |
அறிவு |
போதனை |
கற்பித்தல் |
மந்திரி |
அமைச்சர் |
முக்கியம் |
முதன்மை |
வினாடி |
நொடி |
வேதம் |
மறை |
காகிதம் |
தாள் |
மைதானம் |
திடல் |
ஜாமீன் |
பிணை |
ரத்து |
நீக்கம் |
பைசல் செய் |
தீர்த்து வை |
ஜனங்கள் |
மக்கள் |
கஜானா |
கருவூலம் |
சர்க்கார் |
அரசு |
அமல் |
நடைமுறை |
உபந்நியாசம் |
சமயச்சொற்பொழிவு |
பந்துமித்ரர் |
சுற்றம், நட்பு |
நமஸ்காரம் |
அயற்சொல் தமிழ்ச்சொல் / பிற மொழிச்சொல் தமிழ்ச் சொல்
1. அனுமதி —
இசைவு
2.ஆதவன்…கடவுள்
3. ஆரம்பம்
—தொடக்கம்
4. ஆஸ்தி —
சொத்து
5. இம்சை —
துன்பம்
6. இருதயம் —நெஞ்சகம்
7. ஈசன் —
இறைவன்
8. உபசரித்தல்
—விருந்தோம்பல்
9. உபயம்
திருப்பணியாளர் கொடை
10. உஷார்
—எச்சரிக்கை, விழிப்பு
11. எதார்த்தம்
— இயல்பு
12. ஐதிகம் உலக
வழக்கு
13. காகிதம்
—தாள்
14. கிரீடம் —
மணிமுடி
15. குபேரன்
—பெருஞ்செல்வம்
16. அங்கத்தினர்
— உறுப்பினர்
17.அதிகாரி …
அலுவலர்
18. அதிபர் —
தலைவர்
19. அந்நியர்
.– அயலார்
20. அபிஷேகம்
நீராட்டு
21.அபூர்வம் —
புதுமை
22. அலங்காரம்
— ஒப்பனை
23.அனுமதி.–இசைவு
24.ஆபத்து..இடர்
25. ஆசீர்வாதம்
—வாழ்த்து
26. இலஞ்சம்
கையூட்டு
27. இலாபம்
—வருவாய்
28.உத்தரவு
—ஆணை
29.உத்தியோகம்
—பணி
30.உபயோகம் —
பயன்
31. கிராமம் —
சிற்றூர்
32. குமாரன் —
மகன்
33. சாவி —
திறவுகோல்
34. நஷ்டம்
..-இழப்பு
35. நாஷ்டா
—சிற்றுண்டி
36. பாக்கி
—நிலுவை
37. கஜானா
—கருவூலம்
38. விஞ்ஞானம்
— அறிவியல்
39. ஜனங்கள் —
மக்கள்
40. நிபுணர் —
வல்லுநர்
41. ஆஸ்பிடல்
—மருத்துவமனை
42. டீ ஸ்டால்
— தேநீர்க் கடை
43. பஸ்
ஸ்டாண்ட் — பேருந்து நிலையம்
44. போஸ்ட்
ஆபீஸ் — அஞ்சலகம்
38. விஞ்ஞானம்
— அறிவியல்
39. ஜனங்கள் —
மக்கள்
40. நிபுணர் —
வல்லுநர்
41. ஆஸ்பிடல்
—மருத்துவமனை
42. டீ ஸ்டால்
— தேநீர்க் கடை
43. பஸ்
ஸ்டாண்ட் — பேருந்து நிலையம்
44. போஸ்ட்
ஆபீஸ் — அஞ்சலகம்
45. அகங்காரம்
— செருக்கு
46. அதிர்ஷ்டம்
— நற்பேறு
47. அபிப்ராயம்
—கருத்து
48. அபூர்வம் —
புதுமை
49. ஆராதனை
—வழிபாடு
50. ஆனந்தம் —
மகிழ்ச்சி
51. சபதம் –
சூளுரை
52. தினசரி
—நாள்தோறும்
53. தைரியம் —
துணிவு
54. பூஜை
—வழிபாடு
55. நேவி —
நேவி
56. சாப்ட்வேர்
[software]
– மென்பொருள்
57. ப்ரௌசர் [browser) – உலவி
58. க்ராப் [crop] – செதுக்கி
59. கர்சர் (cursor] – ஏவி அல்லது சுட்டி
60. சைபர்ஸ்பேஸ்
[cyberspace]
– இணையவெளி
61. சர்வர் (server] – வையக விரிவு வலை வழங்கி
62. ஃபோல்டர் [Folder] – உறை
63. லேப்டாப் [Laptop] – மடிக்கணினி
வினைச்சொல்
• ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும். • எ.கா – சாந்தி, வகுப்பறை, சித்திரை, கண், கதிரவன், சந்திரன்.
• ஒரு செயலைக் (வினையை) குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும். • எ. கா – ஓடினான், விழுந்தது, எழுதினான்.
கீழுள்ள
தொடர்களைக் கவனியுங்கள்
1. இராமன் பாடம் படித்தான். இத்தொடரில்,
இராமன், பாடம் – பெயர்ச்சொற்கள்
படித்தான்
– வினைச்சொல்
2. மாடு புல் மேய்ந்தது. இத்தொடரில்,
மாடு, புல் – பெயர்ச்சொற்கள்
மேய்ந்தது
– வினைச்சொல்
Question 1.
கீழ்க்காணும்
சொற்களைப் பெயர்ச்சொல், வினைச்சொல்
என வகைப்படுத்துக.
(பாடினாள், வருணன், எழுதினான், வரைந்தாள், இசைவாணி, உண்டான், கண்ண ன், சம்சுதீன், ஜெனிபர், காட்டினார், ஓடியது, முயல்)
ஆ.
பின்வரும் தொடர்களில் உள்ள பெயர்ச்சொல், வினைச்சொல்லை எடுத்து எழுதுக.
1. மயில்
தோகையை விரித்து ஆடியது.
2. வாணி
கட்டுரை எழுதினாள்.
3. இளம்பிறை
உணவு சமைத்தாள்.
4. ஆதிரை
மரக்கன்றை நட்டாள்.
5. கொத்தனார்
வீடு கட்டினார்.
Answer:
இ. கதையில்
வரும் பெயர்ச்சொற்களையும் வினைச்சொற்களையும் பட்டியலிடுக.
காட்டில்
புலி ஒன்று மானை வேட்டையாடத் துரத்தியது மான் தன்னுயிரைக் காத்துக் கொள்ள வேகமாக
ஓடியது. மானைத் துரத்திச் செல்லும்போது, வேடன் விரித்திருந்த வலையில் புலி
சிக்கிக் கொண்டது. வேடன் வலையில் சிக்கிய புலியைக் கூண்டில் அடைக்க முயன்றான்.
அப்பொழுது புலி வேடனைப் பார்த்து, என்னைக் கூண்டில் அடைக்காதே விட்டுவிடு. நான் ஓடிப்
போய்விடுகிறேன் என்று கெஞ்சியது. அதற்கு வேடன். அதெல்லாம் முடியாது’ என்று
கூறினான்.
உனக்கு
இரக்கமே இல்லையா? என்னை ஏன்
துன்புறுத்துகிறாய்? எனக்
கேட்டது புலி. அதற்கு வேடன் நீ ஏன் மானைத் துரத்தினாய்? உனக்கு ஒரு நீதி. எனக்கு ஒரு
நீதியா? எனக்
கேட்டான். புலி அமைதியாய் இருந்தது.
Answer:
பிழை
நீக்கி எழுதுதல்
• ஒருவர் பேசும்போதும் எழுதும்போதும் பிழையின்றிப் பேசவும் எழுதவும்
வேண்டும். பேச்சில் அல்லது எழுத்தில் பிழையிருப்பின் பொருள் மயக்கம் ஏற்படும்.
எனவே, சொற்களிலும்
தொடர்களிலும் பிழைவராமல் காத்தல் வேண்டும்.
1. திணை, பால், எண், இடம், காலம், மரபு ஆகியன பிழையாக வாராமல் தொடரை
எழுதுதல் வேண்டும்.
2. எழுவாய் உயர்திணையாக இருந்தால் பயனிலையும் உயர்திணையாக இருத்தல் வேண்டும்.
— (எ.கா)
பொன்னன் தொடரோட்டத்தில் கலந்துகொண்டான்.
3. எழுவாய் அஃறிணையாக இருந்தால் பயனிலையும் அஃறிணையாக இருத்தல் வேண்டும்.
— (எ.கா.) பசு
புல் மேய்ந்தது.
4. எழுவாய், ஐம்பால்களுள் எந்தப் பாலில்
உள்ளதோ அதற்கேற்பப் பயனிலையைப் பெறல் வேண்டும்.
• அழகன்
பாடினான்.
• வள்ளி ஆடினாள்.
• புலவர்கள்
பாடல்களை • இயற்றினார்கள்.
• யானை
பிளிறியது.
• மான்கள்
ஓடின.
5. எழுவாய் – கள் விகுதி பெற்றால் பயனிலையும் கள் விகுதி பெறுதல் வேண்டும்.
எழுவாய் – அர் விகுதி பெற்றால் பயனிலையும் அர் விகுதி பெறுதல் வேண்டும்.
• மாணவர்கள்
சிறப்பாகத் தேர்வு எழுதினார்கள்.
• மூவர்
தேவாரத்தைப் பாடினர்.
6. எழுவாய் ஒருமையாக இருந்தால் பயனிலையும் ஒருமையாக இருத்தல் வேண்டும்.
எழுவாய் பன்மையாக இருந்தால் பயனிலையும் பன்மையாக இருத்தல் வேண்டும்.
• என்
புத்தகம் இதுவன்று.
• என்
புத்தகங்கள் இவையல்ல.
8. தொடரில்
காலவழு ஏற்படாமல் காத்தல் வேண்டும்.
• தலைவர்
நாளை மதுரையில் பேசுவார்.
• நேற்று மழை
பொழிந்தது.
Book Back Questions
1. மாதவி மகளும் மாதவர்க் காண்டலும் (லு/ளு/ழு )
2. வினைப்பயன்
விளையும் கால் (லை/ளை/ழை)
3. கொலையே களவே காமத்தீ விழைவே (லை/ளை/ழை)
4.கலங்கிய உள்ளக் கவலையில் தோன்றுவர். (ல்/ள்/ழ்)
1. பேருந்து
நிருத்துமிடத்தில் பல்லிக்கூடம் இருக்கிறது. (பள்ளிக்கூடம்)
2. இன்றும்
நம் நாட்டில் பெறுவாரியான மக்கல் உள்ளார்கலே. (மக்கள்)
3. ஏறிகளில்
மலைநீர் சேமித்தாள் கிணருகளில் நீர் வற்றாது. (மழைநீர்)
4. ஆளமரத்தின்
விளுதினைப் பாம்பென்று குறங்கு அஞ்சியது. (குரங்கு)
5. கொஞ்சம்
வென்னி வைத்துத் தந்தால் என்ணை தேய்த்துக் கொல்வேன். (என்னை)
1. தெண்றல் — தென்றல்
2. கன்டம் — கண்டம்
3. நன்ரி — நன்றி
4. மன்டபம் — மண்டபம்
1. கோவலன்
சிலம்பு விற்கப் போனாள். போனான்.
2. அரசர்கள் நல்லாட்சி
செய்தார். (செய்தார்கள்)
3. பசு கன்றை
ஈன்றன. (ஈன்றது)
4. மேகங்கள்
சூழ்ந்து கொண்டது. (கொண்டன)
5. குழலி
நடனம் ஆடியது. (ஆடினாள்)
1. சர் ஆர்தர்
காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அயல் கட்டியது.(கட்டினார்).
2. மதியழகள்
தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தாள். (வைத்தான்)
3. மழையே
பயிர்க்கூட்டமும் பயிரிக்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றன. (புரிகின்றது)
4. தீலனும்
மாலனும் அவசரகாலத் தொடர்புக்கான தொலைப்பேசி எண்களின் பட்டியனை வைத்திருக்கிறோம். (வைத்திருக்கிறார்கள்)
5. குராவளியின்
போது மேல்மாடியில் தங்காமல் தரைத்தளத்திலேயே தங்கியதால் தப்பிப்பான். (தப்பித்தனர்)
1. மதீனா
சிறந்த இசை வல்லுநர் வேண்டும். (வல்லுநராக)
2. நல்ல
தமிழுக்கு எழுதுவோம். (தமிழில்)
3. பவளவிழிதான்
பரிசு உரியவள். (பரிசுக்கு)
4. துன்பத்தால்
பொறுத்துக்கொள்பவனே வெற்றி பெறுவான். (துன்பத்தை)
5. குழலியும்
பாடத் தெரியும். (குழலிக்குப்)
1 .பிழையான
தொடரைக் கண்டறிக.
அ)
காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.
ஆ) மலைமீது
ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.
இ) காளையில் பூத்த மல்லிகை மனம்
வீசியது.
ஈ)
நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
2. பேச்சுத்தமிழில்
அமைந்த தொடரைத் தேர்க.
அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத்
தெரியும்.
ஆ)
புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
இ) வறட்சி
எல்லா இடங்களையும் பாதித்துள்ளது.
ஈ)
மயில்கள் விறலியரைப் போல் ஆடுகின்றன.
தொடரில்
உள்ள பிழைகளை நீக்கி எழுதுக.
எ.கா.
— நம்
மானிலம் இந்த ஆண்டு வரட்சியால் பாதிக்கப்பட்டது.
Ans: — நம்
மாநிலம் இந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்டது.
1. எங்கள்
ஊரில் நூலகக் கட்டிடம் கட்ட அறசு (அரசு)நிதி
ஒதுக்கியது.
2. ரங்கன்
வெங்கலப் (வெண்கலப்) பாத்திரக்கடை வைத்திருக்கிறார்.
3.மானம் (வானம்) பார்த்த பூமியில் பயிறு வகைகள்
பயிரிடப்படுகின்றன.
4. ஐப்பசி
அடைமழையில் ஊருனி (ஊருணி) நிறைந்தது.
5. இன்னிக்கு
(இன்றைக்கு) சாயங்காலம் கபடி போட்டி
நடைபெறும்.
Out of books
1. சிகப்பு –
சிவப்பு
2. அகண்ட –
அகன்ற
3. அதுகள் –
அவை
4. அருவாமனை –
அரிவாள்மனை
5. அருகாமையில்
– அருகில்
6. அறுவறுப்பு
– அருவருப்பு
7. அங்கிட்டு
– அங்கு
8. அமக்களம் –
அமர்க்களம்
9. அத்தினி –
அத்தனை
10. அவுத்து –
அவிழ்த்து
11. ஆச்சு –
ஆயிற்று
12. இரும்பல் –
இருமல்
13. இங்கிட்டு
– இங்கு
14. இறச்சி –
இறைச்சி
15. இவையன்று –
இவையல்ல
16. ஈர்கலி –
ஈர்கொல்லி
17. உடமை –
உடைமை
18. உருச்சி –
உரித்து
19. ஊரணி –
ஊருணி
20. ஒத்தடம் –
ஒற்றடம்
21. ஒம்பது –
ஒன்பது
22. கறம் –
கரம்
23. கயறு, கவுறு – கயிறு
24. அருணைக்
கயிறு – அரைஞாண்கயிறு
25. புஞ்சை –
புன்செய்
26. பாவக்காய்
– பாகற்காய்
27. தவக்களை –
தவளை
28. கொரங்கு –
குரங்கு
29. முயற்சித்தார்
– முயன்றார்
30. பேரன் –
பெயரன்
31. வேர்வை –
வியர்வை
32. இடதுபுறம்
– இடப்புறம்
33. உசிரு –
உயிர்
34. எம்பது –
எண்பது
35. ஒருவள் –
ஒருத்தி
ஒற்றுப்பிழை அறிதல்
எழுத்துக்களிலோ
தொடர்களிலோ ஏற்படும் வல்லினத் தவறுகளை ஒற்றுப்பிழை என்போம்.
கதையை
படித்தேன்; எழுதி
கொண்டேன். அப்படி சொன்னது, எப்படி தெரியும்?
மேலே
உள்ள தொடர்களைப் படித்துப் பாருங்கள். இவற்றை இயல்பாகப் படிக்க இயலாதவாறு
சொற்களுக்கு இடையே ஓர் ஓசை இடைவெளி இருப்பதை உணர முடிகிறதல்லவா? அவற்றைக் கீழே உள்ளவாறு
படித்துப் பாருங்கள்.
கதையைப்
படித்தேன்; எழுதிக்
கொண்டேன். அப்படிச் சொன்னது, எப்படித்
தெரியும்?
இப்போது
இயல்பாகப் படிக்க முடிகிறது அல்லவா? மேலும் நாம் பேசும்போது
இவ்வாறுதான் பேசுகிறோம். ஒரு சொல்லின் முதலெழுத்து க. ச. த. ப ஆகிய வல்லின எழுத்து வரிசைகளுள்
ஒன்றாக இருந்தால், அதற்கு
முன்னால் உள்ள சொல்லின் இறுதியில் அந்த வல்லின மெய்எழுத்தைச் சேர்த்து எழுத
வேண்டும். இதனை வல்லினம் மிகல் என்று கூறுவர். எல்லா இடங்களிலும் வல்லின மெய்எழுத்து மிகும் என்று
கூறமுடியாது. மிதந்து சென்றது. செய்து பார்த்தான். படித்த கவிதை, பெரிய தாவரம் ஆகிய சொற்களில்
வல்லினம் மிகவில்லை என்பதைக் கவனியுங்கள். இவ்வாறு வல்லின மெய் மிகக்கூடாத இடங்களை வல்லினம் மிகா இடங்கள் எனக் குறிப்பிடுவர்.
வல்லின
மெய்களைச் சேர்த்து எழுதுவதன் நோக்கம் படிப்பதற்கு எளிமையாக இருக்கவேண்டும் என்பது
மட்டுமன்று. செய்திகளில் கருத்துப் பிழையோ, பொருள் குழப்பமோ ஏற்படாமல்
இருப்பதற்கும் வல்லினம் மிகுதலும் மிகாமையும் உதவுகின்றன.
மண்வெட்டி
கொண்டு வா. மண்வெட்டிக் கொண்டு வா.
இவற்றில்
முதல் தொடர் மண்வெட்டியை எடுத்து வா என்னும் பொருளைத் தருகிறது. இரண்டாம் தொடர்
மண்ணை வெட்டி எடுத்து வா என்னும் பொருளைத் தருகிறது. இவ்வாறு பொருள் தெளிவை
ஏற்படுத்தவும் வல்லினம் மிகுதல் உதவுகிறது.
வல்லினம்மிக
வேண்டிய இடத்தில் மிகாமல் எழுதுவதும் மிகக் கூடாத இடத்தில் வல்லின மெய் இட்டு
எழுதுவதும் தவறாகும். இதனைச் சந்திப் பிழை அல்லது ஒற்றுப்பிழை எனக் குறிப்பிடுவர்.
வல்லினம் மிகும் இடங்கள்
1. அந்த
இந்த என்னும் சுட்டுத்திரிபுகளை அடுத்து வல்லினம் மிகும்.
(எ.கா)
அந்தப்பக்கம். இந்தக்கவிதை.
2. எந்த
என்னும் வினாத்திரிபை அடுத்து வல்லினம் மிகும்.
(எ.கா)
எந்தத்திசை? எந்தச்சட்டை?
3. இரண்டாம் வேற்றுமை உருபாகிய ஐ வெளிப்படையாக வருமிடத்தில்
வல்லினம் மிகும்.
(எ.கா.)
தலையைக் காட்டு. பாடத்தைப்படி.
4. நான்காம் வேற்றுமை உருபாகிய கு வெளிப்படையாக வருமிடத்தில்
வல்லினம் மிகும்.
(எ.கா.)
எனக்குத் தெரியும். அவனுக்குப் பிடிக்கும்.
5. இகரத்தில் முடியும் வினையெச்சங்களை அடுத்து வல்லினம் மிகும்.
(எ.கா.)
எழுதிப் பார்த்தாள். ஓடிக் களைத்தான்.
6. உகரத்தில்
முடியும் வினையெச்சங்கள் வன்தொடர்க் குற்றியலுகரமாக இருந்தால் மட்டும் வல்லினம்
மிகும்.
(எ.கா.)
பெற்றுக் கொண்டேன். படித்துப் பார்த்தார்.
7. எதிர்மறைப் பெயரெச்சத்தின் இறுதி எழுத்து கெட்டு வருவது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆகும். இதில்
வல்லினம் மிகும்.
(எ.கா.)
செல்லாக்காசு. எழுதாப்பாடல்.
8. உவமைத்தொகையில் வல்லினம் மிகும்.
(எ.கா.)
மலர்ப்பாதம், தாய்த்தமிழ்.
9. உருவகத்தில் வல்லினம் மிகும்.
(எ.கா.)
தமிழ்த்தாய், வாய்ப்பவளம்.
10. எண்ணுப்பெயர்களில் எட்டு, பத்து ஆகிய இரண்டு பெயர்களில் மட்டும்
வல்லினம் மிகும்.
(எ.கா)
எட்டுப்புத்தகம், பத்துக்காசு.
11. அப்படி, இப்படி, எப்படி ஆகிய சொற்களை அடுத்து வல்லினம்
மிகும்.
(எ.கா.)
அப்படிச்செய், இப்படிக்காட்டு, எப்படித்தெரியும்?
12. திசைப்பெயர்களை அடுத்து வல்லினம் மிகும்.
(எ.கா.)
கிழக்குக்கடல், மேற்குச்சுவர்.
வடக்குத்தெரு, தெற்குப்பக்கம்.
13. மகர மெய்யில் முடியும் சொல்லை அடுத்து வல்லினம் வந்தால், அந்த மகர மெய் அழிந்து
அவ்விடத்தில் வல்லினம் மிகும்.
(எ.கா.)
மரம் + சட்டம் = மரச்சட்டம், வட்டம் +
பாறை = வட்டப்பாறை.
வல்லினம் மிகா இடங்கள்
1. எழுவாய்ச் சொற்களை அடுத்து வல்லினம் மிகாது.
(எ.கா.)
தம்பி படித்தான், யானை
பிளிறியது.
2. அது, இது, எது ஆகிய சொற்களை அடுத்து வல்லினம்
மிகாது.
(எ.கா.)
அது சென்றது. இது பெரியது. எது கிடைத்தது?
3. பெயரெச்சம், எதிர்மறைப் பெயரெச்சம் ஆகியவற்றை அடுத்து வல்லினம் மிகாது.
(எ.கா)
எழுதிய பாடல், எழுதாத
பாடல்.
4. இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வரும் இடங்களில் (இரண்டாம் வேற்றுமைத்தொகை)
வல்லினம் மிகாது.
(எ.கா.)
இலை பறித்தேன். காய் தின்றேன்.
5. உகரத்தில்
முடியும் வினையெச்சங்கள் மென்தொடர்க் குற்றியலுகரமாகவோ, இடைத்தொடர்க் குற்றியலுகரமாகவோ இருந்தால் வல்லினம் மிகாது.
(எ.கா.)
தின்று தீர்த்தான். செய்து பார்த்தாள்.
6. வினைத்தொகையில் வல்லினம் மிகாது. (எ.கா.) எழுதுபொருள், சுடுசோறு.
7. அப்படி, இப்படி, எப்படி ஆகிய சொற்களைத் தவிர, படி என முடியும் பிறசொற்களை அடுத்து
வல்லினம் மிகாது. (எ.கா.) எழுதும்படி சொன்னேன். பாடும்படி கேட்டுக்கொண்டார்.
8. உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது. (எ.கா.) தாய்தந்தை, வெற்றிலைபாக்கு
இரண்டு வினைச்சொற்களின்
வேறுபாடு அறிதல்
1. வினைச்சொல்:
ஒரு
தொழிலை உணர்த்தி வரும் சொல் வினைச்சொல் எனப்படும்.
2. வினைச்சொல்லின் பண்புகள்:
• காலம்
காட்டும், வேற்றுமை
ஏற்காது.
• திணை, பால், எண், இடங்களை உணர்த்தி வரும்
இரு வினைகளின் வேறுபாடு சொற்கள்
சில எடுத்துக்காட்டு:-
1. அடங்கு – அடக்கு
✓ஆசிரியர் அடக்க, மாணவர்கள் அடங்கினர்
2. அறிவது – அரிது
✓ இலக்கணத்தை அறிவது மிகவும்
அரிது
3. நிறைந்த – நிறைத்த
✓ பழக்கலவை நிறைந்த ஜாடியில்
தண்ணீரை நிறைத்தனர்
4. விளித்து – விழித்து
✓அம்மா விளித்ததும், கண் விழித்தான்
5. குவிந்து – குவித்து
✓ பள்ளியில் குவிந்த குப்பைகளை
அள்ளி வண்டியில் குவித்து வைத்தனர்
6.பரந்து – பறந்து
✓ விதைகள் பரந்து கிடப்பதை உண்ண
பறவைகள் பறந்து வந்தன.
7. மாறு – மாற்று
✓ நேர்மையானவனாக மாறு, மற்றவரையும் மாற்று.
8. உண்ணு – உன்னு
✓ உணவை உண்ணும்போது உழவர்களை
உன்னுதல் வேண்டும்.
9. கலைத்தல் – களைத்தல்
✓ மாணவர்கள் கலைத்த படங்களை ஒட்டி
களைத்துப் போயினர்.
10. பெரு – பெரு
✓ பெருமை மிகுந்த செயல்களை
செய்வதால், மதிப்புபெறுகின்றனர்.
11. உரி – உறி
✓ கிழங்கை தோல் உரித்து தூக்கி
(உறித்து) போட்டனர்
12. சீரிய – சீறிய
✓ சீரிய (உயர்ந்த) பெருமை வாய்ந்த
பாண்டிய மன்னனை சீறிய (கோபம்) கண்ணகி.
13. ஈந்தாள் – ஈன்றாள்
✓ தன் உயிரைக் கொடுத்து (ஈந்து)
பிள்ளையை பெற்றெடுத்தாள் (ஈன்றாள்).
14. உணர்ந்த – உணர்த்தி
✓ கல்வியின் சிறப்பை உணர்ந்த
மாணவன், சக
மாணவர்களுக்கும் உணர்த்தி சென்றான்
15. பொருந்து – பொருத்து
✓ படங்களை பொருத்தி சரியாக
பொருந்தியுள்ளதா எனப் பார்த்தான்
16. கலைத்தல் – களைத்தல்
✓ அழித்தல் – சோர்தல்
17. பணிந்து – பணித்து
✓ அடங்கி – கட்டளை
✓ தலைவர் தொண்டர்களை வேலை செய்ய
பணித்தார். தொண்டர்கள் தலைவருக்குப் பணிந்தனர்.
18. குவிந்து – குவித்து
✓ அமைச்சர் பதவியேற்றவுடன்
பாராட்டுகள் குவிந்தன. ஆதரவாளர்கள் பரிசுப் பொருட்களை குவித்தனர்
19. விலை விளை
✓ பொருளின் மதிப்பு – உண்டாக்குதல்
20. பரி – பறி
✓ பாரி பழங்களை பறித்து கொண்டு
பரியில் சென்றான்
ஒரு பொருள் தரும் பல சொற்கள்
1. அரி – திருமால், அரிதல், சிங்கம்
2. அணி –
அணிகலன், அழகு, உடுத்து
3. அன்னம் –
சோறு, ஒருவகைப்
பறவை
4. அகம் –
வீடு, மனம், உட்பகுதி
5. அரவம் –
ஒலி, பாம்பு
6. அலை – கடல்
அலை, திரி
7. அணை – படுக்கை, தடுத்தல், தழுவு
8. அகல் –
நீங்கு, விளக்கு
ஏற்றும் தானம்
9. அறை – சொல், அடி, திரை, வீட்டின் பகுதி
10. அடி –
கீழ்ப்பகுதி, பாதம், அடித்தல்
11. ஆற்றல் –
வல்லமை, திறமை
12. ஆரம் –
மாலை, சந்தனம்
13. ஆடு –
ஒருவகை விலங்கு, ஆடுதல்
14. ஆடி –
கண்ணாடி, தமிழ்மாதம், கூத்தாடி
15. ஆறு – எண், நதி, வழி
16. ஆவி –
உயிர், நீராவி, உயிரெழுத்து
17. ஆலம் –
ஆலமரம், நஞ்சு, கடல், கலப்பை
18. இசை –புகழ், இணங்கு, பண்
19. இதழ் –
பூவிதழ், உதடு
20. இடி –
தாக்கு, வானிடி, முழக்கம், உறுதிச்சொல்
21. இறை –
கடவுள், நீர்
இறைத்தல்
22. இரை –
ஒலிசெய், உணவு
23. ஈ – கொடு, பறவை, இரத்தல், அழிவு
24. உரம் – எரு, ஞானம், மதில், வலிமை
25. உடு –
உடுத்து, விண்மீன், ஓடக்கோல், அகழி
26. உரை – சொல், தேய்
27. உறை –
மேலுறை, வசி
28. உடுக்கை –
ஆடை, ஒருவித
இசைக்கருவி
29. ஊதை –
பருத்தல், ஊதுகருவி, குளிர்க்காற்று
30. எகினம் –
அன்னம், நீர்நாய், புளியமரம்
31. ஏறு – காளை, ஆண் சிங்கம், மேலே செல்
32. ஏனம் –
பாத்திரம், பன்றி
33. ஏற்றம் –
நீர் இறைக்கும் கருவி, உயர்வு
34. ஐயம் –
சந்தேகம், பிச்சை
35. ஓதி –
கூந்தல்,ஓதுபவன், ஓந்தி
36. கலை – ஆடை, கல்வி, கலைத்தல்
37. களை –
நீக்கு, பயிருக்குக்
கேடான புல்
38. கடி –
காவல், காப்பு, கூர்மை, விரைவு
39. கழை –
கரும்பு, மூங்கில்
40. கலி –
பாவகை, சனி, துன்பம், வறுமை
41. கரி – யானை, சாட்சி, அடுப்புக்கரி
42. கல் –
பாறைக்கல், படி, தோண்டு
43. கவி –
குரங்கு, கவிஞர், பாடல்
44. கம்பம் –
தூண், நடுக்கம்
45. கப்பல் –
கலம், நாவாய்
46. கா –
காப்பாற்று, சோலை, காவடி, பூப்பெட்டி
47. காயம் –
பெருங்காயம், புண், உடல், நிலைபேறு
48. கார் –
கருமை, மேகம்
49. கிளை –
மரக்கிளை, உறவு
50. குடி –
குடித்தல், குடும்பம், குடிப்பழக்கம்
51. குழவி –
குழந்தை, சேய், குழவிக்கல்
52. குடை –
கைக்குடை, தோண்டு
53. கூடு –
சேர், உடம்பு, பறவைக்கூடு
54. கோள் –
கிரகம், புறம்கூறுதல்
55. சங்கம் –
சங்கு, கூட்டம்
56. சுரம் –
வழி, வெப்பம்
57. சேனை – படை, தானை, கிழங்கு
58. சோழன் –
கிள்ளி, வளவன், அபயன்
59. தாமரை – பூ, தாவுகின்ற மான்
60. தாள் –
பாதம், முயற்சி, காகிதம்
61. திரை – அலை, வெற்றிலை
62. திங்கள் –
மாதம், நிலவு
63. திரு –
உயர்ந்த, அழகு, செல்வம்
64. திரி – அலை, விளக்குத் திரி
65. துணி –
துண்டு செய், ஆடை
66. தை –
தைத்தல், மாதம்
67. தையல் –
பெண், தைத்தல்
68. நகை –
சிரிப்பு, அணிகலன்
69. நாண் –
கயிறு, வெட்கம், வட்டத்தின் நடுவில் வரையும் கோடு
70. நாடு –
விரும்பு, தேசம்
71. நாகம் –
பாம்பு, துத்தநாகம்
72. படி – வாசி, படிக்கட்டு, அளக்கும் கருவி
73. பள்ளி –
கல்விக்கூடம், படுக்கை, தொழுமிடம்
74. பணி –
பணிவு, அணிகலன்
75. பார் –
உலகம், காண்
76. புயல் –
மேகம், பெருங்காற்று
77. பிழை –
தவறு, உயிர்
தப்புதல்
78. பிடி– பெண் யாணை, பிடித்துக்கொள்
79. மதி –
அறிவு, நிலா
80. மடி –
சோம்பல், இற
81. மறம் –
வீரம், பாவம்
82. மணம் –
திருமணம், கலத்தல்
83. மா – பெரிய, விலங்கு, மாமரம்
84. மாலை –
பொழுது, தார்
85. மாசு –
குற்றம், தீது
86. முடி – தலை, செய்துமுடி, கட்டு
87. மெய் –
உண்மை, உடம்பு
88. வரை – மலை, தீட்டு, எல்லை
89. வலி –
வலிமை, நோவு
90. வாரணம் –
யானை, கோழி, கடல், சங்கு
91. விடை –
பதில், காளை
92. வேங்கை –
புலி, வேங்கைமரம்
93. வேழம் – யானை, கரும்பு
இரு பொருள் தரும் சொற்கள்
இப்பகுதியில் ஒரு சொல்தரும்
இரண்டு பொருள்களை எழுதவேண்டும். சில வேளைகளில் இருபொருள் தரும் ஒரு சொல் என்று
கேட்பதுவும் உண்டு.
அம்பி |
படகு, தோணி |
அடவி |
காடு, மிகுதி |
அல் |
இருள், வறுமை |
ஆ |
பசு, இரக்கம் |
ஆக்கம் |
செல்வம், காற்று |
ஆறு |
எண் (6), நதி |
ஆழி |
மோதிரம், கடல் |
இன்னல் |
துன்பம், கவலை |
இந்து |
சமயம், மதம் |
இகல் |
பகை, வலிமை |
இடர் |
துன்பம், நோய் |
இருள் |
பகை, துன்பம் |
உழுவை |
புலி, மீன்வகை |
ஏர் |
அழகு, கலப்பை |
நூல் |
ஆடைநூல், பாடநூல் |
ஈனும் |
தரும், உண்டாக்கும் |
தெறு |
பகை, தண்டித்தல் |
மெய் |
உடல், உண்மை |
நாமம் |
பெயர், அச்சம் |
நுதல் |
நெற்றி, புருவம் |
நமன் |
எமன், நம்மவன் |
நடலை |
துன்பம், அசைவு |
நகை |
நகைத்தல், அணிகலன் |
குஞ்சி |
தலைமுடி, விருது |
குன்று |
மலை, மேடு |
கான் |
காடு, மணம் |
கழல் |
பாதம், காலணி |
கமலம் |
தாமரை, நீர் |
கிரி |
மலை, பன்றி |
கிளை |
சுற்றம், மரக்கிளை |
கவிகை |
குடை, ஈகை |
கரம் |
கை, வரி |
புயல் |
மேகம், நீர் |
புனல் |
நீர், ஆறு |
புத்தி |
அறிவு, மனம் |
புள் |
பறவை, வண்டு |
பணை |
மூங்கில், பெருமை |
படி |
நூலைப்படி, வாயிற்படி |
பிணி |
நோய், துன்பம் |
தலை |
சிறப்பு, உச்சி |
துடி |
பறை, உதடு |
திரை |
அலை, சுருள் |
திங்கள் |
நிலவு, மாதம் |
மாதிரம் |
மலை, ஆகாயம் |
மனை |
வீடு, மனைவி |
மரை |
மான், தவளை |
மாலை |
காலம், பூமாலை |
மதலை |
துணை, குழந்தை |
கோடு |
தந்தம், கொம்பு |
கேழல் |
பன்றி, நிறம் |
கேசரி |
சிங்கம், இனிப்பு |
மேனி |
உடல், நிறம் |
மேதி |
எருமை, நெற்களம் |
சேய் |
குழந்தை, மூங்கில் |
சந்தம் |
அழகு, நிறம், ஓசை நயம் |
சிரம் |
தலை, உச்சி |
சுவடி |
நூல், ஓலைப்புத்தகம் |
வனம் |
காடு, சோலை |
ஞாலம் |
உலகம், விந்தை |
விரை |
மணம், தேன் |
பேச்சு வழக்கு
எழுத்து வழக்கு
- பேச்சு வழக்கு என்பது வாய்வழி பேசுவது ஆகும்.
- எழுத்து வழக்கு என்பது சிந்தித்து எழுதுவது ஆகும்.
வட்டார வழக்கு |
எழுத்து வழக்கு |
அனயம் |
நிறைவானது |
எச்சௌந்தவன் |
ஏழை எளியவன் |
கீழத்தார் |
புன்செய்யின் ஒரு பகுதி |
கெராமுனுசு |
கிராம நிர்வாக அலுவலர் |
கொடவாங்கள் |
கொடுக்கல் வாங்கள் |
திருணை |
திண்ணை |
தெகஞ்சத |
முடிந்ததை |
பிஞ்சை |
புன்செய் |
ரோசி |
உரசுதல் |
வாந்தக்கமாக |
இணக்கமாக |
வெதப்பெட்டி |
விதைப்பெட்டி |
வெள்ளங்காட்டி |
விடியற்காலை |
வேண்டாற |
வேண்டாத |
திருகை |
மாவு அரைக்கும் கம் |
குறுக்கம் |
சிறிய நிலபரப்பு |
கடகம் |
ஓலைப்பெட்டி |
பேச்சு வழக்கு |
எழுத்து வழக்கு |
கோர்த்து |
கோத்து |
சுவற்றில் |
சுவரில் |
நாட்கள் |
நாள்கள் |
மனதில் |
மனத்தில் |
பதட்டம் |
பதற்றம் |
சிலவு |
செலவு |
அருகாமையில் |
அருகில் |
பாம்புப்புத்து |
பாம்புப்புற்று |
பட்டம் பறக்குது |
பட்டம் பறக்கிறது |
தண்ணீர் குடிச்சான் |
தண்ணீர் குடித்தான் |
பூனை ஓடுச்சு |
பூனை ஓடியது |
அப்பளம் உடைஞ்சது |
அப்பளம் உடைந்தது |
கை வலிச்சுது |
கை வலித்தது |
வேகல |
வேகவில்லை |
பெய்ஞ்சுது |
பெய்தது |
எரியல் |
எரியவில்லை |
புல்லு |
புல் |
ஒசந்த |
உயர்ந்த |
ஊறவச்சு |
ஊறவைத்து |
தெறந்து |
திறந்து |
எருவு |
எரு |
தலகாணி |
தலையணை |
வேர்வை |
வியர்வை |
வூடு |
வீடு |
வெல |
வேலை |
தண்ணீ |
தண்ணீர் |
வெளக்கு |
விளக்கு |
ஊரணி |
ஊருணி |
எண்ணை |
எண்ணெய் |
ஒருவள் |
ஒருத்தி |
ஒருக்கால் |
ஒருகால் |
ஒண்டியாய் |
ஒன்றியாய் |
கவுறு |
கயிறு |
கார்த்தல் |
காத்தல் |
கத்தாளை |
கற்றாளை |
கோர்வை |
கோவை |
சுவத்தில் |
சுவரில் |
சேலை |
சீலை |
சிறுவாடு |
சிறுபாரு |
தண்ணீ |
தண்ணீர் |
துடங்கு |
தொடங்கு |
பயந்தாங்குள்ளி |
பயங்கொள்ளி |
பசறு, பசரு |
பயறு |
பேத்தல் |
பிதற்றல் |
பிந்துக்குளி |
பித்துக்கொளி |
மானவாரி |
வானவாரி |
சிறங்கு |
சிரங்கு |
வயிறாற |
வயிறார |
வுடும்பு |
உடும்பு |
சாப்டான் |
சாப்பிட்டான் |
இந்தா |
பிடித்துக்கொள் |
வாங்கியாந்த |
வாங்கிவந்த |
கெளம்பு |
புறப்படு |
செம்ம |
செம்மை |
பார்த்தியா ? |
பார்த்தாயா ? |
செல்லு |
செல் |
செய்தியா |
செய்தாயா |
கொடுத்தியா |
கொடுத்தாயா |
வாங்கியாந்த |
வாங்கிவந்தது |
செவ்வாக்கெழம |
செவ்வாய்க்கிழமை |
இப்ப எனக்குப் புரிஞ்சு போச்சு., புரிஞ்சிக்கோ |
இப்பொழுது எனக்குப் புரிந்துவிட்டது.நீயும் புரிந்துகொள் |
நிலத்தக் கௌறணும்டா அப்பதான் வகுறு நிறையும் |
நிலத்தை உழுதால்தான் வயிறு நிறையும் |
அண்ணைக்கு அவனுக்குப் பணம் குடுத்து ஒதவியிருக்க வேண்டியதான. |
அன்று அவனுக்குப் பணம் கொடுத்து உதவியிருக்க வேண்டியதுதான். |
வூட்டாண்ட வெளையாண்ட கொயந்தையை அப்பா எங்க இஸ்துகினு போனாரு. |
வீட்டுக்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை அப்பா
எங்கு அழைத்துக்கொண்டு போனார். |
புள்ளைக்கு உடம்பு சரியில்லை மூணு நாளா சிரமப்படுது |
பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லை. மூன்று நாட்களாக
துன்பப்படுகிறது. |
ரவைக்கு சித்தப்பன காவலுக்குப் போவ சொல் |
இரவு சித்தப்பாவை காவலுக்குப் போகச் சொல். |
“தம்பீ? எங்க நிக்கிறே?” |
“தம்பி எங்கே நிற்கிறாய்?” |
கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுதல் /
சரியான
விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ஏற்றத் தாழ்வற்ற —— அமைய வேண்டும்
அ) சமூகம் ஆ) நாடு இ) வீடு ஈ) தெரு
2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு
—— ஆக இருக்கும்
அ)
மகிழ்ச்சி ஆ) கோபம் இ) வருத்தம் ஈ) அசதி
3. தாய் மொழியில் படித்தால் ——
அடையலாம்
அ) பன்மை ஆ) மேன்மை இ) பொறுமை ஈ) சிறுமை
4. தகவல் தொட ர்பு முன்னேற்றத்தால்
—— சுருங்கிவிட்டது
அ) மேதினி ஆ) நிலா இ) வானம் ஈ) காற்று
5. பழமொழியின் சிறப்பு —— சொல்வது
அ)
விரிவாகச் ஆ) சுருங்கச் இ) பழைமையைச் ஈ) பல மொழிகளில்
6. நோயற்ற வாழ்வைத் தருவது —— சுத்தம்
7. உடல்நலமே உழைப்புக்கு அடிப்படை
8. கழுத்தில் சூடுவது ——
அ) தார் ஆ) கணையாழி இ) தண்டை ஈ) மேகலை
9. கதிரவனின் மற்றொரு பெயர் ——
அ) புதன் ஆ) ஞாயிறு இ) சந்திரன் ஈ) செவ்வாய்
10. ’கிணறு’ என்பதைக் குறிக்கும்
சொல்——
அ) ஏரி ஆ) கேணி இ) குளம் ஈ) ஆறு
11. மாடங்கள் என்பதன் பொருள்
மாளிகையின் ——
அ)
அடுக்குகள் ஆ) கூரை இ) சாளரம் ஈ) வாயில்
12. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி_______.
அ)
துருவப்பகுதி ஆ) இமயமலை இ) இந்தியா ஈ) தமிழ்நாடு
13. மக்களுக்கு மகிழ்ச்சி தருவது
———————
அ)
ஊக்கமின்மை ஆ) அறிவுடைய மக்கள் இ) வன்சொல் ஈ) சிறிய செயல்
14. ஒருவர்க்குச் சிறந்த அணி ——————
அ) மாலை ஆ)
காதணி இ) இன்சொல் ஈ) வன்சொல்
15. உடல் நோய்க்கு ____________
தேவை.
அ) ஔடதம் ஆ) இனிப்பு இ) உணவு ஈ) உடை
16. நண்பர்களுடன் _____________
விளையாடு.
அ) ஒருமித்து ஆ) மாறுபட்டு இ) தனித்து ஈ)
பகைத்து
17. மனிதன் எப்போதும் உண்மையையே ______________.
அ)
உரைக்கின்றான் ஆ) உழைக்கின்றான் இ) உறைகின்றான் ஈ) உரைகின்றான்
18. நுட்பமாகச் சிந்தித்து அறிவது _________________.
அ) நூலறிவு ஆ) நுண்ணறிவு இ) சிற்றறிவு ஈ) பட்டறிவு
19. தானே இயங்கும் எந்திரம் _______________.
அ) கணினி ஆ) தானியங்கி இ) அலைபேசி ஈ) தொலைக்காட்சி
20. மாணவர்கள் நூல்களை ——– கற்க
வேண்டும்.
அ)
மேலோட்டமாக ஆ) மாசுற இ) மாசற ஈ) மயக்கமுற
21. மாணவர் பிறர்__________ நடக்கக் கூடாது.
அ)
போற்றும்படி ஆ) தூற்றும்படி இ) பார்க்கும்படி ஈ) வியக்கும்படி
22. நாம்__________சொல்படி நடக்க வேண்டும்.
அ) இளையோர்
ஆ) ஊரார் இ) மூத்தோர் ஈ) வழிப்போக்கர்
23. பள்ளிக்கூடம் செல்லாததற்கு
ஆடுமேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம் _________________.
அ) ஆடு
மேய்க்க ஆள் இல்லை ஆ) ஊரில் பள்ளிக்கூடம் இல்லை இ) வழி தெரியவில்லை ஈ) பேருந்து
வசதியில்லை
24. மெல்லினத்திற்கான இன எழுத்து
இடம்பெறாத சொல் எது?
அ) மஞ்சள்
ஆ) வந்தான் இ) கண்ணில்/கல்வி ஈ) தம்பி
25. தவறான சொல்லை வட்ட மிடுக.
அ) கண்டான் ஆ) வென்ரான் இ) நண்டு ஈ) வண்டு
26. பிறரிடம் நான் ——— பேசுவேன்.
அ)
கடுஞ்சொல் ஆ) இன்சொல் இ) வன்சொல் ஈ) கொடுஞ்சொல்
27. பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப்
பொறுத்துக்கொள்வது ——— ஆகும்.
அ) வம்பு
ஆ) அமைதி இ) அடக்கம் ஈ) பொறை
28. கதிர் முற்றியதும் ___________ செய்வர்.
அ) அறுவடை ஆ) உரமிடுதல் இ) நடவு ஈ)
களையெடுத்தல்
29. விழாக்காலங்களில் வீட்டின்
வாயிலில் மாவிலையால் _________ கட்டுவர்.
அ) செடி ஆ)
கொடி இ) தோரணம் ஈ) அலங்கார வளைவு
30. பழையன கழிதலும்____________
புகுதலும்.
அ) புதியன ஆ) புதுமை இ) புதிய ஈ) புதுமையான
31. பச்சைப் பசேல் என்ற வயலைக் காண
இன்பம் தரும்.
பட்டுப்
போன மரத்தைக் காண _____________ தரும்.
அ) அயர்வு
ஆ) கனவு இ) துன்பம் ஈ) சோர்வு
32. விருந்தினரின் முகம் எப்போது
வாடும்?
அ) நம் முகம்
மாறினால் ஆ) நம் வீடு மாறினால் இ) நாம் நன்கு வரவேற்றால் ஈ) நம் முகவரி மாறினால்
33. நிலையான செல்வம் …………………….
அ) தங்கம்
ஆ) பணம் இ) ஊக்கம் ஈ) ஏக்கம்
34. ஆராயும் அறிவு உடையவர்கள்
………………….. சொற்களைப் பேசமாட்டார்கள்.
அ) உயர்வான
ஆ) விலையற்ற இ) பயன்தராத ஈ) பயன்உடைய
35. போர்க்களத்தில் வெளிப்படும்
குணம்———-
அ) மகிழ்ச்சி ஆ) துன்பம் இ) வீரம் ஈ) அழுகை
36. வீட்டுப் பயன்பாட்டிற்காகப்
பொருள் வாங்குபவர் ______________
அ) நுகர்வோர் ஆ) தொழிலாளி இ) முதலீட்டாளர் ஈ)
நெசவாளி
37. என் வீடு _________ உள்ளது. (அது / அங்கே)
38. தம்பி ____________
வா. (இவர்
/ இங்கே)
39. நீர் ___________ தேங்கி இருக்கிறது? (அது / எங்கே)
40. யார் ___________ தெரியுமா? (அவர் / யாது)
41. உன் வீடு ___________அமைந்துள்ளது? (எங்கே / என்ன)
42. கிடைக்கும் பொருள்களின் _______________
க்
கூட்டிப் புதிய பொருளாக மாற்றுவது சிறந்த வணிகம்.
(அ) அளவை (ஆ) மதிப்பை (இ) எண்ணிக்கையை (ஈ) எடையை
43. தேசம் உடுத்திய நூலாடை எனக்
கவிஞர் குறிப்பிடும் நூல்
அ)
திருவாசகம் ஆ) திருக்குறள் இ) திரிகடுகம் ஈ) திருப்பாவை
44. காளிதாசனின் தேனிசைப் பாடல்கள்
எதிரொலிக்கும் இடம்
அ)
காவிரிக்கரை ஆ) வைகைக்கரை இ) கங்கைக்கரை ஈ) யமுனைக்கரை
45. கலைக்கூடமாகக் காட்சி தருவது
அ)
சிற்பக்கூடம் ஆ) ஓவியக்கூடம் இ) பள்ளிக்கூடம் ஈ) சிறைக்கூடம்
46. காந்தியடிகளிடம் உடைஅணிவதில்
மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் _____________
அ) கோவை ஆ) மதுரை இ) தஞ்சாவூர் ஈ) சிதம்பரம்
47. காந்தியடிகள் _____________
அடி
நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார்.
அ)
நாமக்கல் கவிஞர் ஆ) பாரதிதாசன் இ) உ.வே.சாமிநாதர் ஈ) பாரதியார்
48. அ) படித்தாள் ஆ) ஐ இ) மற்று ஈ) கு
49. அ) மதுரை ஆ) கால் இ) சித்திரை ஈ) ஓடினான்
50. அ) சென்றாள் ஆ) வந்த இ) சித்திரை ஈ) நடந்து
51. அ) மா ஆ) ஐ இ)உம் ஈ) மற்று
52. பரிசு பெறும்போது நம் மனநி்ல
……………… ஆகை இருக்கும்.
அ) கைவ்ல
ஆ) துன்பம் இ) மகிழச்சி ஈ) வசாரவு
53. வாழவில் உயர கடினமாக ………………
வேண்டும்.
அ) பேச ஆ)
சிரிக்க இ) நடக்க ஈ) உழக்க
54. இடுகுறிப்பெயரை வட்டமிடுக.
அ) பறவை ஆ) மண் இ) முக்காலி ஈ) மரங்கொத்தி
55. காரணப்பெயரை வட்டமிடுக.
அ) மரம் ஆ) வளையல் இ) சுவர் ஈ) யானை
56. இடுகுறிச்சிறப்புப் பெயரை
வட்டமிடுக.
அ) வயல் ஆ) வாழை இ) மீன்கொத்தி ஈ) பறவை
57. ஏழைகளுக்கு உதவி செய்வதே …………………
ஆகும்.
அ) பகை ஆ) ஈகை இ) வறுமை ஈ) கொடுமை
58. பிற உயிர்களின் …………………….க் கண்டு
வருந்துவதே அறிவின் பயனாகும்.
அ) மகிழ்வை
ஆ) செல்வத்தை இ) துன்பத்தை ஈ) பகையை
59. உள்ளத்தில் ………………… இல்லாமல்
இருப்பதே சிறந்த அறமாகும்.
அ)
மகிழ்ச்சி ஆ) மன்னிப்பு இ) துணிவு ஈ) குற்றம்
60. புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல்
______________
அ) ஜீவ
ஜோதி ஆ) ஆசிய ஜோதி இ) நவ ஜோதி ஈ) ஜீவன் ஜோதி
61. நேர்மையான வாழ்வை வாழ்பவர் ______________
அ) எல்லா
உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டவர் ஆ) உயிர்களைத் துன்புறுத்துபவர் இ) தம்மை மட்டும்
காத்துக்கொள்பவர் ஈ) தம் குடும்பத்தையே எண்ணிவாழ்பவர்
62. ஒருவர் செய்யக் கூடாதது ______________
அ) நல்வினை ஆ) தீவினை இ) பிறவினை ஈ) தன்வினை
63. எல்லா உயிர்களிடத்தும் அன்பு
செலுத்துதல் ———-
அ) மனித
வாழ்க்கை ஆ) மனித உரிமை இ) மனித நேயம் ஈ) மனித உடைமை
64. தம் பொருளைக் கவர்ந்தவரிடமும்
———- காட்டியவர் வள்ளலார்.
அ) கோபம்
ஆ) வெறுப்பு இ) கவலை ஈ) அன்பு
65. அன்னை தெரசாவிற்கு ———- க்கான
‘நோபல் பரிசு’ கிடைத்தது
அ)
பொருளாதாரம் ஆ) இயற்பியல் இ) மருத்துவம் ஈ) அமைதி
66. கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய
இயக்கம் ———-
அ)
குழந்தைகளைப் பாதுகாப்போம் ஆ)
குழந்தைகளை நேசிப்போம் இ) குழந்தைகளை வளர்ப்போம் ஈ) குழந்தைகள் உதவி மையம்
67. பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும்
இலக்கியம் ________.
அ)
கலம்பகம் ஆ) பரிபாடல் இ) பரணி ஈ) அந்தாதி
68. வானில் _____ கூட்டம் திரண்டால் மழை பொழியும்.
அ) அகில் ஆ) முகில் இ) துகில் ஈ) துயில்
69. மொழியின் முதல்நிலை பேசுதல், ________ ஆகியனவாகும்.
அ)
படித்தல் ஆ) கேட்டல் இ) எழுதுதல் ஈ) வரைதல்
70. ஒலியின் வரிவடிவம் _________ ஆகும்.
அ) பேச்சு ஆ) எழுத்து இ) குரல் ஈ) பாட்டு
71. தமிழின் கிளை மொழிகளுள் ஒன்று _________
அ) உருது
ஆ) இந்தி இ) தெலுங்கு ஈ) ஆங்கிலம்
72. பேச்சு மொழியை ________ வழக்கு என்றும் கூறுவர்
அ) இலக்கிய ஆ) உலக இ) நூல் ஈ) மொழி
73. பசு, விடு, ஆறு, கரு
பாக்கு, பஞ்சு, பாட்டு, பத்து
ஆறு, மாசு , பாகு , அது
அரசு, எய்து, மூழ்கு, மார்பு
பண்பு, மஞ்சு, கண்டு, எஃகு
74. வாழை, கன்றை ________.
அ) ஈன்றது ஆ) வழங்கியது இ) கொடுத்தது ஈ)
தந்தது
75. நாவற்பழத்திற்கு உவமையாகக்
கூறப்படுவது _____.
அ) பச்சை
இலை ஆ) கோலிக்குண்டு இ) பச்சைக்காய் ஈ) செங்காய்
76. ‘சுட்ட பழங்கள்’ என்று
குறிப்பிடப்ப டுபவை _____.
அ) மண்
ஒட்டிய பழங்கள் ஆ) சூடான பழங்கள் இ) வேகவைத்த பழங்கள் ஈ) சுடப்ப ட்ட பழங்கள்
77. ஆசிய யானைகளில் ஆண் – பெண்
யானைகளை வேறுபடுத்துவது ____.
அ) காது ஆ) தந்தம் இ) கண் ஈ) கால்நகம்
78. தமிழகத்தில் புலிகள் காப்பகம்
அமைந்துள்ள இடம் _______.
அ)
வேடந்தாங்கல் ஆ) கோடியக்கரை இ) முண்டந்துறை ஈ) கூந்தன்குளம்
79. ‘வேட்கை’ என்னும் சொல்லில் ஐகாரக்
குறுக்கம் பெறும் மாத்திரை அளவு ______.
அ) அரை ஆ) ஒன்று இ) ஒன்றரை ஈ) இரண்டு
80. மகரக் குறுக்கம் இடம்பெறாத சொல் ________.
அ) போன்ம்
ஆ) மருண்ம் இ) பழம் விழுந்தது ஈ) பணம் கிடைத்தது
81. சொல்லின் முதலில் மட்டுமே இடம்
பெறுவது _______.
அ) ஐகாரக்
குறுக்கம் ஆ) ஔகாரக் குறுக்கம் இ) மகரக் குறுக்கம் ஈ) ஆய்தக் குறுக்கம்
82. வாய்மை எனப்படுவது ______.
அ)
அன்பாகப் பேசுதல் ஆ) தீங்குதராத சொற்களைப் பேசுதல் இ) தமிழில் பேசுதல் ஈ) சத்தமாகப்
பேசுதல்
83.
______ செல்வம்
சான்றோர்களால் ஆராயப்படும்.
அ) மன்னன்
ஆ) பொறாமை இல்லாதவன் இ) பொறாமை
உள்ளவன் ஈ) செல்வந்தன்
84. ஊர்வலத்தின் முன்னால் _____ அசைந்து வந்தது.
அ) தோரணம் ஆ) வானரம் இ) வாரணம் ஈ) சந்தனம்
85. பாஞ்சாலங்குறிச்சியில் _____ நாயை விரட்டிடும்,
அ) முயல் ஆ) நரி இ) பரி ஈ) புலி
86. மெத்தை வீடு என்று குறிப்பிடப்ப
டுவது _____.
அ) மெத்தை
விரிக்கப்ப ட்ட வீடு ஆ) படுக்கையறை உள்ள வீடு இ) மேட்டுப் பகுதியில் உள்ள வீடு ஈ) மாடி வீடு
87. இயற்கை வங்கூழ் ஆட்ட –
அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் ____________.
அ) நிலம்
ஆ) நீர் இ) காற்று ஈ) நெருப்பு
88. மக்கள் __________ ஏறி வெளிநாடுகளுக்குச் சென்றனர் .
அ) கடலில்
ஆ) காற்றில் இ) கழனியில் ஈ) வங்கத்தில்
89. புலால் நாற்றம் உடையதாக அகநானூறு
கூறுவது _____________.
அ) காற்று
ஆ) நாவாய் இ) கடல் ஈ) மணல்
90. தமிழர்கள் சிறிய நீரநிடலகடளக்
கடக்கப் பயன்படுத்தியது ___________.
அ) கலம் ஆ)
வங்கம் இ) நாவாய் ஈ) ஓடம்
91. தொல்காப்பியம் கடற்பயணத்தை ____________
வழக்கம்
என்று கூறுகிறது.
அ) நன்னீர்
ஆ) தண்ணீர் இ) முந்நீர் ஈ) கண்ணீர்
92. கப்பலை உரிய திசையில்
திருப்புவதற்குப் பயன்படும் கருவி __________.
அ) சுக்கான் ஆ) நங்கூரம் இ) கண்ணடை ஈ) சமுக்கு
93. எல்லார்க்கும் எளிதில் பொருள்
விளங்கும் சொல் ________.
அ) இயற்சொல் ஆ) திரிசொல் இ) திசைச்சொல் ஈ)
வடசொல்
94. பலபொருள் தரும் ஒருசொல் என்பது ___________.
அ)
இயற்சொல் ஆ) திரிசொல் இ) திசைச்சொல் ஈ) வடசொல்
95. வடமொழி என்று அழைக்கப ்படும் மொழி
___________.
அ)
மலையாளம் ஆ) கன்னடம் இ) சமஸ்கிருதம் ஈ) தெலுங்கு
96. பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன்
கூறுவது________.
அ) மயில் ஆ) குயில் இ) கிளி ஈ) அன்னம்
97. பின்வருவனவற்றுள் ‘ மலை’யைக்
குறிக்கும் சொல் _______.
அ) வெற்பு ஆ) காடு இ) கழனி ஈ) புவி
98. ஒருவர் தம் குழந்தைகளுக்குச்
சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் _____.
அ) வீடு ஆ) கல்வி இ) பொருள் ஈ) அணிகலன்
99. கல்வியைப் போல் _____ செல்வம் வேறில்லை.
அ)
விலையில்லாத ஆ) கேடில்லாத இ) உயர்வில்லாத ஈ) தவறில்லாத
100. காலத்தின் அருமையைக் கூறும்
திருக்குறள் அதிகாரம் ______.
அ) கல்வி
ஆ) காலமறிதல் இ) வினையறிதல் ஈ) மடியின்மை
101. கல்வியில்லாத நாடு ________ வீடு.
அ) விளக்கில்லாத ஆ) பொருளில்லாத இ) கதவில்லாத ஈ)
வாசலில்லாத
102. நன்னூலின்படி தமிழிலுள்ள
ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை _______.
அ) 40 ஆ) 42 இ) 44 ஈ) 46
103. ‘எழுதினான்’ என்பது _______.
அ) பெயர்ப்
பகுபதம் ஆ) வினைப் பகுபதம் இ) பெயர்ப் பகாப்பதம் ஈ) வினைப் பகாப்பதம்
104. பெயர்ப்பகுபதம் _______ வகைப்படும்.
அ) நான்கு
ஆ) ஐந்து இ) ஆறு ஈ) ஏழு
105. காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு
_______.
அ) பகுதி
ஆ) விகுதி இ) இடைநிலை ஈ) சந்தி
106. மயிலும் மானும் வனத்திற்கு _________ தருகின்றன.
அ) களைப்பு
ஆ) வனப்பு இ) மலைப்பு ஈ) உழைப்பு
107. அன்னை தான் பெற்ற ______ சிரிப்பில் மகிழ்ச்சி அடைகிறார்.
அ)
தங்கையின் ஆ) தம்பியின் இ) மழலையின் ஈ) கணவனின்
108. மிளகாய் வற்றலின் _________ தும்மலை வரவழைக்கும்.
அ) நெடி ஆ) காட்சி இ) மணம் ஈ) ஓசை
109. பொருந்தாத ஓசை உடைய சொல் ………………
அ)
பாய்கையால்bஆ)
மேன்மையால் இ) திரும்புகையில் ஈ) அடிக்கையால்
110. குகை ஓவியங்களில் வண்ணம் தீட்டப்
பயன்ப்பட்ட பொருள்களில் ஒன்று _______.
அ)
மண்துகள் ஆ) நீர் வண்ணம் இ) எண்ணெய் வண்ணம் ஈ) கரிக்கோல்
111. பின்வருவனவற்றுள் விகுதி பெற்ற
தொழிற்பெயர்__________.
அ) எழுது
ஆ) பாடு இ) படித்தல் ஈ) நடி
112. பின்வருவனவற்றுள் முதனிலை திரிந்த
தொழிற்பெயர்__________.
அ) ஊறு ஆ) நடு இ) விழு ஈ) எழுதல்
113.
_____________ தீமை
உண்டாகும்.
அ)
செய்யத்தகுந்த செயல்களைச் செய்வதால்
ஆ)
செய்யத்தகாத செயல்களைச் செய்யாமல் இருப்பதால்
இ) செய்யத்தகுந்த செயல்களைச் செய்யாமல்
இருப்பதால்
ஈ) எதுவும்
செய்யாமல் இருப்பதால்
114. தன்குடியைச் சிறந்த குடியாகச்
செய்ய விரும்புபவரிடம் ______ இருக்கக் கூடாது.
அ) சோம்பல் ஆ) சுறுசுறுப்பு இ) ஏழ்மை ஈ)
செல்வம்
115. மரம் வளர்த்தால் _________ பெறலாம்
அ) மாறி ஆ)
பாரி இ) காரி ஈ) பாரி
116. உழவர் சேற்று வயலில் __________ நடுவர்.
அ) செடி ஆ)
பயிர் இ) மரம் ஈ) நாற்று
117. வயலில் விளைந்து முற்றிய நெற்ப
யிர்களை __________ செய்வர்.
அ) அறுவடை ஆ) உழவு இ) நடவு ஈ) விற்பனை
118. திருநெல்வேலி_________ மன்னர்களோடு தொடர் பு உடையது.
அ) சேர ஆ)
சோழ இ) பாண்டிய ஈ) பல்லவ
119. இளங்கோ வடிகள் _________ மலைக்கு முதன்மை கொடுத்துப்
பாடினார்.
அ) இமய ஆ)
கொல்லி இ) பொதிகை ஈ) விந்திய
120. திருநெல்வேலி _________ ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
அ) காவிரி
ஆ) வைகை இ) தென்பெண்ணை ஈ) தாமிரபரணி
121. காந்தியடிகள் எப்போதும் ———–ப்
பேசினார்
அ)
வன்சொற்களை ஆ) அரசியலை இ) கதைகளை ஈ) வாய்மையை
122. ஒருவர் எல்லாருக்காகவும்
எல்லாரும் ஒருவருக்காக ________ என்பது நெறி.
அ)
தனியுடமை
ஆ) பொதுவுடைமை
இ)
பொருளுடைமை
ஈ)
ஒழுக்கமுடைமை
123. செல்வத்தின் பயன் ________ வாழ்வு
அ) ஆடம்பர
ஆ) நீண்ட இ) ஒப்புரவு ஈ) நோயற்ற வாழ்வு.
124. வறுமையை ப் பிணி என்றும்
செல்வத்தை ________ என்றும் கூறுவர்.
அ) மருந்து ஆ) மருத்துவர் இ) மருத்துவமனை ஈ)
மாத்திரை
125. உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய் என்று கூறியவர் ________.
அ)
பாரதியார் ஆ) பாரதிதாசன் இ) முடியரசன் ஈ) கண்ணதாசன்
126.
__________ ஒரு
நாட்டின் அரணன்று.
அ) காடு ஆ) வயல் இ) மலை ஈ) தெளிந்த நீர்
127. மக்கள் அனைவரும் __________ ஒத்த இயல்புடையவர்கள்.
அ) பிறப்பால் ஆ) நிறத்தால் இ) குணத்தா ல் ஈ)
பணத்தால்
128. மனித வாழ்க்கையில் தேவைப்ப டுவது _________.
அ) பணம் ஆ)
பொறுமை இ) புகழ் ஈ) வீடு
129. கூடு கட்டத் தெரியாத பறவை
அ) காக்கை
ஆ) குயில்
இ)
சிட்டுக்குருவி
ஈ)
தூக்கணாங்குருவி
130. காயிதேமில்லத் _______பண்பிற்கு உதாரணமாகத்
திகழ்ந்தார்.
அ) தண்மை
ஆ) எளிமை இ) ஆடம்பரம் ஈ) பெருமை
131. ‘காயிதே மில்லத்’ என்னும் அரபுச்
சொல்லுக்குச் _______ என்பது பொருள்.
அ)
சுற்றுலா வழிகாட்டி ஆ) சமுதாய வழிகாட்டி இ) சிந்தனை யாளர் ஈ) சட்ட வல்லுநர்
132. விடுதலைப் போராட்டத்தின்போது
காயிதேமில்லத் _______ இயக்கத்தில் கலந்துகொண்டார்.
அ)
வெள்ளையனே வெளியேறு ஆ) உப்புக்காய்ச்சும் இ) சுதேசி ஈ) ஒத்துழையாமை
133. காயிதே மில்லத் தமிழ்மொழியை
ஆட்சிமொ ழியாக்க வேண்டும் என்று பேசிய இடம் _______.
அ) சட்ட
மன்றம் ஆ) நாடா ளுமன்றம் இ) ஊராட்சி மன்றம் ஈ) நகர் மன்றம்
134. பொருளின் பெயர் அதன் உறுப்புக்கு
ஆகி வருவது ______.
அ) பொருளாகு பெயர் ஆ) சினையாகு பெயர் இ)
பண்பாகுபெயர் ஈ) இடவாகு பெயர்
135. இந்த வேலையை முடிக்க ஒரு கை
குறைகிறது என்பது ______.
அ) முதலாகு
பெயர் ஆ) சினையாகு பெயர் இ) தொழிலாகு பெயர் ஈ) பண்பாகுபெயர்
136. மழை சடசடவெ னப் பெய்தது. –
இத்தொடரில் அமைந்துள்ளது ______.
அ)
அடுக்குத்தொடர் ஆ) இரட்டைக்கிளவி இ) தொழிலாகு பெயர் ஈ) பண்பாகுபெயர்
137. அடுக்குத் தொடரில் ஒரே சொல் ______ முறை வரை அடுக்கி வரும்.
அ) இரண்டு
ஆ) மூன்று இ) நான்கு ஈ) ஐந்து
138. மக்கள் வாழும் நிலப்பகுதியைக்
குறிக்கும் சொல் _____.
அ) வைப்பு ஆ) கடல் இ) பரவை ஈ) ஆழி
139. பறவைகள் _________ பறந்து செல்கின்றன.
அ)
நிலத்தில் ஆ) விசும்பில் இ) மரத்தில் ஈ) நீரில்
140. இயற்கையைப் போற்றுதல் தமிழர் __________.
அ) மரபு ஆ) பொழுது இ) வரவு ஈ) தகவு
141. தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள
நிலையான வடிவத்தைப் பெற _____ காரணமாக அமைந்தது.
அ)
ஓவியக்கலை ஆ) இசைக்கலை இ) அச்சுக்கலை ஈ) நுண்கலை
142. வளைந்த கோடுகளால் அமைந்த
மிகப்பழைய தமிழ் எழுத்து ______ என அழைக்கப்படுகிறது.
அ) கோட்டெ
ழுத்து ஆ) வட்டெழுத்து இ) சித்திர எழுத்து ஈ) ஓவிய எழுத்து
143. தமிழ் எழுத்துச் சீர்திருத்தப்
பணியில் ஈடுபட்டவர் _____.
அ)
பாரதிதாசன் ஆ) தந்தை பெரியார் இ) வ.உ. சிதம்பரனார் ஈ) பெருஞ்சித்திரனார்
144. இதழ்களைக் குவிப்பதா ல் பிறக்கும்
எழுத்துகள் _____.
அ) இ, ஈ ஆ) உ, ஊ இ) எ, ஏ ஈ) அ, ஆ
145. ஆய்த எழுத்து பிறக்கும் இடம் ______.
அ) மார்பு
ஆ) கழுத்து இ) தலை ஈ) மூக்கு
146. வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம்
_____.
அ) தலை ஆ) மார்பு இ) மூக்கு ஈ) கழுத்து
147. நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப்
பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் _____.
அ) க், ங் ஆ) ச், ஞ் இ) ட், ண் ஈ) ப், ம்
148. கீழ்இதழும் மேல்வாய்ப்பல்லும்
இணைவதால் பிறக்கும் எழுத்து _____.
அ) ம் ஆ)
ப் இ) ய் ஈ) வ்
149. பள்ளிக்குச் சென்று கல்வி __________ சிறப்பு.
அ) பயிலுதல் ஆ) பார்த்தல் இ) கேட்டல் ஈ)
பாடுதல்
150. செஞ்சொல் மாதரின் வள்ளைப்பா
ட்டிற்கேற்ப முழவை மீட்டுவது ________.
அ) கடல் ஆ) ஓடை இ) குளம் ஈ) கிணறு
151. வானில் கரு _____ தோன்றினால் மழை பொழியும் என்பர்.
அ) முகில் ஆ) துகில் இ) வெயில் ஈ) கயல்
152. முறையான உடற்பயிற்சியும் சரிவிகித
உணவும் _____யும்
ஓட்டிவிடும்.
அ) பாலனை
ஆ) காலனை இ) ஆற்றலை ஈ) நலத்தை
153. செவ்விந்தியர்கள் நிலத்தைத் _____ மதிக்கின்றனர்.
அ) தாயாக ஆ) தந்தையாக இ) தெய்வமாக ஈ)
தூய்மையாக
154. மாடு வயலில் புல்லை மேய்ந்தது. –
இத்தொடரிலுள்ள வினைமுற்று _____.
அ) மாடு ஆ)
வயல் இ) புல் ஈ) மேய்ந்தது
155. பின்வருவனவற்றுள் இறந்தகால
வினைமுற்று _____.
அ) படித்தான் ஆ) நடக்கிறான் இ) உண்பான் ஈ)
ஓடாது
156. பின்வருவனவற்றுள் ஏவல்
வினைமுற்றுச் சொல் _____.
அ) செல்க
ஆ) ஓடு இ) வாழ்க ஈ) வாழிய
157. புகழாலும் பழியாலும் அறியப்படுவது
_____.
அ)
அடக்கமுடைமை ஆ) நாணுடைமை
இ) நடுவுநிலைமை ஈ) பொருளுடைமை
158. ‘வருமுன்னர்’ எனத் தொடங்கும்
குறளில் பயின்று வந்துள்ள அணி _____.
அ)
எடுத்துக்காட்டு உவமை அணி ஆ) தற்குறிப்பேற்ற அணி
இ) உவமை அணி ஈ) உருவக அணி
159. உடல்நலம் என்பது _______ இல்லாமல் வாழ்தல் ஆகும்.
அ) அணி ஆ)
பணி இ) பிணி ஈ) மணி
160. நீலகேசி கூறும் நோயின் வகைகள் _______.
அ) இரண்டு
ஆ) மூன்று இ) நான்கு ஈ) ஐந்து
161. காந்தியடிகள் _____ போற்ற வாழ்ந்தார்.
அ) நிலம்
ஆ) வையம் இ) களம் ஈ) வானம்
162. தொடக்க காலத்தில் மனிதர்கள்
மருத்துவத்திற்குத் _____ பயன்படுத்தினர்.
அ) தாவரங்களை ஆ) விலங்குகளை இ) உலோகங்களை ஈ)
மருந்துகளை
163. தமிழர் மருத்துவத்தில் மருந்து
என்பது _____ நீட்சியாகவே உள்ளது.
அ)
மருந்தின் ஆ) உடற்பயிற்சியின் இ) உணவின் ஈ) வாழ்வின்
164. உடல் எடை அதிகரிப்பதா ல் ஏற்படும்
நோய்களுள் ஒன்று _____.
அ) தலைவலி
ஆ) காய்ச்சல் இ) புற்றுநோய் ஈ) இரத்தக் கொதிப்பு
165. சமையலறையில் செலவிடும் நேரம் _____ செலவிடும் நேரமாகும்.
அ)
சுவைக்கா க ஆ) சிக்கனத்திற்காக இ) நல்வாழ்வுக்காக ஈ) உணவுக்காக
166. முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும்
சொல் _____ எனப்படும்.
அ) முற்று
ஆ) எச்சம் இ) முற்றெச்சம் ஈ) வினையெச்சம்
167. கீழ்க்காணும் சொற்களில்
பெயரெச்சம் _____.
அ) படித்து
ஆ) எழுதி இ) வந்து ஈ) பார்த்த
168. குறிப்பு வினையெச்சம் _____ வெளிப்படையாகக் காட்டாது.
அ) காலத்தை ஆ) வினையை இ) பண்பினை ஈ) பெயரை
169. கற்றவருக்கு அழகு தருவது ________.
அ) தங்கம்
ஆ) வெள்ளி இ) வைரம் ஈ) கல்வி
170. என் நண்பர் பெரும் புலவராக
இருந்தபோதும் _____ இன்றி வாழ்ந்தார்.
அ) சோம்பல்
ஆ) அகம்பாவம் இ) வருத்தம் ஈ) வெகுளி
171. அறியாமையை நீக்கி அறிவை
விளக்குவது _____.
அ) விளக்கு
ஆ) கல்வி இ) விளையாட்டு ஈ) பாட்டு
172. கல்விப் பயிற்சிக்குரிய பருவம் _____
அ) இளமை ஆ) முதுமை இ) நேர்மை ஈ) வாய்மை
173. இன்றைய கல்வி _____ நுழைவதற்குக் கருவியாகக்
கொள்ளப்பட்டு வருகிறது.
அ)
வீட்டில் ஆ) நாட்டில் இ) பள்ளியில் ஈ) தொழிலில்
174. பெயர்ச்சொ ல்லின் பொருளை
வேறுபடுத்துவது _________ ஆகும்.
அ) எழுவாய்
ஆ) செயப்படுபொருள் இ) பயனிலை ஈ) வேற்றுமை
175. எட்டாம் வேற்றுமை ___________ வேற்றுமை என்று அழைக்கப்ப
டுகிறது.
அ) எழுவாய்
ஆ) செயப்படுபொருள் இ) விளி ஈ) பயனிலை
176. உடனிகழ்ச்சிப் பொருளில் _____________
வேற்றுமை
வரும்.
அ) மூன்றாம் ஆ) நான்காம் இ) ஐந்தாம் ஈ) ஆறாம்
177. ‘அறத்தான் வருவதே இன்பம்’ –
இத்தொடரில் ________ வேற்றுமை பயின்று
வந்துள்ளது.
அ)
இரண்டாம் ஆ) மூன்றாம் இ) ஆறாம் ஈ) ஏழாம்
178. ‘மலர் பானையை வனைந்தாள்’ –
இத்தொடர் ________ பொருளைக் குறிக்கிறது.
அ) ஆக்கல் ஆ) அழித்தல் இ) கொடை ஈ) அடைதல்
179. காட்டிலிருந்து வந்த _____ கரும்பைத் தின்றன.
அ)
முகில்கள் ஆ) முழவுகள் இ) வேழங்கள் ஈ) வேய்கள்
180. பசியால் வாடும் _____ உணவளித்தல் நமது கடமை.
அ)
பிரிந்தவர்க்கு ஆ) அலந்தவர்க்கு இ) சிறந்தவர்க்கு ஈ) உயர்ந்தவருக்கு
181. நம்மை _____ப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
அ) இகழ்வாரை ஆ) அகழ்வாரை இ) புகழ்வாரை ஈ)
மகிழ்வாரை
182. மறைபொருளைக் காத்தல் _____ எனப்படும்.
அ) சிறை ஆ)
அறை இ) கறை ஈ) நிறை
183. பழந்தமிழ் இலக்கியங்களைப்
பாதுகாத்து வைத்தவை ______.
அ)
கல்வெட்டுகள் ஆ) செப்பேடுகள் இ) பனையோலைகள் ஈ) மண்பாண்டங்கள்
184. பானை______ ஒரு சிறந்த கலையாகும்.
அ) செய்தல்
ஆ) வனைதல் இ) முடைதல் ஈ) சுடுதல்
185. சொற்களுக்கு இடையே வேற்றுமை உருபு
மறைந்து வருவது _____.
அ) வேற்றுமைத்தொகை ஆ) உம்மைத்தொகை
இ)
உவமைத்தொகை ஈ) அன்மொழித்தொகை
186. ‘செம்மரம்’ என்னும் சொல் _____த்தொகை.
அ) வினை ஆ) பண்பு இ) அன்மொழி ஈ) உம்மை
187. ‘கண்ணா வா!’- என்பது _____த் தொடர்.
அ) எழுவாய்
ஆ) விளி இ) வினைமுற்று ஈ) வேற்றுமை
188. அரசரை அவரது _____ காப்பாற்றும்.
அ)
செங்கோல் ஆ) வெண்கொற்றக்குடை
இ) குற்றமற்ற ஆட்சி ஈ) படை வலிமை
189. சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள்
தாம் பேசும் _____ தகுதி அறிந்து பேச
வேண்டும்.
அ)
சொல்லின் ஆ) அவையின் இ) பொருளின் ஈ) பாடலின்
190. தோட்டத்தில் தம்பி ஊன்றிய __________ எல்லாம் முளைத்தன.
அ)
சத்துகள் ஆ) பித்துகள் இ) முத்துகள் ஈ) வித்துகள்
191. என் நண்பன் செய்த தொழிலில்
அவனுக்கு ___________ பெருகிற்று.
அ) காரி ஆ)
ஓரி இ)வாரி ஈ) பாரி
192. கனத்த மழை என்னும் சொல்லின்
பொருள் _____.
அ) பெருமழை ஆ) சிறு மழை
இ)
எடைமிகுந்த மழை ஈ) எடை குறைந்த மழை
193. ‘வண்புகழ் மூவர் தண்பொழில்
வரைப்பு’ என்று குறிப்பிடும் நூல் _____.
அ) தொல்காப்பியம் ஆ) அகநானூறு இ) புறநானூறு ஈ)
சிலப்பதிகாரம்
194. சேரர்களின் தலைநகரம் _____.
அ) காஞ்சி
ஆ) வஞ்சி இ) தொண்டி ஈ) முசிறி
195. பழங்காலத்தில் விலையைக் கணக்கிட
அடிப்படையாக அமைந்தது _____.
அ) புல் ஆ) நெல் இ) உப்பு ஈ) மிளகு
196. ஆன்பொருநை என்று அழைக்கப்ப டும்
ஆறு _____.
அ) காவிரி
ஆ) பவானி இ) நொய்யல் ஈ) அமராவதி
197. வீட்டுஉபயோகப் பொருள்கள்
தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம்
_____.
அ) நீலகிரி
ஆ) கரூர் இ) கோயம்புத்தூர் ஈ) திண்டுக்கல்
198. விகாரப் புணர்ச்சி _____ வகைப்படும்.
அ) ஐந்து
ஆ) நான்கு இ) மூன்று ஈ) இரண்டு
199. ‘பாலாடை’ – இச்சொல்லுக்குரிய
புணர்ச்சி _____
அ) இயல்பு ஆ) தோன்றல் இ) திரிதல் ஈ) கெடுதல்
200. சிங்கம் _____யில் வாழும்.
அ) மாயை ஆ)
ஊழி இ) முழை ஈ) அலை
201. கலிங்க வீரர்களிடையே தோன்றிய
உணர்வு _____.
அ) வீரம்
ஆ) அச்சம் இ) நாணம் ஈ) மகிழ்ச்சி
202. வானில் முழுநிலவு அழகாகத் ___________ அளித்தது.
அ) தயவு ஆ) தரிசனம் இ) துணிவு ஈ) தயக்கம்
203. இந்த _________ முழுவதும் போற்றும்படி வாழ்வதே
சிறந்த வாழ்வு.
அ) வையம் ஆ) வானம் இ) ஆழி ஈ) கானகம்
204. அறநெறியில் வாழ்பவர்கள் உயிரைக்
கவர வரும் _____ க் கண்டு அஞ்சமாட்டார்க ள்.
அ) புலனை
ஆ) அறனை இ) நமனை ஈ) பலனை
205. ஒன்றே _____ என்று கருதி வாழ்வதே
மனிதப்பண்பாகும்.
அ) குலம் ஆ) குளம் இ) குணம் ஈ) குடம்
206. மனிதர்கள் தம் _____ தீய வழியில் செல்ல விடாமல் காக்க
வேண்டும்.
அ)
ஐந்திணைகளை ஆ) அறுசுவைகளை
இ)
நாற்றிசைகளை ஈ) ஐம்பொறிகளை
207. ஞானியர் சிறந்த கருத்துகளை
மக்களிடம் _____.
அ) பகர்ந்தனர் ஆ) நுகர்ந்தனர் இ) சிறந்தனர் ஈ)
துறந்தனர்
208. மக்களின் ஒழுக்கத்துடன்
தொடர்புடையது ________.
அ) வானம்
ஆ) கடல் இ) மழை ஈ) கதிரவன்
209. ஆண்மையின் கூர்மை __
அ)
வறியவருக்கு உதவுதல் ஆ) பகைவருக்கு உதவுதல் இ) நண்பனுக்கு உதவுதல் ஈ) உறவினருக்கு உதவுதல்
210. வறுமை வந்த காலத்தில் _____ குறையாமல் வாழ வேண்டும்.
அ) இன்பம்
ஆ) தூக்கம் இ) ஊக்கம் ஈ) ஏக்கம்
211. அடுத்தவர் வாழ்வைக் கண்டு _____ கொள்ளக்கூடாது.
அ) உவகை ஆ)
நிறை இ) அழுக்காறு ஈ) இன்பம்
212. நாம் நீக்கவேண் டியவற்றுள் ஒன்று _____ .
அ) பொச்சாப்பு ஆ) துணிவு இ) மானம் ஈ) எளிமை
213. உன்னுடன் நீயே_____கொள்.
அ)
சேர்ந்து ஆ) பகை இ) கைகுலுக்கிக் ஈ) நட்பு
214. கவலைகள்_____அல்ல.
அ) சுமைகள்
ஆ) சுவைகள்
இ)
துன்பங்கள் ஈ) கைக்குழந்தைகள்
ஊர்ப்
பெயர்களின் மரூஉவை எழுதுக
மரூஉ
• நாம் எல்லாச் சொற்களையும் எல்லா
இடங்களிலும் முழுமையான வடிவத்தில் பயன்படுத்துவது இல்லை.
• தஞ்சாவூர் என்னும் பெயரைத் தஞ்சை என்றும், திருநெல்வேலி என்னும் பெயரை நெல்லை எனவும் வழங்குகிறோம்.
• இவ்வாறு இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து, சிதைந்து வழங்கும் சொற்கள் மரூஉ
எனப்படும்.
• (எ.கா.)- கோவை, குடந்தை, எந்தை, போது, சோணாடு
நீதிமன்றத்தில் தொடுக்கும் வழக்கு
வேறு; இலக்கண
வழக்கு என்பது வேறு. நம் முன்னோர் எந்தப்பொருளை எந்தச்சொல்லால் வழங்கி வந்தனரோ, அதனை அப்படியே நாமும் வழங்கி
வருவதற்கு வழக்கு என்று பெயர். இஃது 1) இயல்பு வழக்கு, 2) தகுதி வழக்கு என இருவகைப்படும்.
* ஒரு பொருளைச் சுட்டுவதற்கு, எந்தச் சொல் இயல்பாக வருகிறதோ, அந்தச் சொல்லாலேயே வழங்குவதை இயல்பு வழக்கு என்பர். இதனை 1) இலக்கணமுடையது, 2) இலக்கணப்போலி, 3) மரூஉ என மூவகையாகக் கூறுவர்.
• தஞ்சாவூர், கோயமுத்தூர் இவ்வூர்களை எவ்வாறு
சுருக்கி அழைக்கிறோம் ?
= தஞ்சை, கோவை.
• தஞ்சாவூர், கோயமுத்தூர் இவை தஞ்சை, கோவை எனச் சிதைந்து வந்துள்ளதால், இவற்றை மரூஉ என அழைக்கிறோம்.
1. ஆற்றூர் – ஆத்தூர்
2. சேலையூர் –
சேலம்
3. கருவூர்-கரூர்
4. கொடைக்கானல்
– கோடை
5. மணப்பாறை –
மணவை
6. விருதுநகர்
– விருதை
7. பரமக்குடி
– பரம்பை
8. சங்கரன்கோவில்
– சங்கை
9. அம்பாசமுத்திரம்
– அம்பை
10. அறந்தாங்கி
– அறந்தை
11. அலங்காநல்லூர்
– அலங்கை
12. சிங்களாந்தபுரம்
– சிங்கை
13. சிங்காநல்லூர்
– சிங்கை
14. மயிலாடுதுறை
– மயூரம்
15. சேந்தமங்கலம்
– சேந்தை
16. சோழிங்கநல்லூர்
– சோளிங்கர்
17. திருவண்ணாமலை
– அருணை
18.கருந்தட்டைக்குடி
– கரந்தை
19. கரிவலம்
வந்தநல்லூர் – கருவை
20. இராமநாதபுரம்
– முகவை
21. நாகர்கோவில்
– நாஞ்சி
22. மயிலாடுதுறை
– மாயூரம்
23. திருத்தணி
– தணிகை
24. வேதாரண்யம்
– வேதை
25. திருச்செந்தூர்
– செந்தூர் / திருச்சீரலைவாய் / அலைவாய்
26. தர்மபுரி
-தகடூர்
27. உசிலம்பட்டி
– உசிலை
28. காஞ்சிபுரம்
– காஞ்சி
29. பாளையங்கோட்டை
– பாளை
30. ஸ்ரீவைகுண்டம்
– ஸ்ரீவை
31. ஸ்ரீவில்லிபுத்தூர்
– ஸ்ரீவி
32. அருப்புக்கோட்டை
-அருவை
33. சிதம்பரம்
– தில்லை
சேதுராயன்புத்தூர்
– சேராத்து
34. திருக்குருகூர்(ஆழ்வார்
35.
திருநகரி)-குருகை
36. உறையூர்-உறந்தை
37. திருவாரூர்
– ஆரூர்
38. மயிலாப்பூர்
– மயிலை
39. வண்ணாரப்பேட்டை
– வண்ணை
40. பூவிருந்தவல்லி
– பூந்தமல்லி
41. சைதாப்பேட்டை
– சைதை
42. வானவன்
மாதேவி – மானாம் பதி
43. மன்னார்குடி
– மன்னை
44. மன்னார்குடி
– மண்ணை
45. நாகப்பட்டினம்
– நாகை
46. புதுக்கோட்டை
– புதுகை
47. புதுக்கோட்டை
– புதுமை
48. புதுச்சேரி
– புதுவை
கும்பகோணம்
– 49. குடந்தை
50. திருச்சிராப்பள்ளி
– திருச்சி
51. சோழநாடு –
சோணாடு
52. நாகப்பட்டினம்
– நாகை
53. உதகமண்டலம்
– ஊட்டி
54. உதகமண்டலம்
– உதகை
55. பைம்பொழில்
– பம்புளி
56. கோவன்புத்தூர்
– கோயம்புத்தூர்
57. கோயம்புத்தூர்
– கோவை
58. தேவகோட்டை
– தேவோட்டை
59. திருநெல்வேலி
– நெல்லை
60. செங்கற்பட்டு
– செங்கை
61. தஞ்சை –
தஞ்சாவூர்
62. திருநின்றவூர்
– தின்னனூர்
பேச்சு
வழக்கு சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்களை இணைத்தல்
பேச்சு வழக்கு சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்களை
இணைத்தல்
எ. கா
• பாச்சல் – பாத்தி
• பதனம் –
கவனமாக
• நீத்துப்பாகம்
– மேல்கஞ்சி
• கடிச்சு
குடித்தல் – வாய்வைத்துக் குடித்தல்
• மகுளி –
சோற்றுக் கஞ்சி
• வரத்துக்காரன்
– புதியவன்
• சடைத்து
புளித்து – சலிப்பு
• அலுக்கம் –
அழுத்தம் (அணுக்கம்)
• தொலவட்டையில்
– தொலைவில்
• வூடு –
வீடு
• வேல – வேலை
• தண்ணீ –
தண்ணீர்
• வௌக்கு –
விளக்கு
1. அம்மா பசிக்கிது. எனக்குச் சோறு
வேணும் – அம்மா! பசிக்கிறது. எனக்குச் சோறு வேண்டும்.
2. சொல்லு –
சொல்
3. நில்லு –
நில்
4. வந்தியா –
வந்தாயா?
5. சாப்ட்டியா
– சாப்பிட்டாயா?
6. கோர்த்து –
கோத்து
7. சுவற்றில்
– சுவரில்
8. நாட்கள் –
நாள்கள்
9. மனதில் –
மனத்தில்
10. பதட்டம் –
பதற்றம்
11. சிலவு –
செலவு
12. அருகாமையில்
– அருகில்
13. பாரு –
பார்
14. இங்க –
இங்கு
15. தனியா –
தனியாக
16. தெரியல –
தெரியவில்லை
17. கதுவு –
கதவு
18. ரயிலு –
இரயில்
19. புக்கு –
புத்தகம்
20. நாக்காலி –
நாற்காலி
21. வெத்தல –
வெற்றிலை
22. அஞ்சு –
ஐந்து
23. செல்லு –
செல்
24. கொல்லு –
கொல்
25. வெல்லு –
வெல்
26. தள்ளு –
தள்
27. துள்ளு –
துள்
28. போனியா –
போனாயா?
29. பார்த்தியா
– பார்த்தாயா?
30. சொன்னியா –
சொன்னாயா?
31. கொடுத்தியா
– கொடுத்தாய?
32. செய்தியா –
செய்தாயா?
33. சாப்ட்டான்
– சாப்பிட்டான்
34. இந்தா –
பிடித்துக்கொள்
35. வாங்கியாந்த
– வாங்கிவந்த
36. கிளம்பு –
புறப்படு
37. செம்ம –
செம்மை
38. செய்தியா –
செய்தாயா?
39. புட்டு –
பிட்டு
40. அங்க –
அங்கே
41. தேத்தண்ணி
– தேநீர்
42. கத்திரிக்கோல்
– கத்தரிக்கோல்
43. படிச்சான்
– படித்தான்
44. ஆப்பை –
அகப்பை
45. கூப்டியா? – கூப்பிட்டாயா?
46. இன்னா
சொல்லுற? – என்ன
சொல்கிறாய்
47. நோம்பு –
நோன்பு
48. காத்தால –
காலையில்
49. சாந்தரம் –
மாலையில்
50. கழட்டு –
கழற்று
51. துகை –
தொகை
52. சிகப்பு –
சிவப்பு
53. பண்டகசாலை
– பண்டசாலை
54. புண்ணாக்கு
– பிண்ணாக்கு
55. ரொம்ப –
நிரம்ப
56. வத்தல் –
வற்றல்
57. வெண்ணை –
வெண்ணெய்
58. பசும்பால்
– பசுப்பால்
59. வலதுபக்கம்
– வலப்பக்கம்
60. பேரன் –
பெயரன்
61. பேத்தி –
பெயர்த்தி
62. வேர்வை –
வியர்வை
63. முயற்சித்தார்
– முயன்றார்
64. நஞ்சை –
நன்செய்
65. தின்றீர் –
திருநீறு
66. சீயக்காய்
– சிகைக்காய்
67. நாகரீகம் –
நாகரிகம்
68. திருவாணி –
திருகாணி
69. சாணி –
சாணம்
70. பாவக்காய்
– பாகற்காய்
71. உசிர் –
உயிர்
72. ஊரணி –
ஊருணி
73. கடக்கால் –
கடைக்கால்
இப்பகுதியில்
பிழை திருத்தம் tnpsc வரையிலான அனைத்தையும் தொகுத்து கொடுத்துள்ளோம்.
ஏழுதுவதைப்
பிழையின்றி எழுதினால்தன் படிப்போர்க்குப் பொரு மயக்கம் ஏற்படாது. திணை, பால், எண், இடம், காலம், மரபு ஆகியவற்றில்
வழுவின்றி எழுதப் பயிற்சி பெற வேண்டும். சில வகைகள் மட்டும் இங்கு
விளக்கப்பட்டுள்ளன.
வாக்கியப் பிழையும் திருத்தமும் :
வாக்கியங்களைப்
பிழையின்றி எழுத சில இலக்கண நெறிகளைக் கையாள வேண்டும்.
1. உயர்திணைப் எழுவாய்
உயர்திணைப் பயனிலையைப் பெற்று வரும். அது போன்று அஃறிணை எழுவாய்க்குப் பின்
அஃறிணை வினைமுற்றே வர வேண்டும்.
2. எழுவாய் ஐம்பால்களுள்
எதில் உள்ளதோ அதற்கேற்ற வினைமுற்றையே பயன்படுத்த வேண்டும்.
3. கள் விகுதி பெற்ற
எழுவாய், வினைமுற்றிலும்
கள் விகுதி பெறும். அதே போன்று எழுவாய் ‘அர்’ விகுதி பெற்றிருந்தால்
வினைமுற்றிலும் ‘அர்’ விகுதி வருதல் அவசியம்.
4. எழுவாய் ஒருமையாயின்
வினைமுற்றும் ஒருமையாகவே இருக்க வேண்டும்.
5. தொடரில் காலத்தை
உணர்த்தும் குறிப்புச் சொற்கள் இருப்பின் அதற்கேற்ற காலத்திலமைந்த வினைமுற்றே
எழுத வேண்டும்.
6. கூறியது கூறல் ஒரே
தொடரில் இடம் பெறக் கூடாது.
7. வாக்கியத்தில்
உயர்திணை, அஃறிணைப்
பெயர்கள் கலந்து வந்தால், சிறப்பு
கருதின் உயர்திணைப் பயனிலைக் கொண்டும், இழிவு கருதின்
அஃறிணைப் பயனிலைக் கொண்டும் வாக்கியத்தை முடிக்க வேண்டும்.
8. உயர்திணை, அஃறிணைப் பெயர்கள்
விரவி வந்தால், மிகுதி
பற்றி ஒருதிணை வினை கொண்டு முடித்தல் வேண்டும்.
தங்கை வருகிறது |
பிழை |
தங்கை வருகிறாள் |
திருத்தம் |
தம்பி வந்தார் |
பிழை |
தம்பி வந்தான் |
திருத்தம் |
மாணவர்கள் எழுதினர் |
பிழை |
மாணவர்கள் எழுதினார்கள் |
திருத்தம் |
ஆசிரியர் பலர் வந்தார்கள் |
பிழை |
ஆசிரியர் பலர் வந்தனர் |
திருத்தம் |
மங்கையர்க்கரசியார் பேசினாள் |
பிழை |
மங்கையர்க்கரசியார் பேசினார் |
திருத்தம் |
என் எழுதுகோல் இதுவல்ல |
பிழை |
என் எழுதுகோல் இதுவன்று |
திருத்தம் |
அவன் மாணவன் அல்ல |
பிழை |
அவன் மாணவன் அல்லன் |
திருத்தம் |
உடைகள் கிழிந்து விட்டது |
பிழை |
உடைகள் கிழிந்து விட்டன |
திருத்தம் |
செழியன் இன்று ஒரு புதிய நூல் ஒன்றை
வாங்கினான் |
பிழை |
செழியன் இன்று புதிய நூல் ஒன்று வாங்கினான் |
திருத்தம் |
தலைவர் நாளை வந்தார் |
பிழை |
தலைவர் நாளை வருவார் |
திருத்தம் |
ஆமைகள் வேகமாக ஓடாது |
பிழை |
ஆமைகள் வேகமாக ஓடா |
திருத்தம் |
நதிகள் தோன்றுமிடத்தில் சிறியதாய் இருக்கும் |
பிழை |
நதிகள் தோன்றுமிடததில் சிறியனவாய் இருக்கும் |
திருத்தம் |
தலைவர் தன் தொண்டர்களுக்கு நன்றி கூறினார் |
பிழை |
தலைவர் தம் தொண்டர்களுக்கு நன்றி கூறினார் |
திருத்தம் |
ஒவ்வொரு ஊரிலும் தொலைக்காட்சிப் பெட்டி
உள்ளது. |
பிழை |
ஒவ்வோர் ஊரிலும் தொலைக்காட்சிப் பெட்டி
உள்ளது. |
திருத்தம் |
தொல்காப்பியம் என்ற இலக்கண நூல்
தொன்மையானது |
பிழை |
தொல்காப்பியம் எனும் இலக்கண நூல் தொன்மையானது |
திருத்தம் |
மூடனும் மாடும் குளத்தில் குளித்தனர் |
பிழை |
மூடனும் மாடும் குளத்தில் குளித்தன |
திருத்தம் |
ஆற்று வெள்ளத்தில் மக்களும், மரங்களும், குடிசைகளும், ஆடு
மாடுகளும் மிதந்து சென்றனர். |
பிழை |
ஆற்று வெள்ளத்தில் மக்களும், மரங்களும், குடிசைகளும், ஆடு
மாடுகளும் மிதந்து சென்றன. |
திருத்தம் |
ஆறு காலிழந்த ஆண்களும், நான்கு
கையிழந்த பெண்களும் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டன. |
பிழை |
காலிழந்த ஆண்கள் அறுவரும், கையிழந்த
பெண்கள் நால்வரும் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டன. |
திருத்தம் |
பேச்சு
வழக்கு தொடர்களிலுள்ள பிழை திருத்தம்
•
கண்மாய் –
கம்மாய்
• உறைக்கிணறு
– ஊரணி
பேச்சு வழக்கு |
எழுத்து வழக்கு (தமிழ் சொல்) |
தம்பீ?
எங்க நிக்கிறே? |
தம்பி எங்கே நிற்கிறாய்? |
நீங்க சொன்ன எடத்துலதாண்ணே ! எதிர்த்தாப்புல
ஒரு டீ ஸ்டால் இருக்குது. |
நீங்கள் சொன்ன இடத்தில்தான் அண்ணா !
எதிர்ப்புறத்தில் ஒரு தேநீர் கடை இருக்கிறது. |
அங்ஙனக்குள்ளயே டீ சாப்டுட்டு, பேப்பரப்
படிச்சிட்டு இரு.. நா வெரசா வந்துருவேன் |
அங்கேயே தேநீர் சாப்பிட்டுவிட்டு, செய்தித்தாள்
படித்துக்கொண்டிரு. நான் விரைவாக வந்து விடுகிறேன் |
அண்ணே! சம்முவத்தையும் கூட்டிக்கிட்டு
வாங்கண்ணே! அவனெய் பாத்தே ரொம்ப நாளாச்சு! |
அண்ணா! சண்முகத்தையும் கூட்டிக்கொண்டு
வாருங்கள் அண்ணா! அவனைப் பார்த்து அதிக நாட்களாகிவிட்டன. |
அவம்பாட்டியோட வெளியூர் போயிருக்கான்.
உங்கூருக்கே அவனேக் கூட்டிக்கிட்டு வர்றேன். |
அவன் பாட்டியுடன் வெளியூர் சென்றிருக்கிறான்.
உங்கள் ஊருக்கே அவனைக் கூட்டிக்கொண்டு வருகிறேன். |
ரொம்பச் சின்ன வயசுல பார்த்ததுண்ணே ! அப்ப
அவனுக்கு மூணு வயசு இருக்கும்! |
நிறைய நாளுக்கு முன்னால் சின்ன வயதில்
பார்த்தது அண்ணா . அப்போது அவனுக்கு மூன்று வயது இருக்கும் |
இப்ப ஒசரமா வளந்துட்டான்! ஒனக்கு அடையாளமே
தெரியாது! ஊருக்கு எங்கூட வருவாம் பாரேன்! சரி, போனை வையி. நாங கௌம்பிடேன்… |
இப்போது உயரமாக வளர்ந்துவிட்டான். உனக்கு
அடையாளமே தெரியாது. ஊருக்கு என்னுடன் வருவான். பார்த்துக்கொள். சரி. தொலைபேசியை
வைத்துவிடு. நான் புறப்படுகிறேன். |
சரிங்கண்ணே ! |
சரி அண்ணா ! |
இப்ப எனக்குப் புரிஞ்சு போச்சு. நீயும்
புரிஞ்சிக்கோ. |
இப்பொழுது எனக்குப் புரிந்துவிட்டது.நீயும்
புரிந்துகொள். |
நிலத்தக் கௌறணும்டா அப்பதான் வகுறு நிறையும். |
நிலத்தை உழுதால்தான் வயிறு நிறையும். |
அண்ணைக்கு அவனுக்குப் பணம் குடுத்து
ஒதவியிருக்க வேண்டியதான. |
அன்று அவனுக்குப் பணம் கொடுத்து உதவியிருக்க
வேண்டியதுதான். |
வூட்டாண்ட வெளையாண்ட கொயந்தையை அப்பா எங்க
இஸ்துகினு போனாரு. |
வீட்டுக்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த
குழந்தையை அப்பா எங்கு அழைத்துக்கொண்டு போனார். |
புள்ளைக்கு உடம்பு சரியில்லை மூணு நாளா
சிரமப்படுது |
பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லை. மூன்று
நாட்களாக துன்பப்படுகிறது. |
ரவைக்கு சித்தப்பன காவலுக்குப் போவ சொல் |
இரவு சித்தப்பாவை காவலுக்குப் போகச் சொல். |
நம் மானிலம் இந்த ஆண்டு வரட்சியால்
பாதிக்கப்பட்டது. |
நம் மாநிலம் இந்த ஆண்டு வறட்சியால்
பாதிக்கப்பட்டது. |
எங்கள் ஊரில் நூலகக் கட்டிடம் கட்ட அறசு நிதி
ஒதுக்கியது. |
எங்கள் ஊரில் நூலகம் கட்டடம் கட்ட அரசு நிதி
ஒதுக்கியது. |
ரங்கன் வெங்கலப் பாத்திரக்கடை
வைத்திருக்கிறார். |
ரங்கன் வெண்கலப் பாத்திரக்கடை
வைத்திருக்கிறார். |
மானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள்
பயிரிடப்படுகின்றன. |
வானம் பார்த்த பூமியில் பயறு வகைகள்
பயிரிடப்படுகின்றன. |
ஐப்பசி அடைமழையில் ஊருனி நிறைந்தது. |
ஐப்பசி அடை மழையில் ஊருணி நிறைந்தது. |
இன்னிக்கு சாயங்காலம் கபடி போட்டி நடைபெறும். |
இன்றைக்கு சாயுங்காலம் கபடி போட்டி
நடைபெறும். |
சாயந்தரம் நேரத்தோடு வராட்டி அம்மா திட்டும். |
மாலையில் விரைவாக வீட்டிற்கு வரவில்லை எனில்
அம்மா திட்டுவார்கள். |
சித்த நாழி உக்காரு, இந்தா
வந்திடறேன். |
சற்று நேரம் அமருங்கள் இதோ வந்து விடுகிறேன். |
அம்மாசிச் சோறு ஆசைப்பட்டா கெடைக்காது. |
அமாவாசை சோறு ஆசைப்பட்டால் கிடைக்காது. |
வெளையாட்டிலேயே கண்ணா இருக்காதே. |
விளையாட்டில் கண்ணாக இருக்காதே |
அம்மாப் பொண்ணுக்குக் கண்ணாலம். அவரவர்
வூட்டுலெ சாப்பாடு. |
அம்மாள் பெண்ணிற்குத் திருமணம்; அவரவர்
வீட்டிலே சாப்பாடு |
தலைக்கு சீக்கா தேச்சு முழுவனா ஒடம்புக்கு குளிர்ச்சி |
தலைக்கு சீகைக்காய் தேய்த்துக் குளித்தால்
உடம்பிற்கு குளிர்ச்சி. |
நெல்லுச்சோறு வவுத்துக்கு நோவு தராது |
அரிசி உணவு வயிற்றுக்கு நோய் தராது. |
பொண்ணு கண்ணாலத்துக்கு சீர் செனத்தி சேத்தி
வச்சிருக்கியா? |
பெண்ணின் திருமணத்திற்கு சீர்வரிசை பொருள்கள்
சேர்த்து வைத்திருக்கிறாயா? |
விடிகால எந்திருச்சி வெள்ளாம பாக்க போனான். |
விடியற்காலையில் எழுந்து விவசாயம் பார்க்கப்
போனான். |
மானம் பாத்த பூமியில மழ பெஞ்சு பல
வருசமாச்சு. |
வானம் பார்த்த பூமியில் மழை பொழிந்து பல
வருடங்களாயிற்று |
காத்தாடி வுட்ட மாஞ்சா கவுறு கழுத்த
அறுத்ததுப் புடிச்சு |
பட்டம் விட்ட மாஞ்சா கயிறு கழுத்தை அறுத்தது. |
சிற்சில வட்டார மரபுகளை அறிந்து
கொள்க:
1. தீமிதியல் திருவிழாவில்
தீக்குழியைப் பூக்குழியென்றும் தீமிதியலைப் பூமிதியல் என்றும் சொல்லுதல் மரபு.
2. நீர்வளம் மிகுந்த பாங்கரில்
முப்பூ விளையும் வெள்ளாமையைப் பூ வென்பது மரபு.
3. மிளகுநீரைச் (சாற்றமுது) சாத்தமுது என்பது வைணவர் மரபு.
4. திருமணம் முதலிய மங்கல
நிகழ்ச்சிகளுக்கு கீற்று வேய்வதனைக் கொட்டகை யென்பது செட்டி நாட்டு மரபு.
5. ஆசிரியரை ஐயர் என்றே அழைப்பது வேலூர் ஆம்பூர்
வட்டத்தார் மரபு.
6. அமிழ்தத்தை உப்புச்சாறு என்பது சீரங்கம் கோவில் மரபு.
சொற்களை இணைத்துப் புதிய சொல்
உருவாக்குதல்
(மற்றும், அல்லது, ஆல், பிறகு, வரை, இதுவுமல்ல.
இருப்பினும், எனினும், இதனால்)
இரண்டு சொற்களை இணைத்துப் புதிய
சொற்களை உருவாக்குக
(நூல், மொழி, கோல், மீன், நீதி, எழுது, கண், வெளி, தமிழ், மணி, மாலை, விண்)
1.
விண்மீன் 2.
மணிமாலை 3.
நீதிநூல் 4.
விண்வெளி 5.
தமிழ்மாலை 6.
கண்மணி 7.
எழுதுகோல் 8.
தமிழ்மொழி |
1.
தமிழ்நூல் 2.
நீதிமொழி 3.
விண்மீன் 4.
நீதிமணி 5.
மணிமொழி 6.
மீன்கண் 7.
நீதிமாலை 8.
தமிழ்வெளி |
இரண்டு சொற்களை இணைத்துப் புதிய
சொற்களை உருவாக்குக.
கண் |
அழகு |
மண் |
|
விண் |
உண்டு |
பண் |
1.
கண் + அழகு = கண்ணழகு 2.
மண் + அழகு = மண்ணழகு 3.
விண் + அழகு = விண்ணழகு 4.
பண் + அழகு = பண்ணழழு |
1.
கண் + உண்டு= கண்ணுண்டு 2.
மண் + உண்டு= மண்ணுண்டு 3.
விண் + உண்டு = விண்ணுண்டு 4.
பண் + உண்டு = பண்ணுண்டு |
சொற்களை இணைத்துப் புதிய சொற்களை
உருவாக்குக.
(தேன், விளக்கு, மழை, விண், மணி, விலங்கு, செய், மேகலை, வான், பொன், பூ)
எ.கா. பூமணி
விடை:
1. மணிமேகலை
2. தேன் மழை
3. பூமழை
4. வான்மழை
5. பொன்மழை
6. செய்விளக்கு
7. பொன்செய்
8. செய்மணி
9. செய்தேன்
10. வான்விளக்கு
11. பொன்மணி
12. பூந்தேன்
13. பூத்தேன்
TNPSC
Group 4 Sample Questions
1. அண்ணன் ________ தம்பி இருவரும் போட்டியில் கலந்து கொண்டனர்.
A) பிறகு
B) இருப்பினும்
C) ஆல்
D) மற்றும்
விடை: D) மற்றும்
2. நீ நன்கு படிக்க
வேண்டும் ________ நன்கு தொழில் கற்றுக்கொள்ள வேண்டும்.
A) மற்றும்
B) மட்டும் அல்ல
C) அல்லது
D) இருப்பினும்
விடை: C) அல்லது
3. இன்பத்தமிழ்
என்னும் பாடல் பாரதிதாசன் _________ இயற்றப்பட்டது.
A) கு
B) இன்கண்
C) ஆல்
D) பிறகு
விடை: C) ஆல்
4. ___________ என்ன, அனைவரும் வந்து விட்டோம்.
A) அதனால்
B) இதனால்
C) இருப்பினும்
D) பிறகு
விடை : D) பிறகு
5. நான் புத்தகத்தை
முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் __________
முழுவதும் படித்தேன்.
A) மற்றும்
B) வரை
C) இருப்பினும்
D) எனினும்
விடை : B) வரை
6. தேர்வில் அது
முக்கியம் இது முக்கியம் _________ என்பதை உணர்ந்து படிக்க வேண்டும்
A) அதுவுமல்ல
B) இதுவுமல்ல
C) இருப்பினும்
D) இதனால்
விடை: B) இதுவுமல்ல
7. அவர் முயன்றார், __________ வெற்றி பெறவில்லை.
A) இதனால்
B) பிறகு
C) எனினும்
D) இருப்பினும்
விடை : D) இருப்பினும்
8. தெருவிளக்குகள் அணைக்கப்பட்டுவிட்டன____________ நிலவொளி இருந்தது
A) பிறகு
B) இதனால்
C) எனினும்
D) மற்றும்
விடை: C) எனினும்
9. ஒரு விஷயத்தைப்
பற்றி கவனமாக சிந்திக்க வேண்டும்,
___________ நீங்கள் அதைப் பற்றி ஒரு முடிவை
எடுக்க முடியும்
A) வரை
B) பிறகு
C) இதனால்
D) அதனால்
விடை: C) இதனால்
அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த
இடத்தில் சேர்த்தல்
(எனவே, ஏனெனில், ஆகையால், அதுபோல, அதனால், வரை, பின்பு)
எ. கா:
• நான் காட்டிற்குச் சென்றேன். அதனால் புலியைப் பார்த்தேன்.
• மாலைநேரம் முடியும் வரை விளையாடுவேன்.
• தேர்வு முடிந்த பின்பு சுற்றுலா செல்லலாம்
சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக.
(எனவே, ஏனெனில், அதனால், ஆகையால், அதுபோல, இல்லையென்றால், மேலும்)
1. காயிதே மில்லத் அவர்கள் மகிழுந்தில் பயணம் செய்வதை
விரும்பாதவர். __________ அவர் எளிமையை
விரும்பியவர்.
விடை
: ஏனெனில்
2. நாம் இனிய சொற்களைப் பேச வேண்டும். __________
துன்பப்பட
நேரிடும்.
விடை
: இல்லையென்றால்
3. குயிலுக்குக் கூடு கட்டத் தெரியாது. __________
காக்கையின்
கூட்டில் முட்டையிடும்.
விடை
: ஆகையால்
4. அதிக அளவில் மரங்களை வளர்ப்போம். __________
மரங்கள்தான்
மழைக்கு அடிப்படை.
விடை
: ஏனெனில்
5. பிறருக்குக் கொடுத்தலே செல்வத்தின் பயன். __________
பிறருக்குக்
கொடுத்து மகிழ்வோம்.
விடை
: எனவே
6. தமிழகத்தில் மழை பெய்துவருகிறது. __________
இரண்டு
நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு.
விடை
: மேலும்
இணைச்சொற்களை இட்டு நிரப்புக.
( மேடுபள்ளம், ஈடுஇணை, கல்விகேள்வி, போற்றிப்புகழப்பட, வாழ்வுதாழ்வு, ஆடிஅசைந்து )
1. சான்றோர் எனப்படுபவர் __________
சிறந்தவர்
ஆவர்.
விடை
: கல்விகேள்வி
2. ஆற்று வெள்ளம் __________
பாராமல்
ஓடியது.
விடை
: மேடுபள்ளம்
3. இசைக்கலைஞர்கள் _________
வேண்டியவர்கள்.
விடை
: போற்றிப்புகழப்பட
4. தமிழ் இலக்கியங்களின் பெருமைக்கு _________
இல்லை
விடை
: ஈடுஇணை
5. திருவிழாவில் யானை __________
வந்தது.
விடை
: ஆடிஅசைந்து
பல
பொருள் தரும் ஒரு சொல்லைக் கூறுக
ஒரு சொல் |
பல பொருள் |
காடு |
கா, கால், கான், கானகம்,
அடவி, அரண், ஆரணி, புரவு, பொற்றை, பொழில், தில்லம், அழுவம், இயவு, பழவம், முளரி, வல்லை, விடர், வியல், வனம், முதை, மிளை, இறும்பு, சுரம், பொச்சை, பொதி, முளி, அரில், அறல், பதுக்கை, கணையம். |
கடல் |
புணரி,
ஆழி, சாகரம், சமுத்திரம், பெளவம், வேலை, முந்நீர், நீராழி, பெருநீர் |
கப்பல் |
கலம், கட்டுமரம், நாவாய், படகு, பரிசில், புணை, தோணி, தெப்பம், திமில், அம்பி, வங்கம், மிதவை, பஃறி, ஓடம் |
ஆறு |
ஓர் எண் (6), இயற்கையாக இருகரைகளுக்கு இடையில்
நீர் ஓடும் பரப்பு, வழி, தணி |
யானை |
கயம், வேழம்,
களிறு, பிளிறு, களபம், மாதங்கம், கைம்மா, வாரணம், அஞ்சனாவதி, அத்தி, அத்தினி, அரசுவா, அல்லியன், அனுபமை, ஆனை, இபம், இரதி, குஞ்சரம், வல்விலங்கு, கரி, அஞ்சனம். |
கடி |
மணம், காவல்,
விரைவாக, கூர்மையான, வாசனை, காவல், கடி(த்தல்), சிறப்பு, களிப்பு, அச்சம் |
மிகுதி |
உறு, தவ, நனி |
ஓவியம் |
ஓவு, ஓவியம்,
ஓவம், சித்திரம், படம், படாம், வட்டிகைச்செய்தி |
ஓவியம் வரைபவர் |
கண்ணுள் வினைஞர், ஓவியப்
புலவர், ஓவமாக்கள், கிளவி வல்லோன், சித்திரக்காரர், வித்தகர் |
ஓவியக் கூடம் |
எழுதெழில் அம்பலம், எழுத்துநிலை
மண்டபம், சித்திர அம்பலம், சித்திரக்கூடம், சித்திரமாடம், சித்திரமண்டபம், சித்திர
சபை |
அருள் |
இரக்கம்,
கருணை, தயவு, கிருபை, அபயம். |
வீடு |
அகம், இல், இல்லம்,
உறையுள், கிருகம், மனை. |
அறிவு |
ஞானம்,
மதி, உணர்வு, உரம், மேதை, விவேகம் |
உணவு |
ஆகாரம்,
உண்டி, போஜனம், ஊன், அடிசில், தீனி. |
தாமரை |
பங்கயம்,
கமலம், அம்புயம், முளரி, புண்டரிகம், சரோருகம், மரை, பூ, தாவுகின்ற
மான். |
அரி |
திருமால்,
அரிதல், சிங்கம், வண்டு |
ஆலம் |
விடம்,
ஒரு மரம், மழைநீர், அம்புக்கூடு |
கண்டம் |
கழுத்து,
ஆபத்து, நிலப்பெரும்
பிரிவு |
கலம் |
பாத்திரம்,கப்பல், ஆபரணம். |
சரம் |
அம்பு,
அசையும்பொருள், பூமாலை |
தாலம் |
பனை. நா,
பூமி |
பதி |
அரசன்,
இடம், கணவன் |
பார் |
பூமி, கற்பாறை,
பார்த்தல் |
வளை |
சங்கு,
புற்று, வளைதல். |
அணி |
அழகு, நகை, வரிசை,
அணிகலன், உடுத்து, அலங்காரம், ஆபரணம்.
ஒழுங்கு, படைப்பிரிவு, அணிதல், |
அகம் |
உள்ளம்,
வீடு, இடம் |
அம்பு |
கணை, மூங்கில்,
நீர், மேகம் |
அரங்கம் |
நாடகசாலை,
சபை, போர்க்களம் |
அன்னம் |
சோறு, ஒருவகைப் பறவை |
அகம் |
வீடு, மனம், உட்பகுதி |
அரவம் |
ஒலி, பாம்பு |
அலை |
கடல் அலை,
திரி |
அணை |
படுக்கை,
தடுத்தல், தழுவு |
அகல் |
நீங்கு,
விளக்கு ஏற்றும் தானம் |
அறை |
சொல், அடி, திரை, வீட்டின் பகுதி |
அடி |
கீழ்ப்பகுதி, பாதம், அடித்தல் |
ஆற்றல் |
வல்லமை,
திறமை |
ஆரம் |
மாலை, சந்தனம் |
ஆடு |
ஒருவகை விலங்கு, ஆடுதல் |
ஆடி |
கண்ணாடி,
தமிழ்மாதம், கூத்தாடி |
ஆறு |
எண், நதி, வழி |
ஆவி |
உயிர்,
நீராவி, உயிரெழுத்து |
ஆலம் |
ஆலமரம்,
நஞ்சு,கடல்,கலப்பை |
இசை |
புகழ்,
இணங்கு, பண் |
இதழ் |
பூவிதழ்,
உதடு |
இடி |
தாக்கு,
வானிடி, முழக்கம், உறுதிச்சொல். |
இறை |
கடவுள்,
நீர் இறைத்தல் |
இரை |
ஒலிசெய்,
உணவு |
ஈ |
கொடு, பறவை, இரத்தல்,
அழிவு |
உரம் |
எரு, ஞானம்,
மதில், வலிமை |
உரம் |
எரு, ஞானம்,
மதில், வலிமை |
உடு |
உடுத்து,
விண்மீன், ஒடக்கோல், அகமி |
உரை |
சொல், தேய் |
உறை |
மேலுறை,
வசி |
உடுக்கை |
ஆடை, ஒருவித இசைக்கருவி |
ஊதை |
பருத்தல்,
ஊதுகருவி, குளிர்க்காற்று |
எகினம் |
அன்னம்,
நீர்நாய், புளியமரம் |
ஏறு |
காளை, ஆண் சிங்கம், மேலே செல் |
ஏனம் |
பாத்திரம், பன்றி |
ஏற்றம் |
நீர் இறைக்கும் கருவி, உயர்வு |
ஐயம் |
சந்தேகம்,
பிச்சை |
ஓதி |
கூந்தல்,ஓதுபவன்,
ஓந்தி |
கலை |
ஆடை, கல்வி,
கலைத்தல் |
களை |
நீக்கு,
பயிருக்குக் கேடான புல் |
கடி |
காவல்,
காப்பு, கூர்மை, விரைவு |
கழை |
கரும்பு,
மூங்கில் |
கலி |
பாவகை,
சனி, துன்பம், வறுமை |
கரி |
யானை, சாட்சி,
அடுப்புக்கரி |
கல் |
பாறைக்கல், படி, தோண்டு |
கவி |
குரங்கு,
கவிஞர், பாடல் |
கம்பம் |
தூண், நடுக்கம் |
கப்பல் |
கலம், நாவாய் |
கா |
காப்பாற்று, சோலை, காவடி, பூப்பெட்டி |
காயம் |
பெருங்காயம், புண், உடல், நிலைபேறு |
கார் |
கருமை,
மேகம் |
கிளை |
மரக்கிளை,
உறவு |
குடி |
குடித்தல், குடும்பம், குடிப்பழக்கம் |
குழவி |
குழந்தை,
சேய், குழவிக்கல் |
குடை |
கைக்குடை,
தோண்டு |
கூடு |
சேர், உடம்பு,
பறவைக்கூடு |
கோள் |
கிரகம்,
புறம்கூறுதல் |
சங்கம் |
சங்கு,
கூட்டம் |
சுரம் |
வழி, வெப்பம் |
சேனை |
படை, தானை, கிழங்கு |
சோழன் |
கிள்ளி,
வளவன், அபயன் |
தாள் |
பாதம்,
முயற்சி, காகிதம் |
திரை |
அலை, வெற்றிலை |
சந்திரன் |
திங்கள்,
மாதம், கிழமை, மதி, பிறை, நிலவு, நிலா, அம்புலி |
திரு |
உயர்ந்த அழகு, செல்வம், மேன்மை, இலக்குமி, மரியாதை
அடை. |
திரி |
அலை, விளக்குத் திரி |
துணி |
துண்டு செய், ஆடை |
தை |
தைத்தல்,
மாதம் |
தையல் |
பெண், தைத்தல் |
நகை |
சிரிப்பு,
அணிகலன் |
நாண் |
கயிறு,
வெட்கம், வட்டத்தின்
நடுவில் வரையும் கோடு |
நாடு |
விரும்பு,
தேசம் |
நாகம் |
பாம்பு,
துத்தநாகம் |
படி |
வாசி, படிக்கட்டு, அளக்கும் கருவி |
பள்ளி |
கல்விக்கூடம், படுக்கை, தொழுமிடம் |
பணி |
பணிவு,
அணிகலன் |
பார் |
உலகம்,
காண் |
புயல் |
மேகம்,
பெருங்காற்று |
பிழை |
தவறு, உயிர் தப்புதல் |
பிடி |
பெண் யாணை, பிடித்துக்கொள் |
மதி |
அறிவு,
நிலா |
மடி |
சோம்பல்,
இற |
மறம் |
வீரம்,
பாவம் |
மணம் |
திருமணம்,
கலத்தல் |
மா |
பெரிய,
விலங்கு, மாமரம் |
மாலை |
பொழுது,
தார் |
மாசு |
குற்றம்,
தீது |
முடி |
தலை, செய்துமுடி, கட்டு |
மெய் |
உண்மை,
உடம்பு |
வரை |
மலை, தீட்டு,
எல்லை |
வலி |
வலிமை,
நோவு |
வாரணம் |
யானை, கோழி, கடல், சங்கு |
விடை |
பதில்,
காளை |
வேங்கை |
புலி, வேங்கைமரம் |
வேழம் |
யானை, கரும்பு |
சூரியன் |
ஞாயிறு,
பகலவன், கதிரவன், ஆதவன், பரிதி, அருக்கன், வெய்யோன், அனலி, இரவி |
வானம் |
ஆகாயம்,
வான், விசும்பு, விண்ணகம், விண் |
நெருப்பு |
தீ, அக்கினி,
அழல்,தழல், கனல் |
பாட்டு |
கவி, கவிதை,
செய்யுள், பா, பாடல்,கீதம் |
புத்தகம் |
ஏடு, நூல், இழை, பனுவல் |
பூமி |
உலகம்,புவி,பார், வையகம்,
அகிலம், தரணி, குவலயம் |
நித்திரை |
துயில்,
உறக்கம், துஞ்சல், தூக்கம் |
உடல் |
தேகம்,
உடம்பு, சரீரம், மேனி, யாக்கை |
ஒலி |
தொனி, சத்தம்,
அரவம், ஓசை, ஆரவாரம் |
ஒளி |
கதிரவன்,
வெளிச்சம், விளக்கு. |
சினம் |
கோபம். சீற்றம், காய்தல், முனிதல் |
மனைவி |
மனையாள்,
இல்லாள், தலைவி, கிழத்தி |
உண்மை |
மெய், சத்தியம்,
வாய்மை |
தலை |
சிரம்,
உச்சி |
பாம்பு |
சர்ப்பம்,
அரவம், பணி |
குழந்தை |
மகவு, சேய், பிள்ளை,
குழவி, சிசு. மழலை |
சிரிப்பு |
புன்னகை,
நகைப்பு, முறுவல் |
அரசன் |
மன்னன்,
வேந்தன், கோன், கோ |
வனம் |
காடு, ஆரணியம்,
கானகம், அடவி |
ஆசை |
ஆவல், விருப்பம், அவா |
வயல் |
பழனம்,
கழனி, கமம் |
சண்டை |
சமர், அமர், போர், யுத்தம் |
சோறு |
அன்னம்,
சாதம், அடிசில், உணவு, ஊன், ஆகாரம், சாப்பாடு. |
இரத்தம் |
குருதி,
உதிரம், சோரி, கறை |
குதிரை |
அசுவம்,
துரகம், புரவி, மா,பரி |
நீர் |
தண்ணீர்,
புனல், சலம், அப்பு |
தண்டனை |
அபராதம்,
குற்றம், தண்டம் |
அழகு |
எழில்,
வனப்பு, கவின், வடிவு, அணி |
வீடு |
இல்லம்,
மனை, அகம், உறையுள் |
சிங்கம் |
சியம்,
கேசரி, மடங்கல், அரி |
தொடர் வகைகள்
தொடர்கள் பொருள் அடிப்படையில் நான்கு வகைப்படும்.
1. செய்தித் தொடர்
ஒரு செய்தியைத் தெளிவாகக் கூறும் தொடர்
செய்தித் தொடர் ஆகும்.
(எ.கா.) கரிகாலன் கல்லணையைக் கட்டினான்.
2. வினாத்தொடர்
ஒருவரிடம் ஒன்றை வினவுவதாக அமையும்
தொடர் வினாத்தொடர் ஆகும்
(எ.கா.) சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?
3. விழைவுத் தொடர்
ஏவல், வேண்டுதல், வாழ்த்துதல், வைதல் ஆகிய
பொருள்களில் வரும் தொடர் விழைவுத் தொடர் ஆகும்.
(எ.கா.)
• இளமையில் கல் – (ஏவல்)
• உன் திருக்குறள் நூலைத் தருக – (வேண்டுதல்)
• உழவுத்தொழில் வாழ்க. – (வாழ்த்துதல்)
• கல்லாமை ஒழிக. – (வைதல்)
4. உணர்ச்சித் தொடர்
உவகை, அழுகை, அவலம், அச்சம், வியப்பு முதலான உணர்ச்சிகளை உணர்த்தும்
தொடர் உணர்ச்சித் தொடர் எனப்படும்.
(எ.கா.)
• அடடா! என் தங்கை பரிசு பெற்றாள்! – (உவகை)
• ஆ! புலி வருகிறது! – (அச்சம்)
• பழந்தமிழ் இலக்கியங்கள் பல
அழிந்துவிட்டனவே – (அவலம்)
• ஆ! மலையின் உயரம்தான் என்னே! – (வியப்பு)
கொடுக்கப்பட்டுள்ள தொடர்களின் வகையைக்
கண்டறிந்து எழுதுக.
1. முக்காலமும்
உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள்._ _ _
_ _ _ _ _
2. கடமையைச் செய்._ _ _ _ _ _ _ _
3. பாரதியார் பாடல்களின் இனிமைதான் என்னே!_ _ _ _ _ _ _ _
4. நீ எத்தனை புத்தகங்களைப்
படித்திருக்கிறாய்?_ _ _ _ _ _ _ _
Answer:
1. செய்தித்தொடர்
2. விழைவுத்தொடர்
3. உணர்ச்சித் தொடர்
4. வினாத்தொடர்
தொடர்களை மாற்றுக.
1. நேற்று நம் ஊரில் மழை
பெய்தது. (வினாத்தொடராக மாற்றுக.)
விடை : நேற்று நம் ஊரில் மழை பெய்ததா?
2. காடு மிகவும்
அழகானது. (உணர்ச்சித் தொடராக மாற்றுக.)
விடை : என்னே! காட்டின் அழகு!
3. ஆ! பூனையின் காலில்
அடிபட்டுவிட்டதே! (செய்தித்தொடராக மாற்றுக.)
விடை : பூனை காலில் அடிபட்டுவிட்டது
4. அதிகாலையில் துயில்
எழுவது நல்லது. (விழைவுத் தொடராக மாற்றுக.)
விடை : அதிகாலையில் துயில் எழு
5. முகில்கள் திரண்டால்
மழை பெய்யும் அல்லவா? (செய்தித்தொடராக மாற்றுக.)
விடை : முகில்கள் திரண்டால் மழை பெய்யும்
6. காட்டில் புலி
நடமாட்டம் உள்ளது. (வினாத்தொடராக மாற்றுக.)
விடை : காட்டில் புலி நடமாட்டம் உள்ளதோ?
1. தென்னிந்தியாவின்
அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன – இது எவ்வகைத் தொடர்?
1.
வினாத்தொடர்
2.
கட்டளைத்தொடர்
3.
செய்தித்தொடர்
4.
உணர்ச்சித்தொடர்
விடை : செய்தித்தொடர்
சொற்றொடர்
சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள்
தருவது “சொற்றொடர்” அல்லது “தொடர்” எனப்படும்.
எ.கா. நீர் பருகினான், வெண்சங்கு ஊதினான்
I. தொகைநிலைத் தொடர்கள்
பெயர்ச்சொல்லோடு வினைச்சொல்லும்
பெயர்ச்சொல்லும் சேரும் தொடரின் இடையில், வேற்றுமை உருபுகளோ. வினை, பண்பு முதலியவற்றின்
உருபுகளோ தொக்கி (மறைந்து) இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட சொற்கள் ஒரு சொல் போல்
நிற்குமானால் அதனைத் தொகைநிலைத்தொடர் என்று கூறுவர்.
எ.கா. கரும்பு தின்றான்.
மேற்கண்ட தொடர் கரும்பைத் தின்றான்
என்னும் பொருளை உணர்த்துகிறது. இத்தொடரில் உள்ள இரண்டு சொற்களுக்கு நடுவில் ஐ
என்னும் உருபு மறைந்து நின்று, அப்பொருளைத் தருகிறது. எனவே, இது தொகைநிலைத் தொடர் எனப்படும்.
தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும். அவை
வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை என்பன ஆகும்.
1. வேற்றுமைத்தொகை
எ.கா. மதுரை சென்றார்
இத்தொடர் மதுரைக்குச் சென்றார் என
விரிந்து நின்று பொருள் தருகிறது. கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களுக்கு இடையில் “கு”
என்னும் வேற்றுமை உருபு இல்லை. அது தொக்கி நின்று பொருளை உணர்த்துகிறது.
இவ்வாறு ஒரு தொடரில் வேற்றுமை உருபுகள்
(ஐ, ஆல், கு, இன், அது, கண்) ஆகியவற்றுள் ஒன்று மறைந்து வந்து பொருள் உணர்த்துவது
வேற்றுமைத்தொகை எனப்படும்.
உருபும் பயனும் உடன்தொக்க தொகை
எ.கா. தேர்ப்பாகன்.
இத்தொடர் “தேரை ஓட்டும் பாகன்” என
விரிந்து பொருளை உணர்த்துகிறது. கொடுக்கப்பட்டுள்ள தேர், பாகன் என்னும்
சொற்களுக்கிடையில் “ஐ” என்னும் வேற்றுமை உருபும் “ஓட்டும்” என்னும் பொருளை
விளக்கும் பயனும் மறைந்து வந்துள்ளன.
இவ்வாறு ஒரு தொடரில் வேற்றுமை உருபும்
அதன் பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து மறைந்து வருவது உருபும் பயனும் உடன்
தொக்க தொகை எனப்படும். இதுவும் வேற்றுமைத் தொகையே ஆகும்.
தமிழ்த்தொண்டு (தமிழுக்குச் செய்யும்
தொண்டு) நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை.
2. வினைத்தொகை
காலம் காட்டும் இடைநிலையும் பெயரெச்ச
விகுதியும் மறைந்து நிற்க, வினைப் பகுதியைத் தொடர்ந்து ஒரு பெயர் வந்து ஒரு சொல்லைப் போல்
நடப்பது “வினைத்தொகை” எனப்படும். காலம் கரந்த பெயரெச்சமே வினைத்தொகையாகும்.
எ.கா. வீசுதென்றல், கொல்களிறு.
வீசு, கொல் என்பவை வினைப்பகுதிகள். இவை முறையே
தென்றல், களிறு என்னும் பெயர்ச்சொற்களோடு சேர்ந்து காலத்தை வெளிப்படுத்தாத
பெயரெச்சங்களாயின. மேலும் இவை வீசிய காற்று, வீசுகின்ற காற்று, வீசும் காற்று எனவும் கொன்ற களிறு, கொல்கின்ற களிறு, கொல்லும் களிறு எனவும் முக்காலத்திற்கும் பொருந்தும்படி விரிந்து பொருள் தருகின்றன. காலம்காட்டும்
இடைநிலைகள் இப்பெயரெச்சங்களில் தொக்கி இருக்கின்றன.
வினைப்பகுதியும் அடுத்துப் பெயர்ச்
சொல்லும் அமைந்த சொற்றொடர்களிலேயே வினைத்தொகை அமையும்.
3. பண்புத்தொகை
நிறம், வடிவம், சுவை, அளவு முதலானவற்றை உணர்த்தும்
பண்புப்பெயருக்கும் அது தழுவிநிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையில் “மை” என்னும்
பண்பு விகுதியும் ஆகிய, ஆன என்னும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.
செங்காந்தள் செம்மையாகிய காந்தள், வட்டத்தொட்டி வட்டமான
தொட்டி. இன்மொழி -இனிமையான மொழி.
இருபெயரொட்டுப்
பண்புத்தொகை
சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர்
பின்னும் நின்று இடையில் ‘ஆகிய’ என்னும் பண்பு உருபு தொக்கி வருவது இருபெயரொட்டுப்
பண்புத்தொகையாகும்.
எ.கா. மார்கழித் திங்கள், சாரைப்பாம்பு.
திங்கள், பாம்பு ஆகிய பொதுப் பெயர்களுக்குமுன்
மார்கழி, சாரை எனும் சிறப்புப் பெயர்கள் வந்து மார்கழி ஆகிய திங்கள் என்றும்
சாரை ஆகிய பாம்பு என்றும் இருபெயரொட்டாக வந்துள்ளன.
4. உவமைத்தொகை
உவமைக்கும் பொருளுக்கும் (உவமேயம்)
இடையில் உவமஉருபு மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும்.
எ.கா : மலர்க்கை (மலர் போன்ற கை)
மலர் – உவமை, கை – உவமேயம் (பொருள்) இடையே ‘போன்ற’
என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது.
5. உம்மைத்தொகை
இருசொற்களுக்கு இடையிலும் இறுதியிலும்
‘உம்’ என்னும் இடைச்சொல் மறைந்து வருவது உம்மைத்தொகையாகும். உம்மைத்தொகை எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும்
நான்கு அளவுப் பெயர்களைத் தொடர்ந்து வரும்.
எ.கா. அண்ணன் தம்பி, தாய்சேய்
அண்ணனும் தம்பியும், தாயும் சேயும் என
விரிந்து பொருளை உணர்த்துகின்றன.
6. அன்மொழித்தொகை
வேற்றுமை, வினை. பண்பு, உவமை. உம்மை ஆகிய
தொகைநிலைத் தொடர்களில் உருபுகளும் அவை அல்லாத வேறு சொற்களும் மறைந்து நின்று
பொருள் தருவது அன்மொழித் தொகை எனப்படும்.
எ.கா. சிவப்புச் சட்டை பேசினார்
முறுக்கு மீசை வந்தார்.
இவற்றில் சிவப்புச் சட்டை அணிந்தவர் பேசினார். முறுக்கு
மீசையை உடையவர் வந்தார் எனத் தொகைநிலைத்தொடர் அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று
பொருள் தருகின்றன.
பெரிய மீசை சிரித்தார் வண்ணச்
சொல்லுக்கான தொகையின் வகை எது?
அ) பண்புத்தொகை
ஆ) உவமைத்தொகை
இ) அன்மொழித்தொகை
ஈ) உம்மைத்தொகை
விடை : பண்புத்தொகை
II. தொகாநிலைத் தொடர்கள்
ஒரு தொடரில் சொற்களுக்கு இடையில் சொல்லோ
உருபோ மறைந்து வராமல் வெளிப்படையாகப் பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர்
எனப்படும்.
எ.கா: காற்று வீசியது
குயில் கூவியது.
முதல் தொடரில் “காற்று” என்னும்
எழுவாயும் “வீசியது” என்னும் பயனிலையும் தொடர்ந்து நின்று வேறுசொல் வேண்டாது
பொருளை உணர்த்துகின்றது.
அதேபோன்று இரண்டாவது தொடரிலும்
எழுவாயும் பயனிலையும் தொடர்ந்து நின்று குயில் கூவியது என்னும் பொருளைத்
தருகின்றது.
தொகாநிலைத் தொடரின் ஒன்பது வகைகள்
1. எழுவாய்த்தொடர்
எழுவாயுடன் பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள்
தொடர்வது எழுவாய்த்தொடர் ஆகும்.
இனியன் கவிஞர் – பெயர்
காவிரி பாய்ந்தது – வினை
பேருந்து வருமா? – வினா
மேற்கண்ட மூன்று தொடர்களிலும் பெயர்.
வினை, வினா ஆகியவற்றுக்கான பயனிலைகள் வந்து
எழுவாய்த் தொடர்கள் அமைந்துள்ளன.
2. விளித்தொடர்
விளியுடன் வினை தொடர்வது விளித்தொடர்
ஆகும்.
நண்பா எழுது! – “நண்பா” என்னும் விளிப்பெயர்
‘எழுது” என்னும் பயனிலையைக்கொண்டு முடிந்துள்ளது.
3. வினைமுற்றுத்தொடர்
வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடர்வது
வினைமுற்றுத்தொடர் ஆகும்.
பாடினாள் கண்ணகி.
“பாடினாள்” என்னும்
வினைமுற்று முதலில் நின்று ஒரு பெயரைக்கொண்டு முடிந்துள்ளது.
4. பெயரெச்சத்தொடர்
முற்றுப் பெறாத வினை, பெயர்ச்சொல்லைக்
கொண்டு முடிவது பெயரெச்சத்தொடர் எனப்படும்.
கேட்ட பாடல் கேட் என்னும் எச்சவினை
“பாடல்” என்னும் பெயரைக்கொண்டு முடிந்துள்ளது.
5. வினையெச்சத்தொடர்
முற்றுப் பெறாத வினை. வினைச்சொல்லைக்
கொண்டு முடிவது வினையெச்சத்தொடர் ஆகும்.
பாடி மகிழ்ந்தனர் “பாடி” என்னும்
எச்சவினை “மகிழ்ந்தனர்’ என்னும் வினையைக் கொண்டு முடிந்துள்ளது.
6. வேற்றுமைத்தொடர்
வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும்
தொடர்கள் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்கள் ஆகும்.
கட்டுரையைப் படித்தாள்.
இத்தொடரில் ஐ என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக
வந்து பொருளை உணர்த்துகிறது.
அன்பால் கட்டினார் – (ஆல்) மூன்றாம்
வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
அறிஞருக்குப் பொன்னாடை – (கு) நான்காம்
வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்
7. இடைச்சொல் தொடர்
இடைச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது
இடைச்சொல் தொடர் ஆகும்.
மற்றொன்று – மற்று + ஒன்று. “மற்று”
என்னும் இடைச்சொல்லை அடுத்து “ஒன்று” என்னும் சொல் நின்று பொருள் தருகிறது.
8. உரிச்சொல் தொடர்
உரிச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது
உரிச்சொல் தொடர் ஆகும்.
சாலச் சிறந்தது ‘சால” என்பது உரிச்சொல்.
அதனைத்தொடர்ந்து “சிறந்தது” என்ற சொல்நின்று மிகச் சிறந்தது என்ற பொருளைத்
தருகிறது.
9. அடுக்குத் தொடர்
ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித்
தொடர்வது அடுக்குத் தொடர் ஆகும்.
வருக! வருக! வருக! ஒரே சொல் உவகையின்
காரணமாக மீண்டும் மீண்டும் அடுக்கி வந்துள்ளது.
பின்வருவனவற்றுள் முறையான தொடர்.
அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை
இலைக்கு இடமுண்டு.
ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில்
தனித்த இடமுண்டு.
இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத்
தனித்த இடமுண்டு.
ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த
இலைக்கு இடமுண்டு.
Answer: இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.
அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய
சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது…………………………….
அ) வேற்றுமை உருபு
ஆ) எழுவாய்
இ) உவம உருபு
ஈ) உரிச்சொல்
Answer: அ) வேற்றுமை உருபு
மரபுத் தமிழ்
• திணை
மரபு
• பால் மரபு
• இளமைப் பெயர்
• ஒலிமரபு
• வினைமரப
• தொகை மரபு
இளமை மரபுச்சொற்கள்
தாவரங்கள் : காய்களின்
இளமை மரபு
அவரைப்பிஞ்சு
வெள்ளரிப்பிஞ்சு
கத்தரிப்பிஞ்சு
தென்னங்குரும்பை
வாழைக்கச்சல்
மாவடு
விலங்குகள்: இளமை
மரபு
குருவிக்குஞ்சு
கழுதைக்குட்டி
மான்கன்று
சிங்கக்குருளை
கோழிக்குஞ்சு
எருமைக்கன்று
நாய்க்குட்டி
புலிப்பறழ்
ஆட்டுக்குட்டி
பன்றிக்குட்டி
பூனைக்குட்டி
கீரிப்பிள்ளை
ஒலி மரபுச்சொற்கள்
குயில் கூவும்
கிளி கொஞ்சும்
சிங்கம் முழங்கும்
மயில் அகவும்
கூகை குழறும்
நரி ஊளையிடும்
காகம் கரையும்
குதிரை கனைக்கும்
யானை பிளிறும்
வினைமரபுச்சொற்கள்
அப்பம் தின்
நெல் தூற்று
நீர் பாய்ச்சு
காய்கறி அரி
களை பறி
பாட்டுப் பாடு
இலை பறி
பழம் தின்
மலர் கொய்
பயிற்சி : பொருத்துக.
1. காகம் – கூவும்
2. குதிரை – கரையும்
3. சிங்கம் – கனைக்கும்
4. நரி – முழங்கும்
5. குயில் – ஊளையிடும்
விடை:
1. காகம் – கரையும்
2. குதிரை – கனைக்கும்
3. சிங்கம் – முழங்கும்
4. நரி – ஊளையிடும்
5. குயில் – கூவும்
விலங்குகளின் இளமைப்பெயர்கள்
அணிற்பிள்ளை
கீரிப்பிள்ளை
சிங்கக்குருளை
புலிப்பறழ்
யானைக்கன்று
மான்கன்று
எருமைக்கன்று
குதிரைக்குட்டி
நாய்க்குட்டி
பூனைக்குட்டி
ஆட்டுக்குட்டி
குரங்குக்குட்டி
விலங்குகளின் வாழிடங்கள்
ஆட்டுப்பட்டி
குதிரைக்கொட்டில்
கோழிப்பண்ணை
மாட்டுத்தொழுவம்
யானைக்கூடம்
வாத்துப்பண்ணை
விலங்கு பறவை இனங்களின் ஒலிமரபு
ஆந்தை அலறும்
கழுதை கத்தும்
காக்கை கரையும்
கிளி கொஞ்சும்/பேசும்
குதிரை கனைக்கும்
குயில் கூவும்
கோழி கொக்கரிக்கும்
சிங்கம் முழங்கும்
நரி ஊளையிடும்
புலி உறுமும்
மயில் அகவும்
யானை பிளிறும்
தாவர உறுப்புப் பெயர்கள்
ஈச்ச ஓலை
சோளத்தட்டை
மாவிலை
வேப்பந்தழை
தாழை மடல்
தென்னையோலை
மூங்கில் இலை
கமுகங்கூந்தல்
பனையோலை
பலாஇலை
வாழைஇலை
நெற்றாள்
காய்களின் இளநிலை
அவரைப்பிஞ்சு
தென்னங்குரும்பை
மாவடு
வாழைக்கச்சல்
முருங்கைப்பிஞ்சு
வெள்ளரிப்பிஞ்சு
செடி கொடி மரங்களின் தொகுப்பிடம்
ஆலங்காடு
கம்பங்கொல்லை
பனந்தோப்பு
சவுக்குத்தோப்பு
சோளக்கொல்லை
பலாத்தோப்பு
தென்னந்தோப்பு
தேயிலைத்தோட்டம்
பூந்தோட்டம்
பொருள்களின் தொகுப்பு
ஆட்டுமந்தை
திராட்சைக்குலை
மாட்டுமந்தை
கற்குவியல்
வேலங்காடு
யானைக்கூட்டம்
சாவிக்கொத்து
பசுநிரை
வைக்கோற்போர்
பொருளுக்கேற்ற வினைமரபு
சோறு உண்
பழம் தின்
கோலம் இடு
தீ மூட்டு
நீர் குடி
பாட்டுப் பாடு
தயிர் கடை
படம் வரை
பால் பருகு
கவிதை இயற்று
விளக்கை ஏற்று
கூரை வேய்
பயிற்ச்சி:
1.
பொருத்தமான
மரபுச்சொல்லைத் தேர்ந்தெழுதுக.
அ) குமரன்
பழம்_ _ _ _ _ (உண்டான், தின்றான்)
ஆ)
காலையில் சேவல்_ _ _ _ _ (கூவியது, கத்தியது)
இ) ஆட்டு_ _ _ _ _ (கூட்டம், மந்தை) வருகிறது.
ஈ) எங்கள்
ஊரில் வாழைத்_ _ _ _ _ (தோட்டம், தோப்பு)
உள்ளது.
உ) குயில்
(கூவியது, அகவியது)
2. கீழுள்ள
பெயர்களுக்கு உரிய இளமைப் பெயர்களை எழுதுக.
அ) கீரி __________ விடை : கீரிப்பிள்ளை
ஆ) மான் __________ விடை : மான்கன்று
இ) சிங்கம்
__________
விடை: சிங்கக்குருளை
ஈ) பூனை __________ விடை: பூனைக்குட்டி
உ) எருமை __________ விடை: எருமைக்கன்று
3.
பொருத்துக.
விடை:
அ) மக்கள் – கூட்டம்
ஆ) வீரர் –
படை
இ) விறகு –
கட்டு
ஈ) சுள்ளி
– கற்றை
உ)
வைக்கோல் – போர்
1. சொற்றொடர்களில்
அமைந்துள்ள வழுக்களை அறிவோம்.
(எ.கா.)
அரசன்
வந்தது (திணைவழு) – அரசன் வந்தான்
கபிலன்
பேசினாள் (பால்வழு) – கபிலன் பேசினான்
குயில்கள்
கூவியது (எண்வழு) – குயில்கள் கூவின
கமலா
சிரித்தாய் (இடவழு) – கமலா சிரித்தாள்
வளவன்
நேற்று வந்திருக்கிறான் (காலவழு) – வளவன் நேற்று வந்தான்
ஆந்தை
கத்தியது (மரபுவழு) – ஆந்தை அலறியது
பயிற்சி
: கீழ்க்காணும் தொடர்களில்
அமைந்துள்ள வழுக்களை நீக்கி எழுதுக.
1. புலவர்
வந்தார்கள். விடை: புலவர்கள் வந்தார்கள்
2. மயில் கூவ
குயில் அகவியது. விடை: மயில் அகவ குயில் கூவியது
3. தாமரை படம்
வரைந்தான். விடை: தாமரை படம் வரைந்தாள்
4. யானைகள்
வந்தது. விடை: யானைகள் வந்தன.
5. பெருமழை
பெய்தமையால் மரங்கள் வீழ்ந்தது. விடை: பெருமழை பெய்தமையால் மரங்கள் வீழ்ந்தன.
6. வயலில்
ஆட்டுக்கன்று மேய்கிறது. விடை: வயலில் ஆட்டுக்குட்டி மேய்கிறது.
7. பசு குட்டி
போட்டது. விடை: பசு கன்று போட்டது.
8. மாட்டை
இலாயத்தில் கட்டு. விடை: மாட்டை தொழுவத்தில் கட்டு.
9. வெற்றிலைத்தோப்புக்குச்
சென்று வெற்றிலை பறித்து வா.
விடை: வெற்றிலைத்தோட்டத்துக்குச் சென்று வெற்றிலை பறித்து வா.
10. யானை
முழங்கும். விடை: யானை பிளிறும்
2. பொருத்துக.
விடை:
1. சிங்கம்
கனைத்தது – மரபுவழு
2. கண்ணன்
படித்தாள் – திணைவழு
3. இன்று
வருவான் – பால்வழு
4. கபிலன்
பேசியது –காலவழு
5. பறவைகள்
பறந்தது – எண் வழு
மரபுச்சொற்கள்
பறவைகள், விலங்குகள் முதலான உயிரினங்களின்
ஒலிகளையும் அவை ஒலிக்கும் முறைகளையும் இவ்வாறு கூற வேண்டுமென, முன்னோர் கூறிய மரபினைத்
தொன்றுதொட்டுப் பின்பற்றி வருகின்றனர். “நாய் கத்தியது” எனக் கூறுகிறோம். அவ்வாறு கூறுதல்
கூடாது. “நாய் குரைத்தது” என்பதே உரிய மரபுத்தொடர். இவ்வாறு
வரும் சில மரபுகள் குறித்து இங்குக் காண்போம்.
ஒலிமரபு
ஆடு
கத்தும்
எருது
எக்காளமிடும்
குதிரை
கனைக்கும்
குரங்கு
அலப்பும்
சிங்கம்
முழங்கும்
நரி
ஊளையிடும்
புலி
உறுமும்
பூனை
சீறும்
யானை
பிளிறும்
எலி
கீச்சிடும்
ஆந்தை
அலறும்
காகம்
கரையும்
கிளி
பேசும்
குயில்
கூவும்
கூகை
குழறும்
கோழி கொக்கரிக்கும்
சேவல்
கூவும்
புறா
குனுகும்
மயில்
அகவும்
வண்டு
முரலும்
வினை
மரபு
அம்பு
எய்தார்.
ஆடை
நெய்தார்.
உமி
கருக்கினாள்.
ஓவியம்
புனைந்தான்.
கூடை
முடைந்தார்.
சுவர்
எழுப்பினான்.
செய்யுள்
இயற்றினான்.
சோறு
உண்டான்.
தண்ணீர்
குடித்தான்.
பால் பருகினாள்.
பூப்
பறித்தாள்.
மரம்
வெட்டினான்.
மாத்திரை
விழுங்கினான்.
முறுக்குத்
தின்றான்.
மரபுச் சொற்களை அறிக.
பலாப்பிஞ்சு
– பலாமூசு
வாழைப்பிஞ்சு
– வாழைக்
கச்சல்
முருங்கைப்
பிஞ்சு – முருங்கைச் சரடு
அவரைப்
பிஞ்சு – அவரைப்பொட்டு
மாம்பிஞ்சு
– மாவடு
இளந்தேங்காய்
– வழுக்கை
முற்றிய
தேங்காய் – நெற்று
‘ஆந்தை
அலறும்’ என்பது……………
விடை : அ) ஒலி மரபு
புலியின்
இளமைப் பெயர்……………
விடை: அ) புலிப்பறழ்
‘பூப்பறித்தாள்’
என்பது
விடை: அ) வினை மரபு
ஒலி
மரபுகளைப் பொருத்துக.
விடை:
1. சிங்கம் –
முழங்கும்
2. அணில் –
கீச்சிடும்
3. மயில் –
அகவும்
4. குயில் –
கூவும்
5. குரங்கு –
அலப்பும்
நிறுத்தல்
குறியீடுகள் (நிறுத்தற்குறிகள்):
எழுத்து என்பது மொழியின் வரிவடிவம், எழுதியதைத் தெளிவாகப்
பொருளுணர நிறுத்தல் குறியீடுகள் (நிறுத்தற்குறிகள்) இன்றியமையாதவை ஆகும்.
காற்புள்ளி ( , )
நிறுத்தி வாசிக்கக் குறிப்பிடப்படும். பொருள்களைத்
தனித்தனியாகக் குறிப்பிடும் இடங்கள், எச்சச் சொற்றொடர்கள், எடுத்துக்காட்டுகள், இணைப்புச்சொற்கள், திருமுகவிளி, இணைமொழிகள் முதலிய
இடங்களில் காற்புள்ளி வருதல் வேண்டும்.
• அறம், பொருள், இன்பம், வீடு என
வாழ்க்கைப்பேறு நான்கு.
• நாம் எழுதும்போது, பிழையற எழுத
வேண்டும்.
• இனியன் நன்கு
படித்தான்; அதனால், தேர்ச்சி பெற்றான்.
• ஐயா; அம்மையீர்,
• சிறியவன் பெரியவன், செல்வன் ஏழை.
அரைப்புள்ளி ( ; )
தொடர்நிலைத் தொடர்களிலும் ஒரு
சொல்லுக்கு வேறுபட்ட பொருள் கூறும் இடங்களிலும் அரைப்புள்ளி வருதல் வேண்டும்.
• வேலன் கடைக்குச்
சென்றான்; பொருள்களை வாங்கினான்; வீடு திரும்பினான்.
• சீர் – மாறுபாடு
இல்லாதது; அளவு; இயல்பான தன்மை; ஒழுங்கு; சமம்; நேர்த்தி; அழகு; சீதனம்; செய்யுளின் உறுப்பு
முக்காற்புள்ளி ( : )
சிறுதலைப்பு, நூற்பகுதி எண், பெருங்கூட்டுத் தொடர்
முதலிய இடங்களில் முக்காற்புள்ளி வருதல் வேண்டும்.
• சார்பெழுத்து :
• பத்துப்பாட்டு 2:246
• எட்டுத்தொகை என்பன
வருமாறு:
முற்றுப்புள்ளி ( . )
தொடரின் இறுதி, முகவரி இறுதி, சொற்குறுக்கம், நாள் முதலிய
இடங்களில் முற்றுப்புள்ளி வருதல் வேண்டும்.
• உருவுகண்டு எள்ளாமை
வேண்டும்.
• தலைமையாசிரியர், மேனிலைப் பள்ளி, காஞ்சிபுரம்.
• தொல்.சொல். 58.
• 18/02/2018.
வினாக்குறி ( ? )
ஒரு வினாத்தொடர், முற்றுத்தொடராகவும்
நேர்கூற்றுத் தொடராகவும், இருப்பின், இறுதியில் வினாக்குறி வருதல் வேண்டும்.
• அது என்ன? (முற்று)
• நீ வருகிறாயா? என்று கேட்டான். (நேர்கூற்றுத் தொடர்)
வியப்புக்குறி ( ! )
வியப்புக்குறி, வியப்பிடைச்
சொல்லுக்குப் பின்பும் நேர்கூற்று வியப்புத்தொடர் இறுதியிலும் அடுக்குச் சொற்களின்
பின்னும் வியப்புக்குறி வருதல் வேண்டும்.
• எவ்வளவு உயரமானது!
• என்னே தமிழின்
பெருமை! என்றார் கவிஞர்
• வா! வா! வா! போ! போ!
போ!
விளிக்குறி ( ! )
அண்மையில் இருப்பாரை அழைப்பதற்கும், தொலைவில் இருப்பாரை
அழைப்பதற்கும் விளிக்குறி பயன்படுத்த வேண்டும். வியப்புக்குறியும் விளிக்குறியும்
ஒரே அடையாளக்குறி உடையன.
• அவையீர்!
• அவைத்தலைவீர்!
மேற்கோள்குறி (‘ ‘), (” “)
ஒற்றை மேற்கோள்குறி, இரட்டை மேற்கோள்குறி
என இருவகைப்படும்.
ஒற்றை மேற்கோள்குறி வரும் இடங்கள்
ஓர் எழுத்தேனும் சொல்லேனும்
சொற்றொடரேனும் தன்னையே குறிக்கும் இடம், கட்டுரைப்பெயர், நூற்பெயர் குறிக்கும்
இடம், பிறர் கூற்றுப்பகுதிகள் முதலான இடங்களில் ஒற்றைக்குறி வருதல்
வேண்டும்.
• ‘ஏ’ என்று ஏளனம்
செய்தான்.
• பேரறிஞர் அண்ணா
‘செவ்வாழை’ என்னும் சிறுகதை எழுதினார்.
• ‘கம்பனும் மில்டனும்’
என்னும் நூல் சிறந்த ஒப்பீட்டு நூல் ஆகும்.
• ‘செவிச்செல்வம் சிறந்த
செல்வம்’ என்பர்.
இரட்டை மேற்கோள்குறி வருமிடங்கள்
நேர்கூற்றுகளிலும் மேற்கோள்களிலும்
இரட்டைக்குறி வருதல் வேண்டும்.
• “நான் படிக்கிறேன்”
என்றான்.
• ” ஒழுக்கமுடைமை குடிமை”
என்றார்.
நிறுத்தக்குறிகள் எல்லாம் வெறும்
அடையாளங்கள் அல்ல. அவையெல்லாம் பொருள்பொதிந்த அடிப்படையில் தோன்றியவை என்பதை
மாணவர்கள் நன்குணர்ந்து அவற்றைப் பின்பற்றிப் பேசவும் எழுதவும் வேண்டும்.
கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து
கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல்
கவனி : தேர்வில் ஒரு வினா மட்டுமே
கேட்கப்படும். |
II. பின்வரும் பத்தியைப் படித்து
வினாக்களுக்கு விடை எழுதுக.
விபத்தில்லா
வாகனப் பயணம்
சாலைவிதிகளுக்கு
உட்பட்டு வாகனம் ஓட்டும் முறைகளை அறிந்து, வாகனங்களை இயக்கினால்
விபத்துகளைத் தவிர்க்கலாம்.
|
வினாக்கள்
1. விபத்துகளை எவ்வாறு
தவிர்க்கலாம்?
சாலை விதிகளுக்கு
உட்பட்டு வாகனம் ஓட்டும் முறைகளை அறிந்து வாகனங்களை இயக்கினால் விபத்துகளைத் தவிர்க்கலாம்.
2. கண்டிப்பாக வழிவிட
வேண்டிய வாகனங்கள் யாவை?
- தீயணைப்பு வாகனம்
- அவசர சிகிச்சை ஊர்தி
3. சாலைச்
சந்திப்புகளில் எவற்றுக்கு முதலிடம் தர வேண்டும்?
சாலைச்சந்திப்பில்
நுழையும்போது, அந்தச்
சாலையில் ஏற்கெனவே செல்லும் வாகனங்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.
4. மலைச்சாலைகளில்
பின்பற்ற வேண்டிய விதிமுறை யாது?
கீழ்நோக்கிச்
செல்லும் வாகனங்கள், மேல்நோக்கி
வரும் வாகனங்கள் பாதுகாப்பாகக் கடந்து செல்ல முன்னுரிமை தர வேண்டும்.
5. வாகனம் செலுத்தும்
முறையை எழுதுக.
வாகனத்தைச் சாலையின்
இடப்புறத்தில் செலுத்துவதுடன், எதிரேவரும் வாகனத்திற்கு
வலப்புறமாகக் கடந்து செல்லப் போதிய இடம் விட வேண்டும்.
பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
தென்னிந்தியாவின்
அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன. தமிழக மாட்டினங்களின்
தாய் இனம் என்று ‘காங்கேயம்’ கருதப்படுகிறது. பிறக்கும்போது சிவப்பு நிறத்தில்
இருக்கும் காங்கேயம் மாடுகள், ஆறு மாதம் வளர்ந்த பிறகு சாம்பல்
நிறத்துக்கு மாறிவிடுகின்றன. பசுக்கள் சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தில்
இருக்கின்றன. மிடுக்கான தோற்றத்துக்குப் பெயர்பெற்ற காங்கேயம் இனக் காளைகள்
ஏறுதழுவுதல் நிகழ்விற்கும் பெயர் பெற்றுள்ளன. அத்துடன், ஏர் உழுவதற்கும்
வண்டி இழுப்பதற்கும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
கடுமையாக
உழைக்கக்கூடிய காங்கேயம் மாடுகள் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய
மாநிலத்தவரால் விரும்பி வாங்கிச் செல்லப்படுகின்றன. இலங்கை, பிரேசில், பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய
நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கரூர் அமராவதி ஆற்றுத் துறையில் காங்கேய
மாடுகளின் உருவம் பொறித்த கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சேரர் கால நாணயங்கள்
கண்டெடுக்கப்பட்டுள்ளன.
1. பின்வரும் நான்கு
வினாக்களுக்கும் பொருந்தும் ஒரு விடையைத் தருக.
அ) மிடுக்குத்
தோற்றத்திற்கும் ஏறுதழுவுதலுக்கும் பெயர் பெற்றவை எவை?
விடை : காங்கேயம் இனக்காளைகள்
ஆ) தமிழக மாட்டினங்களின்
தாய் இனம் என்று கருதப்படுவது யாது?
விடை : காங்கேயம் இனக்காளைகள்
இ) பிற மாநிலத்தவர்
விரும்பி வாங்கிச் செல்கின்ற காளை இனம் எது?
விடை : காங்கேயம் இனக்காளைகள்
ஈ) மேற்கண்ட பத்தி எதைக்
குறிப்பிடுகிறது?
விடை : காங்கேயம் இனக்காளைகள்
2. பொருந்தாத சொல்லைக் கண்டறிக.
A.
கர்நாடகம்
B.
கேரளா
C.
இலங்கை
D.
ஆந்திரா
விடை : இலங்கை
3. பிரித்து எழுதுக:
கண்டெடுக்கப்பட்டுள்ளன.
A.
கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன
B.
கண்டு + எடுக்கப் + பட்டுள்ளன
C.
கண்டெடுக்க + பட்டு + உள்ளன
D.
கண் + டெடுக்க + பட்டு + உள்ளன
விடை : கண்டு +
எடுக்கப்பட்டு + உள்ளன
4. தென்னிந்தியாவின்
அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன – இது எவ்வகைத் தொடர்?
A.
வினாத்தொடர்
B.
கட்டளைத்தொடர்
C.
செய்தித்தொடர்
D.
உணர்ச்சித்தொடர்
விடை : செய்தித்தொடர்
VI.கதைக்குப்
பொருத்தமான குறளைத் தேர்வு செய்து காரணத்தை எழுதுக.
மெளனவிரதம் என்னும்
தலைப்பில் நான்கு நண்பர்கள் ஒரு சொற்பொழிவைக் கேட்டனர். தாங்களும் ஒரு வாரத்துக்கு
மெளனவிரதம் இருப்பதாகத் தீர்மானம் செய்தனர். மெளனவிரதம் ஆரம்பமாகி விட்டது! கொஞ்ச
நேரம் போனதும் ஒருவன் சொன்னான், “எங்கள் வீட்டு அடுப்பை
அணைத்துவிட்டேனா தெரியவில்லையே!“ பக்கத்திலிருந்தவன் “அடப்பாவி! பேசிட்டியே!“
என்றான். உடனே மூன்றாவது ஆள், “நீ மட்டும் என்ன? நீயும்தான்
பேசிவிட்டாய்!“ என்றான். நான்காவது ஆள், “நல்லவேளை! நான்
மட்டும் பேசவில்லை!“ என்றான். இப்படியாக அவர்களின் மெளனவிரதம் முடிந்துபோனது.
1. மறந்தும் பிறன்கேடு
சூழற்க சூழின்
அறஞ்சூழும்
சூழ்ந்தவன் கேடு.
2. திறனல்ல தற்பிறர்
செய்யினும் நோநொந்து
அறனல்ல
செய்யாமை நன்று.
3. ஓதி உணர்ந்தும்
பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின்
பேதையார் இல்.
விடை:-
ஓதி உணர்ந்தும்
பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின்
பேதையார் இல்.
நிறுத்தல்
குறியீடுகள் (நிறுத்தற்குறிகள்):
எழுத்து என்பது மொழியின்
வரிவடிவம், எழுதியதைத் தெளிவாகப் பொருளுணர நிறுத்தல் குறியீடுகள்
(நிறுத்தற்குறிகள்) இன்றியமையாதவை ஆகும்.
காற்புள்ளி ( , )
நிறுத்தி வாசிக்கக்
குறிப்பிடப்படும். பொருள்களைத் தனித்தனியாகக் குறிப்பிடும் இடங்கள், எச்சச் சொற்றொடர்கள், எடுத்துக்காட்டுகள், இணைப்புச்சொற்கள், திருமுகவிளி, இணைமொழிகள் முதலிய இடங்களில் காற்புள்ளி வருதல்
வேண்டும்.
• அறம், பொருள், இன்பம், வீடு என வாழ்க்கைப்பேறு நான்கு.
• நாம்
எழுதும்போது, பிழையற எழுத
வேண்டும்.
• இனியன்
நன்கு படித்தான்; அதனால், தேர்ச்சி பெற்றான்.
• ஐயா; அம்மையீர்,
• சிறியவன்
பெரியவன், செல்வன் ஏழை.
அரைப்புள்ளி ( ; )
தொடர்நிலைத்
தொடர்களிலும் ஒரு சொல்லுக்கு வேறுபட்ட பொருள் கூறும் இடங்களிலும் அரைப்புள்ளி
வருதல் வேண்டும்.
• வேலன்
கடைக்குச் சென்றான்; பொருள்களை
வாங்கினான்; வீடு திரும்பினான்.
• சீர்
- மாறுபாடு இல்லாதது; அளவு; இயல்பான தன்மை; ஒழுங்கு; சமம்; நேர்த்தி; அழகு; சீதனம்; செய்யுளின் உறுப்பு
முக்காற்புள்ளி ( : )
சிறுதலைப்பு, நூற்பகுதி எண், பெருங்கூட்டுத்
தொடர் முதலிய இடங்களில் முக்காற்புள்ளி வருதல் வேண்டும்.
• சார்பெழுத்து
:
• பத்துப்பாட்டு
2:246
• எட்டுத்தொகை
என்பன வருமாறு:
முற்றுப்புள்ளி ( . )
தொடரின் இறுதி, முகவரி இறுதி, சொற்குறுக்கம், நாள் முதலிய இடங்களில் முற்றுப்புள்ளி வருதல் வேண்டும்.
• உருவுகண்டு
எள்ளாமை வேண்டும்.
• தலைமையாசிரியர், மேனிலைப் பள்ளி, காஞ்சிபுரம்.
• தொல்.சொல்.
58.
•
18/02/2018.
வினாக்குறி ( ? )
ஒரு வினாத்தொடர், முற்றுத்தொடராகவும் நேர்கூற்றுத் தொடராகவும், இருப்பின், இறுதியில்
வினாக்குறி வருதல் வேண்டும்.
• அது
என்ன? (முற்று)
• நீ
வருகிறாயா? என்று கேட்டான். (நேர்கூற்றுத் தொடர்)
வியப்புக்குறி ( ! )
வியப்புக்குறி, வியப்பிடைச் சொல்லுக்குப் பின்பும் நேர்கூற்று
வியப்புத்தொடர் இறுதியிலும் அடுக்குச் சொற்களின் பின்னும் வியப்புக்குறி வருதல்
வேண்டும்.
• எவ்வளவு
உயரமானது!
• என்னே
தமிழின் பெருமை! என்றார் கவிஞர்
• வா!
வா! வா! போ! போ! போ!
விளிக்குறி ( ! )
அண்மையில் இருப்பாரை
அழைப்பதற்கும், தொலைவில் இருப்பாரை
அழைப்பதற்கும் விளிக்குறி பயன்படுத்த வேண்டும். வியப்புக்குறியும் விளிக்குறியும்
ஒரே அடையாளக்குறி உடையன.
• அவையீர்!
• அவைத்தலைவீர்!
மேற்கோள்குறி (' '), (" ")
ஒற்றை மேற்கோள்குறி, இரட்டை மேற்கோள்குறி என இருவகைப்படும்.
ஒற்றை மேற்கோள்குறி
வரும் இடங்கள்
ஓர் எழுத்தேனும்
சொல்லேனும் சொற்றொடரேனும் தன்னையே குறிக்கும் இடம், கட்டுரைப்பெயர், நூற்பெயர் குறிக்கும் இடம், பிறர் கூற்றுப்பகுதிகள் முதலான இடங்களில் ஒற்றைக்குறி
வருதல் வேண்டும்.
• 'ஏ' என்று ஏளனம் செய்தான்.
• பேரறிஞர்
அண்ணா 'செவ்வாழை' என்னும்
சிறுகதை எழுதினார்.
• 'கம்பனும்
மில்டனும்' என்னும் நூல் சிறந்த ஒப்பீட்டு நூல் ஆகும்.
• 'செவிச்செல்வம்
சிறந்த செல்வம்' என்பர்.
இரட்டை மேற்கோள்குறி
வருமிடங்கள்
நேர்கூற்றுகளிலும்
மேற்கோள்களிலும் இரட்டைக்குறி வருதல் வேண்டும்.
•
"நான் படிக்கிறேன்" என்றான்.
•
" ஒழுக்கமுடைமை குடிமை" என்றார்.
நிறுத்தக்குறிகள்
எல்லாம் வெறும் அடையாளங்கள் அல்ல. அவையெல்லாம் பொருள்பொதிந்த அடிப்படையில்
தோன்றியவை என்பதை மாணவர்கள் நன்குணர்ந்து அவற்றைப் பின்பற்றிப் பேசவும் எழுதவும்
வேண்டும்.
II. உரிய இடங்களில் நிறுத்தக்குறிகளை இடுக.
1. பூக்கள் நிறைந்த
இடம் சோலை ஆகும்
விடை : பூக்கள் நிறைந்த இடம்
சோலை ஆகும்.
2. திருக்குறள் அறம்
பொருள் இன்பம் என்னும் முப்பால் பகுப்பு கொண்டது
விடை : திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால்
பகுப்பு கொண்டது.
3. தமிழ்மொழி
செம்மையானது வலிமையானது இளமையானது
விடை : தமிழ்மொழி செம்மையானது, வலிமையானது, இளமையானது.
4. கபிலன் தன்
தந்தையிடம் இன்று மாலை விளையாடப் போகட்டுமா என்று கேட்டான்
விடை : கபிலன், “தன் தந்தையிடம் இன்று
மாலை விளையாடப் போகட்டுமா?” என்று
கேட்டான்.
5. திரு.வி.க எழுதிய
பெண்ணின் பெருமை என்னும் நூல் புகழ்பெற்றது
விடை : திரு.வி.க. எழுதிய
‘பெண்ணின் பெருமை’ என்னும் நூல் புகழ்பெற்றது.
உவமைத் தொடரின்
பொருளறிதல்.
தாமரை இலை நீர்போல |
பட்டும் படாமல் இருத்தல்/ ஈடுபாடும்
இல்லாமலும் இருத்தல். |
மழைமுகம் காணாப் பயிர்போல |
வறட்சி வாட்டம் - துன்பம் |
கண்ணினைக் காக்கும் இமை போல |
பாதுகாப்பு |
சிலை மேல் எழுத்து போல |
நிலைத்து நிற்கும் |
கிணற்றுத்தவளைபோல |
உலகம் தெரியாமல் இருப்பது/அறியாமை |
எலியும் பூனையும் போல |
எதிரிகள்/பகைவர்கள் |
அச்சாணி இல்லாத தேர் போல |
சரியான வழிகாட்டி |
பசுமரத்தாணி போல |
எளிதாக |
மடைதிறந்த வெள்ளம் போல |
வேகமாக |
அடியற்ற மரம் போல |
வலுவிழந்து |
கல்மேல் எழுத்து போல |
அழியாமல் |
நகமும் சதையும் போல |
இணை பிரியாமை |
அடுத்தது காட்டும் பளிங்கு போல |
வெளிப்படுத்த |
இலவு காத்த கிளி போல |
ஏமாற்றம் |
அலை ஓய்ந்த கடல் போல |
அமைதி |
இஞ்சி தின்ற குரங்கு போல |
விழித்தல் |
கயிறற்ற பட்டம் போல |
தவித்தல்,
வேதனை |
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல |
பொறுமை |
நன்பால் கலந்தீமையால் திரிதல் போல் |
கெடுதல் |
மரப்பாவை நாணால் உயிர் மருட்டல் போல |
மயங்குதல் |
அடுத்தது காட்டும் பளிங்கு போல் |
வெளிப்படுத்தல் |
அத்தி பூத்தாற்போல |
அரிய செயல் |
அயடிற்ற மரம்போல் |
வீழ்தல் |
இலவு காத்த கிளி போல |
ஏமாற்றம் |
உடலும் உயிரும் போல |
ஒற்றுமை,
நெருக்கம் |
கல்மடை திறந்தாற்போல |
வெளியேறுதல் |
பகலவனைக் கண்ட பணி போல |
நீங்குதல் |
உள்ளங்கை நெல்லிக்கனி போல |
தெளிவு |
தாமரையிலைத் தண்ணீர் போல |
பற்றின்மை |
பேடிகை வாளான்மை போலக்கெடும் |
முயற்சின்மை |
ஒற்கத்தின் ஊற்றாம் துணை போல |
ஊன்றுகோல் |
பொருபுலி புலியோடு சிலைத்த போல |
எதிரெதிரே நின்று போரிடல் |
கடலில் கரைத்த காயம் போல் |
பயனற்றது |
கொடுக்கும் தேளாய்க் கொட்டுவதேன் |
வருத்தம் |
இடியோசை கேட்ட நாகம் போல |
நடுக்கம் |
செந்தமிழும் சுவையும் போல |
ஒற்றுமை |
தாயைக் கண்ட சேயைப் போல |
இன்பம்,
அதிக மகிழ்ச்சி |
நகமும் சதையும் போல |
இணை பிரியாமை |
மழை காணாப் பயிர் போல |
வாடுதல் |
வேலியே பயிரை மேய்ந்தது பேல |
நயவஞ்சம் |
அன்றலர்ந்த மலர் போல |
புத்துணர்வு |
அனலில் விழுந்த புழுப்போல் |
வேதனை |
கண்கட்டு வித்தை போல |
மாயத்திரை |
பத்தரை மாற்றுத்தங்கம் போல |
பெருமை |
நாயும் பூனையும் போல |
பகை |
அலை ஓய்ந்த கடல் போல |
அமைதி |
பசுமரத்தாணி போல் |
எளிதாகப் பதிதல் |
குன்றின் மேலிட்ட விளக்கு போல |
பயனுடைமை / பயன்/ வெளிச்சம் |
கனியிருப்பக் காய் கவரந்தது போல |
அறியாமை,
தேவையற்ற செயல் |
இலைமறைக் காய் போல் |
வெளிப்படுதல் |
ஆலையில் அகப்பட்ட துரும்பு போல் |
துன்பம் |
குரங்கு கையில் அகப்பட்ட பூமாலை போல |
நாசம் |
செவிடன் காதில் ஊதிய சங்குபோல் |
பயனின்மை |
செந்தமிழும் சுவையும் பேல |
ஒற்றுமை |
ஞாயிறு கண்ட தாமரை போல |
மகிழ்ச்சி |
நீர்மேல் எழுத்து போல |
நிலையற்றது |
பழம் நழுவி பாலில் விழந்தது போல |
இன்பமிகுதி |
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல |
வருத்தம் |
அனலிற் பட்ட மெழுகுபோல |
துன்பம் கண்டு உருகுதல் |
குளிக்கப் போய் சேற்றைப் பூசிக்கொண்டு
வருவது போல் |
குறும்புகளில் ஈடுபடுவது |
பொன்மலர் மணம் பெற்றது போல் |
பொருட்செல்வர் அறிவு செல்வத்தைக் தேடிக்
கொள்வது |
உமி குற்றிக் கை சலித்தது போல் |
வருத்தம் |
கண்ணிலாதான் கண் பெற்று இழந்தது போல |
தவிப்பு |
கரையான் புற்றெடுக்க கருநாகம் குடி புகுந்தது
போல |
அத்துமீறல் |
அச்சில் வார்த்தாற்போல |
ஒரே சீராக |
அவலை நினைத்து உரலை இடித்தாற்போல |
கவனம் |
ஆப்பறைந்த மரம் போல |
உறுதி |
அழுத பிள்ளைக்கு வாழைப்பழம் போல் |
ஏமாற்றுதல் |
அரை கிணறு தாண்டியவன் போல |
ஆபத்து |
ஆப்பசைத்த குரங்கு போல |
சிக்குதல் |
ஆழம் தெரியாமல் காலை விட்டது போல் |
திட்டமிடாமை |
இஞ்சி தின்ற குரங்கு போல் |
விழித்தல் |
இடி விருந்த மரம் போல் |
வேதனை |
இரும்பைக் கண்ட காந்தம் போல் |
கவர்ச்சி |
உடும்புப் பிடி போல |
பிடிப்பு |
உமையும்,
சிவனும் போல் |
நட்பு,
நெருக்கம் |
உச்சந்தலையில் ஆணி அறைந்தது போல் |
உறுதி |
ஊமை கண்ட கனவு போல |
தவிப்பு,
கூற இயலாமை |
எள்ளில் எண்ணெய் போல் |
ஒளிந்திருத்தல், மறைவு |
எட்டாப்பழம் புளித்தது போல் |
ஏமாற்றம் |
ஏழை பெற்ற செல்வம் போல் |
மகிழ்ச்சி |
ஒண்ட வந்த பிடாரி வளர்ப்பு பிடாரியை
ஓட்டினாற்போல் |
விரட்டுதல் |
கண் கெட்டபின் சூரிய நமஸ்கராம் போல |
காலம் தாமதித்து உணர்தல், வருமுன்
காவாமை |
கயிறற்ற பட்டம் போன்று |
தவித்தல்,
வேதனை |
கடைத்தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு
உடைத்தது |
பிறரை ஏமாற்றுதல் |
கண்ணைக் கட்டி காட்டில் விட்டது |
கலக்கம்,
வருத்தம் |
கானமயிலாட அது கண்டு ஆடம் வான்கோழி போல |
தாழ்வு,
உயர்வின்மை |
குடத்தில் இட்ட விளக்கு பேல |
இகழ்ச்சி,
அடக்கம் |
சிதறிய முத்து பேல |
பயனின்மை |
காய்ந்த மாடு கம்பங் கொல்லையில்
மேய்ந்தாற்போல |
வேகம் |
சீரிய நாகம் போல் |
கோபம் |
செல்லரித்த ஒலைபோல் |
பயனின்மை |
நீரும் நெருப்பும் போல |
விலகுதல் |
பாம்பின் வாய்த்தேரை போல |
மீளாமை |
முக்காலம் உணர்ந்த முனிவர் போல |
அறிதல் |
பாய்மரம் சாய்ந்தது போல |
விழுதல் |
மரமேற்றின வண்டி போல் |
சுமை |
பால் மணம் ஆறாத குழந்தை போல |
வெகுளி |
புளியம் பழமும் தோடும் போல |
ஒற்றுமை |
புற்றீசல் போல |
பெருகுதல் |
மலரும் மணமும் போல |
ஒற்றுமை |
வேம்பு அரசும் போல |
ஒற்றுமை |
மேகம் கண்ட மணில் போல |
மகிழ்ச்சி, ஆனந்தம் |
காட்டுத்தீ போல |
வேகமாக பரவுதல் |
பற்று மரமில்லாக் கொடி போல |
ஆதரவின்மை, துன்பம் |
கோலை எடுத்தால் குரங்கு போல் |
பயம் |
சர்க்கரைப் பந்தலில் தேன் பொழிந்தாற்போல |
இன்பம் |
சாயம் போன சேலை |
மதிப்பின்மை |
சித்திரப் புதுமை போல |
அழகு |
சிவபூஜையில் கரடி போல |
விருப்பமின்மை, தேவையற்ற வரவு |
சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தல் போல |
வேண்டாத வேலை, கேடு செய்தல் |
சேற்றில் பிறந்த செந்தாமரை போல் |
உயர்வு,
மேன்மை |
சொன்னது சொல்லும் கிளிப்பிள்ளை போல |
திரும்பச் செய்தல் அறிவின்மை |
திருடனைத் தேள் கொட்டியது போல |
சொல் முடியாத வேதனை |
தோன்றி மறையும் வானவில்லைப் போல் |
நிலையற்ற,
நிலையாமை |
நத்தைக்குள் முத்துப்போல் |
உயர்வு,
மேன்மை |
நாண் அறுத்த வில் போல |
பயனற்றது |
தொட்டனைத் தூறம் மணற்கேணி போல் |
அறிவு |
நீருக்குள் பாசி போல் |
நட்பு |
பசுத்தோல் போர்த்தி புலி போல் |
நயவஞ்சகம், ஏமாற்றுதல் |
தாயைப் போல பிள்ளை |
தொடர்பு |
மரபுத் தொடரின்
பொருளறிதல்
உவமைத் தொடர் |
பொருள் |
தலையில் வைத்துக் கொண்டாடுதல் |
அளவு கடந்து பாராட்டுதல் / பெரிதும் மதித்தல் |
கிடைக்காத ஒன்று |
கானல் நீர் |
இமாலயத்தவறு |
பெரிய தவறு |
துன்பத்திலிருந்து மீளுதல் |
கரையேறுதல் |
பஞ்சாகப் பறத்தல் |
அலைந்து திரிதல் |
ஆகாயத்தாமரை |
இல்லாத ஒன்று |
ஏமாற்று வேலை |
பித்தலாட்டம் |
எதிர்நீச்சல் |
நீரோட்டத்தை எதிர்த்து நீந்துதல்/ போக்கை
எதிர்த்துப் போராடுதல்/ வால்களைச் சமாளித்து முன்னேறுதல் |
சொந்தக்காலில் நிற்றல் |
|
அகலக்கால் வைத்தல் |
சக்திக்கு மீறிப் போதல் |
அம்பலப்படுத்துதல் |
பலரும் அறியச் செய்தல் |
அமளி துமளி |
கூச்சலோடு கூடிய குழப்பம் |
அலைக்கழித்தல் |
அலைத்து வருத்துதல் / இழுக்கடித்தல் |
ஆட்டங்காணுதல் |
வலுவற்ற / உறுதியற்ற நிலை |
ஆலாப்பறத்தல் |
தேடி அலைதல் |
ஆழம் பார்த்தல் |
ஒருவரின் உண்மை நிலையை அறிதல் |
ஈடுகொடுத்தல் |
சரிக்குச்சமம் / சமாளித்தல் |
ஈரமின்றி |
இரக்கமில்லாமல் |
உப்புச்சப்பின்றி |
ஆர்வமூட்டாத |
உருக்குலைதல் |
வடிவம் சிதைதல் / உடல் மெலிதல் |
ஊருக்கு உபதேசம் |
தான் கடைப்பிடிக்காமல் பிறருக்கு மட்டும்
வழங்கும் அறிவுரை |
கட்டுக்கோப்பு |
உறுதியான பிணைப்பு / ஒன்றிணைந்து |
கடன் கழித்தல் |
வேண்டாவெறுப்பாகச் செய்தல் |
கண்ணாயிருத்தல் |
சிதறாத கவனத்துடன் இருத்தல் / குறியாக
இருத்தல் / முழுக்கவனத்துடன் இருத்தல். |
கண்துடைப்பு |
நம்பவைப்பதற்கான போலித்தனமான சொல் / செயல் |
கரைபுரளுதல் |
அளவு கடந்து வெளிப்படுதல் (மகிழ்ச்சி, திறமை) |
காற்றாய்ப்பறத்தல் |
மிக வேகமாகப் போதல் / வருதல் |
குரல்கொடுத்தல் |
ஆதரவு தெரிவித்தல் |
கூழைக்கும்பிடு |
போலியான மரியாதை |
கை ஓங்குதல் |
செல்வாக்கு மிகுதல் |
கைச்சுத்தம் |
நாணயம்,
நேர்மை |
கைதூக்கிவிடுதல் |
ஒருவரை முன்னேற்ற உதவுதல் |
சரிகட்டுதல் |
இணங்கவைத்தல் / ஈடுசெய்தல் |
சரமாரியாக |
அடுத்தடுத்து, தொடர்ந்து |
சொந்தக்காலில் நிற்றல் |
சொந்த உழைப்பில் நிற்றல் |
சொல்லிக்காட்டுதல் |
செய்த உதவியைச் சுட்டிக்காட்டுதல் /
குத்திக்காட்டுதல் |
தலைகாட்டுதல் |
சிறிது நேரமே தோன்றுதல் |
தலைசாய்த்தல் |
சற்று ஓய்வெடுத்தல் |
தலைதெறிக்க |
மிகவேகமாக |
தலையில் கட்டுதல் |
வலிந்து திணித்தல் / விரும்பாத ஒன்றை
ஒப்புக்கொள்ளச் செய்தல் / பயனற்ற ஒன்றை ஏற்கச் செய்தல் |
தலையில் வைத்துக் கொண்டாடுதல் |
அளவு கடந்து பாராட்டுதல் |
தாளம் போடுதல் |
எல்லாவற்றிற்கும் ஒத்துப்போதல் / மிகவும்
திண்டாடுதல் |
நடைப்பிணம் |
பிணத்தைப் போல உணர்வற்ற நிலை |
நிறைகுடம் |
அறிவிலும் பண்பிலும் சிறந்தவர் ஆனால்
அடக்கமானவர் |
நீர்க்குமிழி |
நிலையற்றத்தன்மை |
படியவைத்தல் |
அடங்கி நடக்கும்படி / அடங்கச்செய்தல் |
பூசிமெழுதல் |
மூடிமறைத்தல் |
மதில் மேல்பூனை |
முடிவெடுக்கப்படாத குழப்பமான மன நிலை. |
முதுகெலும்பு இல்லாதிருத்தல் |
விருப்பப்படி செய்யத் துணிவில்லாதவன் |
முழுமூச்சு |
மிகத்தீவிரம் |
மெய்ம்மறத்தல் |
ஒன்றில் ஆழ்ந்து இருத்தல் |
வலைவீசுதல் |
தேடிக் கண்டுபிடிக்க முனைதல் / ஒருவரை
வசப்படுத்த முயலுதல் |
வாய்ப்பூட்டுப் போடுதல் |
சுதந்திரமாகக் கருத்துக்களைக் கூறத்
தடைவிதித்தல் |
வாயடைத்துப்போதல் |
அதிர்ச்சியால் / ஆச்சரியத்தால் பேசமுடியாமல்
போதல் |
வாரி இறைத்தல் |
வரையறையின்றிக் கொடுத்தல் / அளவின்றிக்
கொடுத்தல் |
விடிவுகாலம் |
நல்ல காலம் / நல்ல முடிவு ஏற்படுதல் |
விரலுக்குத் தகுந்த வீக்கம் |
அவரவர் தகுதிக்கு ஏற்ற செயல் |
வெளுத்துவாங்குதல் |
சிறப்பாகச் செய்தல் / பலமாக அடித்தல் |
அகமும் முகமும் |
உள்ளமும் முகமும் |
அகலாமல் அணுகாமல் |
அதிகமாக விலகாமலும் நெருங்காமலும் இருத்தல் |
அடியும் நுனியும் |
ஆரம்பமும் முடிவும் |
ஆக்கமும் ஊக்கமும் |
பயன்முனைப்பும் உழைப்பும் |
ஆட்டமும் பாட்டமும் |
எதைப்பற்றியும் சிந்திக்காமல் ஆட்டமும் பாட்டுமாக
இருந்தல் |
ஆய்ந்து ஓய்ந்து |
வேலைமிகுதியால் களைத்து |
ஒப்பாரும் மிக்காரும் |
இணையானவரும் மிஞ்சியவரும் |
குற்றங்குறை |
சிறிதும் குறை காண முடியாதவர் |
கேட்பாரும் மேய்ப்பாரும் |
தட்டிக்கேட்பவரும் அடங்கி நடக்கச் செய்பவரும் |
சொல்லும் செயலும் |
சொல்லும் கருத்தும் |
நாடி தேடி |
விரும்பிதைச் தேடிச் செல்லுதல் |
நாடி நரம்பு |
இரத்தம் செல்லும் நரம்பு |
பழியும் பாவமும் |
செய்த தவறால் எற்படும் அவப்பெயரும்
பின்விளைவுகளும் |
பட்டும் படாமலும் |
தனக்குத் தொடர்பு இல்லாதது போல் பேசுதல் |
பேரும் புகழும் |
பெருமையும் சிறப்பும் |
மலைக்கும் மடுவுக்கும் |
வேறுபாட்டைக் கூறுவது. மலைக்கும் மடுவுக்கும்
உள்ள வித்தியாசம் |
மாலை மரியாதை |
மிகுந்த மரியாதை கொடுப்பது |
வாட்டி வதைத்து |
மிகுந்த துன்பப்படுத்துதல் |
வாழ்விலும் தாழ்விலும் |
ஏற்றத்திலும் இறக்கத்திலும் |
கூவும் குயிலும் கரையும் காகமும் - தொடரில் இடம்பெற்ற மரபு அ)
பெயர்மாபு ஆ)
வினைமரபு இ) ஒலிமரபு ஈ)
இவை மூன்றும் மரபுச் சொற்களைத் தொடரில்
அமைத்து எழுதுக. |
பழமொழிகள் பொருளறிதல்
ஆங்கில மொழி |
தமிழ் பழமொழி |
All that glitter is not gold |
மின்னுவதெல்லாம் பொன்னல்ல |
Art is long but life is short |
கல்வி கரையில, கற்பவர் நாள் சில |
Barking dog seldom bite |
குரைக்கின்ற நாய் கடிக்காது |
Even a pin is good for something |
சிறுதுரும்பும் பல் குத்த உதவும் |
Take time by the forelock |
காலத்தே கடமையைச் செய் |
Bend the tree while it is young. |
ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா |
As is the mother, so is her daughter. |
தாயைப்போலப் பிள்ளை, நூலைப்போலச்
சேலை |
A friend in need is a friend indeed. |
உயிர் காப்பான் தோழன் |
A man of courage never wants weapons |
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் |
A man without money is a bow without an arrow. |
பணமில்லாதவன் பிணம் |
Blood is thicker than water |
தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் |
Diamond cuts diamond |
முள்ளை முள்ளால் எடு |
Lost time is never found again |
இழந்த நேரம் மீண்டும் கிடைக்காது |
Experience is the mother of science |
அனுபவமே அறிவியலின் தாய் |
Haste makes waste |
பதறாத காரியம் சிதறாது |
Crying child will get milk. |
அழுத பிள்ளை பால் குடிக்கும் |
Health is wealth |
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் |
Look before you leap |
ஆழம் அறியாமல் காலைவிடாதே |
Make hay while the sunshines. |
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் |
Many drops make shower |
சிறுதுளி பெருவெள்ளம் |
Measure is treasure |
அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு |
The face is the index of the mind |
அகத்தின் அழகு முகத்தில் தெரியும். |
The childhood shows the man |
விளையும் பயிர் முளையிலே தெரியும் |
All is well that ends well |
முதற்கோணல் முற்றிலும் கோணல் |
A good markman may miss |
ஆனைக்கும் அடி சறுக்கும் |
In a fiddler’s house all are dancers |
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் |
No man can flay a stone |
கல்லிலே நார் உரிக்க முடியுமா? |
Difficulties give way to diligence |
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் |
Command your man and do it yourself |
வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன் |
Charity is a double blessing |
தருமம் தலை காக்கும் |
One flower makes no garland |
தனிமரம் தோப்பாகாது |
Little wealth little care |
மடியில் கனமில்லையென்றால் வழியில் பயமில்லை |
Prevention is better than cure |
வருமுன் காப்பதே சிறந்தது |
Something is better than nothing |
ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சருக்கரை |
Though he endeavours all he can. |
புலியைப் பார்த்துப் பூனை சூடுபோட்டுக்
கொண்டாற்போல் |
One doth the act, another hath the blow |
பழி ஒரிடம், பாவம் ஒரிடம் |
Every fox must at last pay his skin to the flaye |
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் |
The day has eyes, the night has ears |
பகலில் பக்கம் பார்த்துப் பேசு; இரவில் அதுவும் பேசாதே |
What comes from the cradle goes to the grave |
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டில் |
The wise and the fool have their follows |
இனம் இனத்தோடு சேரும் |
He who has an art has everywhere a part |
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு |
Being on the sea, sail being on the land, settled |
காத்திற்கேற்ற கோலம் கொள் |
No rains no grains |
மாரியல்லது காரியம் இல்லை |
Bad words find bad acceptance |
நுணலும் தன் வாயாற் கெடும் |
Take away the fuel, the boiling will cease |
எரிவதனைப் பிடுக்கினால் கொதிப்பது அடங்கும் |
Practice makes perfect |
சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் |
The law-maker should not be a law -breaker |
வேலியே பயிரை மேய்ந்தாற்போலே |
Misfortune never comes single |
பட்டகாலிலே படும், கெட்ட குடியே கெடும் |
Look no gift horse in the mouth |
தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப்
பார்க்கலமா? |
Anger is sworn enemy |
கோபம் குலத்தைக் கெடுக்கும் |
Break my head and bring a plaster |
பிள்ளையகை் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டுவதுபோல |
There is danger in men’s smiles |
தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் |
Like hand and glove |
நகமும் சதையும் போல |
Tit for tat |
யானைக்கும் பானைக்கும் சரி |
A hungry dog will eat the dung |
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் |
Union is strength |
ஒற்றுமையே பலம் |
No smoke without fire |
நெருப்பில்லாமல் புகையாது |
Might is right |
வல்லான் வகுத்ததே வாய்க்கால் |
Many things fall between the cup and the lip |
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை |
Health is wealth |
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் |
Too much of anything is good for nothing |
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு |
No pain no gain |
உழைப்பின்றி ஊதியமில்லை |
Knowledge is power |
அறிவே ஆற்றல் |
Charity begins at home |
தனக்கு மிஞ்சியே தானமும் தருமமும் |
Covet all lose all |
பேராசை பெருநட்டம் |
Diamonds cut diamonds |
முள்ளை முள்ளால் எடு |
East or west, home is the best |
எலி வளையானாலும் தனி வளையே சிறந்தது |
Empty vessels make the greatest sound |
குறை குடம் கூத்தாடும் |
Money makes many things |
பணம் பத்தும் செய்யும் |
Eagles don’t catch flies |
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது |
Time is gold |
காலம் பொன் போன்றது |
Old is gold |
பழமையே சிறந்தது |
Prevention is better than cure |
வருமுன் காப்பதே சிறந்தது |
Slow and steady wins the race |
முயற்சி திருவினையாக்கும் |
Birds of the same feather flock together |
இனம் இனத்தோடு சேரும் |
Every cock will crow upon his own dunghill |
வீட்டில் எலி வெளியில் புலி |
Failure is the stepping stone to success |
தோல்வியே வெற்றிக்கு அடிப்படை |
Art is long and life is short |
கல்வி கரையில, கற்பவர் நாள் சில |
Look before you leap |
ஆழம் அறியாமல் காலைவிடாதே |
First deserve, then desire |
முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படலாமா? |
Little strokes fell great oaks |
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் |
Tit for tat |
யானைக்கும் பானைக்கும் சரி |
Work is worship |
செய்யும் தொழிலே தெய்வம் |
Man proposes; God disposes |
நாம் ஒன்று நினைக்க, தெய்வம்
ஒன்று நினைக்கும் |
Strike the rod while it is hot |
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் |
Familiarity breeds contempt |
பழகப் பழகப் பாலும் புளிக்கும் |
The mills of god grind slow but sure |
அரசன் அன்றுகொல்வான், தெய்வம்
நின்று கொல்லும் |
The face is the index of the mind |
அகத்தின் அழகு முகத்தில் தெரியும். |
All that glitter is not gold |
மின்னுவதெல்லாம் பொன்னல்ல |
Art is long but life is short |
கல்வி கரையில, கற்பவர் நாள் சில |
Barking dog seldom bite |
குரைக்கின்ற நாய் கடிக்காது |
Even a pin is good for something |
சிறுதுரும்பும் பல் குத்த உதவும் |
Take time by the forelock |
காலத்தே கடமையைச் செய் |
A friend in need is a friend indeed |
உயிர் கொடுப்பான் தோழன் |
Self help is the best help |
தன் கையே தனக்கு உதவி |
Efforts never fail |
முயற்சி திருவினையாக்கும் |
Live and let live |
வாழு,
வாழவிடு |
Think everybody alike |
உன்னைப்போல் பிறரையும் நேசி |
Manners make the man |
ஒழுக்கம் உயர்வு தரும் |
All is well that ends well |
நல்ல தொடக்கம் நல்ல முடிவைத் தரும் |
Misfortunes never come single |
பட்டகாலிலே படும், கெட்ட குடியே கெடும் |
Do well what you have to do |
செய்வன திருந்தச் செய் |
Every tide has its ebb |
ஏற்றம் உண்டானால் இறக்கம் உண்டு |
Small rudders guide great ships |
சிறு துரும்பும் பல் குத்த உதவும். |
You must walk before run |
சிந்தித்துச் செயல்படு |
Distance lends enchantment to the view |
இக்கரைக்கு அக்கரை பச்சை |
பொருத்துக:
பழமொழி |
பொருள் |
தாயைப்போலப் பிள்ளை, நூலைப்போலச் சேலை. |
உறவுமுறை |
ஆடிப்பட்டம் தேடி விதை. |
உழவு |
மண்குதிரையை நம்பி ஆற்றில்
இறங்காதே. |
அறிவுரை |
தை பிறந்தால் வழி பிறக்கும் |
நம்பிக்கை |
பசியாமல் இருக்க வரந்தருவேன், கொஞ்சம் பழையது இருந்தால் போடு. |
நகைச்சுவை |
தமிழ் பழமொழியை ஆங்கிலத்தில் மாற்றுக
தமிழ் பழமொழி |
ஆங்கில பழமொழி |
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் |
Strike the rod while it is hot |
மின்னுவதெல்லாம் பொன்னில்லை |
All that glitter is not gold |
சிறுதுளி பெருவெள்ளம் |
little drops make mighty ocean |
கழுதைக்குத் தெரியுமா கற்பூர
வாசனை |
Cast no pearls before swine |
தானாடாவிட்டாலும் தன் தசையாடும் |
Even one if doesnt react the blood
relation makes you to react |
தாயைப் போல் பிள்ளை நூலைப் போலச்
சேலை |
as is the father so is the son |
வட்டத்திலுள்ள பழமொழிகளைக் கண்டுபிடித்து எழுதுக.
- முயற்சி திருவினை ஆக்கும்.
- அளவுக்கு மீறினால் அமுதமும்
நஞ்சு.
- சுவர் இருந்தால்தானே சித்திரம்
வரைய முடியும்.
- அறிவே ஆற்றல்.
- கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
- நோயற்ற வாழ்வே குறைவற்ற
செல்வம்.
- வருமுன் காப்போம்.
- சுத்தம் சோறு போடும்.
- பருவத்தே பயிர் செய்.
- பசித்து புசி.
கல்வி
குறித்து வழங்கப்படும் பழமொழிகளைத் தொகுத்து எழுதுக.
- கல்வி கரையில கற்பவர் நாள்
சில.
கல்வி அழகே அழகு. - கத்த (கற்ற) வித்த(வித்தை)
காலத்துக்கு உதவும்.
- நூறு நாள் கத்தது (கற்றது), ஆறு நாள் விடப்போகும்.
- கற்க கசடற.
- இளமையில் கல்.
- நூல் பல கல்.
'ஆனாலும்' என்னும் இணைப்புச்
சொல்லைப் பயன்படுத்திப் பழமொழிகளை எழுதுக.
(எ.கா.) கந்தையானாலும் கசக்கிக் கட்டு; கூழானாலும் குளித்துக் குடி.
1. எலி வளையானாலும் தனி வளை வேண்டும்.
2. ஓட்டைச் சட்டி ஆனாலும் கொழுக்கட்டை வெந்தால்
சரி.
3. ஒடிந்தகோல் அனாலும் ஊன்றுகோல் ஆகும்.
4. கடுகத்தனை நெருப்பானாலும் போரைக்
கொளுத்திவிடும்.
5. சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்.
பழமொழி அறிவோம்:
1. புண்ணுக்கு மருந்து
போட முடியும்; புடிவாதத்துக்கு
மருந்து போட முடியுமா?
2. அணை உடைஞ்சு போன
வெள்ளம் அழுதாலும் வராது.
3. வெளைச்சலுக்கும், வெள்ளாட்டுக்கும்
சென்மப் பகை.
4. எறும்பு ஊரக் கல்லும்
தேயும்.
5. உழைக்கிற மாடுதான்
ஊருக்குள்ள விலை போகும்.
6. குடல் கூழுக்கு
அழுவுதாம், கொண்டை
பூவுக்கு அழுதாம்.
8. நல்ல பாம்பு படம்
எடுக்கலாம்; நாக்கலாம்
பூச்சி படம் எடுக்கலாமா?
9. ஆயிரம் கலம்
நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்.
10. ஆள் கூடுனா பாம்பு
சாகுமா? கைய
ஊனித்தான் கரணம் போட முடியும்.
11. காவடிப்பாரம்
சுமக்கிறவனுக்குத்தான் தெரியும்.
12. இருப்பவனுக்கு
புளியேப்பம்; இல்லதாவனுக்கு
பசியேப்பம்.
13. நாலு வீட்டில
கல்யாணமாம். நாய்க்கு அங்கேயும் இங்கேயும் ஓட்டமாம்.
14. அவ்வப்பொழுது
போக்குவதிலும் வீணாகப் பொழுது போக்குதல் தவப்பொழுது நல்லதும்பாங்க.
15. பாடிப்பாடிக்
குத்தினாலும் பதரு அரிசி ஆகுமா?
16. அதிர அடிச்சா உதிர
விளையும்.
17. குத்துக்கல்லுக்கு
என்ன குளிரா வெயிலாங்கிற மாதிரி.
18. அகழியில் விழுந்நத
முதலைக்கு அதுவே சொர்க்கம்.
19. கார்த்திகை மாசம்
பிறைய கண்ட மாதிரி.
20. அதை விட்டாலும் கதி
இல்ல, அப்பால
போனாலும் விதி இல்ல.
21. தட்டிப் போட்ட
ராட்டிக்குப் புரட்டிப் போட ஆளு இல்லாம.
22. அள்ளுறவன் பக்த்துல
இருந்தாலும் கிள்ளுறவன் பக்கத்துல இருக்கக் கூடாது.
23. அமாவாசை இருட்டில்
பெருச்சாளிக்குப் போன இடமெல்லாம் வழிதான்.
24. குத்துக்கல்லுக்குக்
குளிரா வெயிலா கவலையில்லாமல் வாழ்தல்.
தொடரைப்
பழமொழிகொண்டு நிறைவு செய்க.
1. இளமையில் கல்வி
சிலைமேல் எழுத்து
2. சித்திரமும்
கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
3. கல்லாடம் படித்தவரோடு
சொல்லாடாதே
4. கற்றோர்க்குச் சென்ற
இடமெல்லாம் சிறப்பு
5. நெல்லுக்குப் பாய்கிற
தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல. (நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப்
பாய்வது போல படிக்கும் நல்லார் சொன்ன அறிவுரை தீயவருக்கும் போய் சேர்ந்தது.)
6. தண்ணீர் வெந்நீர்
ஆனாலும் நெருப்பை அணைக்கும். (தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் போலப்
பிறர் கூறும் அறிவுரை கடினமானாலும் அது நம்மை நல்வழிப்படுத்தும்)
7. மெல்லப் பாயும்
தண்ணீர் கல்லையும் கரைக்கும். (மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும் போல
கடினமான செயலையும் விடாமுயற்சியுடன் செய்தால் வெற்றி பெற முடியும்)
8. கிணற்றுத் தண்ணீரை
வெள்ளம் கொண்டு போகாது (கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது போல பிறருக்கு
நாம் சொல்லிக் கொடுப்பதால் நம்முடைய அறிவானது குறைபடாது.)
பழமொழிகளை நிறைவு
செய்க.
1. உப்பில்லாப்
……………………….
விடை : உப்பில்லாப் பண்டம்
குப்பையிலே
2. ஒரு பானை ……………………..
விடை : ஒரு பானை சோற்றுக்கு
ஒரு சோறு பதம்
3. உப்பிட்டவரை
…………………………
விடை : உப்பிட்டவரை
உள்ளளவும் நினை
4. விருந்தும் ………………………
விடை : விருந்தும் மருந்தும்
மூன்று வேளை
5. அளவுக்கு …………………………
விடை : அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தமும் நஞ்சு
பின்வரும் பழமொழிகளை
வாழ்க்கை நிகழ்வோடு பொருத்தி எழுதுக.
1. யானைக்கும்
அடிசறுக்கும்
- தன்னம்பிக்கையோடு வாழ்ந்த என்
தந்தை தனியார் சீட்டுக் குழுமத்தின் பகட்டு விளம்பரத்தால் பணம் கட்டி, ஏமாந்து “யானைக்கும்
அடிசறுக்கும்” போல ஆயிற்று
2. தினை விதைத்தவன் தினை
அறுப்பான், வினை
விதைத்தவன் வினை அறுப்பான்
- வாழ்க்கையில் நாம் பிறருக்கு
நன்மை செய்து வந்தோம் என்றால் நமக்கும் நன்மையே நடக்கும்.
- வாழ்க்கையில் நாம் பிறருக்கு
தீமை செய்து வந்தோம் என்றால் நமக்கும் தீமையே நடக்கும்.
- இதையேதான் தினை விதைத்தவன்
தினை அறுப்பான். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பார்கள்.
3. குற்றம் பார்க்கின்
சுற்றம் இல்லை
- நட்பு எனக்கொண்ட பிறகு
குற்றம் இருப்பின் அதைப் பொறுக்கும் குணம் வேண்டும். அதை விடுத்து
குற்றத்தைக் கடிந்துரைத்தால் (சுற்றம்) நட்பு தொடராது.
4. எறும்பு ஊரக் கல்லும்
தேயும்
- வாழ்க்கையில் சின்னச் சின்ன
தவறுகளை இழைத்துக் கொண்டே வருவதால் தன் புகழுக்குத் களங்கம் வராது என்று
நினைக்கிறோம். மாறாக,
எறும்பு
ஊரக் கல்லும் தேயும் என்பது போல நம் புகழ் அழிவதற்கு நாம் செய்த சிறு
தவறுகளே காரணமாகிவிடும்.
5. ஊழி பெயரினும் தாம்
பெயரார்.
- நற்பண்புகளைக் கைவரப்
பெற்றவர்கள் வாழ்வில் உயர்ந்து தாழ்வு வந்தபோதும் தன்னிலையில் மாற
மாட்டார்கள்.
உரிய எழுத்துகளை
நிரப்பிப் பழமொழிகளை உருவாக்குக.
1. இறக்கும் காலம் வந்தால்
பிறக்கும் ஈசலுக்கும் சிறகு.
(று, ற)
2. எறும்புக்குத் தெரியாத கரும்பு இல்லை. (று, ரு )
3. அரண்மனை
உறவைக்காட்டிலும் அடுக்களை உறவு மேல். (ற, ர)
கீழ்க்காணும்
பழமொழிகளில் விடுபட்ட இடங்களில் குற்றியலுகரச் சொற்களாக வரும்படி எழுதுக.
அச்சொற்களைக் கட்டத்தில் நிரப்புக.
இடமிருந்து வலம்
1. போதுமென்ற மனமே பொன்
செய்யும் ________.
விடை: மருந்து
4. ஆத்திரக்காரனுக்குப்
புத்தி ________.
விடை: மட்டு
8. ஏற்றம் உண்டானால்
இறக்கமும் ________.
விடை: உண்டு
9. காலம் பொன் ________.
விடை: போன்றது
வலமிருந்து இடம்
5. கெடுவான் _______
நினைப்பான்.
விடை: கேடு
மேலிருந்து கீழ்
2. அகத்தின் _______
முகத்தில்
தெரியும்.
விடை: முகத்தில்
3.
_______ சிறுத்தாலும்
காரம் குறையாது.
விடை: கடுகு
6. அடியாத _______
படியாது.
விடை: மாடு
7. அளவுக்கு மிஞ்சினால்
அமிழ்தமும் _______.
விடை: நஞ்சு
கீழிருந்து மேல்
10. ஆற்றில் போட்டாலும் _______
போடு.
விடை: அளந்து
தொடரைப் பழமொழி
கொண்டு நிறைவு செய்க.
1. இளமையில் கல்வி முதுமையில் இன்பம்.
2. சித்திரமும்
கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்.
3. கல்லாடம் படித்தவரோடு சொல்லாடாதே.
4. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.
அறிஞர்களின்
பொன்மொழிகளைத் தமிழில் மொழிபெயர்த்து எழுதுக
1.
Every flower is a Soul blossoming in nature – Gerard De Nerval
மொழி பெயர்க்க : எல்லாப் பூக்களும்
இயற்கையில் உயிருடன் இருக்கிறது.
பழமொழி : மாற்றான் தோட்டத்து
மல்லிகைக்கும் மணம் உண்டு.
2.
Sunset is still my favourite colour, and rainbow is second – Mattie Stepanek
மொழி பெயர்க்க : சூரிய அஸ்தமனமே
முதலில் எனக்குப் பிடித்த வண்ணம், வானவில்லின் வண்ணம் அடுத்த நிலை
தான்.
பழமொழி : தோல்வியே வெற்றிக்கு
அடிப்படை (அ) ஒன்றன் மறைவில் இருந்தே புதியன தோன்றும்.
3. An
early morning walk is a blessing for the whole day – Henry David Thoreau
மொழி பெயர்க்க : அதிகாலை நடைப்பயிற்சி
அந்நாளுக்கே ஒரு வரமாகும்.
பழமொழி : நன்றாய்த் தொடங்கும்
செயல் நன்றாகவே முடியும். (அ) சிறந்த தொடக்கமே
வெற்றிக்கு அடிப்படை.
4. Just
living is not enough …. one must have sunshine, freedom and a little flower –
Hans Christian Anderson Answer:
மொழி பெயர்க்க : வெறுமையான வாழ்வு
மட்டும் போதாது ஒவ்வொருவருக்குள்ளும் ஒளி, ஆற்றல், விடுதலை மலர் என
இருத்தல் வேண்டும்.
பழமொழி : இலட்சியமுள்ள வாழ்வே
சிறந்த வாழ்வாகும், வெறும்
வாழ்வு வீணே.
பொன்மொழிகளை மொழி
பெயர்க்க.
1. A
nation’s culture resides in the hearts and in the soul of its people -Mahatma
Gandhi
நம் நாட்டினுடைய பண்பாட்டினை
மக்கள் அனைவரும் தம் இதயங்களிலும், ஆத்மாவிலும் நிலைத்திருக்கச்
செய்ய வேண்டும்.
2. The
art of people is a true mirror to their minds – Jawaharlal Nehru
மக்களின் கலை உணர்வே
அவர்களின் உள்ளத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி.
3. The
biggest problem is the lack of love and charity – Mother Teresa
அன்பு செலுத்துதல், தர்மம் செய்தல்
இவற்றின் குறைபாடே, மிகப்பெரிய
பிரச்சனையாய் உள்ளது.
4. You
have to dream before your dreams can come true – A.P.J. Abdul Kalam
உங்கள் கனவு நனவாகும்
வரை, கனவு
காணுங்கள்.
5.
Winners don’t do different things; they do things differently – Shiv Khera
வெற்றியாளர்கள்
வித்தியாசமான செயல்களைச் செய்வதில்லை மாறாக ஒவ்வொரு செயலையும் வித்தியாசமாக
செய்கிறார்கள்.
ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான
தமிழ்ச் சொற்கள்.
ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்கள் |
தமிழ்ச் சொற்கள் |
பண்டிகை |
திருவிழா |
வெள்ளம் |
நீர்ப் பெருக்கு |
வியாபாரம் |
வணிகம் |
அசல் |
மூலம் |
அச்சன் |
தந்தை |
ஜமக்காளம் |
விரிப்பு |
வேடிக்கை |
காட்சி |
கிரேக்கம் |
கடல் கடந்த தமிழ் |
ஒரைஸா |
அரிசி |
கரோரா |
கருவூர் |
கபிரில் |
காவிரி |
கொமாரி |
குமரி |
திண்டிஸ் |
தொண்டி |
மதோரா |
மதுரை |
முசிரில் |
முசிறி |
பிறமொழிச் சொல் |
தமிழ்ச் சொல் |
அங்கத்தினர் |
உறுப்பினர் |
அர்த்தம் |
பொருள் |
அலங்காரம் |
சிங்காரம் / அழகு |
ஆரம்பம் |
தொடக்கம் |
விஞ்ஞானம் |
அறிவியல் |
தீபம் |
சுடர் |
சாவி |
திறவுகோல் |
சரித்திரம் |
வரலாறு |
சபதம் |
சூளுரை |
சாதம் |
அன்னம் / சோறு |
பௌத்திரி |
பெயர்த்தி / புத்திரனுடையமகள் |
சமஸ்தானம் |
அரசு |
முக்கியஸ்தர் |
முதன்மையானவர் |
சினிமா தியேட்டர் |
திரையரங்கம் |
பிளசர் கார் |
மகிழுந்து |
ஏரோப்பிளேன் |
வானூர்தி |
இலாகா |
துறை |
அப்பாயிண்ட் |
பணிஅமர்த்தல் |
பிரதானம் |
முதன்மை |
விஞ்ஞானம் |
அறிவியல் |
ஆய் |
தாய் |
வாடிக்கை |
வழக்கம் |
பஸ் |
பேருந்து |
ரயில் |
தொடர்வண்டி |
கஜானா |
கருவூலம் |
உத்தியோகஸ்தர் |
அலுவலர் |
டிபார்ட்மெண்டல் ஸ்டோர் |
பலபொருள் அங்காடி |
ஸ்கேல் |
அளவுகோல் |
அங்கத்தினர் |
உறுப்பினர் |
அதிகாரி |
அலுவலர் |
அதிபர் |
தலைவர் |
அந்நியர் |
அயலார் |
அபிஷேகம் |
நீராட்டு / திருமுழுக்கு |
அபூர்வம் |
புதுமை |
அலங்காரம் |
ஒப்பனை |
அனுமதி |
இசைவு |
ஆபத்து |
இடர் |
ஆராதனை |
வழிபாடு |
ஆசீர்வாதம் |
வாழ்த்து |
இலஞ்சம் |
கையூட்டு |
இலாபம் |
வருவாய் |
உத்தரவு |
ஆணை |
உத்தியோகம் |
பணி |
உபயோகம் |
பயன் |
கிராமம் |
சிற்றூர் |
குமாரன் |
மகன் |
சாவி |
திறவுகோல் |
நஷ்டம் |
இழப்பு |
நாஷ்டா |
சிற்றுண்டி |
பாக்கி |
நிலுவை |
கஜானா |
கருவூலம் |
விஞ்ஞானம் |
அறிவியல் |
ஜனங்கள் |
மக்கள் |
நிபுணர் |
வல்லுநர் |
ஆஸ்பிடல் |
மருத்துவமனை |
டீ ஸ்டால் |
தேநீர்க் கடை |
பஸ் ஸ்டாண்ட் |
பேருந்து நிலையம் |
போஸ்ட் ஆபீஸ் |
அஞ்சலகம் |
நல்லதமிழில் இருந்த ஊர்ப் பெயர்கள், கடவுளர் பெயர்கள் |
வடமொழியில் மாற்றப்பட்டன |
திருவரங்கம் |
ஸ்ரீரங்கம் |
திருச்சிற்றம்பலம் |
சிதம்பரம் |
திருமறைக்காடு |
வேதாரணியம் |
திருமுதுகுன்றம், பழமலை |
விருத்தாசலம் |
அங்கயற்கண்ணி |
மீனாட்சி |
அறம்வளர்த்தாள் |
தர்மசம்வர்த்தனி |
எரிசினக் கொற்றவை |
ரௌத்திர துர்க்கை |
ஐயாறப்பர் |
பஞ்சநதீசுவரர் |
குடமூக்கு |
கும்பகோணம் |
வாள்நெடுங்கண்ணி |
கட்கநேத்ரி |
செம்பொன் பள்ளியார் |
சொர்ணபுரீச்சுரர் |
நீள்நெடுங்கண்ணி |
நீள்நெடுங்கண்ணி |
யாழினும் நன்மொழியாள் |
வீணாமதுரபாஷினி |
தேன்மொழிப்பாவை |
மதுரவசனி |
பழமலைநாதர் |
விருத்தகிரீச்சுரர் |
அலுவலகக் கலைச் சொற்கள் |
தமிழாக்கம் |
ரெக்கார்ட் |
ஆவணம் |
செகரட்டரி |
செயலர் |
மேனேஜர் |
மேலாளர் |
பைல் |
கோப்பு |
புரோநோட் |
ஒப்புச் சீட்டு |
பால்கனி |
முகப்பு மாடம் |
பாஸ்போர்ட் |
கடவுச்சீட்டு |
டிசைன் |
வடிவமைப்பு |
சாம்பியன் |
வாகைசூடி |
விசா |
நுழைவு இசைவு |
டெலிகேட் |
பேராளர் |
ஸ்பெஷல் பஸ் |
தனிப்பேருந்து |
புரபோசல் |
கருத்துரு |
ஆட்டோ கிராப் |
வாழ்த் தொப்பம் |
விசிட்டிங் கார்டு |
காண்புச் சீட்டு |
பிரீப் கேஸ் |
குறும் பெட்டி |
லம்சம் |
திரட்சித் தொகை |
மெயின் ரோடு |
முதன்மைச் சாலை |
புரோட்டோ கால் |
மரபுத்தகவு |
செக் |
காசோலை |
ரசீது |
பற்றுச்சீட்டு |
வாடகை |
குடிக்கூலி |
சம்பளம் |
ஊதியம் |
விசா |
அயல்நாடு செல்ல அனுமதிச்சீட்டு |
இராச்சியம் |
மாநிலம் |
போலீஸ் |
காவலர் |
வருடம் |
ஆண்டு |
கம்பெனி |
நிறுவனம் |
மாதம் |
திங்கள் |
ஞாபகம் |
நினைவு |
பாஸ்போர்ட் |
கடவுச்சீட்டு |
சரித்திரம் |
வரலாறு |
முக்கியத்துவம் |
இன்றியமையாமை |
நிச்சயம் |
உறுதி |
தேசம் |
நாடு |
பத்திரிகை |
நாளிதழ் |
சொந்தம் |
உறவு |
உத்திரவாதம் |
உறுதி |
வித்தியாசம் |
வேறுபாடு |
கோரிக்கை |
வேண்டுகோள் |
சமீபம் |
அருகில் |
சந்தோஷம் |
மகிழ்ச்சி |
உற்சாகம் |
மனப்பூரிப்பு |
யுகம் |
பல நூறு பல நூறு ஆண்டுக்காலம் |
தருணம் |
சமயம் |
சமற்கிருதம் |
தமிழ் |
அகங்காரம் |
செருக்கு |
அதிர்ஷ்டம் |
நற்பேறு |
அபிப்பிராயம் |
கருத்து |
அபூர்வம் |
பகுமை |
ஆராதனை |
வழிபாடு |
ஆனந்தம் |
மகிழ்ச்சி |
தினசரி |
நாள்தோறும் |
தைரியம் |
துணிவு |
பூஜை |
வழிபாடு |
ஸ்கூல் |
பள்ளி |
பர் மிசன்லெட்டர் |
அனுமதிக் கடிதம் |
கம்ப்யூட்டர் |
கணினி |
காலிங்பெல் |
அழைப்பு மணி |
மஷின் |
இயந்திரம் |
ரோபோ |
மனித எந்திரம் |
கோல்டு பிஸ்கட் |
தங்க கட்டி |
ஈக்வலாக |
சமமாக |
வெயீட் |
எடை |
பந்து |
உறவினர் |
அலங்காரம் |
ஒப்பனை |
இலட்சணம் |
அழகு |
அனுபவம் |
பட்டறிவு |
நட்சத்திரம் |
விண்மீன் |
ஜனங்கள் |
மக்கள் |
பௌத்திரன் |
பெயரன் |
நமஸ்காரம் |
வணக்கம் |
ஆசீர்வதித்தல் |
வாழ்த்துதல் |
சம்பிரதாயம் |
மரபு |
ஜாஸ்தி |
மிகுதி |
விஷயம் |
செய்தி |
நாஷ்டா |
சிற்றுண்டி |
ஜென்ம நட்சத்திரம் |
பிறந்தநாள் |
சிரஞ்சீவி |
திருநிறை செலவன் |
கும்பாபிஷேகம் |
குடமுழுக்கு |
ஏராளம் |
மிகுதி |
தமிழின் தொன்மை, சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான
செய்திகள்
தமிழின் தொன்மை, சிறப்பு 1. உலகில் ஆறாயிரத்திற்கும் 6,000 மேற்பட்ட மொழிகள் உள்ளன. 22. இரண்டாயிரம்
ஆண்டுகளாக வழக்கில் இருக்கும் சில தமிழ்ச்சொற்கள்.
மண்திணிந்த நிலனும் திராவிட மொழிகள்
தொடர்பான செய்திகள் 1. திராவிட
மொழிகளுக்குள் மூத்த மொழியாய் விளங்குவது – தமிழ். 2. தமக்குத்
தோன்றிய கருத்துகளைப் பிறருக்கு
உணர்த்த மனிதர் கண்டுபிடித்த கருவியே மொழியாகும். 2. முதலில் தம் எண்ணங்களை மெய்ப்பாடுகள், சைகைகள், ஒலிகள், ஓவியங்கள் முதலியவற்றின் மூலமாகப் பிறருக்குத்
தெரிவிக்க முயன்றனர். 3. இவற்றின் மூலம் பருப்பொருள்களை
மட்டுமே ஓரளவு உணர்த்த முடிந்தது, நுண்பொருள்களை
உணர்த்த இயலவில்லை. அதனால், ஒலிகளை உண்டாக்கிப் பயன்படுத்தத் தொடங்கினர். சைகையோடு சேர்ந்து பொருள் உணர்த்திய ஒலி
பயன்படுத்தி மொழியை வளர்த்தனர். 4. இந்தியாவில் பேசப்படும் மொழிகளின்
எண்ணிக்கை 1300 – க்கும் மேல் 5. மொழிக்குடும்பங்கள் – 4 1.
இந்தோ – ஆசிய மொழிகள் 2.
திராவிட மொழிகள் 3.
ஆஸ்திரோ ஆசிய மொழிகள் 4.
சீன – திபெத்திய மொழிகள் 6. இந்திய நாடு
மொழிகளின் காட்சிச்சாலையாகத் திகழ்கிறது என்று குறிப்பிட்டவர் – ச. அகத்தியலிங்கம். 7. உலகின்
குறிப்பிடத்தக்க, பழைமையான
நாகரிகங்களுள் இந்திய நாகரிகமும் ஒன்று என்று எந்த அகழாய்வுக்குப் பின்னர்
இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது – மொகஞ்சதாரோ – ஹரப்பா. 8. திராவிட
நாகரிகம் என்று அறிஞர்கள் கருதுவது – மொகஞ்சதாரோ – ஹரப்பா நாகரிகம். 9. திராவிடர்
பேசிய மொழியே திராவிட
மொழி எனப்படுகிறது. 10. திராவிடம்
என்னும் சொல்லை முதலில் குறிப்பிட்டவர் – குமரிலபட்டர். 11. தமிழ்
என்னும் சொல்லிலிருந்துதான்
திராவிடா என்னும் சொல் பிறந்தது என்று மொழி ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 12. தமிழ் ➔ தமிழா ➔ டிரமிலா
➔ ட்ரமிலா ➔ த்ராவிடா ➔ திராவிடா - ஹீராஸ் பாதிரியார். 13. வடமொழியை
ஆராய்ந்து மற்ற ஐரோப்பிய மொழிகளோடு
தொடர்புடையது வடமொழி என முதன்முதலில் குறிப்பிட்டவர் – வில்லியம் ஜோன்ஸ். 14. 1816 ஆம்
ஆண்டில் பேராசிரியர்கள் பாப், ராஸ்க், கிரிம் முதலானோராலும் மொழி
சார்ந்த பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 15. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை
ஒப்புமைப்படுத்தி ஆய்ந்து இவை தனியொரு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற
கருத்தை முன்வைத்தவர் – பிரான்சிஸ்
எல்லிஸ். 16. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை
ஒரே இனமாகக் கருதித் தென்னிந்திய மொழிகள் எனவும் பெயரிட்டவர் – பிரான்சிஸ் எல்லிஸ். 17. மால்தோ, தோடா, கோண்டி முதலான மொழிகள்
அனைத்தையும் இணைத்துத் தமிழியன் என்று பெயரிட்டதோடு ஆரிய மொழிகளிலிருந்து இவை
மாறுபட்டவை என்றும் கருதிவர் – ஹோக்கன்
/ மாக்ஸ் முல்லர்.(மாக்ஸ் முல்லரும் இதே
கருத்தைக் கொண்டிருந்தார்). 18. 1856 -இல்
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை இற்றியவர் – கால்டுவெல். 19. திராவிட
மொழிகள். ஆரிய மொழிக்குடும்பத்திலிருந்து வேறுபட்டவை எனவும் இம்மொழிகள்
சமஸ்கிருத மொழிக்குள்ளும் செல்வாக்குச் செலுத்தியுள்ளன எனவும் குறிப்பிட்டார் – கால்டுவெல். 20. திராவிட
மொழிக்குடும்பம் மொழிகள் பரவிய நில அடிப்படையில் – மூன்றாக
வகைப்படுத்தப்பட்டுள்ளது. 1.
தென்திராவிட மொழிகள் 2.
நடுத்திராவிட மொழிகள் 3.
வடதிராவிட மொழிகள் 22. திராவிட
மொழிகளின் சொற்களை ஆராய்ந்தால்,
அவை கொண்டிருப்பது – பொதுவான அடிச்சொற்களை. 23. "தமிழ்
வடமொழியின் மகளன்று; அது தனிக் கு
டும்பத்திற்கு உரிய மொழி; சமஸ்கிருதக்கலப்பின்றி
அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி; தமிழுக்கும்
இந்தியாவின் பிற மொழிகளுக்கும் தொடர்பு இருக்கலாம்" – கால்டுவெல். 24. திராவிட மொழிகளில் பால்பாகுபாடு எதனை
ஒட்டி அமைந்துள்ளது – பொருள்களின் தன்மையை. 25. வடமொழியில் பால்பாகுபாடு அமையவில்லை. 26. எந்த மொழியில் உயிரற்ற பொருள்களும்
கண்ணுக்கே புலப்படாத நுண்பொருள்களும்கூட ஆண்,
பெண்
என்று பாகுபடுத்தப்படுகின்றன ? – வடமொழியில். 27. எந்த மொழியில் கைவிரல்கள் பெண்பால்
என்றும் கால்விரல்கள் ஆண்பால் என்றும் வேறுபடுத்தப்படுகின்றன ? – வடமொழி மற்றும் ஜெர்மன் மொழி. 28. எந்த
மொழிகளில் வினைச்சொல் காலத்தை மட்டும் காட்டுமே தவிர திணை, பால், எண், இடம் ஆகிய வேறுபாட்டைக்
காட்டுவதில்லை. – ஆங்கிலம்
போன்ற. 29. எந்த
மொழிகளின் வினைச்சொற்கள் திணை, பால், எண், இடம், காலம் ஆகிய
வேறுபாட்டை தெளிவாகக் காட்டும் – திராவிட மொழி. 30. திணை, பால், எண் ஆகியவற்றைக்
மட்டுமே காட்டும் மொழி – மலையாள மொழி. 31. பால்
காட்டும் விகுதிகள் இல்லாத
மொழி – மலையாள
மொழி. 32. தனிச் சொற்களாலேயே ஆண், பெண் பகுப்பை
அறிந்துகொள்ள முடியும் மொழி – மலையாள
மொழி. 33. தமிழ்
இலக்கிய வரலாறு – மு.
வரதரசன். (மு.வ) [சாகித்திய அகாதெமி]. 34. இந்திய
இலக்கணக் கொள்கைகளின் பின்னணியில்தமிழ்இ லக்கணம் – செ. வை. சண்முகம். 35. மலையாள
இலக்கிய வரலாறு – ராம
சரிதம், லீலா
திலகம் (சாகித்திய அகாதெமி).
36. திராவிடம்
என்னும் சொல் திராவிடநாடு என்னும் பொருளைத் தருவது. திராவிட மொழிகள், திராவிட இனம், திராவிட நாகரிகம் என்னும்
சொற்றொடர்களுள் திராவிடம் என்னும் சொல் பெயரடையாக வந்துள்ளது எனக் கூறியவர் – கால்டுவெல். 37. திராவிடம்
என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர் – குமரிலபட்டர். 38. திராவிடம்
என்னும் சொல்லைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தார் – கால்டுவெல். 39. மொழியியல்
அறிஞர், தொடக்கக்
காலத்தில் தமிழையும் அதன் கிளைமொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளையும் – தமிளியன் (Tamilian) அல்லது தமுலிக் (Tamulic) என்று
வழங்கினர். 40. திராவிட
என்னும் சொல்லைத் தாம் கையாண்டதாகக் கூறியவர் – கால்டுவெல். 41. அழிந்து
வரும் பண்டைய தமிழ் ஒலைச்சுவடிகளைப் புதுப்பித்துப் பாதுகாக்க, பல நடவடிக்கைகளை
மேற்கொண்டு வரும் நிறுவனம் –யுனெஸ்கோ. 42. கடல்கோளால்
கொள்ளப்பட்ட பழந்தமிழ்க் குமரிக்கண்டம் எக்கண்டத்தில் இருந்தது – இலெமூரியாக்
கண்டத்தில். 43. எண்பது
விழுக்காடு (80 %) அளவுக்குத்
திராவிட மொழிக்கூறுகளைக் கொண்டுள்ள ஒரே திராவிடமொழி. 44. தொன்மை, தனித்தன்மை, மொழிகளின் தாய், சொல்வளம், இலக்கிய இலக்கண வளம், சிந்தனைவளம், கலைவளம், பண்பாட்டுவளம் இவற்றுடன்
பன்னாட்டு மொழியாக விளங்கும் தன்மையைப் பெற்ற மொழியே – செவ்வியல்மொழி. 45. செவ்வியல்மொழி
எந்த மொழிக் கூறுகளாகவும் கருதப்படுகின்றன – செம்மொழிக்கான
(Classical Language). 46. ____, ______ உள்ளிட்ட
நாடுகளின் பணத்தாள்களில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது. மொரிசியஸ், இலங்கை. தமிழின்
தனித்தன்மைகள் 1. தொன்மையும்
இலக்கண இலக்கியவளமும் உடையது தமிழ் மொழியாகும். 2. இலங்கை, மலேசியா, பரமா. சிங்கப்பூர், இந்தோனேஷியா, பிஜித்தீவு ஆகிய நாடுகளில்
மட்டுமல்லாமல் தென்ஆப்பிரிக்கா, மொரிஷியஸ், இங்கிலாந்து, கயானா, மடகாஸ்கர்,
ட்ரினிடாட், ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளிலும் பேசப்படும்
பெருமையுடையது தமிழ் மொழி. 4. திராவிட மொழிகளுள் பிற மொழித் தாக்கம்
மிகவும் குறைந்ததாகக் காணப்படும் மொழி தமிழேயாகும். 5. தமிழ்மொழி, திராவிட மொழிகள் சிலவற்றின் தாய்மொழியாகக் கருதப்படுகிறது. 6. ஒரேபொருளைக்
குறிக்கப் பலசொற்கள் அமைந்த சொல்வளமும் சொல்லாட்சியும் நிரம்பப் பெற்ற மொழி
தமிழேயாகும். 7. இந்தியாவின்
தொன்மையான கல்வெட்டுகளில் பெரும்பாலானவை
தமிழிலேயே அமைந்துள்ளன. 8. தமிழின்
பல அடிச்சொற்களின் ஒலியன்கள், ஒலி இடம்பெயர்தல் என்ற
விதிப்படி பிற திராவிட மொழிகளில் வடிவம் மாறியிருக்கின்றன. சுட்டுப்பெயர்களும் மூவிடப்பெயர்களும் பெரும்பாலும்
குறிப்பிடத் தக்க மாற்றங்களைப் பெற்றிருக்கின்றன. தமிழ், பிற
திராவிட மொழி களைவிட ஒப்பியல்
ஆய்வுக்குப் பெருந்
துணையாக அமைந்துள்ளது. தமிழ் மொழி மூலத்திராவிட
மொழியின் பண்புகள்
பலவற்றையும் பேணிப் பாதுகாத்து வருகிறது. |
உ.வே.சா (உ.வே.சாமிநாதையர்)
21. புறநானூற்றை
முதன் முதலாக பதிப்பித்து வெளியிட்டவர் – உ.வே.சா வெளியிட்ட ஆண்டு – 1894 22. தமிழ்த்தாய்
நெருப்பினாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டாலும் அவளது ஆபரணங்கள் தொலைவில் உள்ள
நகரமான பாரிசில் மிகவும் பாதுகாக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன" என்று
கூறியவர் – உ.வே.சா 23. 'பண்டைய
காலத்து பள்ளிக்கூடங்கள்' என்ற
நூலின் ஆசிரிய – உ.வே.சா 24. 'முடியுடை
வேந்தர்' நூலை
பதிப்பித்த ஆண்டு – 1894 |
தெ.பொ.மீனாட்சி சுந்தரம் 1.
உ. வே. சா, 2.
தியாகராசர், 3.
குலாம் காதிறு நாவலர். 16. தல
புராணங்கள் பாடுவதில் சிறந்தவர் – மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார். 17. யமக
அந்தாதி, திரிபந்தாதி, வெண்பா, அந்தாதிகள் ஆகியவற்றை
உருவாக்கியவர். 18.குடிமக்கள்
காப்பியம் – மீனாட்சி
சுந்தரனார். 19. மாயூரம்
வேதாநாயகத்தின் சமகாலத்தவர் – மீனாட்சி
சுந்தரனார். |
தேவநேயப் பாவாணர் 1.
தமிழ் வரலாறு 2.
முதல் தாய்மொழி 3.
திருக்குறள் மரபுரை 22. செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்டஇயக்குநராகப்
பணியாற்றியவர் – தேவநேயப் பாவாணர். |
பாவலரேறு
பெருஞ்சித்திரனார் தமிழ்க்கும்மி கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி இளங் — பெருஞ்சித்திரனார் 1. பிறந்த
ஊர் சேலம் மாவட்டத்திலுள்ள – சமுத்திரம். 2. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் – மாணிக்கம். 3. சிறப்புப் பெயர் – பாவலரேறு 4. நூல்கள்:
5. பள்ளிப்பறவைகள் நூலின் பிரிவுகள் –
மூன்று –குஞ்சுகளுக்கு, பறவைகளுக்கு, மணிமொழிமாலை. 6. இதழ்களை:
7. கனிச்சாறு
என்னும் நூலில் இடம் பெற்றுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை – 8 8. செந்தமிழின்
புகழ் எட்டுத்திசைகளிலும் பரவ வேண்டும் என்று எண்ணியவர் – பெருஞ்சித்திரனார். அன்னை மொழியே அன்னை மொழியே! அழகார்ந்த
செந்தமிழே! முன்னைக்கும்
முன்னை முகிழ்த்த நறுங்கனியே! கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில் மன்னி
அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!!
தென்னன் மகளே! திருக்குறளின்
மாண்புகழே! இன்னறும்
பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே! மன்னுஞ் சிலம்பே! மணிமே
கலைவடிவே!
முன்னும்
நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!
எந்தமிழ்நா
எவ்வாறு எடுத்தே உரைவிரிக்கும்?
முந்தைத் தனிப்புகழும்
முகிழ்த்த இலக்கியமும் விந்தை நெடுநிலைப்பும்
வேறார் புகழுரையும்
செந்தா மரைத்தேனைக் குடித்துச் சிறகார்ந்த அந்தும்பி பாடும் அதுபோல
யாம்பாடி முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே! — பெருஞ்சித்திரனார் 9. 'அன்னை மொழியே' என்ற பாடலை இயற்றியவர் – பாவலரேறு. 10. கனிச்சாறு
என்பதனை இயற்றியவர் – பாவலரேறு. 11. 'அன்னை மொழியே' என்ற கவிதையில் இடம் பெரும்
மூவேந்தர்களில் ஒருவர் – பாண்டியர். 12. "முந்துற்றோம்
யாண்டும்" என்பது – கனிச்சாறு பாடலில்
ஒரு தொகுதி. 13. தென்மொழி, தமிழ்ச்சிட்டு இதழ்களின்
வாயிலாகத் தமிழுணர்வை உலகெங்கும் பரப்பியவர் – துரை மாணிக்கம்
(பெருஞ்சித்திரனார்). 14. யாருடைய
திருக்குறள் மெய்ப்பொருளுரை, தமிழுக்குக்
கருவூலமாய் அமைந் துள்ளது மற்றும் யாருடைய நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன? –பாவலரேறு பெருஞ்சித்திரனார். 15. "திருக்குறளின்
பெரும் பெருமைக் குறியவளே" என்று பெருஞ்சித்திரனார் குறிப்பிடிவது – தமிழை. 16. பெருஞ்சித்திரனார் மாண்புகழாக
சிறப்பிக்கும் நூல் – திருக்குறள். 17. பெருஞ்சித்திரனார் கலைவடிவமாக
சிறப்பிக்கும் நூல் – மணிமேகலை. 18. பெருஞ்சித்திரனார்
என்றும் நிலைத்து நிற்பதாக சிறப்பிக்கும் நூல் – சிலப்பதிகாரம். 19. "வியக்கதக்க உன்
நீண்ட நிலைத்த தன்மையும் வேற்று மொழியார் உன்னைப் பற்றி உரைத்த புகழுரையும்
எமக்கு பற்றுணர்வை எழுப்புகின்றனவை எம்தமிழே!" – கனிச்சாறு. ஓய்வும் பயனும்! ஓய்வாக
இருக்கையில் தம்பி - நீ ஓவியம்
வரைந்து பழகு! தூய்மையோ
டமைதி சேரும்!- நன்கு தோன்றிடும் உள்ள
அழகு!
பாக்களும்
இயற்றிப் பழகு - நல்ல பாடலைப்
பாடி மகிழ்வாய்! தாக்குறும்
துன்பம் யாவும் - இசைத் தமிழினில்
மாய்ந்து போகும்!
அறிவியல்
ஆய்வு செய்வாய் - நீ அன்றாடச்
செய்தி படிப்பாய்! செறிவுறும்
உன்றன் அறிவு - உளச் செழுமையும் வலிவும்
பெறுவாய்!
மருத்துவ
நூல்கள் கற்பாய் -உடன் மனநூலும்
தேர்ந்து கற்பாய்! திருத்தமெய்ந்
நூல்கள் அறிவாய் - வருந் தீமையும்
பொய்யும் களைவாய்! —
பெருஞ்சித்திரனார் |
ஜி.
யு. போப் 1. தமிழ் கையேடு என்னும் நூலை இற்றியவர்
– ஜி.
யு. போப் 2. ஜி. யு. போப் – ஜியார்ஜ் யுக்ளோ போப் 3. பிறந்த
ஆண்டு – கி.
பி 1820 4. பிறந்த
நாடு – பிரான்சு 5. பெற்றோர்
– ஜான்
போப், கெதரின்
யுளாப் 6. தமையானார்
– ஹென்றி 7. ஜி.
யு. போப் தமிழகத்தில் சமயப் பணியாற்ற எந்த அகவையில் தேர்ந்தெடுக்கப்பட்டார் – 19 ஆம் அகவையில். 8. ஜி.
யு. போப் மரக்கப்பலில் தமிழகம் வந்து சேர எத்தனை மாதங்கள் ஆயின? 8 திங்கள். 9. சென்னை
சாந்தோம் பகுதியில் சமயப்பணி ஆற்றிய போப் பின்னர் எங்கு சமயப் பணியாற்றினார் – சாயர்புரம்
(திருநெல்வேலி). 10. சாயர்புரத்தில்
பணியாற்றிய காலம் – 1842
– 1849 11. திருமணம்
செய்து கொண்ட ஆண்டு – 1850 12. சமய
பணியாற்ற தொடங்கிய இடம் (தன் மனைவியுடன்) – தஞ்சாவூர். 13. தமிழ்
மொழி பற்றிய ஆங்கில ஆராய்ச்சிக் கட்டுரைகளை எந்த ஏடுகளில் எழுதினார் –
14. 'தமிழ்ச்
செய்யுட்கலம்பகம்' நூலின் ஆசிரியர் – ஜி. யு. போப் 15. 600 செய்யுள்களை
அறநூல்களிலிருந்து ஆய்ந்தெடுத்து எழுதிய நூல் – தமிழ்ச்செய்யுட் கலம்பகம். 16. பள்ளியில் படிக்கும் குழந்தைகள்
இலக்கணத்தை நன்கு அறிந்து கொள்ளும் வகையில் வினாவிடை முறையில் இரு இலக்கண
நூல்களை எழுதியவர் – ஜி.
யு. போப் 17. ஜி. யு. போப் உதகமண்டலம் சென்று, பள்ளி ஒன்றை தொடங்கி அதன் ஆசிரியராக
பணியாற்றிய ஆண்டு – 1858 18. ஜி. யு. போப் சமயப்பணியாற்றிய இடங்கள்
– 1.
சந்தோம்
(முதலில்), சாயர்புரம், தஞ்சாவூர். 19. இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராகப்
பணியாற்றிய ஆண்டுகள் – 23 ஆண்டுகள். 20. திருக்குறளை 40 ஆண்டுகள் படித்து சுவைத்த போப், அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து
வெளியிட்ட ஆண்டு – 1886 21. திருவாசகத்தின் ஆங்கில
மொழிபெயர்ப்பினை ஜி. யு. போப் வெளியிட்ட ஆண்டு – 1900 22. ஜி. யு. போப் 80 -ஆம் அகவையில், ஆங்கில மொழிபெயர்ப்பு செய்த நூல் – திருவாசகம். 23. தமிழின் பெருமையைத் தரணி முழுவதும்
பரப்பியவர் – ஜி.
யு. போப் 24. கல்லரையில் "இங்கே ஒரு தமிழ்
மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்" என எழுதவேண்டுமென்று உயில் எழுதி
வைத்தவர் – ஜி.
யு. போப் 25. திருக்குறளை ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்தவர் – ஜி.
யு. போப் 26. திருவள்ளுவரை உலகப்புலவர் என்று
போற்றியவர் – ஜி.
யு. போப் 27. "உலக வரலாற்றிலேயே
மேதையான மாணிக்கவாசகரை விடப் புலமை, உழைப்பு, துன்பத்தைப் பொறுத்தல், இடையறா நிலையான பக்தி ஆகியவற்றுடன்
நம் மனதைக் கவிர்கின்றவர் யாரும் இல்லை" எனக் கூறியவர் – ஜி. யு. போப் 28. தனிப்பாசுரத்தொகையை ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்தவர் – ஜி.
யு. போப் 29. ******** ** puranaanooru &
puraporul venbamalai" எனும் தலைப்பில் புறநானூறு நூலை
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.
யு. போப் 30. 'செந்ததமிழ்ச்
செம்மல்' – டாக்டர்
ஜி. யு. போப் 31. ஜி. யு. போப் தென்னிந்தியாவுக்கு வந்த ஆண்டு – 1839 32. ஜி. யு. போப் சென்னையை அடைந்து
முதலில் தமிழ் உரையைப் படித்துச் சொற்பொழிவாற்றிய இடம் – சந்தோம். 33. ஜி. யு. போப் திருக்குறள், திருவாசகத்தை ஐரோப்பியரும் படித்துப்
பயன்பெற வேண்டும் என்று எண்ணத்தில் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்தவர் – ஜி. யு. போப் 34. ஜி. யு. போப்பின் ஆங்கில
மொழிபெயர்ப்புகளில் சிறப்பு வாய்ந்தவை – திருக்குறள், திருவாசகம். 35. தஞ்சாவூரில் வாழ்ந்த போது தமிழ்
இலக்கிய இலக்கணத்தைத் தெளிவுற அறிந்தார். 36. ஆங்கில மொழிகளில் எழுதப்பட்ட
தமிழ்நாடு வரலாற்றை தமிழில் எழுதி பதிப்பித்தவர் – ஜி. யு. போப் 37. எழுபது ஆண்கள் தமிழோடு வாழ்ந்திருந்து, தமிழுக்கு நலம் அருளியவர் – ஜி. யு. போப் 38. "பள்ளிக்கூடங்களில்
பயிலும் மாணவர்கள், (தமிழ்மொழி)
தாய்மொழி வழியாகவே அனைத்து துறை கல்வியையும் பெறுதலே முறையானதென்றும் அத்தகைய
கல்வியே பயனளிக்குமென்றும் கருதியவர்" – ஜி. யு. போப் |
வீரமாமுனிவர்
1. காலம் – 1680 – 1747 2. பிறந்த ஊர் – இத்தாலி 3. இயற்பெயர் – கான்ஸ்டாண்டின் ஜோசப்
பெஸ்கி 4. தேம்பாவணி காப்பியத்தை இயற்றியவர் – வீரமாமுனிவர். 5. தமிழ் எழுத்துகளில் மிகபெரிய
சீர்திருத்தத்தை செய்தவர் – வீரமாமுனிவர். 6. ஒகரம் எகாரதில் ஏற்படும்
குழப்பங்களைக் களைந்தவர் – வீரமாமுனிவர். 7. எழுத்துகளில் புள்ளியால் ஏற்படும்
குழப்பங்களைக் களைந்தவர் –வீரமாமுனிவர். 8. திருக்குறளை இலத்தீன் மொழியில்
மொழிபெயர்த்தவர் – வீரமாமுனிவர். 9. வீரமாமுனிவர் அவருடைய 30 -ஆம் அகவையில் சமயத் திருப்பணியாற்ற
தமிழகத்துக்கு வந்தார். 11. தைரியநாதர் என்ற பெயரைத்
தனித்தமிழாக்கி மாற்றிய பெயர் – வீரமாமுனிவர். 12. வீரமாமுனிவர் தமிழில் முதன்முதலாக
வெளியிட்டது – சதுரகராதி
(அகரமுதலி). 13. தமிழ் எழுத்து வரிவடிவத்தைத் திருத்தி, எழுத்து சீர்த்திருத்தம் மேற்கொண்டவர்
– வீரமாமுனிவர். 14. வீரமாமுனிவர் இயற்றிய
சிற்றிலக்கியங்கள் – கலம்பகம், அம்மானை. 15. பரமார்த்த குரு கதை என்னும் நகைச்சுவை
நூலை எழுதியவர் – வீரமாமுனிவர். |
டி.கே.சிதம்பரநாதர்
எனப் பல வாறாகப் புகழப்படுகிறார். 6. 'இதய ஒலி' என்னும் நூலை இயற்றியவர். |
தவத்திரு குன்றக்குடி அடிகளார் 1.
நாயன்மார் அடிச்சுவட்டில் 2.
குறட்செல்வம் 3.
ஆலயங்கள் சமூதாய மையங்கள் 5. நடத்திய
இதழ்கள் 1.
அருளோசை 2.
அறிக அறிவியல் |
கண்ணதாசன்
கவிஞன் யானோர் காலக் கணிதம் இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது! வளமார் கவிகள் வாக்குமூ லங்கள் இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு! கல்லாய் மரமாய்க் காடுமே டாக மாறா திருக்கயான் வனவிலங் கல்லன்! மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்! எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை என்ப தறிந்து ஏகுமென் சாலை! தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்; தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்! கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க! உள்வாய் வார்த்தை
உடம்பு தொடாது; நானே தொடக்கம்; நானே முடிவு; – கண்ணதாசன் நதிவெள்ளம் காய்ந்து
விட்டால் விதிசெய்த குற்றம் இன்றி வேறு-யாரம்மா! – கண்ணதாசன் |
மழைப்பொழிவு சாந்தம் உடையோர் பேறுபெற்றோர் எனத் – கண்ணதாசன்
– கண்ணதாசன் 1. காலம் – 24.06.1927 – 17. 10.1981 2. பிறந்த ஊர் – சிறுகூடல்பட்டி (சிவகங்கை மாவட்டம்) 3. பெற்றோர் – சாத்தப்பன் விசாலாட்சி 4. இயற்பெயர் – முத்தையா 5. சிறப்பு பெயர் – கவியரசு 6. காலக்கணிதம் – கண்ணதாசன் கவிதைகள் 7. படைத்த நெடுங்கவிதை
நூல்கள்
8. இயேசுகாவியம் என்னும் நூலை இயற்றியவர்
– கண்ணதாசன். 9. படைத்த புதினங்கள் 1.
ஆயிரம்தீவு
அங்கயற்கண்ணி 2.
வேலங்குடித்
திருவிழா 10. ஆசிரியராக இருந்த
இதழ்கள்
11. கம்பர் – அம்பிகாபதி வரலாற்றை
அடிப்படையாகக் கொண்டு, கண்ணதாசன் படைத்த
இனிய நாடகம் – இராசதண்டனை. 12. 1949 -ஆம் ஆண்டு "கலங்காதிரு மனமே" என்ற பாடலை எழுதி, திரைப்படப் பாடலாசிரியரானார். 13. திரையுலகிலும்
இலக்கிய உலகிலும் சிறந்து விளங்கியவர் – கண்ணதாசன். 14. தன் திரைப்படப் பாடல்கள் வழியாக எளிய
முறையில் மெய்யியலை மக்களிடையே கொண்டு சேர்த்தவர் யார்? கண்ணதாசன். 15. 'சேரமான் காதலி' என்னும் புதினத்திற்காக சாகித்திய
அகாதெமி விருது பெற்றவர் – கண்ணதாசன். 16. "நான் நிரந்தரமானவன்
அழிவதில்லை எந்தநிலையிலும்
எனக்கு மரணமில்லை" – கண்ணதாசன். 18. 'விஞ்ஞாணி ' என்னும் கவிதை கண்ணதாசன் தலைமையில் அரங்கேற்றப்பட்டது. 19. "நிலமெல்லாம்
வணங்கும் தோற்றம் நெருப்பினில் வீழ்ந்த திங்கே" |
காயிதே மில்லத் |
தாராபாரதி 1.
புதிய விடியல்கள் 2.
இது எங்கள் கிழக்கு 3.
விரல் நுனி வெளிச்சங்கள் 5. பாரதம்
அன்றைய நாற்றங்கள் – தாராபாரதியின்
கவிதைகள். 6. கவிஞர்
தாராபாரதி எழுச்சிமிக்க கவிதைகள் எழுதுவதில் வல்லவர். 7. தமிழக
அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர் – தாராபாரதி. |
வேலுநாச்சியார் |
பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம் துன்பம் வெல்லும் கல்வி ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே – நீ செய்யும் தொழிலே தெய்வம்
|
முடியரசன்
5. பணி – தமிழாசிரியர், மீ.சு. உயர்நிலைப் பள்ளி, காரைக்குடி. 6. பட்டம் – பறம்புமலையில் நடந்த விழாவில் கவியரசு என்னும் பட்டம் குன்றக்குடி அடிகளாரால் வழங்கப்பெற்றது. 7. பரிசு – பூங்கொடி என்னும் காவியத்துக்காக 1966இல் தமிழக அரசு, பரிசு வழங்கியது. யார்
கவிஞன்?
|
தமிழ் ஒளி பட்ட மரம் மொட்டைக் கிளையொடு
5. 'பட்ட
மரம்' – தமிழ் ஒளி |
உருத்திரங்கண்ணனார் கலங்கரை விளக்கம் வானம் ஊன்றிய மதலை போல 1.
திருமுருகாற்றுப்படை 2.
பொருநராற்றுப்படை 3.
பெரும்பாணாற்றுப்படை 4.
சிறுபாணாற்றுப்படை 5.
முல்லைப்பாட்டு 6.
மதுரைக்காஞ்சி 7.
நெடுநல்வாடை 8.
குறிஞ்சிப்பாட்டு 9.
பட்டினப்பாலை 10.
மலைபடுகடாம் |
கி.வா.ஜெகந்நாதர் வயலும் வாழ்வும்
தொகுப்பாசிரியர்
-கி.வா.ஜகந்நாதன் 1. நாட்டுப்புறப்பாடல்களை
– வாய்மொழி இலக்கியம் என்றும் கூறுவர். 2. பல்வேறு தொழில்கள்
குறித்த நாட்டுப்புறப்பாடல்களை மலை அருவி என்னும் நூலில் கி.வா.ஜகந்நாதன்
தொகுத்துள்ளார். 3. உழவுத்தொழில்
பற்றிய பாடல் – மலை
அருவி. |
பெயரெச்ச வகைகள்
நிகழ்காலப் பெயரெச்சம் - படிக்கின்ற மாணவன்
எதிர்காலப் பெயரெச்சம் - படிக்கும் மாணவன்
|
ஒருபொருட் பன்மொழி (ஒருபொருள்
பன்மொழி) |
பழமொழிகள்
பழமொழிகள் tnpsc 6th
to 12th old and new (fully covered)
ஆங்கில மொழி |
தமிழ் பழமொழி |
|||||||||||||||||||||||||||
All that glitter is not gold |
மின்னுவதெல்லாம் பொன்னல்ல |
|||||||||||||||||||||||||||
Art is long but life is short |
கல்வி கரையில, கற்பவர் நாள் சில |
|||||||||||||||||||||||||||
Barking dog seldom bite |
குரைக்கின்ற நாய் கடிக்காது |
|||||||||||||||||||||||||||
Even a pin is good for something |
சிறுதுரும்பும் பல் குத்த உதவும் |
|||||||||||||||||||||||||||
Take time by the forelock |
காலத்தே கடமையைச் செய் |
|||||||||||||||||||||||||||
Bend the tree while it is young. |
ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா |
|||||||||||||||||||||||||||
As is the mother, so is her daughter. |
தாயைப்போலப் பிள்ளை, நூலைப்போலச் சேலை |
|||||||||||||||||||||||||||
A friend in need is a friend indeed. |
உயிர் காப்பான் தோழன் |
|||||||||||||||||||||||||||
A man of courage never wants weapons |
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் |
|||||||||||||||||||||||||||
A man without money is a bow without an
arrow. |
பணமில்லாதவன் பிணம் |
|||||||||||||||||||||||||||
Blood is thicker than water |
தான் ஆடாவிட்டாலும் தன் தசை
ஆடும் |
|||||||||||||||||||||||||||
Diamond cuts diamond |
முள்ளை முள்ளால் எடு |
|||||||||||||||||||||||||||
Lost time is never found again |
இழந்த நேரம் மீண்டும் கிடைக்காது |
|||||||||||||||||||||||||||
Experience is the mother of science |
அனுபவமே அறிவியலின் தாய் |
|||||||||||||||||||||||||||
Haste makes waste |
பதறாத காரியம் சிதறாது |
|||||||||||||||||||||||||||
Crying child will get milk. |
அழுத பிள்ளை பால் குடிக்கும் |
|||||||||||||||||||||||||||
Health is wealth |
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் |
|||||||||||||||||||||||||||
Look before you leap |
ஆழம் அறியாமல் காலைவிடாதே |
|||||||||||||||||||||||||||
Make hay while the sunshines. |
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் |
|||||||||||||||||||||||||||
Many drops make shower |
சிறுதுளி பெருவெள்ளம் |
|||||||||||||||||||||||||||
Measure is treasure |
அளவுக்கு மீறினால் அமுதமும்
நஞ்சு |
|||||||||||||||||||||||||||
The face is the index of the mind |
அகத்தின் அழகு முகத்தில்
தெரியும். |
|||||||||||||||||||||||||||
The childhood shows the man |
விளையும் பயிர் முளையிலே
தெரியும் |
|||||||||||||||||||||||||||
All is well that ends well |
முதற்கோணல் முற்றிலும் கோணல் |
|||||||||||||||||||||||||||
A good markman may miss |
ஆனைக்கும் அடி சறுக்கும் |
|||||||||||||||||||||||||||
In a fiddler’s house all are dancers |
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும்
கவி பாடும் |
|||||||||||||||||||||||||||
No man can flay a stone |
கல்லிலே நார் உரிக்க முடியுமா? |
|||||||||||||||||||||||||||
Difficulties give way to diligence |
கரைப்பார் கரைத்தால் கல்லும்
கரையும் |
|||||||||||||||||||||||||||
Command your man and do it yourself |
வெண்ணெயை வைத்துக்கொண்டு
நெய்க்கு அலைவானேன் |
|||||||||||||||||||||||||||
Charity is a double blessing |
தருமம் தலை காக்கும் |
|||||||||||||||||||||||||||
One flower makes no garland |
தனிமரம் தோப்பாகாது |
|||||||||||||||||||||||||||
Little wealth little care |
மடியில் கனமில்லையென்றால்
வழியில் பயமில்லை |
|||||||||||||||||||||||||||
Prevention is better than cure |
வருமுன் காப்பதே சிறந்தது |
|||||||||||||||||||||||||||
Something is better than nothing |
ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ
சருக்கரை |
|||||||||||||||||||||||||||
Though he endeavours all he can. |
புலியைப் பார்த்துப் பூனை சூடுபோட்டுக்
கொண்டாற்போல் |
|||||||||||||||||||||||||||
One doth the act, another hath the blow |
பழி ஒரிடம், பாவம் ஒரிடம் |
|||||||||||||||||||||||||||
Every fox must at last pay his skin to
the flaye |
பல நாள் திருடன் ஒரு நாள்
அகப்படுவான் |
|||||||||||||||||||||||||||
The day has eyes, the night has ears |
பகலில் பக்கம் பார்த்துப் பேசு; இரவில் அதுவும் பேசாதே |
|||||||||||||||||||||||||||
What comes from the cradle goes to the
grave |
தொட்டில் பழக்கம் சுடுகாடு
மட்டில் |
|||||||||||||||||||||||||||
The wise and the fool have their follows |
இனம் இனத்தோடு சேரும் |
|||||||||||||||||||||||||||
He who has an art has everywhere a part |
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம்
சிறப்பு |
|||||||||||||||||||||||||||
Being on the sea, sail being on the land,
settled |
காத்திற்கேற்ற கோலம் கொள் |
|||||||||||||||||||||||||||
No rains no grains |
மாரியல்லது காரியம் இல்லை |
|||||||||||||||||||||||||||
Bad words find bad acceptance |
நுணலும் தன் வாயாற் கெடும் |
|||||||||||||||||||||||||||
Take away the fuel, the boiling will
cease |
எரிவதனைப் பிடுக்கினால் கொதிப்பது
அடங்கும் |
|||||||||||||||||||||||||||
Practice makes perfect |
சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் |
|||||||||||||||||||||||||||
The law-maker should not be a law
-breaker |
வேலியே பயிரை மேய்ந்தாற்போலே |
|||||||||||||||||||||||||||
Misfortune never comes single |
பட்டகாலிலே படும், கெட்ட குடியே கெடும் |
|||||||||||||||||||||||||||
Look no gift horse in the mouth |
தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப்
பிடித்துப் பார்க்கலமா? |
|||||||||||||||||||||||||||
Anger is sworn enemy |
கோபம் குலத்தைக் கெடுக்கும் |
|||||||||||||||||||||||||||
Break my head and bring a plaster |
பிள்ளையகை் கிள்ளிவிட்டுத்
தொட்டிலையும் ஆட்டுவதுபோல |
|||||||||||||||||||||||||||
There is danger in men’s smiles |
தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் |
|||||||||||||||||||||||||||
Like hand and glove |
நகமும் சதையும் போல |
|||||||||||||||||||||||||||
Tit for tat |
யானைக்கும் பானைக்கும் சரி |
|||||||||||||||||||||||||||
A hungry dog will eat the dung |
பசி வந்தால்
பத்தும் பறந்து போகும் |
|||||||||||||||||||||||||||
Union is strength |
ஒற்றுமையே பலம் |
|||||||||||||||||||||||||||
No smoke without fire |
நெருப்பில்லாமல் புகையாது |
|||||||||||||||||||||||||||
Might is right |
வல்லான் வகுத்ததே வாய்க்கால் |
|||||||||||||||||||||||||||
Many things fall between the cup and the
lip |
கைக்கு எட்டியது வாய்க்கு
எட்டவில்லை |
|||||||||||||||||||||||||||
Health is wealth |
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் |
|||||||||||||||||||||||||||
Too much of anything is good for nothing |
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும்
நஞ்சு |
|||||||||||||||||||||||||||
No pain no gain |
உழைப்பின்றி ஊதியமில்லை |
|||||||||||||||||||||||||||
Knowledge is power |
அறிவே ஆற்றல் |
|||||||||||||||||||||||||||
Charity begins at home |
தனக்கு மிஞ்சியே தானமும்
தருமமும் |
|||||||||||||||||||||||||||
Covet all lose all |
பேராசை பெருநட்டம் |
|||||||||||||||||||||||||||
Diamonds cut diamonds |
முள்ளை முள்ளால் எடு |
|||||||||||||||||||||||||||
East or west, home is the best |
எலி வளையானாலும் தனி வளையே
சிறந்தது |
|||||||||||||||||||||||||||
Empty vessels make the greatest sound |
குறை குடம் கூத்தாடும் |
|||||||||||||||||||||||||||
Money makes many things |
பணம் பத்தும் செய்யும் |
|||||||||||||||||||||||||||
Eagles don’t catch flies |
புலி பசித்தாலும் புல்லைத்
தின்னாது |
|||||||||||||||||||||||||||
Time is gold |
காலம் பொன் போன்றது |
|||||||||||||||||||||||||||
Old is gold |
பழமையே சிறந்தது |
|||||||||||||||||||||||||||
Prevention is better than cure |
வருமுன் காப்பதே சிறந்தது |
|||||||||||||||||||||||||||
Slow and steady wins the race |
முயற்சி திருவினையாக்கும் |
|||||||||||||||||||||||||||
Birds of the same feather flock together |
இனம் இனத்தோடு சேரும் |
|||||||||||||||||||||||||||
Every cock will crow upon his own dunghill |
வீட்டில் எலி வெளியில் புலி |
|||||||||||||||||||||||||||
Failure is the stepping stone to success |
தோல்வியே வெற்றிக்கு அடிப்படை |
|||||||||||||||||||||||||||
Art is long and life is short |
கல்வி கரையில, கற்பவர் நாள் சில |
|||||||||||||||||||||||||||
Look before you leap |
ஆழம் அறியாமல் காலைவிடாதே |
|||||||||||||||||||||||||||
First deserve, then desire |
முடவன் கொம்புத்தேனுக்கு
ஆசைப்படலாமா? |
|||||||||||||||||||||||||||
Little strokes fell great oaks |
அடிமேல் அடி அடித்தால் அம்மியும்
நகரும் |
|||||||||||||||||||||||||||
Tit for tat |
யானைக்கும் பானைக்கும் சரி |
|||||||||||||||||||||||||||
Work is worship |
செய்யும் தொழிலே தெய்வம் |
|||||||||||||||||||||||||||
Man proposes; God disposes |
நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும் |
|||||||||||||||||||||||||||
Strike the rod while it is hot |
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் |
|||||||||||||||||||||||||||
Familiarity breeds contempt |
பழகப் பழகப் பாலும் புளிக்கும் |
|||||||||||||||||||||||||||
The mills of god grind slow but sure |
அரசன் அன்றுகொல்வான், தெய்வம் நின்று கொல்லும் |
|||||||||||||||||||||||||||
The face is the index of the mind |
அகத்தின் அழகு முகத்தில்
தெரியும். |
|||||||||||||||||||||||||||
All that glitter is not gold |
மின்னுவதெல்லாம் பொன்னல்ல |
|||||||||||||||||||||||||||
Art is long but life is short |
கல்வி கரையில, கற்பவர் நாள் சில |
|||||||||||||||||||||||||||
Barking dog seldom bite |
குரைக்கின்ற நாய் கடிக்காது |
|||||||||||||||||||||||||||
Even a pin is good for something |
சிறுதுரும்பும் பல் குத்த உதவும் |
|||||||||||||||||||||||||||
Take time by the forelock |
காலத்தே கடமையைச் செய் |
|||||||||||||||||||||||||||
A friend in need is a friend indeed |
உயிர் கொடுப்பான் தோழன் |
|||||||||||||||||||||||||||
Self help is the best help |
தன் கையே தனக்கு உதவி |
|||||||||||||||||||||||||||
Efforts never fail |
முயற்சி திருவினையாக்கும் |
|||||||||||||||||||||||||||
Live and let live |
வாழு, வாழவிடு |
|||||||||||||||||||||||||||
Think everybody alike |
உன்னைப்போல் பிறரையும் நேசி |
|||||||||||||||||||||||||||
Manners make the man |
ஒழுக்கம் உயர்வு தரும் |
|||||||||||||||||||||||||||
All is well that ends well |
நல்ல தொடக்கம் நல்ல முடிவைத்
தரும் |
|||||||||||||||||||||||||||
Misfortunes never come single |
பட்டகாலிலே படும், கெட்ட குடியே கெடும் |
|||||||||||||||||||||||||||
Do well what you have to do |
செய்வன திருந்தச் செய் |
|||||||||||||||||||||||||||
Every tide has its ebb |
ஏற்றம் உண்டானால் இறக்கம் உண்டு |
|||||||||||||||||||||||||||
Small rudders guide great ships |
சிறு துரும்பும் பல் குத்த
உதவும். |
|||||||||||||||||||||||||||
You must walk before run |
சிந்தித்துச் செயல்படு |
|||||||||||||||||||||||||||
Distance lends enchantment to the view |
இக்கரைக்கு அக்கரை பச்சை |
|||||||||||||||||||||||||||
பழமொழிகளைப் பயன்படுத்திச்
சொற்றொடர் அமைக்க.
'ஆனாலும்' என்னும் இணைப்புச்
சொல்லைப் பயன்படுத்திப் பழமொழிகளை எழுதுக. (எ.கா.) கந்தையானாலும் கசக்கிக் கட்டு; கூழானாலும் குளித்துக் குடி. 1. எலி வளையானாலும் தனி வளை வேண்டும். 2. ஓட்டைச் சட்டி ஆனாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி. 3. ஒடிந்தகோல் அனாலும் ஊன்றுகோல் ஆகும். 4. கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும். 5. சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும். பழமொழி
அறிவோம்: 1. புண்ணுக்கு மருந்து போட முடியும்; புடிவாதத்துக்கு மருந்து போட
முடியுமா? 2. அணை உடைஞ்சு போன வெள்ளம் அழுதாலும்
வராது. 3. வெளைச்சலுக்கும், வெள்ளாட்டுக்கும் சென்மப் பகை. 4. எறும்பு ஊரக் கல்லும் தேயும். 5. உழைக்கிற மாடுதான் ஊருக்குள்ள விலை
போகும். 6. குடல் கூழுக்கு அழுவுதாம், கொண்டை பூவுக்கு அழுதாம். 8. நல்ல பாம்பு படம் எடுக்கலாம்; நாக்கலாம் பூச்சி படம் எடுக்கலாமா? 9. ஆயிரம் கலம் நெல்லுக்கு ஒரு
அந்துப்பூச்சி போதும். 10. ஆள் கூடுனா பாம்பு சாகுமா? கைய ஊனித்தான் கரணம் போட முடியும். 11. காவடிப்பாரம் சுமக்கிறவனுக்குத்தான்
தெரியும். 12. இருப்பவனுக்கு புளியேப்பம்; இல்லதாவனுக்கு பசியேப்பம். 13. நாலு வீட்டில கல்யாணமாம். நாய்க்கு
அங்கேயும் இங்கேயும் ஓட்டமாம். 14. அவ்வப்பொழுது போக்குவதிலும் வீணாகப்
பொழுது போக்குதல் தவப்பொழுது நல்லதும்பாங்க. 15. பாடிப்பாடிக் குத்தினாலும் பதரு அரிசி
ஆகுமா? 16. அதிர அடிச்சா உதிர விளையும். 17. குத்துக்கல்லுக்கு என்ன குளிரா
வெயிலாங்கிற மாதிரி. 18. அகழியில் விழுந்நத முதலைக்கு அதுவே
சொர்க்கம். 19. கார்த்திகை மாசம் பிறைய கண்ட மாதிரி. 20. அதை விட்டாலும் கதி இல்ல, அப்பால போனாலும் விதி இல்ல. 21. தட்டிப் போட்ட ராட்டிக்குப்
புரட்டிப் போட ஆளு இல்லாம. 22. அள்ளுறவன் பக்த்துல இருந்தாலும்
கிள்ளுறவன் பக்கத்துல இருக்கக் கூடாது. 23. அமாவாசை இருட்டில் பெருச்சாளிக்குப்
போன இடமெல்லாம் வழிதான். 24. குத்துக்கல்லுக்குக் குளிரா வெயிலா
கவலையில்லாமல் வாழ்தல். தொடரைப்
பழமொழிகொண்டு நிறைவு செய்க. 1. இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து 2. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும்
நாப்பழக்கம் 3. கல்லாடம் படித்தவரோடு சொல்லாடாதே 4. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம்
சிறப்பு 5. நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர்
புல்லுக்குப் பாய்வது போல. (நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது
போல படிக்கும் நல்லார் சொன்ன அறிவுரை தீயவருக்கும் போய் சேர்ந்தது.) 6. தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை
அணைக்கும். (தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் போலப் பிறர் கூறும்
அறிவுரை கடினமானாலும் அது நம்மை நல்வழிப்படுத்தும்) 7. மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும்
கரைக்கும். (மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும் போல கடினமான செயலையும்
விடாமுயற்சியுடன் செய்தால் வெற்றி பெற முடியும்) 8. கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு
போகாது (கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது போல பிறருக்கு நாம் சொல்லிக்
கொடுப்பதால் நம்முடைய அறிவானது குறைபடாது.) பழமொழிகளை
நிறைவு செய்க. 1. உப்பில்லாப் ………………………. விடை : உப்பில்லாப் பண்டம் குப்பையிலே 2. ஒரு பானை …………………….. விடை : ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் 3. உப்பிட்டவரை ………………………… விடை : உப்பிட்டவரை உள்ளளவும் நினை 4. விருந்தும் ……………………… விடை : விருந்தும் மருந்தும் மூன்று வேளை 5. அளவுக்கு ………………………… விடை : அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு பின்வரும்
பழமொழிகளை வாழ்க்கை நிகழ்வோடு பொருத்தி எழுதுக. 1. யானைக்கும் அடிசறுக்கும் ·
தன்னம்பிக்கையோடு
வாழ்ந்த என் தந்தை தனியார் சீட்டுக் குழுமத்தின் பகட்டு விளம்பரத்தால் பணம்
கட்டி, ஏமாந்து “யானைக்கும் அடிசறுக்கும்” போல
ஆயிற்று 2. தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான் ·
வாழ்க்கையில்
நாம் பிறருக்கு நன்மை செய்து வந்தோம் என்றால் நமக்கும் நன்மையே நடக்கும். ·
வாழ்க்கையில்
நாம் பிறருக்கு தீமை செய்து வந்தோம் என்றால் நமக்கும் தீமையே நடக்கும். ·
இதையேதான்
தினை விதைத்தவன் தினை அறுப்பான். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பார்கள். 3. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை ·
நட்பு
எனக்கொண்ட பிறகு குற்றம் இருப்பின் அதைப் பொறுக்கும் குணம் வேண்டும். அதை
விடுத்து குற்றத்தைக் கடிந்துரைத்தால் (சுற்றம்) நட்பு தொடராது. 4. எறும்பு ஊரக் கல்லும் தேயும் ·
வாழ்க்கையில்
சின்னச் சின்ன தவறுகளை இழைத்துக் கொண்டே வருவதால் தன் புகழுக்குத் களங்கம்
வராது என்று நினைக்கிறோம். மாறாக, எறும்பு ஊரக் கல்லும் தேயும் என்பது போல நம்
புகழ் அழிவதற்கு நாம் செய்த சிறு தவறுகளே காரணமாகிவிடும். 5. ஊழி பெயரினும் தாம் பெயரார். ·
நற்பண்புகளைக்
கைவரப் பெற்றவர்கள் வாழ்வில் உயர்ந்து தாழ்வு வந்தபோதும் தன்னிலையில் மாற
மாட்டார்கள். உரிய
எழுத்துகளை நிரப்பிப் பழமொழிகளை உருவாக்குக. 1. இறக்கும்
காலம் வந்தால் பிறக்கும் ஈசலுக்கும் சிறகு.
(று, ற) 2. எறும்புக்குத்
தெரியாத கரும்பு இல்லை. (று, ரு ) 3. அரண்மனை
உறவைக்காட்டிலும் அடுக்களை உறவு மேல். (ற, ர) கீழ்க்காணும்
பழமொழிகளில் விடுபட்ட இடங்களில் குற்றியலுகரச் சொற்களாக வரும்படி எழுதுக.
அச்சொற்களைக் கட்டத்தில் நிரப்புக. 1. போதுமென்ற மனமே பொன் செய்யும் ________.விடை: மருந்து 4. ஆத்திரக்காரனுக்குப் புத்தி ________.விடை: மட்டு 8. ஏற்றம் உண்டானால் இறக்கமும் ________.விடை: உண்டு 9. காலம் பொன் ________.விடை: போன்றது 5. கெடுவான் _______ நினைப்பான்.விடை: கேடு 2. அகத்தின் _______ முகத்தில் தெரியும்.விடை: முகத்தில் 3. _______ சிறுத்தாலும் காரம்
குறையாது விடை: கடுகு 6. அடியாத _______ படியாது.விடை: மாடு 7. அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் _______.விடை: நஞ்சு 10. ஆற்றில் போட்டாலும் _______ போடு.விடை: அளந்து தொடரைப்
பழமொழி கொண்டு நிறைவு செய்க. 1. இளமையில் கல்வி முதுமையில் இன்பம். 2. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம். 3. கல்லாடம் படித்தவரோடு சொல்லாடாதே. 4. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. அறிஞர்களின்
பொன்மொழிகளைத் தமிழில் மொழிபெயர்த்து எழுதுக 1. Every flower is a Soul blossoming in
nature – Gerard De Nerval மொழி பெயர்க்க : எல்லாப் பூக்களும்
இயற்கையில் உயிருடன் இருக்கிறது. பழமொழி : மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும்
மணம் உண்டு. 2. Sunset is still my favourite colour,
and rainbow is second – Mattie Stepanek மொழி பெயர்க்க : சூரிய அஸ்தமனமே
முதலில் எனக்குப் பிடித்த வண்ணம், வானவில்லின் வண்ணம்
அடுத்த நிலை தான். பழமொழி : தோல்வியே வெற்றிக்கு அடிப்படை (அ)
ஒன்றன் மறைவில் இருந்தே புதியன தோன்றும். 3. An early morning walk is a blessing for
the whole day – Henry David Thoreau மொழி பெயர்க்க : அதிகாலை நடைப்பயிற்சி அந்நாளுக்கே ஒரு
வரமாகும். பழமொழி
: நன்றாய்த்
தொடங்கும் செயல் நன்றாகவே முடியும். (அ) சிறந்த தொடக்கமே
வெற்றிக்கு அடிப்படை. 4. Just living is not enough …. one must
have sunshine, freedom and a little flower – Hans Christian Anderson Answer: மொழி
பெயர்க்க : வெறுமையான வாழ்வு
மட்டும் போதாது ஒவ்வொருவருக்குள்ளும் ஒளி,
ஆற்றல், விடுதலை மலர் என இருத்தல் வேண்டும். பழமொழி
: இலட்சியமுள்ள
வாழ்வே சிறந்த வாழ்வாகும், வெறும் வாழ்வு
வீணே. பொன்மொழிகளை
மொழி பெயர்க்க. 1. A nation’s culture resides in the
hearts and in the soul of its people -Mahatma Gandhi நம் நாட்டினுடைய பண்பாட்டினை மக்கள் அனைவரும் தம் இதயங்களிலும், ஆத்மாவிலும்
நிலைத்திருக்கச் செய்ய வேண்டும். 2. The art of people is a true mirror to
their minds – Jawaharlal Nehru மக்களின் கலை உணர்வே அவர்களின் உள்ளத்தைப் பிரதிபலிக்கும்
கண்ணாடி. 3. The biggest problem is the lack of love
and charity – Mother Teresa அன்பு செலுத்துதல், தர்மம் செய்தல் இவற்றின் குறைபாடே, மிகப்பெரிய
பிரச்சனையாய் உள்ளது. 4. You have to dream before your dreams
can come true – A.P.J. Abdul Kalam உங்கள் கனவு நனவாகும் வரை, கனவு காணுங்கள். 5. Winners don’t do different things; they
do things differently – Shiv Khera வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களைச் செய்வதில்லை மாறாக
ஒவ்வொரு செயலையும் வித்தியாசமாக செய்கிறார்கள். |
|
Comments
Post a Comment